Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 29: சீரமைப்பு (முடிவு)
நான், "முடியும் மாமா அது உண்மையான பாசமாக இருக்கும் பட்சத்தில்; நான் உங்கள் பாசத்தைச் சந்தேகிக்கிறதா தப்பா நினைக்காதீர்கள். நான் சொல்ல வருவது என்னன்னா; பொதுவாக நாம எல்லாரும் செய்யுற ஒரு தவறு.
அதாவது உங்கள் இரண்டு பேருக்கும் உங்கள் அப்பா அம்மா செய்த/கொடுத்த உணவு, உடை, இருக்க இடம், நல்ல பழக்க வழக்கம், அறிவுரை இப்படி எல்லாம் சரியாக இருந்த பிறகும் (சகுந்தலாவிடமிருந்து 'ஹுக்கும்' எனச் சலிப்பான சிறு எதிர்வினை வெளிவந்தது) தன்னோடு விளையாடி மகிழ்ந்த அந்த அக்கா ஏன் இப்படி என் உயிரை எடுக்க நினைக்கிறார்கள் அதுக்கு என்னதான் காரணமென்று தெரிஞ்சிக்கிற ஆவல் வரனும்.
கொஞ்சம் முயற்சி செய்யலாமே மாமா (மீண்டும் சகுந்தலாவை நோக்கி) நீங்க ஏதோ திருப்தி இல்லாமல் ஏதோ சொன்ன மாதிரி தெரிந்தது; தயவு செய்து எங்களுக்கும் சொல்லுங்களேன்; நான்/நாங்க அதைத் தீர்த்து வெச்சிடுவோம்னு வாக்குறுதி கொடுக்கலை முடிந்தால் செய்வார் முடியவில்லையென்றால் குறைந்த பட்சமாக இதுதான் காரணமென்று தெரிஞ்சிக்க வாய்ப்பாவது கொடுங்கள்."
சகுந்தலா, "அவனுக்குக் கொடுத்த எல்லாத்தையும் எனக்கு,... பொன்னுங்க எங்களுக்கும் கொடுத்தார்களா? ஆம்பளைக்கு மட்டும் தான் சொத்து; பொம்பளைங்களுக்குக் கிடையாது."
தனு, "ஒஹ் அதுதான் விஷயமா? சரி அதுக்காக என்னைச் சாகடித்தாவது அதை வாங்கிக்கனும்னு நினைக்குறியே நீயெல்லாம் ஒரு பொம்பளையா?" மாமாவின் ஆத்திரம் தலைதூக்க நான் மீண்டும் அவரைக் கட்டுப்படுத்தினேன்.
சகுந்தலாவை நோக்கி நான், "சொத்து சம பங்காகப் பிரித்துக் கொடுத்திருக்கனும்னு நினைக்கிறது நியாயம் தான் அதுதான் இப்போது சட்டமே மாறிவிட்டதே. சரி அதாவது உங்களுக்கு இந்தச் சமுதாயச் சட்டதிட்டங்களுடன் முரண்பாடு அதுக்காக உயிரையே பலி கொடுத்தாவது அடைய முடிவெடுத்துச் செயல்பட்டது சரியாகாது.
அப்படியே அது சரின்னு எடுத்துக்கிட்டாலும் நீங்க உங்க அக்காவுக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்; அக்காவையும் அக்கா புருஷனையும் கொலை செய்தது; அதுதான் தற்செயலாக உங்க கட்டுப்பாட்டை மீறி நடந்துவிட்டதாக எடுத்துக்கிட்டாலும் அதுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய நீங்க அதைச் செய்யாமல் அவுங்க இரண்டு பொன்னுங்களுக்கும் ஒவ்வொருத்தரா அழித்தது எந்த விதத்திலேயும் நியாப்படுத்த முடியாது; மன்னிக்கவே முடியாதது."
ஓரிரு நிமிடங்கள் மௌனம் தொடர பின்னர் மாமாவை நோக்கி நான், "நீங்க அவுங்களைத் தண்டிக்க விரும்புகிறீர்களா?"
