உங்களில் ஒருத்தி 10

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

.

மூன்று நாட்கள் ஆகியிருந்தது.

நிஷா அழுதுகொண்டே இருந்தாள். சாப்பிடாமல் கிடந்தாள். அந்த வீட்டில் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது.

சீனு அவளிடம் அழுது கெஞ்சி இனிமேல் இப்படி பண்ணவே மாட்டேன் நீதான் என் உயிர் என்று கதறுவான் அழுது தவிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அதில் பாதி கூட நடக்கவில்லை. நொந்துபோனாள்.

எனக்கு வேணும், என் மதிப்பையெல்லாம் நானே கெடுத்துக்கிட்டேன். நான் ஒரு அசிங்கம். நான் ஒரு அரிப்பெடுத்தவ. நான் ஒரு துரோகி. நான் ஒரு பைத்தியக்காரி. நான் ஒரு ஏமாளி.

அவள் தன்னைத்தானே திட்டினாள். அழுது அழுது ஓய்ந்தாள். அழகிழந்து கிடந்தாள்.

மலர், பாட்டியின் ஊரிலிருந்து திரும்பி வந்தாள். நிஷாவின் விஷயம் கேள்விப்பட்டதும் அவளைக் கேவலமாகப் பார்த்தாள்.

இவங்க ஆஹா ஓஹோன்னு இவளை புகழும்போதே நெனச்சேன். உள்ளே ஓட்டையாத்தான் இருக்கும்னு.

மலர், தன் மாமனாரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, கதிரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்தாள். கதிரின் அம்மாவிடம் பேசினாள். நல்ல படிப்பு, கம்யூனிகேஷன் இருக்கு அப்புறம் ஏன் விவசாயம் பார்க்கணும்? என்றாள். சீக்கிரம் நானும் ராஜ்ஜும் அங்கே விருந்துக்கு வருகிறோம் அப்போ விவரமாக பேசுவோம் என்றாள். நிஷாவை காப்பாற்றியதிலிருந்து, அவன் தீபாவுக்கு ஏற்றவன், கிராமத்தில் இருக்கவேண்டியவன் அல்ல என்று இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

எல்லோரும் அவளை மதிப்போடு பார்த்தார்கள்.

நிஷா ரொம்ப down ஆக இருந்தாள். ராஜ் ஆறுதல் சொன்னான்.

நீ கவலைப்படாதே நிஷா உன்ன கண்ணன்கிட்ட சேர்த்து வைக்கவேண்டியது என் பொறுப்பு.

வேணாம்ணா. அவர் ஒத்துக்கறதுக்கு வாய்ப்பு குறைவு

எனக்காக வா நிஷா. இந்த விஷயத்துல அடம் பிடிக்கக்கூடாது.

அவன் நிஷாவைக் கூட்டிக்கொண்டு போனான். கண்ணன் இப்போது வேறு வீட்டில் இருந்தார். காலிங்க் பெல் அடித்ததும் காவ்யா வந்து கதவைத் திறந்தாள்.

நிஷா, முகத்தில் எந்த உணர்ச்சியுமற்று இருந்தாள். ராஜ் பவ்யமாக நின்றான்.

கண்ணனை பார்க்கணும்

வ... வாங்க

கண்ணன் நிஷாவை பார்த்தார். அவள் அழுது அழுது முகம் வீங்கியிருப்பது தெரிந்தது.

ராஜ் அவரிடம் கெஞ்சினான். அவள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தப்பு செய்துவிட்டாள். திருந்திவிட்டாள். இனி உங்களுக்காக மட்டுமே வாழுவாள். அவளை தயவுசெய்து ஏத்துக்கோங்க என்றான்.

கண்ணனுக்கு அவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் சூழ்நிலை முற்றும் மாறியிருந்தது. இந்த சில மாதங்களில் என்னென்னவோ நடந்துவிட்டது.

அவர் தயங்கித் தயங்கிச் சொன்னார்.

ஸாரி ராஜ்... காவ்யா இப்போ கர்ப்பமா இருக்கா.

அதுவரை அமைதியாய்... தலைகுனிந்து நின்றுகொண்டிருந்த நிஷா ஓஓஓஓஓ.... என்று தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். ராஜ் கோபமாக கண்ணனின் சட்டையைப் பிடித்து உலுக்கி, தள்ள.... அவர் சோபாவில் போய் விழுந்தார். சோபாவோடு சேர்ந்து சாய்ந்து தரையில் கிடந்தார்.

அவரை எதுவும் செய்யாதேண்ணா.... நிஷா பதறிக்கொண்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

இது அநியாயம். டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒரு வருஷம் முடியறதுக்குள்ள நீங்க இப்படிப் பண்ணது அநியாயம்

அவன் கண்ணனைப் பார்த்துக் கத்த, அவர் அமைதியாகச் சொன்னார். நிஷா வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும் நான் மன்னிச்சு ஏத்துக்கிட்டிருப்பேன் ராஜ். வேற எந்த விஷயத்துல தப்பு பண்ணியிருந்தாலும்!

இதுக்கு காரணம் நீங்க. நீங்க அவளை கவனிக்காம விட்டுட்டு அவளை குத்தம் சொல்றீங்களா. உங்கள..... - அவன் பல்லைக் கடித்துக்கொண்டு அவரை சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.

அண்ணா ப்ளீஸ். வா போகலாம்.

நிஷா அவனைப் பேசவிடாமல் தடுத்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டே திரும்பி நடந்தாள். அவருடைய தப்பு... திருத்தக்கூடியது. தன்னுடைய தப்பு... திருத்த முடியாதது.

என்ன நிஷா இப்படி ஆகிடுச்சு? என்றான் ராஜ். அவர் மேல கேஸ் போடப்போறேன் என்றான்.

அந்தப் பொண்ணு காவ்யா பாவம்ணா. அவ வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல.

நிஷா நீ ரொம்ப நல்லவ. உனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது. நீ எப்படிம்மா தப்பு பண்ணுன?

என் நிலைமைக்கு சீனு மட்டும் காரணம் இல்லைண்ணா. நானும்தான் காரணம். என் ஆசைகளை புருஷன்கிட்ட தனிச்சிக்கணும்னு நினைக்காம, அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்காம சுலபமா ஒரு வழி கிடைச்சதேன்னு படுகுழில போய் விழுந்துட்டேன். என்ன மன்னிச்சிடுண்ணா உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறேன் என்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

இப்போ.. நான் கர்ப்பமா இருக்கவேண்டியது!!! - அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவள் அழுகை அவன் நெஞ்சைப் பிளந்தது.

அவனுக்கு என்னென்னவோ தோன்றியது. சீனு... நிஷாவை பற்றி தப்பாக யாரிடமும் சொல்லவில்லை. அவளை வீடியோ எடுக்கவில்லை. பின்னாடி அவளை மிரட்டலாம் என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால்... அவன் நிஷாவுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இல்லை. நிஷாவை மட்டுமே நினைத்துக்கொண்டும் இல்லை. கையில் வந்து விழுந்தால் லாபம் என்று இருந்திருக்கிறான். நிஷாவை நல்லா யூஸ் பண்ணியிருக்கிறான். என் தங்கையின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறான். இதையெல்லாம் கவனிக்காமல் நான்... ச்சே... இனிமேலும் இப்படி இருந்துவிடக்கூடாது.

நிஷாவின் குணத்துக்கும் அழகுக்கும் ஊரில் ஒரு நல்ல கணவன் கண்டிப்பாகக் கிடைப்பான்.

நீ கவலைப்படாதே நிஷா. தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்குறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாங்க அமைச்சுத் தருவோம்.... என்றான்.

சீனு -

அன்று, வீட்டிலிருந்து வெளியேறி, பெங்களூர் போய்விடலாம் என்று ஓடியவனுக்கு, நண்பன் பரத்திடம் இருந்து போன் வந்தது.

மச்சி எங்க இருக்க

பஸ் ஸ்டாண்டு போயிட்டிருக்கேண்டா. பெங்களூர் போகப்போறேன்

டேய்... போயிடாத. நீ உடனே என் வீட்டுக்கு வா

எதுக்கு?

முக்கியமான விஷயம். வீட்டுக்கு வா சொல்றேன்.

பரத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கே அவனது மனைவி சாந்தியின் பக்கத்தில், ஒரு அழகான பெண்... அழுதுகொண்டிருந்தாள். இவ நவீனோட லவ்வராச்சே! அவன் காட்டுன போட்டோல...நல்லா க்யூட்டா சிரிச்சிக்கிட்டு இருந்தா. இப்போ அழுறாளே

என்னாச்சுடா?.. என்றான்.

நவீன் அவனோட தாய்மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பாண்டிச்சேரி போனான். என்ன நடந்ததோ தெரியல. என்கேஜ்மென்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்களாம்.

