Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 11: பயமறியாத இளங்கன்றின் நீச்சல் பயிற்சி
நான் நீண்ட நேரம் கிணற்றில் நீந்தப்போவது என் திட்டம் எனவே எனக்கு ஆடை தேவையில்லை எனவே சியாமளாவை என் ஆடையை அணிந்துகொண்டு அவள் ஆடையை உலர்த்தத் திட்டமிட்டோம். ஆனால் அவள் என் லுங்கி அணிவது சற்று சவாலானது. என் லுங்கி விளிம்புகள் இணைக்கப்பட்ட முழு வட்டமாக / உருளை போன்ற தைக்கப்பட்டது. பாவாடை கட்டி பழக்கப்பட்டவளுக்கு இது போன்ற லுங்கி கட்டக்கொள்ளத் தெரியாதது வியப்பில்லை. வேறு வழியின்றி என் உதவி நாடினாள்.
நாங்கள் இருவரும் இருந்த உடையில் இருவருக்குமே மிக அருகில் இருக்கக் கூச்சமாகச் சற்றுச் சங்கடமாக இருந்தது என் லுங்கியைக் கட்ட முயன்று முடியாமல் தவித்தபடித் தன் இரு கைகளால் அந்த லுங்கியைத் தன் இடுப்பில் பிடித்தவாறு வெக்கத்துடன் என் கண்களைச் சந்திக்கத் திராணியற்று அவள் தலைக் குனிந்தபடி நின்றிருந்தாள். இந்த நிலையில் அவளைக் காண்பது சற்றே மதியை மயக்கியது எனவே சற்றே வேறு பக்கம் திரும்பியவாறே அவளுக்கு எப்படி உதவலாமென யோசனை செய்தேன்.
சியாமளா, "என்ன ரகு இப்படிப் பார்த்துகிட்டே நிக்கப் போறீங்களா! ஏதாவது உதவிச் செய்வீங்கன்னு," சொல்லியவாறு என்னை நோக்கியவள் அவளைப் பாராமல் வேறு பக்கமாகத் திரும்பிய நிலையில் யோசனையில் ஆழந்திருப்பதைக் கண்டு, "அட நான் என்ன அவளோ மோசமாவா இருக்கேன் என்னைப் பாக்கப் புடிக்காம அந்தப் பக்கமா திரும்பிகிட்டு,"
இந்த இக்கட்டான நெருங்கிய நிலையில் இருவருக்குமே சங்கடமாக இருப்பது புரிந்து அவளை நான் பார்ப்பது முறையல்ல எனக்கூறினேன். மேலும் அப்படிப் பார்ப்பதனால் நல்ல யுக்தி/யோசனை தோன்றாமல் மாறாக புத்தி கெட்டு குழம்புவதை விளக்கி அதனால் தான் வேறு பக்கம் திரும்பிய நிலையில் யோசனை செய்வதாக விளக்க அதைப் புரிந்து கொண்டு என்னைப் பராட்டிப் பெருமிதம் கொண்டாள்.
அவள் முன்னிலையில் நான் லுங்கி கட்டும் முறையைச் செய்து காட்ட அவளால் புரிந்துகொள்ள முடியும் என யோசனை தோன்றிச் செயலில் இறங்கினேன். வெளியே சென்று சற்று முன் உடலைத் துடைத்து உலர்த்திய துண்டை எடுத்து கொண்டு மீண்டும் உள்ளே சென்று, "இந்தாங்க இந்த டவள கட்டிக்கிட்டு அந்த லுங்கிய அவுத்து குடுங்க, "சொல்லித் துண்டைக் கொடுத்து விட்டு வெளியேறினேன்.
பிறகு அவள் அழைத்தபின் சென்று அவளுக்கு நான் அந்த லுங்கியைக் கட்டும் சூட்சுமத்தை நான் கட்டிச் செய்து காட்டி விளக்கினேன். இரண்டு மூன்று முறைச் செய்து காட்டியப் பிறகு அவளுக்குப் புரிந்த நிலையில் தானே காட்டிக்கொள்ளச் சற்று நம்பிக்கை வந்து அவள் முயற்சி செய்வதாகக் கேட்க லுங்கியை அவளிடம் கொடுத்து வெளியேற முற்பட,
சியாமளா என்னைத் தடுத்து, "பரவாயில்ல ரகு நீங்க வெளியப் போக வேண்டியதில்ல எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு ஒருவேளை உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னா... (சற்றுத் தயங்கி) அந்தப் பக்கம் திரும்பி நில்லுங்க." சொல்லி லுங்கிக்குள் காலை விட்டவாறுச் சிறிது வெட்கப் பட்டுச் சிரித்துச் சற்று ஓரக்கண்ணால் என்னை நோட்டமிட நான் அதற்கு மேல் அவளைப் பார்ப்பது அநாகரீகமென உணர்ந்து எதிப்பக்கம் திரும்ப அவளிடமிருந்து 'க்கலுக்கென' சிரிப்பு வெளிவந்தது பிறகு சிறிது நேரம் மௌனமாக முயன்றுக் கொண்டிருந்தவள், "ம்ஹூஹூம் அடேங்கப்பா இந்த லுங்கியக் கட்டுவதுப் பெரிய சவாலா இருக்கே (சொல்லி என்னை நோக்கியவள்) அட நீங்க வேற இன்னுமும் அந்தப்பக்கமே திரும்பி நீக்கறீங்களா?"
நான் திரும்பியதும் அவள் மீண்டும் லுங்கியைக் கட்ட முயல, நான் குறுக்கிட்டு, "கொஞ்சம் இருங்க அந்தச் சட்டைய மேலத் தூக்கிட்டு உங்க இடுப்புல நேரடியா அந்த லுங்கிய கட்டுங்க." எனச் சொல்ல,
அவள் சிறிதுத் தயங்கித் தன் இரு கைகளால் லுங்கியை இடுப்பில் பிடித்தவண்ணம், "இந்தச் சட்டைய நீங்க கொஞ்சம் தூக்கிப் பிடிங்களேன் பிளீஸ்!" நான் சற்றுத் தயங்கி நடுங்கியக் கைகளால் சிறிது மேல் ஏற்ற என் கை விரல்கள் சற்றே அவள் மிருதுவான இடையைத் தீண்ட அவள் உடல் சிலிர்த்து. அதை வெளிக்காட்டாமல் மறைக்க அவள் மூச்சை உள்ளிழுத்து அதே சமயம் நான் பதட்டப்பட்டுப் பிடித்திருந்த சட்டையைக் கைவிட அவளிடமிருந்து 'க்கலுக்கென' சிரிப்பு வெளிவந்தது, "சாரி சாரி உங்க... சாரி மோதல் தரம் உங்க கைப்பட்டு அப்படி... நீங்க கண்டுக்காதீங்கப் பிளீஸ் சாரி... நீங்க சரியாப் பிடிங்க."
நான் பதில் சொல்லாமல் மீண்டும் சட்டையை உயர்த்திப் பிடித்தேன் அவள் மீண்டும் முயன்றாள் இந்த முறைச் சிறிது முன்னேற்றம் ஆயினும் தோல்வி. அடுத்து சியாமளா, "ரகு நீங்க கொஞ்சம் தைரியமாக் கூச்சப் படாம நீங்களே இந்த லுங்கிய எனக்குக் கட்டி விடுங்க." அவள் வார்த்தைகள் தெளிவாக வந்தன ஆனால் முடித்த போது வெட்கப் புன்னகையுடன் தலைக் குணிந்தாள்.
நான் என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு செயலில் இறங்கினேன் முதலில் அவள் சட்டையின் இறுதியான மூன்று பொத்தான்களை அவிழ்க்க அவள் சட்டென சிறிதாய் அதிர்ந்தவள் சற்றுப் புரியாமல் என்னை நோக்க நான் அந்தச் சட்டையின் இரு முனைகளைக் கொண்டு ஒரு முடிச்சுப் போட்டேன்.
அது சரியாக அவள் ரவிக்கை அளவுக்கு நவ நாகாரீகமாக/ஒய்யாராமாகக் கட்டப்பட்ட ரவிக்கைப் போல மாறியது. பிறகு அந்த லுங்கியை அவள் கையிலிருந்து வாங்கி நான் கட்டிவிட்டு அது சரியாகத் திடமாகக் கட்டப்பட்டுள்ளதா எனச் சோதிக்க அவள் லுங்கியை இழுத்துப் பார்க்கப் போவதை அவளுக்குத் தெரியப்படுத்தினேன்.
அவளும் சரியெனச் சொல்ல நான் சற்று இழுக்க லுங்கிக் கழன்றுக் கையோடு வர இருவரும் அதிர்ந்து விரைந்துச் செயல்பட்டு அவிழ்ந்த லுங்கியைப் பிடித்தோம் என் இரு கைகளும் இரு பக்கமாக அவள் இடையோடு சேர்த்துப் பிடித்தேன்
அவள் இரு கைகளும் ஒருங்கிணைந்துச் சரியாகத் தன் போக்கிஷத்தை (கூதியை) மூடியபடிப் பிடித்தவாறு, "ஆஆவ்!" அதிர்ந்து அலறினாள் சியாமளா.
நான், "ஐய்யோ சாரிசாரி "
இருவரும் ஒருவரையோருவார் நோக்கிச் சிரித்து விட்டுப் பிறகு நான் மீண்டும் சரியாகக் கட்டத் தொடங்கி, "இப்போ ஒரு வினாடிக்கு மூச்சிய உள்ளே இழுத்தமாறி வயித்த உள்ள இழுங்க." என நான் குறிப்பட்டதைப் புரிந்தவளாகச் செயல்பட நான் திறம்படக் கட்டி முடித்தேன்.
பிறகு அவளை நோக்கி, "இடுப்புல ரொம்ப இறுக்கமா இருக்கா இல்லை?"
சியாமளா, "சரியாத்தான் இருக்கு அவளோ இறுக்கமா இல்லை ரகு, சரி அவளோதானா இப்போ இழுத்துச் சோதிச்சிப் பாக்கலையா?" அவள் கேள்வியில் விஷமம் கலந்தச் சந்தேகம் வெளிப்பட,
நான், "அதுக்கென்ன இழுத்துப் பாருங்க, நீங்களே பண்றீங்களா இல்ல,"
சொல்லும் போதே என்னை நோக்கிக் கைக்காட்டி, "கட்டிவிட்டவங்கதான் இழுத்துப் பார்க்கணும் (சொல்லிச் சிரித்து) நீங்க தான் நல்லாத் துரியோதனன் போலத் துகிலுரிக்கரீங்க." சொல்லி மீண்டும் கலகலவெனச் சிரித்தாள்.
அவள் விருப்பம் போலச் சற்றுத் திடமாக இழுத்துச் சோதிக்க அவள் என்னுடன் வந்து சிறிது மோதிக்கொண்டதைத் தவிர லுங்கி அவிழாமல் திடமாக அவள் இடுப்பில் பொருந்தி இருந்ததௌ உணர்ந்த சியாமளா, "அப்பாடா! என் இடுப்பே கழன்டாளும் இந்த லுங்கிக் கழலாதுப்பா! சபாஷ் ரொம்ப நன்றி." புன்னகைத்தாள்.
நான், "சரி அடுத்து என் பிரதான ஸ்தலமான கிணத்துக்குப் போயி என் நீச்சல் விளையாட்டைத் தொடங்க உத்தரவு கொடுங்கள்." எனக் கேலியாகக் கேட்க
"அட இப்பத்தான் ஒரு வழியா எல்லாம் முடிஞ்சிக் கொஞ்சம் நிம்மதியாத் தளர்ந்து உட்கார்ந்து உங்க கூட அரட்டை அடிக்கலாமனுப் பாத்தா இப்படி என்னைக் கழட்டி விட்டுட்டுப் போறீங்களே இது ரொம்ப அநியாயம். நேத்து முழுசும் கிணத்துல ஆட்டம் போட்டீங்கன்னுச் சித்திச் சொன்னாங்க. அதென்ன உங்களுக்கு இந்த நீச்சல் அடிக்குரதில அவளோ குஷி அப்படியொரு மோகம். எவ்ளோ நாளா இந்த மோகம்?"
நான், "அது எப்படிச் சொல்றது; தண்ணியில நீந்தி விளையாடறது ஒரு விவரிக்க முடியாத அலாதிச் சுகம் அதுல மோகம் ஏற்பட்டது என் பிறவிக் குணம், அதுக்குப் பதிலா நான் நீச்சல் கத்துக்கிட்டக் கதையச் சொன்னா ஒருவேலை உங்களுக்குச் சுவரஸ்யமாவுமிருக்கும் பொழுதும் போனமாதிரி இருக்கும்."
சியாமளா, "சொல்லுங்கச் சொல்லுங்க "
நான், "அப்ப எனக்கு 7 இல்ல 8 வயசுத்தான்; பல முறை எங்க அண்ணனை எனக்கு நீச்சல் கத்துக்கூடுக்கச் சொல்லி நான் தொடர்ந்து பிச்சிப் பிடுங்குறது என் வழக்கம்." அதுக்கு முன்னர்ப் பின்னணிச்சூழல் - எங்க வீட்லப் படிப்பைத் தவிர வேற எந்தச் செயல்பாட்டுக்கும் அனுமதியே தரமாட்டாங்க மிகவும் கண்டிப்பாக. மேலும் எங்க அம்மாவுக்கு இந்த ஜாதகத்தில நம்பிக்கை அதிகம். அப்படி அவுங்க ஜாதகம் பார்த்ததில், ஜோசியக்காரர் என் ஜாதகத்தப் பத்தி ஆஹா ஹோஹோன்னுச் சொல்லிட்டு அதுக்கு மேல எனக்கு 16 வயசுக்குள்ள தண்ணிலக் கண்டம் இருக்குன்னு சொல்லி என்னைப் பத்திரமாப் பாதுகாப்பா இருக்கணும்னு எச்சரிக்கைச் செய்திருக்கிறார். அதனால எங்கம்மா என் விஷயத்தலத் தனியாச் சிறப்புக் கவனம் செலுத்தி என்னைத் தண்ணியில இறங்கவே விடமாட்டாங்க.
அதனால நான் நீச்சல் கத்துக்கறதுத் திருட்டுத் தானமாக எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியாமக் கத்துக்க வேண்டிய நிலை. இதனால நான் நீச்சல் கத்துக்கறது ரொம்பத் தாமதமாகிக்கிட்டே போச்சி. இப்படிச் சந்தர்ப்பங்களை வழிமேல் விழிவைத்து காத்திருந்த எனக்குக் கெடச்சது ஒரு நல்ல சந்தர்ப்பம். எங்க அப்பா அம்மா வெளியூர்ப் பயணம்.
அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி எங்க அண்ணனைக் கெஞ்சிக் கூத்தாடி எனக்கு நீச்சல் கத்துதரச் சம்மதிக்க வைத்து என் அண்ணனுடன் மற்றும் அவருடைய சில நண்பர்களமாக அருகில் இருந்த ஒரு கிணத்துக்குப் போனோம். அதுவும் கிட்டத்தட்ட இந்தக் கிணத்தப் போல ஒரு முக்கியமான வித்தியாசம் என்னனா இந்தத் தண்ணி இறைக்கும் குழாய்க் கிணத்து நடுவில இருக்கும்.
வீட்ல இருந்து ஒரு நீளமான தாம்புக் கயிறு மட்டும் எடுத்துக்கிட்டுப் போயிருந்தோம். என் உடலைக் கயிற்றால் கட்டிப் பாதுகாப்பாகக் கற்றுத்தரத் திட்டமிட்டு இருந்தார் என் அண்ணன். னானால் கிணற்றை நெருங்கியதும் என் அண்ணனுக்கு வேறு புதிய யோசனை உதிக்க அவர், "டேய் இந்தக் கயிறெல்லாம் வேணாம், நான் சொல்றத ஜாக்கிரதையாக் கேளு. முதல்ல கெணத்து மேல இருந்து சரியா அந்த நடுவில இருக்குறப் பைப்பப் (குழாய்) குறிபார்த்து குதி. குதிச்சித் தண்ணிக்குள்ளப் போனதும் மூச்சப் புடிச்சிக்கிட்டுக் கையாலத் துழாவி அந்தப் பைப்பக் கெட்டியாப் புடிசிக்கிட்டுத் தண்ணி மட்டத்துக்கு வந்துடு. அப்புறம் அப்படியே கொஞ்சம் நல்லா மூச்ச விட்டுட்டுக் கொஞ்சநேரம் அப்படியே பைப்பப் புடிச்சிக்கிட்டே காலால மெல்லத் தண்ணிய உதச்சி உதச்சி மெதுவா நீச்சல் பழகு. அப்புறம் இந்தக் கல்லுப் படிக்கட்டுப் பக்கமாக் குறிபார்த்து அந்தப் பைப்பக் காலால நல்லா உந்தி ஒரேப் பாய்ச்சலாப் பாஞ்சி அந்தப் படிக்கட்டப் புடிச்சி மேல ஏறிப்போ. அவ்ளோதான் இது ரொம்ப ஈசிடா; நீ மொதல்ல இதச் செய்து பழகிக்கிட்டா உனக்குத் தண்ணிப் பயம் போகும் அப்புறம் எல்லாம் ஈஸியாக் கத்துக்கலாம்."
அதைத் தொடர்ந்து நானும் அவர் யோசனையைத் துல்லியமாகப் பின் தொடர்ந்து பல முறை அப்புடியே செய்து வந்தேன். இதனால் என் அண்ணன் மற்றும் மற்றவர்களுக்கும் என் திறமையில் நல்ல நம்பிக்கை ஏற்பட என் மீது அதிகக் கவனமின்றி அவர்கள் விளையாட்டில் மும்முரமாக இருந்தாங்க.
நான் ஒரு முறை அந்தக் குழாயை உதைத்துப் பாறைப் படிக்கட்டைப் பிடிக்கும் செயலில் கால் வழுக்கிக் படிக்கட்டைப் பிடிக்கத் தவறித் தண்ணியில மூழ்கி அப்படியே கிணத்துத் தரைக்குப் போயிட்டேன். அத்தொட என் கதை முடிஞ்சிருக்கனும், ஏதோ என் நல்ல காலம் இன்னுமும் உயிரோட இருக்கிறேன்.
தண்ணில மூழ்கி நான் கிணத்துத் தரையைத் தொட்டு அப்படியே கிணத்துத் தரையிலத் தவழ்ந்து கிணத்துச் செவுத்தப் புடிச்சி மேலே வந்து சரியா அந்தப் பாறைப் படியின் கீழே மூச்சு வாங்க; அதுக்குள்ள என்னைக் காணம்னு எல்லாரும் தேட ஆரம்பிச்சி மும்முரமாத் தேடி ஒரு வழியா நான் மேல வந்துட்டதைப் பார்த்து எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சிவுட்டுப் பார்த்தாங்க. ஆனால் என் அண்ணன் பதட்டப்பட்டுச் செமக் கோவப்பட்டு என்னை அங்கிருந்து அடிச்சித் தொரத்திட்டாரு. அத்தோட எனக்கு நீச்சல் கத்துத் தர யாரும் உதவியே செய்யல.
விவரம் தெறியாத அந்தச் சின்ன வயசுல எனக்கு உயிரோட மதிப்புத் தெரியல என் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தையோ அதுல இருந்து தப்பிச்சதையோப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படல. எப்படியாச்சும் மத்தவங்க உதவி இல்லேன்னாலும் ஏதாவது வழியக் கண்டுபுடிச்சி நானே நீச்சல் கத்துக்குறதுலயே தொடர்ந்து முயற்சி செய்துகிட்டிருந்தேன்; இப்படித் தண்ணில விளையாடுற ஆசை வெறில ஒரு முறை என் வீட்டுக்குக் கிட்டக்க இருந்த குளத்தில் ஒரு ஆண்ட்டி (என் அண்டை வீட்டார்) பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங்ககளைக் தேச்சிக் கழுவிச் சுத்தம் செஞ்சிகிட்டிருந்தாங்க.
நான் அப்படியே அவங்களுக்கு உதவிச் செஞ்சி அவங்களோட பழகி மெல்ல மெல்ல ஒரு பெரிய பாத்திரத்தத் தலைகீழாகக் கவுத்துப் புடிச்சி அப்படியே மார்ல அனைச்சிப் புடிச்சமாறி அது மேலக் கவுந்துப் படுத்து, அதுக்குள்ள அடைபட்ட காற்று என் எடையைத் தாங்கித் தண்ணியில மூழ்காம அப்படியே பத்திரமாக ரெண்டுக் கையால அனைச்சிப் புடிச்சமாறி மெல்லக் காலை மட்டும் உந்தி உந்தி நீந்த ஆரம்பித்தேன்.
அப்படியே கொஞ்சக் கொஞ்சமாத் தொடர்ந்து பாத்திரத்தைக் கைலப் புடிக்காம, மார்லயே அழுத்திக்கிட்டே அப்படி இப்படிச் சாயாம மெல்ல மெல்லக் ரெண்டுக் கை, காலுங்களையும் அசைச்சி நீந்தக் கத்துக்கிட்டேன். இப்படியே விடாமத் திரும்பத் திரும்ப ரொம்ப நாளாப் பழகி ஒரு வழியா நானே தனியா நீந்தக் கத்துக்கிட்டேன்.
எப்படி இருக்கு நான் தானாக நீச்சல் கத்துகிட்டக் கதை? நான் கேள்வியாய் கேட்டு அவளை நோக்க, அவள் முகத்தில் தெரிந்தது பிரமிப்பின் உச்சத்தில் வாயடைத்து தன் கையால் வாயைப் பொத்தி அதிர்ச்சியை வெளிப்பாடுத்தினாள். பின் என் இரு தோள்களை தன் இரு கைகளால் பற்றி பாராட்டி மெய்சிலிர்த்தாள்.
தொடரும்