Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஇரு மனங்களிலும் காதல் அரும்பி விட்டது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட தலைகீழ் நிலயில் இருந்தனர். ஏற்கனவே காதல் என்றால் என்ன என்று அறிந்திருந்த சரத், தான் காதல் வயப்பட்டு விட்டதை நன்கு அறிந்திருந்தான். ஆனால் கஸ்தூரியிடம் அதை வெளிக்காட்ட மிகவும் தயங்கினான். கஸ்தூரியோ தனக்கு வந்திருப்பது காதல்தான் என்று புரியமலேயே இந்த உணர்வை முழுவதுமாக வெளிக்காட்ட வேண்டும் என்று தீவிரமாக இருந்தாள். தன் உடலை சரத்துக்கு தந்தால் அவன் தன்னை நம்புவான் என்று நினைத்தாள். ஆனால் முழுதாக உடலுறவுக்கு அவள் தயாராகவில்லை. சரத் உடலுறவு வேண்டாம் என்று மறுக்கும் மனநிலையில் இருந்தான். தன் காதல் உண்மையானது என்று நிரூபிக்க அவனுக்கு அதுவே சிறந்த வழியாகத் தெரிந்தது. இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். மணி எட்டு முப்பத்தைந்து. 10 மணிக்குக் கிளம்பினால் போதும். என்ன செய்யலாம்?
"டிவி பாக்கலாமா?" என்று கஸ்தூரி ஐடியா தந்தாள். இருவரும் அமர்ந்து தமிழ் மியூசிக் சேனல் ஒன்றை பார்க்க ஆரம்பித்தனர். அதில் மின்னலே படத்தில் வரும் வேறென்ன வேறென்ன வேண்டும் பாடல் ஒளிபரப்பானது. கஸ்தூரி சரத்தைப் பார்த்து "நம்ம விஷயம் டிவி ஸ்டேஷன் வரைக்கும் தெரிஞ்சு போச்சா?" என்று சிரித்தாள். சரத் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தான். அதில் மாதவன் மடியில் ரீமாசென் படுத்திருப்பதைப் பார்த்த கஸ்தூரிக்கு பொறாமை கலந்த ஏக்கம் ஏற்பட்டது. படக்கென சரத் மடியில் படுத்தாள். நிமிர்ந்து அவன் முகம் பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள். மடியில் பூத்த மலராக கஸ்தூரியைக் கண்டு ரசித்தான். முதன் முறையாக அவள் முக அழகை கவனித்தான். வாவ்! இத்தனை நாள் தினமும் பார்க்கத் தவறிய அழகு! அந்தக் கண்கள்... அந்தப் புருவம்... அந்த நெற்றி... கட்டுப்படுத்த முடியாதவனாய் அவள் நெற்றியை வருடினான். கஸ்தூரி கண்களை மூடிக்கொண்டு பெருமூச்சு வாங்கினாள்.
உடலில் திடீரெனப் பரவிய உஷ்ணத்தால் அவள் உதடுகள் வறண்டன. தன்னிச்சையாக அவள் இதழ்கள் ஈரமான இடம் தேடி மேல்நோக்கி எழும்பின. சரத் கஸ்தூரி எழுந்திரிக்க முற்படுகிறாள் என எண்ணி சற்று விலகினான். ஆனால் அவன் விலகியதை கண்திறக்காமலே உணர்ந்த கஸ்தூரி அவன் சட்டையைப் பிடித்து இழுத்து அவனைத் தன் மீது கவிழ்த்தி அவன் இதழில் இதழ் பதித்தாள். இருவரின் இதழ்களும் 90° கோணத்தில் இருந்ததால் அந்த முத்தத்தின் பரப்பளவு கம்மிதான். இருந்தாலும் அந்தக் காதலின் முதல் முத்தம் என்கிற வகையில் அது இருவருக்கும் மிகவும் முக்கியமான முத்தம்.
இப்போது கஸ்தூரி சரத்தின் எச்சிலால் தன் வறண்ட இதழ்களை ஈரமாக்க ஆசைப்பட்டாள். சரத்தோ இதழ்களைப் பிரிக்காமல் உறைந்து போய் இருந்தான். கஸ்தூரி என்ன செய்வது என்று யோசிக்கவில்லை. ஆனால் அவளாக ஒன்று செய்தாள். மெல்லத் தன் இதழ்களைப் பிரித்து தன் நாவால் சரத்தின் இதழ்களைத் தொட்டாள். தன் கதவுகளை யாரோ தட்டுவதை உணரந்த அவன் இதழ்களும் திறந்து வழிவிட்டன. இருவரின் இதழ்களின் எல்லையைக் கடந்தது அந்த முதல் முத்தம். ஒருசில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில் இருவரும் கரைந்து போயிருந்தனர். சரத்துக்கு வியர்த்து விட்டது. கஸ்தூரிக்கோ இதுவரை அனுபவித்திராத மென்மையும் இதமும் இந்த முத்தத்தில் கிடைத்திருந்தது. சரத்தின் இதழ்கள் லேசாக இனிப்பதாகவே உணர்ந்தாள்.
முத்தத்தை முறித்தாள். கண்கள் திறந்தாள். "ஐ லவ் யூ சரத்! ஐ லவ் யூ!" என்று அவனை ஆசையோடு பார்த்தபடிக் கூறினாள். சரத்துக்கும் அவள் மீது இருந்த காதலைச் சொல்ல ஆசைதான். ஆனால் எப்படிச் சொல்வது? "ஐ லவ் யூ மே'ம்" என்றா? அல்லது "ஐ லவ் யூ கஸ்தூரி!" என்றா? தயங்கித் தயங்கி "ஐ லவ் யூ கஸ்தூரி..." என்றான். கஸ்தூரிக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இதை அவள் உள்மனதில் எதிர்பார்த்திருந்தாள். இத்தனை நாளாக உருவாகியிருந்த மேலாளர்-பணியாளர் உறவு இந்தக் காதலுக்கு குறுக்கே வருமோ என்று அவள் பயந்திருந்தாள். அதை சரத்தே உடைத்தது அவளுக்கு நிம்மதி அளித்தது. சரத்தின் சட்டையைப் பிடித்திருந்த கையை எடுத்து அவன் தலை முடியைக் கோதி "ஸோ க்யூட்!" என்று சொன்னாள். சரத் தன் கையை அவள் கையுடன் கோர்த்துக் கொண்டான்.
அப்படியே சரத்தின் கையைப் பிடித்து எழுந்தாள் கஸ்தூரி. அமர்ந்தபடியே அவன் மடிமீது சாய்ந்தாள். அவள் தலையைத் தன் கையால் தாங்கினான் அவன். மிகவும் வசதியாக உணர்ந்தாள். அவனது தடித்த இறுக்கமான தொடையில் அவள் முதுகெலும்பின் வளைவு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அவள் கழுத்தின் பின்புறத்தை அவன் உள்ளங்கை அணைவாகப் பிடித்திருந்தது. அவள் முகம் அவன் முகத்தின் மிக அருகில் இருந்தது. இந்தமுறை சரத் முந்திக்கொண்டான். அவள் கன்னத்தில் மெலிதாகத் தன் உதடுகளால் ஒத்தி எடுத்தான். கஸ்தூரி அந்த எதிர்பாராத முத்தத்திற்கு எதிர்வினையாக அவனை நோக்கித் திரும்ப... அதே நேரம் அவன் அடுத்த முத்தத்தைத் தர.... அது அவள் இதழ் மீது இலகுவாக அமர்ந்துகொண்டது. மீண்டும் அவள் கண்கள் சொருகிக் கொண்டன. கஸ்தூரி தன்னையறியாமல் உடலை வில்லாக வளைத்து அவன் மடியில் புழுவாக நெளிந்தாள். சரத் அவளை லாவகமாகத் தன் கைகளால் அள்ளி எடுத்து மடியில் இருத்திக் கொண்டான். அப்போது பெண்ணுக்கே உரிய உணர்வுகள் தூண்டப்பட்டவளாய் அவள் மார்புக் காம்புகள் விறைத்துக் கொண்டு அவள் ஆடையின்மீது குத்திக்கொண்டு இருந்தன. அதில் ஒருபக்கம் சரத்தின் மார்பில் உரசியது.
அவளுக்கு மட்டும்தான் விறைக்குமா என்று போட்டிக்கு சரத் உடலிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. தன் உடலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையே அறியாத கஸ்தூரிக்கு சரத்தின் கால்களுக்கிடையில் புதிதாக உருவாகியுள்ள புடைப்பைப் பற்றி எப்படித் தெரியும்? அவன் தொடைகள் மீது சாய்ந்திருந்ததால் அவனுடைய எழுச்சி அவளை தொந்தரவு செய்யவில்லை. முத்தம் தொடர்ந்தது. நான்கைந்து நிமிடங்கள் நீடித்த பின் சரத் அவளை விடுவித்து மீண்டும் அவள் கருவிழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்து "ஐ லவ் யூ டீ!" என்று உரிமையாகச் சொன்னான். கஸ்தூரிக்கு ஒரு பக்கம் சரத் திடீர் என உரிமை எடுத்துக்கொண்டது வியப்பாக இருந்தது. மறுபுறம் தான் அவனின் காதலியாக முழுமையடைவதாக உணர்ந்தாள். எழுந்து அமர முற்பட்டு கையை ஊன்றினாள். "ஹே! வாட் இஸ் திஸ்?" என்று குறும்பாகச் சிரித்தபடி சரத்தைப் பார்த்தாள். அவள் கையை சரத்தின் பேண்டில் உருவாகி இருந்த கூடாரத்தில் ஊன்றி இருப்பதைக் கண்ட சரத் வெட்கித் தலைகுணிந்தான்.
அவளும் வெட்கத்தில் முகம் சிவந்தாள். அறையில் டிவி ஓடிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் இருவர் காதிலும் எந்த ஒரு சத்தமும் விழவில்லை. இருவரும் ஆழ்கடலின் அமைதியை உள்ளத்திலும் சுற்றுப்பறத்திலும் உணர்ந்தனர். கஸ்தூரியின் காதல் வெடிப்பில் மன்மத ரசம் கசியத் தொடங்கியது. தொடைகளுக்கிடையில் ஒரு ஈரப்பதமான வட்டம் படர்வதை உணர்ந்தாள். இயல்பாக இப்படி அவளின் உறுப்பில் சுரப்பு ஏற்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கும். இப்போதெல்லாம் "வயதாகிவிட்டதால் வறண்டு போய்விட்டது" என்று வாஸலின் தடவித்தான் உடலுறவே நடக்கிறது. தன் உடலா இப்படி ஊற்றெடுத்து ஓடுகிறது என்று ஐயமுற்றாள். ஒருவேளை பீரியட்ஸ் ஒரு வாரம் முன்பே வந்துவிட்டதோ என்று சந்தேகம் தட்டியது.
"ஐ வான்ட் டு யூஸ் பாத்ரூம்" என்று கூறிவிட்டு பாத்ரூமுக்குள் சென்றாள். சரத் லேசான ஏமாற்றத்துடன் டிவியைப் பார்த்தான். அதில் ஏதோ முறுக்குக் கம்பி விளம்பரம் ஓடிக்கொண்டு இருந்தது. தன் முறுக்குக் கம்பியை நினைத்து அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி சேனலை மாற்றினான். அதில் மஜ்னு படத்தில் வரும் முதற்கனவே பாடல் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே ஃப்ளஷ் செய்யும் சத்தம் கேட்டது. கஸ்தூரி "மறுபடி ஏன் வந்தாய்... நீ மறுபடி ஏன் வந்தாய்..." என்று பாடலைப் பாடிக்கொண்டே சந்தோஷமாக வெளியே வந்தாள்!
ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வு தான் ஏற்படுகிறது.அருமையான நடை.கஸ்தூரிக்கும் சரத்துக்கும் இடையில் நெருக்கமான உரையாடல் கதைக்கு சுவை கூட்டும்.அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.