மை காட்!

அவங்களை மீறி அவனுக்கு எதுவும் பண்ண முடியல போல. அகல்யாவுக்கு போன் பண்ணி ஸாரி சொல்லியிருக்கான்.

அகல்யா குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள்.

பாவம் அகல்யா, அவனை சின்சியரா லவ் பண்ணியிருக்கா... என்றாள் சாந்தி

சீனு வேகம் வேகமாக தன் போனை எடுத்தான். நவீன் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.

எப்போ போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆப்னுதான் வருது. அகல்யா அவனை பார்த்தே ஆகணும்னு சொல்றா. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா - சாந்தி வருத்தமுடன் சொன்னாள்.

மச்சி.... நான் சாந்தியை பார்த்துக்க வேண்டியிருக்கு. நீதான் அகல்யாவை பாண்டிச்சேரி கூட்டிட்டுப் போகணும்.

டேய்.. அதுக்கெதுக்கு அகல்யா. நான் மட்டும் போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன். அவனை எப்படியாவது கூட்டிட்டு வரேன்

இல்லங்க. அவன் ஏதோ இக்கட்டான சூழ்நிலைல இருக்கிறான். அவங்க அவனுக்கு போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண ஏற்பாடு பன்றாங்க. நான் போய் நின்னாத்தான் அவங்க வீட்டுல எங்க காதலை புரிஞ்சுப்பாங்க. என்னைப் பார்த்ததும் அவனும் ஸ்ட்ராங்கா ஒரு முடிவு எடுப்பான்.

வேணாங்க.. நீங்க ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும். அதோட... உங்க வீட்டுல உங்களை தேடுவாங்க.

நான் நவீனை பார்க்கணும்..... ப்ளீஸ் - அவள் அழுதாள்.

ச்சே.. இந்தப் பொண்ணு அவன்மேல உயிரையே வச்சிருக்கா.

பாண்டிச்சேரில எந்த இடம்?.. என்றான் பரத்திடம்.

தெரியாது. அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டேன்.

நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். தனியாவே போறதா முடிவு பண்ணிட்டா. வீட்டுல லெட்டர் எழுதி வச்சிட்டு வந்துட்டாளாம்..

சீனுவுக்கு, அவளுடைய காதலையும், மன உறுதியையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

எந்த வழியிலும் அவனை ரீச் பண்ண முடியல சீனு... என்றான் பரத்.

சரி மச்சி... நான் போய் என்னன்னு பார்க்குறேன். நான் அங்கதான் போயிருக்கேன்னு யாருக்கும் சொல்லாதீங்க

சரிடா என்றான் பரத்.

அகல்யா.. கண்ணீரை துடைத்துக்கொண்டு, வேகம் வேகமாக ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

கண்ணன் வீட்டில் -

போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்திடலாம் என்றார் கண்ணன். அகல்யா லெட்டர் எழுதிவிட்டு ஓடிப்போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. காவ்யா அவளை எல்லா இடங்களிலும் தேடி நொந்துபோயிருந்தாள்.

உன் கழுத்துல உடனே தாலி கட்டணும்னு நெனச்சேன். அதுக்குள்ளே அகல்யா இப்படி பண்ணிட்டாளே...

காவ்யாவுக்கு அகல்யாவின் லெட்டர் கண் முன்னே வந்து போனது.

நீங்கள் என் காதலைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நான் என் காதலனைத் தேடிப் போகிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நானே தொடர்பு கொள்ளுகிறேன். என்னைத் தேடவேண்டாம்.

போலீஸ் ஸ்டேஷனில் அகல்யாவைப் பற்றிய தகவல்களை கொடுத்துவிட்டு மனதில் பாரத்தோடு திரும்பி வந்தார்கள். ஐயோ அகல்யா எப்படியெல்லாம் கஷ்டப்படப் போறாளோ... இப்படி பண்ணிட்டாளே படுபாவி.... அகல்யா திரும்ப வந்துடுடி ப்ளீஸ்...... - காவ்யா மனமுடைந்தாள். எனக்கு சந்தோஷமா இருக்க அதிர்ஷ்டமே இல்லையா...

கண்ணன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தபோது தான் ராஜ்ஜும் நிஷாவும் வந்து கெஞ்சிவிட்டுப் போனார்கள். இப்போது நிஷாவின் அழுகை வேறு அவளை வாட்டி எடுத்தது.