தனு, "அப்படியே வெட்டிப் போட்டுடனம் போல இருக்கு... ஆனால் எனக்கு அது புடிக்கலை... விருப்பமில்லை ஆனால் அதன் பொருள் நான் மன்னித்து ஏத்துக்குறதா அர்த்தமில்லை என்னைப் பொருத்தவரை இன்றுடன் என் அக்கா என் வாழ்கையில் இல்லை; இனி அந்த முகத்தைப் பார்க்கக்கூட விருப்பமில்லை."
அடுத்து நான் அத்தைகள் ஷீலா மற்றும் மல்லிகா இருவரையும் நோக்க அவர்களும் புரிந்து இருவரும் அதே முடிவெனத் திட்டவட்டமாக வெளிப்படுத்தினர்.
நான், "சரி அது உங்கள் முடிவு ஆனால் இது சரியான சந்தர்ப்பம் இல்லைன்னு மட்டும் தோனுது; அதாவது இது மாமாவுக்குத் திடீரெனத் தெரியவந்தது; அவர் கோபப்படுவது இயல்பானதே ஆனால் கொஞ்சம் யோசிப்பது நல்லதென்று தோனுது.
முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை தன் உடன் பிறப்பை வெறுத்து ஒதுக்குவதென்பது மிகச் சாதனமான விஷயமில்லை. அடுத்து (ஷீலாவை நோக்கி) உங்களைப் பெற்ற தாய் என்ன சொன்னாலும் பிற்காலத்தில் அவுங்களை நினைத்து உங்கள் உள்ளம் வருந்தும்.
அதைவிட முக்கியம் அவுங்களைத் தண்டிப்பதினால் பெரிய அனுகூலம் ஏதுமில்லை; சமுதாயத்திற்காக நாம் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். சரி முடிவாக என் கருத்து சகுந்தலா அம்மாவின் மனநிலை இயல்பான மனநிலை இல்லை இது ஒருவித மனோவியாதி (அனைவரும் அதிர்ந்து நோக்க).
ஆமாம் அதை என்னால நிரூபிக்க முடியும் இது ஒரு மனோதத்துவ நிபுணர் மட்டுமே ஆராய்ந்து உறுதிப்படுத்த முடியும். நான் கொஞ்சம் அதைப்பற்றிக் கவனித்துச் செயல்படனும்; நாம இப்போது புறப்படலாம்."
அனைவரும் புறப்பட ஆயத்தமானோம்.
நான், "கிட்டத்தட்ட 20 வருடங்களாகப் பிரிந்து வாழும் ஜோடிகளைச் சேர்த்து வைக்க வேண்டியது மிக முக்கியம் (என மாமா மல்லிகா அத்தையைச் சுட்டினேன்) அதனால (மல்லிகா அத்தை நோக்கி) நீங்க மாமாவைக் கூட்டிக்கிட்டு பானு வீட்டுக்கு போயி சில நாட்கள் மற்றவர்கள் தொந்தரவு எதுவுமில்லாமல் நிம்மதியாகப் பொழுதை கழிக்கனும்."
கயல்விழி, "ரகு நான் ஷீலாவை என் வீட்டுக்கு கூட்டிவிட்டு போகிறேன் இந்தச் சூழ்நிலையில் என் கூட இருப்பது ஷீலாவுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்."
நான், "சரியாகச் சொன்னீர்கள் நானே அதைத்தான் பரிந்துரைக்க இருந்தேன்."
உடனே குறுக்கிட்ட ஷீலா, "ஹூஹூம் நான் எங்கேயும் போக மாட்டேன்; எனக்கு என் வீட்டுக்கு போயி தனியா இல்லையில்லை (சொல்லி சற்றே விரைந்து என்னைக் கட்டிக்கொண்டு) நீ வா; நீ என் கூட இருந்தால் போதும் என் மனசு நிம்மதியா இருக்கும்." முதல் முறையாக மாமாவுக்கு எதிரிலேயே என்னை இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்.
அவரும், "ஆமாப்பா அவள்தான் இப்போது மனசொடிஞ்சி போயிருப்பா அவள் விருப்பப்படி நீ அவள் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கோ."
கயல்விழி, "சரிசரி இப்படிச் செய்யலாம்; ஷீலா தம்பி இரண்டு பேரும் என் கூட வாங்க ஒரு மாற்றத்துக்கு ஷீலா என் வீட்டில் இருக்கட்டும்."
பானு, "ஹாங் அப்போ நாங்க." சொல்லி சியாமளா மற்றும் சாந்தினியை நோக்க அவ்விருவரும் குழப்பத்தோடு திருதிருவென விழித்தனர்.
கயல்விழியை நோக்கி ஷீலா, "வேணாக்கா இப்போது என் மனசு சரியில்லை."
நான், "சரிசரி இப்படிச் செய்யலாம்; ஷீலா அத்தை விருப்பப்படி ஒரு இரண்டு நாள் அவுங்க வீட்டிலேயே நான் அவுங்க கூட இருந்து பார்த்துக்குறேன்; (கயலை நோக்கி) நீங்க முன்னே சொன்னபடி ஒரு நல்ல கொண்டாட்டம் ஏற்பாடு செய்ங்க நாம எல்லாரும் இந்த வெற்றியைக் கொண்டாடலாம்."
அனைவரும் அந்த முடிவைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள நாங்கள் வீடு திரும்பினோம்; நான் எதிர் பார்த்த படியே ஷீலா ஆழ்ந்த மனக்குழப்பம்/வருத்தம் ஆட்கொள்ள முடிந்தவரை என் தோளில் சாய்ந்த வண்ணமாகவும் என் மடியில் படுத்த வண்ணமாகவும் பொழுதைக் கழித்தார்.
அதனால் நான் ஜெயா அத்தை வீட்டுக்குச் சென்று சகுந்தலாவின் மனநோய் பற்றி ஆராய முடியாமல் வேறு வழியின்றி அனிதா மற்றும் ஜெயா இருவரையும் மாமா வீட்டுக்கே வரவழைத்துக் கலந்தாலோசித்தேன். என் சந்தேகத்தைப் புரிந்த இரு மருத்துவர்களும் அது முழுமையாகச் சாத்தியமென ஒப்புக்கொண்டு இருவரும் முழு மூச்சாகச் செயல்பட்டு அதை உறுதிப்படுத்த முனைந்தனர்.
அதன்படி சகுந்தலா மனநோயாளி என அறிவித்துத் தண்டனை இன்றி மனநோய் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்புச் சிகிச்சை மேற்கொள்ள வழிசெய்யப்பட்டது.
அதை வெற்றிகரமாகச் செய்து முடித்த பின்னர் இரு மருத்துவர்களும் குறிப்பா ஜெயா அத்தை என்னை மிகவும் பாராட்டி, "நாங்க எல்லாரும் அந்தச் சகுந்தலா மேல் முதல்ல அவ்ளோ கோபத்தில இருந்தோம்.
அவுங்களுக்கு எந்த அளவுக்கு அதிக பட்சமான தண்டனை வாங்கிக் கொடுக்கனுமோ அவ்ளோ வாங்கிக் கொடுக்கத் துடித்தோம். ஆனால் மெல்ல அந்தக் கோபம் குறைந்தது.
அதுக்காக மன்னிக்கும் அளவுக்கு இல்லைன்னாலும் இந்த வயசில் அவுங்களைத் தண்டித்து என்ன மாறப் போவுதுன்னு எண்ணம் வந்தது. அதாவது அன்று இருந்த கோபம் குறைந்தது உண்மை.
ஆனால் அன்றைய நிலையிலேயே நீ எப்படி இந்த அளவுக்குப் பொறுமையாகச் சிந்தித்து தண்டனையைக் குறைக்க ஏற்பாடு செய்தேன்னு எனக்கு இன்னமும் ஆச்சரியமா இருக்கு."
இதைக் கேட்டதும் என் தோளில் கை போட்டபடி அதுதான் என் ரகு என மிகப் பெருமையாகப் பாராட்டிய அனிதா; தனக்கும் முதலில் ஆச்சரியமாகவும் சற்று எரிச்சலாகவும் இருந்ததாகவும் பின்னர் நிதானமாக யோசிக்க இது நல்ல முடிவெனத் தோன்றியதாகக் குறிப்பிட்டாள்.
அதே சமயம் சியாமளா நான் அப்படி ஏதாவது செய்வேன் என முழு நம்பிக்கை இருந்ததாகத் தெரிவித்தாள். சற்றே கோபித்தவளாய் சாந்தினி என்னை நோக்கி, "இதுதான் நீங்க எனக்குச் செய்த வாக்குறுதியா?"
நான், "ஐயோ நான் என்ன சொன்னேன்... ஏதாவது செய்ய மறந்துட்டேனா?" எனக்கு எதுவும் நினைவில் வராமல் குழம்பினேன்.
அதற்குள் நான் குழம்புவதைக் கண்ட ஷீலா, "என்ன அது தம்பிய அவ்ளோ குழப்புகிற அளவுக்கு? நீயே சொல்லித் தொலையேண்டி." அதன் பின் மெல்ல நினைவுக்கு வர ஆரம்பித்தது.
நான், "நீங்க உங்கள் மாமாவைக் கல்யாணம் செய்து பழி வாங்கும் திட்டத்தைத்தானே சொல்றீங்க?"
சாந்தினி, "அப்பாடா ஞாபகம் வைத்திருக்கிறீர்களே!!"
ஆச்சரிய அதிர்ச்சியில் வியந்த வண்ணம் ஷீலா, "ஐயோ இதென்ன கூத்து நீ உன் மாமனையே கல்யாணம் செய்துக்கப்போறியா?"
நான் சாந்தினியை நோக்கி, "நீங்களே சொல்லுங்கள் உங்கள் திட்டத்தை."
சாந்தினி, "ஆமாம் மாமாவைக் கல்யாணம் செய்து கிட்டு ஆனால் அவன் பேச்சைக் கேட்காமல் அவனை என்னைத் தொட விடாமல் அசிங்கப்படுத்தி முக்கியமா அவனுக்கு எதிரியே ரகு கூட... ரொம்ப அந்தரங்கமா... எல்லாத்தை(யும்)... 'ஹ்ஹாவ்'."
அதற்கு மேல் பொறுக்காத ஷீலா பாளாரென ஒரு அரை விட்டு, "என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு இவ்ளோ கேவலமான கீழ்தரமாக நடந்துக்க உனக்கென்ன தைரியம்? அதுலேயும் இந்தக் கீழ்த்தரமான வேலைக்குப் பலி ஆடு இந்தச் செல்லத் தம்பியா?"
ஷீலா குறிப்பிட்ட; சாந்தினி செய்யத் திட்டமிட்டது ஒரு கேவலமான கீழ்த்தரமான செயல் என்பதை அனைவரும் சரியாகப் புரிந்து கொண்டனர்; அதே சமயம் அந்தக் கேவலமான செயலில் என்னை ஈடுபடுத்துவதை அவர் மிகவும் கண்டிக்க அதை வெகு சிலரே சரியாகப் புரிந்து கொண்டனர் சிலருக்கு அவர் தம்பி எனக் குறிப்பிட்டது என்னையா அல்லது சொந்தத் தம்பியையா எனக் குழம்பினர்.
நான் ஷீலாவை நோக்கி, "அத்தை சாந்தினி இன்னும் குழந்தையாகவே இருக்காங்க; அவுங்களுக்குப் பழி வாங்கும் வெறி ரொம்ப ஆழமா மனசில் இருக்கு எதைப் பற்றியும் கவலைப் படாமல் இப்படிச் சொல்லுறாங்க; அந்த அளவுக்கு உங்கள் தம்பி மேல் அவுங்களுக்குக் கோபம்."
ஷீலா, "அதுக்கு என் தங்கம் நீ பலி ஆடாகனுமா?"
நான், "சரி சாந்தினி எனக்குப் பதிலா நீங்க வெறு யாரையாவது 'ஹ்ம்மா'."
என் தலையில் செல்லமாகக் குட்டியபடி ஷீலா, "அட வாலு அவள்தான் புத்தி கெட்டத்தனமா சொல்லுறான்னா அவளுக்குப் புத்திமதி சொல்லி திருத்துற வழியப் பாக்காமல் நீயும் கூடச் சேர்ந்துகிட்டு கூத்தடிக்கிறியா?"
நான், "ஐயோ அத்தை நான் என்ன பதில் சொன்னேன்னு கேளுங்கள்." ஷீலா சாந்தினியை நோக்க
சாந்தினி, "ஐயோ நீங்கத் தானே ஆமாம் செய்யலாம் நல்லா பொறுமையா யோசித்துச் செய்யலாம்னு."
நான், "சரி... நல்லா யோசித்ததில (சொல்லி ஒரு கையால் குட்டுப்பட்ட என் தலையைத் தடவியபடி மறு கையால் அரை வாங்கிய அவள் கன்னத்தைத் தடவி) அது சாத்தியமிலைன்னு தெரிஞ்சிகிட்டேன்." என் வார்த்தை வெளிப்பட அனைவரும் சத்தமாகச் சிரித்தனர்.
சாந்தினி, "உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தால் சிரிப்பா இருக்கா?"
சாந்தினியை ஆதரவாக அணைத்துப் பக்கத்தில் அமர வைத்து, "இப்படி உட்காரு செல்லப் (பொன்னே)."
" பன்னி." என ஷீலா முடிக்க
மீண்டும் கோபமுற்ற நான், "ஐயோ அத்தை இன்னொரு முறை அப்படிச் சொன்னீங்க எனக்குக்கெட்ட கோபம் வரும் தயவுசெய்து."
ஷீலா, "சரிசரி சரிப்பா கோச்சிக்காத செல்லம்; அடேங்கப்பா என் செல்லத்துக்குக் கோபம் வந்து இப்பத்தான் பார்க்கிறேன்; நீ பேசு நீ பேசுப்பா."
நான் கொஞ்சலாகத் தொடங்கியதாலும் தொடர்ந்து அத்தையைக் கோபித்ததாலும் மனங்குளிர்ந்த சாந்தினி, "ஹுக்கும் இப்படிப் பேசியே நல்லா மயக்கிடுங்க."
நான், "இங்கப்பாரு சாந்தா... பொன்னுங்க எல்லாம் பூ மாதிரியென்று சும்மா வெறும் புகழ்ச்சிக்காக மட்டும் சொல்வதில்லை. அதில் உண்மையான அர்த்தம் இருக்கு; பார்வைக்கு மட்டும் மென்மையான மலர்போல இல்லாமல் மனதிலும் மென்மையானவர்களாக இருப்பதுதான் இயல்பு.
உண்மையைச் சொல்லனும்னா நீங்க அப்படிப் பழிவாங்கத் துடித்தது எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது ஏன்னா... சகுந்தலா அம்மாவின் வாரிசு என நிரூபிக்கும் விதமாக இருந்தது."
ஷீலா, "ஒண்ணு சொன்னாலும் நல்லா நச்சுன்னு; நீ நீதான் தம்பு."
சாந்தினி, "நான் என்ன பாட்டி மாதிரி கொலை செய்ற அளவுக்குக் கொடுமையாவா?"
நான், "இல்லைன்னாலும் கிட்டத்தட்ட தீவிரமான தண்டனை கொடுக்கும் அளவுக்கு; அதை எப்படிச் சொல்றதுன்னா வந்து... உங்கள் பாட்டி செய்தது அவுங்க காரியத்துக்குத் தடையாக இருந்தவர்கள் உயிரை பறித்தாங்க. ஆனால் நீங்க அதற்குத் தண்டனை கொடுக்கும் திட்டமாகத் தன்னையே தீயில் பொசுக்கிக்கொள்ளும் தற்கொலை திட்டம்.
அதாவது அதில் இழக்கப்போவது உன் மானம்; உன் குடும்ப மானம்; அதில் உன் மாமாவுக்கு விளையக்கூடிய அவமானத்தை விட உன் அப்பா அம்மா, சகோதரி ஆகிய எல்லாருக்கும் ஏற்படக்கூடிய அவமானம் தான் அதிகம்.
உண்மையில் அது உன் மாமாவுக்கு ஏற்படும் சின்ன அவமானம் அதைச் சரியாகப் பயன்படுத்தி உன்னை விவாகரத்துச் செய்து உன்னை விட்டு விலகச் சரியான உதவி செய்து கொடுக்கிற.
ஆக முடிவில் உன் மாமாவுக்கு ஏற்படும் அவமானம் குறைந்ததே ஆனால் உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஏற்படுத்தும் களங்கம் அதைவிடப் பல மடங்கு அதிகம்."
சற்றே அசடு வழிந்தவளாக சாந்தினி, "அட ஆமாம் இல்ல... அது வந்து அது அப்படித்தான் செய்யனும்னு இல்லை ஆனால்... அதுக்குத்தான் நீங்க யோசித்தால்... நல்ல திட்டமா சொல்லுவீங்கன்னு."
நான், "நான் சொல்லுவேன்... ஆனால் அது உங்களுக்குப் பிடிக்காது."
சாந்தினி, "அப்படீன்னா," நீண்ட யோசனையில் ஆழ்ந்தாள்
நான், "நான் சொல்லுவதைக் கேளுங்கள் இப்போதைக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை அதனால மெல்ல நிதானமாக யோசிக்கலாம். இப்போதைக்கு நிறைய வேலை இருக்கு அதையெல்லாம் செய்து முடிக்கனும் அதனால அந்த வேலையைக் கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது."
உடனே அனைவரும் ஆவலாக என்ன வேலை என நோக்க பொறுக்காத பானு, "என்ன அவ்ளோ முக்கியமான வேலை?"
நான், "அட நிறைய வேலை இருக்கு முக்கியமா அது உன்னைப்பற்றிய சிறப்பானதுதான்... அதை எப்படிச் சொல்லுறது நீ மிகச் சிறப்பானவள்; யாருக்குமே கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடச்சிருக்கு. உங்கள் அப்பா அம்மாவுக்குக் கல்யாணம் செய்து வைக்கிற பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது அது எவ்ளோ பெரிய விஷயம்?"
பிறகு
பிறகென்ன அதுதான் நிறைய வேலை இருக்கே
1. தனு மல்லிகா தம்பதியருக்குத் திருமணம் நடத்தனும்
2. நான் சமுதாய நிர்வாகப் பொறுப்பை ஏற்று வேலை செய்து கொண்டே I.A.S படிக்கனும்
3. கமலா கயல்விழி இருவரையும் I.A.S படிக்க வைத்து மாவட்ட ஆட்சியர் ஆக்க உதவுவது
4. பானு, சியாமளா, சாந்தினி படிக்கவைத்துக் குறைந்த பட்சம் இளங்கலை பட்டம்
5. கருத்தம்மா, தாமரை, செல்வி, வசந்தி போன்றவர்களின் அடிமைத் தனத்தை களைய வேண்டும்.
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போதுகு
ஆம் அதுதானே வாழ்க்கை
தொடரும்.... வாழ்க்கை; கதையை இத்துடன் முடிப்போம்
முடிவுரை: இந்த நெடுந்தொடர் கதையைத் தொடர்ந்து வாசித்து/ரசித்து இன்புற்ற அனைவருக்கும் என் நன்றி. முக்கியமாகத் தொடர்ந்து படித்து ரசித்ததில் பிடித்ததைக் கருத்து பரிமாறி தங்கள் ரசனையை வெளிப்படுத்தி என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, இது போலக் கருத்து பரிமாற்றம் மிக அவசியம். அதாவது பிடித்ததோ பிடிக்காததோ எதுவாயினும் அதைத் தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் என் போன்ற கதை படைப்பவர்களுக்கு அது மிக உதவியாக இருக்கும். தங்களைப்போன்ற பலர் கருத்து பகிர்வது என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டும்.
மீண்டும் மிக்க நன்றி
Wonderful story....i really love it......nice narration.....keep rocking my friend