எங்கிருந்தோ வந்தாள்.01

Story Info
பக்கத்து வீட்டில்! பட்டப்பகலில்!! பச்சைப்புல்தரையில்!!!
2.3k words
4.46
31.3k
0
1
Story does not have any tags

Part 1 of the 3 part series

Updated 04/26/2022
Created 11/10/2009
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அத்தியாயம்.01
---------------------
நகரத்தை விட்டு வெகுதூரத்தில் அமைந்திருந்த தொழிற்பேட்டையில், விசாலமான அந்த ஊழியர் குடியிருப்புப்பகுதியில்,அடர்த்தியான மரங்கள் தலையசைத்துக்கொண்டிருந்தன. அதே வளாகத்தில் சற்றே டாம்பீகமாக, அமைதியாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் இலைகள் சலசலப்பதைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.

சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்க, மெல்லிய நைட்டியணிந்தபடி மரநிழலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த வீணாவுக்கு, பேசாமல் கசகசவென்று உடம்போடு ஒட்டியிருந்த நைட்டியை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக காற்றுவாங்கினால் என்ன என்று தோன்றியது. அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று சட்டை செய்யாத மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் குடியிருக்கிற பகுதி அது. அடுத்தடுத்த வீடுகளுக்கு நடுவே, நான்கடி உயரத்தில் செடிகள் மட்டுமே தடுப்புகளாக இருந்தன. எட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் எட்டிப் பார்க்கலாம். ஆங்காங்கே இருந்த இடைவெளி வழியாக அடுத்த வீட்டுக்கும் ஓசையின்றிப் போய் விடலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமலிருக்க அங்கிருந்தவர்களை "கண்ணியம்" கட்டிப்போட்டிருந்தது; எல்லாரும் அப்படியா என்பது போகப்போகத் தான் தெரியப்போகிறது.

"ஆரம்பிச்சிருச்சு!" என்று முணுமுணுத்தாள் வீணா. "நேரம் காலம் தெரியாம அப்பப்போ உறுத்தி உறுத்தி உசிர வாங்குது!"

அவளுக்கு இப்போதெல்லாம் அம்மணமாகக் காற்று வாங்க வேண்டும் என்பது மட்டும் தோன்றிக்கொண்டிருக்கவில்லை. அதுவும் முந்தைய நாள் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்த அந்த திருநெல்வேலிப் பையனிடம் புழையிலும், சூத்திலும் செமத்தியாக ஓள் வாங்கியபிறகு, அவளது மனதில் விபரீதமான எண்ணங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. அவன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பான் போலும். முறுக்கேறிய உடலும் ஏறக்குறைய முழங்கையளவுக்கு நீளமாக இருந்த அவனது கருகருவென்ற சுண்ணியும் அவளை பிரமிக்க வைத்தன!

வீணாவுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படாமல் இல்லை. அவள் திருமணமானவள்; கணவன் பிரகாஷை இன்னும் உளமாறக் காதலித்துக்கொண்டுதானிருந்தாள். ஏழு வருட தாம்பத்தியத்தில், பதுமை போல ஒரு குழந்தை பரிசாகக் கிடைத்திருந்தது. ஆனாலும்....

பிரகாஷுக்கு அண்மைக்காலமாக உடலுறவில் முன்னைப்போல ஈடுபாடு இருக்கவில்லை என்பது அவளுக்குப் பெரிய குறையாக இருந்தது. அவ்வப்போது அவனை உசுப்பேற்றி உறவு கொண்டபோதெல்லாம் கூட அவன் ஒரு இயந்திரம் போல, இவ்வளவு தான் உடலுறவு என்ற வரைமுறை வைத்திருப்பவன் போல ஆர்வமின்றி ஏனோ தானோவென்று சில பல குத்துக்களை அவளது புழையில் இறக்கி விட்டுப் புரண்டுபடுத்து அயர்ந்து உறங்குவதை வழக்கமாக வைத்திருந்தான். உடல்வாகுவோ அல்லது நாளச்சுரப்பிகளின் கோளாறோ, வீணாவுக்கு கணவனோடு உடலுறவு வைத்தபிறகும் கூட, இப்போதெல்லாம் விரல் போட்டு சுய இன்பம் பெற்றும் நிறைவு ஏற்படாமலே இருந்தது. இப்போதும் அவளது விரல்கள் அவளது கூதியை வருடிக்கொண்டிருந்தன.

பருவமடைந்த காலம் தொடங்கி, வீணா சுய இன்பம் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தாள். ஏன் இவ்வளவு உறுத்தல் ஏற்படுகிறது என்பது புரியாத பருவத்திலிருந்தே அவளது காம உணர்ச்சி அதிகமாக இருந்தது. பிரகாஷும் அவளும் கொண்ட உடலுறவுகள் அவளுக்குப் போதுமானதாக இல்லை. கணவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தபிறகு, முன்னை விட அதிகநேரத்தை அவன் தொழிற்சாலையில் செலவழித்து விட்டு, வீடுதிரும்பியதும் இரவு உணவை முடித்து விட்டு, படுத்த ஓரிரு நிமிடங்களிலேயே உறங்குவதை வழக்கமாக வைத்திருந்தான். வீணாவின் சமீபத்திய ஏமாற்றங்கள் அவளை வேலிதாண்ட வைத்திருந்தன.

ஆனால், பட்டப்பகலில், வீட்டுத்தோட்டத்தில் புழையில் விரல் போடுமளவுக்கு அவள் தன்னைத் தானே மலிவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. வீட்டுக்குள்ளே சென்று விடுவோமா என்று அவள் யோசித்தபோது தான், அடுத்த வீட்டுத் தோட்டத்திலிருந்து கேட்ட பேச்சுக்குரல் அவளை இயல்புநிலைக்குத் திருப்பியது.

வீணாவின் நெருங்கிய சினேகிதி ஜானகி மற்றும் அவளது கணவன் ரகுவின் வீடு அது. காதில் விழுந்த இரண்டு குரல்களில் ஆண்குரல் ரகுவுடையது என்பதை வீணா புரிந்து கொண்டிருந்தபோதும், பெண்குரல் ஜானகியுடையது அல்ல என்பது அவளுக்கு உறைத்தது. எழுந்து கொண்ட வீணா,அரிப்பு மற்றும் ஆர்வம் காரணமாக, இரண்டு வீட்டுக்கும் இடைப்பட்ட செடிவேலிகளின் இடுக்கு வழியாக அவள் அடுத்த வீட்டுத்தோட்டத்தில் என்ன நடக்கிறது என்று ஒளிந்து பார்க்கத் தொடங்கினாள்.

ஒரு பிரம்பு நாற்காலியில் பெர்மூடாவும் டி-சர்ட்டும் அணிந்தபடி ரகு அமர்ந்திருக்க, அவனுக்கு நேர் எதிரே இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருந்தவள் ப்ரியங்கா! அவள் அவசரத்தில் வெறும் பிராவை மாத்திரம் அணிந்து வந்திருக்கிறாளோ என்று எண்ணுகிற அளவுக்கு அவளது பிளவுஸ் அநியாயத்துக்குச் சிறியதாக, அதிக இறக்கம் வைத்துத் தைக்கப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு, இந்த சீதோஷ்ணத்துக்குச் சற்றும் பொருத்தமின்றி,இந்தக் கருமத்தை ஏன் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியபடி, ப்ரியங்காவின் உடல்வனப்பை முக்கால்வாசி வெளிப்படுத்திக்கொண்டிருந்த மிக மெல்லிய ஷிஃபான் புடவை.

ப்ரியங்கா அந்தத் தொழிற்சாலை பொதுமேலாளரின் மனைவி! வட இந்தியாவைச் சேர்ந்தவள் என்பதைப் பார்த்தவுடனே சொல்ல வைக்கிற பால்போன்ற சருமம். செக்கச்சிவந்த இதழ்கள்! சற்றே குட்டையாக வெட்டப்பட்டிருந்த கூந்தல்! ஆனால், ஜானகி இல்லாத நேரத்தில், இவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று வீணா குழம்பினாள். அதிலும், ரகு ப்ரியங்காவைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையில் நிச்சயம் சகோதரபாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

"உங்க கிட்டே இருக்கும்னு எதிர்பார்த்தேன்," என்று ப்ரியங்கா கூறுவதை வீணாவால் கேட்க முடிந்தது.

"நான் டிவிடி ப்ளேயர் வாங்கினபோது ஓசியிலே கிடைச்ச படம் தான் இருக்கு," என்று ரகு சிரித்தபடியே கூறிக்கொண்டிருந்தான். "எனக்கு சினிமா பார்க்கிறதுக்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்குது?"

வீணா இப்படி அடுத்த வீட்டில் நடப்பதை வேவு பார்ப்பதை நிறுத்தி விட்டு, வீட்டுக்குள்ளே போய் விடலாமா என்று கூட எண்ணினாள். தப்பித்தவறி ரகு கவனித்து விட்டால் எவ்வளவு அவமானம்? ஜானகியோடு உள்ள சினேகிதமும் அல்லவா நாசமாகி விடும்? ஆனாலும் அவளால் அங்கிருந்து நகர முடியவில்லை.

"பரவாயில்லை ரகு!" என்று ப்ரியங்கா கொஞ்சலான குரலில் சொல்லிவிட்டு, தேவையில்லாமல் சிரித்தாள்.

"புதுப்பட சி.டி.இல்லாட்டி என்ன? கொஞ்சம் இருங்க! ஜில்லுன்னு கோக் கொண்டு வர்றேன்," என்று புன்னகையோடு கூறி எழுந்து கொண்ட ரகுவின் கண்கள், ப்ரியங்காவின் முலைகளையே வெறித்துக் கொண்டிருப்பதை வீணாவால் கவனிக்க முடிந்தது.

ப்ரியங்காவும் அவனையே வெறித்தபடி புன்னகைத்துக்கொண்டிருந்தாள். ரகு எழுந்து உள்ளே போன சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியபடி, வீணா ப்ரியங்காவைக் கூர்ந்து நோக்கினாள். ப்ரியங்காவின் கணவர் மாற்றலாகி அந்தத் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்த நாள் முதலாகவே, அந்தக் குடியிருப்பிலிருந்த அனைத்துப் பெண்களுக்கும் அவள் மீது பொறாமையும், அவரவர் கணவன்மார்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமே என்ற அச்சமும் ஏற்பட்டிருந்தது உண்மைதான். இவள் மட்டும் மும்பை,சென்னையில் கொஞ்சம் முயன்றிருந்தால், சினிமாவுலகில் இன்னொரு கனவுக்கன்னி ஆகியிருப்பாள் என்று சில சினேகிதிகள் பேசிக்கொண்டதும் வீணாவின் நினைவுக்கு வந்தது.

ஜானகியைப் போலவோ, வீணாவைப் போலவோ அன்றி ப்ரியங்காவுக்குக் குழந்தை இல்லை. ஒருவேளை, குழந்தைபெற்று அவளுக்குப் பால்கொடுத்தால் தனது உடலின் வனப்பு குலைந்து விடும் என்று எண்ணுகிறாள் போலும் என்று தான் எல்லாரும் எண்ணிக்கொண்டிருந்தனர்.

ரகு அங்கிருந்து நகர்ந்ததுமே, ப்ரியங்கா தான் அமர்ந்திருந்த நாற்காலியை அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு மிக அருகில் போட்டு அமர்ந்ததும் வீணாவுக்கு திக்கென்றது. இப்போது வீணாவின் புடவைத்தலைப்பு வேண்டுமென்றே நழுவ விட்டது போலக் கலைந்திருப்பதையும், அவளது இளமுலைகள் முன்னைவிட பளிச்சென்று அவளது பிராவுக்குள்ளே திமிறிக்கொண்டிருப்பதைக் காட்டிக்கொண்டிருப்பதையும் வீணா கவனித்தாள்.

"அடிப்பாவி!" என்று வீணா முணுமுணுத்தாள். எவ்வளவு தான் வயிறெரிந்தாலும் தான் பார்த்ததிலே வீணாவைப் போல அழகான பெண் எவளுமில்லை என்பதையும் அவள் புரிந்துகொண்டுதானிருந்தாள்.

ரகு இரண்டு பாட்டில்கள் கோக்கில் உறிஞ்சுகுழாய்களைப் போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான். இப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். ப்ரியங்காவின் முழங்கை அடிக்கடி ரகுவை உராய்ந்து கொண்டிருந்தது.

"இன்னிக்கு உங்களுக்கு ஆஃபா இருக்கிறதாலே பொழைச்சேன்! இல்லாட்டிப் போனா இந்தக் காலனி சுத்த போர்," என்று கொஞ்சலாகப் பேசிய ப்ரியங்கா, பெருமூச்சு விட்டாள்.

"எனக்கும் ரொம்ப போரடிச்சிட்டிருந்தது," என்றான் ரகு. "ஜானகி வேறே குழந்தையைக் கூட்டிக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா! தூங்கலாமுன்னா இந்த வெயிலிலே தூக்கமும் வரமாட்டேங்குது!"

"ஜானகி ரொம்பக் கொடுத்து வச்சவங்க," என்று மீண்டும் பெருமூச்சு விட்டாள் ப்ரியங்கா."குழந்தை இருக்கு, நீங்க இருக்கீங்க! எனக்கு யாரு இருக்காங்க? தன்னந்தனியாத் தவிச்சிட்டிருக்கேன்!"

"அட, உங்களுக்கென்ன குறை?" என்று அக்கறையோடு விசாரித்தான் ரகு. "உங்க ஹஸ்பண்ட் மாதிரி ஒரு திறமையான ஜி.எம்மை நான் பார்த்ததே இல்லீங்க!"

"திறமையெல்லாத்தையும் ஃபேக்டரியிலேயே காட்டிருவாரு போலிருக்கு," என்று விரக்தியாகக் கூறிச் சிரித்தாள் ப்ரியங்கா. "வீட்டுலே பொண்டாட்டி கிட்டேயும் கொஞ்சம் திறமை காட்டியிருந்தாருன்னா, இந்நேரம் என் வீட்டுலே ரெண்டு குழந்தைங்களாவது விளையாடிட்டிருக்கும்."

அவளது பேச்சைக் கேட்டு வீணா அதிர்ந்தாள். அதே போல, ரகுவும் ப்ரியங்காவுக்கு என்ன பதிலளிப்பது என்று புரியாமல் அசடு வழியச் சிரித்தான்.

"என்னாலே நம்பவே முடியலீங்க!" என்றான் ரகு. "உங்களை மாதிரி...ஐ மீன்...இவ்வளவு அழகான மனைவி இருக்கும்போது....எப்படி...அவரு...எனக்கு உண்மையிலே நம்பக் கஷ்டமாயிருக்கு!"

"அவருக்கும் நான் அழகாத்தான் தெரியுறேன்," என்று பதிலளித்தாள் ப்ரியங்கா. "பாவம், அவர் என்ன பண்ணுவாரு? அளவுக்கு அதிகமா ஒழைச்சு ஒழைச்சு அவராலே எதுவுமே பண்ண முடியுறதில்லை வீட்டுலே!"

"ஓ! புரியுது!!" என்று கூறினான் ரகு. "ஐயாம் சாரி!"

"நீங்க ஒரு பொம்பிளையா இருந்தாத் தான் அந்த அவஸ்தை புரியும் ரகு," என்று தொடர்ந்தாள் வீணா. "மனசு எவ்வளவு அலைபாயும் தெரியுமா? என்னவெல்லாமோ தோணுது! உங்களை மாதிரி ஹாண்ட்ஸமா ஒரு ஆம்பிளையைப் பார்த்தா...ஓ..எப்படிச் சொல்லுறதுன்னே தெரியலே!"

இப்போது ரகுவின் முகம் செக்கச்செவேலென்று சிவந்தே விட்டிருந்தது. கோக் பாட்டிலைக் கீழே வைத்த ப்ரியங்கா அடுத்து செய்த காரியம் ரகுவை நிலைகுலையச் செய்தது.

அதைப் பார்த்த வீணாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன் உயிர் சினேகிதி ஜானகியின் கணவனைக் கைக்குள்ளே போட ப்ரியங்கா திட்டமிடுகிறாள் என்பது அவளுக்குப் புரிந்து தானிருந்தது. ஆனால், அதற்காக இப்படியா பட்டப்பகலில், தோட்டத்தில் புடவைத்தலைப்பை நழுவ விட்டது போதாதென்று பிளவுஸின் மேல் பொத்தான்களையும் கழற்றி விடுவது?

வீணா பார்த்துக்கொண்டேயிருக்க, ப்ரியங்கா பிளவுஸ், பிரா இரண்டையும் முழுமையாக அவிழ்த்துக்கொண்டு, தனது கூர்மையான இளமுலைகளை ரகுவின் கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தாள்.

"ரொம்ப வெக்கையா இருக்கு, அதான்," என்று ரகுவிடம் தனது செய்கைக்கு நியாயம் வேறு கற்பித்துக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா."உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே பிரகாஷ்? யாரும் பார்க்க மாட்டாங்க தானே?"

"ஓ நோநோ!" என்று அவசர அவசரமாக மறுத்தான் ரகு. "யாரும் பார்க்க மாட்டாங்க தான்! என்னைத் தவிர...."

"தாராளமாப் பாருங்க!" என்று கலகலவென்று ப்ரியங்கா சிரித்துக்கொண்டிருந்தாள்.

ரகுவின் கண்கள் ப்ரியங்காவின் முலைகளையே வெறித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வீணாவுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. ப்ரியங்காவை மாதிரி ஒரு செதுக்கிய சிலை போன்ற அழகான ஒரு பெண் தனது முலைகளைக் காட்டினால் எந்த ஆண் தான் முறைத்துப் பார்க்காமல் இருப்பான்? அவள் வேண்டுமென்றே தனது முலைகளை ரகுவுக்குக் காட்டி அவனை உசுப்பேற்றி விட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது வீணாவுக்குப் புரிந்த அளவு, ரகுவுக்கும் புரியாமலா இருக்கும்?

இப்போது ரகுவின் மனநிலை என்னவாக இருக்கும்? இத்தோடு தயங்கி நிறுத்த அவனால் முடியுமா? அல்லது துணிந்து அவன் ஜானகி இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியபடி, ப்ரியங்காவை உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு ஓள் கொடுப்பானா?

அண்மைக்காலங்களில் தானும், ஜானகியும் பேசிக்கொண்டதிலிருந்து, ரகு கண்டிப்பாக ப்ரியங்காவின் வலையில் விழுந்து விடுவான் என்று தான் வீணாவுக்குத் தோன்றியது. ரகு-ஜானகி தம்பதியருக்கும் ஏறக்குறைய பிரகாஷ்-வீணாவின் வயது தான். கிட்டத்தட்ட இரு தம்பதியினரும் ஒரே சமயத்தில் தான் திருமணமும் செய்து கொண்டிருந்தனர். இப்போது கணவன் பிரகாஷ் மீது தனக்கும், ரகுவின் மீது ஜானகிக்கும் ஏற்பட்டிருக்கிறது போலவே, ரகுவுக்கும் தன் மனைவி ஜானகி மீது சலிப்பு ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம் என்பதை வீணா உணர்ந்திருந்தாள். அனேகமாக, ப்ரியங்காவின் தூண்டிலில் ரகு மாட்டிக்கொண்டு விடுவான் என்று அவளது உள்மனது கூறியது.

"ரகு, நான் எதுக்காக ரொம்ப ஏங்குறேன் தெரியுமா?" ப்ரியங்கா வேண்டுமென்றே கொஞ்சலாகப் பேசிக்கொண்டிருந்தாள். "ஒரு ஆம்பிளை என்னைத் தொடறதுக்காகத் தான்! இந்த மாதிரி......"

பேசிக்கொண்டே ப்ரியங்கா, ரகுவின் ஒரு கையை எடுத்துத் தனது ஒரு முலையின் மீது வைத்தாள். ரகு வெலவெலத்துப் போனதை வீணா கவனித்தாள். அவன் அவளது கையைத் தள்ளவோ, தனது கையை ப்ரியங்காவின் முலையிலிருந்து எடுக்கவோ யோசிப்பது போலக் கூடத் தெரியவில்லை. மாறாக...

தனது உள்ளங்கையில் பட்ட ப்ரியங்காவின் முலையை விரல்களால் வளைத்து அதை மெல்ல மெல்ல அமுக்கி விடத் தொடங்கியிருந்தான் ரகு. ப்ரியங்கா அவனை உற்சாகப்படுத்துவது போல முனகத் தொடங்கியிருந்தாள்.

’இது எங்கு போய் முடியுமோ? அடுத்து என்ன செய்வது??’ வீணா யோசித்தாள்.

சினேகிதியின் வீட்டில் தான் வேவு பார்த்துக்கொண்டிருப்பது தவறு என்பதை உணர்ந்தவளுக்கு, இனிமேல் அவளால் அங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதை நிறுத்தவும் முடியாது என்று புரியாமல் இல்லை. அப்போது அவளுக்கு இருந்த ஒரே ஒரு வழி - நடப்பதையெல்லாம் ஒன்று விடாமல் பார்த்து, ஜானகி திரும்பியதும் அவளிடம் ஒப்பிப்பது மட்டும் தான்! அது தவிர, அவள் அடுத்த வீட்டுக்குப் போய் வரம்பு மீறிக்கொண்டிருந்த ரகுவையும், ப்ரியங்காவையும் கண்டிக்கவா முடியும்? அவள் முடிவு மேற்கொண்டாள்; தொடர்ந்து அவர்கள் இருவரது விளையாட்டுக்களையும் முழுமையாகக் கவனிப்பது என்று!

ரகுவின் கைகள் அமுக்க அமுக்க ப்ரியங்காவின் முலைகள் விம்மி விம்மி வீங்கிக்கொண்டேயிருந்தன. அவள் மயக்கத்தில் இருப்பவளைப் போல கண்ணிமைகளைப் பாதி இறக்கியிருந்த நிலையில், காமப்புன்னகை சிந்தியவாறு மென்மையாக முனகிக்கொண்டிருந்தாள். ரகுவைக் கவனித்தபோது, அவனது பெர்மூடாவில் ஏற்பட்டிருந்த அபாரமான கூடாரத்தைப் பார்த்து வீணாவுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. சற்றுத் தாமதமாயிருந்தால் தான் அதிசயித்திருப்பாள். இருந்தாலும் கூட "துரோகி" என்று வீணா முணுமுணுத்தாள்.

ரகுவின் பெர்மூடாவிலிருந்த எழுச்சியை ப்ரியங்கா கவனிக்காமலா இருப்பாள்? தான் எதிர்பார்த்தது நடந்தேறிக்கொண்டிருப்பதை எண்ணியபடி அவள் சிரித்தாள்.

"என்னை ரொம்பவே உசுப்பி விட்டிட்டே ப்ரியங்கா," என்று ரகு உரிமையோடு அவளை ஒருமையில் அழைத்தான்.

"இங்கே மட்டும் என்ன வாழுதாம்?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தாள் ப்ரியங்கா.

வீணாவுக்கு வெறுப்பாக இருந்தது. தன் நெருங்கிய சினேகிதியின் கணவன் இன்னும் சிறிது நேரத்தில் ப்ரியங்காவின் மீது புரண்டு எழப்போகிறான் என்பது அவளுக்கு பகீர் என்றது. அதே சமயம் அவளது கண்முன்னர் விரிந்து கொண்டிருந்த காட்சிகள் அவளையும் கிளர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்ததும் உண்மை. அவள் விரும்பியோ, விரும்பாமலோ அவளது புழையில் நெருப்புப் பற்ற வைக்கப்பட்டிருந்தது.

ஏன் இருக்காது? அன்றோடு பிரகாஷிடம் அவள் ஓள் வாங்கி இரண்டு வாரங்களாகின்றன. முந்தைய தினம் கேஸ் சிலிண்டர் காரனும் அவசரத்தில் முடித்து விட்டுப் பறந்து போயிருந்தான். அவளுக்கு ஏற்பட்டிருந்த வேட்கையில், சற்று எசகுபிசகாக எதைப் பார்த்தாலும் அவளுக்குப் புழையில் அரிப்பெடுக்கத்தொடங்கியது. அன்று கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அவனோடு இரண்டில் ஒன்று பேசிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்திருந்தாள். ஆனால், அப்போதைக்கு அவள் அடுத்த வீட்டையே தொடர்ந்து வேவு பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஆத்திரமாக இருந்தபோதும் அவள் ஈர்க்கப்பட்டிருந்தாள். அதுவரைக்கும் அவள் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் சல்லாபிப்பதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்ததில்லை. ஆனால், அன்றைய தினம் அவளால் கண்களை அகற்றுவதே இயலாத காரியமாக இருந்தது.

"ரகு!" ப்ரியங்கா பேசினாள். "இந்தப் புல்தரை எவ்வளவு சுகமாயிருக்கும்? இங்கேயே....?"

"ஓ! தாராளமா!!" ரகு பதிலளிக்கத் தாமதிக்கவில்லை. இருவரும் நாற்காலியிலிருந்து எழும்பி, பச்சைப்பசேலென்றிருந்த புல்வெளியில் படுத்தனர்.

ப்ரியங்கா தனது கரங்களால் ரகுவை வளைத்து அவனது உதட்டில் முத்தமிட்டாள். அவளது நாக்கு ரகுவின் வாய்க்குள்ளே புகுந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை வீணாவால் புரிந்து கொள்ள முடிந்தது. ரகுவின் காதுகளிலிருந்து புகை வெளிவராமலிருந்தால் சரியென்று அவள் எண்ணிக்கொண்டாள்.

ரகுவுக்குத் தொடர்ந்து முத்தமளித்தபடியே, ப்ரியங்கா தனது முலைகளை அவனது மார்பின் மீது வைத்து அழுத்தித் தேய்த்துக்கொண்டிருந்தாள். அவன் அணிந்திருந்த டி-சர்ட்டைக் கழற்றியவள், தனது காம்புகளால் அவனது மயிர்படர்ந்திருந்த மார்பினை உராய்ந்தாள். ஒருவழியாக அவர்களது முத்தம் முடிவுற்றபோது, இருவருக்கும் அப்போதே மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.

"எனக்கு இந்த உதவி பண்ணுவீங்களா ரகு?" ப்ரியங்கா கிசுகிசுப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். "இல்லாட்டி நான் இப்படியே செத்துடுவேன்."

"ப்ரியங்கா! எனக்கு...பயமாயிருக்கு," ரகு பதிலளித்தான். "ஜானகிக்குத் துரோகம் செய்யுறோமேன்னு தோணுது."

"தெரிஞ்சாத்தானே?" ப்ரியங்கா வினவினாள். "என் புருசனுக்கும் தெரியக் கூடாது; உங்க மனைவிக்கும் தெரியக் கூடாது. ஓ.கே?"

ஒரு கண அமைதிக்குப் பின்னர் ரகு,"ஓ.கே" என்றான்.

"நான் தயாராயிருக்கேன்.வேண்ணாத் தொட்டுப்பாருங்க ரகு!"

பட்டப்பகலில், புல்வெளியில் ப்ரியங்கா தனது புடவை, உள்பாவாடை, பேன்ட்டீஸ் அனைத்தையும் அவிழ்த்து விட்டு அம்மணமாக நின்றாள். ரகு அவளது மயிர் அடர்ந்திருந்த கூதியை வெறித்தான். சட்டென்று அவனது ஒரு கையைப் பிடித்த ப்ரியங்கா அதைத் தனது கூதியின் மீது வைத்தாள். அதில் தென்பட்ட ஈரத்தைத் தீண்டிய ரகு நடுங்கினான்.

"பார்த்தீங்களா ரகு?" ப்ரியங்கா முணுமுணுத்தாள்."எப்படியிருக்குன்னு பாருங்க! உதவி பண்ணுங்க ரகு! ப்ளீஸ்! ஹெல்ப் மீ!"

ரகுவின் பதிலுக்காக அவள் காத்திருக்கவில்லை. அவனது பெர்மூடாவையும் அவிழ்த்தாள்.

"ம்ம்ம்! ரகு, உடம்பை எப்படி வச்சிருக்கீங்க?"

ரகுவால் அதற்கு மேலும் எப்படித் தயங்க முடியும்? அவனது சுண்ணி கடப்பாரையைப் போலாகி விட்டிருந்தது. மேலும் தாமதித்தால் வெடித்து விடும் போலிருந்தது.நரம்புகள் புடைத்து எழும்பியிருந்த ரகுவின் சுண்ணித்தண்டை ப்ரியங்கா தனது விரல்களால் வளைத்து அதனைக் குலுக்கத் தொடங்கியதும் ரகு உற்சாகத்தில் முனகினான்.

’ரகு கதை அவ்வளவு தான்,’ என்று பார்த்துக்கொண்டிருந்த வீணா எண்ணிக்கொண்டாள். அவன் மீது அடக்கமாட்டாமல் கோபம் ஏற்பட்டபோதிலும், ப்ரியங்காவின் அழைப்புக்கு அவன் எளிதில் இணங்கியதற்காக அவன் மீது குற்றம் சொல்ல முடியாது என்பதும் வீணாவுக்குப் புரிந்தே இருந்தது. ரகுவும் ப்ரியங்காவைப் போல ஒரு அழகான பெண்மணியை அபூர்வமாகவே சந்தித்திருப்பான் என்பதால், அவளே முன்வந்து அவனைத் தனது இச்சைக்கு விருந்தாக்க முயன்றபோதும் மறுப்பதற்கு அவன் ஒன்றும் முனிவன் இல்லையே?

வீணா தற்செயலாக ரகுவின் சுண்ணியைப் பார்த்தபோது, அவளையுமறியாமல் அவளது புழையிலிருந்து கொழுகொழுவென்று வெதவெதப்பான திரவம் ஒழுகத்தொடங்கி விட்டிருந்தது. இதைப் போலவே தனக்கும் ஒரு சுண்ணி விளையாடக் கிடைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று அவள் எண்ணிக்கொண்டாள். பிரகாஷ் தன்னைக் கொலைப்பட்டினி போட்டிருக்கவே, அவளது உடல், உள்ளம் இரண்டிலுமே தேவையின் காரணமாக வேட்கை அதிகரித்திருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, அவள் தனது கால்களை இறுக்கி, தொடைகளை ஒன்றோடொன்று தேய்த்து விட்டுக்கொண்டாள். ஆனால், அவளது கண்முன்னால் நடந்து கொண்டிருந்த காட்சிகள் அவளுக்கு காம இச்சையை அதிகரித்துக்கொண்டிருந்தன. அவள் அங்கிருந்து நகர்ந்திருக்க வேண்டும் என்றாலும் கூட, நடப்பது எதுவாக இருந்தாலும் அதில் ஒரு கணத்தைக் கூட விட்டு விடக் கூடாது என்ற பேராசை அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

ரகுவின் முனகல்கள் உரத்து அனற்றல்களாகும் வரைக்கும் ப்ரியங்கா அவனது சுண்ணியைக் குலுக்கிக் குலுக்கி இரும்புத்தடி போலாக்கி விட்டாள். பிறகு, அவள் புல்தரையில் மல்லாந்து படுத்தவாறு, ரகுவைத் தன் மீது இழுத்துப் படர விட்டாள். விரிந்திருந்த அவளது இளந்தொடைகளுக்கு நடுவே ரகு புகுந்து கொண்டான். ப்ரியங்காவின் கைகள் அவனது குண்டியை இறுக்கிக்கொள்ள, அவளது விரல்கள் அவனது வலுவான சதைகளில் அழுந்திக்கொண்டன.

"ப்ளீஸ் ரகு! பண்ணுங்களேன்!!" அவள் கெஞ்சினாள்.

"இதுக்கு மேலே எப்படிப் பண்ணாம இருக்குறது?" ரகு முணுமுணுத்தான். "நானும் மனிசன் தானே?"

ரகுவின் இடுப்பு முன்னும் பின்னும் அசையத்தொடங்கியதும், ப்ரியங்கா கண்களை மூடியபடி தலையைப் புல்தரையில் சாய்த்துக்கொண்டாள். ரகுவின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க, அவளது முனகல்களும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வீணாவுக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேட்கை ஏற்படவே, அவளது புழையிலிருந்து மளமளவென்று ஒழுகிக்கொண்டிருந்தது.

"ஐயோ!" வீணா முணுமுணுத்தாள். அவளால் அப்போது மறுக்கவே முடியாத ஒரு உண்மை இருந்தது; அது, ப்ரியங்காவுக்கு அப்போது என்ன கிடைத்துக்கொண்டிருக்கிறதோ, அதுவே தனக்கும் கிடைக்க வேண்டும் என்று அவளது மனதின் ஆழத்தில் ஏற்பட்டிருந்த ஆசை தான்! அதற்காக அவள் எதையும் செய்யத் தயாராகி விட்டிருந்தாள். ஒரு பருத்த விரைத்த சுண்ணி, கவனிக்கப்படாதிருந்த தனது புழைக்குள்ளே புகுந்து விளையாட வேண்டும் என்பது மாத்திரமே அவளது குறிக்கோளாகி விட்டிருந்தது. இந்த அளவு தன்னை காமவேட்கை இழுத்துச் செல்வது அதுவே முதல் தடவை என்பதும் அவளுக்குப் புரியாமல் இல்லை.

"ஹும்ம்ம்ம்! அப்படித்தான்...ப்ளீஸ்!!" ப்ரியங்கா விசும்புவது போல முனகிக்கொண்டிருந்தாள். ரகுவின் அபாரமான வேகம் அவனை விரைவிலேயே உச்சத்துக்கு அழைத்துச் சென்று விடும் போலிருந்தது. வீணாவால் அவனது கொட்டைகளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனது அனற்றல்கள் அதிகரித்து விட்டிருந்தன. ஆனால், ப்ரியங்கா அவனை விடுவதாக இல்லை. ரகுவே சற்று தனது வேகத்தை மிதப்படுத்தியபோதும், அவள் தனது இடுப்பைத் தூக்கித் தூக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவளது வேட்கை இன்னும் ஆரம்பநிலையிலே இருந்தது போலும். அவளது உற்சாகத்திற்கு முன்னர் தாக்குப்பிடிக்க முடியாத ரகு அவளை மீண்டும் தனது வேகத்தை அதிகரித்தபடி அனுபவிக்கத்தொடங்கினான்.

"யெஸ்!யெஸ்! அப்படித்தான்...," என்று ப்ரியங்கா கூச்சமின்றி அரற்றினாள்.

இங்கேயோ, வீணா பொறாமை, வேட்கை இரண்டும் கலந்து மனதை ஆக்கிரமித்திருக்க, இச்சையில் தகித்துக்கொண்டிருந்தாள். அவளது புழையிலிருந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பது போலிருந்தது. ஜானகிக்கே துரோகம் செய்கிற அளவுக்கு ரகுவைத் தூண்டி விட்ட ப்ரியங்காவின் கண்களைத் தோண்டி எடுக்கிற அளவுக்கு அவளுக்கு ஆத்திரம் இருந்தது. ஆனால், ப்ரியங்காவும் ரகுவும் அரங்கேற்றிக்கொண்டிருந்த காமவிளையாட்டுக்கள் அவளது பசியை மேன்மேலும் தீவிரப்படுத்தியிருப்பதையும் அவள் அறிந்திருந்தாள். பளபளப்போடும் வீரியத்தோடும் ப்ரியங்காவின் புழைக்குள்ளே அதிவேகமாக இயங்கிக்கொண்டிருந்த ரகுவின் சுண்ணியை அவள் கண்கொட்டாமல் கவனித்தாள்.

ப்ரியங்காவிடம் ரகு வெளிப்படுத்திக்கொண்டிருந்தது போல அத்தனை வேட்கையையும் வேகத்தையும் இதுவரைக்கும் ஒரு நாளாவது பிரகாஷ் தன்னிடம் காண்பித்திருக்கிறானா என்று அவள் யோசித்தாள். திருமணமான புதிதில், குழந்தை பிறப்பதற்கு முன்வரை, பிரகாஷும் தானும் மிருகங்களைப் போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓத்துக்கொண்டிருந்தது அவளது ஞாபகத்துக்கு வந்தது. இப்போதெல்லாம் அவர்கள் இருவரது உடலுறவு, மிகவும் இயந்திரத்தனமாக, சொல்லி வைத்தாற்போல சுவாரசியமற்றுப் போயிருப்பதையும் அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. முன்பு போல, பிரகாஷுக்கு அவள் மீது ஈடுபாடு இல்லாமல் போயிருப்பதையும் அவள் அறிந்தே இருந்தாள். ஓரளவு அவளுக்கும் கணவனிடம் ஒரு இனம்புரியாத சலிப்பு ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அவள் இன்னும் அவன் மீது அன்பு வைத்திருந்தாள் என்றபோதிலும் அப்போதைக்கு, அவளது மனதில் ப்ரியங்காவைப் போலவே, தானும் ரகுவிடம் ஓள் வாங்க வேண்டும் என்ற ஆசை மேலிட்டிருந்தது. முழங்கையளவுக்குத் தடித்திருந்த ரகுவின் சுண்ணியைத் தனது புழையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற அரிப்பு உண்டாகியிருந்தது.

12