பாகம் 23: சதி முறியடிப்புத் திட்டம்

Story Info
கொலையாளியை அம்பலப்படுத்துவோம்
1.2k words
0
7
00

Part 109 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 23: சதி முறியடிப்புத் திட்டம்

சாந்தினி, "ஒரு வயசுப் பொன்னை அவள் சித்திகிட்டயே கேட்டுத் தனியா கூட்டிக்கிட்டு போறீங்க; அதைவிடக் கூத்து சித்தி கொஞ்சமும் கூச்சமில்லாமல் எது வேணும்னாலும் செய்துக்கோன்னு உங்களுக்குப் பச்சைக்கொடி காட்டுறாங்க.

சொந்தத் தம்பியைக்கூட அதுதான் எங்க மாமாவைக்கூட இவ்ளோ அனுமதிக்க மாட்டாங்க ஆனால் உங்களுக்கு மட்டும் தனி மரியாதை. அவ்ளோ நம்பிக்கை உங்கமேல! அப்பப்பா எப்படீங்க இப்படி எல்லாரையும் வசப்படுத்தி வெச்சிருக்கீங்க?"

நான், "அந்தக் கேள்வியை நான் உங்களைக் கேட்கனும் (அவள் விந்தையான பார்வையை வீச) ஆமாம் நீங்கதான் சமீபத்தில் வசப்பட்ட ஆள்! நாம இரண்டு பேரும் சந்தித்த முதல் இரண்டு மூன்று நாள் நீங்க நல்லா சாதாரணமாக இருந்தீர்கள் அப்புறம் படிப்படியாக நீங்களும் இப்படி வசப் பட்டுட்டீங்க.

அதுதானே உண்மை (அசடு வழியப் புன்னகைத்து ஆமோதித்தாள்) அப்படியென்றால் உங்களுக்குத்தான் நல்லாத் தெரியவேண்டும் நான் எப்படி உங்களை வசியம் செய்தேன்னு (இருவரும் சிரித்தோம்).

சரி நான் உங்களைக் கொஞ்சம் அந்தரங்க விஷயம் கேட்கனும். அது நான் எவ்ளோ ஆழமா கேட்க முடியுமான்னு தெரியலை. நான் கேட்பது எல்லை மீறினாள் நீங்கத் தடுத்து நிறுத்துங்க. நான் தெரியாமல் ஏதாவது மரியாதைக் குறைவாக!"

அதிரடியாகக் குறுக்கிட்ட சாந்தினி, "நிச்சயமாகச் செய்யமாட்டீங்க, அப்படியே தவறிச் செய்தாலும் பரவாயில்லை இப்படித் தனிமையில... நீங்கச் செய்தால் நான் தப்பா எடுத்துக்கொள்ள மாட்டேன்; போதுமா தயவு செய்து தயங்காமல் கேளுங்கள்."

நான், "இல்லை வந்து... அது கொஞ்சம்... நீங்க அவர்கூட, அதுதான் உங்கள் மாமாகூட... தொட்டுப்பேசிப் பழகுகின்ற... சரிசரி அப்படி வேண்டாம் (சற்று யோசித்து) இப்போது கொஞ்சம் நேரத்துக்கு முன்னர்ச் சியாமளாவை அவர் அதுதான் உங்கள் மாமா கர்பமாக்குறதா... இல்லை அப்படி வேண்டாம் (என் தடுமாற்றத்தைக் கண்டு மெல்லச் சிரிக்க ஆரம்பித்தாள்) இல்லைங்க சரி வேண்டாம் நாம... ஒன்றும் பேசலை; போகலாம் வாங்க." சொல்லித் திரும்ப முயல என்னைப் பிடித்து நிறுத்தினாள்.

சாந்தினி, "ஐயோ! ஐயோ! நீங்கச் சரியான பயந்தான்கொள்ளி! அதுதான் பொன்னோட அம்மாவே என்ன வேணும்னாலும் (அவள் வாயைப் பொத்தினேன்) சரி விடுங்கள் நான் எவ்ளோ ஆசையா ஏங்கிக்கிட்டு இருக்கேன்னு.

ஏதோ இவ்ளோ தைரியமா தனியா கூட்டிக்கிட்டுட்டு வந்துட்டு என்னைக் கேட்க ஏன் இவ்ளோ தயங்கனும்? சரி நானே கேக்குறேன். எங்க மாமா சியாமளாவை கர்பமாக்க திட்டம் போட்டது போல நீங்க என்னைச் செய்ய்ய்ய் (நான் பதற்றத்துடன் இல்லையெனத் தலையசைக்க) இல்லையா? (சோகமாக) வேற எதற்கு அவ்ளோ தயக்கம்? சரிசரி பரவாயில்லை எது வேணும்னாலும் தயங்காமல் கேளுங்கள் ப்லீஸ்! என்னை ஏங்க வைக்காதீர்கள் ப்லீஸ்! ப்லீஸ்!"

நான், "இல்லை சரி வந்து உங்களை... ஒரு பேச்சிக்கு ஒரு பொய் அதாவது நீங்க இப்போது கர்பம்னு ஒரு பொய் ஒரு சின்ன நாடகத்துக்காகச் சொல்ல... அனுமதிச்சீங்கன்னா."

மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியவள், "அடச்சே இதற்கா இவ்ளோ தயங்கி இழு இழுன்னு இழுத்தீங்க. ஐயோ! ஐயோ! நானும் என்னன்னமோ கனவு. இப்படி ஏமாத்திட்டீங்களே! (சட்டென அவள் முகம் பிரகாசிக்க) சரி நான் செய்தால் எனக்கு நீங்க என்ன செய்வீர்கள்? (நான் அதிர்ந்து சற்று தயங்க) என்னை அது செய்வீர்களா அதுதான் (வெட்கத்தில் தலை குனிந்த வண்ணம்) கர்ப்பமாக்குவீங்களா?... அதுக்குச் சரியென்றால் நான் எதற்கும் சரி, தயார்."

உடனே என்னையும் மீறி அவளை இறுகக் கட்டியணைத்து, "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை; நான் இதற்குத் தகுதியானவனா? மிக்க அதிர்ச்சியாக்கிட்டீங்க; மிக்க நன்றி! ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் உங்களுக்கு இனிமையான பதிலைச் சொல்ல முயற்சி செய்வேன்.

நான் ஏதோ நினைத்துத் தயங்க அது உங்கள் மனசைக் கெடுத்து; சரி விடுங்கள் நான் கேட்க வந்ததைத் தைரியமா கேட்டுடுறேன். நாளைக்கு ஒரு நாள், இல்லை ஒரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு சின்ன நாடகம் போடத்திட்டம் அதுல நீங்க இப்போது கர்ப்பமாக; உங்கள் மாமா செய்ததாக ஒரு பொய் சொல்லி நாடகத்தைத் தொடங்கனும் அதுக்கு உங்கள் சம்மதம்." ஒரு வழியாகச் சரமாரியாகச் சொல்லி முடித்தேன்.

என்னைக் குறுகுறுவெனப் பார்த்தவள் அடக்கமுடியாமல் சிரித்து என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு ஷீலாவிடம் வந்து, "சித்தி இருந்தாலும் இவர் இவ்ளோ... அநியாயத்துக்கு நல்ல புள்ளையா!... இவ்ளோ நாகரீகமா... இதெல்லாம் ரொம்ப அதிகம் சித்தி.

என்னை மாமா கர்ப்பமாக்கிட்டதா ஒரு பொய் சொல்லத் திட்டம் போட்டு அதுக்கு என் அனுமதியைக் கேட்க அவர் பட்டபாடு இருக்கே அடட்டட்டடா; இதைக் கேட்கத்தான் என்னைத் தனியா கூட்டிக்கிட்டு போகனுமா?

உன் முன்னாடியே கேட்க என்ன தயக்கம்; ஏதோ இவர் தனியா கூட்டிக்கிட்டு போய் அப்படி என்ன கேட்கப் போரார்னு ஏதேதோ கற்பனை செய்து. ஹூஹும் சுத்த மோசம் சித்தி; இப்படியா அநியாயத்துக்கு நல்ல புள்ளையா? எனக்கென்னவோ சந்தேகம் தான் வருது; ஹாம் இப்படித்தான் இவர் நம்மை எல்லாம் வசியம் செய்கிறார்."

நான், "அது வந்து ஒரு முன்பின் பழக்கமில்லாத வயசுப் பொன்னை இப்படிச் சமூகத்தில் கெட்ட பேர் ஏற்படுத்தும் செயலை செய்யச் சொல்லுகிறது சாதாரண விஷயமா எடுத்துக்குறது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை; நீங்க அவ்ளோ சாதாரணமாக எடுத்துக்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கல.

ஆனால் சரி விடுங்கள் சும்மா அதையே பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நீங்க சரின்னு சொன்னதால என் திட்டத்தைச் சொல்லுகிறேன் இரண்டு பேரும் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். என் திட்டம், நாளைக்கு நீங்க சாந்தினி இரண்டு பேரும் உங்கள் அம்மா வீட்டுக்குப் போய் உங்கள் அம்மாவிடம் சாந்தினி கர்பமாயிருக்கான்னு புலம்பனும்.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் அதனால இந்த விஷயம் ஷீலா, சாந்தினி, சகுந்தலா அப்புறம் மாப்பிள்ளை ஆக நாலு பேரைத் தவிர வெளியே மத்த வங்க யாருக்கும் தெரியாமல் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யனும்னு சொல்லுங்கள்.

இப்பொதைக்கு அவ்ளோ விவரம் மட்டும் போதும். நான் தேவையான அளவுக்கு மட்டும் சொல்லுகிறேன்; சாரி உங்ககிட்ட மறைக்க உத்தேசமில்லை; அதாவது எல்லா உண்மைகளும் உங்களுக்கு முழு விவரமாக நான் சொல்லிவிடுவேன் இந்த நாடகம் அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்கு மேல் போகாது.

அதுக்குள்ள உங்கள் எல்லாருக்கும் எல்லா உண்மைகளும் தெளிவாகிடும் இது என் உறுதி மொழி; அடுத்தது இந்த நாடகத் திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வேறு வழியை யோசிக்கலாம் அதுல ஒன்றும் சிரமமில்லை; தயங்காமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்."

ஷீலா, "அப்படி ஒன்றும் பெரிய பிரச்சினையாகத் தெரியலை (சொல்லி சாந்தினியை நோக்கி) உனக்குப் பரவாயில்லைன்னா?"

நான், "ஆமா சாந்தினி நீங்களும் கொஞ்சம் யோசித்துத் தயங்காமல் உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்."

சாந்தினி, "தயக்கமில்லை ஆனால் முழு விவரத்தையும் தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்கு அவ்ளோதான்."

நான், "ஓஹ் சில விஷயங்களை மறைப்பதற்குக் காரணம் முக்கியமா உங்களுக்கு உதவத்தான்; அதாவது முழு விவரமும் தெரிந்தால் உங்கள் நடிப்புக் குறைபாடுகள் வெளிப்பட்டு விடும். அதனால சில விஷயங்களை மட்டும் தெரிஞ்சிகிட்டு நடித்தால் உங்கள் நடிப்பு மிக இயல்பாக இருக்கும் அவுங்களுக்குச் சந்தேகமே வராது.

சும்மா ஒரு மணி நேரம்தான் அப்புறம் எல்லாம் வெட்ட வெளிச்சமாகவிடும். அதன் முடிவில் உங்களுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி வெளிப்படும். அது ஒரு ஆள் அவுங்களைப் பார்த்ததும் உங்கள் எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சி. குறிப்பாக (ஷீலாவை நோக்கி) உங்கள் அம்மா தம்பி இரண்டு பேரைத்தவிர மற்ற எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி."

சாந்தினி, "ப்லீஸ்! ப்லீஸ்! தயவு செய்து அது யாரென்று சொல்லுங்கள்."

உடனே அவள் கன்னங்களை மிகக்கனிவோடு பற்றிய நான், "ப்லீஸ்! ப்லீஸ்! ப்லீஸ்! ப்லீஸ்! அதெல்லாம் சொல்லக் கூடாது; சொன்னால் தேவை இல்லாத சில பிரச்சினைகள்; தயவு செய்து என்னை நம்புங்கள்."

ஷீலா, "சரிப்பா ஒருவேளை எங்க அம்மா ஒத்துக்கிட்டு கல்யாணத்துக்குச் சம்மதித்தால் அடுத்து என்ன செய்வது சம்மதிக்கவில்லையென்றால் என்ன செய்வது?"

சாந்தினி, "ஐயோ ஆமாம் நான் பேச்சு சுவாரசியத்தில் கவனிக்க மறந்துகொண்டேன்; எந்தக் காரணத்துக்காகவும் சத்தியமா நான் மாமாவைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்க மாட்டேன்."

நான், "கவலையே படாதீர்கள் அதுக்குள்ள மாமா அங்கே வந்துடுவாரு; அடுத்து நான் வந்துடுவேன் என்னோடு அந்தப் புதிய ஆள் வந்துடுவாங்க அதுக்கபுறம் இன்னொரு புது ஆள் வர அந்த ஆளைப் பார்த்ததும் உங்கள் பாட்டி ஆடிப்போய்விடுவார்கள் அதுக்கப்புறம் பாருங்கள் கதையின் போக்கும் சுவாரசியமும் எப்படிப் போகிறதென்று."

என் திட்டத்தின் பெருமிதத்தில் சோக நிலையை மறந்து பெருமை கொண்டு பேசி பின்னர்ச் சட்டென உணர்ந்து அமைதியானேன். மேலும் பல விவரங்களை விளக்கி தயார்ப் படுத்தினேன். பின்னர் வீடு திரும்பும் நேரம் நெருங்க அங்கிருந்து புறப்படத் தயார்ப் படுத்தச் சொல்லி ஷீலா பண்ணைவீட்டுக்குள் சென்றார்.

அவர் அப்படிச் சென்றதும் சட்டென என்னை நோக்கித் திரும்பிய சாந்தினி சிறு குழந்தை போல எனக் கையைப் பிடித்து, "எனக்கு இன்னிக்கி ராத்திரி நான்.. நான் உங்கள் மார்பில் படுத்துக்கனும் ப்லீஸ்! ப்லீஸ்! வேற எதுவும் வேண்டாம் நிச்சயமா நான் வேற ஒன்றும் கேட்க மாட்டேன்."

அதே சமயம் பண்ணை வீட்டை நோக்கிச் சென்ற ஷீலா எதையோ நினைத்துத் திரும்பியவர் சாந்தினி கெஞ்சுவதைக் கேட்டு வியந்து என்னை நோக்கித் தொடரும்படி சைகை செய்து மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நான், "நான் உங்கள் மனசைத் தேவை இல்லாமல் கெடுத்துட்டேன்னு நினைக்கிறேன்."

சாந்தினி, "அதெல்லாம் ஒன்றுமில்லை நான்தான் வேற எதுவும் செய்யமாட்டேன் நிச்சயமா சொல்றேனே ப்லீஸ்! ப்லீஸ்! நான் உங்கள் மார்பில் கட்டிக்கிட்டுத் தூங்கனும் அவ்ளோதான். சத்தி(யமா)."

உடனடியாக நான் குறுக்கிட்டுத் தடுத்து, "சத்தியமெல்லாம் வேண்டாம்; நீங்க வயசுப் பொன்னு நான் முன்பின் பழக்கமில்லாதவன் நான் உங்கள் சித்தியைக் கேட்பது சரி இல்லை நீங்க உங்கள் சித்தியைக் கேட்பதுதான் சரி; அன்று பானு கேட்டது போல."

சாந்தினி, "இல்லை வந்து எனக்கு ஒரு மாதிரியா இருக்கு நான் வேற அன்னிக்கு அப்படிப் பேசிட்டேன்; அது கூடப் பரவாயில்லை ஆனால் எனக்கு வெட்கம் வெட்கமா வருது.

நான் வெட்கப்படுவதைப் பார்த்தால் என் சித்திக்கு நிச்சயமா சந்தேகம் தான் வரும். அதே நீங்கக் கேட்டால் என் சித்தி கொஞ்சம் கூடத் தயங்காமல் ஒத்துக்கும் ப்லீஸ்! ப்லீஸ்! ப்லீஸ்!" என் கைகளைப்பிடித்துத் தன் மார்பில் வைத்துக் கெஞ்சினாள்

அதேசமயம் ஷீலா அத்தையும் சாந்தினி புட்டத்தில் செல்லமாக ஒரு அரை அரைந்து, "அட லூசுக்கழுத இதென்ன வேலை?"

சட்டெனப் புரிந்து விலகி என் பின் ஒளிந்து மறைந்த வண்ணம் நின்றவள் வெட்கத்தில் என் முதுகில் முகம் புதைத்த வண்ணம், "சாரி சித்தி ப்லீஸ்! ப்லீஸ்!"

என்னை நோக்கிய ஷீலா, "அதென்ன தாண்டா செல்லம் நீ செய்யுற!! நீ என்ன தாலாட்டுப் பாடுவியா? அன்றைக்கு அந்தக் கழுதை மனசு சரியில்லையென்று உன்கூடப் படுத்துக்கனும்னு கெஞ்சினாள் இன்றைக்கு இந்தத் தடிமாடு."

உடனடியாகச் செல்லக் கோபத்துடன் கண்டிக்கும் விதமாக அதட்டிய நான், "அத்தை சும்மா இருங்கள் இதென்ன கெட்டப் பழக்கம் இப்படி அழகு தேவதைகளைப் போய் எப்பப் பார்த்தாலும் 'கழுதை, மாடு பன்னின்னு'."

ஷீலா, "அடடட்டா இப்படிக் கேவலமா கூத்தாடிக்கும் கழுதைகளைப் போய்த் தேவதைன்னு கொஞ்சரியே இன்னும் அடக்கம் ஒடுக்கமா இருந்துட்டாளுங்கன்னா அவ்ளோதான் உன்னைக் கையிலேயே பிடிக்க முடியாதுப்பா.

சரிசரி மத்துவங்களுக்கு தெரியாமல் எல்லாம் தூங்கின பிறகு செய்ங்க புரிஞ்சிதா (சொல்லி தன் தலையில் தட்டிக்கொண்டு) ஐயோ! ஐயோ! இதையெல்லாம் கட்டி மேய்க்கிறதுக்குள்ள என் பாடு போதும் போதும்னு ஆயிடும்."

நான், "கவலைப்படாதீர்கள் அத்தை அநேகமாக நாளையிலிருந்து அந்தப் பொறுப்பைப் பற்றி நீங்கக் கவலைப்பட வேண்டி இருக்காது."

இருவரும் ஒரே சமயத்தில் வியந்து, "ஹாங்." என்று அலறி என்னை ஏக்கமாக நோக்க நான் சொல்ல மாட்டேனெனக் கனிவுடன் மறுக்கத் தொடர்ந்து உரையாடி மகிழ்ந்தபடி வீட்டை அடைந்தோம். வீட்டை அடைந்ததும் நாளைய நடவடிக்கையின் திட்டங்களையும் அதற்கான ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்து முடித்தேன்

முதலில் ஷீலா அத்தை மாமாவுக்குத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மிக ரகசியமென உரையாடும் விதமாகக் குறிப்பாக வீட்டில் யாருக்கும் தெரியாதெனவும்; அவசர நிலையென சித்தரித்துப் பிரச்சினை பெரிதெனத் தெரிவிக்கச் சொன்னேன்.

தொலைப்பேசியில் அதிக விவரிக்க முடியாதென மறைமுகமாகச் சாந்தினி பிரச்சினை எனத்தெரிவித்து நாளை காலை உடனே தன் அம்மா வீட்டுக்குச் சென்று பேசி முடிவெடுக்க வேண்டிய அவசியமென வலியுறுத்தி மாமாவை நேரடியாக அங்கு வந்து சேரச் சொல்லிக் குழப்பிவிட வைத்தேன்.

பின்னர் உடனடியாக நானும் அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கவலைப்பட ஒன்றுமில்லை ஷீலா அத்தை கொஞ்சம் பதற்றத்தில் இருப்பதையும் ஆனால் அதேசமயம் நாளை உடனடியாகப் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் அதனால் விரைந்து வர வேண்டிய அவசியத்தை விளக்கி ஏற்பாடு செய்தேன்.

பின்னர் நாளைய நாடகத்தில் அவரவரின் பங்குகளைத் தெளிவாக விளக்கி முடித்தேன். அடுத்து கயல், ஜெயா மற்றும் அனிதா ஆகிய அனைவரையும் தொடர்பு கொண்டு அவரவர் செய்ய வேண்டிய உதவிகளை விவரித்து விளக்கி அனைவரும் முழுமையாகத் தயார் நிலை என உறுதி செய்தேன்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous