பாகம் 22: முடிவில் தொடங்கிய புதிர்

Story Info
உல்லாச மாளிகை மற்றும் பானுவின் உறவில் சில மர்மங்கள்
1.3k words
0
9
00
Story does not have any tags

Part 81 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 22: கொண்டாட்டம் முடிவில் தொடங்கிய புதிர்

தாமரை, "ஆமாம் தம்பி ரொம்பச் சந்தோஷமா ரொம்பத் திருப்தியா இருக்கு; ஆனால் நீங்கக் குடிக்கிற அந்தச் சிகப்பு வகை எங்களுக்குச் சரிப்பட்டு வராது எங்களுக்கு இந்த வெள்ளையா இருக்கிறது தான் முடியும்." என மூன்று கோப்பைகளில் நிரப்பி ஒரு கோப்பையை எடுத்துப் பருக மற்ற இரு கோப்பைகளைச் செல்வியும் வசந்தியும் எடுத்துக் கொண்டனர். நான் அதை நோக்க அது மொஸ்கட்டோ (MOSCATO)

நான், "ஒஹ்ஹோ முஸ்காட்டோ-வா; அது நல்லா இனிப்பா இருக்கும்."

தாமரை, "ஆமாம் இனிமையான கனவுகளோடு உறங்க இனிப்பான மது." சொல்லி என்னை நோக்கி சற்றே வித்தியாசமாகக் கண் சிமிட்டி சிரித்தாள். ஏதோ மறைமுகமாகத் தெரிவிக்க விரும்புகிறாள் எனத் தோன்றியது

அதற்குள் செல்வி தாமரையை ஏக்கமாக நோக்கி 'அடுத்து நான்' எனச் சைகை செய்து என் தம்பியைப் பிடித்து, "அண்ணனை விடத் தம்பி ரொம்ப வலிமையா இருக்கிறார்." சொல்லி மெல்ல உருவிய படி அவ்வப்போது வாயில் வைத்துச் சப்பி உறிஞ்சி மிக நிதானமாகத் தம்பியைத் தயார் செய்தவள், "தம்பி நீங்க அப்படியே சாய்ந்து மதுவை ரசித்து குடிங்க நான் உங்க தம்பியை இந்த மாதுவோட மதுவில மூழ்கடிக்கிறேன்." சொல்லி தேங்காய் உரிக்க ஆரம்பித்தாள்.

வசந்தி, "அட தம்பி முழுசும் காணாம போயிடிச்சி!." சொல்லி என் முகத்தை உற்று நோக்கியவள், "உங்களுக்கு இப்போ நான் செய்ததைவிட நல்லா இருக்கும் இல்லையா?"

தாமரை, "அடி அசடே உன்னைக் கன்னி கழியுறதுதான் எங்களைச் செய்யுறதை விட அவருக்கு ரொம்பச் சுகமா இருக்கும்."

நான், "அப்படிச் சொல்ல முடியாது; அது ஒரு வகையில் சிறப்பாக இருந்தது அதே போல இது ஒரு வகையில் சிறப்பாக இருக்குது."

அனைவரும் மும்முரமாக அனுபவித்துக் காமத்தில் மூழ்கி இருந்தோம்; பானுவோடு காமக்களிப்பை திட்டமிட்டிருந்த எனக்கு இப்படி யோகம் அடித்தது சற்றும் எதிர் பாராதது. உடனே பானுவின் நினைவு வர அவள் எப்போது வருவாள் என ஏக்கம் கொண்டேன்.

அதே சமயம் அந்தச் சிற்றாற்றின் மறு முனையில் ஏதோ சிறிய விளக்கு ஆடியது; நான் சற்றே உற்றுக் கவனிக்க அது யாரோ பரிசலில் பயணித்து வருவது எனப் புரிந்தது.

அதே சமயம் அதைக் கவனித்த தாமரை சற்றே கூர்ந்து கவனித்தவள் பின் எழுந்து சென்று அந்த இனிய மதுவை அவர்கள் மூவரின் கோப்பையில் நிரப்பி வசந்திக்கும் செல்விக்கும் கொடுத்து, "இந்தா இதைக் குடிங்க அப்போதான் ஆட்டம் போட்ட அலுப்பு தீரும்." என இருவரையும் மறைமுகமாக உசிதப்படுத்தினாள்.

