நிஷா ஒரு பத்தினி Pt. 01

Story Info
பக்கத்து வீட்டு பையன்
12.4k words
3.86
31
0
Story does not have any tags

Part 1 of the 9 part series

Updated 12/03/2023
Created 07/29/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

நிஷா -

28 வயது அழகுப் புயல். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன இளம் குடும்பத் தலைவி. யாரையும் ஏறிட்டுப் பார்க்காத இல்லத்தரசி. வாழ்க்கை முழுவதும், கணவனோடு மட்டுமே படுக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதன்படி வாழ்கின்ற கற்புக்கரசி. அப்பகுதியில் இருக்கும் ஒரு சிறந்த பெரிய CBSE ஸ்கூலில் Pre KG to Primary குட்டீஸ்களுக்கு ஆசிரியை. நிஷாவுக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும். சீக்கிரமே தான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டுமென்பது அவள் விருப்பம். கணவர் கண்ணன். நல்லவர். யுனிவர்சிட்டியில் பேராசிரியர். மற்றும் ஆராய்ச்சியாளர். ஓரளவு வசதியான குடும்பம்.

நிஷாவின் தந்தை ஒரு பெரிய இண்டஷ்ட்ரியலிஸ்ட் . ரிசர்ச்சில் உள்ள ஆர்வத்தால் என் அப்பாவின் கம்பெனியில் ஏதாவது ஒரு மரியாதையான பதவியில் வேலை செய்யுங்கள் என்று நிஷா எவ்வளவோ சொல்லியும் மறுத்துவிட்டார். அவருடைய ஒரே மைனஸ் ஜோசியத்தை அளவுக்கு மீறி நம்புவார். அவருடைய ராசிப்படி, மூன்று வருடங்களுக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொண்டால் குடும்பத்துக்கு ஆகாது, பெரும் கஷ்டம் வரும் என்று சொல்லிவிட்டார்கள். நிஷா இதை பெரிதாக நம்பவில்லை. ஆனால் இவருக்கு மனதில் பயம். அதனால் மூன்று வருடங்களுக்கு பிறகு குழந்தைக்கு முயற்சி செய்யலாம் என்று நிஷாவை சம்மதிக்கவைத்து ரிசர்ச்சில் கான்செண்ட்ரேட் செய்தார்.

இவர்களது வீடு அந்த ஏரியாவில் மற்ற வீடுகளிலிருந்து தனித்து சற்றே ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் நிஷாவுக்கு ஒரே ஆறுதல் அவளது வீட்டை ஒட்டி இருக்கும் பார்வதியின் குடும்பம். ஐம்பது வயதை நெருங்கிவிட்ட பார்வதிக்கு, நிஷாவின் குணமும் பேச்சும் ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்து வீடு திறந்து வேலைகளைப் பார்க்கும் நிஷாவைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

அன்று -

வழக்கம்போல பரபரப்பான காலை -

தலையில் ஈரத்துண்டுடன் இடுப்பில் சொருகிய புடவையோடு நிஷா சமைத்துக்கொண்டிருந்தாள். ஸ்கூலுக்குப் போகவேண்டும் என்ற பரபரப்பில் கண்ணனுக்குத் தேவையான உணவை ரெடி செய்துகொண்டிருந்தாள். கல்லூரி போக அப்போதுதான் எழுந்து கிச்சனுக்கு வந்த கண்ணன், பூனை போல் சென்று நிஷாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ள.... எஸ்‌எஸ்‌எஸ்ஆஆ.... என்று துள்ளி திரும்பினாள் அவள்.

அய்யோ... என்ன இது காலங்காத்தால... போய் கிளம்புங்க... - கொஞ்சலுடன் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளினாள் நிஷா

என் பொண்டாட்டி எவ்ளோ அழகு!!! என்று சொல்லிக்கொண்டே கண்ணன் அவள் வளைந்த இடுப்பை தடவிக்கொண்டே புடவை முடிச்சை நோக்கி கையை கொண்டுசெல்ல.... ப்ச... எடுங்க கையை .. வேலை செஞ்சிட்டிருக்கும்போது.. என்று சொல்லிக்கொண்டே அவனது கையை தட்டிவிட்டாள். நானே நேரமாச்சுன்னு இருக்கேன் நீங்க வேற என்று பொய்யாக அவனை தள்ளிவிட்டாள்.

கண்ணனின் கல்லூரி தூரம். மேலும் இருவர் வேலை பார்க்கும் இடங்களும் வெவ்வேறு திசை. ஸோ நிஷா சில நாட்கள் ஸ்கூட்டியில் போவாள். சில நாட்கள் காரில் போய் இறங்குவாள். அவளுக்கு ஸ்கூட்டியில் செல்வது பிடித்துப்போனது.

கார் செல்வதற்காக மெயின் கேட்டை அவள் திறக்கும்போது, மீண்டும் குறும்பாக நிஷாவின் லவ் ஹெண்டிலில் கிள்ளிய கண்ணன் "லோ ஹிப்தாண்டி உனக்கு அழகே....!!" என்று சொல்லி சிரிக்க, "ஆமா நைட்டெல்லாம் உங்களுக்கு நான் கண்ணுக்கு தெரியமாட்டேன். இப்போ மட்டும் என்ன ஏதாவது பண்ணி சூடேத்திட்டு போயிடுங்க" என்று நிஷா முறைத்துக்கொண்டே சொல்ல... அவளுக்கு ஒரு பிளையிங்க் கிஸ் கொடுத்துவிட்டு கிளம்பினார் கண்ணன்.

அதன்பிறகு கடகடவென்று தனக்கு தேவையானதை கட்டிக்கொண்டு, கொஞ்சமாய் அலங்காரம் செய்துகொண்டு, புக்ஸை எடுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி வேகமாய் ஸ்கூட்டியில் உட்காரும்போது பார்வதி எதிர்ப்பட்டாள்.

பார்த்துப் போ நிஷா... ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சின்னு வேகமா போகாதே...

சரிக்கா... கேஸ்காரன் வந்தாலும் வருவான். வந்தா போன் பண்ணுங்க....

சரிடாம்மா... சாப்பிட்டுட்டுதானே போற.....இந்த வண்டிய அவர்கிட்ட கொடுத்துட்டு நீ கார வாங்கிக்கிடவேண்டியதுதானே... - பார்வதி கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்கூட்டி சீறி பறந்தது.

ஏகத்துக்கும் கலைந்திருந்த தலைமுடியை சரிசெய்தவாறே அதேநேரம் புடவை, இடுப்பைவிட்டு விலகிவிடக்கூடாதென்று புத்தகத்தை மார்பில் வைத்து புடவையை அழுத்திப் பிடித்துக்கொண்டே வேகவேகமாக வராண்டாவில் நடந்தாள் நிஷா. அப்போது எதிர்ப்பட்ட வாண்டுகள் குட்மார்னிங்க் மேம்... குட்மார்னிங்க் மேம்... என்று கியூட்டாக சொல்ல... இதுவரை இருந்த சலிப்பும் அவசரமும் காணாமல் போய் சிரித்த முகத்துடன் குட்மார்னிங்க் சொல்லிக்கொண்டே நடையின் வேகத்தைக் குறைக்க... எதிரே வந்த அவள் தோழி காயத்ரி, ஏய்... வயிறு தெரியுதுடி... என்று சொல்லிக்கொண்டே கடந்துபோக... திடுக்கிட்டு கீழே குனிந்து பார்த்த நிஷா தன் வயிறும் இடுப்பும் அவள் மூடி வைத்திருந்தது போலவே அப்படியே நேர்த்தியாக மூடப்பட்டிருப்பது கண்டு, திரும்பி அவளைப் பார்த்து முறைக்க... அவள் சிரித்துக்கொண்டு போனாள். இரண்டு வகுப்புகள் நடத்திவிட்டு ஸ்டாப் ரூமுக்குள் வந்தபோது காயத்ரி சிக்கினாள். ரொம்ப குறும்புடி உனக்கு, பயந்தே போயிட்டேன்... என்று அவள் தோளில் வசமாக ஒரு அடி கொடுத்தாள் நிஷா. ஏய்... என்று சிணுங்கிய காயத்ரி, ரொம்ப அழகா இருக்கேடி இன்னைக்கு என்று கொஞ்சியபடியே தனது வகுப்புக்கு ஓடினாள்.

தமிழ் மேம் என்று அன்போடு அழைக்கப்படும் காயத்ரி நிஷாவுக்கு இந்த ஸ்கூலில் கிடைத்த நல்ல தோழி. இருவருக்கும் ஒரே டேஸ்ட். எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். மாமியார் கதையில் ஆரம்பித்து, 'எப்போதான் அவர் என்ன நல்லா போட்டு புரட்டி எடுக்கப்போறாரோ...' என்று கணவர் கதை வரை பேசுவார்கள். காயத்ரிக்கு மார்புகள் பெரிசாக எடுப்பாக இருக்கும். சக ஆசிரியைகள் காயத்ரியை மார்பழகி என்றும், நிஷாவை இடுப்பழகி என்றும் சொல்வதுண்டு.

லஞ்ச் டைமில் நிஷா சொன்னாள். வீட்ல ரொம்ப போரிங்கா இருக்குடி. அம்மா அல்லது மாமியார் வந்தாங்கன்னா தேவலைன்னு தோணுது

ஹ்ம் நீ மாமியார் இல்லைன்னு வருத்தப்படுறே.... நான் கூடவே இருந்து நச்சரிக்கராங்களேன்னு வருத்தப்படுறேன்.

அவங்க ஒண்ணும் அவ்ளோ மோசமானவங்களா தெரியலையேடி... நல்லாதானே பேசுறாங்க

பேசுறதெல்லாம் ஒகேடி... ஆனா ஊம குசும்பு. சந்தேக புத்தி. எங்கயும் போகக்கூடாது. போனா சீக்கிரம் வந்திடனும். சுடிதார் போட்டா துப்பட்டா போட்டே ஆகணும்.

உனக்கு பெருசா இருக்குல்லடி... அதான் சொல்லியிருப்பாங்க.

ஏண்டி நான் எல்லார்கிட்டயும் போயி கொஞ்சம் வாய் வச்சி பாக்குறீங்களான்னா கேட்கப்போறேன். நைட்டி போட்டுட்டு கூட ப்ரீயா நடக்கவிடமாட்டா. முறைசிக்கிட்டே இருப்பா. நீ என்னன்னு போன்னு ப்ரா போடாமத்தான் திரிவேன். அவ மகன்தானே பாக்குறான்? அதுகூட பொருக்காது கெழவிக்கு

வீட்டுக்குள்ளதானடி... அதுக்குமா

அவங்களுக்கு ஏதாவது ஒரு குறை சொல்லிட்டே இருக்கணும்டி. இல்லன்னா நேரம் போகாது. போன சண்டே அவர்கூட பீச் போகும்போது கேட்குறா... புடவைய ஏன் இவ்ளோ இறக்கி கட்டியிருக்கேன்னு. உன் பையன்தான் புடவை கட்டிவிட்டான். அவன்கிட்டயே கேட்டுக்கோனு சொல்லியிருப்பேன். வேணாம்னு போயிட்டேன்.

நல்லவேள... எனக்கு இந்த பிரச்சினை இல்ல

நீதான் டிரெஸ்ஸே போடாம திரியலாமே. ச்சே... நானாயிருந்தா துணியில்லாமதான் போயி புருஷனுக்கு கதவு திறப்பேன்

ச்சீ.... ரொம்ப மோசம்டி நீ

யாரு நான் மோசமா.... பார்ன் படம் பாத்துட்டு வந்து, இப்படிலாம் பன்றானுங்கடி, அப்படிலாம் பண்ரானுங்கடின்னு லெக்ச்சர் கொடுத்தியே... நீ ஒன்னும் தெரியாத பாப்பாதாண்டி

உன்கிட்ட போயி சொன்னேன் பாரு... - நிஷா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

காயத்ரி அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டாள். நமக்கு எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்டி... அதுசரி...போரடிக்குதுன்னு புலம்புறியே... பக்கத்துல பேசுறதுக்கு யாருமில்லையா

பார்வதியக்கா இருக்காங்க. அடிக்கடி அவங்க வீட்டுக்குதான் போறது. நல்லா பேசுவாங்க. ஆனா...

என்னடி... பேசினா விடாம பேசிட்டே இருப்பாங்களா?

சேச்சே...அப்படிலாம் இல்ல. அவங்களுக்கு பொறந்திருக்கானே ஒரு தடிமாடு. அவன்தான் கடுப்ப கிளப்புவான்

யாரு அவங்க பையனா?

ஆமா. குறுகுறுன்னு திருட்டுத்தனமா பாத்துட்டே இருப்பான். புடவை லேசா அசைஞ்சதுன்னா போதும் அவன் கண்ணு அங்கதான் இருக்கும். சரியான திருட்டு முழி

நீதான் மிஸ் பெர்பெக்ட் ஆச்சே... உன்கிட்ட என்னடி அவன் பாக்கப்போறான்?

ஏண்டி. எல்லா நேரமுமே புடவைய பிடிச்சிக்கிட்டே... பின் குத்தி வச்சிக்கிட்டேவா அலையமுடியும்?

வீட்ல ஏண்டி புடவைய கட்டிட்டு அழுற?

என்ன போட்டுட்டுப் போனாலும் அவன் அப்படித்தான் பார்ப்பான். இவரும் ஏதாவது ஆத்திர அவசரம்னா சீனிவாசன்கிட்ட சொல்லு சீனிவாசன்கிட்ட சொல்லுன்னு... சரியான மரமண்டை

அவர்கிட்டயே சொல்லவேண்டியதுதானேடி

ஹே... நீ அவன் முகத்த பாக்கணும். எல்லாரையும் அப்பாவின்னு நம்பவச்சிருக்காண்டி. அக்காவே அப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க.

ஸோ.. மேடத்த சைட் அடிக்க பக்கத்து வீட்டுலயே பொறுக்கி இருக்கானா? கொடுத்து வச்சவடி நீ. நானாயிருந்தா அவன நல்லா அலையவிட்டிருப்பேன். அவன் என்ன பண்றான், படிக்கிறானா வேலைக்கு போறானா?

ம்க்கும். காலேஜ் முடிச்சிட்டு தண்டமா இருக்கான். வேணும்னா உன் வீட்டு அட்ரஸ் கொடுக்குறேன். போதுமா?

ஐயோ வேணாம்பா... அப்புறம் என் மாமியார் என்ன ரெண்டு ப்ரா போடசொல்லுவா

நிஷா தன்னை மறந்து சிரித்தாள்.

ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும், மேலுக்கு குளித்துவிட்டு தன் மேடு பள்ளங்களில் தஞ்சம் புகுந்திருந்த தண்ணீர்துளிகளை துடைத்துவிட்டு உள்ளாடைகள் அணியும்போது கண்ணனிடமிருந்து போன் வந்தது. பாவாடையை கையில் வைத்துக்கொண்டு, வீணாகிக்கொண்டிருக்கும் தன் இளமையை கண்ணாடி முன்நின்று ரசித்துக்கொண்டே ஹலோ என்றாள்.

என்னடி வீட்டுக்கு வந்துட்டியா?

ம்..... மத்தியானம் நல்லா சாப்பிட்டீங்களா?

எங்கடி.... ரிசல்ட் சரியா வரல.... தலைய பிச்சிக்கிட்டிருக்கேன். என்ன சாப்பாடு?

ஏங்க... காலைல அவ்ளோ கஷ்டப்பட்டு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணிக்கொடுத்தா இப்படித்தான் சாப்பிடாம இருப்பீங்களா?

சாப்பிடுறேண்டி... அதுக்கு ஏன் கத்துற?

பேசாதீங்க. - கோபமாக போனை கட் பண்ணினாள்.

ச்சே... இவருக்கு போயி பார்த்து பார்த்து சமைச்சேன். இதுக்கு 6 மணிக்கே எந்திரிச்சிருக்கலாம். சலிப்பாக பாவாடையை கட்டினாள். ஆங்....எந்த புடவை கட்டட்டும்னு கேட்கணும்னு நெணைச்செனே.... உடனே போனை எடுத்தாள்.

என்னடி?

எப்போ வருவீங்க இன்னைக்கு?

5 மணிக்கு வந்துரணும்னு பிளான் பண்ணேன். இப்போ வர 8 மணி ஆகிடும்போல....

ப்ச்... நீங்க 5 மணின்னு சொன்னாலே 7 மணிக்கு வருவீங்க... போங்கங்க... பேசாதீங்க - கோபமாக போனை கட் பண்ணினாள்.

அப்போதுதான் பிளவுஸ் இல்லாமல் இருப்பது ஞாபகம் வர... அடச்சே.... எந்த புடவை கட்டுறதுன்னு கேட்கலையே... ப்ச்... நைட்டியே போதும். ஸ்கர்ட்டை அவிழ்த்து போட்டுவிட்டு நைட்டியை எடுத்தாள். ச்சே..

அக்காகிட்ட போயி கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமா......யெஸ். பெட்டர் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் மனதில் அவளுக்கே தெரியாமல் சீனிவாசன் எட்டிப்பார்த்தான். அவன் அவளை ரசித்துப் பார்க்கும் காட்சி ஒரு செகண்ட் வந்துபோக...கையிலிருந்த நைட்டியை கீழே போட்டுவிட்டு மறுபடியும் ஸ்கர்ட்டை உடுத்தினாள். பிளவுஸ் பிட்டாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். புடவையை கொசுவத்தை சொருகும்போது யோசித்தாள். அங்க போனா அவன் இருப்பான். ஃப்ரீயா கைய தூக்க முடியாது... குனிய முடியாது..... ஸோ ஏத்திக் கட்டிக்கலாமா?

நிஷா ஒரு நிமிடம் யோசித்தாள். ச்சே... யாரோ ஒருவனுக்காக நான் ஏன் என் ஸ்டைலை மாத்திக்கணும்? அதோட ,அவன் அப்படி ஏக்கமா பாக்கும்போது ஒரு மாதிரி குறுகுறுப்பா... நல்லாதானே இருக்கு!!

இடுப்புச் சேலையை இழுத்துவிட்டு புடவை முடிச்சை மறைத்தாள். இடது பக்கம் சைடில் மார்பகம் தூக்கி நிப்பாட்டியதுபோல் கின்னென்று நின்றது. அதை மறைத்தாள். காயத்ரி அளவுக்கு ரொம்ப பெரிசு இல்லையென்றாலும்.... நமக்கும் நல்ல சைஸ்தான் என்று நினைத்துக்கொண்டே பிளவுசின் கீழ்புறத்தை சுருங்கவிடாமல் இழுத்துவிட்டாள். அழகாக கொண்டை போட்டாள். அழகாக நடந்து பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்தாள்

அக்கா....

யாரு நிஷாவா... வா... வாமா.... நானே உன் வீட்டுக்கு வரணும்னு நெனச்சேன் மகராசி நீயே வந்துட்ட. எப்போ வந்தே ஸ்கூல்லர்ந்து... - கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் பார்வதி. நிஷா நேராக கிச்சனுக்குச் சென்றாள்.

என்னக்கா... தடபுடலா ஏதோ பண்ணிட்டிருக்கீங்க?

நீயே வந்து பாரு என்னன்னு. பாயாசம்தான். உனக்கு கொஞ்சம் கொண்டுவரணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீயே வந்துட்ட. நல்லதா போச்சு. ஒரு பவுலில் ஊற்றிக் கொடுத்தாள் பார்வதி

என்ன ஸ்பெஷல்கா... உங்க மகனுக்கு வேலை கீலை கிடைச்சிருக்கா?

ம்க்கும். அவனுக்கு அந்த எண்ணமே இருக்குறமாதிரி தெரியல. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஏதோ பேஷன் டிசைனிங்...டிராயிங்க்... பெயிண்டிங்...னு நேரத்த வீண் பண்ணிட்டிருக்கான். சிலநேரம் ஜோசியக்காரனா மாறிடுறான். எனக்கு நீ ஒரு உதவி செய்யனுமே...

என்னக்கா

அவன ஒரு தடவை... ஒரே ஒரு தடவை நீயே கூப்பிட்டு கண்டிச்சின்னா... கொஞ்சம் அடங்குவான்.

ஐயோ நானா... அவன் என்ன சின்னப்பிள்ளையா... கண்டிக்கிறதுக்கு?

உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கான். அவங்க அப்பாவ விட. அதான் உன்கிட்ட சொல்றேன்.

இப்போ எங்கே இருக்கான்?

எக்ஸர்சைஸ் பண்ணப்போறேன்னு மேல போனான். டேய் சீனு.... டேய்... கீழ வா....

இதோ வர்ரேம்மா...

மாடிப்படியில் அவன் நடந்துவரும் சத்தம் கேட்க, நிஷா புடவையை எல்லா இடங்களிலும் ஒருமுறை சரிசெய்துகொண்டு ரெடியாக நின்றாள். வெறும் கட் பனியன் லுங்கியில் வியர்வையோடு, நிஷா நிற்பது தெரியாமல் ஓடிவந்த சீனு, இன்ப அதிர்ச்சியில் அவளையும் அம்மாவையும் பார்க்க.... நிஷா அவனது திரண்ட தோள்களையும் கட்டுமஸ்தான உடல்கட்டையும் ஒரு விநாடி கண்கள் விரிய பார்த்து...பின் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

நிஷாவை பார்த்து உற்சாகமாக ஹாய் அக்கா... என்றான். ஆனால் அவள் முகத்தில் இருந்த முறைப்பைப் பார்த்துவிட்டு, பவ்யமாக அம்மாவிடம் கேட்டான். என்னம்மா... எதுக்கு கூப்பிட்ட?

அக்கா உன்கிட்ட கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு. - ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டு பார்வதி அவள் வேலையை பார்க்கப்போனாள். சீனு வேகமாக உள்ளே சென்று ஒரு சட்டையைப் போட்டுவிட்டு வந்து நின்றான். அவளைப் பார்த்தான்...இல்லை, வைத்த கண் வாங்காமல் அவளை ரசித்துப் பார்த்தான்.

ஆனால் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்த நிஷா அவன் அவளை வாயை பிளந்துகொண்டு ரசிப்பதைப் பார்த்து முறைத்தாள் ( பாவி... எப்படி விழுங்குற மாதிரி பாக்குறான் பார்!!!)

சொல்லுங்கக்கா..... ஏதோ....

வேலைக்கு ட்ரை பண்றதே இல்லையாமே? என்ன இப்படியே இருந்திடலாம்னு நினைச்சுட்டியா? - கடுமையான குரலில் கேட்டாள்.

பண்ணிட்டுதான்க்கா இருக்கேன்...

அப்படியா.... எங்கே சொல்லு பாப்போம்... எங்க எங்கலாம் அப்ளிகேஷன் போட்டிருக்க??.

சீனு இதை எதிர்பார்க்கவில்லை. அவளது முகத்தில் தெரிந்த கடுமையை ரசிக்க முடியாமல் தலைகுனிந்து நின்றான்.

நிஷாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அட்லீஸ்ட் பேப்பராவது பாக்குறியா?? வேகன்சீஸ்.... கிளாஸ்சிஃபைட்ஸ்??? - கிட்டத்தட்ட கத்தினாள்.

சீனு மிரண்டுபோய் எதுவும் பேசாமல் நின்றான். நிஷா இப்படி கோபமாக கத்துவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ச்சே... யாரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும், யாரை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று நினைத்தோமோ அவளிடமே திட்டுவாங்க வைத்துவிட்டாளே இந்த அம்மா. நானே அப்பப்போ காய்கறி வாங்கிக்கொடுக்கிறது, சொல்ற எடத்துக்கெல்லாம் ஓடுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா ஒரு நல்ல பேரு வாங்கி வச்சிருந்தேன்... எல்லாம் போச்சு...

அப்போ என்னதாண்டா நினைச்சிட்டிருக்கே.... இதுக்குத்தான் உன்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்காங்களா??

நல்லா கேளும்மா..... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் பார்வதி

ஏன் பதிலே பேசாம நிக்குற? எந்த வேலைக்கும் ட்ரை பண்ணாம டெய்லி என்னதான் பண்ணுற?

ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன்க்கா - சீனுவின் குரல் கரகாரத்தது.

இதத்தான் சொல்லிட்டிருக்க அப்போலேர்ந்து

இ...இல்ல... சினிமால... ஆர்ட் டிபார்ட்மெண்ட்... ஆர்ட்ஸ்...

சினிமாவெல்லாம் தூக்கிப்போடு. உருப்படுற வழியப் பாரு. உன் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒழுங்கா நேரத்த வீண்பண்ணாம கம்பெனிகளுக்கு அப்ளை பண்ணு.

ம்... சரிக்கா (ச்சே... டக்குன்னு தூக்கிப்போடுன்னு சொல்லிட்டாளே... ஏன் இவ்ளோ கோவப்படுறா?? ச்சே.. )

அடுத்த மாசம் இந்நேரம் ஏதாவது வேலையில இருக்கணும். புரிஞ்சுதா?

சரிக்கா...

ம்... போ

நிஷா அவனைக் கடந்து பார்வதியிடம் போனாள். சரிக்கா... நான் வர்றேன். நிறைய வேலையிருக்கு.

சரிம்மா... நீ கிளம்பு

மிடுக்கான நடையுடன் நிஷா நடந்து போக... அம்மா பார்வதியை அனல் தெறிக்கப் பார்த்தான் சீனு.

சமையல் முடித்துவிட்டு டி‌வி பார்க்கப் பிடிக்காமல் சோபாவில் கண்மூடி சாய்ந்தாள் நிஷா. காலிங் பெல் சத்தம் கேட்டபோது மணியைப் பார்த்தாள். 8.30 காட்டியது. பதட்டத்தோடு எழுந்து கதவை திறக்கப் போனபோது காயத்ரி சொன்னது ஞாபகம் வந்தது.

நானாயிருந்தா துணியில்லாமதாண்டி போயி திறப்பேன்!!! தன்னை அப்படி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள். ச்சீய்... என்று தலையில் தட்டிக்கொண்டே போய் கதவை திறந்தாள்.

நீ கோபப்படுவேண்ணுதான் வேகம் வேகமா வந்தேன்.. என்று சிரித்தார் கண்ணன்.

கடுப்ப கிளப்பாதீங்க. - நிஷா திருப்பிக்கொண்டு போய் காஃபி போட்டாள்.

என் செல்லத்துக்கு கோபமா?? அவளது தாடையைப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான். நிஷா சிரித்தாள். சரி சீக்கிரம் பிரஸ் அப் ஆகிட்டு வாங்க. சாப்பிடலாம்.

ஒகே... ஐ லவ் யு... அவளது கண்ணத்தைக் கிள்ளிவிட்டு கண்ணன் குளிக்கப்போக.. சில நாள்களில் சாப்பிடும்போது அவன் அவளை டீஸ் செய்வதுண்டு. ஸோ நன்றாக இடுப்பையும் மார்பையும் தாராளமாக காட்டிக்கொண்டு அவனுக்கு பரிமாறினாள். கண்ணனோ சாப்பிட்டுவிட்டு ரூமுக்குள் போவதிலேயே குறியாய் இருந்தான். லேப்டாப்பை ஓப்பன் செய்து சில குறிப்புகளை அதில் ஏற்றிவிட்டு தளர்ந்து படுக்கையில் சரிய... பாவம் ரொம்ப டயர்டா வந்திருக்கார் இன்னைக்கு என்று நிஷா சலிப்போடு புடவையை கழட்டி எறிந்துவிட்டு நைட்டிக்கு மாறினாள். ச்சே.. புடவை நல்லாயிருக்கு... அழகா இருக்கேன்னு சுத்தி சுத்தி வருவான்னு பார்த்தா.... எதிர்பாக்குற அன்னைக்கு கவுத்துடுவாரு என்று அவனை முறைத்துக்கொண்டே படுக்க... அப்போது அவளுக்கு சீனு அவளை கண்கள் விரிய பார்த்தது ஞாபகத்தில் வந்து போக... ப்ச்.. கண்டவன்லாம் ரசிக்குறான் என்று அனிச்சையாக உதட்டுக்குள் முணுமுணுத்தாள்.

மறுநாள் காலை - இவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும்போது சீனு அவன் பைக்கிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான். ஆஹா... காலையிலேயே அழகிய தரிசனம். தேவதையை பார்த்தாகிவிட்டது. குட்மார்னிங்க் கா... என்றான்.

பதிலுக்கு குட்மார்னிங்க் சொன்னாள் நிஷா. கொஞ்சம் புன்னகையுடன்.

சின்ஸியரா ட்ரை பண்ணு சீனு

கண்டிப்பாக்கா.... இன்னும் ஒரு மாசத்துல வேலைல சேர்ந்துருவேன்.

சின்ன கம்பெனியாயிருந்தாலும் பரவாயில்ல. ஒரு ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் போதும். அப்புறம் அப்பாகிட்ட சொல்லி நல்ல வேலையா உனக்கு தர சொல்றேன்.

ரொம்ப தேங்க்ஸ்க்கா.

ம்...

நிஷா அவனைப்பார்த்து Bye என்றாள்.

இவன் திரும்பி Bye சொல்லும்போது ஸ்கூட்டி சீறிப் பறந்துகொண்டிருந்தது.

ஸ்கூலிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த நிஷாவைப் பார்த்து ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கண்ணு என்றாள். பரவால்லக்கா... சீனுவை வரச்சொல்லுங்க ஒரு சின்ன வேலையிருக்கு....

இதோ இப்பவே வர சொல்றேன்.

அவளைப் பார்க்கும் ஆவலில் பிரகாசமாக வந்து நின்றான் சீனு.

உட்காருடா... காஃபி டீ ஏதாவது குடிக்கிறியா?

இப்போதான் அம்மா கொடுத்தாங்க. என்ன வேலைன்னு சொன்னீங்கன்னா...

ம்.. சொல்றேன். ஒழுங்கா பிரிபேர் பன்றியா?

பண்றேங்க்கா....

அப்போது கண்ணனிடமிருந்து போன் வந்தது.

என்னடி... என்ன பண்ணிட்டிருக்கே

காஃபி போட்டுட்டிருக்கேன். இந்த ஸாரிய ட்ரை கிளீனிங்க்கொடுக்கணும்னு எத்தன நாளா சொல்லிட்டிருக்கேன். இப்போ பாருங்க நாளைக்கழிச்சு நான் க்ரீன் கலர் ஸாரிலதான் போயாகனும். உங்ககிட்ட சொல்லி சொல்லி ஓஞ்சு போயிட்டேன்

வீட்டுக்கே வந்து எடுத்துக்க சொல்லியிருந்தேனே... சரி சரி நாளன்னைக்கு வேற ஸாரி கட்டு. இல்லைனா தம்பி சீனிவாசன அனுப்பு.

சீனு இங்கதான் இருக்கான். அவனத்தான் அனுப்பப் போறேன். ஓகே பை

இந்த ஸாரிய ட்ரை கிளீனிங்க் கொடுத்திட்டு வந்திடு சீனு.... கையிலிருந்த கவரை அவனிடம் கொடுத்தாள்.

சரிக்கா. கிளம்புறேன்

இரு. காஃபி குடிச்சிட்டு போ. - அவன் பதிலுக்கு காத்திராமல் கிச்சனுக்குள் போனாள்.

முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு நடந்துபோகும் அவள் பின்னழகில் மெய்மறந்தான் சீனு.

அன்று இரவு கண்ணன் வந்ததும் நிஷாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இனிப்பு மல்லிகைப்பூ சகிதம் வந்து அவளுக்கு பூ வைத்துவிட்டான். அய்யோ இன்னைக்கு போயி நைட்டி போட்டிருக்கிறேனே... என்று நினைத்தவள் மலர்ந்த முகத்துடன் உள்ளே போய் ப்ராவை கழட்டிப்போட்டுவிட்டு வந்தாள். அந்த ஸடின் நைட்டியில் அவள் அங்கங்கள் அம்சமாகத் தெரிந்தன. கண்ணனுக்கு அவள் மார்புகள் தூக்கிக்கொண்டு நிற்பது பிடிக்கும். சீக்கிரம் மூடாகிவிடுவான்.

குளிச்சிட்டு வாங்க... என்று அவள் முலைகள் குலுங்க நடக்க.... அவளை காமப்பார்வை பார்த்துக்கொண்டே குளிக்கப்போனான் கண்ணன். அப்போது காலிங்க்பெல் அடிக்க.... யாராயிருக்கும் என்று கதவை திறந்தாள். சீனு நின்றுகொண்டிருந்தான்.

மலர்ந்த முகத்துக்கு கீழே மதர்த்து நின்ற அவள் மாரழகை பார்த்து மை காட்... என்று கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கொண்டு அவள் கண்களைப் பார்த்தான் சீனு.

அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க... என்று ஒரு ஆப்பிள் பழ கவரை நீட்டினான். சுவையான பழங்கள் என்றால் அவர்கள் அவ்வப்போது பரிமாறிக்கொள்வது வழக்கம்.

மார்பைப் பாக்கிறானே என்று கூந்தலை இழுத்து முன்னால் போட்டாள் நிஷா. மல்லிகைப்பூ கூந்தலில் அவள் மிகவும் அழகாக தெரிய.... அவளை ரசித்துப் பார்த்தவாறே வர்றேன்கா என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தான் சீனு.

அவள் முகத்தில் இருந்த களையும் மகிழ்ச்சியும் சீனுவுக்குப் பிடித்திருந்தது. என் தேவதை எவ்வளவு அழகு!!! என்று நினைத்துக்கொண்டான்.

கண்ணனுக்காக அணிந்த டைட்டான வழுவழு நைட்டியில் தன் முயல் குட்டிகளை இவனும் பார்த்து ரசித்துவிட்டானே என்று அவள் முகம் சிவந்தது.

குளித்துவிட்டு வந்த கையோடு கண்ணன் அவளை இழுத்து கட்டியணைக்க... ஐயோ விடுங்க சாப்பிட்டுட்டு பண்ணலாம்.... என்று நிஷா சிணுங்க... உன்னதாண்டி சாப்பிடப்போறேன்.... என்று அவன் இறுக்கி அணைக்க... ரூமுக்குள்ள போகலாம்... என்று கிசுகிசுத்தாள் அவள்.

தன்னை நன்றாகப் போட்டுக் கசக்கிப் பிழிந்தால் நல்லாயிருக்கும் என்று நிஷா அவனையே பார்க்க, கண்ணனோ அவளுக்கு வலிக்காமல் அங்கங்கே ஒத்தடம் கொடுத்ததுபோல் முத்தம்கொடுத்துவிட்டு, முலைகளை இதமாக சப்பிவிட்டு, அவனுக்குப் பிடித்தமான அவளது பின்னழகில் முகம் புதைத்து, பிசைந்து முத்தம் கொடுத்துவிட்டு, காண்டத்தை எடுத்து மாட்ட....அந்த இரவு ஓரளவு திருப்தியாகதான் கழிந்தது நிஷாவுக்கு. எல்லாம் முடித்துவிட்டு தூங்கும் கணவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தூங்கினாள் நிஷா.

ஆனால் பக்கத்து வீட்டில்.. சீனுவின் கனவில், மீண்டும் மீண்டும் நிஷா கதவைத் திறந்துகொண்டிருந்தாள்

மறுநாள் - நிஷாவை வம்புக்கிழுப்போம் என்று, காயத்ரி குறும்பாகக் கேட்டாள். என்னடி..... நைட்டெல்லாம் செம பஜனையா...

ச்சீ... நீ வேற.... சும்மா இரேண்டி. சரி..நேத்து லீவு எடுத்திருந்தியே....எப்படி போச்சு நேற்று?

டயர்டுடி. டே டைம்ல ஷாப்பிங் மால் போயிட்டு வந்தோம். மொக்கையா போச்சு

ஏன்?

லாஸ்ட் வீக் போனப்போ ஒரு சூப்பரான பையன் ஸ்டார்ட்டிங் டூ எண்ட் என் பின்னாடியே திரிஞ்சான் தெரியுமா...

என்னடி சொல்ற? உன் வீட்டுக்காரர் கூடதானே போயிருப்பே?

ம்க்கும். அவர்கூட பாத்ரூம் போறேன்னு விலகிப் போனாரு. இவன் என்னவிட்டு போகவே இல்ல. கல்யாணமாயிட்டாலும் நமக்கு ஒரு கிரேஸ் இருக்கதாண்டி செய்யுது. அப்புறம் எப்படியிருக்கான் அந்தப் பையன்.

யாரு?

அதான் உன்னையே சைட்டடிச்சிட்டிருப்பானே அவன்?