பாகம் 26: பானுவின் பிறப்பு ரகசியம்

Story Info
கவனமாக ஆராய்வோம் பானுவின் உறவின் ரகசியத்தை
1k words
0
7
00

Part 85 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 26: பானுவின் பிறப்பு ரகசியம்

"இல்லம்மா நன் இன்னும் சொல்லலை; காரணம் இப்படி உங்களோடு உரையாடி உண்மையான முழுவிவரமும் ஊர்ஜிதமாகாமல் நான் எப்படி சொல்லமுடியும்."

மல்லிகா, "சரி... இப்போ என்ன முடிவு செய்திருக்குறீங்க? ஹும் நீங்க எப்படியும் சொல்லனும்னுதான் சொல்லுவீங்க; சரி விதிப்படி நடக்கவேண்டியது நடந்தே தீரும். நீங்க போய் அழைச்சிக்கிட்டு வாங்க தம்பி நானே சொல்லிடுறேன்."

நான் குறுக்கிட்டு, "வேண்டாம்மா இப்போதைக்கு உங்கள் நாடகம் தொடரட்டும்."

இருவரும் அதிர்ந்து, "ஏன் தம்பி?"

சற்றே யோசித்து, "எனக்குக் கொஞ்சம் நாள்; ஒரு இரண்டு மாதம் அவகாசம் குடுங்க அதுக்குள்ள அடுத்து என்ன செய்யனும்னு நான் சொல்லுகிறேன்."

மல்லிகா, "அட என்ன தம்பி இப்பத்தான் எல்லாம் முடிந்துடிச்சின்னு மனம் நிம்மதியா இருந்தது; ஒரு வழியாக என் துன்பமெல்லாம் தீர்ந்தது என் பொன்னு கூட எல்லாத்தையும் சொல்லி அழலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இப்படி வேண்டாம்னு சொல்றீங்க ஏன்?"

கயல்விழி, "ஆமாம் ஏன்?"

மல்லிகாவை நோக்கி, "நீங்க இத்தனை நாள் இந்த ரகசியத்தை மறைச்சி வைத்ததுக்குக் காரணம் என்னவோ அது இன்னமும் தெரியவில்லையே."

கயல்விழி, "என்ன தம்பி சொல்லுறீங்க; அவுங்க தன் தப்பை."

நான் குறுக்கிட்டு மல்லிகாவை நோக்கி, "நீங்க இத்தனை நாள் இந்த ரகசியத்தைத் தொடர்ந்ததுக்குக் காரணம் நீங்க சரோஜினிக்குச் செய்த வாக்கு; ஆனால் சரோஜினி அத்தை இப்படிச் செய்யச் சொன்னதுக்கு என்ன காரணம்னு நாம இன்னமும் கண்டுபிடிக்கவில்லை; அதுக்குக் காரணம் தெரியாமல் அதை மீறுவது ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தினாள்!!"

இருவரும் சற்றே தயங்கி பின்னர் மல்லிகா, "ஆமாப்பா நான் கூட ஒரு கணம் தவறிட்டேன் அடேயெப்பா நீங்க நல்லா கவனமா யோசிக்குறீங்க தம்பி. சரி அடுத்து என்ன செய்யனும்?"

"கொஞ்சம் யோசிக்கனும்; ஒண்ணும் அவசரமில்ல நான் போயி பானுவை விருந்துக்குக் கூட்டிக்கிட்டு வரேன். அநேகமாக நம்ம கூட்டத்தில் அதாவது இந்த விஷயம் தெரிந்தவர்கள் கூட்டத்தில் பானுவையும் சேர்த்துக்கலாம்னு தோனுது.

எதற்கும் நான் பானுகிட்ட பேசிவிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்; அப்புறம் நல்லா யோசித்து அடுத்து என்ன செய்யலாம்னு முடிவெடுத்து சொல்லுகிறேன்." சொல்லிப் புறப்பட்டேன்.

வழி நெடுக பல கோணங்களில் யோசித்த வன்ணம் சென்று பானுவை அழைத்துக்கொண்டு திரும்பும் வழியில் ஒரு தனிமையில் நிறுத்தி அவளிடம் விரைந்து சுருக்கமாகச் சொல்ல எத்தனிக்க அவளோ நான் மீண்டும் ஏதோ காம களிப்பு செய்யத் திட்டமிட்டிருப்பதாக எண்ணி என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டு "ஏய் மன்னிச்சிக்கோடா ரொம்பச் சாரிடா; நேற்று நான் தெரியாம தூங்கிட்டேன்."

நான் குறுக்கிட்டு, "நீ தூங்கல உன்னைத் தூங்க வெச்சிட்டாங்க; சரி கொஞ்சம் கவனி பானு நமக்கு ரொம்ப நேரமில்லை."

"ச்சீ இதென்ன அவசரமா செய்கிற வேலையா?"

மீண்டும் குறுக்கிட்டு, "ப்லீஸ்! கொஞ்ச நேரம் குறுக்கே பேசாமல் நான் சொல்லுவதைக் கேள்; நேற்று நீ தூங்கினது உன் இயல்பான தூக்கமில்லை; நேற்று மட்டுமில்லை இங்கே நீ தூங்கின ஒவ்வொரு இரவும் உனக்குத் தூக்க மருந்து கொடுத்துத் தூங்க வைத்திருக்கிறார்கள்."

"ஹை அதெப்படி ஒவ்வொரு முறையும்?"

"காலைல நான் கேட்ட அதே கேள்வி தான்! நீ இங்கே தூங்கினதில் எப்பவாவது நடுவில் சிறுநீர் கழிக்க அல்லது வேற எந்தக் காரணத்துக்காகவாவது முழித்திருந்ததா ஞாபகம் இருக்கான்னு கேட்டேன் நீ இல்லைன்னு சொன்னே, இப்போது திரும்பவும் நல்லா யோசித்து சொல்லு!"

"ஐயோ ஏண்டா ஏதாவது பிரச்சினையா ரகு."

"நான் இருக்கும் போது உனக்கு ஒண்ணும் ஆகாது நீ கொஞ்சம் கவலைப்படாமல் தைரியமா யோசித்து சொல்லு."

சற்றே யோசித்த பின்னர் பானு, "இல்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் நான் நடுவில் முழித்ததில்லை."

"வேற ஏதாவது ராத்திரியில நடந்ததாக இல்லை கனவு மாதிரி ஏதாவது,"

"ம்ம்ம் இல்லை ரொம்ப வருஷங்களுக்கு முன்ன ஏதோ சின்ன வயசில் எங்க அம்மா என்னை மடியில போட்டுத் தூங்க வெச்சிக்கிட்டே கொஞ்சின மாதிரி நான் எனக்குத் தூக்கம் வந்து தூங்கிட்டா மாதிரி ஏதோ கனவுன்னு நினைக்கிறேன்."

"அநேகமாக அது கனவாயிருந்திருக்காது உண்மையாயிருந்திருக்கும்; சரி... உங்கள் அம்மாவோடு ஏதாவது கோபம் சண்டை ஏதாவது?"

"எப்பவாவது சின்னசின்ன கோபம் சண்டை அவ்ளோதான், ஏன்?"

"சரி உன் அப்பா யாருன்னு?" உடனடியாக அவள் முகம் சுருங்கியது

கண் கலங்கிய பானு, "எனக்குத்தெரியும் என் பிறப்புல ஏதோ பிரச்சினை இருக்கு; அதை நீ கண்டுபிடித்து தெரிஞ்சிகிட்டு என்னைக் கேள்வி மேல கேள்வி கேக்குறே." சொல்லி அழ ஆரம்பித்தாள்.

உடனே அவளை ஆதரவாக அணைத்து, "என் செல்லப் பொன்னே இதற்குப் போய் யாராவது அழுவாங்களா? இப்போது நான் என்ன கேட்டுட்டேன்; உங்கள் அப்பா யாருன்னுதானே கேட்டேன் எனக்குச் சொல்லக்கூடாதா; சரி உனக்கு வருத்தமான விஷயமா இருந்தாள் என்னை மன்னிச்சிடு."

விரைந்து குறுக்கிட்டு, "ஐயோ ச்சேச்சே! உனக்கு எல்லா உரிமையும் இருக்கு; உன்கிட்ட மறைக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் எனக்கே தெரியாது (நான் ஆச்சிரியமாக நோக்க) சத்தியமாடா நான் எத்தனையோ தரம் கேட்டுட்டேன்.

அவுங்க சொல்லுகிறது அவர் (என் அப்பா) அம்மாவைப் பிரிந்து இருக்கிறதாகவும் அவர் எங்கே இருக்குறார்னு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனால் என் பிறப்புல ஏதோ மர்மம் இருக்குன்னு நான் புரிஞ்சிகிட்டேன். ஆனால் என் அம்மா எதுவும் கீழ்த்தரமா."

அவளை முத்தமிட்டு வாயடைத்து, "என் தேவதையே தயவுசெய்து கொஞ்சம் அமைதியா நிதானமா பொறுமையா பற்றப்படாமல்."

அவள் இப்போது என்னை முத்தமிட்டு வாயடைத்து, "போதும் போதும் எல்லாமே ஒரே அர்த்தம்தான்."

"அப்பாடா இப்பத்தான் கொஞ்சம் சிரிப்பு வந்திருக்கு; சரிசரி நான் சொல்லுகிறதைக் கவனமா கேளு; நீ சொன்னது உண்மைதான் உன் பிறப்புக் கொஞ்சம் சிறப்பானது."

"ஏய் ஏமாற்றாதே; என் பிறப்பில் ஏதோ அசிங்கம் இருக்கு அதை மழுப்ப சிறப்புன்னு சொல்லாதே."

"நீ ஏன் அப்படி இழிவாக இருக்கும்னு நினைக்கனும்; ஏன் நல்லவிதமா இருக்கக்கூடாது? சரி நான் சொல்லுகிறதைக் கவனமா கேளு; இன்றைக்கு ராத்திரி உனக்கு உன் உண்மையான அம்மாவைச் சந்திக்க வாய்ப்பு இருக்கு."

"அடப்போடா ஏதோ பெரிய விஷயம்னு பார்த்தா இப்புடி சப்பென்று ஆக்கிட்டே; எங்க அம்மாதான் எனக்குத் தெரியுமே என் அப்பாவைப் பத்தி ஏதாவது தெரியும்னு சொல்லுவேன்னு பார்த்தால்."

அவளை முத்தமிட்டு வாயடைத்து, "அட மக்கு பானு நான் சொன்னது உன் 'உண்மையான' அம்மா; அதுவும் நான் சொல்லுறபடி நீ நடந்து கிட்டாதான்."

"என்னடா சொல்றே!!... அப்போ... அது எங்கம்மா இல்லையா?"

"என் தேவதையே தயவுசெய்து கொஞ்சம் அமைதியா நிதானமா பொறுமையா பற்றப்படாமல் (அவள் மீண்டும் என்னை முத்தமிட்டு வாயடைக்க முயல நான் விலகி) கேளு. நான் நிறையச் சிரமப்பட்டு இன்றைக்கு ராத்திரி உன் உண்மையான அம்மாவை நீ சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

நீ செய்ய வேண்டியது முக்கியமா இப்போது இரவு விருந்து முடித்து வீட்டுக்குத் திரும்பி எதுவும் சாப்பிடக்கூடாது, பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காதே; ஒரு வேலை அவுங்க ஏதாவது கொடுத்துச் சாப்பிட/குடிக்கச் சொன்னால் அவுங்களுக்குத் தெரியாமல் அதைச் செய்யுறா மாதிரி நடித்து ஏமாற்றனும்.

உதாரணத்துக்கு உன் விருப்பமான பாயசத்தைக் கொடுத்தாள் வேணாம்னு சொல்லாதே வழக்கமான ஆர்வத்தோடு வாங்கிக்கிட்டு குடிக்குறாமாதிரி நடித்து ஏமாற்று. எல்லாவிதத்திலேயும் கொஞ்சம் கூடச் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கனும்.

கடைசியா தூங்கின மாதிரி நடிக்கனும்; அநேகமா நீ தூங்கிட்டியான்னு யாராவது சோதித்தால் நீ நல்லா தூங்கிட்டதாக நடிக்கனும்; அடுத்துத் தூங்காமல் முழு இரவும் நடிக்கனும்; இத்தனையும் நீ கவனமா செய்தால் உன் உண்மையான அம்மாவைச் சந்திக்க வாய்ப்பு உறுதி.

அடுத்து நீ அவுங்களைச் சந்தித்ததும் ரொம்பக் கவனமா இருக்கனும். முக்கியமா நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன் கவனமாக்கேளு; நீ கிட்டத்தட்டக் கிருஷ்ணர் மாதிரி உன்னைப் பெற்ற தாயிடம் வளராமல் வளர்ந்தது இன்னொரு தாயிடம் (அவள் ஆச்சரியப்பட) இன்னும் பல உண்மைகள் தெரியும் நீ கவனமா பொறுமையா நடந்துகிட்டா.

எந்தக் காரணத்தைக் கொண்டும் உன் அம்மாவை மதிப்பு குறைவா நினைக்காதே; கோபப்படாதே; உன்னால் முடிந்தால் உன் பாசத்தைக் கொட்டு; அவுங்க மனம் குளிரும்; உன்னைக் குழந்தையா பெற்றதுக்குப் பெருமைப்படனும்."

"என்னை வளர்க்காமல் வேற யாருக்கோ தூக்கிக் கொடுத்தவங்களை நான் கொஞ்சி மகிழனுமா திட்டக்கூடாதா; அவுங்க மேல பாசம் எப்படி வரும்?"

"அதுதான் சொன்னேனே நீ கிருஷ்ணர் மாதிரின்னு; உன் உயிருக்கு ஆபத்துன்னு உன்னை மறைந்து இருந்து பாதுகாக்கிறார்கள்; ஒரு பெண் தன் குழந்தையை அவள் குழந்தையென்று சொன்னால் ஆபத்துன்னு அந்தக் குழந்தையை இன்னொருத்தர் கிட்ட வளர்க்க ஏற்பாடு செய்திருக்காங்க.

மறைந்து வாழ்ந்து மறைமுகமாக அந்தக் குழந்தையைப் பாதுகாப்பது எவ்ளோ சிரமமானதுன்னு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை உனக்கு; அப்படி ஒரு அம்மாவுக்கு மகளாகப் பிறந்த நீ ஒரு மஹாலஷ்மி; முற்பிறவியில் செய்த தவம்/புண்ணியம்."

"அப்பப்பா என்னென்னமோ சொல்லுற; நம்பவே முடியல நான்... நான் ஒரு சாதாரணமான பொன்னு எனக்கு ஏன்... என்னைச் சாகடிக்கப் பார்க்குறாங்க... யாரது?"

"உன்னைச் சாதாரணப் பொன்னாக்கியதே உன் உயிர் காத்த/காக்கும் கவசம்; எல்லாத்துக்கும் மெல்ல மெல்ல விடை கிடைக்கும்; எல்லாப் பிரச்சினைகளும் தீரும் கூடிய விரைவில்."

சற்றே நடுங்கிய "என்ன ரகு ஏதோ சினிமால வரா மாதிரி சொல்லுற; எனக்கு ரொம்பப் பயமா இருக்குடா!"

"உனக்கு இப்போது எந்த ஆபத்தும் இல்லை அதுக்கு நான் முழு உறுதி. ஆனால் நீ விஷயம் தெரிந்த பிறகும் அதை ரகசியமா வெச்சிக்கனும். உன் பிரச்சினைகளுக்கு என்ன காரணம்னு விடை கண்டுபிடிக்கனும்.

அதனால இந்த நாடகம்/நடிப்பு தொடரனும்; அதாவது இந்த உண்மை தெரிந்ததும் நான் முழு உண்மை தெரியும் வரை உனக்குச் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் என் தேவதைக்கு உடனே சொல்லனும்னு விரைந்து வந்தேன்; உனக்குப் பொறுமை இருந்தால் நீ கொஞ்சம் காலம் பொறுக்கலாம்; உன் இஷ்டம்."

"சரிசரி நான் நீ சொல்கிறபடி நடந்துக்குறேன்."

ஒரு வழியாக அவளுக்குப் புரியவைத்து எங்கள் பயணத்தைத் தொடர; அவள் மன இருக்கத்தில் மௌனமானாள்; நான் அவளைச் சாதாரண நிலைக்குத் திருப்ப முயன்று அவளை மோட்டார்சைக்கிளை ஓட்டச்சொல்ல முதலில் மறுத்தாள் பின் என் வற்புறுத்தலில் தொடர்ந்தாள்.

அந்த மாளிகையை அடையும் முன் ஒரு பொதுத் தொலைப்பேசி அருகே நிறுத்தி கயல் மற்றும் மல்லிகாவைத் தொடர்பு கொண்டு என் திட்டத்தை மல்லிகாவிற்கு விளக்கி அதாவது இப்பொதைக்குப் பானுவுக்கு எதுவும் தெரியாமல் தொடர்வது.

நாளை தாயும் மகளும் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்து; இப்போது இரவு விருந்தில் மல்லிகா கலந்து கொள்வதைத் தவிர்த்தல் அல்லது மாறுவேடத்தில் கலந்து கொள்வதெனப் பரிந்துரைக்க இருவரும் சம்மதித்தனர். பின்னர் நாங்களிருவரும் மாளிகைக்கு சென்று சேர்ந்தோம்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous