Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 22: சதியை முறியடிப்போம்
"ச்சேச்சே உன் மேல கோவிச்சிக்க நான் எப்படி; (நீண்ட மௌனத்திற்குப் பிறகு) தெரியலை ரகு என்னை... என்னை யாரும் அப்படி நினைத்ததில்லை; அதைவிட என்னைப் பற்றி யாராவது அப்படிச் சொன்னாலும் நம்ப மாட்டார் என் அப்பா ஆனால் அவரே என்னை அப்படிச் சொன்னது நிறைய அதிர்ச்சியா இருக்கு (நீண்ட மௌனம்).
அதுக்கும் மேல அவரே அது தப்பில்லைன்னு சொல்கிறது; இதெல்லாம் ஏதோ நம்பமுடியாத கனவு மாதிரி இருக்கு. அவருக்கு நாம நெருங்கிப்பழகின விஷயம் முழுமையாகத் தெரிந்திருக்கு. அதுவும் அவருக்கு என்னைவிட அதிக நம்பிக்கையான ஆள் மூலமாகத் தெரிந்திருக்கு; அது என்ன எப்படின்னு ஒரே குழப்பமா இருக்கு."
"நீங்கச் சந்தேகப்படுவதற்குக் காரணம் எனக்குப் புரிகிறது. இதற்கெல்லாம் காரணம் நான் தான் (மிதமிஞ்சிய குழப்பத்துடன் என்னை நோக்கினாள்). முதல்ல ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கோங்க உங்கள் அப்பாவும் மாவட்ட ஆட்சியரும் சேர்ந்து என்னை இந்தச் சமூக நிர்வாக வேலைக்கு என்னை இழுக்குறாங்க.
என்னைச் சந்தித்த முதல் நாளே ஆட்சியர் என்னைக் கேட்டுவிட்டார். அப்போ கொஞ்சமும் எதிர்பாராத நான் உடனடியாக மறுத்துட்டேன். அப்போதைக்கு வேறு வழியில்லாமல் சரியென்று சொன்ன ஆட்சியர் பின்பக்கமாக/வேறு வழியாக உங்கள் அப்பா மூலமாக அதை முயற்சி செய்கிறார்.
நானும் உங்கள் அப்பா நிலைமையை நினைத்துப் பார்க்க அவருக்கு எப்படியும் உதவனும்னு என் மனம் விரும்ப அது தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி அவருக்கு. அதைத் தொடர்ந்து நான் அவருக்கு என் செயல் திட்டத்தை விளக்க, அவரோ அதெல்லாம் விளக்கத் தேவையில்லை காரணம் அவர்கள் இருவருக்கும் என் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும் அதனால் என் செயல் திட்டத்தை அறியவோ அதில் தலையிடவோ விரும்பவில்லையென்று சொல்லிவிட்டார்.
நானாக வற்புறுத்தி என் திட்டத்தைச் சொன்னேன். அதில் ஒரு பங்கு உங்கள் ஒத்துழைப்பு. அதாவது என் திட்டப்படி உங்களுக்கும் அந்தக் கமலாவுக்கும் சரியான/தேவையான பயிற்சி கொடுத்து இந்த வேலையை மிகத் திறம்படச் செய்யலாம்னு சொன்னேன். அதைத்தான் அவர் அவ்ளோ குதூகலமா உங்களைப் பார்த்து சொல்லுகிறார்; நீங்க குழப்பத்தில் அதைத் தப்பா புறிஞ்சிகிட்டீங்க."
"ஓஹ் அப்படியா விஷயம்; இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு." சொல்லிச் சிரித்தாள்.
"அப்பாடா இந்த முகத்தில் சிரிப்ப வர வைக்க நான் என்ன பாடு படவேண்டியிருக்கு. கடவுளே நான் எங்க போயி முட்டிக்குவேன்; சரிசரி இப்போதாவது சாப்பாடு கிடைக்குமா?"
"அச்சச்சோ என் செல்லத்தைப் பட்டினி போட்டுக் காய வெச்சிட்டேனா? சாரிடா தங்கம் வா நம்ம சாப்பிட்டு அப்புறமா பேசலாம்." உண்டு முடித்தோம்.
"கயல் இன்னொரு விஷயம் நான் உனக்குத் தெளிவா சொல்லலை. உங்கள் அப்பாவும், மாவட்ட ஆட்சியரும் என் திறமைமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
அவுங்க எதிர்பார்ப்பது 'நான் என் படிக்கும் இயந்திரவியலை விட்டுவிட்டு இந்த நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தனும்' முதலில் மறுத்த நான் உங்கள் அப்பா இந்தப் பொது மக்களுக்காக இவ்ளோ பாடுபடும் தியாகத்தை நினைத்து அவருக்காக என் படிப்பு/கனவைத் தியாகம் செய்து அவருக்கு உதவ முன் வந்தேன்.
ஆனால் என் திட்டம் உங்களையும் அந்தக் கமலாவையும் இந்த நிர்வாகத் துறையில் பயிற்றுவித்துப் பழக்கி உங்களாலேயும் நல்லா நிர்வாகம் செய்ய முடியுமென்று நிரூபிக்கத் திட்டம் போட்டேன். அதாவது நீங்க உங்கள் அப்பா வேலையை நல்லபடியா செய்யப் பயிற்சி கொடுத்து உங்கள் திறமையை வளர்க்கத் திட்டம் போட்டேன்."
"ரகு உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை; இதெல்லாம் கனவு போல இருக்கு... நான் என் திறமையை வெளிப்படுத்த இப்படி ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உண்டாக்கியதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.
ஆமாம் நிச்சயம் நல்லா திறம்படச் செய்து எல்லாரும் பாராட்டும் அளவுக்குச் செய்வேன் அதுதான் நான் உனக்குச் செய்யும் கைம்மாறு." சொல்லி என்னை இறுக்கி அணைத்தவர் என்னைச் சற்று ஓய்வெடுக்கச் சொல்லி தானும் மல்லிகாவும் கோவிலுக்குப் போய் வர விரும்பினார்.
"ஆனால் கயல் நான் இப்போதே உடனடியாகப் புறப்படவேண்டும்."
ஏமாற்றத்தின் உச்சத்தில் அதிர்ந்தவராகக் "ஐயோ! என்ன ஆச்சி ரகு? இன்னும் இரண்டு நாள் கண்டிப்பாக இருப்பேன்னு சொல்லிட்டு இப்படி."
குறுக்கிட்ட நான், "கயல் உங்க அப்பா இறுதியாகச் சொன்னது நினைவிருக்கா? அதாவது அந்த கொலைகாரன் சோமனை அவர் கட்டுப்பாட்டில் நீண்ட நேரம் வெச்சிக்க முடியாது/கூடாது.
அதனால அந்த சோமன் உதவி தேவையிருந்தால் அதை நாம் உடனடியாக செய்யனும். அதாவது இந்த கொலைச் சதியை நிரூபிக்க நிச்சயமா அவன் உதவி நமக்குத் தேவை.
எனவே நான் உடனடியாக விரைந்து செயல்பட்டு அந்த காரியத்தை அதாவது தனு மாமா மல்லிகா விஷயத்தை இதற்கு மேல தாமதப்படுத்த முடியாது. அதை உடனடியாக முடிக்கனும். அதுக்கு நான் ஷீலா அத்தையுடன் கலந்து பேசுவது மிக முக்கியம்.
நான் உடனடியாகப் புறப்பட்டுப் போயி அதை முடித்து நாளை திரும்பவும் அநேகமாகக் காலை திரும்பச் சந்திக்கலாம்." நான் குறிப்பிட்டதை முழுவதும் உணர்ந்தாலும் மிகுந்த முக வாட்டத்துடன் மனமின்றி என்னை வழியனுப்பினார்.
நானும் விரைந்து சென்று மதியம் மூன்று மணியளவில் வீட்டை அடைந்தேன். ஷீலா சாந்தினியுடன் பண்ணைத் தோட்டத்திற்கு சென்றிருந்தனர். என்னைக் கண்டதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய பானுவும் சியாமளாவும் சற்று நேரத்தில் கோவிலுக்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த இருவரும் வண்டி சவாரியில் செல்ல வாய்ப்பு கிட்டிய மகிழ்ச்சியில் குதூகலித்தனர்.
நானோ உடனடியாக ஷீலா அத்தையைச் சந்திக்க வேண்டி இருப்பதால் முடியாதென மறுத்து விடைபெற இருவரும் மனவருத்தத்துடன் வழியனுப்பினர்.
நான் பண்ணைத் தோட்டத்தை அடைந்து ஷீலாவைச் சந்தித்த நேரம் சாந்தினி உறங்கிக் கொண்டிருந்தாள். ஷீலாவுடன் தனிமையில் பேசச் சரியான சந்தர்ப்பமாக அமைந்தது.
நான் முழு விவரங்களையும் விவரிக்கச் சற்றே கலங்கிய ஷீலா மெல்ல மெல்ல ஏதேதோ நினைத்த வண்ணம் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தார். நான் மிகுந்த ஆதரவுடன் நீண்ட நேரச் சமாதான உரையாடலில் ஷீலாவைத் தேற்றினேன்.
ஒருமனதாக அவர் அம்மா குற்றவாளி என்ற உண்மையைச் சகித்துக்கொள்ளத் தயாரானார். அடுத்த பிரச்சினை சாந்தினியின் திருமணம் அது எப்படி முடிவெடுக்கப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்ப அவர் மிகவும் குழம்பி இருப்பதாகவும் மேலும் அது தன் கணவர் மற்றும் சாந்தினியுடன் கலந்தாலோசிக்க வேண்டிய விஷயம் எனக் கூறினார்.
அது முற்றிலும் உண்மை என ஒப்புக்கொண்ட நான் அவர் விருப்பம் என்ன எனக் கேட்க. நீண்ட யோசனைக்குப் பிறகு மீண்டும் அது சாந்தினி எந்த அளவுக்குத் தன் தம்பியை நேசிக்கிறாள் என்பதையும் பொறுத்தது எனவே அதைப்பற்றி எதுவும் கருத்துச் சொல்ல முடியாத நிலையென விளக்கினார்.
அவர் மன நிலை சரி என ஒப்புக்கொண்ட நான். இரண்டு வழிகளையும் யோசித்துப் பார்ப்போம் என்றேன். அதாவது ஒன்று சாந்தினி திருமணத்திற்குச் சம்மதித்துத் தொடர்வது மற்றொன்று மறுத்து விலகுவது என இரண்டு நிலைகளையும் அலசி ஆராய்ந்து இரண்டு நிலைக்கும் தயார்ப் படுத்திக்கொண்டோம். நாங்கள் இருவரும் நீண்ட நேர உரையாடலில் நேரம் போனது தெரியாமல் சட்டென நினைவு கொள்ள
ஷீலா, "இந்நேரம் சாந்தினி எழுந்துட்டிருக்கனும் என்னைத் தேடுவாள்." சொல்லி இருவரும் அவளை அணுக எண்ண அதே சமயம் (எங்களருகே மறைவிலிருந்தபடி நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவள்) வெளிவந்து ஷீலா அத்தையைக் கட்டிக்கொண்டு கலங்கித் தழுதழுத்த குரலில் ஆறுதல் சொல்ல இருவருக்கும் உண்மை விளங்கின.
ஷீலா, "நீ எப்போ டி எழுந்த? எது வரைக்கும்?"
உடனே குறுக்கிட்ட நான் "சாந்தினி நீங்க எதுவரைக்கும் கேட்டீங்கன்னு சொன்னீங்கன்னா மிச்சத்தைத் தெளிவாக்கி உங்களோடு விருப்பத்தைத் தெரிஞ்சிக்க உதவியாக இருக்கும்."
ஆதரவாக என் கையைப் பற்றியவள் சற்றே ஏளனப் புன்னகையுடன் சாந்தினி, "என்ன நடந்தாலும் இனி நான் மாமாவை கல்யாணம் மட்டும் செய்துக்க மாட்டேன் அது மட்டும் உறுதி. நீங்க என்ன சொல்லனும்னு... எனக்கு எந்த அளவுக்குத் தெரியனுமோ அந்த அளவுக்குத்தான் சொல்லுவீங்க ஹூம் சொல்லுங்கள்; பரவாயில்லை நான் கோவிச்சிக்கமாட்டேன்." சொல்லி மீண்டும் சிறிது ஏளனப்புன்னகையை வீசினாள்.
உடனடியாக என் மரியாதை கலந்த கனிவுடன் "இல்லை சாந்தினி என்னை மன்னிக்கனும் (பதற்றத்துடன்) நான் சொல்ல."
என் கன்னங்களை மிகுந்த ஆதரவுடன் பற்றியவள், "எனக்கு உங்கள் மேல நிச்சயமாகக் கோபமில்லை அப்புறம் உங்களை... எனக்கும் உங்கள் மேல நம்பிக்கை இருக்கு; நீங்கக் காரணமில்லாமல் அப்படிச் செய்யமாட்டீங்க."
உடனே அவளைக் கட்டி அணைத்து, "மிக்க நன்றி சாந்தினி; பழகின இரண்டு மூன்று நாளுக்குள்ள என் மேல் இவ்ளோ நம்பிக்கைக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். சரி இப்போது நமக்கு அதிக நேரமில்லை அதனால சில விஷயங்களைச் சீக்கிரமா பேசி முடிவெடுக்கவேண்டும்.
முதல்ல உங்கள் இந்த திடமான முடிவுக்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்கும்; அதை எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமென்றால் சொல்லுங்கள் ஆனால் நான் கட்டாயப்படுத்தல.
நான் ஏன் அதைத்தெரிஞ்சிக்க விரும்புறேன்னா ஒரு வேளை அந்தக் காரணம் நமக்கு மிக்க உபயோகமா இருந்தால்! அதாவது என் திட்டம் என்னன்னா உங்கள் மாமியார் (சாந்தினி முகம் சுருங்க) இல்லை இல்லை பாட்டி சகுந்தலாவோடைய சதி எவ்ளோ தீவிரம்/ஆழமென்று தெரிஞ்சிக்கனும்; அதாவது உங்கள் கல்யாண உறவிலும் ஏதாவது திட்டம் வெச்சிருக்காங்களான்னு தெரிஞ்சிக்கனும்."
ஷீலாவும் சாந்தினியும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் நோக்கிய படி புரியாமல், "எங்களுக்கு எப்படித்தெரியும்?"
"சாரி சாரி நான் கேகுறது உங்களுக்குத் தெரிந்தவரை அவுங்க நடவடிக்கை, அணுகுமுறை இதுல ஏதாவது பிடிக்காத அல்லது சந்தேகப்படும் படியாக ஏதாவது?"
நீண்ட யோசனைக்குப் பின் ஏதுமில்லையெனக் கூற; நானாகச் சில குறுக்கு விசாரணை செய்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா எனக் கேள்விகளைத் தொடுத்தேன். அவற்றில் வெளிவந்த சில விவரங்களைச் சரியாகப் பொருள் விளக்கம் கொண்டு ஆராய்ந்ததில் சியாமளா மற்றும் சாந்தினி ஆகிய இருவரையும் தன் மகனை மணந்து கொள்ளும்படி சகுந்தலா மிகத்தீவிரமாக விரட்டி வந்தது புலப்பட்டது.
சுருங்கச் சொன்னால் தொடக்கத்தில் மாப்பிள்ளையும் (ஷீலாவின் தம்பி) சகுந்தலாவும் மிகத் தீவிரமாக சியாமளாவை நிச்சயித்து ஏற்பாடு நடந்து பின்னர்ச் சியாமளா தவிர்த்து விலக உடனே சாந்தினியைக் கவர்ந்து வலை விரிக்க அதில் சாந்தினியும் வீழ்ந்துவிட்டாள்.
அதன் பின்னர்ப் பல தருணங்களில் சாந்தினியைக் கட்டாயப்படுத்திச் சியாமளாவையும் சேர்த்து இருவருமாகத் திருமணம் செய்து கொள்ளும் படி தூண்டிக் கட்டாயப்படுத்தத் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருப்பது வெளிவந்தது.
இதற்கெல்லாம் மசியாத சியாமளாவின் பிடிவாதத்தினால் அவர்கள் திட்டம் எதுவும் பலிக்கவில்லை அதன் உச்சக்கட்டமாக சியாமளாவைச் சரியான தருணத்தில் உடலுறவு கொள்ளத்தூண்டி அதுவும் நடக்காத பட்சத்தில் அவளுக்கு மயக்க/போதை மருந்து கொடுத்து அவளைக் கற்பழித்துக் கருவுறச்செய்வதெனத் தீவிரமாகத் திட்டமிட்டுள்ளதாகச் சாந்தினி உண்மையைப் போட்டுடைத்தாள்.
அதிர்ந்த ஷீலா, "அடிப்பாவி என்னடி சொல்லுறே! இதென்ன கூத்து இப்படியொரு கேவலமான திட்டமெல்லாம் நடக்குதுன்னு ஏன் என் கிட்டச் சொல்லலை? (சில நொடிகள் ஏதோ யோசித்தவர்) அதுதானா விஷயம் (என்னை நோக்கி) கிட்டத்தட்ட எப்போது அவள் என் தம்பிய விட்டு விலக ஆரம்பித்தாளோ அப்பவே கொஞ்சம் கொஞ்சமா சியாமளா எங்கம்மா வீட்டுப்பக்கமே போகமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்டா.
அதுக்கும் மேல என் தம்பியும் எத்தனையோ முறை அவளைத் தனியா கூப்பிட்டுப்போக முயற்சி செய்வான். ஆனால் அவள் கொஞ்சமும் பிடி கொடுக்கவே மாட்டாள்.
என்னையும் சில சமயம் கெஞ்சிக் கேட்டிருக்கிறான். ஆனால் நான் அவள் மேல ஆசையில அப்படிக் கேக்குறான்னு நினைத்தேன் ஆனால் அது இப்படிக் கேவலமான கெட்ட திட்டத்துக்குன்னு நான் நினைக்கவே இல்லை."
சாந்தினி, "ஆமாம் அதையும் சொன்னார்கள் உனக்குத் தெரிந்தால் நீ ஒத்துக்கொள்ள மாட்டேன்னு உனக்குத் தெரியாமல் ரகசியமா செய்யச் சொன்னார்கள். அதுக்குத்தான் என்னையும் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க."
ஷீலா, "அடிப்பாவி நீயுமா இப்படி?"
கலங்கிய பதற்றத்துடன் சாந்தினி, "இல்ல சித்தி வந்து நான்... வந்து.. எனக்கு ஏற்கனவே சியாமளா வாழ்க்கையைப் பிடுங்கிக்கிட்டேன்னு மனசு உறுத்தலோடு இருந்தேன் அதை நான் மாமா/பாட்டி கிட்ட சில சமயம் சொல்லி இருக்கேன்.
அவுங்களும் அதையே காரணமாகச் சொல்லி சியாமளா சின்னப் பொன்னு. சரியா சிந்திக்கிற திறமை இல்லாமல் இப்படி முரண்டு பிடிக்குறா. அதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது. இப்படி அதிரடியாக ஏதாவது செய்துதான் சியாமளா மனசை மாத்தனும்னு சொல்லி என் மனசை கெடுத்துட்டாங்க.
அந்தக் குழப்பத்தில முதல்ல நானும் ஒத்துக்கிட்டேன் அப்புறம் மெல்ல எனக்கு அது சரியில்லைன்னு பட்டது அதனால் செய்யலை. ஆனால் அவுங்க தொடர்ந்து என்னைக் கட்டயாப் படுத்திக்கிட்டே இருக்குறாங்க; நல்ல வேலை நான் செய்யலை."
வருத்தம் கோபம் பதற்றமெனப் பலவித உணர்ச்சிப் பரிமாற்றங்களுடன் சில நிமிடங்கள் தொடர்ந்து உரையாட மெல்ல என் திட்டம் உதயமானது.
"அத்தை நான் ஒரு ஐந்து நிமிஷம் சாந்தினியிடம் தனியா பேசனும்?" நான் என் திட்டத்தின் சுவாரசியத்தில் சற்றும் தயங்காமல் கேட்க வியந்த சாந்தினி அனிச்சையாய் தன் வாயில் கை வைத்து அதிர்ச்சி வெளிப்படுத்தினாள்.
ஷீலா, "அட என்னப்பா இது புதுசா இப்படிக் கேக்குற உனக்குப் போய் நான் மாட்டேன்னு சொல்லுவேனா? அவளுக்கு இஷ்டம்னா கூட்டிப்போ பேசு இல்லை எதுன்னாலும் செய்."
பதற்றத்துடன் குறுக்கிட்ட சாந்தினி, "ஐயோ சித்தி என்ன பேச்சுன்னு பேசுறீங்க கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல்."
ஷீலா, "அட என்ன சொல்லிட்டிட்டேன்னு இப்படி அலறி குதிக்கிற?"
சற்றே அன்பான கோபத்துடன் ஷீலாவை முறைத்த சாந்தினி, "ஹூம்ம் சரி வாங்க." என என்னைக் கை பிடித்து அழைத்துச் செல்ல,
கலகலவெனச் சிரித்த ஷீலா அவளைக் கையால் சுட்டி, "இதோ பாரு நடக்கிற கூத்தை! கேட்டது தம்பி; நான் சரின்னு சொன்னதும் யாரு யாரை இழுத்துக்கிட்டு போறதுன்னு பாரு! அப்படியே பறக்கிறாளே!! அடேங்கப்பா விட்டால் என் கண்ணெதிரேயே தம்பிய."
தொடரும்