நீ இந்த நேரத்துல அழக்கூடாது. கோபப்படக்கூடாது. போலீஸ் அகல்யாவை நல்லபடியா நம்மகிட்ட ஒப்படைச்சிடுவாங்க. அவ நம்ம சொல் பேச்சு கேட்கலைன்னா நாம என்ன பண்ண முடியும்? அவ நல்லபடியா திரும்ப வருவா. திரும்ப வந்ததும் முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. என்றார்.

இங்கே -

மலர்க்கு, அவளது திருமணமான தோழி ஒருத்தி சொன்னது நினைவுக்கு வந்தது. மாமியார்கிட்ட முதல்லயே தலைகுனிஞ்சி பேச பழகிட்டீன்னா உன்ன கொட்டிக்கிட்டே இருப்பாங்கடி. கொஞ்சம் கெத்தாவே நடந்துக்க. ஆட்டோமேட்டிக்காக வழிக்கு வருவாங்க.

அவளது மிதப்பை இது இன்னும் அதிகப்படுத்தியது.

பத்மாவை மதிக்காமல் உதாசீனப்படுத்தினாள். எப்போது argument வந்தாலும் மாமியார் பத்மாவிடம்தான் தப்பு இருப்பதுபோல் அவர்களை நினைக்க வைத்தாள். ஏற்கனவே சட் சட்டென்று பேசும் பத்மா இதில் சுலபமாக விழுந்துவிட்டாள். விளைவு - மோகன் முன்னாலேயே மலர் பத்மாவிடம் எரிந்து விழுந்தாள்.

விஷயம் ராஜ் காதுக்குப் போனது. கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிப் போ மலர். அவங்க இருக்கப்போறதே இன்னும் கொஞ்ச காலம்.

அவன் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் பேசினான்.

அவள் மூளை வேறுவிதமாக யோசித்தது. இப்பவே பணிஞ்சி போயிட்டா காலத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். இப்போ நான் எடுக்கற முடிவைப் பார்த்துட்டு, இவ கோவக்காரி, பிடிவாதக்காரி, அவ சேஞ்ச் ஆகமாட்டா நாமதான் விட்டுக்கொடுக்கணும்னு இவங்க எல்லாரும் ஒரு முடிவுக்கு வரணும்!

அவள் தன் வீட்டுக்கு கிளம்பினாள். தடுத்தபோது, உனக்கு உன் அம்மாவை விட நான்தான் முக்கியம்னு எப்போ சொல்றியோ அப்போதான் வருவேன் என்று எரிக்கும் விழிகளால் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ராஜ் அவளை சமாதானப்படுத்துவதற்காக போன் பண்ண, அது இன்னும் பெரிய சண்டையாக முடிந்தது.

அவளது வீட்டில் அவளுக்கு புத்திமதி சொல்ல, அவள் அதையெல்லாம் கேட்கும் நிலைமையில் இல்லை. ராஜ்க்கு உண்மையிலேயே என்மேல பாசம் இருந்தா என்கிட்டே வந்து கெஞ்சட்டுமே... என்று நினைத்தாள். மானம் ரோஷம் கெட்டு என்னால அங்க குப்பை கொட்டமுடியாது... என்றுவிட்டு, அக்கா வீணாவின் வீட்டுக்குப் போய்விட்டாள். இங்கே கொஞ்ச நாட்கள் இருந்தால் சமாதானமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில்... உன் வீடு மாதிரி நினைச்சுக்கோடி என்று சொல்லி, வீணா அவளை தங்கவைத்துக்கொண்டாள்.

ஆனந்த் தன் கொழுந்தியாளை நன்றாகப் பார்த்துக்கொண்டார். நீ எத்தனை நாள் வேணுமானாலும் இங்கே இருக்கலாம். உனக்கு என்ன வேணும்னாலும் ஒரு வார்த்தை மட்டும் சொல்லு. உடனே வாங்கிட்டு வந்திடுறேன்.

தேங்க்ஸ் மச்சான்.. என்றாள். வீணாவும் அவரும் சண்டை போடாமல் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரசித்தாள். ராஜ் ஏன் ஆனந்த் போல் நடந்துகொள்ள மாட்டேங்குறான் என்று வருத்தப்பட்டாள்.

ஒருவாரம் ஆகியும் வீணாவால் மலரை சமாதானப்படுத்த முடியவில்லை.

