Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
பாகம் 02: ஜமீன் மாமா வியந்த மாற்றுத்திட்டம்
ஜமீன் மாமாவை அணுகி நான் வந்த விவரத்தைச் சொல்ல என்னைச் சற்றும் எதிர்பாராமல் அவர் அதிர்ந்தார். பின் மெல்ல அவரிடமிருந்து விவரங்களைச் சேகரிக்க அதுவும் பொருந்தியது. என் கையிலிருந்த கோப்புகளும் பூவனூர் விவகாரங்களைச் சார்ந்ததே.
ஜமீன் மாமா வெளிப்படையாக என்னை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். பின்னர் நான் அவரைப் பல விஷயங்களை எடுத்துச் சொல்லிச் சம்மதிக்க வைத்து அதே சமயம் நான் தலையிடுவதைத் தற்போதைக்கு என் சிற்றப்பாவிற்குத் தெரிவிக்க வேண்டாமெனக் கூறி, சரியான நேரத்தில் நான் சொல்லி விடுவதாக உறுதியளித்தேன்.
பின் நான் அறிந்த விஷயங்களைத் தேவையான இடத்தில் தேவையான அளவு மட்டும் வெளிப்படுத்த அவர் அசந்து எனக்கு முழு விவரத்தையும் கூறினார். நான் சற்றே யோசிக்க; அந்தச் சமயம் சற்றுத் தூரத்தில் என் சிற்றப்பாவும் மற்றுமொரு சற்றே வயது கூடிய தலையில் சிறிய காயத்துடன்; புரிந்தது அவர் தாஸில்தார் பத்மநாபன்.
நான் சட்டென மாமாவிடம், "ஏன் மாமா இப்படி அளவுக்கு அதிகமா கோவப்படுறீங்க? அந்தத் தாஸில்தார் மண்டைல உங்க அடி பலமா பட்டு ஏடாகூடமா ஏதாவது ஆயிருந்தால் உங்கள நம்பி இருக்குற குடும்பத்தின் கதி என்ன ஆகும்?" எனக் கேள்வி எழுப்ப மேலும் அதிர்ந்தார்.
அதற்குள் அவர்கள் இருவரும் நெருங்க நான் மறைய வேண்டிய அவசியத்தை உணர்த்தித் தகுந்த இடம் பிடித்து ஒளிந்து மறைந்து அவர்கள் நடவடிக்கையை நோட்டமிட்டேன். அந்தத் தாஸிதார் நான் கொண்டுவந்த கோப்புகளைச் சற்று ஆராய்ந்துவிட்டுப் பின்னர்ச் சற்றே யோசித்துவிட்டு ஏதோ சில கருத்துகளைச் சொல்லிவிட்டுச் சென்றார்.
அதைத்தொடர்ந்து என் சிற்றப்பாவும் மாமாவிடம் ஏதோ பேசிவிட்டுச் சென்றார். அதன் பின் வெளிவந்த நான் மாமாவிடம் கேட்டு முழு விவரத்தையும் அறிந்தேன். பின்னர் நிதானமாக யோசித்துத் திட்டமிட்டேன்.
"சரி மாமா உங்க திட்டம் என்ன?"
"அட இதுக்கெல்லாம் அவ்ளோ யோசிக்க வேண்டியதில்ல மாப்ள; என்னால தாமுக்கு (என் சித்தப்பா) எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. நான் அந்தப் பூவனூரானை தூக்கினால் எல்லாம் முடிஞ்சுது. நீ ஒன்றும் கவலைப்படாத மாப்ள இதெல்லாம் எங்களுக்குச் சகஜம்; நீ சின்னப்பையன் நல்லா ஒழுக்கமா வளர்ந்த பையன் உனக்கு இதெல்லாம் புரியாது."
நான் குறுக்கிட்டு, "சரி அதன் பின் விளைவுகள்? அதாவது கொலை செய்து தண்டனையிலிருந்து தப்பித்தாலும் நீங்க மனம் நிம்மதியா வாழ முடியுமா? அப்படியே நீங்க வாழ்ந்தாலும் எங்க சித்தப்பா இதையெல்லாம் எப்படி எடுத்துக்குவார்னு தெரியல! நிச்சயமா உங்களுக்கு அவரால் வந்த சங்கடத்தை நினைத்து நிம்மதியா இருக்க மாட்டார்.
அடுத்து உங்க குடும்பத்துல பிற்காலத்தில் யாருக்காவது தெரிந்தால்!... நிச்சயமா நான் பழகின மூனு நாள்ல அத்தையும் சரி சியாமளாவும் சரி மனசு ஒடுஞ்சிடுவாங்க. சரி விடுங்க நான் ஒரு யோசனை சொன்னால் கேப்பீங்களா?"
"அட இன்னா மாப்ள இப்படிக் கேக்குற; சின்னப் பையன்னாலும் இவ்ளோ விவராமா யோசிக்கிற உன் யோசனைய கேட்காமல்; அட தைரியமா தயங்காமல் சொல்லுப்பா."
"ரெண்டு காரியங்கள் நடக்கனும். ஒன்று அந்தப் பூவனூராருக்கு தெரிந்த உங்க ரகசியம் சக்தியில்லாத விஷயமாக்கனும். அதுக்கு நல்ல வழி அந்த ஆள் கோபத்தில் 'என் சித்தப்பா வீட்டை எரிச்சுடுவேன்னு' உங்க எல்லார் முன்னிலையிலும் உளறின வார்த்தையை நமக்குச் சாதகமா பயன்படுத்தி அதை நாமே செய்து அந்தப்பழியை அந்த ஆள் மேல போட்டுத் தப்பிக்கனும். அதுல முக்கியமா அந்த ரகசியங்கள் இருக்கிற கோப்புகளை எரித்து அழிச்சிடனும். அத்தோட அந்தப் பூவனூர் கிராம அதிகாரி உங்களை மிரட்ட முடியாது.
அடுத்து அந்த ஆளைச் சக்தி இல்லாமல் செய்யனும் அதுக்கு நம்பப் பெரியவர்கள் சொன்ன மாதிரி 'முள்ளை முள்ளாலேயே எடுக்கவேண்டும்' இதுல முக்கியமா துரோகம் செய்தது அந்தப் பொன்னு ஸ்ரீஷா. வேசித்தனத்தோட நிறுத்திக்காம ஆதாயத்துக்காக உங்களுக்குத் துரோகம் செய்திருக்கா. அவளை வைத்தே நாம அந்தப் பூவனூர் கிராம அதிகாரியை மடக்கி வழிக்குக் கொண்டு வரனும்.
நீங்க சொன்ன விவரத்துல அந்தப் பூவனூரார் மனைவியும் மாமனாரும் மிக நேர்மையான நல்லவங்க, அதுக்கும் மேல பெரிய பணக்கார, ரொம்ப சக்தி உள்ள ஆளுன்னு வேற சொல்றீங்க. அதனால இந்தப் பூவனூரார், தான் செய்யும் திருட்டுத்தனங்களை அவர் மனைவி/மாமனாருக்கு தெரியாம செய்துகிட்டிருக்குறார்.
அதனால என் திட்டம் அந்தப் பூவனூரார் உங்க ரகசியத்தை ஒடச்சி உங்களை மாட்டிவிடரதுக்கு முன்னே நீங்க முந்திக்கிட்டு அந்தப் பூவனூரார் செய்யும் திருட்டுத்தனங்களை அவர் மனைவி/மாமனாருக்குத் தெரியப்படுத்தி அந்தப் பூவனூராரை சக்தியில்லாமல் பல் பிடுங்கிய பாம்பாக்குறது ரொம்பச் சிறந்து.
இதனால நமக்குப் பல அனுகூலங்கள்; முதல்ல ஒரு கொலை செய்யாமல் நம்ம வேலைய இன்னும் சிறப்பா முடிச்சிக்கலாம். இரண்டாவது அந்தப் பூவனூராரோடைய மனைவி/மாமனாரோட நல்ல மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு நிரந்தரமாகக் கிடைக்கும்.
அவர் பெரிய சக்தின்னு நீங்களே சொல்றீங்க. நாம இப்படிச் செய்தால் அவர் உங்களுக்கு நன்றி கடமை/கடன் பட்டவராகிடுவார்: அப்படிச் செய்யாம உங்க திட்டப்படி அந்தப் பூவனூராரை கொலை செய்ய அது எப்படியும் அந்தப் பெரிய மனிதருக்குத் தெரிய வரும். அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
அதனால அதையெல்லாம் நல்ல விதமாக மாத்திக்குறது என் யோசனை. இதுக்கும் மேல நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த ஶ்ரீஷா விஷயத்தில் இன்னும் யார் யாரெல்லாம் சிக்கி இருக்குறீங்களோ தெரியல. என் யூகம் சரின்னா இந்தப் பத்மநாபன் (தாஸில்தார்) ஆட்சியரும் (collector) எனப் பலர்,"
மாமா முகம் ஆச்சரிய அதிர்ச்சியை வெளிப்படுத்திட என்னை உடனடியாகப் பேசவிடாமல் தடுத்து சற்றே சுற்றும் முற்றும் பார்த்து; என்னைச் சற்று பொறுக்கும் படி சைகை செய்து விட்டு வெளியில் சென்று கந்தனை அழைத்து ஏதோ உத்தரவுகளிட்டார்.
பின்னர் என்னை அழைத்துக் கொண்டு மற்றொரு அறைக்குச் சென்று, "சரி உனக்கு யார் சொன்னது கலக்டர் அந்தப் பொன்னைச் செய்தது?"
"அதுதான் நீங்க இப்ப சொல்றீங்களே; மாமா நான் என் யூகம்னுதான் சொன்னேன். அதுக்கு முதல் காரணம் நீங்க செய்ற ஒவ்வொரு காரியமும். முதல்ல இந்த அலுவலகமே ஒரு அத்தாட்சி, இது இந்த வளாகத்தில் ஒரு மூலைல ஒதுக்குப்புறத்தில் இருக்கு.
இந்த மறைவான இடத்துக்குத் தாஸில்தார் தனியா ஒரு வருவாய் ஆய்வாளரோட ரகசியமா வந்து ரகசியமா நடந்துக்குறது. சரி மாமா நேரம் அதிகமில்லை; முதல்ல உங்கள் முடிவைச் சொல்லுங்கள், நான் இதுல தலையிட்டு என் திட்டப்படி செய்ய உங்களொட அனுமதி மற்றும் முழுச்சம்மதம் வேணும்."
"அட! இதென்ன கூத்து நான் எவ்ளோ பெரிய முட்டாள் தனத்தைச் செய்ய இருந்தேன்; அதுலேர்ந்து என்னைக் காப்பாத்தி இருக்கே. அதுக்குமேல இவ்ளோ சீக்கிறத்துல எவ்ளோ விஷயத்தைத் தெரிந்து கடகடன்னு இவ்ளோ அருமையா முடிவெடுக்குற.
உன்னை என்னன்னு சொல்றது ஏதோ நாங்க செய்த அதிர்ஷ்டம் கடவுள் உன்னை அனுப்பி வெச்சிருக்குறார். நான் தான் இப்ப உன்னைக் கெஞ்சிக்கேக்கனும் எங்களுக்கு உதவி செய்ப்பான்னு. நீ என்னடான்னா என்னை அனுமதி கேக்குற. அப்பனே (என் கைகளைப் பிடித்து) உன்னை இங்க கொண்டு வந்து சேர்த்த கடவுளுக்கு நன்றி சொல்லி உன்னைக் கெஞ்சி."
நான் கைகளை உதறிவிட்டு அதிரடியாக அவர் வாயைப்பொத்தி, "ஐயோ மாமா இதென்ன கொடுமை ஒரு ஜமீன்தார் செய்ற வேலையா இது. நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தால்!" சொல்லி மண்டியிட்டு அவர் காலில் விழப்போக,
அவர் தடுத்து, "ஐயோ மாப்ள உன்னைப் புள்ளையா பெத்தவங்க குடுத்து வெச்சவங்க; நீ என்னை மாமான்னு கூப்பிடுறதே என் பாக்கியம். சரி இப்ப சொல்றேன் உன் இஷ்டத்துக்கு என்ன வேணுமோ செய்; என் முழு ஆதரவும் சம்மதமும் உனக்கு எப்பவும் இருக்கு. நீ உன் சித்தப்பாவைப் பத்தி கவலைப்படாதே அவனை நான் பாத்துக்குறேன்."
"பராவாயில்லை மாமா; இப்போதைக்கு அவருக்குத் தெரியாம உங்கள் உதவியோட நாம் சுலபமா இந்தக் காரியத்தை நல்லா முடிக்கலாம். நேரம் அதிகமில்லை. முதல்ல அந்த ஸ்ரீஷாவை வழிக்குக் கொண்டுவரக் கொஞ்சம் பணம் செலவழிக்கனும்."
"அட பணம் என்ன பணம் எவ்ளோ வேணும்: கவலையே படாத; லட்ச லட்சமா செலவானாலும் தயார். அதுக்கும் மேல போலீஸ் உதவி வேணும்னாலும்."
நான் குறுக்கிட்டு, "கலக்டர்/தாஸில்தாருக்குத் தெரிய வேண்டாம் தேவைப்பட்டா மட்டும் சொல்லிக்கலாம். அவங்களுக்கு வேலைய முடிச்சிட்டு சரியான சந்தர்ப்பத்தில் சொல்லிக்கலாம். அதை நான் அப்புறம் சொல்றேன்; இப்போதைக்கு முடியும்னா ஐம்பதாயிரம் போதும், அப்புறம் எனக்கு இந்த வண்டி அல்லது இது மாதிரி வண்டி கிடைக்குமா?"
"இது வேண்டாம் மாப்ள உன்னால முடியாது நான் வேற வண்டியை ஏற்பாடு செய்றேன்."
"அது ஒண்ணும் சிரமமில்லை மாமா; இந்த வண்டி எனக்கு நல்ல பரிச்சயமானதுதான், பத்திரமா கையாள முடியும். இது உங்க வண்டின்னு எனக்குத் தெரியும்; இதே வண்டி வீட்ல நீங்க வெச்சிருக்குறது நான் ரெண்டு மூனு தரம் எடுத்த விதத்தை வேனும்னா அத்தையையும் உங்க பொன்னுங்களையும் கேட்டு தெரிஞ்சிக்கோங்க."
"அப்படியா அட என்னால நம்பவே முடியல நீ அந்த வண்டிய ஸ்டேன்ட விட்டு எடுக்க முடியுமா?"
"சரி வாங்க நாம ஒரு காப்பிக் குடிச்சிகிட்டே பேசலாம். வண்டிச் சாவியக் குடுங்க." வாங்கி வண்டியை எடுக்க வாயைப் பிளந்தார்.
"அது இன்னா வேலை மாப்ள ஸ்டேன்ட எடுக்காம உக்காந்துட்டு அப்படியே கியரப் (Gear) போட்டு; ஹொ ஹோ புரியுது புரியுது; வண்டி எஞ்சின் சக்திய வெச்சியே வண்டிய ஸ்டேன்ட விட்டு தல்லிட்டீங்க. அடப்பிரமாதம் மாப்ள; இந்த வித்தை தெரியாம இத்தனை வருஷமா மாங்குமாங்குன்னு மாடாட்டம் என் சக்திய வீணக்கிக்கிட்டிருக்கேன். மாப்ள உங்கிட்ட நிறையக் கத்துக்கனும்."
அதற்குள் காப்பி அருந்தும் இடத்தை நெருங்கி விட வண்டியை நிறுத்த சற்றே சரியான இடம் கவனிக்க அங்குச் சிறிதே ஏற்றமாக இருந்த இடத்தில் தேர்ந்தெடுத்து வண்டியைச் செலுத்தி சற்று நிறுத்தி அவரை இறங்கவிட்டேன்.
"அமாம் மாப்ள இப்போ... எப்படி?"
நான் அதற்குள் அந்த வண்டியை அந்தச் சருக்கத்தில் பின் நோக்கி உருளவிட அவர் சட்டெனப் பாய்ந்து உதவ நினைக்க நான் அதற்குள் என் காலால் அந்த ஸ்டேன்டை அழுத்த வண்டி ஸ்டேன்டில் நிற்க நான் மிக மிடுக்காக இறங்க; வியப்பின் உச்சத்தில் வாயடைத்து நின்றார்.
"டேய் மாப்ள (சொல்லி என்னை இரு கைகளால் சிறு பிள்ளையைத் தூக்குவதைப் போல அனாவசியமாகத் தூக்கிப் பாராட்டி விட்டு) நீ சாதாரண ஆளில்ல மாகா வித்தைக்காரன். நீ ஏரோப்லனையே (Aeroplane) அனாவசியமா ஓட்டுவ; சபாஷ் இனிமெல நானும் இப்படிதான் செய்வேன்."
"வேண்டாம் மாமா நீங்க இப்படிச் செய்யக்கூடாது; நீங்க உங்க பாணியில செய்றாமாதிரியே செய்தாத்தான், கம்பீரமா ஜமீந்தார்னா; சாதாரணமான ஆள் இல்லைன்னு தெரியும். யாரும் இல்லாதப்போ உங்க சக்திய வீணக்காம இப்படிச் செய்ங்க. ஆனா மத்தவங்க முன்னாடி உங்க உடம்புள தெம்பு இருக்குற வரைக்கும் கம்பீரமாகத்தான் இருக்கனும்."
"அட சும்மா சொல்லக்கூடாது மாப்ள எல்லாத்தையும் நல்லா யோசிக்கிற. உன்கிட்ட இருந்து நிறையக் கத்துக்கனும்."
நீண்ட நேரம் பேசினோம்; பல விஷயங்களில் மாமா என்னைப் புகழ்ந்து வியந்து இறுதியில் நான் ஏதோ நிகழ்காலச் சூப்பர் மேன் அல்லது இதிகாசங்களில் வரும் மகாபுருஷன் எனத் திட்டவட்டமாக நம்பினார்.
நாங்கள் இருவரும் மீண்டும் அந்த அலுவலகத்தை அடையக் கந்தன் வந்து எங்கள் இருவரையும் வணங்கி பின் என்னை நோக்கி, "ஐயா குமார் உங்களுக்குப் போன் செய்தான். அந்தச் சிறுக்கி இன்னமும் விடுதியிலேதான் இருக்குறான்னு சொல்லச் சொன்னான்."
"யாருடா அது சிறுக்கி?"
தொடரும்