Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 3: இன்று மதன மது! நாளை!!
உடனே சற்றே அன்பான கோபத்துடன் என் இரு காதுகளையும் தன் இரு கைகளால் திருகிய அனிதா, "Then why the hell did you seduce me so intensively?"
சற்றும் தயங்காமல் மன்னிப்பு கோரியவனாய் நான், "My sincere apologies; I deserve your punishment but I am sure you are more capable to handle the scenario smoothly!" சொல்லி அவள் முன் மண்டியிட்டேன்.
அவளோ ஒரு கணம் திகைத்தாள் நான் மீண்டும் அவள் பலாச் சுளைகளைச் சுவைக்க தயாராகின்றேனோ என நினைத்தவளாய். பின் நான் மன்னிப்பு கோரவே மண்டியிட்டதை அறிந்ததும் அவளால் அடக்க முடியாத சிரிப்பு சிரித்து என்னை எழுப்பிக் கட்டி அணைத்தாள்.
சில வினாடிகள் அமைதியாய் பின் என் முதுகில் செல்லமாகத் தட்டி 'பரவாயில்லை அந்த தவற்றில் தானும் பொறுப்பாளி' என மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். பின்னர் என் நாளைய பொழுது போக்குத் திட்டம் என்ன எனக் கேட்டவள் என் கிணற்று நீச்சல் மோகத்தைப்பற்றி கேள்விப்பட்டதாகவும், அவளுக்கும் அதே மோகம் எனக் கூறினாள்.
அதிலும் இந்த சுட்டெரிக்கும் வெயிலில் அப்படித் தண்ணீரில் மூழ்கி இருப்பது மிகவும் இதமாக இருக்கும் எனவும், என்னுடன் கிணற்று நீச்சல் குளியலில் சேர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறினாள். அவள் சொல்வதைக் கேட்க என் மனம் குதூகளித்து முகம் பிரகாசிக்க அதைக் கண்ட அவளும் மகிழ்ச்சி கொண்டாள். அதே சமயம் சிகிச்சை முடித்து மற்றவர்களும் எங்களைத் தேடி வந்தனர்.
மருத்துவர் பானுவை நோக்கி, "எனக்கு நன்றி சொல்லாதம்மா எல்லாம் ரகு தம்பிக்கு சொல்லுங்க, எங்களை நோக்கி "நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல! என்ன விஷயம்? அப்புறம் இப்பத்தான் ஷீலாவிடம் பேசினேன், நாளைக்கு உங்க கூட நானும் அனிதாவையும் பண்ணைக்கு வந்து கிணத்துக் குளியல்!" அவர் சொன்னதும் எங்கள் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கிட இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி வியந்து மகிழ்ந்தோம்.
நாங்கள் வீடு திரும்பினோம், வீட்டில் நுழைந்ததும் என் சித்தி மற்றும் சியாமளா ஆகிய இருவரிடமும் பானு மன்னிப்பு கோரினாள். அவர்கள் இருவரும் வியந்து என்ன நடந்தது என அறிய ஆவலாய் எதிர்நோக்கினர். பானு அவசரமாய் கொள்ளைப்புற ஒப்பனை அறைக்கு செல்ல வேண்டி இருப்பதால் பிறகு வந்து தெரிவிப்பதாக விரைந்தாள்.
அத்தை நான் மருத்துவர் மகள் அனிதாவுடன் சேர்ந்து நடத்திய நாடகத்தின் முழு விவரத்தையும் விளக்கி என் புத்திசாலித்தனத்தை வியந்து பெருமை பட்டுக்கொண்டாள். சியாமளாவும் தன் பங்கிற்கு நான் பானுவை மருத்துவரை பார்க்கச் செல்லப் பொய் சொல்லித் தூண்டிய விதத்தையும் சொல்லி பெருமிதம் கொண்டாள்.
அத்தையின் குறும்பு!
லஷ்மி, "அடப்பாவி ஒரு நாள் பழக்கம் கூட இல்ல; நேத்து ஒரு அஞ்சி நிமிஷப் பழக்கம் அதுக்குள்ள அந்த டாக்டர் பொன்னை உன் இஷ்டத்துக்கு ஆட வெச்சிட்டியா நீ பலே கில்லாடி தாண்டா." பெருமையுடன் என் சித்தி வியந்தார்.
"ரொம்ப பெருமை பட்டுக்காத லஷ்மி, உன் புள்ள அந்தப் பொன்னை ஆட்டுதா இல்ல அந்தப் பொன்னு இஷ்டத்துக்கு உன் புள்ளய ஆட்டப் போவுதான்னு பொறுத்துத் தான் பாக்கனும்." சொல்லிக் குறும்பாய் நகைத்தாள் அத்தை.
லஷ்மி, "ஐயோ இதென்ன கூத்து என்ன நடந்ததுன்னு விவரமா சொல்லு ஷீலா." மிக ஆர்வம் காட்டினார் என் சித்தி.
அதைவிட ஆர்வமாய் சியாமளா, "ஐயோ சித்தி என்ன நடந்தது விவரமா சொல்லு சித்தி!"
அத்தை மிகப் பெருமிதத்துடன், "என்னத்தச் சொல்ல தம்பி அப்படி பொய் சொல்லச் சொன்னா அவள் திட்டுவா! இல்ல முடியாதுன்னு சொல்லுவான்னுப் பார்த்தா! அவ என்னடான்னா நல்ல யோசனைன்னு சொல்லி, சொன்னதோட மட்டுமில்லாம உள்ளே போய் பொய் சொல்லி பானுவை எமாத்திட்டு திரும்பி வந்து ஏதோ உலக மகா சாதனையச் சாதிச்சிட்டாமாதிரி தம்பி கிட்ட பெருமை அடிச்சிகிட்டா பாரு."
சியாமளா, "அட அவ்ளோ தானே அதுக்கு ஏன் அந்த பொன்னை தப்பு சொல்ற சித்தி?"
உடனே என் சித்தியும், "ஆமா இதுல தப்பு என்ன ஷீலா என் புள்ள யோசனை நல்லா வேலை செய்ததுன்னு சந்தோஷமா இருக்கும்."
கேலிச்சிரிப்புடன் தொடர்ந்த ஷீலா, "சந்தோஷம்னா சந்தோஷம் அவ்ளோ சந்தோஷம் (சொல்லி அடக்க முடியாமல் சிரித்து) அவ்ளோ சந்தோஷத்துல உன் புள்ளைய தனியா வீட்டுக்குள்ளத் தள்ளிகினு போயி!" மீண்டும் சிரிக்கத் தொடங்க,
பொருமையிழந்த சியாமளா என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, "ஐய்யோ சித்தி கொஞ்சம் சொல்லிட்டுதான் சிரியேன்!"
ஷீலா, "என்ன ஆச்சோ தெரியாது! ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் அவள் தள்ளிகினு போனவிதத்த பார்த்தா நிச்சயமா உன் புள்ளய கற்பழிக்காம விட்டிருக்க மாட்டா!"
உடனே என் மனதுக்குள்; அடடா அணிதா அத்தை போன பின்பு தானே என்னை தள்ளிக் கொண்டு போனாள். அப்படியானாள் அத்தை திரும்பி வந்து பார்த்திருக்க வேண்டும், அடக் கடவுளே இதை எப்படிச் சமாளிப்பது? சரி முடிந்தவரை பொய் சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான் என நான் யோசனையில் குழம்பினேன். அதற்குள் சியாமளாவும் சித்தியும் என்னை வியந்து நோக்கினர்.
லஷ்மி, "அட அவ்ளோதானே நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்."
உடனே சியாமளாவும், "சித்திக்கு எப்பவுமே விளையாட்டுதான்; கொஞ்ச நேரத்ல எப்படி பயமுறுத்திடிச்சி பாருங்க."
உடனே அத்தை சியாமளாவை நோக்கி, "அட உனக்கு அதெல்லாம் தெரியாது, புரியவும் புரியாது. அவள் (சியாமளாவை சுட்டி) சின்னப் பொன்னு அவளுக்கு வெவரம் பத்தாது (என் சித்தியை நோக்கி) நீயே நேத்துப் பார்த்த இல்ல அந்தப் பொன்னு அடிச்ச கூத்தை. நேத்து நம்ப எல்லார் முன்னாடியும் அவுங்க அம்மா முன்னாடியே முத்தம் குடுத்தவள் இன்னிக்கு தனியா தள்ளிகிட்டுப் போயி என்னா செஞ்சிருப்பா?" சொல்லி மீண்டும் சிரித்தாள்.
என் சித்தி பயந்த வண்ணம் என்னைப் பார்த்து, "டேய் என்னடா நடந்துது, என்னடா செய்த?"
நான், "ஐய்யோ! அம்மா அத்தை சும்மா உங்களை கலாட்டா செய்றாங்க நீங்க என்னடான்னா இப்படி என்னை சந்தேகப்பட்டு அவங்களை இன்னும் சிரிக்க வைக்கறிங்க; (அத்தையை நோக்கி) ஐய்யோ! அத்தை உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன் ஏன் இந்த கொலை வெறி?"
உடனே அத்தை மனம் மாறி, "அட நீ ஒண்ணும் கவலப் பட்டத தம்பு; உன் சித்திய அவ்ளோ சுலபமா ஏமாத்திட முடியாது அது சும்மா உன்னை கலாட்டா செய்யுது. ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம் அந்தப் பொன்னு உன்ன விட புத்திசாலி அவள் ஒரே நாள்ல உன்னை நல்லா புரிஞ்சிகிட்டா அவள் ஒரு முடிவோடத்தான் இருக்கா.
உன்னை எப்படியும் அமெரிக்காவுக்கு தள்ளிகிட்டு போய்டுவா. (என் சித்தியை நோக்கி) நீ ஒண்ணும் கவலப் படாத லஷ்மி பொன்னு நல்லப் பொன்னு அமேரிக்கால வளந்த பொன்னு டாக்டருக்கு படிச்சிருக்கு. சும்மா என்னா கலரு வெள்ளை வெளேள்னு; என் தங்கத்துக்கேத்த வைரம்."
உடனே லஷ்மி, "அந்த பொன்னு இவனைவிட வயசுல பெரியவ மாதிரி இல்ல!"
ஷீலா, "அட வயசின்னா ஒரு ரெண்டு மூனு வயசு பெரியவளா இருப்பா. ஆனால் பார்த்தா தெரியல, அதெல்லாம் அவ்ளோ முக்கியமா இப்ப யாரு பாக்கறாங்க. தம்பிய மாதிரியே நல்ல உயரம், படிப்பு எல்லாம் சரியான பொருத்தம் இல்ல!!"
என் சித்தி அத்தையின் நகைச்சுவை விளையாட்டை ஓரளவு புரிந்தவளாய் சிரித்துக்கொண்டே, "சரி அப்ப பேசி முடிச்சிடுவோமா சொல்லுடா? உனக்கு ஓகேன்னா பேசி முடிச்சிடலாம்."
உடனே நானும், "சித்தி! அந்தப் பொன்னு அமேரிக்கால வளந்தப் பொன்னு. (அனிதாவின் தமிழ் உச்சரிப்பில்) தமில் வராது, இல்ல குஞ்ச குஞ்சம் வரும். அப்புறம் நம்ப நாட்டில் எல்லாம் இருக்க மாட்டா அதனால என்னை அமேரிக்காவுக்கு தள்ளிகினு போய்டுவா. அத்தோட நீங்க யாரும் என்னைப் பார்க்க முடியாது. இதெல்லாம் உங்களுக்கு பரவாயில்லன்னா எனக்கு ஓகே. நல்லா யோசிச்சி சொல்லுங்க உங்களுக்கு சரின்னா நம்ப இப்பவே சாப்டுட்டு போய் பேசிடலாம்."
அதைக்கேட்டு பாதியில் வந்து கலந்து கொண்ட பானுவும், "அந்தப் பொன்னு ரொம்ப நல்லப் பொன்னுதான் உனக்கு ஏத்த பொன்னு தான். அதெல்லாம் கல்யாணம் பண்ணி நீ நல்லா பேசி இங்கயே தங்க சம்மதிக்க வெச்சிடுவ."
வியந்தவாறே நான், "அட இதப்பாருடா இவ்ளோ நேரம் பேசாமடந்தையா இருந்த பானுவும் சொல்லிட்டாங்க." சொன்னதும் வெட்கப்பட்டாள்.
அதற்குள் ஷீலா, "சரி சரி நேரமாச்சி வாங்க சாப்புடலாம் மிச்சக் கதையை அப்புறம் பேசலாம்." சொல்லி அனைவரும் இரவுச் சாப்பாட்டுக்கு தயாரானோம். இன்று பானு மற்றும் சியாமளா ஆகிய இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு எனக்கு உணவு பரிமாறி கவனித்துக் கொண்டனர். சாப்பிட்டுக் கொண்டே மருத்துவர் என்ன சொன்னார் என விவரமாக கேட்டு தெரிந்து கொண்டேன்.
அதில் தெரியவந்தது; வலி நிவாரணி மாத்திரை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கும் மேல் வலி வந்தால் மாற்று நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என இவர்களும் கேட்க வில்லை மருத்துவரும் சொல்லவில்லை. எனவே அதைப்பற்றி மருத்துவரை கேட்பது நல்லதென தோன்றியது. உண்டு முடித்ததும் நான் உடனடியாக மருத்தவரை தொலைப்பேசியில் அழைத்துப் பேச முயன்றேன்.
நான் என்ன பேசத் திட்டமிடுகிறேன் என அறியாத ஷீலா, "எதுக்கு இப்ப டாக்டர் கிட்டப் பேசனும்." சியாமளாவும் வியந்து பயந்து நோக்க.
நான் விகடமாக, "அட இப்பத்தானே போயி பேசி கல்யாணம் முடிவு பண்ணலாம்னு சொன்னீங்க அதுக்குள்ள மறந்துட்டீங்களா." சொல்லி எண்களைச் சுழற்ற அணைவரும் குழம்பி
சற்றே பயந்த லஷ்மி, "டேய் அத்தை விளையாட்டுக்கு சொன்னத நீ தப்பா புரிஞ்சிகிட்ட."
இது நான் சற்றும் எதிர் பாராத தானாக அமைந்த விகட விளையாட்டு அதை திறம்பட விளையாட ஆரம்பித்த நான், "அட நீங்களே பாத்தீங்க இல்ல அந்தப்பொன்னு எவ்ளோ தீவிரமா இருந்தான்னு."
பதற்றத்துடன் குறுக்கிட்ட ஷீலா, "அதுக்கு."
நான், "இப்பவே சொன்னால் அந்தப்பொன்னு கொஞ்சம் திருப்தியாக நிம்மதியா தூங்குவா இல்ல. நல்ல சேய்தியை காலம் தாழ்த்தாமல் சொல்லுறது நல்லது."
இதற்கு மேல் பொறுப்பது அபாயமென உணர்ந்த ஷீலா விரைந்து என்னை நோக்கி வந்து என்னைத்தடுக்க முயல அதை உணர்ந்த நான் அதற்குள் தொடர்பு கிடைத்துவிட்டதாக பேச ஆரம்பித்தவனாக நடிக்க ஆரம்பித்தேன்.
"ஹலோ ஹான் டாக்டர் நான்தான் ரகு பேசறேன் (அதே சமயம் என்னை நெருங்கிவிட்ட ஷீலா தீவிர முகபாவனையில் மிகத் தீவிரமாக என்னை கையெடுத்து கும்பிட்டவளாக கெஞ்ச -- நான் தொலைப்பேசியின் மறுபக்கத்தை அடைத்தவனாக, "வேண்டாமா?" என கேட்க அவரும் வேண்டாமென மன்றாட உடனே தொலைப்பேசியில் பேசுவதாக நடித்து, "சாரி டாக்டர் ஒண்ணுமில்லை நாளை சந்திப்போம் 'இனிய இரவு வாழ்த்துக்கள்' என முடித்து தொலைப்பேசியை துண்டித்தேன்.
பின்னர் உண்மையை விளக்கி என் நடிப்பு திறமையை பறைசாற்றிக்கொள்ள எத்தனித்து ஷீலா அத்தையை அழைத்து பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு பேசத்தொடங்க. அதே சமயம் சற்றும் எதிர் பாராமல் தொலைப்பேசி மணி ஒலித்தது.
அதை எடுத்த ஷீலா, "ஹலோ (முகத்தில் பயம் மேலோங்க பதற்றத்துடன்) 'ஹான் டாக்டர் அது தம்பிய நான் சும்மா கலாட்டா செய்தேன் அது புரியாமல் அது உடனே போன் செய்துடுச்சி... ஹான் செய்யலையா!... அப்போ (மெல்ல குழம்பியவர்) ஹான் ஹான் இதொ தரேன்." குழப்பத்துடன் மெலிதாய் புன்னகைத்தவர் என்னிடம் தொலைப்பேசியை நீட்டினார்.
நான், "ஹலோ டாக்டர்... ஹேய் அனிதா Whatsup?"
மறுமுனையில் அனிதா அந்தப் பண்ணைத் தோட்டச் சுற்றுச் சூழலைப் பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ள விரும்பினாள். குறிப்பாக அந்த இடத்தின் ஆள் நடமாட்டம் அந்தரங்கத்தனிமை (Privacy) விவரங்களைக் கேட்டாள். அதற்குத் தகுந்தவாறு தன் நீச்சலுடை தெரிவு செய்ய உதவியாக இருக்கும் எனச் சொல்லி பின்னர் என் அபிப்பிராயத்தையும் கேட்டாள்.
தொடரும்