அவன் வந்து நான்தான் முக்கியம்னு சொல்லி கூப்பிட்டாத்தான் போவேன். இனிமேல் என்னை அவங்க முன்னாடி திட்டமாட்டேன்னு அவன் சொன்னாத்தான் போவேன்

மோகனும் பத்மாவும், நிஷாவும், ராஜ்ஜிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள்.

என் மேல தப்பிருந்தாத்தானே நான் இறங்கிப் போகணும்? பொட்டச்சிக்கு இவ்ளோ திமிரா? என்றான்.

நிஷாவுக்கு, தன்னிடம் எப்போதும் தன்மையாக நடந்துகொள்ளும் கண்ணனின் ஞாபகம் வந்தது. தனிமையில் அழுதாள். அவரிடம் இவள்தான் அடிக்கடி கோபப்பட்டிருக்கிறாள். எரிந்து விழுந்திருக்கிறாள். அவரோ, ராஜ் மாதிரி.... எப்பொழுதும் எடுத்தெறிந்து பேசியது கிடையாது.

அன்று -

வீணா வருத்தத்தோடு(?) போய் ராஜ்ஜை சந்தித்தாள்.

நிஷா, கார்டனை ஒட்டிய ஷெட்டில், பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். இங்கே - வீட்டுக்குள் - வீணா, பத்மாவிடம் நலம் விசாரித்துவிட்டு, ராஜ்ஜை பார்க்கணும்.. என்றாள்.

ராஜ், தன் பெட் ரூமில், ஆபிஸ் விஷயங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, காமெடி க்ளிப்ஸ் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஹேய் வீணா.... வா வா

வீணா தன் தங்கைக்காக தயங்கித் தயங்கிப் பேசினாள்.

ஸாரி ராஜ்.. அவ பிடிவாதமா இருக்கா. நீங்கதான்.... கொஞ்சம் இறங்கிப் போகணும்

அம்மாவிடமும் தங்கையிடமும் எரிந்து விழுந்த ராஜ், வீணா வந்து சொல்லும்போது, அமைதியாகக் கேட்டான். அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவனுக்கு... மனதுக்கு இதமாக இருந்தது.

மலரை என்னால புரிஞ்சிக்க முடியலை வீணா.... என்றான். இப்போல்லாம் ரொம்ப கோபப்படுறா. இருந்தாலும்.. நீ சொல்றதுனால... நான் யோசிக்கிறேன்... என்றான்.

தன் வார்த்தைக்கு அவன் மதிப்பு கொடுப்பது அவளுக்கு பிடித்திருந்தது. மகிழ்ந்தாள்.

உட்காரு.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்... என்றான். தேங்க்ஸ்.. என்று சொல்லி அழகாகச் சிரித்துவிட்டு அவள் உட்கார்ந்தாள்.

தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னா... ஒன்னு கேட்கலாமா ராஜ்?

கேளு வீணா

உங்களுக்குள்ள... என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சிக்கலாமா? ஐ மீன்... உங்க ரெண்டு பேருக்குள்ள... ஏதாச்சும்?...

ராஜ் அமைதியாக இருந்தான்.

ஏன் கேட்குறேன்னா.... அவளுக்கு அதுக்கேத்த மாதிரி புத்திமதி சொல்லி... ஸாரி டு ஆஸ்க் திஸ்

உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெர்ல வீணா

சும்மா சொல்லுங்க.... நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்

சிரிச்ச முகமா இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். ஆனா அவ கடுகடுன்னு இருக்குறா. எப்போ பார்த்தாலும் ஏதாவது வாக்குவாதம்

சின்னப் பொண்ணு. சரியாயிடுவா. நான் சொல்லி அனுப்பி வைக்கிறேன். இதுக்காகவா அவமேல கோவமா இருக்கீங்க?

இல்ல.. இதுமாதிரி... சின்ன சின்ன விஷயங்கள்... நான் சொல்லி பார்த்துட்டேன் அவ அத எல்லாம் முகம் கொடுத்து கேட்குற நிலமைலயே இல்ல

அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிடுறேன். அவ விளையாட்டுப் பொண்ணு. நான் புரிய வைக்கிறேன்.

தங்கச்சி மேல இவ்ளோ பாசமா உனக்கு.... ம்... என் மச்சினியை நினைச்சா எனக்கு பெருமையாயிருக்கு

ஹேய் இந்த ஐஸ்தானே வேணாம்கிறது.... சரி நான் கிளம்புறேன்... சீக்கிரம் வந்து அவளை கூப்பிட்டுக்கோங்க ராஜ். இப்படியா ரெண்டு பேரும் பிடிவாதம் பிடிப்பீங்க?

ம்....

அவனைப் பார்த்து உரிமையாக.... கண்டிப்புடன் சொன்னாள்.

இனிமே சண்டை போடக்கூடாது. சரியா?

உன்னை மாதிரி அவ இருந்த்துட்டான்னா எதுக்கு வீணா சண்டை போடப்போறேன்?

என்னை மாதிரின்னா?

நல்லா.. சிரிச்ச முகமா... நல்லா அலங்கரிச்சுக்கிட்டு.... இனிமையா பேசிக்கிட்டு...

ரொம்ப ஐஸ் வைக்கிறீங்க. - அவள் உதட்டைச் சுழித்தாள். வெட்கத்தோடு நின்றாள்.

உன்கிட்ட மலர் நிறைய கத்துக்கணும்.

என்ன கத்துக்கணும்?

ஹ்ம்.... தழைய தழைய புடவை கட்டிக்கிட்டு, அளவா லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு, சின்னதா ஒரு ஜாக்கெட் போட்டு முதுகழகை காட்டிக்கிட்டு, தொப்புளுக்கு கீழ புடவையை கட்டிக்கிட்டு...

ஏய்.. படவா என்ன பேசிட்டே போறீங்க...

உண்மையைத்தான்பா சொல்றேன். இப்படி வெட்கப்படுறியே.. இதையும் மலருக்கு சொல்லிக்கொடு

நீங்க ரொம்ப மோசம்

அவன் மனம் விட்டு சிரித்தான். அவளுக்கும் இதமாக இருந்தது. சிரித்துக்கொண்டே உட்கார்ந்துகொண்டாள். இடுப்பு மடிப்பு மறுபடியும் மூடப்பட்டது.

நல்லாயிருக்கு. உன் மடிப்பு.

ச்சீ.... இதையெல்லாமா நோட் பண்ணுவீங்க?

அடிப்பாவி நீதான் இழுத்து இழுத்து பிடிச்சி மூடிக்கிட்டு இருக்கியே.... இதையெல்லாம் நான் அந்த scent விளம்பரத்துல பார்த்தது

பொய் சொல்லாதீங்க நான் அதுல எதுவுமே காட்டல

எதுவுமே காட்டலையா? நீதான் அப்படி நினைச்சிட்டிருக்க. நான் வீடியோ pause பண்ணி pause பண்ணி நிறைய பார்த்துட்டேன்

ச்சீய்... இந்த ஆம்பளைங்களே ரொம்ப மோசம்

அவளுக்கு, வேற என்னலாம் பார்த்தீங்க...ன்னு கேட்க ஆசையாயிருந்தது. அடக்கிக்கொண்டாள்.

ரொம்ப போரிங்கா பீல் பண்ணேன். நீ வந்ததுக்கப்புறம்.. நல்லாயிருக்கு. தேங்க்ஸ் வீணா

நீங்கதான் எங்களை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறீங்க. அப்பப்போ போன் பண்ணி பேசலாம்ல?

அவளது பொய்க்கோபத்தை ரசித்தான். நெருங்கி அவள் காதுக்குள் சொன்னான். ஒரு பொண்ணு, அழகா கோபப்படுறதை இப்போதான் பார்க்குறேன்!

நல்லா ஐஸ் வைக்குறீங்க

நைட்டு சாப்பிடுற வரைக்கும் இருந்துட்டுப் போ வீணா. நிஷாவும் வந்திடுவா. எல்லாரும் பேசிட்டிருக்கலாம்

அங்க ஆனந்த் காத்திட்டு இருப்பார்ப்பா.. என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள். புடவையை சரி செய்தாள். சரிசெய்யும் சாக்கில் தொப்புளை ஒரு செகண்ட் காட்டி மூடினாள்.

அவனுக்கு, அவளது தொப்புள் அழகு பார்த்ததும் மனசுக்கு உற்சாகமாக இருந்தது. ஹ்ம்.... என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, சரி ஓகே. bye... என்றான். லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு ஆன் பண்ணினான்.

வொர்க் பண்ணப்போறீங்களா?

இல்ல. வெட்டிங்க் ஆல்பம் பார்க்கப்போறேன்

மடில வச்சிக்கிட்டு பாக்காதீங்க

ஏன்?

ப்ச். சொன்னா கேட்கணும். அதெல்லாம் safe கிடையாது

என்ன... safe கிடையாது?

இவ்ளோதான் சொல்ல முடியும். சொன்னா கேட்கணும்

வீணாவுக்கு தன்னோடு நேரம் ஸ்பென்ட் பண்ண ஆசையிருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டான். அவள் பேசும் விஷயம் அவனுக்குப் பிடித்திருந்தது.

நீ மட்டும் சொன்னா கேட்கவா செய்யுற? - சொல்லிக்கொண்டே லேப்டாப்பை மூடி வைத்தான்.

என்ன கேட்கணும்?

கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போன்னு சொன்னேன்ல.. என்று அவன் அவள் கைபிடித்து இழுத்தான். ஏய்... என்று அவள் அவன் மடியில் வந்து விழுந்தாள்.

வளையல்....!!! என்று சொல்லி அவனைப்பார்த்து முறைத்தாள். மறுபடியும் அழகாயிருக்க..!! என்று சொல்லிக்கொண்டே அவன் அவளை மடியில் உட்காரவைத்துக்கொண்டான். இடுப்புச் சேலைக்குள் கைவிட்டுப் பிடித்தான்.

ரொம்ப மோசம் நீங்க.... - அவள் சிணுங்கினாள்.

நல்லா உட்கார்ந்துக்கோ

ம்....

அவள் தன் பின்னழகுகளை நன்றாக அவன் தொடைகளுக்கு நடுவில் செட் பண்ணிக்கொண்டு உட்கார்ந்தாள்.

மச்சினன் மேல இவ்ளோ அக்கறையா... ம்ம்?

நான் எப்பவுமே அக்கறையோடதான் இருக்கிறேன். உங்களுக்குத்தான் தெரியல

சொன்னாத்தானே தெரியும்

சொல்லிக்கொண்டே ராஜ் அவளது கூந்தல் வாசத்தை முகர்ந்தான். அவள் கண்ணங்களில் உரசினான்.

இதெல்லாம் சொல்லுவாங்களா.... பொண்டாட்டியை எப்போனாலும் பார்த்துக்கலாம். மச்சினியை இனிமே எப்போ பார்த்துக்கப் போறோம்னு உங்களுக்குத் தோணாதா?

ராஜ் அவளது ஆப்பிள் கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தான். கையை நன்றாக உள்ளே கொடுத்து அவள் அல்வா துண்டு அடிவயிறை பிடித்துப் பார்த்தான். அவளது தொப்புளுக்குள் விரலை நுழைத்து அவள் கதகதப்பை அனுபவித்தான்.

ஸ்ஸ்ஸ்ஸ்.....சும்மாவே இருக்க மாட்டீங்களா

நீ என்மேல இவ்ளோ ஆசையா இருப்பேன்னு தெரியாதுடி. நான் உன்கிட்ட ஜாலியா விளையாண்டாக்கூட, வினய் மேல ஆசைப்பட்டதால... மச்சினன் நம்மளை சீப்பா நினைச்சிட்டான்னு நீ பீல் பண்ணிடக்கூடாதுல்ல.. அதுக்குத்தான் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணேன்

ஸ்ஸ்ஸ்... விரலை எடுங்க கூச்சமா இருக்கு... - சொல்லிக்கொண்டே அவன் விரல்களை வலுக்கட்டாயமாக எடுத்து விட்டாள். புடவையால் மூடினாள்.

ஸ்லீவ்லெஸ் உனக்கு ரொம்ப நல்லாயிருக்கு

ம்.. தேங்க்ஸ்

இதுவும் நல்லாயிருக்கு... என்று அவளது இடது முலையை அள்ளியெடுத்து அமுக்கினான். அழுத்திப் பிடித்தபடியே.. வைத்துக்கொண்டான்.

விடுங்க.... - அவள் குழைந்தாள். கெஞ்சும் விழிகளால் அவனைப் பார்த்தாள்.

அவனோ.. விடாமல்... கையிலேயே பிடித்து வைத்துக்கொண்டான். வீணாவுக்கு சுகமாக இருந்தது. முகமெல்லாம் சிவந்தது. சூடாக மூச்சு விட்டாள்.

மலருக்கு சொல்லிக்கொடு. அப்பப்போ ஸ்லீவ்லெஸ் போடணும்னு சொல்லு

ஹாரன் அமுக்குவதுபோல்... அமுக்கி அமுக்கி விட்டுக்கொண்டே சொன்னான். வீணாவுக்கு காம்புகள் நீண்டுகொண்டு... சுகமாக இருந்தது.

நீங்க சொன்னா கேட்கப்போறா

எங்க கேட்குறா. உன்னை மாதிரித்தான் தொப்புளுக்கு கீழ நல்லா இறக்கி கட்டச்சொல்றேன். ஆனா அவ?

வீணாவுக்கு மனம் குளிர்ந்தது. அவன் இப்போது அவள் முலையிலிருந்து கையை எடுத்து அவள் தொப்புளை வருட... அவள் தன் பெண்மையில் பரவிய சுகத்தை அனுபவித்தாள்.

அவளை லோ ஹிப் கட்டச்சொல்லுவியா வீணா?

சொல்றேன்

எத்தனை இன்ச் கட்டச்சொல்லுவ

எத்தனை இன்ச் வேணும்

இது எத்தனை இன்ச்? - அவளது அடிவயிற்று சதையை பிடித்து பிடித்து விட்டுவிட்டு அவள் கொசுவத்துக்குள் விரல்களை நுழைத்துக் கேட்டான்.

வீணா சூடாக மூச்சு விட்டாள்.

தெ.. தெரியாது

உனக்கு தொப்பை விழுந்திட்டிருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட சிக்குன்னு வச்சிருந்த?

ச்சீய்.. இதையெல்லாமா பார்ப்பீங்க

அந்த விளம்பரத்துல பார்த்தேன்

பொய் சொல்றீங்க

அவளுக்கு சுகமாக இருந்தது

கைய வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா

இப்படி ஒரு அழகான தொப்புள் கிடைச்சா எப்படி சும்மா இருக்கிறது?

இப்போதான் புரியுது. மலர் ஏன் வரமாட்டேங்குறான்னு

ஏன்?... என்று அவள் தொப்புளுக்குள் தட்டினான்.

ஏய்....

என்னையும் மலரையும் சேர்த்து வச்சிடுவியா வீணா?

எங்க சேர்த்து வைக்க விடுறீங்க. இழுத்து மடில உட்கார வச்சிக்கிடுறீங்க.....

நீ சமாதானம் பேசவந்ததது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி.... அதுவும் இப்படி எனக்காக பார்த்துப் பார்த்து உடுத்திக்கொண்டு வந்தது பிடிச்சிருக்கு

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீணா மோகத்தோடு அவன் உதடுகளைக் கவ்வினாள். கண்களை மூடிக்கொண்டு அவன் உதடுகளைச் சப்பினாள். ராஜ்க்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. நரம்புகளில் சூடேறியது. வீணா ஆவேசமாக அவன் உதடுகளைச் சுவைத்தாள். அவனது நாக்கையும் எச்சிலையும்... ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே உறிஞ்சி இழுத்து சுவைத்தாள். அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். ஆசைதீர அவனைச் சுவைத்துவிட்டு, வெட்கத்தில் தலையை குனிந்துகொண்டாள்.

செமையா இருக்குடி உன்னோட கிஸ். யப்பா...... - அவன் கண்மூடி கிறங்கினான். அவள் சிரித்துக்கொண்டே அவன் நெஞ்சில் குத்தினாள்.

ரொம்ப நல்லவர் மாதிரி ஆக்ட் பண்றீங்க.... என்று அவன் கீழ் உதட்டைப் பிடித்து ஆட்டினாள்.

வீட்டுல எல்லாரும் இருக்கிறாங்க.... என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்.

ஓ...

நிஷா வேற சோகமா இருக்கிறா...

அதனால?

அதனால நீ வந்த வேலையை பாரு. என்ன சமாதானப்படுத்து.... என்று குறும்பாக சொல்லிக்கொண்டே அவளது வலது முலையை பிடித்து பிசைந்தான். அவளது மெல்லிய ப்ளவுசை முட்டிக்கொண்டு வந்த அவள் காம்பைப் பிடித்து இழுத்து விட்டான்.

மச்சினனைப் பார்க்க வரும்போது இப்படித்தான் ப்ரா போடாம வருவியா?.. என்று அவள் முலையில் ஒரு அடி கொடுத்தான்.

ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... ச்சீ......

வீணாவுக்கு பெருமையாக இருந்தது. அவனது கழுத்தைச் சுற்றிக் கைகளை போட்டுக்கொண்டு அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவனோடு படுக்க அவளுக்கு ஆசையாயிருந்தது.

சமாதானப்படுத்துங்க மேடம்... என்று அவள் இரண்டு காம்புகளையும் பிடித்து இழுத்தான்.