Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 12: பஞ்சும் நெருப்பும் வெகு அருகிலா!!
நான் நீச்சல் கற்ற அபாயத்தை வியந்தவள் என் தவற்றைக் கண்டிக்க; நானோ என் இளம் வயதில் புத்தியின்றி செய்த தவற்றை வளர்ந்த பிறகு உணர்ந்ததை வெளிப்படுத்தப் புரிந்துகொண்டாள். மேலும் நான் பயமறியாத இளங்கன்றாய் இது போல விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட்டதினால்தான் என் அம்மா எனக்கு கிணற்றில் நீந்த தடை விதிப்பதாக சியாமளா யூகித்துக்கொண்டாள்.
அது உண்மையல்ல என விளக்கினேன். அதாவது இந்த நீச்சல் கற்ற வீர விளையாட்டுகள் அனைத்தும் என் பெற்றோருக்குத் தெரியாதெனவும் அது தெரிந்தால் என் பெற்றோர்கள் என்னை மிகக்கடுமையாக அடித்து என்னை வீட்டோடு சிறை படுத்திவிடுவர் எனவும் அதனால் இந்த விஷயத்தை வெளியில் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும் முக்கியமாக என் சித்திக்குத் தெரியாதவாறு பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
மிகப் பொறுமையான நீண்ட விவாதக் கலந்துரையாடலுக்குப் பிறகு தன் தவற்றை உணர்ந்து என் பொறுமைக்கு நன்றி தெரிவித்தாள். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே சற்றே புரிந்துணர்வு மேம்பட்டது.அவளுக்கு என்மீது அளவுக் கடந்த மதிப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர்ந்தேன்.
அதைத்தொடர்ந்து நான், "சரி இப்பவாச்சும் கிணத்துக்குப் போயி நான் என் நீச்சல் விளையாட்டைத் தொடங்கலாமா இளம் தேவதையே!" எனக் கேலியாகக் கேட்க,
அவள் என் இரு கைகளைத் தன் இரு கைகளால் மென்மையாகப் பற்றிக் கெஞ்சலாக, "இவ்ளோ நேரம் எவ்ளோ ஸ்வாரஸ்சியாமாப் பேசிக் கிட்டிருந்தீங்க இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் நீங்க போற இடத்துலத் தான் தண்ணியில ஆட்டம் போடப்போறீங்களே!" சொல்லிக்கொண்டே போனவள் சற்று என் முகம் வாடியதை உணர்ந்து மௌனமானாள், அவள் மன மாற்றத்தை உணர்ந்து, அவள் அழகிய முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சிப் பரிமாற்றங்களைக் கண்டு வியந்து அவள் பற்றி இருந்த என் கைகளால் அவள் கைகளை ஆறுதலாகப் பற்றி
"நான் எங்கேயும் போகலை இளம் தேவதையே!"
சியாமளா உற்சாகமாய்க் குறுக்கிட்டு, "உண்மையாவாச் சொல்றீங்க என் கூடயே இருக்கப்போறீங்களா? (உற்சாகமாய்த் தொடங்கி முடிவில் சாதாரணமாய் முடித்து) ஐய்யய்யோ! வேணாம்ப்பா நீங்க போயிட்டு வாங்க அப்புறம்,"
நான் குறுக்கிட்டு, "மப்புறம்! என்ன நடக்கும்? ஏன் இப்படிப் பயப்படறீங்க?"
"இல்ல எங்கச் சித்தி அவளோ கண்டிப்பா ரொம்பத் தீவிரமாத் திரும்பத் திரும்பக் கட்டாயப் படுத்தினாங்க."
நான் சற்றே உணர்ச்சிவசப்பட்டவனாய் குறுக்கிட்டு, "என்ன சியாமளா சொல்றீங்கக் கொஞ்சமாச்சும் (சற்றுக் கடிந்துப் பின் வார்த்தையைக் கட்டுப்படுத்தி) இவ்ளோ பெரிய வயக்காட்டுல ஒரு வயசுப் பொண்ணத் தனியா விட்டுட்டுப் போறதவிடக் கேவலமான மடத்தனம் வேற எதுவுமிருக்காது. ஏன் உங்க சித்தி இப்படிக் கொஞ்சம் கூட வேவஸ்தை இல்லாத... நான் யார் சொன்னாலும் அப்படியொரு கேவலமான வேலையச் செய்யமாட்டேன் நான் அத்தைக் கிட்டச் சொல்லிக்குறேன்." திடமாக வெளிவந்தது என் முடிவு.
நான் சற்று உணர்ச்சி வசப்பட்டு சற்று சிடுசிடு எனப் பொறிந்துத் தள்ளி ஷீலா அத்தையைக் கடிந்துகொள்ள நான் முற்றிலும் எதிர்பாராமல் சியாமளா என்னைத் தாவி இறுக்கி அனைத்து கொள்ள இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் ஸ்தம்பித்து சில வினாடிகள் எதுவும் செய்யாமல்/பேசாமல் நின்ற நான் பின் சற்றுச் சுதாரித்து என் கைகளால் அவளை அணைக்கத் தொடங்க எத்தனைக்கையில் அவள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி விலக முயன்று,
"சாரி ரகு நான்,"
"ஒண்ணும் தப்பில்ல!" நிதானமாய் உதிர்த்த வண்ணம் மென்மையாக ஆனால் திடமாக அணைத்துப் பிடித்தேன் சில வினாடிகளில்.
அவள் பிடிச் சற்றுத் தளர்ந்து, "வேண்டாம் ரகு நாம."
நான் அவளை விடுவிக்க அவள் பேச்சும் நின்றது, நான் அவள் முகத்தைப் பரிவுடன் அமைதியாய் நோக்க, சில நொடிகள் மட்டுமே என் கண்களைச் சந்தித்த அவள் கண்களில் அன்புத் ததும்பி உடனே அதில் வெட்கம் மெலிடப் புன்னகைத்துத் தலைக் குணிந்தாள். நான் சிறிதுப் பொறுத்துப் பின் சற்றே குனிந்து கேலியாக அவள் கண்களை நேர்கொள்ள அவள் சற்றுச் சந்தேகப் புன்னகைத் தவழ என்ன என ஜாடையாக வினாவினாள்.
"உங்க வெகுமதி ரொம்ப நல்லா மனசுக்கு இதமா இருக்கு ஆனால் சரி விடுங்க; நீங்க ஏதோ வேண்டாம்னு," அவள் என் வாயைத் தன் கையால் மூடினாள்.
நான் அந்த விரல்களை நன்றியாய் முத்தமிட எதிர் பாராமல் சற்று அதிர்வுடன் கையை விலக்கி, "ஐய்ய! குறும்புத்தனம் ஆரம்பிச்சிட்டாரு!"
நான், "அந்தப் பூவிரல்களுக்கு நன்றிக் கடன் பட்டிருந்தேன் அதுவே என் உதடுகளைத் தேடி வந்ததும் அதுக்கு வெகுமதி முத்தம் குடுத்தேன். அது என்ன குறும்பு? சரி நான் உங்களக் கட்டிப்புடிச்சதுத் தப்பா?"
என்னை வியப்பாய்ச் சிரித்தவாறு நோக்கிய சியாமளா, "இதென்ன கேள்வி! நான் கேட்கவேண்டிய கேள்விய நீங்க கேக்குறீங்க; நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு உங்களக் கட்டிக்கிட்டேன்; நீங்களும் என்னைக் கட்டிப் புடிச்சதும், அப்பா! எவ்ளோ நல்லா இருந்துச்சி!"
"ஆனால் நீங்க 'வேண்டாம் நாமன்னு' சொல்ல வந்தீங்க."
"ஓஹ் அதுவா வந்து (சற்றுத் தயங்கி) சின்னக்குழந்த மாதிரி ஆசைலக் கட்டிக்கிட்டேன் அப்புறம் நீங்கக் கட்டி அணைச்சதும் நாமத் தப்புச் செஞ்சிடுவோமோன்னுப் பயம் வந்துடிச்சி, அதுதான் வேண்டாம்னு."
"அதெல்லாம் ஒண்ணும் நடக்காது, கவலையே படாதீங்க."
"அதென்ன அவளோ உறுதியாச் சொல்றீங்க? அவளோ நம்பிக்கையா உங்க மேல உங்களுக்கு?"
"என்னவிட உங்க மேலத்தான் அவளோ அபார நம்பிக்கை."
"என் மேலேயா?"
"ஆமா பின்ன! சின்ன வயசுலேந்து ஆசைப்பட்ட முறை மாமனைத் தொட விடல. அதுக்கும் மேல அவருக்கூடாத்தான் கல்யாணாம்னு நிச்சயம் ஆனப் பிறகும் அவரைத் தொட விடல. அதனால உங்க மாமாவோட ஆசை உங்க தங்கச்சிப் பக்கம் திசைத் திருப்ப அப்பவும் பரவாயில்லென்னுத் தன் ஆசை மாமனையே தங்கச்சிக்குத் தியாகம் செய்த நீங்கப் போயி இந்தப் பட்டணதிலிருந்து வந்த முன்னப் பின்னத் தெரியாத ஒரு புதுப்பையனுக்கு!"
அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற சியாமளா, "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"
நான் கேலியாக, "அசரீரி சொல்லிச்சி! என்ன கேள்வி இது ஊரறிஞ்ச விஷயத்த எனக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு இவ்ளோ அப்பாவியாக் கேட்கரீங்க!!"
நீண்ட மௌனத்திற்குப் பின் சியாமளா, "நான் எங்க மாமாமேல ரொம்ப ஆசையா இருந்தேன் ஆனால் அவருக்கு என்னைப் புடிச்சிதா இல்லையான்னு... (சற்றுத் தயங்கி) அதை விடுங்க அது நடந்து முடிஞ்சக் கதை அதுல நிறையக் கத்துகிட்டேன். ஆனால் அவரை உங்களோட ஒப்பிட முடியாது. உங்களுக்கும் அவருக்கும் குணத்துல (சற்றுத் தயங்கி) குணத்துல மட்டுமில்ல எந்த விஷயத்திலேயும் ஏணி வெச்சாலும் எட்டாது, உங்ககிட்ட இருக்கிறப்போ என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்ல."
நான் குறுக்கிட்டு, "கவலைப்படாதீங்க நான் உங்கள ஒண்ணும் செய்யமாட்டேன்."
சியாமளா, "உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு ஆனால் நான் உங்க மனசைக் கெடுத்து உங்களையே கெடுத்துடுவேனோன்னுப் பயமா இருக்கு." சொல்லித் தலைக் குணிந்தாள்.
நான் என் இரு கைகளால் அவள் தொளைப் பற்றி மென்மையாக அவள் தோளை உலுக்கி என்னைப் பார்க்கச் செய்து, "நீங்க சொன்ன வார்த்தைகள்... (சற்றுத் தயங்கி) எனக்கு நீங்க தந்த மிகப்பெரிய வெகுமதி... (சற்றுத் தயங்கி) நான் உங்களக் கட்டிக்க... (லாமா) " அடுத்த நொடியில் அவள் என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
நானும் அவளை இறுக்கி அணைத்தேன் அவள் வெண்கழுத்தில் என் உதடுகளைப் ஆழ்ந்துப் பதித்து, "இந்தத் தேவதையின் வாயிலேர்ந்து இப்படி வார்த்தைங்களக் கேட்டா எந்த ஆம்பளையும் வாழ்நாள் பூராவும் இந்தத் தேவதையோட காலடியில இருக்க ஏங்குவான்." அவள் இன்னும் சற்று இறுக்கி அணைத்தவாறு என் முதுகில் அவள் கைவிரல்கள் அழந்தத்தழுவின, அவள் பூவிதழ்கள் என் கழுத்தில் பதிந்தன, "ம்ம் அப்படி யா?" கொஞ்சலாய்க் கேட்க என் இரு கைகளும் கீழிறங்கி அவள் இரு சூத்தையும் மிருதுவாய் பற்றி அழுத்த, "மம்ஹூம் இப்போ யாருக்கைல யாரு மாட்டிக்கிட்டது?"
உடனடியாக விலகி நான், "சாரி சியாமளா நான்... இப்போ உங்கள மாதிரி ஆயிட்டேன், அதுதான் நீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்னச் சொன்னீங்களே! உணர்ச்சி வசப்பட்டுத் தப்பு செய்துடுவோம்னுப் பயப்பட்டீங்க, அதயேத்தான் நானும் செய்யறேன். இப்படி ஒரு அழகு தேவதையோட வாயால என்னைப் பாத்து அப்படிச் சொன்னதும் ஆசையாக் கட்டிக்க; கட்டி அணைச்சதும் கை கட்டுப்பாட்ல இல்ல."
சியாமளா, "ஆமாம் ரகு நீங்க கட்டி அணைச்சா அவளோ சொகம்மா இருக்கு, அதுக்கு மேல உங்க கை தொடர இடமெல்லாம் ஜிவ்ன்னுச் சொல்ல முடியாத அளவுக்குச் சொகம்மா, இன்னும் எங்கெல்லாம் அந்தக் கை ஊர்ந்து என்னவெல்லாம் செய்யப் போவுதுன்னு ஏக்கமா ஏங்கவேக்குது ஆனால் அதுக்கு மேல இது எதுலப்போய் முடியும்னு பயம் மனச ஆட்டிப்படைக்குது, நான் வெக்கத்தை விட்டுச் சொல்றேன் முன்னப் பின்னத் தெரியாத உங்க கிட்ட ஒரே நாள்ல இப்படி ஆவேன்னு நான்... நான்,"
ஏதோ சொல்லத் தடுமாறிய அவளை மென்மையாக அணைத்த வண்ணம் அவள் முதுகைத் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்து, "சரிசரி கொஞ்சம் அமைதியா." திடீரென 'சின்னம்மா சின்னம்மா' என யாரோ ஒரு சிறுவன் அழைக்கும் சத்தம் கேட்டு இருவரும் சற்றுத் திடுக்கிட்டோம். அது எங்களுக்கு மதிய உணவு கொண்டுவந்த ஒரு சிறுவன் என அறிந்து சென்று எங்கள் மதிய உணவை பெற்றுக்கொண்டோம்.
எனக்கு அதிகப் பசி இல்லை ஆனாலும் இருவரின் மன நிலையும் சற்றுச் சங்கடத்தில் இருந்தது. அதற்குள் இன்றைய உணவுப்பட்டியல் என்ன எனப் பார்வையிட உணவுவின் வாசம் மூக்கைத் துளைக்கப் பசி ஆர்வத்தைத் தூண்டியது.
இருவரும் இணைந்துச் சாப்பிட்டு முடித்துச் சிறிது நேரம் இளைப்பாறியப் பின் நான் கிணற்றில் நீந்த ஆயத்தமாக அவள் மீண்டும் "இப்பத்தானே சாப்ட்டு முடிச்சீங்கக் கொஞ்ச நேரம் உட்காந்துப் பேசினா ஓய்வெடுத்த மாதிரி இருக்கும்ல."
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். குறிப்பாக அவள் என் குடும்பத்தினரைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள் அதிலும் என் அம்மாவைப் பற்றியத் தகவல்களை அதிக ஆர்வம் காட்டினாள்.
அந்தப்பேச்சின் இடையே காலையில் அந்தக் கால்வாய்யைத் தாண்ட உதவிய விதத்தைப் பாராட்ட, உடனே எனக்கு நினைவுக்கு வந்தது அந்தப் பிரச்சினையைத் தீர்க்க எண்ணி, அவளை அழைத்து கொண்டு அந்தக் குழாய்யைக் காட்டி அதன் விவரம் அறிந்ததில் அது பல வருடங்களாகப் பயனற்று இருப்பது தெரிந்தது.
அந்தக் குழாய்யைக் கொண்டு போய் அந்தப் பாசன நீர்க் கால்வாயில் தள்ளிவிட்டால் அது சரியாகப் பொருந்தி நடைப் பாதை வாசிகளுக்குச் சிறந்த பாலமாக அமையும் என நான் விளக்கப் புரிந்து கொண்டவள் அது நல்ல யோசனை என ஆமோதித்தாள்.
உடனே இருவருமாகச் செயலில் இறங்கி அந்தக் குழாய்யை உருட்டிக்கொண்டு சென்று அந்தக் கால்வாயில் உருட்டித்தள்ள அது அந்தக் கால்வாயில் சரியாகப் பொருந்தி அருமையானப் பாலமாக அமைந்தது.
"அடக்கடவுளே ஒரு பழமொழி சொல்லுவாங்க 'உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்' அது மாதிரி இப்படிக் கையிலேயே எளிதானத் தீர்வுக் கைவசம் வேச்சிக்கிட்டு இத்தனை நாளா எங்க யாருக்கும் இந்த யோசனையே வரல உங்களுக்கு மட்டும் சட்டுன்னு இந்த யோசனை வருது நீங்க உண்மையிலேயே சிறந்த புத்திசாலி" சொல்லிப் பெருமையுடன் கட்டிக்கொண்டாள்.
நான், "ஐய்யோ என்னதிது இங்க இப்படி" சொல்லிச் சுற்றி முற்றிப் பார்க்கச் சட்டென ஒரு வினாடி விலகினாள்.
அடுத்த நொடியில் மீண்டும் கட்டிக்கொண்டு, "பராவயில்லப் பாத்தாப் பாக்கட்டும். மத்தவங்க எல்லாம் கட்டிக்கலாம் நான் மட்டும் கட்டிக்க கூடாதா?" அவள் குரலில் குழந்தைத்தனமான கொஞ்சல் மேலோங்கிட,
நான், "அட மத்தவங்களா யாரு " நான் சுற்றி முற்றிப்பார்க்க,
சியாமளா, "இங்க யாருமில்ல நான் என் தங்கச்சியதான் சொன்னேன் அவ மட்டும் எங்க மாமாவக் காட்டிக்கலாம் நான் கட்டிக்கிட்டாத் தப்பா?"
நான், "அட என்ன சியாமளா நீங்க சின்னக் குழந்த மாதிரி, முதல்ல உங்க தங்கச்சிக் கட்டிக்கிட்டது அவுங்கக் கல்யாணம் செஞ்சிக்கப் போற மாமனைத் தான் கட்டிப் புடிச்சாங்க, அதை யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க ஆனால் நான் உங்களுக்கு அப்படி இல்ல, அதை விடுங்க எனக்கும் உங்களக் கட்டிக்க ஆசையில்லையா நம்பப் பண்ணைக்குள்ள போய் நம்ப ஆசைத் தீரக் கட்டிக்கலாம்."
சியாமளா, "அங்க வேணாம்ப்பா அங்கதான் நம்ப ரெண்டுப் பேருக்கும் நம்ப மேல நம்பிக்கை இல்லையே; இங்கன்னாலும் வெளியன்னுப் பயத்ல அத்துமீற மாட்டோம் அதனால இங்க கட்டிக்கிட்டா நிம்மதி எப்படி நான் சொல்றதுச் சரிதானே?"
நான் சற்றுச் சிரித்து விட்டேன, "அட இது ஒரு புதுவிதமான தர்க்கமா (Logic) இருக்கே, பயத்துனாலப் பயமில்லாமக் கட்டிக்கலாம்."
"நீங்க கேலிச் செய்தாளும் பரவாயில்ல."
நான் குறுக்கிட்டு, "இல்ல இல்ல நான் உங்களக் கிண்டல் செய்யல இது உண்மைல ஒரு புதுவிதமா நியாயமான தர்க்கம், நகைச்சுவையான உண்மைச் சரிசரி விடுங்க என் உடம்புல வேர்வைவேற."
சியாமளா, "எனக்குக் கூடத்தான் வேர்த்திருக்கு; ஆசைலக் கட்டிப்புடிக்கரப்போ அதெல்லாம் தெரியாது! எனக்குத் தெரியலப்பா." சொல்லிக் கழுத்து/தோள் செருமிடத்தில் உதடுகளைப் பதித்தாள்.
இதற்குள் பண்ணைக்குள் திரும்பிவிட, "சரிப்பா சரிப்பா என்னை விடுப்பா நாம இப்போ அபாயப் பகுதில இருக்கோம் என் ஆசையக் கெளப்பி விடாதப்பா! இப்போ இந்த வேர்வைக் கசகசன்னு இருக்கு. ஐயோயெப்பா! நல்ல உச்சி வெயில் நேரத்ல இந்த வேலையை செய்திருக்கக் கூடாது. பாராவாயில்ல வேர்வை வருவது நல்லதே. இப்போ ஒரு காக்காக் குளியல் போட்டு நேராக் கெணத்துலக் குதிச்சி நீந்தினா ஹாஹா சொர்க்கமா இருக்கும் அதவிடச் சொகம் வேறேதுமில்ல."
சியாமளா, "அதுதான் கெணத்துலக் குதிக்கப் போறீங்களே அதுக்குள்ள ஏன் ஒரு காக்காக் குளியல் "
"இந்த வேர்வையக் கழுவறதுக்குத்தான். அந்தக் கெணத்துத் தண்ணிக் கொஞ்சம் சுத்தமா இருக்கட்டுமே." சொல்லி அந்த நீர்த்தொட்டியில் இறங்கிக் குளித்துப் பிறகு நம் முக்கியத் தளமான கிணற்றை நோக்கிப் பயணிக்க.
சியாமளா, "அப்பா சின்னச் சின்ன விஷயத்தக்கூட நுணுக்கமாக் கவனிக்கறீங்க."
நான், "சரி உங்களுக்கும் வேர்வைலப் புழுக்கமா இருக்கும் அதனால நீங்கலும் ஒரு காக்காக் குளியல் போட்டுட்டு அப்புறம் அந்தச் சொர்க்கத்ல வந்து (சற்று யோசித்து) ஐக்கியமாயிடுங்க " ஏதேதோ நினைவுகளுடன் கிணற்றை நோக்கிப் பயணித்தேன்.
தொடரும்