Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 23: நீட்டித்த அத்தை வீட்டு சல்லாபம்
நகைச்சுவை
ஒரு படிப்பறிவு குறைந்த மற்றும் நகர வாழ்க்கை முறை பழக்கமில்லாத கிராமத்து வாலிபனுக்குத் திடீரென ஏதோ எதிர்பாராத விதமாகக் குலுக்குச் சீட்டுப் பரிசு முறையில் அளவில்லா பணம் வந்து குவிய; அதைக் கண்டபடி செலவு செய்து அனுபவிக்க ஆரம்பித்தான். இந்த நிலையில் ஒரு நாள் உயர்தரத் தங்கும் விடுதிகளைப் பற்றி அதன் வசதி மற்றும் சொகுசு வகைகளை யாரோ புகழ்ந்து சொன்னதைக் கேட்டு தானும் அனுபவிக்க எண்ணினான்.
குறிப்பாக ஐந்து நட்சத்திர விடுதிகளில் எதைக்கேட்டாலும் இல்லையெனச் சொல்ல முடியாது சொல்லமாட்டார்கள். எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை என அவன் நண்பர்கள் சொல்ல அதை நம்பி ஒரு நல்ல மிகப் பிரபலமான ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிக்குச் சென்று தங்கி அனுபவித்தான்.
சில நாட்கள் தங்கி அனுபவித்துக் கொண்டிருந்தவன் கிட்டத்தட்ட அந்த உணவுப் பட்டியலில் (Menu Card) இருந்த எல்லா வகை உணவுகளையும் உண்டு முடித்தவன் இறுதியாக 'etc' என்று குறிப்பிட்டிருந்ததைக் கேட்க; உணவு பரிமாறுபவர் (ஒர் ஆண்) அது உணவு வகை இல்லை என எவ்வளவோ விளக்க அதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் தான் படிப்பறிவில்லாததால் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கலாட்டா செய்தான்.
அந்த விடுதியின் மேலாளருக்கு விவரம் தெரிய அவர் இந்த முட்டாளைக் கையாள திட்டம் வகுத்து அந்த உணவு பரிமாறுபவரைத் தனியே அழைத்து 'ஒரு முழு வெங்காயத்தைப் பொடியாக வெட்டி அதில் சிறிது அவன் மூத்திரம் வார்த்து அதுதான் அந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருந்த 'etc' என்ற உணவு எனச் சொல்லிப் பரிமாறச் சொன்னார். ஆனால் மூத்திரம் வார்த்த விவகாரத்தைத் தெரியாதவாறு செய்யச்சொன்னார். அதை உண்டு மகிழ்ந்து அது மிகச் சுவையாக இருந்ததெனப் பாராட்டிச் சென்றான் அந்த முட்டாள்.
சில நாட்கள் கழித்து மீண்டும் அதே உணவை உண்ண ஆசை கொண்டு சென்று கேட்க இந்த முறை உணவு பரிமாறுபவர் ஒரு பெண். அந்த மேலாளர் அதே செய்முறையை (Recipe) பின் பற்றச் சொல்ல அந்தப் பெண் முதலில் சற்று அதிர்ந்து பின் மேலாளர் முன்பு நடந்ததை விளக்கிய பின் அந்தப் பெண்ணும் சற்றே பயந்த வண்ணம் செய்து கொடுக்க அதையும் உண்டு மகிழ்ந்தவன் அந்த மேலாளரை அழைத்து இந்த முறை செய்தது வேறு சுவையாக இருப்பதாகவும் அதன் காரணம் என்ன எனக் கேட்டான்.
அந்தப் பெண் சற்றே பயந்து நோக்க மேலாளர் அந்த முட்டாளிடம் 'முன்பு/அன்று செய்தது குழாய் நீர் (Tap water) ஆனால் இன்று குழாய் நீர் இல்லை அதனால் கிணற்று நீரில் (Well water) செய்து கொடுத்ததாகவும் அதுதான் வித்தியாசம்' என விளக்க அந்த முட்டாளும் இந்தச் சுவை மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லிப் பாராட்டிச் சென்றான்.
இதைக் கேட்டதும் ஜெயா அத்தை சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த சிரிப்பில் தான் குடித்திருந்த மதுக் கோப்பையைத் தவற விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
கடந்த சில நாட்களில் மாதர்களுடனான காதல் போதையில் உழண்ட நான் இன்று முதல் முறையாக மதுவின் (ஒயின்) போதையை மெல்ல அனுபவித்தேன். உண்மையில் நான் அதிகம் குடிக்கவில்லை கிட்டத்தட்ட ஒரு முழுக்கோப்பையை முடிக்கும் போதே என்னுள் பல மாற்றங்களை உணர்ந்தேன்.
முதல் கட்ட வித்தியாசம் நான் மதுவை அருந்திய பின் அதை மேஜையில் வைக்கும் முறையில் தளர்ச்சி/மென்மையின்மை. அடுத்து சற்று நேரத்தில் சிறுநீர் கழிக்க ஒப்பனை அறைக்கு செல்ல முற்பட எழுந்தவன் முதல் முறையாக தள்ளாடுவதை உணர்ந்தேன். இப்படி பல பல வித்தியாசங்கள். குறிப்பாக எனக்கு நினைவு வந்தது மிகப்பொருத்தமான பாடல் வரிகள்
'நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா என்னை நானே கேட்கிறேன்'
சிறிது நேரத்தில் அனைவரும் உறங்கத் தொடங்கினோம். சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கம்.
நல்ல அமைதியான உறக்கத்திலிருந்த என்னை ஒரு மென்மையான முத்தம் எழுப்பச் சிறிதே ஆனந்த அதிர்ச்சியில் கண்விழிக்க மங்களகரமான இந்திய உடையில் அனிதா எனக்காகக் காப்பியுடன் நிற்க இன்ப அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தேன்.
என் அதிர்ச்சியைக் கண்ட அனிதா மிகவும் வியந்து காப்பியை மேஜையில் வைத்துவிட்டு என் முதுகை ஆதரவுடன் தடவி விட்டு, "காலை வண்க்கும் ரகு ஒண்ணுமில்லா ரிலேக்ஸ்; இந்தா காப்பிக் குடி அன்பே."
சற்றே நிதானத்துக்கு வந்த நான், "காலை வணக்கம் அன்பே; மன்னிக்கனும் அட இதென்ன இவ்ளோ அசத்தலான மங்களகரமான உடையில் இவ்ளோ... சீக்கிரம்; அட மணி என்ன ஆச்சி? நான் நிறைய நேரம் தூங்கிட்டேனா (கடிகாரம் காலை மணி 8:15 எனத் தெரிவிக்க) ஹோ ஆமாம் கொஞ்சம் நல்லா தூங்கிட்டேன்.
அடுத்து அவளின் மங்களகரமான தோற்றத்திற்கான காரணத்தை வினவ அது ஜெயா அத்தையின் பரிந்துரைப்பு என விளக்கினாள் அதாவது இந்திய பாரம்பரிய கலாச்சார பழக்கத்தில் மனைவி இப்படி மங்கலகரமாக தன் கனவனை எழுப்பி தயார் செய்வது வழக்கமெனவும் அப்படிச் செய்து என்னை மகிழ்விக்க செய்வதை அறிந்து அவளை அள்ளி அணைத்து மரியாதையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
பிறகு அத்தை வீடு திரும்ப வேண்டிய அவசியத்தைச் சொல்லிவிட்டுப் புறப்பட ஆயத்தமாக; அனிதா என் அன்றைய அடுத்த பொழுது போக்குத் திட்டம் பற்றிக் கேள்வி எழுப்பினாள். அநேகமாக வழக்கம் போல அந்தப் பண்ணை மற்றும் கிணற்றுக் குளியல்தான். அப்படி அமைந்தால் இன்றும் நேற்றைப் போல இருவரும் கிணற்று நீச்சல் பொழுது போக்குவதென திட்டமிட்டோம்.
நான் அவர்களிடம் விடைபெற்று அத்தை வீட்டை அடைய; ஷீலா, "வாங்க மாப்ள வாங்க." கேலியும் கிண்டலுமாய் வரவேற்றாள் மற்றவர்களும் கேலி செய்தவறே நடந்த விவரத்தை அறிந்துகொள்ள ஆவல் காட்டினர்.
எதிர் பார்த்தபடி அத்தை என்னுடன் பண்ணைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். சியாமளாவோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை அழைத்துப் போக வழி செய்யுமாறு நச்சரித்தாள். நானோ அனிதாவுக்குக் கொடுத்த வாக்கை எண்ணி யோசித்தேன்.
நேற்றைப்போல இன்றும் அனிதா, சியாமளா அத்தை என மூவருடன் பொழுதைக் கழிப்பதே நல்ல திட்டமாகத் தோன்றியது. ஆனால் அத்தையின் விருப்பமோ முதல் நாளை போல என்னைத் தனியே அழைத்துச் செல்வது. எனக்கு என்ன செய்வதெனப் புரியாமல் குழம்பினேன்.
இங்கு இருக்கப் போவது வெகு சில நாட்களே அதற்குள் பல விஷயங்களைச் செய்து முடிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் ஏதாவது திட்டம் தீட்டி அங்குத் தங்கும் நாட்களை நீட்டிக்க முடியுமா என யோசனையில் ஆழ்ந்தேன்.
அந்தச் சமயம் தொலைப்பேசி மணி ஒலிக்க அதை எடுத்த அத்தை சில நிமிட உரையாடலுக்குப் பின் அவர் முகம் வெறுப்பு வெளிப்படத் தொலைப்பேசியைத் துண்டித்தார், "உங்க மாமா தான் (ஜமீன் மாமா); ஏதோ சில அலுவலகக் கோப்புகளை வேலுன்னு ஒரு வேளையாளு கிட்டக் கொடுத்து அனுப்ப சொல்றாரு; ரொம்ப அவசிய/அவசரமாம்."
"அவ்ளோதானே அதுக்கு ஏன் ரொம்ப சோகமாயிட்டீங்க? ஏதாவது சிரமமா?" சொல்லி அவரைப் பின் தொடர இருவரும் மாடியில் உள்ள கிராம அலுவலக அறைக்குச் சென்றோம்.
"அவசரமாம் இப்ப உடனே அந்த வேலுவை இங்க வரச்சொல்லி ஆளை அணுப்பனும் அப்புறம் அவன் கிட்ட இந்தக் கோப்புங்கள குடுத்து அணுப்பனும். ரொம்ப அவசரமாம் அதனால நான் கொஞ்ச நேரம் ரொம்பத் தீவிரமா இந்த வேலைய செய்யனும்.
கொஞ்சம் நிம்மதியா தம்பிகூடப் பண்ணைக்குப் போயி கூத்தடிக்கலாம்னு பார்த்தா இப்படி வேலைய குடுத்துட்டாரு. ஹூம் என்ன செய்றது இந்த வேலை எப்படியும் ரொம்ப நேரமாயிடும் அதனால பண்ணைக்குச் சியாமளாவைத்தான் அணுப்பனும்.
நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. போய்க் கருப்புகிட்ட சொன்னா அவள் வீட்டுக்குக் கிட்டத்தான் இருக்கிறான் அந்த வேலு அதனால அவகிட்ட சொன்னா போதும் அந்த வேலுவ சீக்கிரம் வரவெச்சிடுவா." அத்தையின் வார்த்தையில் விரக்தி மேம்பட்டிருந்தது.
அத்தைக்கு என்னுடன் பொழுதைக் கழிக்க முடியாமைக்கு வருத்தம் என் புரிந்ததும் எனக்கு ஆசையின் உச்சத்தில் அவளைக் கட்டியணைத்து அன்பாய் முத்தமிட்டு, "அத்தை நான் உங்கள் கூட இருந்து இந்த வேளைய முடிச்சிட்டுத்தான் மத்த வேளை எனக்கு." உடனே எனக்கு தோன்றிய யோசனையை முன்வைத்தேன்.
நானும் அத்தையும் அந்த மோட்டார் சைக்கிளில் சென்று நான் பிரதான சாலையிலேயே வண்டியோட காத்திருக்க; ஷீலா சென்று கருத்தம்மாவை உடனே அனுப்ப; நான் அவளை அழைத்துச் சென்று அந்த வேலுவைத் சந்தித்து விவரம் சொல்லி அந்த கோப்புகளை கொடுத்து அனுப்பிவிட்டால் வேலை விரைவாக முடித்து பின்னர் எங்கள் சல்லாபத்தை தொடர முடிவு செய்து செயல் படுத்தத் தொடங்கினேன்.
ஆனால் நாம் ஒரு திட்டமிட கடவுள் ஒரு திட்டமிட்டார். கருத்தம்மாவுடன் சென்று அந்த வேலுவை சந்திக்க அங்கு வேறு பிரச்சினை. அந்த வேலுவின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என அவர் தன் மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்.
நாங்கள் வந்த விஷயத்தை அறிந்ததும் தன் மனைவியைத் தனியாகவோ அல்லது பக்கத்து அக்கம் பக்கத்தோர் உதவியுடன் செல்லச் சொல்லிவிட்டு; ஐயா சொன்னதால் இந்த வேலையைத் தான் செய்வது முக்கியமெனச் செயல்படுத்தத் தொடங்க எனக்கு மனம் சற்று வருத்தமாக இருந்தது.
வேலுவை அவர் வேலையைத் தொடரவிட்டு அவருக்குப் பதிலாக வேறு யாராவது செய்ய முடியுமா என ஆராய்ந்ததில் அது சாத்தியமில்லையெனத் தெரிய; இந்தக் கோப்புகளை அதிவிரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம். அதற்கு நல்ல யோசனை அதை நானே கொண்டு செல்வதென முடிவு செய்தேன்.
கருத்தம்மாவும் வேலுவும் இது ஜமீன் ஐயாவுக்குத் தெரிந்தாள் பெரிய பிரச்சினையெனப் பயந்து மறுத்தனர். நான் சற்றுப் பொறுமையாக விளக்கி; மேலும் வேலுவை சந்திக்க முடியாமல் போனதாகச் சொல்லிச் சமாளித்துக் கொள்வதாகச் சமாதானப்படுத்திய பின் இருவரும் என் உதவும் மனப்பாங்கை வியந்து தெய்வாதீனம் எனப் போற்றி நன்றி தெரிவிக்க நான் வேண்டிய விவரங்களை வேலுவிடம் கேட்டறிந்து பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்று அத்தையிடம் விவரத்தை விளக்கினேன்.
அத்தையோ, "அட லூசு கழுத; ஏதோ நல்லா திட்டம் போட்டு அந்த வேலைய சீக்கிரமா வேலுவை செய்ய வெச்சிட்டு வந்தால் நாம ஜாலியா இருக்கலாம்னு திட்டம் போட்டுட்டு இப்படித் திடீர்னு அவுங்களுக்கு உதவி செய்றேன்னு என்னை நட்டாத்துல விட்டுட்டு போறியே இது உனக்கு நியாயமா படுதா? நல்ல புள்ளையா இருக்கலாம் ஆனால் இப்படி அநியாயத்துக்கு நல்ல புள்ளையா இருக்கக்கூடாது தம்பி." அவள் சொற்களில் வருத்தமும் கோபமும் கலந்து வெளிப்பட்டது.
இது நான் வேலுவுக்கு மட்டும் செய்யும் உதவி அல்ல; தொலைப்பேசி உரையாடலில் ஜமீன் மாமா வெளிப்படுத்திய அவசரத்தை கவனித்தால் இது நாம் அவருக்கு செய்யும் முக்கிய உதவியாக இருக்கலாம். மேலும் இரண்டு மூன்று நாட்களில் வீடு திரும்புவதாக சென்ற மாமா இப்படி அவசர வேலையில் மூழ்கி இருப்பதின் முழு விவரம் அறிந்தால் ஒரு வேலை அது நாங்கள் அங்கே தங்குவதை நீட்டிக்க ஏதாவது வழி உண்டாக்கலாம் எனத் தோன்றியது அதை மெலும் விளக்க அத்தை மனம் இசைந்தாலும் வருத்தத்துடனே வழி அனுப்பினார்
தொடரும்
இத்துடன் இந்த மூன்றாம் அத்தியாயம் முடிவடைந்து நான்காவது அத்தியாயத்தை நோக்கிக் கதை நகரவிருக்கிறது. அடுத்தகட்டமாக நாயகன் தன் சித்தப்பா மற்றும் ஜமீன் மாமா அவர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தன் புத்திசாலித்தனத்தால் திறம்படக் கையாள முயல. கிணறு தோண்டப் பூதம் கிளம்ப அதை நாயகன் எப்படித் தீர்க்கப்போகிறான். கதைக்களம் சற்று வாழ்க்கைச் சூழல் சவாலைக் கையாளும் போக்கில் திசை திரும்பும். ஆனால் காமத்தை விட்டு முழுமையாக விலகாது. எனவே காமமற்ற வறண்ட நிலை ஏற்படாது கவலை வேண்டாம். இதுவரை தொடர்ந்து படித்து ரசித்தவர் அனைவருக்கும் என் நன்றி மேலும் வாசகர்கள் அனைவரையும் கதையைப்பற்றிய தங்கள் விமர்சனம் / கருத்து பரிமாற்றம் செய்யுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் தொடர்வோம் கதையை
பெயர் குறிப்பிடாத வாசகரே,
தங்கள் கருத்தைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி; மேலும் என் கதை தங்கள் மனதைக் கவர்ந்ததாக வெளிப்படுத்திப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. இது போன்ற கருத்து பரிமாற்றம் மிக உற்சாகமளிக்கிறது.
அருமையான கதை கதை சொல்லும் ரொம்ப பிரமாதம் கதை இப்படி இருந்நால் தான் தொடர்ந்து வாசிக்க முடிகிறது தொடரட்டும் உங்கள் சேவை