அவள் நடவடிக்கை சற்றே வித்தியாசமாக இருந்தது; மற்ற இருவரையும் அதிகம் குடிக்க வைத்துத் தான் சிறிதளவே குடித்தாள். அதே சமயம் அடிக்கடி அந்த விளக்கை நோட்டமிட்ட வண்ணம் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் வசந்தி படுக்கையில் சாய்ந்தாள் நான் அவளை அணுகி உதவ எத்தனிக்க அவள் என் கையைப் பிடித்து முத்தமிட்டபடி உறங்க ஆரம்பித்தாள். நான் வியந்து தாமரையை நோக்க அதற்குள் அவள் செல்விக்கு உதவி அவளை உறங்க வைத்தாள்.

அதே சமயம் அவளும் சற்றே தளர்ந்து தள்ளாடிய படி சற்றே மென்மையாகப் புன்னகைத்து என்ன ஆதரவாய் பிடித்த வண்ணம், "வாங்கத் தம்பி தூங்கலாம்." எனக்கு இதெல்லாம் ஏதோ திட்டப்படி நடக்கிறதெனப் புரிந்தது.

நான் தாமரையை நோக்கி, "என்ன ஆச்சி ஏன் இப்படி."

தாமரை, "தூங்குற நேரம் ஆயிடுச்சி தம்பி, தூங்குங்க." தூங்கி வழிந்தவாறே சொல்லி முடித்தாள்.

நான், "உண்மையச் சொல்லு தாமரை! இது ஏதோ சந்தேகப்படுற மாதிரி இருக்கு!"

அதற்குள் உறங்க ஆரம்பித்தவள் சற்று கட்டுப்படுப்படுத்தி, "ஆமாம் ஆனால் பயப்பட ஒண்ணுமில்ல; எல்லாரும் நிம்மதியா தூங்கலாம், தூங்கனும்." முடித்தவள் அடுத்து நன்றாக உறங்கிவிட்டாள்.

நான் நன்கு உலுக்கித் தூங்க விடாமல் தடுக்க மெல்லப் புன்னகைத்தவள் சிரமப்பட்டு தன் இரு கைகளைக் கூப்பி வணங்கி சரிந்து ஆழ்ந்து உறங்கத் தொடங்கினாள். முழுமையாகக் காமக்களியாட்டம் ஆடிய மூன்று பெண்களும் அந்த மதுவைக் குடித்ததும் உடனடியாக உறங்க ஆரம்பித்து அதி விரைவாக ஆழ்ந்த உறக்கத்தில்.

சற்றே சந்தேகம் வலுக்க அந்த மதுவில் ஏதோ தூக்க மருந்து கலந்திருக்க வேண்டுமென யூகித்தேன். இது ஏதாவது அபாயச் சதியா? அந்த மூன்று பெண்களுக்குமே தெரிந்தே நடக்கும் விஷயமாக இருக்கிறது; நிச்சயம் தாமரைக்குத் தெரிந்தே நடக்கிறது.

எனவே ஆபத்தான விஷயமில்லை எனத் தெரிகிறது; அவர்கள் முதலில் ஒரு கோப்பைக்கும் குறைவாகக் குடித்த போது எந்தவித பிரச்சினையும் இல்லை. ஒரு வேலை அதன் பின் தூக்க மருந்து கலந்திருக்கலாம்.

தாமரை அந்த ஆற்றில் தெரிந்த விளக்கைக் கண்ட பின்பே அவள் இப்படி வித்தியாசமாகச் செயல் பட ஆரம்பித்தாள். அப்படியானால் அந்தப் படகு/பரிசலில் வருவது யார்? உடனடியாக விளக்கை அனைத்துவிட்டு அந்தப் பரிசலை நோக்க அது கிட்டத்தட்டப் பாதித் தூரத்தைக் கடந்து விட்டது. இந்த நடு இரவில் இங்கு வருவது யார் மறைந்து கண்காணிக்க எத்தனித்தேன்.

உடனே பானு என்னவானாள்? அவளுக்கு ஏதாவது ஆபத்து சூழ்ந்திருக்குமோ? மெல்லச் சத்தமின்றி மிக ஜாக்கிரதையாக அவள் அறையை நெருங்க அவள் அறை எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக இருந்தது.

சற்றே கூர்ந்து கவனிக்க மெத்தையில் பானு படுத்திருப்பது தெரிந்தது ஆனால் அவள் அம்மா பக்கத்தில் தூங்கவில்லை அருகிலிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் தளர்வாகச் சாய்ந்த வண்ணம் இருந்தார் உள்ளே நுழைய வழியை ஆராய அதே சமயம் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டு எச்சரிக்கையுடன் மறைந்து கண்கானித்தென்.

ஒரு பெண் வந்து பானுவின் அறைக்கதவை மெல்லத் தட்ட உடனே பானுவின் தாயார் எழுந்து வந்து கதவைத் திறந்து பின் அவரும் அந்தப் பெண்ணும் சேர்ந்து இருவருமாக வெளியேறினர். சிறிது பொருத்த பின் நான் உடனடியாகப் பானுவின் அறையில் நுழைந்து பானுவை எழுப்ப அவள் ஆழ்ந்த உறக்கத்தில். சிறிது நேர முயற்சிக்குப்பின் அவளும் அநேகமாக தூக்க மருந்துக்கு ஆளாகியிருப்பதாகத் தோன்றியது.

யார் அந்த பெண்மனி

நான் உடனே அவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கப் பானுவின் தாயார் மற்றொரு பெண்மணியுடன் வந்து கொண்டிருந்தார். இருவரும் பானுவின் அறையை அடைந்தனர். சற்று நெருங்கிய பின் அந்தப் பெண்மணியின் முகம் எங்கோ பார்த்த முகம் போலத் தோன்றியது. ஆனால் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

வந்த பெண்மணி சற்றே ஆடை தளர்த்திப் பின் பானுவின் மெத்தையில் சற்றே சாய்ந்து அமர்ந்த வண்ணம் பானுவை தன் மடியில் கிடத்தி அவள் தலையைக் கோதிய படி அவள் முகத்தை உற்று நோக்கியவர், "அட என் செல்லம் ஏதோ சந்தோஷமான கனவிலிருந்திருக்கா முகம் கொஞ்சம் வித்தியாசமா தெளிவா இருக்கே!" சொல்லி அன்புடன் அவள் நெற்றி கன்னங்களில் மிக அன்புடன் கொஞ்சிய நிலையில் முத்தமிட்டாள்.

பானுவின் தாயார், "இன்னிக்கி வந்ததிலிருந்தே பானு ரொம்பச் சந்தோஷமாக இருக்கு. இதுக்கு முன்ன இவ்ளோ சந்தோஷம் பானு முகத்தில் பார்த்ததேயில்லை. அது வந்து... அந்தத் தம்பிய ரொம்ப நெருக்கமா சுத்திச்சுத்தி வருதும்மா.

இப்போ தூங்கறவரைக்கும் அந்தத் தம்பிய பற்றித்தான் ஒரே பெருமையான பேச்சு; அந்தத் தம்பி பானுவைவிட மூனு வயசு இளையவராம் அதனால ரொம்ப உருக்கமா வருத்தப்படுது ஆனால் அந்தத்தம்பி பானு மேல ரொம்ப ஆசை வெச்சிருக்குன்னு ரொம்பப் பெருமையா சந்தோஷப்படுதும்மா."

சற்றே அதிர்ச்சியுடன் குழம்பிய நிலையில் அந்தப் பெண்மணி மௌனமாக யோசித்தவர், "யாரது அந்தத் தம்பி; அவர் (ஜமீன் மாமா) என்ன சொன்னார்."

பானுவின் தாயார், "ஐயாவுக்குச் சமமா நடத்தச் சொன்னாரு. அதுதான் அவர் இப்படி ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யச் சொல்லுறதே ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஐயா சொல்றதைப் பார்த்தா அந்தத்தம்பி ஏதோ பெரிய இடத்து புள்ளைன்னு தோனுது."

உடனடியாகக் குறுக்கிட்ட அந்தப் பெண்மணி, "என்ன இருந்தாலும் இப்படித்தான் ஒரு வயசுப் பொன்னை முன்ன பின்னத் தெரியாத வயசுப் பையனோடு தனியா அனுப்பி வைப்பாங்களா? உனக்கு எங்க போச்சி புத்தி? உன் பொன்னா இருந்தால் இப்படித்தான் அனுமதிப்பியா?" சொல்லி சற்றே நிதானப்பட்டவர் தலை குனிந்தவாறே யோசனையில் ஆழ்ந்தார்.

பானுவின் தாயார், "என்னம்மா இது ஐயாவைப் போயி நான் எப்படிம்மா கேட்க முடியும். அதுக்கும் மேல முதல்ல வழக்கமா அவர் வருவதாக ஏற்பாடு செய்து அப்புறம் இன்னிக்கி சாயங்காலம்தாம்மா இப்படிச் சொன்னாரு; உடனே நான் உங்களுக்குத் தகவல் சொல்லிட்டேன்.

அப்புறம் வந்ததிலிருந்து பானு அந்தத் தம்பிய அப்படி ரொம்ப அக்கரையா கவனிச்சிக்குது; அதுக்கும் மேல இப்பத்தான் இப்படிச் சொல்லுது. என்னால முடிந்த வரைக்கும் அவுங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர விடலம்மா."

அந்தப் பெண்மணி, "சரிசரி நீ ஒண்ணும் கவலைப்படாத; நான் கோபத்துல உன்னை ஏதேதோ சொல்லிட்டேன்; நீ கொஞ்சம் மனசைப் போட்டு அலட்டிக்காம நிம்மதியா தூங்கு. நானும் கொஞ்ச நேரம்... (சற்றே யோசித்தவர்) அப்படி என்ன அந்தத் தம்பி... யாரு என்னன்னு ஏதாவது விவரம் தெரிஞ்சிதா?"

பானுவின் தாயார், "அது வந்து நம்ப ஐயா கூட இருக்குற மேல் அதிகாரியோட அண்ணன் புள்ளைன்னு பானு சொல்லிச்சி; அவுங்களுக்கும் இப்பத்தான் ஒரு வாரப் பழக்கமாம்."

அந்தப் பெண்மணி, "அடக்கடவுளே ஒரு வாரப்பழக்கத்துல இப்படி நம்பித் தனியா... ச்சேச்சே இப்படியா கேவலமா கொஞ்சம் கூடப் பொருப்பில்லாம இருப்பாரு. சரிசரி நீ போய்த் தூங்கு." சொல்லி பானுவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தவர் சற்றே பெரு மூச்சுடன் முத்தமிட்டு பானுவை தம் நெஞ்சோடு அணைத்த வண்ணம் தூங்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து அவர் பானுவின் தலை கன்னம் முதுகு எனக் கை ஊர்ந்து வருடிய வண்ணமே தொடர்ந்தார் மேலும் அடிக்கடி அவள் நெற்றி கன்னம் என ஆதரவான முத்தம்; சில சமயம் அவர் கண்களைத் துடைத்த விதம் அநேகமாக அது கண்ணீர்த் துளிகளாகத் தோன்றியது.

நடக்கும் பல விஷயங்கள் மேலும் மேலும் குழப்பத்தையும் வியப்பையும் அதிகரித்தன. பானுவின் உறவில் ஏதோ பெரிய புதிர் இருப்பதாகப் புரிகிறது; முதலில் பானுவின் அம்மா யார்? நடக்கும் நிகழ்வுகள் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

அந்தப் பெண்மணி நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் அவர் பானுவின் அம்மா எனப் புரிகிறது அல்லது பானுவின் மேல் மிகுந்த அக்கரை உள்ளவர் எனத்தெரிகிறது.

ஆனால் இந்த நாடகம் ஏன்? மாமாவுக்கு இதன் விவரம் எந்த அளவுக்குத் தெரியும் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் அவர் இதன் சம்பந்தமாக என்னிடம் எந்த விதத்திலும் துப்பு/தடயம் விடவில்லை.

ஒரு வேலை அவர் மிகக் கவனமாக என்னிடமிருந்து மறைக்க வேண்டிய விஷயமாக இருக்கலாம் அல்லது அவருக்கே தெரியாத விஷயமாகவும் இருக்கலாம்.

ஆனால் அவருக்கே தெரியாமல் இருக்க வாய்ப்புகள் மிகக்குறைவே. அடுத்து பானுவுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதும் பெரிய கேள்விக்குறி! அவளும் தெரிந்துதான் மறைக்கிறாளா அல்லது அவளுக்கும் தெரியாதா? மிகவும் சிக்கலான விஷயம் என்பது மட்டும் தெளிவானது. இதற்கு விடை காண அந்தப் பெண்மணியைப் பற்றி மேலும் விவரம் அறிய வேண்டும்.

நான் சென்று மெத்தையில் படுத்த வண்ணம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். நீண்ட நேரம் யோசனையில் கழிக்கச் சற்று நேரத்தில் உறக்கம் ஆட்கொள்ள ஆரம்பித்தது. அதே சமயம் அங்கு யாரோ வருவது போன்று தோன்ற நான் எச்சரிக்கை அடைந்தேன். அட அந்தப் பெண்மணி; இவர் ஏன் இங்கு!

அவர் சிறிது கவனமாக ஓரளவு எச்சரிக்கையாக எங்கள் தூக்கம் கலையாதவாறு நோட்டமிட்டார்; அறையையும் மற்றவர்களையும் சிறிதே நோட்டமிட்டவர் மெல்ல என் அருகே வந்து என்னை நோட்டமிடுவதில் சற்றே அதிக அக்கரை காட்டினார் பின்னர்த் திரும்பிச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்கள் பொறுத்துப் பின் நான் சென்று நோட்டமிட அவர் பழையபடி படுத்து பானுவை அணைத்த வண்ணம் தொடர்ந்தார்.

அதன் பின் விடியற்காலை நான்கு மணியளவில் அவர் வந்த படியே திரும்பிக்கொண்டிருந்தார். அவர் அந்த வீட்டைவிட்டு வெளியேற நான் அவரை மிகக் கவனமாகப் பின் தொடர்ந்தேன். அவர் அந்த நீரோடையைக் கடந்து அதன் மறுபக்கத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு பெரிய மாளிகையை அடைந்தார்.

அதற்கு மேல் அந்த இருட்டில் அங்கு எதுவும் சாதிக்க முடியாது. பொழுது புலர்ந்த பின்னர் வந்து ஆராய்வதென முடிவு செய்து நான் வீடு திரும்பி நன்றாக உறங்கி ஓய்வெடுத்தேன்.

காலை சற்றுத் தாமதமாக எழுந்து காலைச் சிற்றுண்டியில் பானுவைச் சந்திக்க; அவள் சற்றே குற்ற உணர்வோடு வெட்கப்பட்டுத் தான் அதிக அசதியுடன் தூங்கி விட்டதால் திட்டமிட்டபடி பின் இரவில் வரத் தவறியதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.

நானோ அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நேற்று இரவில் நடந்த நாடகத்தை நினைத்துக் குழம்பிய நிலையில் அதைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமானேன்

"பொதுவாக எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நீ உன் அம்மாவைப் பார்க்க வருவாய்?"

"பெரும்பாலும் மாதத்துக்கு ஒரு முறை."

"உங்கள் அம்மா உன்னைப் பார்க்க வருவார்களா?"

இந்தக் கேள்வியால் சற்றே வியந்து அதிர்ந்தவளாய், "இல்லை... இதுவரை வந்ததில்லை; ஆனால் ஏன் நீ இப்படிக் கேக்குற?"

"ஒன்றுமில்லை சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான். அந்தப் பாயசம் ஒவ்வொரு முறையும் செய்வியா?"

"ஹஹா, எனக்குத் தெரியும் உனக்கு அந்தப் பாயசம் பிடிச்சிருக்கு அப்படித்தானே; கவலைப்படாதே நான் திரும்பவும் செய்யுறேன்."

"நன்றி ஆனால் அதைவிட முக்கியமா என் கேள்விக்குப் பதில் சொல்லு! இங்க வரும் போதெல்லாம் அந்தப் பாயசம் செய்து சாமிக்குப் படைத்து சாப்பிடுவியா?"

அவளுடன் நீண்ட உரையாடலில் அறிந்த சேதி: அவள் ஒவ்வொரு முறையும் அந்தப் பாயசத்தைத் தயாரித்துச் சாமிக்குப் படைத்துத் தூங்கும் போது சற்றே அதிகமாகப் பருகி நன்றாகத் தூங்கிவிடுவது வழக்கம். அதன் பின்னர் இரவில் விழித்தே இல்லை.

வழக்கமாக எட்டு/ஒன்பது மணியளவில் உறங்கத்தொடங்கி மறு நாள் காலையில் விழிப்பதே வழக்கம். மேலும் இரவில் மேல் மாடிக்குச் சென்றதில்லை. எனவே என் சந்தேகம் மேலும் வலுத்தது.

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous