பாகம் 08: அத்தை வளர்த்த முத்தே!

Story Info
அத்தை பெத்த இல்லை வளர்த்த முத்தல்லவோ சியாமளா!!
1.1k words
3
24
00

Part 22 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர

பாகம் 8: அத்தை (பெத்த?) வளர்த்த முத்தே!

மறு நாள் காலை வழக்கமாக செல்ல, காலைக்கடன்களை முடித்து காலைச் சிற்றுண்டி உண்டபின், அத்தை சியாமளாவுக்குப் பண்ணை வேலைகளை விளக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் என் சித்தி நான் பண்ணைக்குச் செல்வதை தவிர்த்து வீட்டில் இருக்குமாறு பரிந்துரைக்க, நானும் அவர் சொல்வதை ஆமோதிக்க ஆனால் ஷீலா பிடிவாதமாக மறுத்து எங்களை அனுப்பிவைத்தார். நானும் சியாமளாவும் புறப்பட்டு விட்டோம்

நேற்று சென்றதைப்போலப் பேருந்தில் பயணம் முடித்து வயல் வெளிவழியே இறங்கி நடந்தோம். நேற்றைய அரட்டையும் கூத்துமே திரும்பத் திரும்ப நினைவலைகளாக மோதின. அத்தையின் 'பதினாறு வயதினிலே மயிலு' வசனங்கள் நினைவுக்கு வர, அந்த வாய்க்காலைச் சியாமளா எப்படிக் கடப்பாள் என அறிய ஆவலுடன் நான் சற்றுப் பின்தங்கிச் சியாமளாவை முன் செல்ல விட்டு அவள் என்ன செய்யப்போகிறாள் என ஆவலோடு எதிர்பார்த்தேன்.

அவளோ சற்று வலதுப் புறம் திரும்பி ஒரு சிறு வரப்பின் வழியாகச் செல்ல எனக்கு வியப்பு அதிகரித்தது காரணம் அந்தப் பாதை ஒரு புழக்கத்தில் இல்லாத ஒரு பாதையாகத் தோன்றியது மேலும் அது அடுத்தப் பத்தடியில் நெற்பயிர் வளர்ந்துள்ள வயலில் முடிகிறது. எனக்குச் சந்தேகம் மேலும் வலுக்க, "என்ன சியாமளா எங்கப் போறீங்க அந்தப் பாதை முடிந்து." சொல்லி முடிக்கச் சற்று இடது பக்கம் திரும்பி மிகச் செங்குத்தாகச் சரிந்திருந்த ஒரு பத்து அல்லது பதினைந்து அடி உயர்ந்தப் பகுதியில் ஏற எத்தனித்து என் பேச்சில் தடைப்பட்டு நின்றாள்.

சியாமளா, "இதுதான் வழி இந்த மேடு ஏறிட்டாப் போதும்."

அந்தச் சரிவு மிகவும் செங்குத்தாக இருந்தது, கால் இடறி விழ வாய்ப்புகள் அதிகம்

நான், "இதுலக் கால் சருக்கிடும் (சற்றுத் தயங்கி) வேற வழி."

சியாமளா, "இது தற்காலிக வழி வழக்கமான வழில இருந்த குழாய்ப் பாலம் ஒடஞ்சிப் போச்சி அதை இன்னும் சரி செய்யல சீக்கிரம் செய்துடுவாங்க. ஆமாம் நேத்து நீங்க எப்படிப் போனீங்க?" வியப்பாகக் கேட்டாள்.

நான், "அதுவா அந்தக் கூத்த ஏன் கேக்குறீங்க? சரி அந்தத் தண்ணிக் கால்வாயை நீங்க தாண்டமாட்டீங்களா?"

சியாமளா, "ஐய்யோ அது கஷ்டம் என்னால முடியாது, நீங்க ஆம்பளைங்கச் சுலபமாத் தாண்டிடலாம் ஆனால் நாங்கப் பொம்பளைங்க எப்படி அதுவும் இப்படி முழு நீளப் பாவாடை கட்டிக்கிட்டு முடியாதுங்க நீங்க வேணும்னாத் தாண்டி வாங்க நான் இப்படியே."

நான் குறுக்கிட்டு, "நான் உங்களத் தாண்டச்சொல்லி வற்புறுத்தல ஆனால் உங்க சித்தி (சற்றுத் தயங்கி) தாண்டித்தான் வந்தாங்க அதை நெனச்சாச் சிரிப்பு வருது."

சியாமளா, "அப்படியா எங்கச் சித்தியா? அதுவும் புடைவையக் கட்... (சற்று நிறுத்தி) தாண்டினங்களா இல்ல இறங்கி,"

"நான் தான் அழகாத் தாண்டினாங்கன்னு சொன்னேனே!"

சியாமளா, "ஐயோ! என்னால முடியாதுப்பா!"

"ஐயோ! நான் உங்களத் தாண்டச்சொல்லேங்க, ஆனால் அத்தை செய்தக் கலாட்டாக் கூத்தை நெனைச்சாச் சிரிப்பு வருது."

அவளுக்கு ஆவல் மிகுந்து, "அப்படியா நீங்கச் சிரிக்கிறது பார்த்தா எதோ தமாஷ் நடந்திருக்கு போலத் தெரியுது, என்ன செய்ஞ்சாங்க; சரி மொதல்ல இதை ஏறி அப்புறம் அங்க போன பிறகு சொல்லுங்க." சொல்லி ஆயத்தமாக,

நான், "இதுவும் கொஞ்சம் சிரமம்தான்னுத் தோணுது, கால் இடற வாய்ப்பு அதிகம் (சற்றுத் தயங்கி) நாமக் கொஞ்சம் வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசனைச் செய்யலாமா? "

"இதைவிட வேற நல்ல வழி/முறை எதுவும் இல்ல." திட்டவட்டமாக பதில் வந்தது.

"அந்தக் கால்வாய் ரொம்ப ஆழமா?"

என் கேள்வியின் அர்த்தம் புரிந்தவளாகச் சிரித்தவாறு, "ஏன் எங்கச் சித்திச் சொல்லலையா ஒரு வேல அவுங்க இறங்கி உங்களுக்கு ஆழம் காட்டினங்களா நீங்கச் சிரிக்கிறதைப் பார்த்தா!" என அவள் சந்தேகமாய் இழுக்க.

"அதுதான் ஜம்முன்னு தாண்டிட்டாங்கன்னுச் சொன்னேனே."

"நீங்க சிரிக்கறதப் பார்த்தா அப்படித் தெரியலையே சரிசரி என்ன நடந்ததுன்னு விவரமாச் சொல்லுங்க."

"வந்து, நான் எதுவும் தெரியாமத் தாண்டிட்டு அவங்களுக்குக் கைக் குடுக்கத் திரும்பறதுக்குள்ள அவுங்களும் தாண்டித் தடுக்கி விழ (சற்று நிறுத்தி) கிட்டத்தட்ட விழுந்துட்டாங்கன்னுச் சொல்லலாம்; நான் மட்டும் புடிக்கலைன்னா முழுசாத் தண்ணில விழுந்திருப்பாங்க அதை நெனைச்சாச் சிரிப்பு வந்தது. அதைவிட ரொம்பப் பெருமையா 'எவ்ளோ அழகாத் தாண்டினேன் பாத்தியான்னு' என்கிட்டயே கேட்டாங்க அதுதான் அதுல ரொம்பத் தமாஷ். அப்புறம் அவங்கச் சொன்ன உண்மை என்னன்னா நான் இருந்ததால அவங்களாலக் கொஞ்சம் புடவையைத் தூக்கிக் கட்டிக்கிட்டுத் தாண்ட முயற்சிச் செய்யலன்னுச் சொன்னதுதான் சரியான உண்மை."

அப்புறம் அவுங்கள நான் கேட்டது என்னன்னா என்னிடம் விவரத்தைச் சொல்லி இருந்தா நான் ஏதாவது உதவி/யோசனைக் கொடுத்திருப்பேனே. குறைந்தபட்சமா நான் வேறு பக்கம் திரும்பி அவுங்களப் பாக்காம இருந்தாலே அவுங்களுக்குச் சுதந்திரமாப் புடவையைத் தூக்கிக்கட்டிக்கிட்டுத் தாண்ட உதவியாயிருந்திருக்கும். ஆனால் அவுங்களுக்கு என் கிட்டச்சொல்லத் தயக்கம் அதனால உங்களுக்கும் அதே போல நான் இருப்பது அசௌகரியமா இருந்தாச் சொல்லுங்க. இல்ல உங்களுக்கு என்னால முடிஞ்சச் சின்ன உதவியா நான் உங்களத் தூக்கிகிட்டுத் தண்ணில இறங்கித் தாண்டியதும் இறக்கி விட்டுடுவேன்." என எனக்குத் தோன்றியச் சில யோசனைகளைச் சொல்ல அவள் மறுத்து அதில் ஏறுவதே மிகச்சுலபமான செயல் என மிக நம்பிக்கையுடன் சொல்லித் தொடர்ந்தாள்.

தன் உடலைச் சற்று முன் நோக்கிக் குனிந்து ஒரு உந்தத்துடன் கிட்டத்தட்ட இரண்டு கைகளையும் முன் தரையில் சற்றுத் தொட்டு ஊன்றியவாறு ஏற, ஓரிரு அடிகளில் கால் இடறிச் சரிந்தாள். சரிந்து கொண்டிருந்தவளை நான் சரியாகத் தாங்க முயன்றுப் பிடிக்க, என் இரு கைகளால் அவள் புட்டங்களைத் தாங்கிப் பிடிக்க, அவள் பாவாடையில் சற்றே இடறி அவள் சூத்து நேரடியாக என் தம்பியுடன் சங்கமித்தன.

நல்ல வேலையாக சற்றே எதிர்பார்த்திருந்த நான் திடமாக நின்றிருந்தேன் எனவே அவள் முழு எடையும் சரிந்து விழ என்னால் தாங்கிப் பிடித்து நிறுத்த முடிந்தது. அதே சமயம் அவள் வலது கால் செருப்பு அறுந்து போனது. முதலில் பயந்துச் சிறிது அலறியவள் நான் பிடித்து நிறுத்தியதுமே சற்றுச் சுயமாக நிற்க முயன்று அவள் சூத்து என் என் தம்பியுடன் உராய்ந்துச் சுதாரித்து நிற்க நான் அவள் தோள்களைத் தாங்கிப் பிடித்துப் பிறகு அவள் திடமாக என்னை நோக்கித் திரும்பி நின்றுப் பதட்டத்துடன் மன்னிப்புக் கோரினாள்.

பின்னர் சற்றே யோசனை செய்தேன். முன்பின் அறியாத இளைஞ்சன் தன் அந்தரங்கங்களை தொடுவதை ஏற்காமல் நான் அவளைத் தூக்கி கடக்க உதவுவதை தவிர்க்கிறாள் எனப் புரிந்தது. அநேகமாக என் முதுகும் அவள் முதுகும் தொட்டுக்கொள்ளும் விதமாக அவளைத் தூக்கிக் கடக்க யோசனை கூற அதை ஏற்றாள்.

அதாவது இருவருடைய முதுகும் தொட்டவாறு நின்று, அதே நிலையில் நான் என் முன் பக்கம் குனிய அவள் என் முதுகில் அவள் முதுகு தொட்ட வண்ணம் சாய்ந்து கொண்டு தன் கால்களை உயரத் தூக்கிக்கொண்ட நிலையில் நான் அவளைச் சுமந்தவாறே அந்தக் கால்வாயைக் கடந்தோம்.

நான், "நல்ல வேலை கீழே விழாமத் தப்பிச்சோம், நான் ஒரு யோசனைச் சொல்றேன் கேளுங்க." என நின்றிருந்த அவள் பின் புறமாகச் சென்று முதுகும் முதுகும் தொடுமாறு நின்று இப்போ அப்படியே என் முதுகுல நீங்க சாய்ஞ்சிகிட்டுப் பிறகு நான் குனிஞ்சி உங்கள என் முதுகிலே சுமக்க, நீங்க உங்க கால இடுப்பளவுக்குத் தூக்கிகிட்டா அந்தக் கால்வாயையைச் சுலபமாக் கடக்கலாம்; அதாவது என் முதுகும் உங்க முதுகும் தொட்டுக்கிறதில் எதுவும் தப்பில்லைனு நீங்க நினைத்தால் நாம் செய்யலாம் என நான் சொன்னதை ஏற்றுச் செயல்படுத்தக் கடந்து சென்றோம். அவள் மன நிம்மதியுடன் நன்றி சொன்னாள்.

பண்ணையை அடைந்ததும் கருத்தம்மா வந்து வரவேற்றாள். பின்னர் இருவரும் பண்ணை நிலவரைத்தை பகிர்ந்து கொண்டு அதைச் சுற்றி கண்கானித்துவிட்டு திரும்பினர். பின்னர் கருத்தம்மா எனக்கு எண்ணெய் தேய்த்துவிட ஆயத்தமாகி அருகில் ஒரு மறைவானச் சற்று அடர்ந்த மர நிழல் பகுதியைச் சுட்டினாள்.

ஆனால் சியாமளா, "அட ஏன் அவ்ளோ தூரம் தள்ளிப் போறீங்க இங்கயே," என அருகில் இடத்தைச் சுட்டிக்காட்ட,

கருத்தம்மா, "இல்லம்மா அந்த இடம் (அவள் தேர்ந்தெடுத்த இடம்) சின்னையாவுக்குக் குந்த வெச்சிக் கால மேல நீட்டி வெச்சிக்கிட்டு நல்லா வசதியா இருக்கும்." என ஏதேதோ காரணங்களைச் சொல்ல,

மீண்டும் சியாமளா, "அதுக்கென்ன இங்கயே ஒர் முக்காலியைப் போட்டுக்கிட்டாப் போதுமே."

கருத்தம்மா, "இல்லம்மா அந்த எடத்துல இருக்குற வசதி இங்க முக்காலியைப் போட்டாலும் வராதும்மா, நான் பெரிய ஐயா முதக்கொண்டு மத்த எல்லாருக்கும் அங்கேதான் செய்றது பழக்கம், நான் பாத்துக்குக்கறேன் நீங்கக் கவலைப் படாதீங்க."

சியாமளா, "அங்க கிட்டக்க உக்கார எனக்கு இடமே இல்ல; இங்கயே தேச்சுவிட்டா நானும் வசதியா இப்படி ஒக்காந்து உங்ககிட்டப் பேசிக்கிட்டே பார்த்து கத்துக்குவேன்"

கருத்தம்மா, "அட எண்ணெய் தேய்க்குறதுலக் கத்துக்க என்னம்மா இருக்கு."

சியாமளா, "அப்படித்தான் நாங்க எல்லாம் நெனைக்கிறோம் ஆனால் எல்லாரும் நீ தேச்சுவிட்டா அவ்ளோ நல்லா இருக்குன்னு புகழ்ந்துச் சொல்றாங்களே!"

நான் சியாமளாவை நோக்கி, "சரி நீங்க அந்த முக்காலிய அங்க பக்கத்துல போட்டு வொக்காந்துப் பேசிக்கிட்டே பாருங்க." என அந்தப் பிரச்சினையை முடிக்க, கருத்தம்மா விருப்பமின்றி இனங்கினாள்.

அடுத்து நான் ஜட்டி அணிந்துத் தொடர எத்தனிக்க,

கருத்தம்மா, "சின்னையா இப்படி ஜட்டியெல்லாம் போட்டா உடம்பு முழுசும் சரியா எண்ணெய்த் தேய்க்க முடியாது, நீங்க பட்டணத்தில அப்படிச் செய்யலாம் ஆனால் இங்க கிராமத்தில அப்படியெல்லாம் செய்யமாட்டோம், நீங்களே அவருக்குப் புரியும்படி சொல்லுங்கச் சின்னம்மா." எனத் திட்டவட்டமாக மறுத்தது மட்டுமின்றிச் சியாமளாவையும் தூண்டிவிட அவளும் வெட்கத்துடன் அதுதான் சரி என்று ஆதரவுத் தெரிவிக்க நான் வேறு வழி இன்றிக் கோவணத்திற்கு மாறினேன்.

கருத்தம்மாவும் வேலையைத் தொடங்கினாள். முதலில் தலையில் தொடங்கி மென்மையாக ஆனால் மிகத் திடமாக, மிக நிதானமாக அவள் எண்ணெய்த் தேய்த்தது சற்று இதமாக இருந்தது. தொடர்ந்து உரையாடலில் கருத்தம்மா மறைமுகமாகச் சியாமளாவை அங்கிருந்து வெளியேற்றத் தொடர்ந்து முயன்று வந்தாள்.

இடுப்பு வரை தேய்த்து முடிக்க நீண்ட நேரம் எடுத்து மிகப் பொறுமையாகவும் தளர்ச்சியாகவும் செய்து வந்தாள், அப்போது சற்று நிறுத்தியவள், திடீரென எதோ முக்கியமாகச் செய்ய வேண்டிய வேலையை மறந்துவிட்டவளாக, "அய்யய்யோ மணி இன்னாம்மா ஆச்சி!! மல்லிகாவும் மலைச்சாமி அண்ணனும் கெளம்பிடுவாங்களே, சின்னய்யாக் கொஞ்சம் இருங்க (என என்னை நோக்கிச் கெஞ்சலான கோரிக்கை விடுத்து பின்னர் சியாமளாவை நோக்கி) சின்னம்மா ஒரு நிமிஷம் இப்படி வாங்கம்மா." என அவளை அழைத்துச் சற்று என்னை விட்டு விலகி (எனக்குக் கேட்காமல் இருக்குமாறு) எதோ சொல்லிச் சற்றுத் தூரத்தில் (மேற்கு எல்லை) சுட்டியவாறு எதோ பேச, இறுதியாக சரிசரி எனச் சியாமளாத் தலையாட்டி மிக விரைந்துச் சென்றாள்.

உடனே கருத்தம்மா என்னை அடைந்து, "அப்பாடி! ஒரு வழியாச் சின்னம்மாவை அனுப்பிட்டேன் இனிமேல நீங்க கூச்சப்பட வேண்டியதில்ல!"

நான், "ஹோ ஹோ அப்புடியாச் சங்கதி சியாமளாவை விரட்டத்தான் இந்த வழிச் செய்ஞ்சீங்களா?"

அவள் வெட்கப்பட்டு, "சின்னய்யா நீங்க சின்னம்மாகிட்ட ஒண்ணும் சொல்லிடாதீங்க அப்புறம் என் கதி அதோகதிதான்."

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous