Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 1: ஆண்ட்டி; என் மானசீக..
பாகம் 01: அறிமுகம்
எங்கள் குடும்பம் ஒரு அளவான குடும்பம். அப்பா, அம்மா மற்றும் அண்ணன். அப்பா ஒரு அரசாங்க ஊழியர், அம்மா முழு நேர இல்லத்தரசி, மிகவும் கண்டிப்பானவர் சுற்றியுள்ள அனைவரும் இவரைக் கண்டு அஞ்சுவர். அண்ணன் படிப்பு முடித்து 6 மாதத்திற்கு முன் வட-இந்திய எல்லையில் வேலை செய்பவர்.
என் பெயர் ரகு, அப்பொழுது நான் வாலிப பருவத்தின் நுழைவாயிலை சற்றுமுன் எட்டிப்பிடித்தவன். படிப்பு மற்றும் விளையாட்டில் படு சுட்டி. வயதில் மூத்தவர்களை எளிதில் கவரும் பணிவு, அனைவருக்கும் உதவும் நட்புள்ளம் போன்ற குணங்களால் ஒரு சிறந்த நல்ல பிள்ளை என்ற பெயர் பெற்றவன். என் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு என்னைப்பற்றி மிகப் பெருமிதம்.
என் தோற்றத்தைப்பற்றி; சற்று ஒல்லியான ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து பராமரிக்கப்படும் உடற்கட்டுடைய தேகம், பரந்து விரிந்த தோள்கள், கிட்டத்தட்ட ஆறடி உயரம், கவனத்தைச் சற்று கவர்ந்திழுக்கும் முகம், கூர்மையான கண்கள், நல்ல எடுப்பான மூக்கு, செழித்த கன்னங்கள், படர்ந்த நெற்றி, பதின்ம வயதின் எல்லையைத்தான்டி முதிர்ச்சி அடைந்துகொண்டிருக்கும் முகப்பரு இல்லாத சீரான தோற்றம். சற்று உற்று நோக்கினால் மட்டுமே புலப்படும் அளவுக்கு மீசை அப்போதுதான் அரும்பிக் கொண்டிருந்தது.
கல்லூரி இரண்டாம் ஆண்டு முடித்த விடுமுறையில் சித்தி வீட்டுக்குச் சென்றிருந்தேன். என் சித்தி சித்தப்பா குடும்பத்தைப் பற்றி: சித்தப்பா, அப்பாவின் கடைசித் தம்பி, வருவாய் ஆய்வாளர், முழுக்க முழுக்கக் கிராமங்களில்தான் வேலை. சித்தி அம்மாவின் கடைசித் தங்கை, என்னைவிட 7 வயதே மூத்தவர். என் சிறுவயது முதலே கட்டுப்பாடின்றி மிக நெருங்கிப் பழகும் தோழி போன்றவர். அப்போது அவருக்கு 3 வயதில் ஒரு பெண்குழந்தை.
பள்ளிக்காலத்திலிருந்தே எல்லா விடுமுறைக்கும் அனேகமாக நாங்கள் எங்கள் சித்தி சித்தப்பா வீட்டிற்கே செல்வோம். பட்டிணத்தில் வாழும் எங்களுக்குச் சித்தி சித்தப்பா வசிக்கும் கிராமத்துச் சூழல் பல விதங்களில் மிக மிகப் பிடித்திருந்தது.
நான் அங்கு சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு என சித்தப்பாவின் வேலை/குடும்ப நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் ஊரில் நடக்கப்போகும் வருடாந்திர ஊர்த்திருவிழாவை முன்னிட்டு அவர் வீட்டில் விடுமுறையைக் கழிக்க, என் சித்தப்பா குடும்பத்தை அழைத்திருந்தார்.
அவர் அந்த ஊர் ஜமீன்தார் மேலும் அந்த ஊர் கிராம அதிகாரி பொருப்பு வகிப்பவர். என் சித்தப்பா முன்பு அந்தக் கிராமத்தில் வேலை செய்து வசித்து வந்த போது ஏற்பட்ட நட்பு. எனக்கும் அவர் நன்கு பழக்கமானவர். ஆனால் அவர் குடும்ப உறுப்பினர்கள் அதிகப் பரிச்சயமில்லை. எனவே நான் சற்று தயங்கினேன். என் சித்தி என் தயக்கத்தைப் போக்கி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்.
காலை 10 மணியளவில் அவர் வீட்டை அடைந்தோம். மிகப் பலமான வரவேற்பு. நான் ஜமீன்தாரை மாமா என்றே அழைப்பேன், அவரும் என்னை மாப்பிள்ளை என்றழைப்பார். 8 வருடங்களுக்கு முன் ஏதோ ஓரிரு முறை நானும் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.
அவர் குடும்பத்தைப் பற்றி; ஜமீன்தார் வயது 42, முதல் மனைவி இறந்தபின், மறுமணம் செய்தவர்; 2 மகள் ஒரு மகன், மூத்த மகள் பெயர் சியாமளா, என்னைவிட ஒரு வயது பெரியவள், 8-ஆம் வகுப்புடன் பள்ளியை நிறுத்தியவர். இளையவள் பெயர் சாந்தினி, என் வயதுதான் அவளுக்கும், +2 முடித்துப் படிப்பை நிறுத்தியவள். இவ்விரு பெண்களும் முதல் மனைவியின் வாரிசுகள்.
இரண்டாம் மனைவியின் பெயர் ஷீலா வயது 27, 4 வயதில் ஒரு மகன். இவர்களைத் தவிர்த்து அந்த வீட்டில் வசிப்பது மாமவின் தூரத்து உறவுப்பெண், பெயர் பானு என்னைவிட 3 வயது பெரியவள், 8-ஆம் வகுப்புடன் பள்ளியை நிறுத்தியவர். சிறுவயது முதல் அந்த வீட்டிலேயே வளர்பவள்.
நாங்கள் போய்ச் சேர்ந்ததும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு என் சித்தப்பா அவசராவசரமாக வேலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். திரும்பி வர 4 / 5 நாட்களாகும் என்று கூறிவிட்டுச் சென்றார். அடுத்த அரை மணி நேரத்தில் மாமாவும் திருவிழா ஏற்பாட்டு வேலையாக வெளியூர் செல்வதாகவும் திரும்ப 3 நாட்களாகும் என்று கூறிவிட்டுச்சென்றார்.
நான் திடீரென்று தனிமைப்படுத்தப்பட்டதை உணர்ந்தேன். அப்போது அங்கு இருக்கும் ஒரே ஆண் நான்தான், மற்ற 4 பெண்கள், என் சித்தி உட்பட (சாந்தினி அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தாள்). ஆயினும் அவர்கள் உபசரித்தவிதம் மற்றும் கலகலப்பாகப் பழகியதும் சற்று அசௌகரியத்தை விலக்கி ஆறுதலளித்தது. ஒரு சில நிமிடங்களில் அவர்கள் அரட்டை தொடங்கியது. முக்கியமாக அவர்கள் (மாமா வீட்டுப் பெண்கள்) பேச்சு கிட்டத்தட்ட என்னை ரேகிங் செய்வதாகவே இருந்தது.
மேலும் எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது, காரணம் என்னைப்பற்றி எல்லா விஷயங்களும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். கடந்த சில ஆண்டுகளில் நான் செய்த சின்ன சின்னச் சில்மிஷங்கள் முதல் சாகசங்கள் வரை, ஏறக்குறைய எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆக, என் சித்தி தொடர்ந்து என்னைப்பற்றிய புகழ்/துதி பாடிவந்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகியது. ஷீலா அத்தை பேச்சில் பெருமிதமான கிண்டல் தெரிந்தது, ஆனால் சியாமளா மற்றும் பானு பேச்சிலும் முகத்திலும் பொறாமை அளவுக்கதிகமாகவே வெளிப்பட்டது.
சற்று நேரத்தில் நான் வெளியே செல்ல நினைக்கையில் பலத்த எதிர்ப்பு (அனைவரிடமிருந்தும்) வெளிப்பட்டது. ஏன் என்று என்னைத் துருவித்துருவி வினவினர். நான் பழைய நண்பர்களைக்காண விரும்புவதாகக் கூறினேன், ஆனால் என் சித்திக்குத்தெரியும், நான் வெளியே சென்று நண்பர்களை சந்திப்பதன் முக்கிய காரணம் அவர்களுடன் கிணற்றில் குதித்து நீந்திக் குளித்து கும்மாளம் போடுவது தான் என்று உண்மையைப் போட்டுடைத்து வெளியே அனுப்ப மறுத்தார்.
உடனே ஷீலா, "ப்பூ இவ்வளவுதானா? ஆண் பிள்ளைகள் அப்படித்தானே இருப்பார்கள், இது ஒன்றும் புதிதல்லவே போய்விட்டு வரட்டுமே." என்று ஆதரவு கொடுத்தார். ஆனால் என் சித்தியோ என் அம்மா என்னை அனுப்பும் போதே இதனைத் தெளிவாகச் சொல்லியிருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். நான் முன் குறிப்பிட்டதுபோல் என் அம்மா என்றால் அனைவருக்கும் சற்றுப் பயம். என் முகம் சோகத்தில் வாடியது.
இதைக்கண்ட ஷீலா மிகவும் மனமிறங்கி என் அருகில் வந்து அனைவர் முன்னிலையிலும் என்னைக் கட்டி அணைத்து என் கன்னத்தை அவர் இடது மார்பில் சாய்த்து அவர் கன்னத்தை என் கன்னத்தில் அழுத்திக் கொஞ்சலாக, "அய்யோ பாவம் பாரு தம்பி முகம் எப்புடி வாடி போச்சி!" என்று மற்றவர்களைக் கேட்டுக் கொண்டே என்னைப் பார்த்தார். பலர் முன்னிலையில் அவர் நடவடிக்கை சிறிது கூச்சத்தை ஏற்படுத்தினாலும், எனக்கு மிகவும் இதமாக இருந்தது அவர் லோ-கட் ஜாக்கெட் அணிந்திருந்ததினால் அவர் மிருதுவான மார்பின் ஸ்பரிஸம் பெருமளவு என் கன்னத்தில் இழைந்தது, மேலும் அவர் கன்னமும் மிக மிருதுவாகவே இருந்தது.
"நீ கவல படாத தம்பி, இப்போது நான் நம்ம பண்ணை தோட்டத்துக்குத்தான் போகப்போறேன், நீங்களும் (என்னையும், சித்தியையும்) என் கூட வாங்க, தம்பி நம்ம பண்ணை கிணத்துல குளித்து விளையாடட்டும். நான் உன்னை (என் சித்தியைச் சுட்டி) மட்டும் கூப்பிடலாமென்று இருந்தேன், தம்பிக்கு அங்கே போரடிக்கும் நெனச்சேன், ஆனால் தம்பிக்கு கிணத்துல நீந்தி விளையாடுறதுல இவ்ளோ ஆசைன்னு தெரியாது. நாம சாப்டுட்டு கிளம்புவோம், நான் திரும்பி வரச் சாயங்காலம் 6 மணியாகும், நீங்க (நானும் சித்தியும்) இரண்டு பேரும் எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு திரும்பிடுங்க." என்று சொல்லிக் கொண்டிருக்கையில்,
சியாமளா குறுக்கிட்டு, "சரி சரி அவரை விடு சித்தி, தோட்டத்துக்குக் கூட்டிப்போகாம உன் மாரிலேயே தூங்க வெச்சிடாதே!"
தன் செய்கையை உணர்ந்த ஷீலா என்னை விலக்கி, "அவளுக்குப் பொறாமை." என்று முணுமுணுத்து பின் என் சித்தியை நோக்கினார்.
என் சித்தியோ, "நான் வரல, அத்தையும் மருமகனும் போயிட்டுவாங்க."
அத்தையும் நானும் மதிய உணவுக்குப்பின் புறப்பட முடிவு செய்தோம். பண்ணைத்தோட்டம் 15 ~ 20 நிமிட நடை தொலைவில் இருப்பதாக கூறிய அத்தை எனக்கு வீட்டைச் சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். பின்தொடர்ந்த சியாமளாவை நோக்கி, "நீ ஏன்டி வால் புடுச்சிகிட்டே வந்துகிட்டிருக்கே? லஷ்மி அக்காவை தனியா விட்டுவிட்டு எங்க பின்னாடியே." என்று செல்லமாய் விரட்ட, சியாமளா என் சித்தியுடன் பேசச் சென்றுவிட்டாள். அத்தையும் நானும் வீட்டை வலம் வந்தோம்.
அத்தை என்னுடன் தனியாகப் பேசவே சியாமளாவை விரட்டி விட்டாள் என எனக்குப் புரிந்தது. பண்ணைத் தோட்டத்திற்குச் செல்வதைவிட நான் தன்னிச்சையாக வெளியே செல்வதையே விரும்புகிறேன் என்பதைக் குறிப்பறிந்த அத்தை அதன் காரணத்தை அறியவே என்னைத் தனியே (வீடு சுற்றிக் காட்டுவதாக) அழைத்து வந்திருக்கிறார். அவர் காரணத்தை வினவினார்.
"இல்ல அத்தை, நான் தனியாக வெளியே போனா(ல்), என் வயசுப்பசங்களோட போட்டி, லூட்டி அடிக்க முடியும், ஆனால் உங்களோடு தோட்டத்துக்கு வந்தால், தனியாக நான் மட்டும்தான் நீந்தி விளையாடனும், கொஞ்ச நேரத்துல சலித்திடும்." என்றேன்.
புரிந்துகொண்ட அத்தை சற்று யோசித்துப் பின், "சரி இன்னிக்கி நான் என்னால முடிந்தவரை உன் வயசு பசங்கள் அளவுக்கு நிலையிறங்கி ஆட்டம் போட்டு உனக்குக் கம்பெனி (Company) தறேன்." எனக்குச் சற்று அதிச்சியாகவும், ஆச்சரியமாகவும் அதைவிட மிக மகிழ்ச்சியாகவுமிருந்தது.
மேலும் அத்தை தொடர்ந்தார், "இன்றைக்கு நாம இரண்டு பேர் மட்டும் விளையாடலாம், நாளைலேர்ந்து உன் இஷ்டபடி நீ தனியா வெளியே பொறதுக்கு நான் ஏதாவது ஐடியா செஞ்சு அனுப்பி வைக்கிறேன்." என்று உறுதியுடன் சொன்னார். எனக்குச் சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு அவர் மீது மதிப்பும் ஆசையும் அதிகரித்தது, ஷீலா அத்தையை அள்ளி அனைத்து அன்பு முத்தமிட என் மனம் துடித்தது. எனக்காக ஷீலா இந்த அளவுக்கு வளைந்து கொடுக்க முற்படுவது மனதைச் சற்று உறுத்தியது.
எனவே மனம் விரும்பினாலும், "வேண்டாம் அத்தை," என்று தொடர்வதுக்குள்
அத்தை குறுக்கிட்டு, "நான் உங்க வயசு பசங்க அளவுக்கு லூட்டி அடிப்பேனான்னு சந்தேகமா? கவல படாத, நான் சேலஞ் பண்றேன். நீ அசந்து போற அளவுக்கு லூட்டிஅடிக்கிறேன் பாக்குரீயா? இன்றைக்கு ஒரு கை பார்த்திடலாம்." அவர் கூறிய விதத்திலிருந்து அவருக்கும் அதில் மிகுந்த விருப்பம் என்று புரிந்தது, எனவே என் முக மலர்ந்து ஒப்புக்கொண்டேன்.
அவர்கள் வீடு நல்ல பெரிய வீடு, அந்த ஊரிலேயே ஆகப் பெரிய வீடு, கிட்டத்தட்ட ஊரின் எல்லையில், பேருந்து செல்லும் தடத்திலேயே அமைந்திருக்கும். வீட்டில் வேலை செய்ய ஓரிரு வேலையாட்கள் எப்போதுமே இருந்தனர்.
அவர்கள் சொந்தமாகப் பேருந்து போக்குவரத்தும் நடத்திவந்தனர். அவர்கள் பேருந்திலேயே சென்றோம், 5 / 6 நிமிட பயணத்திற்குப் பிறகு நாங்கள் இறங்கினோம், சாலையின் இருபுறமும் பச்சைப்சேலென்ற வயற்காடு, பார்ப்பதற்குத் திரைப்படத்தில் வரும் காட்சி போலிருந்தது.
மனித நடமாட்டமில்லாத நிசப்தம், ஏதோ இங்குமங்கும் (வெகுதொலைவில்) ஓரிரு மனித உருவங்கள் தென்பட்டன. எங்களை விட்டுச்சென்ற பேருந்து எறும்பாய்த் தெரிந்தது. அந்த சுட்டெரிக்கும் வெய்யிலிலும் சற்று நின்று இயற்கையை ரசிக்கத் தோன்றியது, ஊருக்குள் உள்ள சில வயல் வெளிகளைப் பார்த்ததுண்டு, ஆனால் இவ்வளவு பெரிய பரந்து விரிந்த, பசுமையான வயல்வெளி, உன்மையில் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது.
தொடரும்