Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஒரு புகழ்பெற்ற சிறுகதையில் இருந்த காமக் கதைக்கான புள்ளியை எடுத்தாண்ட கதை இது.
கிருஷ்ணன் சட்டையை இழுத்துவிட்டபடி கோபுரவாசலை நோக்கிச்சென்றான். மிகப்பழைய கோயில், திருப்பணிகள் நடந்தும் பல வருடங்களாகியிருக்கலாம். எல்லா கோபுரங்களையும்போல அதுவும் மண்ணுக்குள் புதைந்திருந்தது. கோபுரவாசலின் கால்பட்டு அம்மி போல தேய்த கல்படிகள் சாலையை விடக் கீழே இருந்தன. கனத்த இரும்புச் சங்கிலிகளும் பித்தளைக் குமிழ்களும் வரிவரியாக விரிசலிட்ட மரச்செதுக்குச் சிற்பங்களும் கொண்ட உயரமான மரக்கதவுகள் இரும்புக் கீல்களில் சிக்கி கற்சட்டத்தில் தொற்றிக்கொண்டு சாய்ந்து நின்றன. புஷ்பயட்சி காவல்காத்த கல்நிலையில் நிறைய வெற்றிலைச்சுண்ணாம்பு தீற்றப்பட்டிருந்தது.
கோயிலுக்குள் மனிதநடமாட்டமே இருப்பதாகதெரியவில்லை. அவன் தன் நிழல் மௌனமாகக் கூடவர சரிந்தெழுந்த கற்பாளங்களாலான தரை மீது மெல்ல நடந்தான். சிலநாட்களுக்கு முன்பு மழைபெய்திருக்கவேண்டும், கல்லிடுக்குகளில் புற்கள் பசுமையாக பீரிட்டிருந்தன. கற்பாதை ஓரங்களில் எழுந்த நெருஞ்சியும் பசுமையாகவே இருந்தது. கிருஷ்ணன் நிழல்கள் செறிந்து தூண்களின் காடாக விரிந்துகிடந்த கோயிலுக்குள் கண்ணோட்டி நோக்கினான். யாருமே இல்லை. அத்தனை காலியாக அது இருப்பது பிரமிப்பாகவும், கூடவே அது அப்படித்தான் இருக்கமுடியும் என்பதுபோலவும் இருந்தது. அந்த அமைதியின் ஒரு பகுதிபோல குர்ர் குர்ர் என்று புறா குறுகும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
பிரம்மாண்டமான கோயில். ஏழெட்டு ஏக்கர் பரப்பு இருக்கும். நான்கு திசைக்கோபுரங்கள். யானைவரிசை போல கருங்கல்லாலான நாலாள் உயர சுற்றுமதில். உள்ளே மங்கிப்போன நாமங்களுடன் சிறுமதில்.
இரு மதில்களுக்கும் நடுவே கோணலாக வளைந்து நடடமிட்டு நின்ற தென்னைமரங்களும் கீழே அவற்றின் ஓலைகளும் மட்டைகளும் சிதறிக்கிடக்க ஊடே சில அரளிப்புதர்களும் மந்தாரைகளும் கொண்ட நந்தவனம். இடதுபக்கம் ஒரு பெரிய தெப்பக்குளம்.
ஏரிக்கரை பனைமரக்கூட்டம் போல தூண்கள் எழுந்து வரிசையமைத்த கல் மண்டபம் சூழ பிளாஸ்டிக் குப்பைகள் அடித்தரையின் பச்சைப்பாசி வண்டலில் மிதக்க, நீரோடிய கறைகள் உலர்ந்த படிக்கட்டுகளுடன் வெறிச்சிட்டுக் கிடந்தது அது.ஒரு சிறிய பறவை சிர்ர்ர் என்று சிறகதிர தென்னையில் இருந்து காற்றில் சறுக்கி இறங்கி குளத்து மதிலில் அமர்ந்தது.
கிருஷ்ணன் நின்றான். சுற்றி வருவதில் பொருளில்லை. உள்ளே சென்று சிலைகளைப் பார்க்கவேண்டியதுதான். அவன் திரும்பி முகமண்டபத்தருகே வந்தான். ஒளியைப்பார்த்து வந்ததனால் உள்ளே நிறைந்திருந்த இளம் இருட்டு கண்களை மறைத்தது. கண்கள் பழகியபோது நீருக்குள் இருந்து பெரிய மீன்கள் எழுந்து வருவது போல கரிய சிலைகள் இருட்டிலிருந்து எழுந்து தெரிந்தன. இரண்டாளுயரமான பெரிய வழவழப்பான கற்சிலைகள். அவன் எந்தச்சிலையையும் பார்க்காமல் மொத்தமாக அந்தச் சிற்ப வெளியை பார்த்தபடி ஒருசில கணங்கள் பிரமித்து நின்றிருந்தான்.
"யாரு?" என்ற பெண்குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். குதிரைக்காரன் சிலைக்கு அப்பாலிருந்து அந்தப்பெண் இறங்கி இடுப்பில் செருகிய முந்தானையை எடுத்து இழுத்துவிட்டுக்கொண்டு, நெற்றியில் சரிந்த கூந்தலிழையை ஒருகண நேர நளினமான அசைவால் சரிசெய்தபடி கேட்டாள்.
கிருஷ்ணனுக்கு கண்டா மணியோசை போல மனம் அதிர்ந்தது. அச்சிலைகளில் ஒன்று இறங்கியது போல் இருந்தாள் அவள்.
அவளுடைய கன்னங்கரிய நிறத்துக்கிணையாக கிருஷ்ணன் கண்டதில்லை. தீட்டப்பட்ட கருங்கல்லில் மட்டுமே உருவாகும் உறுதியான பளபளப்பான கருமை. அவனளவுக்கே உயரமாக திடமான தோள்களும் நிமிர்ந்த தலையுமாக நின்றாள்.
"இல்ல...இங்க சிலைகள்..." அவன் கண்கள் பரபரப்பு கொண்டு அவளை அள்ள முயன்றன. நல்ல சிற்பத்தைப் பார்க்கும்போது எப்போதுமே உருவாகும் பரபரப்பு அது. பின்னர் சொல்லிக்கொள்வான், இல்லை பதற்றப்படாதே, மெதுவாகப்பார், அணுவணுவாகப்பார், பார்த்தவற்றை நினைவில் நிறுத்தியபின்னர் ஒரு புள்ளியிலிருந்து கண்களை விலக்கு.
குறுக்காக சிந்தனைகளை ஓடவிடாதே. சிற்பத்துக்கு உன் மனதை அளித்துவிடு....ஆனால அந்த முதற்பரவசப் பரபரப்பே சிற்பம் அளிக்கும் பேரனுபவம். அதன்பின் உள்ளது அந்த ஒட்டுமொத்த அனுபவத்தை சிறிய துண்டுகளாக ஆக்கி விழுங்கும் முயற்சி மட்டுமே.
அவனால் அவளை பார்க்கவே முடியவில்லை. கண்ணிலிருந்து அவள் வழுக்கி வழுக்கி விழுவதுபோல, அல்லது கண்ணை நிறைந்து பெரும்பகுதி மிச்சம் இருப்பதிபோல. எத்தனை பேரழகி! அவளுடைய மூதாதையர் இந்த கோயிலில் இருந்திருப்பார்கள். இச்சிலைகளை அவர்களைப் பார்த்தே வடித்திருப்பான் சிற்பி.
அப்பழுக்கற்ற வடிவ கச்சிதம் கொண்ட மகத்தான உடல். துதிக்கை என உருண்டு கனத்த தொடைகள். இரு மடிப்புவளைவுகள் கொண்ட ஒடுங்கிய வயிறு. இறுக்கமான உருண்ட சிற்றிடையில் வியர்வையின் மெல்லிய ஈரம். அவன் கண்களை நிறைத்து அவன் பிரக்ஞையை நிறைத்து அவனை முழுமையாக்கிய மார்புகள்.
இரு இளநீர்க்காய்களைப்போல. நெருக்கமாக, உருண்டு ஒன்றை ஒன்று மெல்ல முட்டி ஒரு மென்மையான குழியை உருவாக்கியபடி. மெல்ல அதிர்ந்த ஈரமான குழி. எத்தனை அற்புதமான முலைகள்.
மூங்கில்போன்ற கைகளால் இரு பக்கமும் எல்லையிடப்பட்டு, பாலைநில மணல்வரிகள் போலத்தெரிந்த விலாவெலும்புகளுக்கு மேலே மெல்ல தொற்றியமர்ந்தவை ...மென்மையையும் ஈரத்தையும் கொண்டு செய்யப்பட்ட, உருண்ட,மூன்றுவரி ஓடிய நீள் கழுத்து...
சிற்பங்களைக் காண ஆரம்பித்த இந்த இருபதாண்டுகளில் அவன் அவை கலைஞனின் இலட்சியக் கற்பனைகள், அத்தகைய பெண்கள் ஒருபோதும் பூமியில் இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால் அவன் கண்முன் ஒரு பரிபூரண இலக்கணம் கொண்ட சிற்பம் உயிருடன் நின்றுகொண்டிருந்தது.
நீள்வட்ட முகத்தில் மையமாக கூர்மைபெற்ற சிறுநாசி. அதன் கீழே வாடிய மலரிதழ்போல சிறிய கருஞ்சிவப்புக் குமிழுதடுகள். மேலுதட்டின் மென்மையான ஒடுங்கலுக்குக் கீழே கீழுதட்டின் சிறிய பிதுங்கல். ஒளி பிரதிபலித்த கன்ன வளைவு.
என்ன கருமை! சில பண்டாரங்களின் பழமையான திருவோடுகளுக்கு மட்டுமே அந்த பளபளக்கும் கருமையைக் கண்டிருக்கிறான். சிறந்த ஓவியன் அனாயசமாக இழுத்த கோடுபோல மூக்கும் புருவமும் இணைந்த வளைவு. பளபளக்கும் தகடாக நெற்றி. அலையலையக இறங்கி பனங்குலைபோலத் தோளில் கனத்த குழல்த்தொகுதி. என்ன பிழை, என்ன குறை...இல்லை ஏதுமில்லை. முழுமை....பிசிறற்ற முழுமை.
அவள் "இன்னமே சாயங்காலம் அஞ்சுமணிக்குத்தான் கோயில தொறப்பாங்கய்யா" என்றாள். அந்த திண்ணையில் அவள் அரும்புகளை பெரிய வாழையிலையில் குவித்துக் கட்டிக்கொண்டிருந்தாள்.
யாழினிச் சிற்பங்களுக்குரிய நீள்விரல்கள்.. உள்ளங்கைக்கு வாழைப்பூவின் உட்பக்க நிறம். மணிப்புறாவின் அலகு நிறத்தில் நகங்கள். முழங்கையின் கரிய சருமத்தில் ஒரு நரம்போ எலும்புமுண்டோ தெரியவில்லை. கனத்த தாமரைக்கொடிபோல அவை குளிர்ந்த வழவழப்புடன் உருண்டிருந்தன.
அவள் அவன் பார்வையைக் கண்டு தன் முந்தானையை மேலும் நன்றாக இழுத்து விட்டாள். அவளுடைய மார்புகள் மெல்ல அசைந்தபோது அவன் அகத்தில் கட்டிடங்களும் கோட்டைகளும் அதிர நிலம் நடுங்கும் அனுபவம் ஏற்பட்டது. அவை சாதாரணமாக பெண்முலைகள் அசைவதுபோல மென்மையாகத் ததும்பவில்லை, இரு செப்புகள் அசைவதுபோல் இறுக்கமாக அசைந்தன.
அவள் அவன் பார்வையால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. பொது இடத்திலேயே புழங்குபவளாக இருக்கவேண்டும். பூ கட்டி விற்கிறாள் போல.
"இல்ல, சிற்பங்களை பாக்கணும்தான் வந்தேன்...சாமி கும்பிடணும்னு இல்லை... சிலைகள் இருக்கிற மண்டபங்கள் தெறந்துதானே இருக்கும்?" அவள் "ஆமாங்கய்யா" என்று தலையசைத்தாள். எந்த நகையுமே இல்லை. காதுகளில் இரு பிளாஸ்டிக் கம்மல்கள்.
அவளுடைய முழுமையான உடல் மேல் பட்டுத்துணிபோல பரவிப்பரவி வழிந்தாலும்கூட அவளுடைய மார்புகளில் இருந்து ஒருகணம்கூட தன் பிரக்ஞையின் மையம் விலகவில்லை என உணர்ந்தான்.சிற்பங்களில் எப்போதுமே செப்புகவிழ்த்ததுபோல பெரிதாக திரட்சியாக செதுக்குவார்கள்.
இணைக் குவைகளாக, ஒன்று பிறிதொன்றுபோல அவை நெருங்கியிருக்கும். மனிதப்பெண்களின் முலைகள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. அவை மேலிருந்து சற்றே வழிந்து இரு பெரிய நீர்த்துளிகள் ததும்பி நிற்பது போலத்தான் இருக்கும். பெரும்பாலும் வலது முலை பெரிதாக சற்றே கீழிறங்கியிருக்கும்.
ஆனால் எளிய நீல ஜாக்கெட்டுக்குள் அவளுடைய முலைகள் சிற்பக்கல் முலைகள் போலவே இருந்தன.
"என்னாங்கையா.. பார்க்கறீங்க. வாங்க சிற்பங்களை பார்க்கப் போவோம்"
"உனக்கு செலையைப் பத்தி தெரியுமா?." என்றேன் வியப்பாக. "நம்மூருல பத்து பதினைந்து வயசு பையனுக கூட இதெல்லாம் சொல்லுவாங்க. ஆனா நானு இந்த தொல்லியல் துறையில டிரைனிங் எடுத்திருக்கேன்."
"எதுக்கு டிரைனிங் எடுத்திருக்க... இந்த சிற்பங்களைப் பத்தி சொல்லவா"
"அதுக்கெல்லாம் இல்லைங்க. கோயிலோட வரலாறு, யாரு கட்டுனது, யாரு யாரு இங்க வந்து சிலையெல்லாம் அடிச்சு, ஒடிச்சாங்க. யாரு களவாண்டாங்க.. இதெல்லாம்"
"எனக்கு சிற்பம் மட்டும் காட்டுனா போதும், அது தெரியுமா"
"இன்னாங்கையா கேட்டுப்புட்டீங்க. வாங்க நான் சொல்லறதை கேட்டுட்டு உங்களுக்குப் பிடிச்சிருந்தா.. நல்ல துட்டு தாங்க. இல்லைனா.. எதுவும் வேணாம்." அவளுடைய தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொழில் தெரிந்தவர்களுக்கே உண்டான கர்வம்.
அவள் முன்னால் வழிகாட்ட பின்னாள் நடந்து சென்றான் கிருஷ்ணன்.
"இது பதினொண்ணாம் நூற்றாண்டிலே ஜடாவர்மன் குலசேகரன் கட்டின கோயிலய்யா. கிபி ஆயிரத்து நூத்து தொண்ணூறு முதல் ஆயிரத்து எந்நூத்து பதினேளு வரைக்கும் மதுரையை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் தென்பாண்டிய நாட்டிலே கட்டின கோயில்கள் மொத்தம் ஏழு. இது அதிலே ரெண்டாவது...அதுக்குப்பின்னாடி திருமலைநாயக்கரோட தம்பி ரங்கப்பநாயக்கன் இதுக்கு ராயகோபுரம் எளுப்பி மகாமண்டபம் கட்டி சுத்துமதிலும் கட்டினார்..." என்றாள்.
கிருஷ்ணனுக்கு அவள் சொல்லுவதில் உள்ள உண்மைகளெல்லாம் தேட வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது. அவனுக்கு இந்த வரலாறுகள் எல்லாம் தெரியும். ஒரு பெரிய மண்டம் இருந்தது. ஏறக்குறைய எல்லா தூண்களிலும் சிற்பங்கள்.
"இங்க உள்ள சிற்பங்களெல்லாம் நாயக்கர்பாணி சிற்பங்களோட சரியான உதாரணம்னு படிச்சவங்க சொல்றாங்க. ஹிண்டு பத்திரிகையிலேகூட நல்ல போட்டோல்லாம் வந்திருக்குய்யா" என்றாள்.
"இதைப் பாருய்யா.. குறவன் செலை...தென்பாண்டிய நாட்டிலே நாயக்கர்கள் திருப்பணிசெஞ்ச எல்லா கோயில்களிலேயும் குறவன் குறத்தி செலை இருக்கும். குறவன் ஒரு ராஜகுமாரிய தூக்கிட்டு போறதுமாதிரி இருக்கும். குறத்தி ராஜகுமாரனை தூக்கிட்டு போவா....இதை எதுக்கு வச்சாங்கன்னு நெறைய ஆராய்ச்சிகள் இருக்கு சார். சும்மா அழகுக்காக வைக்கலை. அப்டீன்னா எல்லா கோயிலிலேயும் வச்சிருக்க மாட்டாங்க. குறவனைப் பாத்தீங்கன்னா அவன் சாதாரண மலைக்குறவன் மாதிரி இல்லை பாத்தீங்களா? "
"..."
"அவன் இடுப்பிலே கட்டியிருக்கிற சல்லடம்கிற ஆபரணக் கச்சைய பாருங்க...என்ன ஒரு வேலைப்பாடு. சின்ன மணிகளை கோத்து கட்டியிருக்கிற மாதிரி இருக்கு. அந்த மணிகளை கோத்திருக்கிற கயித்த பாருங்க சார் மூணுபிரிக் கயிற முறுக்கினதுமாதிரி இருக்குல்ல...அதான்சார் நாயக்கர்காலத்து சிற்பக்கலை...."
கிருஷ்ணன் அத்தனை நுட்பமாக சிலைகளை பார்த்ததில்லை. அவன் விரல்களால் தடவிப்பார்த்தான்
"இதுக்கே மலைச்சிராதீங்க, இடுப்பிலே தொங்கவிட்டிருக்கான் பாருங்க உடுக்கு, அதுலே இழுத்துக்கட்டியிருக்கிற கயித்துலகூட மூணுபிரி முறுக்கு இருக்கு பாருங்க...குறவனோட கையிலே இருக்கிற குத்துவாளைப்பாருங்ய்யா. எவ்ளவு வேலைப்பாடு. அதோட பிடியிலே வைரங்கள் பதிச்சிருக்கிற மாதிரி செதுக்கியிருக்காங்கய்யா. அவனோட இடுப்பிலே கச்சமா கட்டியிருக்கிற வேட்டியோட நெளிவைப்பாத்தா அந்த துணி அவ்ளோ ஒசத்தீன்னு தெரியுதுல்ல சார்? கழுத்திலே அர்த்தசந்திர ஹாரம் போட்டிருக்கான் சார். அதிலே பதக்கங்கள் வரிசையா தொங்குது...ஆமா சார், அவன் குறவனில்லை. குறவ ராஜா. அவன் தலைப்பாகைய பாருங்க. என்ன ஒரு கம்பீரமா கட்டியிருக்கான்னு..."
"இதெல்லாம் யாரு சொல்லித்தந்தாங்க?"
"நான் இந்தக் கோயிலுக்கு வரும் போது, பத்து வயசிக்கும்ய்யா.. சோத்துக் கூட வழி தெரியாத அனாதை. கோயிலுல ஒரு அய்யங்காரு சாமி அது.. சாமிக்கு படைச்சுட்டு போகும் போது, எனக்கு சாப்பிட கொடுத்துட்டு போகும். அதுக்கு அவ்வளவு பிரியம் என் மேல. அது போட்ட சாப்பாட்டுலேயே வளர்ந்துட்டேன். நல்ல மனுசன். நல்ல படிப்பு. இதெல்லாம் அதுதான் சொல்லிக் கொடுத்துச்சு" என்றாள்.
அவளுடைய முந்தானை கொஞ்சம் விலக அதை இழுத்துவிட்டு, முந்தியை கையில் பிடித்து இடுப்பில் சொருகி கொண்டாள். வள வளப்பான அவள் இடிப்பைப் பார்த்தேன்.
"தொட்டுப்பாருய்யா..." என்றாள். இடுப்பை தொட்டுப் பார்க்கச் சொல்கிறாளா.. எனக்கு என்னவென புரியவில்லை. திகைப்பாக இருந்தேன்.
"எல்லா செலயையும் தொட்டுப்பாருய்யா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. வேற கோயிலா இருந்தா இந்நேரத்துக்கு சிலையை சுத்தி கம்பிகூண்டு போட்டிருப்பாங்க. இங்க அப்படியில்லை."
கிருஷ்ணன் குறத்தி சிலையை நன்றாகப் பார்க்க பின்னால் நகர்ந்தான்.
"இவ்வளவு அழகான குறத்தியா.."
"பாருங்க. இவளும் குறத்தி இல்லை. அழகான இளவரசி"
"இவளோட அழகு மிகவும் கூடுதலா தெரியுதே. என்னவொரு வசீகரம்"
"வழக்கமா பொண்ணுகளுக்கு முலை ஒண்ணு ஒசிஞ்சு ஒண்ணு வெலகி இருந்தாத்தான் யதார்த்தமா இருக்கும். ஆனா சாமுத்ரிகா லட்சணப்படி சிலையச்செஞ்சா அப்டி செதுக்க முடியாது."
"எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு. பொதுவா சிலைகளைப் பற்றின ஆராய்ச்சியில் நாங்கள் சோழர் காலம், பல்லவர் காலம் அப்படியெல்லாம் பிரிப்போம். இப்படி முலையெல்லாம் எப்படி இருக்கு என்றெல்லாம் பார்த்தே இல்லை."
"அது செலையைப் பத்தின மேலோட்டமா பார்க்கிறவங்களுக்குத்தான்ய்யா.. செல நம்ம உடம்பு மாதிரி. அதுக்குள்ள உசிர் இருக்கு. அது கூட நீங்க பேசலாம், தொட்டா அப்படியே சிலிர்க்கும்."
"ம்ம்.. நீ பேச பேச வாழ்நாளெல்லாம் கேட்கலாம் போலிருக்கு" என்றவுடன் பலமாகச் சிரித்தாள்.
"படத்துல வர மாதிரி பேசறீங்கய்யா. இதைப் பார்த்தீங்களா.. சமமா பொண்ணு நின்னாக்க அதுல அழகு இல்ல. அந்தால வெளக்குநாச்சி செலைகள பாருங்க பொம்மைகணக்காத்தான் இருக்கும். அதுக்குத்தான் இப்டி செஞ்சிருக்கான். இதுக்கு சந்த்யாபத்ம நிலைன்னு பேருய்யா. அப்டி வளைஞ்சு நின்னா ஒருமுலை முன்னால வந்து இன்னொண்ணு ஒசிஞ்சுடுது பாத்தீங்களா?."
நானும் பத்து பதினைஞ்சு வருசமா,. இந்த சிலையைப் பத்துன ஆராய்ச்சியில இருக்கேன். இதெல்லாம் யாருமே சொன்னதே இல்லை."
"இதுக்கே மிரண்டுட்டீங்களே.. இந்த மண்டபத்துல பத்தாவது தூணுல இருக்கு பாருங்க,. சில செலங்க. அதெல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்வங்க வந்து பார்த்து.. சிலதை கத்துக்கிட்டா போதும்,. இந்த சண்டை சச்சரவெல்லாம் வரவே வராது. பொண்ணு பார்த்துக்கிட்டானா.. புருசனை முந்தானைக்குள்ள முடிஞ்சு வைச்சுக்குவா."
"சரி வா. அதெல்லாம் பார்க்கலாம்." என்றான் கிருஷ்ணன். அவள் தலையை சொறிந்தாள்.
"நீங்க தனியாப் போய் அதெல்லாம் பாருங்கய்யா. நானும் வந்தா.." அவள் வெக்கப்பட்டாள். ஏற்கனவே அவள் அழகு. இந்த வெட்கம் அளவுக்கு அதிகமாக அவளை அழகு செய்தது.
"ஏன் என்ன.. நீயும் வா.. "
"வேணாங்கய்யா.. அந்த சிலைகளை தனியாத்தான் பார்க்கனுமுனு ஐதீகம்"
"அதென்ன கதை."
"கதையெல்லாம் இல்லைங்க. புருசன் பொண்டாட்டினா சேர்ந்து போய் பார்க்கலாம். நிறைய விஷயம் இருக்கு. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அது.. "
"ஓ.. புரியுது புரியது. நான் ஒன்னும் அந்தளவுக்கு கொடூரமானவன் கிடையாது. சிலைகளைப் பார்த்தும், உன் மேல பாய"
"எனக்கு வெட்கம் வெட்கமா இருக்கு. நீங்க தனியாப் போய் பார்க்கறதுன்னா பாருங்க. இல்லைனா ஆள விடுங்க. நான் வேற வேலையை பார்க்கிறேன்."
"அப்படியெல்லாம் விட முடியாது. உன்ன மாதிரி ஒரு கைடு.. கைடு கூட இல்லை. சிலைகளைப் பற்றி தெரிந்த மேதை.. மேதை.. நீ. உன்னையை விட்டா எனக்கு விளக்கம் சொல்ல யாரு இருக்கா"