Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஜெயராஜ்
{இந்த நெடுங்கதை முழுவதும் கற்பனையே. கதையில் வருவது போல் சித்தர் மடமும் கிடையாது வைத்தியமும் கிடையாது. இது எவர் மனதையும் புண்படத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.}
“மூலிகை நெய் வேணுமா” என்ற குரல் கேட்டு மதிவதனி வாசல் பக்கம் பார்த்தாள். தலையில் காவி முண்டாசும், நெத்தியில் சந்தனப் பொட்டும் குங்குமும் பளிச்சென்று விளங்க சிரித்த முகமும், பொசு பெசுவென்ற தாடியும், அரும்பு மீசையுமாக, ஒரு இளைஞன் நிற்பதைத் பார்த்த மதி டிவியின் ஓசையைக் குறைத்து கதவின் தாழ்ப்பாளைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
அவன் சட்டை போடவில்லை. டிராமாக் காரன் மாதிரி பாகவதர் கிராப்பு தலையில் கட்டி இருந்த காவி நிற விவேகானந்தர் முண்டாசு.. தோளில் மஞ்சள் நிற சால்வைக்கு அடியில் பரந்த மார்பில் மண்டிக்கிடந்த முடி மீது தாயத்து, ருத்ராட்ச மாலை, இரண்டு வடம் ஏதோ கறுப்பான மணி மாலை எல்லாம் தவழ்ந்தன.
இடுப்பில் குங்குமச் சிவப்பில் ஒத்தை வேட்டிய கச்சான் கட்டி இருந்தான் அவன் கைப்பையில் ஒரு புட்டியில் மஞ்சள் நெய் தெரிந்தது. அருகில் அவனைப் பார்த்த போது அவனுக்கு முப்பது வயசு கூட இருக்காது என்று தோன்றியது.
.எப்படியும் வெண்ணெய் வாங்கி நெய் காய்ச்ச வேணும், ஆகவே இவனிடம் வாங்கிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. வாங்க உள்ளே என்றவள் கதவை முழுசாகத் திறக்க கையைத் தூக்கியபோது இடுப்பு பளிச்சென்று வலித்தது. முழங்கால் வலி ஏற்கனவே கேட்க வேணாம். வயிற்றில் ஏப்பம். வந்த போது படார் என்று வாயு பிரிந்து மானத்தை வாங்கியது. முப்பது வயசுலியே இதெல்லாம் வந்து தொலைக்கணுமா என்று தனக்குத் தானே முனகிக் கொண்டே கதவை முழுமையாகத் திறந்தாள்.
“இது சாதாரண நெய் இல்லை அம்மணி. காட்டுமலை சித்தர் மூலிகை தீவனம் வைத்த பசுவைக் கறந்து எடுத்தது,” என்று அவன் புன்னகைத்தான். கமல்சார் மாதிரி ஹீரோ கணக்காத்தான் இருக்கான் என்று மதி நினைத்துக் கொண்டாள்.
“உள்ள வாங்க பேசலாம்’ என்று அவள் சொல்ல அவன் பின் தொடர்ந்தான்.
‘மூலிகை தீவனம் வெச்ச பசு நெய்யா? இது என்னாடா இது? இப்படியும் உண்டா நாங்கேட்டதே இல்லியே”, என்று அவள் வியப்புடன் அவனைப் பார்த்தாள்.
“ஆமாங்க. உண்மைதான். நீங்க நம்ப மாட்டீங்க. ஏன் தெரியுமா இப்பல்லாம் பசுவுக்கு பேக்டரில சேஞ்ச தீவனம் கொடுக்கறாங்க. மேய விடறதில்ல. ஊசி போட்டு பாலை அதிகமாக்கிடறாங்க. பசுவை செனை படுத்த பொலி காளைய யூஸ் பண்ணிட்டு இருந்தோம்.
இப்போ அதிகமா வெள்ளைக்கார ஜாதி பசுங்கதான். அதுங்க கன்னு போடறதுக்கும் காளை மாட்டை இயற்கையா சேர விடறது கிடையாது. அதுக்கும் டாக்டர் ஊசி ஏத்தறாரு.”
.”நம்ப ஊரு பசுவுங்க லச்சுமின்னு சொல்லுவாங்க அந்த லச்சுமி கடாச்சம் இந்த மாதிரி சாதி கெட்டதுங்களுக்கு கிடையாது. அந்தப் பாலை மெசின்ல போட்டு வெண்ணையை எடுத்து காய்ச்சி புட்டில போட்டு நூறு ரூவா அதிகமா விக்கறாங்க. அதை நீங்க வாங்கி சாப்பிடறீங்க. அதுனாலதான் உங்களுக்கு வாள்கை நல்லதா தெரியலை,” அவன் சிரித்த முகத்துடன் தொடர்ந்த பேச்சு அவளைக் கவர்ந்தது.
“இடுப்புல வலி. முழங்கால் பிடிப்பு. அசீரணம். புளிச்ச ஏப்பம் வருது. கெட்ட சொப்பனம். ஆண்களுக்கு தூக்கத்தில விந்து வீணாவது. பெண்களுக்கு மாதவிடாய் தவரி வருவது, அப்போ அதிக வலி, மலச்சிக்கல் ஏற்படுவது, வெள்ளைப் போக்கு, சூக்குமத்தில அரிப்பு, தூக்கம் கெடுது. அடிக்கடி வவுத்தில இரைச்சல், வாயு அதிகம் பிரியுது...” என்று அவன் அடுக்கிக் கொண்டே போன போது மதிக்கு படாரென்று வாயு பிரிய வெட்கத்தில தலையக் குனிஞ்சா.
பேச்சை மாத்த மதி, “நீங்க என்ன சாமி டாக்டர் மாதிரி அவ்வளவு கரிக்டா எனக்கு இருக்கற எல்லா வலி வேதனைங்களை லிஸ்டு போட்டு அப்படியே புட்டு புட்டு வெக்கறீங்க. ஆச்சரியமா இருக்கே” என்று அவள் மோவாயில் கையை வைத்து வியந்தாள்.
அவன் தாடியை உருவி விட்டுக் கொண்டு “நான் இங்லீஸ் டாக்டர் இல்லை அம்மணி. நான் சொன்னதுல என்ன ஆச்சரியம்? நீங்க வளைய சிரிச்சுக்கிட்டு வர்ற வயசு. மகாலட்சுமிக்கு உண்டான அழகோட இருக்கீங்க. பவுன் கலரு. அம்சமான உடல் வாசி இருக்கு. அதுக்கேத்த வளர்ச்சி இருக்கு. ஆனா ஏதோ குறை தெரியுது அகத்தின் அழகு முகத்திலேம்பாங்க. உங்க மனசில இருக்கற அந்த தளர்ச்சி வானத்தில மேகமூட்டம் சந்திரனை மறைக்கிற மாதிரி உங்க முகத்தின் அழகை மறைக்குது”னு அவன் அவள் அழகைச் சொன்னது மதிக்கு சந்தோசமாய் இருந்தது.
“நான் சொல்றேனேன்னு தப்பா நினக்காதீங்க. இப்போ உங்க உடம்பு மனசு ரெண்டுமே சரியில்ல. கண்ணு சுருங்கி இருக்கு. வயித்த வலிக்குதுன்னு புடவையை இடுப்பில தழைய கட்டி இருக்கீங்க. மார் தளந்திருக்கு. உதடு உலர்ந்திருக்கு. முழங்காலப் பிடிச்சுக்கிட்டே நடக்கறீங்க. இதெல்லாம் அப்படியே உங்க உடல் வேதனைங்களக் காட்டுது” என்று அவன் விளக்கினான்.
“அடங்கப்பா! ஏது என்னைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு ரொம்பவே தெரியுது...” என்று அவள் சொல்லி, “எனக்கு நெய் வேணும். அப்படியே நீங்க, உக்காந்து பேசுங்க...” என்று அவள் சொன்னதும் அவன் தரையில் வேட்டியை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு குந்திக் கொண்டு உட்கார்ந்தான். கையில் இருந்த பையையும் நெய் புட்டியையும் கீழே வைத்தான்.
மதி அவனுக்கு எதிரே இருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தாள்.
கை இரண்டையும் கோர்த்துக் கொண்டு அந்த சாமியார், “அம்மணி, நான் காட்டுமலை சித்தர் மடத்தைச் சேர்ந்தவன். எனக்கு சித்தர் பரம்பரை வெச்ச பேரு குரங்குப்பிடி சித்தன். எங்க மடம் இருக்கற காட்டுமலையை விட்டு வெளிய வந்தா அந்தப் பேரை சொல்றதில்ல, கேசவன்னுதான் சொல்லுவேன்.” என்று அவன் சொன்னதும் அவள் சிரித்தாள்.
“அதென்னங்க குரங்குப்பிடின்னு பேரு? உங்களைப் பார்த்தா அனுமார் மாதிரி தெரியலயே” என்று அவள் கேட்டதற்கு, அவன் சிரித்தான்.
“பதினெட்டு வருசத்துக்கு முன்னே, எனக்கு ஏழு வயசானபோது ஒரு கருங்குரங்கு என் கையப் பிடிச்சு காட்டுமலை சித்தர்கிட்ட கொண்டு வந்து விட்டுச்சாம். ஆனா அந்த குரங்கு கையை நான் விட மாட்டேன்னு அழுதேனாம். அதுலேந்து அதுவே பெயராயிடுச்சு.
குருநாதர், அவர் கிட்ட படிச்ச பிடி வைத்தியத்தில நான் கொஞ்சம் திறமை ஆனதும் அவரு அதுதான் உனக்கு சரியான பேர்னு அவரு சொல்லிட்டாரு. ஒரு குரங்கு மாதிரி தனது கட்டளைய கெட்டியாப் பிடிச்சு செய்யறவன் அப்படிங்கறாரு. அதுதான்,” என்று விளக்கினான்.
“அது கெடக்கட்டும் அம்மணி. ஒண்ணு சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு உள்ள வலி, வாதம், பசி இன்மை, வாயு பிரிதல், இதுக்கு முக்கிய காரணம் உங்க குடும்ப வாள்கை அவ்வளவு சுகமாக இல்லைனு தெரியுது. அதாவது ஒரு திருமணமான ஸ்திரீக்கு அவுங்க புருசன் செய்ய வேண்டிய ரகசிய கடமைகள் இருக்கு. அது சரியா நடக்கலை. அதுவே குடும்ப ஸ்திரீக்கு வர்ற வலி வாதம் அசீரணம், கெட்ட கனா, வெள்ளை போக்கு இப்படி பல கஸ்டத்துக்கு காரணம். நான் பேசினது அதுனப் பிரசங்கம்னா இப்பவே சொல்லுங்க போயிடறேன்”னு எழுந்து நின்னான்.
மதி முகம் வெட்கத்தில் சிவந்தது. “இல்லை வந்து நீங்க சொன்னது ஒரு....விதத்தில சரினுதான் தோணுது. உக்காருங்க.... அது சரி எங்கேங்க காட்டுமலை சித்தர் மடம், நான் கேட்டதே இல்லியே?” என்று மதி பேச்சை மாற்ற கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கதை கேட்டாள்.
“எங்க மடம் குற்றாலங்கிட்ட இருக்கு. ரெண்டு மணி நேரம் மலையேறிக் போவணம். பதினெட்டு சித்தர் தமிழ் நாட்ல இருந்தாங்க. அதுல காட்டு மலை சித்தர் பதினெட்டாவது பீடம். அவர் என் கொள்ளுத் தாத்தாவுக்கும் கொள்ளுத் தாத்தா ஆவணும். அவர் பரம்பரையில வந்தவங்களுக்கு மூலிகை வைத்தியம் தெரியும்.
அவுங்க மலைக் காடுங்கள்ள போயி அந்த மூலிகைங்களைக் கொண்டு வந்து மக்களுக்கு கொடுத்து வைத்தியம் பார்ப்பாங்க. அதனால மக்கள் வாள்கையில உடலளவிலும் உள்ளத்திலும் இன்பம் பெருகும்.” அந்த ஆள் சிரித்துக் கொண்டே விடாமல் பேசினான்.
“சனங்களுக்கு எங்க கிட்ட ஒரு மதிப்பு இருக்கு. எங்க சித்தர் பரம்பரைக்கு பசுமாடுங்கதான் சொத்து. எல்லாம் மக்கள் அன்பளிப்பா கொடுத்தது. மாடுங்களுக்கு நாங்க தீவனம் வெக்கறது கிடையாது. அதுங்க மலைக் காடுகளில காட்டு மூலிகை மேயும்.
“அந்த லச்சுமிகரமான மாடுங்களுக்கு இயற்கையிலேயே எது நல்ல மூலிகைன்னு நல்லாத் தெரியும். அதுங்க கன்னு போட நாங்களா பொலிகாளை இட்டாந்து விடமாட்டோம். அதுங்க இஷ்டமானபோது காட்டுல காளையோடு சேரும், பல்கும், பெருகும் தன்னிச்சையா இயற்கையா நடக்கும். அதைக் கட்டிப் போட மாட்டோம். ஆனால் அதுங்க தானாகவே விளக்கு வெக்கற நேரத்தில மடத்துக்கு திரும்பிடும். அந்தப் பாலைக் கறந்து குடிப்போம். மிச்சம் இருக்கறதை நெய்யாக்குவோம். ஆனா நெய்யை விக்கற தொழில் இல்லீங்க.” என்று அழகாகப் பேசினான் அவன்.
“இவ்வளவு பேசறீங்க ஆனா இப்போ நெய் விக்கத்தானே வந்தீங்க?” என்று கேட்டாள் மதி.
அவன் வெள்ளைப் பல் தெரிய சிரிச்சான். “சரியா கேட்டீங்க அம்மணி. வருசத்துக்கு ஒரு தடவை ஆறுபடை வீடுகளுக்கும் நெய் அபிஷேகம் சேஞ்சு முருகனை தரிசிச்சு ஆக வேண்டியதைச் செய்றது பரம்பரை வழக்கம். கடைசியா திருத்தணியை முடிச்சிட்டு வர்றேன். இந்தப் பக்கத்தில ஒரு கோயிலுக்கு குருநாதர் கொடுக்கச் சொல்லி இருந்தாரு. அது போக மிச்சமான நெய் உங்க மாதிரி கஸ்டப்பட்ட மனசுகளுக்கு உடம்பு திடமா இருக்கணும் மனசு கல்மிசம் கொறைஞ்சு பக்தி பரவணும் புருசன் பொண்சாதி வாள்கை இன்பமா பரவணும் அப்படின்னு நாங்க நெய்யை கொடுக்கறது வியாவாரம் இல்லீங்க.”
முச முசனு அவன் மார்புல புரண்ட கருப்பு மணி மாலையை தடவி விட்டுக் கொண்டு பேசினான். “இதை நல்ல காரியத்துக்கு ஆவட்டும்னு ஒரு தொண்டுன்னு செய்றேன். சித்தர் சமாதில மூலிகை வைத்தியத்துக்குப் பணம் வாங்க மாட்டோம். ஏதோ உங்க மாதிரி அம்மணிங்க ஐயாவுங்க சந்தோசப்பட்டு கொடுக்கற பணத்தை வர்ற ஏழைங்களுக்காக உபயோகிப்போம்” என்று அவன் விளக்கினான்.
மதி முழங்கை வலி போக கையை உயர்த்தி சோம்பல் முறித்தாள். “சாமி நீங்க சொன்ன அத்தனை வாதமும் வேதனையும் எனக்கு இருக்கு. எத்தினியோ இங்லீஸ் வைத்தியம் பார்த்து மாத்திரை முழுங்கறேன். ஆனா வேதனை தீரலீங்க. அப்படி இருக்க எனக்கு மூலிகை வைத்தியம் பண்ணி உடம்பு எப்படிங்க சரியாவும்? டாக்டரானா நெய் கூட அதிகம் சாப்பிடக்கூடாதுங்கறாரு டாக்டரு. எனக்கு ஏற்கனவே உடம்பு தடிச்சிருக்கு ரத்தத்தில கொழுப்பு அதிகங்கறாரு” மதி சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டாள்.
அவன் கடகடனு சிரிச்சான். “நீங்க வக்கீல் மாதிரி பேசறீங்க அம்மணி. நாங்க வாழற காட்டு மலையிலதான் முருகன் வேடானக வந்து வள்ளியைக் கவர்ந்தான். முருகனும் வள்ளியும் ஒண்ணு சேர்ந்த அதே இடத்திலதான் எங்க மூல சித்தர் ராத்தங்கா சாமி சமாதி இருக்கு.
“அவர் பிறந்த கதையே வாய்மொழி யா தலைமுறை தலை முறையாக் கேட்டது. முருகனும் வள்ளியும் உடல் நெகிந்து சங்கமிச்ச இடம் அது. அப்போ வள்ளி ஊடல் பண்ணி விலக, முருகனுடைய வீரியம் மலையில் சிந்திச்சு. அது ஆண்டவன் வீரியமாச்சே! அதுக்கு பவரு அதிகம். அதன் தகிப்பில மலையில் இருக்கிற லட்சாதி லட்சம் செடி, கொடி, மிருகம், வயசுப் பொண்ணுங்க இப்படி எல்லா ஜீவராசியும் கருவாயிடுச்சுங்க” அவன் தொடரந்து பேசினான்.
“அட அசிங்கமே! ஆண்டவனே இப்படி செய்யலாமா’ என்று வாயைப் பிளந்து கொண்டே கதை கேட்டாள் மதி.
“ஆண்டவன் மனுசம் மாதிரி இல்ல அம்மணி. அப்படி நமக்கு புரியற மாதிரி நம்மோட விளையாடி நல்வழி காட்டுவாரு. அதனால அவர் செய்கையில அதுக்கெல்லாம் ஒரு பொருள் இருக்கும். அப்படி நடந்தப்போ ஒரு ஏழை வேடுவச்சி கன்னிப் பொண்ணு பதினாலே வயசான கருத்தம்மானு பேரு. காட்டுல சுள்ளி பொறுக்கப் போனவ களைச்சுப் போய் படுத்துத் தூங்கிட்டா. அந்த வேளையில அந்த வீரியம் அவளைத் தாக்க கர்ப்பமாயிட்டா. அது தாயில்லாப் பொண்ணு. அவள் கிழவனான அப்பன், ஆண்டவனை வேண்டி, முருகா, இது என்ன அநியாயம் நடந்திருக்கு. என் கன்னி மகளை கர்ப்பமாக்கிட்டானே எவனோ பாவி, நீதான் நியாயம் சொல்லுன்னு அழுதாரு.
“அந்த அவமானம் தாங்காம சாவலாம்னு அங்கிருந்த ஜூனையில மகளோடு குதிச்சாரு பெரியவர்,” என்று அவன் சொன்னதும், “நான் சொன்னேனே, ஆண்டவனே இப்படி சேஞ்சா பின் என்னா பண்றது,”னு மதி, சொன்னாள்.
அவன் கையை உயர்த்தி அவளைத் தடுத்தான். “வேல் முருகன் அவங்களை தண்ணீல முழுகும் முன்னால கையில் ஏந்தி கரையில் கொண்டு வந்தான். ஜெகஜோதியா அவுங்க கண் முன்னால வள்ளியோடு நின்னான்.
“ஐயா பெரியவரே, உங்க மகள் கர்ப்பத்துக்கான காரணம் நாங்க ரெண்டு பேர்தான். தவறு என்னுடையது. ஆனால் அது வள்ளியால் வந்ததுச்சுன்னு மன்னிப்புக் கேட்டான் முருகன். பெரியவர் வாய் அடச்சு நின்னாரு.”
“உங்க மகள் வவுத்தில தெய்வீகக் குழந்தை வளருது. உங்க மகள் கன்னி கழியாம அவனைப் பெத்துப்பா. உங்க மகளுக்கு, சனங்க கன்னி காத்த கருத்தம்மன்னு கோயில் கட்டுவாங்க. அந்தக் குழந்தையால் இந்த பூமியே புண்ணிய பூமி ஆயிடும். அவன் வளர்ந்து பெரிய ஞானியா ஆயி சனங்களுக்கு நல்ல வழி காட்டுவா”ன்னு சொல்லிட்டு மறைஞ்சாரு.
குந்திக் கொண்டு உட்கார்ந்திருந்த சித்தர் “அம்மணி உங்க மனசில இதை நம்ப மாட்டீங்க. ஆனா அந்தக் காலத்தில பக்தி பரவசம் அதிகம். அந்தப் பொண்ணுக்கு தேவப் பிரசவம் ஆகவே முருகன் அருளில் கருத்தம்மா ஒம்பது மாசம் கர்ப்பம் காக்கல.. அவளுக்கு ஒரு அழகான குழந்தை அந்த வினாடியே பிறந்துச்சு அந்த தெய்வக் குழந்தைக்கு காட்டு ராயன்னு அதாவது காட்டு ராஜான்னு பேர் வெச்சாங்க. புத்திசாலிப் பையனா வளர்ந்தான். அந்தக் காட்டுல தன்னிச்சையா தாத்தா மாடு மேய்க்கறப்போ திரிவான். ராயன் எட்டாவது வயசில காணாமல் போயிட்டான். தாயும் பாட்டனும் உறவுக்காரங்களும் அளுது புலம்பினாங்க.”
“வேல் முருகன் பாட்டன் கனவில வந்து கவலைப் படாதீங்க ராயன் சித்தோபதசம் படிச்சுட்டு அடுத்த வருசம் திரும்புவான் மக்களுக்கு நல்லது செய்வான் அப்படின்னாரு. அப்படித்தான் ராயசித்தர் தோணினது. முருகன் அருள் பெற்ற அந்த மலை ஜீவ ராசிங்களுக்கு விசேஷ சக்தி இருக்கு. அபூர்வ மூலிகைகள் இருக்கற அந்த மலையிலியே எங்க மடத்தை ராயன் தன்னுடைய பதினெட்டாம் வயசுல ஆரம்பிச்சாரு.” என்று அவன் அழகாகச் சொன்ன கதையை மதி ரசித்துக் கேட்டாள்.
“நல்லா சினிமா காட்றா மாதிரி பேசறீங்க” என்று அவள் சொல்ல அவன் கட கடன்னு சிரிச்சான்.
“சினிமா என்னாங்க அதை விட அதிக வினோதமான காரியங்களை சித்தர்கள் சேஞ்சாங்க. அந்த ராயசித்தர் சித்தர் காட்டு மலையில கண்காணம போயி பத்து வருசம் சாத்திரம் படிச்சு மூலிகை ரசாயனம் கண்டுஅதுக்குப் பிறகுதான் மடத்தை ஆரம்பிச்சாரு. அண்டி வந்த மக்களுக்கு முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் பிள்ளைப் பேரு,
குடும்ப உறவு பிரச்னை தீர அளித்து அவுங்க குறைகளை நீக்கினாருன்னு ஐதீகம். அவரைக் கண்டு பொறாமைப்பட்ட மற்ற ரிஷி முனிவருங்க அவரைக் கொல்ல ஒரு கொடிய ராட்சதனை ராவில அனுப்பினாங்க.”
மதி சிரிச்சா. “சாமி டிவி சீரியல்ல இப்படித்தான் ஆவுது நல்லா கதை சொல்றீங்க, சொல்லுங்க. நான் காப்பி போட்டு கொடுக்கறேன்”னு எழுந்து நின்னா.
சித்தர் சிரிச்சாரு. அவரும் எழுந்து நின்னாரு.“நான் சொன்னா நம்பிக்கை வரலை. கதை இல்லீங்க இது. நடந்த விசயம். கேளுங்க. ஆனால் சித்தரோட சித்து மகிமையால அந்த காதகன் ராச்சதன் கண்ணில சித்தர் படலை. மாயமா மறைஞ்சிட்டாரு. காலையில் அந்த ராட்சதன் பாம்புக் கடிபட்டு செத்துக் கிடந்தான். அன்னிலேந்து ராய சித்தர் இரவில யார் கண்ணுக்கும் தெரியமாட்டார்னு சொல்லுவாங்க.
அதனால ராய சித்தருக்கு ராத்தங்கா சித்தர்னு பேரு வந்துச்சு. இப்போ நான் ஒம்பதாம் தலைமுறை” என்று கதையை முடித்தவன், “அம்மணி, நான் காப்பி தேத்தண்ணி இதெல்லாம் குடிக்கமாட்டேன். மோரு இருந்தா கொடுங்க. உடம்பு வேத்து வடியுது”னு மாரை துண்டால் துடைச்சு விட்டான். .
மதி மோரைக் கலந்து கொண்டே“அவரு சமாதி ஆன பிறகு வந்த நீங்கள்ளெல்லாம் எங்க வைத்தியம் படிச்சீங்க” என்ற கேள்விக்கு உடனே பதில் அளித்தான்.
“ராத்தங்கா சித்தர் மனோதேக கோசம்னு ஒரு ஓலைச் சுவடில அவர் கண்டு பிடிச்ச வைத்தியத்தை எழுதி வெச்சார். இப்போ அந்த ஓலை கிடையாது. ஆனால் வாய் வழியாக அந்த உபதேசம் தொடறுது. அதைத்தான் நானும் படிச்சேன்,” என்று சொன்னவன் மோரை மடக்கு மடக்குனு முழுங்கிட்டு கிளம்பத் தயாரான போது மதி அவனை நிறுத்தினாள்.
“என்னாங்க என் உடம்பு உபாதி வலிக்கு வழி சொல்லாம போகறீங்க. இருங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க. எனக்கு நெய்யும் வேணும்,” என்று மதி கேட்டாள்.
“உங்க உடம்புக்கு மூலிகை வைத்தியம் மட்டும் போதாதுங்க. நமக்கு இருக்கற வேதனைகள் பாதி உடம்பால மீதி பாதி மனசால. எந்த மனுசனுக்கும் பொன், பெண், உறவு, நிலம் காணி சொத்து ஆகிய இதுலதான் வேதனைகள் உண்டாகுது.
அது மாதிரி பொண்ணுங்களுக்கு, ஆண் உறவுல பிரச்னைகள், பொன்னாசை, பிள்ளைப் பேறு இந்த மூணுலதான் பிரச்சினைங்க உண்டாகுது,” என்றவன் கழுத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டே தொடர்ந்தான்.
“இந்த மாதிரி உபாதிங்க உடம்பும் மனசும் ஆன்மீகத்தோட சேர்ந்த விசயம். இந்த உபாதிங்க தீர தாங்திரீக யோகம் வழிகாட்டுது. அதன்படி மது, மாமிசம், மிதுனம் (அதாவது சம்போகம்) ஆகிய அடிப்படையில சில கிரியைகளைச் செய்வாங்க.” அவன் பேச.
“அடஅசிங்கமே. அப்படி கெட்ட வேலை பண்றதுல வைத்தியமா? கிரியையா சாமி? விளங்கலையே” என்று மதிக்கு கேட்க ஆசை ஆனால் தைரியம் இல்லை.
“உங்க மனசுல என்னடா வந்தவன் சித்தர்ங்கரான். கெட்ட விசயம் பேசறான்னு தோணுது, இல்லியா?” என்று கேசவன் கேட்டதும் அவள் திகைத்தாள்.
“ஆமாங்க. தப்பா நினைக்காதீங்க. எம்மனசில அப்படித்தான் தோணுச்சு. அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சிச்சு?” என்று முகம் சிவக்க ஒப்புக் கொண்டாள் மதி.
“உங்க நினப்பில தப்பே இல்லீங்க. பாமர மக்களுக்கு அப்படித்தான் தோணும். நிறைய பேர் நாட்டுல சாமியார்னு சொல்லிக்கிட்டு சுத்தறானுக. ஏமாந்த பொண்ணுங்களை மயக்கராங்க. சினிமா போட்டு அதையே கதையாக் காட்றான். அதனால நீங்க கட்டாயம் சாக்கிரதை காட்டணும். அது உங்க கடமை.”
“ஆனால் நான் வியாபாரத்துக்கு வரலை அம்மணி. உங்களைப் பார்த்தா நல்ல குலம் குடும்பமுன்னு தெரியுது. ஆனா உங்க மனசும் உடலும் சரியில்ல. உங்க புருசன் ஒரு பெண்சாதிக்கு வேண்டிய அக்கறைய காட்ட மாட்டேங்கராரு அவர் கட்டினவளுக்கு உடல் ரீதியா செய்ய வேண்டிய கடமைங்கள செய்றது இல்ல. அதனால உங்களுக்கு வாள்கைல எதுவுமே பிடிக்கலை. அகத்தின் அழகு முகத்திலேம்பாங்க. இதெல்லாம் உங்க அழகான முகத்தைப் பார்த்து மதிவதனினு பேரு வெக்கலாம். பவுர்ணமி நிலா மாதிரி ஜொலிக்க வேண்டிய முகம் சோகம் மேகமூட்டம் மாதிரி மூடி இருக்கு...”னு சித்தர் சொன்னதும் மதி ஷாக் ஆயிட்டா.
“அது எப்படி சாமி எம் பேரு மதிவதனி தெரிஞ்சுது. யாரையாவது கேட்டிங்களா”னு ஆச்சரியத்தோட மதி கேட்க அவன் சிரிச்சான்.
“அம்மணி, பெயர் பொருத்தம் பலமா இருக்கு உங்களுக்கு. நான் யாரையும் கேட்கல. ஏதோ உங்க முகத்தைப் பார்த்தப்போ தோணிச்சு. வேற ஒண்ணும். உங்க ட்ரபிளுக்கு எல்லாம் இங்லீஸ் வைத்தியத்தில மருந்து இல்லீங்க. எங்க காட்டு மலை சித்தர் கிட்ட இருக்குங்க.” என்று அவன் தொடர்ந்தான்.
“அந்த பரம்பரையில மூலிகை, வைத்தியம் பத்தியம் தவிர ரெண்டு அடிப்படைக் கிரியைங்க இருக்கு, மூணு விதமான பிடி வைத்தியம் மற்றும் சில ரகசியமான கிரியைங்க செய்யணும். அப்போதான் உங்க மனசிலும் உடம்புலையும் உள்ள உபாதிங்க சரியாவும்,” என்று விளக்கினான்.
மதி திடுக்கிட்டுப் போனாள். “ஆமாங்க நீங்க எல்லாம் கதை மாதிரி என்னப்பத்தி அளகா சொல்றது சரி. நீங்க சொன்ன மாதிரி எனக்கு உடம்புல மட்டுமில்ல, மனசுல ஏகப்பட்ட வேதனைங்க. ஆனா அதெல்லாம் என்னைக் கட்டின புருசனுக்கே இதுவரை தெரியாதுங்க புருசனுக்கும் பொண்சாதிக்கும் இதுனர்துல எத்தினியோ ரகசியம் இருக்கும். அது கட்டினவருக்கே தெரியலேன்னா அந்த விசயத்தை இன்னொரு ஆம்புளையான நீங்க இப்படி பப்ளிக்கா எப்படி சொல்ல முடியுது?” அவள் முகம் சிவந்து கண்ணில் நீர் ததும்பியது.
“கவலைப் படாதீங்க அம்மணி. நீங்க விவரம் சொன்னா ஏதோ என்னால ஆன எங்க குருநாதர் படிப்பிச்சத வெச்சு உங்க பிரச்னைங்களுக்கு வழி தேடலாம். எங்க மடத்துல எத்தினியோ பொண்ணுங்க தாய்மாருங்க வர்றாங்க. புருசனுங்களும் வர்றாங்க. அவங்க வந்து சந்தோசமா திரும்பி தங்கள் வாள்கையத் தொடரப் போறாங்க. எம்மேல நம்பிக்கை இருந்தா சொல்லுங்க,” என்று அவன் விளக்கம் சொன்னான்.
மதி சில கணங்கள் யோசித்தாள்.“சாமி ஏதோ நீங்க உறவுக்காரங்க மாதிரி உரிமையோட பேசறீங்க. தப்பு சொல்ல மாட்டேன். அதனால உங்க மேல ஒரு நம்பிக்கை இருக்கு. ஆக யாராண்டையும் சொல்லாத விசயத்தை சொல்றேன் அதை உங்க மனசுல வெச்சுக்கோங்க.
“என் வாள்கை வெருப்பா ஆயிட்சுங்க. எங்க வீட்டுக்காருக்கு ஓல் சேல் எண்ணெய் வியாபாரம். காலையில எட்டு மணிக்கு கடைக்குப் போனா ராவுக்கி பத்து மணிக்கி வந்து சோத்தைத் துண்ணு ட்டு படுத்துடறாரு. நல்லதா நாலு வார்த்தை பேசறிதில்ல. ஏதுடா ஒரு மனுசி, தாலி கட்டின பொண்சாதி வீட்ல தனியா இருக்காளே அவளுக்கு அன்பா ரெண்டு வார்த்தை பேசி என்ன வேணுமின்னு கண்டுக்காம படுத்து கொறட்டை விட்டு தூங்கறதுதான் அவர் வழக்கம். கேட்டா பணத்தை நீட்றாரு, சினிமா பாரு, ஓட்டல்ல சாப்பிட்டுப் பாருடிங்கராரு. ஒரு பொண்சாதிக்கு, அது மட்டும் போதுமா?”
“சரக்கெடுக்க அடிக்கடி ஊருக்கு போயிடராரு. இப்போ பாருங்க சித்தூரு, நெல்லூருன்னு ஒரு வாரம் என்னைத் தனியா உட்டுட்டு அம்போன்னு போயிட்டாரு. ஒரு பொண்ணுக்கு கட்டின புருசன் கிட்ட இன்பமான வாள்கைதான் எதிர்பாக்கறா. இப்போ எட்டு வருசமா இப்படி அண்டாம இருந்தா என்னத்தை செய்வா…” என்று அழுகையை அடக்கிக் கொண்டு குரல் கம்ம பேசனாள்.
“அம்மணி நீங்க அளகா இருக்கீங்க. லச்சுமி மாதிரி முகம். அம்சமான உடம்பு. நல்லா பேசறீங்க. உங்க கஸ்டம் யாருக்கும் வராதது இல்லீங்க. பல பொண்ணுங்க எங்கிகிட்ட சொல்றதுதான். ராத்தங்கா சித்தர் எழுதி வெச்சபடி புருசன் மனைவி சம்போகம்னா உடம்புங்க மட்டும் சேர்ரது இல்ல, ஆத்மாவும் உடம்பும் சேர்ந்த உறவுனு பொருள்.. நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க.”
“நீங்களும் உங்க புருசனும் மனசும் உடம்புமா ஒரே நேரத்தில ஒரே சமயத்தில ஒண்ணாச் சேர்ந்தாத்தான் போகம். நல்லதே நடக்கும். அதனாலதான் அதை சம்போகம்னு சொல்லுவாங்க. வாரிசு உண்டாகும். சொத்து சேரும். பல பேருக்கு சாதாரண வாள்கையில அப்படி நடக்கலைன்னா மனோ வியாதி, உடல் பிணிகள், புருசன் பொண்டாட்டிக்குள்ள புகைச்சல், சம்போக அதிருப்தி, ஆண்களுக்கு விந்து விரயம், பொண்களுக்கு அடி வயித்துல வலி, தலை சுத்தல், ஒய்ச்சல் எல்லாம் வரும்.”
“ஆத்துமாவும் உடம்பும் ஒரே சமயத்தில் ஒண்ணு சேர்ந்த அந்த சம்போகத்தை தாந்திரீக யோகமா மாத்த முடியும். அதைத்தான் ஆதாரமா வெச்சிட்டு உங்களுக்கு வைத்தியம் செய்யணும்.” என்று விளக்கிய அவன் முகத்தில் தெளிவு இருந்தது. அவன் கண்கள் பளபளவென்று ஜொலித்தன.
மதி அவனை உற்றுப் பார்த்தாள். “புருசன் பொண்சாதிக்குள்ள ஆயிரம் விசயம் இருக்க இதுனுவாங்க. நீங்க சொன்னபடி சாமியார பக்கத்தில வெச்சிட்டு குடுத்தனம் பண்றது வாள்கைக்கு ஒத்து வருமா ஐயா?
“இப்போ எனக்கு தலை வலி, மூட்டு வலி முதுகு வலி புளிச்ச ஏப்பம் வவுத்தில கேஸ் ட்ரபிள் கெட்ட கனா, ராவில தூங்காம கெட்ட நினப்பு, மாருல கனம், இப்படி பல வேதனைங்க அதுக்கு என்ன செய்யப் போறீங்க? அதைச் சொல்லுங்க ஐயா?” என்று மதி முனகிக் கொண்டே எழுந்து நின்றாள்.
“அதென்னங்க அப்படி சொல்லிட்டீங்க. இப்போ எங்கிட்ட மூலிகைகள் வைத்தியத்துக்கு இல்லை. மூலிகைத் தைலம் இருக்கு. உங்களுக்கு ஒப்பமின்னா அதை வெச்சு பிடி வைத்தியம் பண்ணலாம். ஆனா அதை ரெண்டு நாள்ல செய்யணும்,” என்றவன் அவள் பதிலுக்கு காத்தான்.
“கொஞ்சம் விவரமா சொல்லுங்க சாமி” என்று அவள் சொல்ல அவன் தொடர்ந்தான்.
“பிடி வைத்தியத்தில மூணு விதம் இருக்குங்க. மூச்சுப் பிடி, மூலப் பிடி, சூக்குமப்பிடி. மூச்சுப்பிடி முதுகில இருக்கிற நாடிங்களைப் பிடிக்க. மூலப்பிடி கழுத்து, கால், கை ஜாயிண்டுங்க சேர்ற இடத்துக்கு. சூக்குமப் பிடி நம்மை உள்ளுக்கும் வெளியேயும் சேர்க்கிற பகுதிங்க அதாவது தாந்திரீக மார்க்கப் படி மனசும் உடம்பும் ஒண்ண சேருதோ அதற்கான எட்டு மையத்தில குண்டலீனி சக்திய ஏத்த பிடிப்பு கிரியைங்களை செய்யணும் அதுதான் முக்கியமானது. முதல் ரெண்டு நாள் மூச்சுப் பிடி, மூலப்பிடி மூலமா உடலின் நாடிகளைப் உசுப்பிக்கணும்.”
“மனச சுத்தமா வெச்சிட்டுப் பண்ணணும், அதுக்குப் பிறகு மற்ற கிரியைங்களை செய்யணும். இந்த ரெண்டு நாளும் கறி, சிக்கன், மீன் சாப்பிடக்கூடாது. மூணாம் நாள் புறாக்கறி, வறுத்த மீன், முருங்கை இலை அரிசியோட சமைச்சி ஆணும் பெண்ணும் சாப்பிடணும். அன்னிக்கி முக்காணி கறுத்த லேகியமுன்னு ஒண்ணு இருக்கு. அதை சாப்பிடணும்.”