பாகம் 23: புதிர் வெளிப்பட்டது

Story Info
பானுவின் உறவு பெரும் புதிராய் மர்மங்கள் சூழ்ந்தது
1.4k words
0
15
00

Part 82 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 23: புதிர் வெளிப்பட்டது

அடுத்து அந்த நீரோடையின் மறுபுறம் தெரிந்த ஊரைப்பற்றி எந்தத்தகவலும் அவளுக்குத் தெரியவில்லை. நான் மேலும் ஆராய்ந்ததில் அந்த ஊருக்குச் செல்ல பிரதான சாலை வழியும் இருக்கிறது.

உடனே ரகசியமாக அந்த ஊருக்குச் சென்று அந்தப் பெண்மணியைப் பற்றி மேலும் விவரம் திரட்டுவதென முடிவெடுத்தேன். அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் வண்டியில் சிறிய பழுது பார்க்கும் வேலை எனப் பொய் சொல்லி அந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

அந்த ஊரைப் பிரதான சாலை வழியே அடைந்ததும் என் முதல் அதிர்ச்சி அது பூவனூர். நேற்றிரவு அந்தப் பெண்மணி சென்ற மாளிகையைத் தேடி அடையாளம் கண்டு அதன் அருகில் நின்று மேலும் விவரம் திரட்ட மேலும் அதிர்ச்சி அந்த மாளிகை பூவனூர் கிராம அதிகாரி வசிக்கும் மாளிகை.

பூவனூர் கிராம அதிகாரி பெயர் கஜபதி, அவர் மனைவி பெயர் கயல்விழி. அவர்தான் என்னையும் ஜமீன் மாமாவின் குடும்பத்தாரோடு விருந்துக்கு அழைத்தவர். அப்படியானால் நான் தேடிவந்த பெண்மணி (அதாவது பானுவின் தாயாராகச் சந்தேகிக்கப்படுபவர்) இந்தக் குடும்பத்தோடு சம்மந்தப்பட்டவரா? ஒரு வேலை பானுவின் பிறப்பில் ஏதோ வில்லங்கம் இருந்து நான் அதை வெளிப்படுத்த அது ஏதாவது எதிர் பாராத விளைவுகளை ஏற்படுத்தினாள் என்ன செய்வது!

ஆனால் அதற்காக அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விட முடியாது. சற்றே யோசித்த பின் ஒரு முடிவுக்கு வந்தேன். உடனடியாக இந்த ஆராய்ச்சியை நிறுத்தி வீடு திரும்பி நன்றாக யோசித்துப் பின்னர்ச் செயல் படுவதென முடிவெடுத்து வந்த வழியே திரும்பினேன்.

ஆனால் அப்போது என் அருகில் ஒரு வாகனம் வந்து நிற்க அதிலிருந்து வெளிவந்த கயல்விழி ஆனந்த அதிர்ச்சி வியப்புடன் என் கைகளைப் பற்றி, "வாங்கத் தம்பி வாங்க (சுற்றும் முற்றும் நோக்கி) அண்ணன் (ஜமீன் மாமா) மத்தவங்க எல்லாம் வந்திருக்காங்களா? எங்கே?"

சற்றே அதிர்ந்த நான், "ஹோ ஹலொ அட!! நீங்களா? நல்லா இருக்கீங்களா!! மன்னிக்கனும் இதுதான் உங்கள் ஊரா I mean பூவனூரா? நான் வேற ஒரு வேலையாக வந்தேன். உங்களைச் சந்திச்சதில ரொம்ப மகிழ்ச்சி; அதிலும் உங்களை இவ்ளோ மங்களகரமா பார்க்க நான் கொடுத்து வெச்சிருக்கனும்."

கயல்விழி, "அட போங்க தம்பி ரொம்ப புகழாதீங்க கடைத் தெருவுக்குப் போயிட்டு வீடு திரும்புற வழியில அப்படியே கோவிலுக்குப் போயிட்டு வரேன் அவ்ளோதான்... உண்மையிலேயே நல்லா இருக்கிறேனா?"

"நிச்சயமா நீங்க அன்னிக்கு பார்த்ததை விட முகம் நல்லா பிரகாசமாகச் சிரித்த முகத்தோட இருக்கிறது தெய்வீகக்கலையாகப் பார்க்குறவங்க மனசை அமைதி சாந்தி அடைய வைக்கும்; உங்களைப் பார்த்ததும் நான் ஒரு கணம் மெய் மறந்து கைகூப்பி வணங்கனும் போல இருக்கு."

கயல், "உங்கள் பேச்சு மனதுக்கு நிறைய இதமாக இருக்கு; ஒரு விதத்தில அதுவும் உங்களாலத்தான்னு சொல்லனும்; சரிசரி வாங்க வீட்டுக்கு உள்ளே போயி பேசலாம்." சில வினாடி அறிமுகத்துடன் அவர் கட்டாயப்படுத்தி அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தேநீர் பருகியவாறே உரையாடினோம்.

அவர் அந்த வீட்டில் தன் கனவனுடன் வசித்து வந்தவர் தற்போது சமீப நிகழ்வுகளுக்குப் பிறகுத் தன் கனவனைப் பிரிந்து தனியாக வாழ முடிவெடுத்துத் தனியாக ஆனால் மிகவும் நிம்மதியாக வாழ்வதாகத் தெரிவித்தார்.

"மன்னிக்கனும் என்னால உங்கள் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சி."

மிகப் பதற்றத்துடன் குறுக்கிட்ட கயல், "ஐயோ தம்பி நீங்கத் தவறாகப் புரிஞ்சிகிட்டீங்க நீங்கச் செய்த செயல்தான் எனக்கு அந்தப் பாவிகிட்ட இருந்து விடுதலை வாங்கிக் கொடுத்து நான் இப்போதான் நிறையச் சந்தோஷமா இருக்குறேன். இந்த வீட்டில் எல்லாரும் நிம்மதியாக நிறையச் சந்தோஷமாக இருக்குறோம். இதற்கு எல்லாம் உங்களுக்குத்தான் நன்றி சொல்லனும்."

"நீங்க சொல்கிறது ரொம்பக் குழப்பமா இருக்கு."

"தம்பி அந்த ஆள் (அவள் கனவன் பெயர் கஜபதி) மிக மோசமான நயவஞ்சகன். ரொம்ப நல்லவனாக நடித்து எங்களையெல்லாம் ஏமாற்றி என்னைக் கல்யாணம் செய்துகிட்டான். அவன் எங்க அப்பா கீழ வேலை செய்து வந்தவன்.

வேலை செய்வதில் என் அப்பாவிடம் நல்ல பெயரெடுத்து வர, நானும் விரும்பி அவனைக் கல்யாணம் செய்துக்க எனக்கு ஆசைன்னு என் அப்பாவை வற்புறுத்தினேன், ஆனால் அப்பவே என் அப்பா கொஞ்சம் பொறுக்கச் சொன்னார் ஆனால் நான் தான் அவர் பேச்சைக் கேட்கல.

கல்யாணம் செய்த பிறகுதான் அவன் சுயரூபம் தெரிய வந்தது. அவன் என்னைக் கல்யாணம் செய்ததே கிராம அதிகாரி பதவிக்காகன்னு தெரிந்ததும் நான் மனம் நொந்து... (கலங்கிய கண்களைத் துடைத்து). அத்தோட நிறுத்தல அவன் தொடர்ந்து செய்து வந்தான்.

நிறையத் தந்திரமாகவும் மிக நயவஞ்சகமாக அவன் தொடர்ந்தான். எனக்குத் தெரிந்ததும் நான் அவனைத் திருத்திடலாம்னு; அவன் தொடர்ந்து செய்து வந்த தவற்றை மறைத்து சில உதவிகளையும் செய்து வந்தேன்... அதற்குக் காரணம் என் முட்டாள் தனம்.

நான் என் அப்பாவிடம் நடத்தி வந்த போட்டாபோட்டி, அதாவது நான் அவரைவிடப் புத்திசாலின்னு காட்டிக்கிட்டது. அவர் கல்யாணத்துக்கு முன்னரே சொன்னார் இவன் நம்பத் தகுந்தவன் இல்லைன்னு ஆனால் நான் தான் அவர் சொல் கேட்காமல் என் தலையில நானே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டேன்.

அத்தொட மனம் திருந்தி இருக்கனும் ஆனால் தொடர்ந்து அவனைத் திருத்திடலாம்னு திரும்பத்திரும்ப எனக்கு நானே சாக்கு சொல்லிக்கிட்டு அந்தத் திருடனுக்குத் துணை போனேன். கடைசியில் அது என் அப்பாவுக்கே கெட்ட பெயர் உண்டாக்கப் போக... நல்ல வேலையாக நீங்க வந்து அந்தப் பிரச்சினையை இவ்ளோ சுமுகமாகத் தீர்த்து வெச்சீங்க.

நீங்க மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்நேரம்... இரண்டு பேரும் உயிரோடவே!" சத்தமாகவே அழ ஆரம்பிக்க நான் விரைந்து சென்று அவர் கண்களைத் துடைத்துச் சமாதானப்படுத்த அவர் என்னைக் கட்டிக் கொண்டு அழத்தொடங்கினார்.

"ஐயோ மன்னிச்சிடுங்க; நான் தேவை இல்லாமல் உங்கள் மனசை புண்படுத்திட்டேன்."

"இல்லை தம்பி நீங்கச் செய்த எல்லாமே... இதையும் சேர்த்தே சொல்லுறேன் ஆமாம் எல்லாமே நிறையச் சிறப்பாக செய்தீங்க. எனக்கு அப்பவே தோனிச்சி உங்களைச் சந்தித்து இப்படி எல்லா விவரத்தையும் முழுசும் சொல்லி நன்றி சொல்லனும்னு மனம் ஏங்கினேன்.

நல்ல வேலையா என் மனம் உடனடியா வேலை செய்து உங்களை விருந்துக்கு அழைக்கப் புத்தி வந்தது. உங்களைத் தனியாகச் சந்தித்து உங்கள் காலைக்கட்டிக்கிட்டு அழுவனும்னு ஏங்கிக்கிட்டு இருக்கேன்." சொல்லி என்னை விலக்க முயன்றார் (காலைப் பிடிக்க) அதை உணர்ந்த நான் அவரை விட்டு விலகாமல் இறுக்கமாக அணைத்த வண்ணம் தடுத்தேன்.

"ஐயோ இதென்ன கூத்து; தயவு செய்து நிறுத்துங்க; நீங்க அப்படிச் செய்தால் நான் ஒரு நிமிடமும் இங்கே இருக்க மாட்டேன். தயவு செய்து அப்படிச் செய்ய நினைக்காதீங்க; நீங்க ஒரு ராணி. அதுவும் இப்பத்தான் சொன்னேன் இவ்ளோ தெய்வீகமாக இருக்குற நீங்க இந்தச் சின்னப்பையன் காலில்... நினைக்கவே என் மனம் கூசுது."

என்னை இறுக்கி அணைத்துக் கொண்ட கயல்விழி பின்னர் என் கன்னத்தில் ஆழ்ந்த முத்தம் பதித்து என் கன்னங்களைப் ஆதரவுடன் பற்றி, "எனக்கு நீங்கச் சின்னப் பையன் இல்லை. வயசில நீங்க இளையவர்தான் ஆனால் சிந்திக்கிற ஆற்றல் மனப்பக்குவம் செயலாற்றும் முறை எல்லாம் நீங்க ஒரு நல்ல அனுபவசாலியை விட உயந்தவர்னு தெரியுது.

அதனால் வயசு ஒரு தடையாக நினைக்க முடியாது. என் அப்பாவே அப்படித்தான் சொல்லுறாரு; அவர் உங்களைச் சந்தித்த உடனே சொன்னதும் அதுதான். அவர் அப்படி யாரையும் பாராட்டி நான், நாங்க யாரும் கேள்விப்பட்டதில்லை; கூடிய விரைவில் அது உங்களுக்குப் புரியும்.

நான் உங்களுக்கு அந்த அளவு ஆழ்ந்த நன்றி கடமைப் பட்டிருப்பதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. என் அப்பா இந்தச் சுற்று வட்டாரத்திலேயே நல்ல பேரெடுத்தவர்.

நம்மைப் பெத்தவங்களுக்கு நாம செய்ய வேண்டியதுன்னு வள்ளுவர் சொல்றது 'இந்தப் பிள்ளையைப் பெற்றிட அந்தப் பெற்றோர் என்ன தவம் செய்தாரோன்னு' ஊர் மக்கள் புகழும் அளவுக்கு நல்ல பெயரெடுக்கனும். அவருக்குப் பொன்னுன்னு சொல்லிக்கப் பெருமை பட்டுக்க வேண்டிய நான் அவர் பெயரைக் கெடுக்காமலாவது இருக்கனும்.

அவப்பெயரோடு உயிர் விடுவதை விடக் கொடுமை வேறேதுமில்லை. அதனால நீங்க எவ்ளோ பெரிய உதவி செய்திருக்கீங்க; எங்களுக்கு உயிரைவிடப் பெரியது மானம் அதைக் காப்பாற்றின உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை."

"எனக்கு நீங்க சொல்றது புரியுது. நான் முக்கியமா உதவி செய்தது தனு மாமாவுக்கு. அது மறைமுகமா உங்களுக்கு இவ்வளவு பெரிய நன்மையாக அமைந்திருப்பது என் அதிர்ஷ்டம். நான் ஒரு சராசரி பொருளாதார நிலையில் இருக்கும் சாதாரணமான ஒரு குடும்பத்தில் வளர்ந்தவன். எனக்கு உங்களைப் போல நல்லவர்கள் அன்பும் ஆதரவும் கிடைத்தது என் பாக்கியம் எனக்கு அது போதும்."

என் கன்னங்களை மிக ஆதரவாகப் பற்றிய வண்ணம் என் கண்களை அமைதியாகப் புன்னகை ததும்பிய பார்வையுடன் நோக்கியவர், "தம்பி... உன்னைப் பெத்தவங்க பாக்கியம் செய்தவர்கள்." சொல்லி என் நெற்றி கன்னங்களில் முத்தமிட்டவர் என்னை மீண்டும் அன்புடன் அணைத்து என் தோளில் சாய்ந்து கொண்டார்.

"தம்பி நீங்க ரொம்பத் திறமையா அருமையா திட்டம் போட்டு அந்த விஷயத்தைக் கையாண்டதாக என் அப்பா நிறையப் பிரமிப்பா சொன்னார். எங்களைப் பொருத்தவரை எங்க அப்பாவைப் போலப் புத்திசாலியா திறமையா ஒரு ஆளை இந்தச் சுற்று வட்டாரத்தில் கேள்விப் பட்டது கூட இல்லை. ஆனால் அவரே உங்களை அவரைவிடப் பல மடங்கு அதிகத் திறமை/புத்திசாலின்னு ரொம்ப ஆச்சரியப்பட்டுப் பேசிக்கிட்டிருக்காரு.

நீங்கச் சொன்னால் நம்ப மாட்டீங்க அன்னிக்கு நான் உங்களை விருந்துக்குக் கூப்பிட்டதுக்காக என்னைப் பல முறை பாராட்டிகிட்டே இருக்காரு. அடிக்கடி உங்ககிட்ட இருந்து தகவல் வந்துதான்னு கேட்டுக்கிட்டே இருக்காரு.

நான் என் அப்பாவைப் பற்றி வீண் பெருமைக்குச் சொல்கிறதா நினைக்காதீங்க. அவர் அப்படி இதுவரை யாரையும் புகழ்ந்ததில்லை. அதுவும் இவ்ளோ சின்ன வயசில் இப்படியான்னு அடிக்கடி ஆச்சரியப்படுவார்.

எனக்கு அவர் சொன்னதிலிருந்து அந்த விஷயத்தைத் தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருக்கு. உங்களுக்கு விருப்பமிருந்தால் அந்தக் கதையைக் கொஞ்சம் இல்லை எவ்ளோ விவரமா விளக்கமாகச் சொல்ல முடியுமோ சொல்லுங்கள்; ப்லீஸ்!"

"அட இந்த ராணியின் கட்டளையை நிறைவேற்றுவது என் பாக்கியம்." சொல்லி முழு விவரத்தையும் விளக்க பிரமித்தார். மேலும் தொடர்ந்து பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவர் என் திறமையை வியந்து புகழ்ந்தார்.

பின்னர் அவருடன் தொடர்ந்து உரையாடியதில் வெளிவந்த தகவல்கள்: அவருக்குத் திருமணம் முடிந்து பதினோரு வருடங்கள் கடந்துவிட்டன ஆனால் அவருக்குக் குழந்தை இல்லை. பொதுவாக அவர் கணவர் மனைவியுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை குறிப்பாக வீட்டில் அதிகம் தங்குவதில்லை.

அடிக்கடி வெளியூர் வேலை எனச் சுற்றி வருகிறார். எனவே அவர்கள் திருமண வாழ்க்கை ஓரிரு ஆண்டுகளில் கிட்டத்தட்ட முறிந்த நிலை குறிப்பாக உடலுறவற்ற வாழ்க்கை என மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

மேலும் பல அந்தரங்க விவரங்களை அதிவிரைவில் என்னை நம்பி பகிர்ந்து கொள்ள எனக்கும் அவர் மீது நம்பிக்கை ஏற்பட நான் வந்த விவரத்தைச் சற்றே கவனமாகச் சொல்லி அவர் உதவியைப் பெற முடிவு செய்தேன்.

அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் படி நான் நேற்று இரவு தொடர்ந்து வந்த பெண்மணி இந்த வீட்டில் வசிக்கும் ஒரு மிக ஒழுக்கமான தோழி போன்றவர் எனவும் அவர் பெயர் மல்லிகாவதி.

இளம் பள்ளிப் பருவத்தில் மல்லிகாவதி தனக்கு உதவியதால் ஏற்பட்ட நட்பு அவர்கள் இருவருக்கும் இன்று வரை தொடர்வதாகவும். அவருடைய (மல்லிகாவதியின்) தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வருந்துவதாகவும் அதில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருவதாகவும் கூறினார்.

அதேசமயம் அவருக்குத் தெரிந்தவரை மல்லிகாவதி மாதத்திற்கு ஒரு முறை அருகில் இருக்கும் ஒருவரை நள்ளிரவில் சந்திப்பது வழக்கமாக நடந்து வரும் ஒரு செயல் எனவும் அது கிட்டத்தட்டக் கடந்த இருபது வருடங்களாகத் தொடர்வதாகவும்.

தொடக்கத்திலேயே அதாவது கயல்விழியின் இளம்வயதில் அதன் விவரம் அறிய ஆர்வம் காட்டியதில் அதை விரும்பாத மல்லிகாவதி தன்னைப் பிரிந்து செல்ல முயன்றதாகவும் அதை அறிந்ததும் மல்லிகாவதியின் தனிப்பட்ட வாழ்கை விவரங்களில் தலையிடுவதில்லை என ஒப்பந்தத்துடன் அவர்கள் இருவரின் தோழமை தொடர்வதாகவும் கூறினார்.

அதற்கு மேல் அவரிடமிருந்து உபயோகமான விவரங்கள் திரட்ட முடியவில்லை. நான் நீண்ட யோசனைக்குப் பிறகு, "முதல்ல உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி (எதற்கு என வியப்பாகப் புருவத்தை உயர்த்தினார்). அந்த மல்லிகாவதி அத்தையை நேற்றுதான் முதல் முறையாகப் பார்த்தேன். அவர் குணநலன் பற்றிய என் அபிப்பிராயம் முழுவதுமாக ஒத்துப்போனது எனக்குத் திருப்தி.

அவர் என் வாழ்க்கையில் சம்மந்தப்பட்டவர் என்பது எனக்கு நேற்றுதான் தெரியவந்தது. அவர் ஏதோ பெரிய பிரச்சினையில் சிக்கி இருக்குறார்னு தெரிகிறது. அவருக்கு உதவி செய்து அவர் பிரச்சினையைத் தீர்க்க வெண்டியது என் மிக முக்கியமான கடமை.

அதனால இதுவரைக்கும் நீங்க அந்த அத்தைக்கு இவ்ளோ பெரிய உதவி செய்து வந்ததுக்கு என் மனமார்ந்த நன்றி. அடுத்து எனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லுகிறேன். உங்களுக்கு ஏதாவது நல்ல யோசனை தெரிந்தால் சொல்லி எனக்கு உதவ முடிந்தால் உதவுங்கள்."

"அட என்ன தம்பி உங்களுக்காக என் உயிரையும் குடுப்பேன். இவ்ளோ விவரமா என் நிலையை விளக்கிச் சொன்ன பிறகும் இப்படிப் பவ்யமா கேக்குறீங்க. என்ன செய்யனும்னு ஆனையோட அதிகாரமா சொல்லு தம்பி."

"நான் ஆனை/அதிகாரத்தில நம்பிக்கை இல்லாதவன் (சற்றே புன்னகைத்து) அடக்கமா அன்போடு நடந்துக்கிறதுதான் நிறையச் சக்தி வாய்ந்தது. சரி நம் பிரச்சினைக்கு வருவோம்.

முதல்ல உங்கள் கணவருக்கு நன்றி சொல்லனும் (அவர் முகத்தில் வெறுப்புணர்ச்சி பொங்க வியந்து புருவத்தை உயர்த்த). பொறுங்கள் நான் சொல்லுகிறது அவர் உண்டாக்கிய பிரச்சினையைத் தீர்த்ததில் எனக்கு... இப்படி ஒரு அன்பான, அழகான, தெய்வீக தேவதையின் நட்பு கிடைத்ததே அதுக்கு நான் அவருக்கு நன்றி சொல்லக்கூடாதா?"

ஆச்சரியத்தில் மலர்ந்த அவர் முகம் வெட்கத்தில் சிவக்க ஆரம்பிக்க மீண்டும் என்னை அணைத்து என் தோளில் சாய்ந்தவர், "அப்பா உன் பேச்சு நிறைய இனிமையா இருக்கு தம்பி." சொல்லி முத்தமிட்டார்.

நான் தொடர்ந்தேன், "நீங்க எனக்கு நன்றி சொல்ல என்னை விருந்துக்குக் கூப்பிட்டீங்க அதே போலத் தனு மாமா அவர் எனக்கு நன்றி சொல்ல விரும்பியவர் அதை எனக்கு ஒரு ஆச்சரியத்தில் மூழ்கடிக்க விதமாகத் திட்டமிட்டிருந்தார்.

அவர் வழக்கமாகக் கொண்டாடும் காமக் களிப்புக் கொண்டாட்டத்தை எனக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த இடத்தில தான் நான் மல்லிகா அத்தையைப் பார்க்க நேர்ந்தது (மீண்டும் கயல்விழி விழிகள் வியந்த அதிர்ச்சியை வெளிப்படுத்த மீண்டும் நான் புன்னகைத்து) பொறுங்கள் நான் முழு விவரத்தைச் சொல்லுகிறேன்.

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous