Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 18: குழம்பி குழப்பி தெளிவு
நான், "என் கூடப் பேசல, நீந்தி விளையாட கூப்பிட்டதுக்கும் வரலை. இப்படி எதுவுமே செய்யாமல் தீவிரமா யோசனையில் இறங்கி இந்த உலகத்திலே இருக்கிறீங்களான்னு சந்தேகம் வந்துடிச்சி, உங்களத் தொந்தரவு செய்ய வேண்டாமேன்னு இந்த அழகான காலைப் பார்த்து ரசிச்சிக்கிட்டு இருக்கலாம்னு."
அவள் என்னைத் தன் அருகில் இழுத்து என் தோளில் அவள் கைகளை லாவகமாக ஊன்றி என் நெற்றியில் தன் நெற்றியை முட்டி, "அது ஏன் அந்தக் காலை விடமாட்டீங்களா?"
நான், "உங்க முகம், கண்கள், காது, கன்னம், கழுத்து, மாங்கனிகள், இப்படி எல்லாம் அழகுன்னு சொல்லித் தொட்டு விளையாடினா பொறுத்துக்குறீங்க/ரசிக்குறீங்க. ஆனால் இந்த அழகிய காலைமட்டும் தொட்டு ரசிக்க விடமாட்டெங்குறீங்க. சரி ஏதோ முக்கிய யோசனைல இருக்கீங்களே அப்பவாச்சும் நான் அந்தக் கால ரசிக்கலாம்னுப் பார்த்தா அதுவும் நடக்கல. சரி விடுங்க. அடுத்து நாம என்ன செய்யலாம், கொஞ்ச நேரம் நீச்சல்?"
சரி என இசைந்து என் மீது ஊன்றி சாய்ந்தவாறு தண்ணீரில் இறங்கி நீந்தினாள். தொடர்ந்து நீந்தி பழகினோம், நீச்சல் நுணுக்ககளை பறிமாரிக் கொண்டோம். இவ்வளவு விரைவாகத் தன் நீச்சல் முறை மாறி தற்போது மிக நல்ல முறையில் நீந்த அவளுக்குப் பரிபூரணத் திருப்தி/மகிழ்ச்சி. இத்துடன் கிணற்று விளையாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்து அவள் ஆடைகள் முழுவதுமாக உலர்ந்து விட இருவரும் அவரவர் உடைக்கு மாறினோம்.
அடுத்து அங்கிருந்த ஒரு பெரிய மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்தோம். அதில் அளவில்லா மகிழ்ச்சி அவளுக்கு. அந்த ஊஞ்சல் ஆடியதில் நான் அதி வேகமாக ஆடியதைக் கண்டு முதலில் சிறிது பயந்தவள் பின் என்னுடன் சேர்ந்து வேகமாக ஆடத் துணிந்தாள்.
அவள் உட்கார்ந்து கொள்ள நான் நின்றபடி ஆடினோம் பின் அவளும் என்னைப் போல் நின்று ஆட விரும்பி இருவரும் நின்றபடி தொடர்ந்து ஆடிவந்தோம். இடையிடையே அவள் பாவாடைப் பறந்து சங்கடப்படுத்தியது. அதைத் தன் பாதத்தில் மிதித்து மற்றும் தன் இரு கால்களுக்கிடையில் பிடித்துக் கட்டுப்படுத்தி வந்தாள்.
தொடர்ந்து வேகம் அதிகரித்து அதி வேகமாக ஆடி ஒரு கட்டத்தில் அவள் பாவாடை அவள் பிடியிலிருந்து நழுவி முழுவதுமாகப் பறந்து அவளை இடுப்புக்குக் கீழ் நிர்வாணமாக்கிப் எங்கள் இருவரின் முகத்தையும் மூட. அவள் அதிர்ச்சியில் தன் இரு கைகளால் அனிச்சையாய் பாவாடையைப் பிடிக்க நிலை தடுமாறி இருவரும் விழுந்தோம். கடைசி நிமிட நடவடிக்கையாக நான் அவளைத் தாங்கி தரையில் விழாமல் பிடிக்க முயன்று சிறிதே வெற்றி அடைந்தேன்.
நான் கீழே விழ அவள் நிர்வாண இடை என் மார்பு மற்றும் வலது தோளில் அமர்ந்தவாறு, அவள் பாவாடை என் முகத்தை முழுவதும் மறைக்க என் முகம் அவள் நிர்வாண கீழ் வயிற்றால் அழுத்தப்பட, என் இரு கைகளால் அவள் மார்பு/தோளைத் தாங்கியவாறு அவளைக் கீழே விழாமல் தடுத்தேன்.
என் தலை தரையில் மோதிய இடத்தில் ஒரு சிறிய கல் இருந்ததினால் என் தலையில் சிறிதுக் காயம். அவள் அதி விரைவாக எழுந்து எனக்கு உதவ எத்தனிக்க... காலியாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் மரப் பலகைச் சரியாகக் குனிந்த நிலையிலிருந்த அவள் சூத்தில் இடிக்கச் சிறு அதிர்ச்சி அலறலுடன் மீண்டும் விழுந்தாள் என் மீது. இருவரும் சற்று சுதாரித்து எழுந்தோம்.
என் தலைக் காயத்தின் வலி சற்று அதிகமாக இருந்தது என் கையால் உணர்ந்ததில் ரத்தக் கசிவு ஏதுமின்றி அது வெறும் உள் காயமாகவே தோன்றியது. எனவே வலியைப் பொருத்துக் கொண்டு என் காயத்தின் கடுமையை வெளிப்படுத்தாமல் மறைத்தேன்.
அவளுக்கு விழுந்ததில் அதிகக் காயம் ஏற்படாத போதிலும் இறுதியாக அந்த ஊஞ்சல் இடித்தது சற்றுக் கடுமையாகவே இருந்திருக்க வேண்டும். காரணம் அவள் அலறிய சத்தம் சற்றே அதிகமாக இருந்தது தொடர்ந்து அவள் தன் கையால் அடிபட்ட இடத்தைத் தாங்கலாய் பற்றியவிதம் அதை உறுதி செய்தது. இருவரும் எழுந்து மெல்லப் பண்ணை வீட்டில் சென்று சற்று இளைப்பாற எத்தனித்து நடக்க ஓரிரு அடி நடக்கையில் அவள் நடக்கச் சிரமப் படுவதை உணர்ந்த நான் அவளைத் தடுத்து,
நான், "என்ன ஆச்சி கொஞ்சம் இருங்க." அவள் புட்டத்தைத் தொட முயல அவள் தடுத்து
சியாமளா, "ஒண்ணுமில்ல லேசாக் கொஞ்சம் வலிக்குது." அவள் எதிர்ப்பை மீறி மென்மையாகத் தொட அவள் வெளிப்படுத்திய வலியின் தாக்கத்தை உணர்ந்த நான் அடி சற்று பலமாக அவள் வெளிக்காட்டாமல் மறைக்கிறாள் எனப் புரிந்தது.
நான், "அட அடிக் கொஞ்சம் பலமா பட்டிருக்கப் போல. நீங்க நடக்க வேண்டாம், நான் தூக்கிக்கிட்டுப் போயி. அங்க வீட்டுக்குள்ள ஏதாவது ஒத்தடம் குடுத்துப் பார்க்கலாம்." சொல்லி அவள் மறுப்பு/எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாமல் அவளைத் தூக்கிச்சென்றேன். பண்ணை வீட்டுக்குள் இருந்த அந்தப் பெரிய உணவு மேசையில் அவளை மென்மையாகக்கிடத்தி அவள் காயத்தை ஆராய்ந்தேன்.
அவள் மீண்டும், "ஐய்யோ! ப்லீஸ்! ரகு வேண்டாம் அவ்ளோ பலமான அடியில்ல. கொஞ்ச நேரத்தில் சரியாகிடும்."
நான், "நீங்க துடிச்சதப் பார்த்தா அது ரொம்பக் பலமான அடிதான்னு தெரியுது. ப்லீஸ்! கொஞ்சம்." சொல்லிச் சிறிதும் கவலைப்படாமல் அவள் பாவாடையை விலக்கிப் பார்வையிட அவள் கூச்சத்தில் நெகிழ்ந்தாள்.
தலையைத் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக்கொண்டவள், "ஐய்யோ ரகு ரொம்பக் கூச்சமாயிருக்கு."
நான் மிக நாகரீகமாக மெல்ல விரலால் அழுத்திச் சரியான இடத்தைக் கண்டுபிடித்துப் பின் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மென்மையாக உருவி/வருடி அந்த இடத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்தேன் சில நிமிடங்களுக்குப் பிறகு சற்று மேம்பட்டு தாக்கம் குறைந்தது.
நான், "இப்போ எப்படி இருக்கு?"
சியாமளா, "இதென்ன கேள்வி? உங்க கைப் பட்டதுமே வலியெல்லாம் பறந்துடிச்சி, உங்க கை தொட்டுக்கிட்டே இருக்க மனசு ஏங்குது, ஆனால் வெட்கம் உயிர வாங்குது."
நான், "அட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அடி பட்டக் காயம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க!." சொல்லி நானே மீண்டும் விரலால் மென்மையாக அழுத்த அவளுக்கு அந்தத் தாக்கம் சற்று மேம்பட்டதாகத் தோன்றியது அதற்குள் அவள் எழுந்து அந்த மேசையில் அமர்ந்தவாறு என்னைத் தன் மார்பில் அணைத்து மிக உருக்கமாக நன்றி சொல்ல
சியாமளா, "இப்படிதான் ஒரு தனியா இருக்குற வயசுப் பொன்னுப் பாவாடையைத் தூக்கிப் பாக்குறதா?" கொஞ்சலாகக் கேட்டவாறு என்னைத் தன் மார்பில் அணைத்து என் தலையைத் தன் மார்போடு அழுத்த; அவள் கை சரியாக என் தலைக் காயத்தில் பட; நான் கட்டுப்பாடின்றி வலியில் லேசாக அலறச் சந்தேகத்துடன் திடுக்கிட்டவள் சிறிது என் தலையைத் தடவி, "ஐய்யய்யோ ரகு!! இதென்ன இப்படி முட்டையா வீங்கிப் போயிருக்கு?" சொல்லி விலக்கி என்னை நோக்கி அதிர்ச்சியாய் வினவினாள்.
நான், "அட அது ஒண்ணுமில்ல கொஞ்சம் (சொல்லிக் கொண்டே என் கையால் தொட்டுணர. அதன் வீக்கத்தின் அளவு சற்றே அதிகம் என உணர்ந்து பின் மெல்லச் சமாளித்து) அட ஆமாப் பெரிசா வீங்கி இருக்கு." சொல்லி அவளை நோக்கத் திடுக்கிட்டேன்.
அவள் முகத்தில் முதல் முறையாகக் கோபம் துளிர்த்து. அடுத்த வினாடி கண் கலங்கி அடுத்த சில வினாடிகளில் அது ஆராய்ப் பெருகி 'ஓவென' அழ ஆரம்பிக்க நான் குழம்பி அதிர்ந்து, "என்ன சியாமளா ஏன் அழறீங்க, என்ன ஆச்சி?"
தொடர்ந்து சில நிமிடங்கள் அழுதவள் பின் மெல்ல, "எல்லாம் என்னாலத்தான், என் கெட்ட காலம்தான் உங்களுக்கு இப்படி ஆவுது எனக்கு ராசியேயில்ல."
எனக்குச் சிரிப்பும் சற்று கோபமும் வர, "ஐய்யோ! இதென்ன கூத்து, இதுக்கெல்லாமா அழுவாங்க? இப்படியெல்லாம் யோசிச்சா அப்புறம் முடிவே இருக்காது. இவ்ளோ நேரம் எப்புடி சிரிச்சிக்கிட்டு இருந்தீங்க இப்படி கீழ விழுந்து அடி பட்டதுக்கு இப்படி ராசி பலன்." அடக்க முடியாமல் சற்று சத்தமாகவே சிரித்துவிட்டேன்.
அவள் சற்றுக் கோபம் கலந்த வருத்தத்துடன், "சிரிக்காதீங்க. உங்க மேல எனக்குக் கோவம் கோவமா வருது (நான் விந்தயாய் நோக்கினேன்) பின்ன இவ்ளோ அடி பட்டிருக்கு அப்படியே கமுக்கமா வலியப் பொருத்து கிட்டு எனக்குப் பட்ட அடிய மட்டும் அவ்ளோ கரிசனமா கவனிக்கறீங்க. அவளை அணைத்து உதட்டில் முத்தமிட்டு அவள் வாயடைக்க, "போறும் போறும், இப்படி முத்தம் குடுத்து வாயடைச்சுடுவீங்க. எல்லாம் என் கெட்ட நேரம். இல்ல இல்ல என் தப்பு, என் தப்பு, எனக்குத் தெரியும்."
நான் மீண்டும் முத்தமிட்டு வாயடைத்து, "இப்போ என்ன தப்ப கண்டுபுடிச்சீங்க?"
சியாமளா, "அது வந்து அது... (வருத்ததுடன் தயங்கித் தயங்கி) காலைல உங்களுக்குத் தெரியாம உங்களை அந்தக் கருத்தம்மா எண்ணெய் தேச்சி விட்டதை (சொல்லி தன் கைகளால் முகத்தை மூடியவாறு என் மார்பில் முகம் புதைத்து) மறைஞ்சி நின்னுப் பார்த்துட்டேன், அது அது அதுக்குதான் சாமி எனக்குத் தண்டனையா,"
நான் குறுக்கிட்டு, "இருங்க இருங்க, முதல்ல நீங்க உட்கார்ந்து பார்த்துகிட்டு இருந்தீங்க, அப்புறம் ஏதோ வேலையா கருத்தம்மா உங்களை அனுப்பிட்டாங்களே!"
"அது அது (கருத்தம்மா) தந்திரமா என்னை அங்கிருந்து போவ சொல்லி. அப்படி சுத்தி வந்து மறைஞ்சி நின்னுப் பார்க்கச் செய்த யோசனை (Tricks). அது சொல்லிச்சி நான் இருக்கறதினால நீங்க கூச்சப்படறீங்கன்னு அதனால வேணும்னா என்னை ஒளிஞ்சி நின்னு பார்க்கச் சொல்லிச்சி. அப்படி திருட்டு வேலை செய்ஞ்சதுக்குத்தான் கடவுள் இந்தத் தண்டனை குடுக்குறாரு."
"அட என்ன சியாமளா இப்படி சின்னப் புள்ளையாவே இருக்கீங்க!"
"உங்களுக்குப் புரியாது இதெல்லாம் சாமி குடுக்குற தண்டனைதான்."
நான், "அது தான் அதவிடப் பெரிய தண்டனைய குடுத்திட்டாரே (சொல்லி சற்று தயங்கி. சொல்லுவோமா வேண்டாமா! எனத் தயங்கி பின் சொல்ல முடிவு செய்து) அதுதான் நீங்களே வந்து உங்க பொக்கிஷமான அந்தக் கருப்பு ரோஜாவ பிரிச்சிக் காட்டி என் மேல ஒண்ணுக்குப் போயி (" ஹாங்ம்!" அதிர்ந்தாள்) தண்டனை குடுக்க வெச்சிட்டாரே."
சியாமளா, "நான் உங்க... மேல... ஐய்யோ இதென்ன கூத்து ஐய்யய்யோ! நான் செய்லங்க. உங்களுக்கு என்ன ஆச்சி? ஐய்யோ கடவுளே!"
நான் அவள் தோள்களைப் பிடித்து, "ப்லீஸ்! ப்லீஸ்! கொஞ்சம் ரிலேக்ஸா, பொறுமையா, சிரித்து அனுபவிக்கனும் அதை விட்டுட்டு அதுக்கும் குத்தம்னு அழ ஆரம்பிச்சீங்க அப்புறம் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல."
"நீங்க முதல்ல என்னன்னு விவரமா சொல்லுங்க."
"நான் சொல்றேன் ஆனால் அழ மாட்டேன்னு சொன்னத்தான் சொல்லுவேன் இல்ல நல்லா சிரிப்பேன்னு சொல்லுங்க அப்பத்தான்."
"நீங்க சொன்னாத்தானே அழறதா சிரிக்கறதான்னு தெரியும்." சியாமளா தர்கம் செய்தாள்.
நான், "சரி, வந்து நாம சில விஷயங்கள பார்த்தாலும் பார்க்காத மாதிரி இருக்குறது நல்லது. உதாரணத்துக்கு நீங்க என்னை முழுசா (நிர்வாணமா) பார்த்தது, (வெட்கத்தில் முகம் மறைத்து என் மார்பில் புதைத்தாள்) எத்தனை பேருக்குத் தெரியும்? உங்களத்தவிர வேற யாருக்கும் தெரியாது. அதை வெளிய சொல்லாம இருந்தா அதனால எந்தப் பிரச்சினையும் இல்ல. அதே மாதிரி நான் உங்களப் பார்த்ததை (சற்றுத் தயங்கி) சொல்ல வேணாம்னு இருந்தேன் ஆனால் நீங்க சாமி தண்டனைன்னு குழம்பியதாலத் தான் சொல்றேன்."
காலைல அந்தக் கருத்தம்மா குடுத்த அவ்ளோ பெரிய இளநீர் குடித்ததும் கொஞ்ச நேரத்துல மூத்திர அவஸ்தையை உண்டாக்க, அதை உங்ககிட்ட சொல்லக் கூச்சப்பட்டு எப்படியோ சொல்லி முடிச்சி தப்பித்து ஓடி உங்க கண்ணுல படாம ஒரு ஒதுக்குப் புறமா தேடிப்புடிச்சி ஒண்ணுக்குப் போலாம்னு என் மோட்டரை ஆன் ('ON') பண்ணி நிம்மதியா ஒண்ணுக்குப் போய்க்கிட்டிருந்தேன்.
அந்த நேரம் பார்த்து என் மேல பொத பொதன்னு தண்ணி கொட்ட என்னடான்னு மேலப் பார்த்தா என்னை மாதிரியே இன்னோரு ஆளும் அவுங்க மோட்டரை ஆன் ('ON') சரியா குறி பார்த்து என் மேல சும்மா சர்ர்ர்ர்ர்ருன்னு நல்லா இனிப்பா இருந்த அந்த இளநீய உப்புகரிக்க வெளியத் தள்ளிக்கிட்டிருந்தாங்க." ஓரளவு நடந்ததைப் புரிந்து கொண்டவள் மிகவும் வெட்கப்பட்டு மனம் வருந்தி மன்னிப்பு கோர, "விடுப்பா தெரியாமத்தானே நடந்தது."
சியாமளா, "ஐயோ நான் தான் ஒரு மரமண்டு உங்களை சுத்தீலம் எதிர் பார்த்தேனே தவிர கொஞ்சம் கீழேயும் பார்த்திருக்கனும். ஹூம் இப்போ வந்த புத்தி அப்ப வரலை. அட நீங்க ஏன் அப்பவே சத்தம் போட்டு ரேண்டு திட்டு திட்டாம கமுக்கமா."
தொடரும்