பாகம் 24: மனம் திறந்தாள் கயல்விழி

Story Info
பானு பெற்ற தாயுடன் வளராமல் கிருஷ்ணரைப் போல்
1k words
0
8
00

Part 83 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 24: மனம் திறந்தாள் கயல்விழி

தனு மாமா மாதத்துக்கு ஒரு முறை பானுவை அவளோட அம்மாவைப் பார்க்கக் கூட்டிக்கிட்டு இங்கே பக்கத்தில் அதாவது உங்கள் ஊருக்கு வெளிப்புறமா இருக்குற சின்னக் கிராமத்துக்கு வருவது வழக்கம். இந்த முறை அவருக்கு அதிக வேலை இருப்பதால் பானுவைக் கூட்டிப் போக உதவ முடியுமான்னு என்னைக் கேட்க நானும் ஒத்துக்கிட்டு நேற்று மத்தியானம் இங்கே வந்தேன்.

அது ஒரு பெரிய உல்லாசமாகத் தங்கும் வசதிக்காகக் கட்டப்பட்ட வீடு போல இருக்கு. நாங்கள் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்தில மாமா தொலைப்பேசியில் பேசினார்; அப்போதான் அவர் இந்தக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருப்பதைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

அதுக்கும் மேல அது ஆண்மைக்கு மதுவுடன் மாதுவையும் விருந்தளிக்கும் வகையான கொண்டாட்டம்னு தெரிந்தது அதனால் பானுவுக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

அதுக்குப் பிறகு நான் பானுவை தனிமையில் சந்திக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. எல்லாம் புரியாத புதிராகத் தொடர்ந்தது கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கும் போது இந்த மல்லிகா அத்தை வந்து சேர்ந்தாங்க.

அவுங்க வருகை சரியாகக் கொண்டாட்டத்தின் முடிக்குறா மாதிரி மேற்பாடு அல்லது திட்டமிட்டிருப்பது தெரிந்தது. அதாவது என்னுடன் காமக்கூத்தடித்த பெண்கள் இந்த மல்லிகா அத்தை வருவதை தூரத்தில் கண்கானித்ததும் உடனே திடீர்னு விரைந்து தூங்கிட்டாங்க.

அதைத் தொடர்ந்து நான் பானுவையும் இந்த மல்லிகா அத்தையையும் வேவு பார்த்ததில் பல புதிர்கள் வெளிப்பட்டன. பானுவுக்குத் தூக்க மருந்து கொடுத்து நல்லா தூங்க வெச்சிருந்தாங்க. மல்லிகா அத்தை தூங்கும் பானுவைக் கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு அன்போடு அரவணைத்துத் தூங்க ஆரம்பித்தார்கள்.

அப்புறம் வெள்ளி முலைக்கும் நேரத்தில் இந்த வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க. நான் இன்றைக்கு காலையில் பானுவிடம் பேசியதில் சில புதிர்களுக்கு விடை கிடைத்தது.

அதாவது பானு இப்படி அந்த வீட்டில் இரவில் ஆழ்ந்து உறங்குவது தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருதுன்னு தெரிந்தது. மேலும் பானு இந்த மல்லிகா அத்தையை சந்தித்தே இல்லை. சற்றே நிறுத்தி கயல்விழியை நோக்க

"என்ன தம்பி இது ஏதோ சினிமால நடக்கிற மாதிரி சொல்றீங்க; இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமான்னு ஆச்சரியமா இருக்கு."

"அடடா எனக்கு அதிர்ஷ்டமில்லையே!

"என்ன தம்பி சொல்றீங்க?"

விரக்தியின் பெருமூச்சுடன், "ஹூம் உங்களிடமிருந்து ஏதாவது தகவல் துப்பு துலங்கும்னு எதிர் பார்த்தேன் அது இல்லைன்னு ஆயிடுச்சி அதைத்தான் அப்படிச் சொன்னேன். சரி பரவாயில்லை; இப்படி யாரும் தெரியாத வெளியூரில் என்ன செய்யப் போறேன்னு குழம்பிக்கிட்டிருந்தேன் ஆனால் இப்படி ஒரு (கயல்விழியைச் சுட்டி) தேவதையை அனுப்பி வைத்திருக்கிறாரே கடவுள் இது என் அதிர்ஷ்டம் தானே."

உடனே என்னை அள்ளி அணைத்து முத்தமிட்டவர் சற்றே சோகப் பெருமூச்சுடன், "அதுதான் ஒன்றும் உபயோகமில்லாமல் போச்சே. ஆனால் உன் நல்ல மனசுக்கு ஆண்டவன் துணை இருந்து உதவுவார்; நீ கவலையே படாதே! சட்டென ஏதோ யோசனை உதிக்க, "எங்க அப்பாவைக் கேட்டுப்பார்க்கலாமே?"

சற்றே யோசித்த நான், "இப்பொதைக்கு அந்த அணுகு முறை தவிர்ப்பது நல்லது; ஆனால் தேவைப்பட்டால் அதைக் கடைசி வழியாக உபயோகிப்போம்."

"ஏன் தம்பி என் அப்பாவை தவிர்க்குறீங்க; என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?"

"பல காரணங்கள்; முதலில் இது அவரைப் போன்ற பெரிய மனிதரைத் தொந்தரவு செய்து தீர்க்கப்பட வேண்டிய அளவு முக்கியமில்லை. அடுத்தது அவர் மிகப் புத்திக் கூர்மையான மிகவும் எச்சரிக்கையானவர், அப்படியென்றால் அவர் கண்ணிலிருந்து இந்த விஷயம் தப்பி இருக்காது; அப்படியென்றால் அவர் அனுமதித்ததின் காரணம் தெரியாமல் அவரை அணுகுவது சரியில்லை.

ஒரு வேலை அவருக்குத் தெரியாமல் இருந்து நாம் தெரிவிக்க அவர் அதை எப்படிக் கையாள்வார் எனத் தெரியாது. அதாவது இது நடப்பது அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் எனவே அவர் தலையிடும் பட்சத்தில் அது அவர் முடிவின் படியே நடக்கும், அது எந்த வித குழப்பங்களை உண்டாக்கும் என யோசித்தே முடிவெடுக்க வேண்டும்."

"அப்பப்பா தம்பி நீ நிறைய யோசிக்கிற; சரி இப்போது அடுத்து என்ன செய்வதாகத் திட்டம்?"

சிறிது யோசித்து, "ஒரு தாய் தன் குழந்தைக்குத் தெரியாமல் மறைந்து வாழ்ந்து அந்தக் குழந்தையைப் பாதுகாப்பது என்பது மிகப் பெரிய சோகமானது/சிரமமானது. அப்படியொரு நிலைக்கு ஏன் அந்த மல்லிகா தள்ளப்பட்டாங்கன்னு கண்டுபிடிக்கனும். அடுத்து அதை எப்படித் தீர்ப்பதுன்னு யோசிக்கனும்."

கயல்விழி, "அதுதான் எப்படி?... இருங்கள் இருங்கள்; இப்போது என்ன சொன்னீங்க பானு மல்லிகா அக்காவோட மகளா? உண்மையாவா?"

"நடக்கும் எல்லாச் செயல்களும் சேர்த்துப் பார்த்தாள் அப்படித்தான் தோனுது. அதை எப்படியும் கண்டுபிடிக்கனும்; கண்டுபிடித்திடலாம்."

"அதுதான் எப்படி?

நான், "மல்லிகா அத்தைக்கு மறைமுகமாகத் தெரியப்படுத்தி அவுங்களுக்கு நாம உதவி செய்யத் தயாரா இருக்கோம்னு முழு நம்பிக்கை ஏற்படுத்தனும். ஏன்னா இதுல அவுங்க முழு ஒத்துழைப்பு மிக அவசியம். அவுங்க ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது."

"அதெல்லாம் எனக்குப் புரியுது; அதாவது நீ என்ன செய்யனும்னு நினைப்பது புரியுது. அதை அப்படிச் செய்யத் திட்டம்; நான் என்ன செய்யனும்; இதெல்லாம் தான் நான் கேக்குறது."

நான், "ஓஹ் அதுவா கவலைப்படாதீங்க முதல் வேலையைச் செய்தாச்சி. அடுத்து மல்லிகா அத்தைக்குக் கொஞ்சம் சிந்திக்க அவகாசம் தேவைன்னா எடுத்துக்கட்டும். அடுத்து அவுங்க நம்மை அணுகட்டும் அப்புறம் நாம் கலந்து பேசலாம்."

"அட நீ மல்லிகா அக்கா கிட்ட சொல்லிட்டியா? எப்போ சொன்னேன்னு எனக்குச் சொல்லவே இல்லையே."

"இப்போதான் உங்கள் கிட்ட சொல்லுறப்போதான்." நான் சொல்வதை நீண்ட நேரமாக மறைந்து நின்றவாறு மல்லிகா ஒட்டுக்கேட்பதைக் கவனித்து விட்டேன்.

"அடப் போப்பா எனக்கு ஒண்ணும் புரியலை; சரி நான் என்ன செய்யனும்னு மட்டும் சொல்லு."

"நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க. நான் சொல்ல வேண்டிய விஷயம் சேரவேண்டியவர்களுக்கு ரொம்பத்தெளிவா போய்ச் சேர்ந்துடுச்சி. அதனால் அவுங்க பதிலுக்காகக் காத்திருப்போம். இப்போதைக்கு நாம செய்ய வேண்டியது அதுதான்; நான் இன்றைக்கும் இங்கேயே தங்கப்போறேன் அதனால் நாளைக்குள்ள அவுங்க முடிவைச் சொன்னால் போதும்."

அளவுக்கு அதிகமான சந்தோஷம் பொங்க இன்ப அதிர்ச்சியில் என்னை இறுக்கி அணைத்து, "அப்பாடா நான் எப்படிக் கேக்குறதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். என் மனசில் நினைத்ததை உடனே சொல்லிட்டே. இன்றைக்கு மட்டுமில்லை இன்னும் இரண்டு மூன்று நாளைக்கு என் கூட இருந்தால் எனக்கு நிறையச் சந்தோஷமா இருக்கும். சரின்னு சொல்லு தம்பி."

'அடடா நான் இங்கேன்னு' சொன்னது பானு வீட்டை ஆனால் கயல்விழி அவர் வீட்டைக் குறிப்பிடுவதாகத் தவறாக அர்த்தம் கொண்டு இந்த அளவுக்குச் சந்தோஷப்பட்டது என் நெஞ்சைத் தொட்டது. அவருக்கு எப்படிச் சொல்வதெனக் குழம்பியவன் மெல்ல.

"உங்கள் கூட இருக்கிறது நிறையச் சந்தோஷமா இருக்கு ஆனால் நான் செய்ய வேண்டிய வேலை... (சற்றே யோசித்து) சரி நான் இப்போ போயி மதிய உணவை முடிச்சிக்கிட்டு அப்புறம் சாயங்காலமா வந்து கொஞ்ச நேரம் இருக்கிறேன்."

கயல்விழி, "ஹாங் அதெல்லாம் முடியாது இப்போ மத்தியானம் சாதாரணச் சாப்பாடு என் கூடத்தான் அப்புறம் உனக்கு இன்றைக்கு இரவு விருந்து இங்கேதான் நல்லா திருப்தியா சாப்பிடனும். இதிலே எந்த மாற்றமும் செய்யமுடியாது." அன்போடு கட்டாயப்படுத்தினார்.

"உங்கள் அன்பான உபசரிப்புக்கு மிக்க நன்றி! ஆனால் அங்கே பானு எனக்காகச் சாப்பிடாமல் கவலையோடு காத்துக்கிட்டிருப்பாங்க. நான் உடனே போகனும்."

"அட ஆம்பளை வெளியே போனால் ஏதாவது வேலையா நேரம் ஆகும்னு பொன்னுங்களுக்குத் தெரியும்ப்பா. அதனால் அந்தப்பொன்னு அப்படி ஒண்ணும் காத்துக்கிட்டிருக்க மாட்டாள். நீ இங்கே சாப்பிட்டுட்டு மெதுவா போயி பானுவை கூப்பிட்டுகிட்டு வாங்க."

சற்றே யோசித்த பின்னர் அக்கா நான் எதற்கும் ஒரு வார்த்தை அவுங்க கிட்ட அனுமதி வாங்கிட்டுச் செய்றதுதான் நல்லது." சொல்லி மாமாவைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பானுவுடன் சேர்ந்து கயல்விழி வீட்டில் இரவு விருந்து உண்ண அனுமதி பெற்றேன்.

"சரிசரி இப்போ நாம் சாப்பிடலாமா?"

"இன்னொன்னு (மற்றொரு தொலைப்பேசி வழி அனுமதி என) ப்லீஸ்." கயல்விழி சம்மதமாய்ப் புன்னகைக்க நான் பானுவைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, "ஹலோ பானு நான் தான்... (மறு முனையில் பல கேள்விகளைத் தொடுக்க) இரு இரு இரு கொஞ்சம் பொறு.

நான் வந்த இடத்தில் எதிர் பாராம ஒரு அக்காயைச் சந்தித்தேன். உடனே இன்னிக்கி இரவு அவுங்க வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்துட்டாங்க. நீயும் இன்னிக்கி இரவு என் கூட விருந்துக்கு வரியா?" (அவள் சம்மதிக்க; அதைத்தொடர்ந்து) இப்போது மதிய சாப்பாடு அவுங்க வீட்டில் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துறாங்க அதனால நீ எனக்காகக் காத்திருக்காமல் சாப்பிடு நான் சாயங்காலம் வந்து உன்னைக் கூட்டிக்கிட்டு போகிறேன்."

கயல்விழி, "ஹும் நல்ல பண்பாடுதான்; நல்ல வளர்ப்புதான்."

நான், "முடிந்தால் மல்லிகா அத்தையையும் நம்ம கூடச் சாப்பிடக் கூப்பிடலாமா?"

"ஓஹ் செய்யலாமே; நான் கூப்பிட்டுப்பார்க்குறேன்." சொல்லி அவர் திரும்பிய சில வினாடிகளில் மல்லிகா எதிரே வர

"அட நான் உன்னைச் சாப்பிடக்,"

மல்லிகா குறுக்கிட்டு, "நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்; நல்லது நாம் சாப்பிடலாம்." உடனடியாகப் பேச்சைக் குறைத்து உணவு உண்ண ஆரம்பித்தோம்.

மல்லிகா, "தம்பி நீங்க பானுவோடு எத்தனை நாள் பழக்கம்?"

நான், "ஒரு வாரம் ஆகுதும்மா."

மல்லிகா, "அதுக்குள்ள அவள் மனசைக் கெடுத்துட்டீங்க."

நான், "ஆமாம் அவ்ளோ குழந்தையா இருக்காங்க. ரொம்ப அப்பாவியா வளர்ந்திருக்காங்க." நான் சற்றும் தயங்காமல் ஆமென ஒத்துக் கொண்டதும் சற்றே வியந்து இருவரும் என்னை நோக்கி பின் ஒருவரையொருவர் நோக்கினர்.

மல்லிகா, "ஆமாம் வளர்ப்பு சரியில்லை."

நான் தொடர்ந்து சற்றே புன்னகைத்தவாறு, "அவுங்களை விடுங்கள் அவுங்களுக்கு இறுபத்தி மூன்று வயசுதான்." சொல்லி கயல்விழியை நோக்கியவாறு, "ஆனால் முப்பது வயசில் உங்களை... அதுவும் இரண்டே நாள் பழக்கத்தில் உங்கள் மனசைக் கெடுத்துட்டேனே... உங்கள் வளர்ப்பும் சரியில்லையென்று... ஐயோ இதைக் கேட்டா உங்கள் அப்பா என்ன நினைப்பார்."

இதைக்கேட்டதும் கயல் அடக்க முடியாமல் சிரித்து வாயிலிருந்த உணவு தெரிக்க; அதே சமயம் மல்லிகா அத்தை அதிர்ந்து அனிச்சையாய் தன் வாயில் தன் கை வைத்து ஆச்சரியப்படத் தொடர்ந்து கயல்விழி கட்டுப்பாடிழந்து உணவைச் சிந்த மேலும் அதிர்ந்தார். பின்னர்க் கயல் மன்னிப்பு கொரி இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

மல்லிகா, "அடேயெப்பா பெரிய திறமைசாலிதான்; நான் சொன்னது பானுவின் மனசை மயக்கி அவள் உங்களைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுகிறதை ஆனால் கயல்விழி விஷயம் அப்படியில்லை. நீ செய்த உதவிக்கு உனக்கு நன்றிக்கடன் பட்டதாக நினைக்கிறது இயல்புதான் அது தப்பில்லையே."

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous