Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 9: தம்புவின் அக்கறைக்கு தன்னையே பரிசாக்கினாள்
நான் அவள் இதழ்களை முத்தமிட்டு என் இரு கைகளால் அவள் இரு கன்னங்களை மிகப் பரிவுடன் பற்றி, "நீங்க என்னைக் கூப்பிட்டப்போ உங்க கண்ணுல தெரிஞ்ச தூய்மையான அன்பு/பாசம் எனக்கு இப்பவும் கண்ணு முன்ன தெரியுது. அது நீங்களே இல்லைன்னு சொன்னால் நம்ப மாட்டேன்.
ஆனால் இப்படி ஒரு அழகு ராணி, அழகு தேவதை ஒரு முன் பின் பழக்கமில்லாத ஒரு சின்னப் பையனுக்குத் தன்னையே கொடுக்கிறது... கனவா இல்லை நிஜமான்னு இன்னமும் என்னால நம்ப முடியல. அப்படியொரு அதிர்ஷ்டம் எனக்கு. இந்த அன்பு தேவதை கண்ணசைச்சாலே காலடியில விழ ஏங்கும் வாலிபர்கள் வரிசையில் நானும் ஒருவன்."
"ச்சீ ச்சீ அப்படிச் சொல்லக்கூடாது. நீ நல்ல பையன் சொக்கத் தங்கம். நான் தான் இந்தத் தங்கத்தின் காலடியில் இருக்கப் பாக்கியம் செய்திருக்கனும். என் அதிர்ஷ்டம் இந்தத் தங்கத்துக்கிட்ட என் கன்னி கழிஞ்சிது எனக்கு இதுவே பெரிய பாக்கியம்."
"சரிசரி யாராவது பார்க்கறதுக்கு முன்ன நாம தனியா போய்த் தூங்கனும்."
"இன்னும் கொஞ்ச நேரம் இப்டியே ப்லீஸ்! ப்லீஸ்!"
"ஐயோ சின்னக் குழந்தையாட்டம்." சொல்லி இறுக்கி அனைத்துக் கழுத்தில் முத்தமிட்டேன். மென்மையாக முத்தமிட்டுக் கொஞ்சிய வண்ணம் கை விரல்கள் ஊர்ந்து பல புதயலை ஆராந்த வண்ணம் சில நிமிட ஓடின.
பின் மெல்ல அவள் இடையைப் பிடித்து, "இந்த அதிசய சுரங்கத்ல தோண்டி எடுக்க நிறைய இருக்கு. அதுக்கு நிச்சயமா வேற ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. சரி இப்போ நான் போய் தூங்குறேன்."
சேட்டை அத்துமீறி... 'கனாக்கண்டேனடி'
"ஹூம் நான் ஒரு அஞ்சி வருடம் தாமதமா பிறந்திருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும், ஹூம்."
"அதைவிட இப்படி நினைச்சி பாருங்க 'ஒரு வேலை நம்ப ரெண்டு பேரும் பார்க்காமலேயே இருந்திருந்தால்'."
"ஏன் தம்பு அப்படி நினைக்கனும்? இந்தத் தங்கத்தைச் சந்திச்சதால இவ்ளோ நல்லது நடந்திருக்கு என் வாழ்கையில். அதுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லனும்னு நினைக்கிறேன். நீ ஏன் அப்படி நினைக்கச் சொல்ற? ஒரு வேலை நான் உன்னை ரொம்பச் சங்கடத்தில்."
"நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்க. அதாவது நாம சந்திக்க வாய்ப்புக் கிடைச்சி இவ்ளோ இன்பம்/நன்மை நடந்ததுக்கு அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். அதை விட்டுட்டு 'அட கடவுளே என் நீ இந்த இன்பத்தை முன்னமே குடுக்கலைன்னு குறை பட்டுக்க வேண்டாம். சரிசரி இதப் பேசிகிட்டே இருக்கலாம் முடிவே இல்லாம, நான் போய்த் தூங்கறேன். உங்களுக்கு இனிய."
இடைமறித்து கொஞ்சிய பானு, "இன்னும் கொஞ்ச நேரம் இரு தம்பி ப்லீஸ்! தம்பி! உன்னை இப்படிக் கட்டிக்கிட்டு உன் மேல இப்படி படுத்துகிட்டிருக்குறது எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா?"
"உங்களுக்கு மட்டுமா? எனக்கும் தான் அதே மாதிரி இல்லை அதை விட அதிகமாவே இருக்கு. ஆனால் நம்ப மாட்டிகிட்டு மானம் போச்சின்னா! அந்த அவமானத்தைத் தாங்கிக்க முடியுமா?"
"யாரும் எழுந்துக்க மாட்டாங்க அப்படியே பார்த்தாலும்... நான் என் தம்பிக்கூட,"
"ஆமாம் கேப்பீங்க 'நான் என் தம்பிக்கூட இப்படி அவுத்துப் போட்டுட்டு கட்டிக்கிட்டு தூங்கக்கூடாதான்னு' (மௌனமானாள்; நான் மெல்ல முத்தமிட்டு) நாம நம்ப உடைய போட்டுக் கிட்டு இப்படிக் கட்டிகிட்டிருந்தாலும் ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் ப்லீஸ்!"
"சரிசரி நீ சொல்றது தான் சரி, ஹூம் அவ்ளோ தான் நமக்கு அதிர்ஷ்டம்."
"அதையே அப்படி எதிர்மறையா (Negetive) நினைக்காமல் 'எனக்கு இவ்ளோ அதிர்ஷ்டம் கொடுத்த கடவுளே உனக்கு நன்றி இன்னும் நிறையக் குடுங்க கடவுளேன்னு' நேர்மறையா (Positive) யோசிங்க." சொல்லி அவளை அனைத்து முத்தமிட்டு விடை பெற்று விலகினோம்.
ஒரு கணம் யோசித்தவன் பின் திரும்பி, "அக்கா நமக்கு... இதைவிட வேற ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்க வழி காட்டுன்னு கடவுளை வேண்டிக்கோங்க. அதே மாதிரி அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏதாச்சும் வழியிருக்கான்னு மெல்ல யோசிங்க." சொல்லிக் கட்டி அனைத்தேன்.
முத்தமிட்டுக் கொண்டே, "எனக்கு இந்தச் சுரங்கத்தில் இருக்கிற பொக்கிஷங்களை (வலது கையால் அவள் கூதியை அழுந்த வருடியவாறு -- அதே சமயம் என் இடது கையால் அவள் மார்பகத்தைக் கவ்விப் பிசைந்தவாறே) எல்லாம் கொள்ளை அடிக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு."
"அப்பா இந்தச் செல்லம் சொல்ற விதமே ரொம்பப் புல்லரிக்க வெச்சி போதையூட்டுதே; நாம நல்லா யோசிச்சி வழியக் கண்டுபுடிக்கலாம்."
ஒரு வழியாக விடை பெற்று விலகி உறங்க ஆரம்பித்தோம்.
இன்றைய நிகழ்வுகள் எல்லாம் அதிசய/ஆனந்த/அழகிய என அடுக்குத் தொடராய் மனதை ஆட்கொள்ள மனம் ஆனந்தத்தில் அலைபாய்ந்தன. காலையில் கருத்தம்மா தம்பியைச் சப்பித் தொடங்கி வைத்தது முதல் தொடர்ந்து பல முறை காமக்களிப்பு ஏற்பட்டது.
சியாமளா, தன் கையால் கூடத் தொட்டு உணராத பொக்கிஷத்தை எனக்கு விரித்துக் காட்டவைத்த நிகழ்வு. தொடர்ந்து என் மீது மோகம் துளிர்த்துப் பின் காதலில் முடித்தாள். அவள் தன்னையே எனக்கு அர்ப்பணித்தாலும் அதை ஏற்கத் தயங்கும் என் மனநிலை.
மாலை வீட்டை அடைந்ததும் பானுவால் ஏற்பட்ட குழப்பம் அதன் விளைவால் மலர்ந்த அயல் நாட்டுப் பெண் அனிதாவின் நட்புறவு. ஒளி வேகத்தில் கனிந்து துரிதமாக நிகழ்த்திய சிறிய காமலீலை. அதை ஓரளவு உணர்ந்த அத்தை நடத்திய விளையாட்டு அதில் மலர்ந்த நகைச்சுவை. கருத்தம்மாவுடன் பகிர்ந்து கொண்ட காமக் களிப்பு.
இத்தனை களிப்புடன் இன்றைய நாளின் முடிவில் தொடங்கினாள் பானு வித்தியாசமாக. இதெல்லாம் கனவா இல்லை நிஜமா என வியக்க, அடுத்து அத்தையின் மோகினிப்பிசாசு சேட்டையை ஆவலோடு எதிர்பார்த்தது மனம். காரணம்... சரியாகத் தெரியவில்லை; ஆனால் என் மனதை முழுமையாகக் கவர்ந்து ஆட்கொண்டவள் அத்தை அவளை நினைக்கும் போதே மனம் குதூகலிக்கிறது.
இன்று அத்தை எப்படி அசத்தலாம்? யோசிக்க ஒரு கணம் சியாமளாவின் நினைவு இடை புகுந்தது. காம உணர்ச்சி மறைந்து அன்பு மதிப்பு, மரியாதை ஆக்கிரமித்தது. அவள் என்னைத் தவிர வேறு யாருக்கும் தன் மனதில் இடமில்லை எனத் தீர்க்கமான முடிவெடுத்துவிட்டாள்.
அவளுக்கு என்ன வழி? அவளை அடைய வேண்டுமானால் நான் அத்தையின் உறவைத் தியாகம் செய்ய வேண்டும்; அது நிச்சயம் என்னால் முடியாது; அப்படியானால் அவள் கதி? என் மனம் இரண்டானது ஒன்று அத்தையிடம் அடைக்கலம் கொள்வது மற்றொன்று அத்தையை மறந்து சியாமளாவுடன் இணைவது.
அத்தையை விரும்பும் மனம் முன் வைத்த அனுகூலங்கள்
1. அத்தையே மிகச் சிறந்தவள், அவளை மறக்க முடியாது
2. அத்தை, பானு, அனிதா என பலருடனும் தடையற்ற காமக்களியாட்டம்
3. ஆனால் சியாமளாவுடன் இணைவது; பிரச்சினையை வரவேற்பது காரணம் சியாமளா கிட்டத்தட்ட என் அம்மாவின் பிரதி. ஒழுக்கம் கண்ணியம் என கட்டுப்பாடு கொண்ட வாழ்க்கை. எதைத் தேர்ந்தெடுப்பது? மனம் குழப்பத்தின் உச்சியில்; அந்த நினைவில் உறக்கம் ஆட்கொள்ள உறங்கினேன்.
தொலைப்பேசி ஒலி, மிக அதிர்ச்சியான செய்தியைத் தாங்கிவந்தது. தொலைப்பேசியில் என் சித்தப்பா, என் அம்மாவுக்கு உடல் நிலை அபாய நிலையில் உள்ளதாக தகவல். நானும் என் சித்தியும் அதிரடியாகப் புறப்பட்டு வந்து சேர உத்தரவு.
என் சித்தப்பாவும் நேரடியா எங்களுக்கு முன் போய்ச் சேர்ந்து விடுவார் காரணம் அவர் இருக்கும் ஊர் எங்கள் ஊருக்கு மிக அருகில். நாங்கள் உடனடியாக புறப்பட ஆயத்தமாக; தொலைப்பேசியில் தொடர்ந்து ஜமீன் மாமா அத்தையை அழைத்து அத்தையையும் எங்களுடன் பயணிக்கச் சொல்லுகிறார்.
நாங்கள் மூவரும் (நான் சித்தி மற்றும் அத்தை இருவரும் குழந்தையுடன்) எங்கள் வீட்டை அடைய; என் அம்மா மிகக் கோபமாக என் சித்தப்பாவை ஏதேதோ கேள்வி கேட்க என் சித்தப்பா மிகப்பரிதாபமாகத் தலை குனிந்த படி நின்றிருந்தார்.
அத்தை என் சித்தியிடம் மெல்லிய குரலில், "என்ன லஷ்மி அவுங்க தான் உங்க அக்காவா? அவுங்க சௌக்கியமாத்தானே இருக்கங்க? நல்ல வேலை ஒண்ணும் விபரீதமில்லை நம்பக் கும்பிட்ட சாமி நம்பள கைவிடல."
லஷ்மி, "அதெல்லாம் சரிதான், ஆனால் என் வீட்டுக்காரர் நிற்கிற நிலையப் பார்த்தா ஏதோ நிலைமை சரியில்லைன்னு தெரியுது."
அதே சமயம் அவர்கள் (என் அம்மாவும் சித்தப்பாவும்) எங்களைப் பார்த்துவிட;
என் சித்தப்பா, "வாங்க சார் வாங்க! உலகமகா நீச்சல் வீரர் ரகு அவர்களே வாங்க!"
மிகுந்த கோபத்துடன் என்னை அணுகியவர் எனக்குப் பளார் பளார் என இரண்டு அரை விட அதேசமயம் அத்தை அதிர்ந்து என் சித்தப்பாவை தடுக்கிறாள். அதற்குள் என் அம்மா பக்கத்து அறைக்குள் அதிரடியாகச் சென்று ஒரு நீண்ட பிரம்புடன் வந்து யாரும் கவனிக்காத நிலையில் என் முதுகில் சுளீர் சுளீரெனப் பிரம்பால் வெளுக்கிரார்.
அதிர்ந்த அத்தை உடனடியாக தன் குழந்தையை இறக்கி விட்டுவிட்டுத் தான் குறுக்கே வந்து, "ஐய்யய்யோ இதென்ன கொடுமை இந்தப் புள்ளையப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?"
என் அம்மா, "யாரும்மா நீ இங்க குறுக்க அப்படித் தள்ளிப் போ!" என் அம்மா மிகுந்த ஆவேசத்துடன் அத்தையை விலக்கித் தல்ல,
என் சித்தப்பா குறுக்கிட்டு அத்தையைத் தடுத்து என் அம்மாவையும் சமாதானப்படுத்த முயல்கிறார். நீண்ட சர்ச்சைக்குப் பின் விவரம் புரிந்தது.
நீண்ட நாள் மறைத்து வைத்திருந்த நான் நீச்சல் பழகிய அபாய வழி முறை என் அம்மாவிற்குத் தெரிந்து விட்டது. மேலும் நான் என் சித்தி வீட்டுக்கு வந்து இப்படித் தினந்தோரும் கிணற்றில் நீந்துவதும் தெரிந்து விட்டது.
என் சித்தப்பா சித்தி இருவர் மீதும் கடுங்கோபம் கொண்டு என் அம்மா அவர்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்து விட்டார் என் அம்மா. என் சித்தப்பா சித்தி இருவரும் எதுவும் செய்ய வழியின்றி மன்னிப்பு கேட்டு விலகினர்.
ஆனால் அத்தை விடுவதாக இல்லை. தனி ஒரு ஆளாக நின்று போராடினாள் எனக்கு ஆதரவாக. என் அம்மா அவரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவமானப் படுத்தியதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மிகச்சாதுர்யமாகப் பேசி என் திறமையைப் பல விதமாக எடுத்துச் சொல்லினாள்.
இவை எல்லாம் என் அம்மாவின் வளர்ப்பே அடிப்படைக் காரணம் என என் அம்மாவைப் பெருமை கொள்ளச் செய்து அவரை முழுமையாக மனம் மாற்றி என்னை மாபெரும் தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்து எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துச் சுமூகமாக்கிவிட்டார் என் அன்பு அத்தை.
திடீரென என்னை யாரோ எழுப்ப; விழித்துப் பார்க்க, அத்தை மெலிதாய், "தம்பு வா மொட்டை மாடிக்கு போகலாம். முதல்ல நீ போ நான் எல்லாம் சரி பார்த்துட்டு பின்னாடியே வறேன்."
நான் முழுமையாய் சுய நிலைக்கு வந்து; அடத்தூ இதெல்லாம் கனவா? அடடா இதென்ன இப்படி ஒரு கனவு! நம் மனதின் ஆழ்ந்த நினைவுகளே கனவுகளாகப் பிரதிபலிக்கும் என அறிந்த நான் அந்த நினைவலைகளுடன் மொட்டை மாடிக்குச் சென்றேன். நேரத்தைக் கவனிக்க அதிர்ந்தேன்; என்ன அதிகாலை மணி இரண்டா? அடடா என்ன ஆயிற்று நான் ஏன் இப்படிக் கட்டுப்பாடின்றி உறங்கினேன்!
அதற்குள் வந்த அத்தை, "என்ன தம்பு ரொம்ப யோசனைல இருக்க; ஏதாவது பிரச்சினையா?"
"ஆமாம்; வந்து இல்ல இல்ல ஒண்ணுமில்ல."
என்னை அன்புடன் கட்டி அனைத்து, "எனக்குத் தான் பிரச்சினைன்னு பார்த்தா உனக்குமா?"
"என்ன பிரச்சினை அத்தை? என்ன ஆச்சி?"
"பெரிசா ஒண்ணுமில்லை தம்பு; என் பையன் (தன் குழந்தை) என்னமோ தெரியல படுத்து தூங்காம என்னையும் தூங்க விடாமல் ரொம்ப நேரம் என் தூக்கத்தைக் கெடுத்துட்டான், அதனால எப்ப தூங்கினேன்னு தெரியல ரொம்ப நேரம் தூங்கிட்டேன். அப்புறம் இப்ப தான் முழிப்பு வந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்ல அவன் முழிச்சிக்குவான் பால் குடுக்கனும். அவன் எந்த நேரத்லையும் முழிச்சிக்க வாய்ப்பு இருக்கு; அதனால இன்னிக்கி நாம கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடுவோம். சாரி தம்பு என் செல்லமில்ல கோவிச்சிக்காத தம்பு." உருக்கமாக வருந்திக் கெஞ்சினாள்.
"ஐய்யோ அத்தை! இதென்ன பேச்சு! நீங்க பெரியவங்க மதிப்புக்குறியவங்க; என்னை இப்படியெல்லாம் கெஞ்சக் கூடாது. நீங்க அதிகாரமா கட்டளை இடனும். உங்கள எதிர்த்து நான் எதுவும் பேசவும் மாட்டேன் செய்யவும் மாட்டேன். முக்கியமா என் அத்தையை எனக்குத் தெரியாதா? அதே மாதிரி நீங்களும் என்னைப் புரிஞ்சிக்கனும். இன்னொரு முறை இப்படி என்னைச் சங்கடப் படுத்தாதீங்க. நான் உங்க காலடியில இருக்க விரும்புகிற சின்னப்பையன்.; என் உடம்பில் உயிர் இருக்குறவரை அது மாறாது; தயவு செய்து."
அத்தை குறுக்கிட்டு என்னை இறுக்கி அனைத்துக் கொண்டு, "என் செல்லம் என் தங்கம்; நீ அபூர்வம்டா செல்லம்; உன்னைப் போல ஒரு புள்ளைய எங்க தேடினாலும் புடிக்க முடியாது. உங்க அம்மா உன்னைப் பெத்தாங்களா செய்தாங்களா! அப்பா அந்த மகராசியைக் கையெடுத்து கும்மிடனும்."
அத்தையுடன் அன்பாய் கோபித்து அவள் மன்னிப்பு கோரி மெல்ல சாந்தமடைந்து பின் மெல்ல என் கைகள் ஊர்ந்து அவள் மேனியில் வலம் வர மென்மையான காமலீலை தொடர கொஞ்சிப் பேச ஆரம்பித்தோம். சிறிது நேரம் அன்று நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பேசி மகிழ்ந்தோம். பின் என் கனவைக் குறிப்பிட்டுச் சொல்ல இருவரும் பேசி மகிழ்ந்தோம்.
நான் அத்தையிடம் சியாமளா விஷயத்தைச் சொல்ல விரும்பினேன். அதே சமயம் மிகக் கவனமாகச் சொல்லத் திட்டமிட்டேன். நான் அறிந்தவரை அத்தை சியாமளாவை எனக்கு மணமுடிக்க அளவில்லா மகிழ்ச்சியோடு ஆதரிப்பாள்.
ஆனால் அதில் நான் இழக்க வேண்டியது அத்தையை; அது என்னால் தாங்க முடியாது. என் மனதில் பல வித எண்ணங்கள் உருண்டோடின அதே சமயம் மிக மெல்லிதாய் குழந்தை சத்தம் கேட்க அத்தை விரைந்து செல்ல முயல, "அத்தை குழந்தையை இங்க தூக்கிட்டு வந்துடுங்களேன்."
ஒரு கணம் யோசித்தவள், "வேணாம் தம்பு அது வேண்டாத பிரச்சினையை விலைக்கு வாங்குற விஷயம்."
தொடரும்