Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 10: பழங்கால ஆச்சாரம் ஐதீகம்
அத்துடன் அத்தை விடை பெற்றுப் பிரிந்தாள். நான் யோசித்தவாறே கண்ணயர்ந்தேன். காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக் காபி அருந்தியபடி பானுவின் சேட்டைகள் நினைவுக்கு வர அவளைக் கண்கள் தேடின. அவளோ அப்போதுதான் குளித்து முடித்து மங்களகரமாக வீட்டுக்குள் நுழைய என்னைக் கண்டதும் வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
நான் அவள் அணுக அதே சமயம் அத்தையின் மகன் ஏதோ விளையாட்டாக ஓடிவந்து பானுவை நோக்கி ஓடிவர அதைக் கண்ட பானு குழந்தையை அணுக விடாமல் தப்பித்து விலக முயன்றாள்.
நானோ அந்தக் குழந்தைக்கு விளையாட்டாக உதவும் நோக்கத்தில் பானுவைத் தடுத்த படி இரு கைகளால் நன்றாகப் பிடித்து, "இதோ புடிச்சிக்கோ அக்காவை." என விளையாட்டாகச் சொல்ல; பானு அத்தை மற்றும் சியாமளா மூவரும் ஒரே சமயத்தில் என்னை வேண்டாமெனத் தடுத்து அலறினர்.
ஆனால் ஒரு நொடியில் நான் பானுவை நன்றாகப் பிடித்து நிற்க, பானுவோ! "ஐய்யோ! ரகு!" அவள் முகத்தில் மிகுந்த சோகம்/வருத்தம்.
ஷீலா, "தொட்டுட்டியா அவளை, அவ்ளோதான் அவுத்துப் போடு எல்லாத்தையும்." சொல்லிச் சத்தமாக சிரிக்க ஆரம்பிதாள்.
நான், "அட என்ன ஆச்சின்னு இப்படி எல்லாரும்." அத்தையோ! என் கேள்வியைப் பொருட்படுத்தாமல் பலத்த சிரிப்பை தொடர்ந்தாள்.
சியாமளா என்னிடம் ஏதோ சொல்ல முற்பட்டுப் பின் பானுவை நோக்கி, "அம்மா தாயே நீயே சொல்லிடு."
எனக்கு எதுவும் புரியவில்லை ஆனால் ஏதோ தவறு நடந்து விட்டதென மட்டும் புரிந்தது. நான் மீண்டும் பானுவை நோக்க அவள் ஏதோ சொல்லத் தயங்குவது தெரிந்து நான் அத்தையை நோக்க அத்தை என்னைப் பார்த்து மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்.
நான், "ஐய்யோ அத்தை ப்லீஸ்! என்ன ஆச்சின்னு யாராச்சும் கொஞ்சம் சொல்லுங்கப்பா."
அப்போதுதான் என் சித்தி அங்கு வந்தவர் சட்டெனப் புரிந்தவராய், "தொட்டுட்டானா (சிரித்துக்கொண்டே) மாட்டிக்கிட்டானா அவுரு அவுரு துணியெல்லாம் அவுரு." சொல்லிச் சிரித்தார்.
நான், "ஐய்யோ சித்தி! என்ன சொல்றீங்க? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க."
அத்தை குலுங்கிச் சிரித்தவாறே, "தம்பி நீ பானுவுக்கு எல்லாத்தையும்."
பானு குறுக்கிட்டு, "சித்தி நிறுத்துச் சித்தி நிறுத்து." அலறினாள் பின் என் சித்தியை நோக்கி, "அக்கா ப்லீஸ்! நீங்கக் கொஞ்சம் பக்குவமா தம்பிக்கு எடுத்து சொல்லுங்க."
லஷ்மி, "இங்க வாடா லூசுப்பையா. நான் அவரை அணுக, "அப்டியே நில்லு என்னைத் தொடாதே. பானுவுக்கு அந்த மூனு நாள் (மாதவீடாய்); அது ரொம்ப ஆச்சாரம் பார்க்கிற பொன்னு. இந்தச் சமயத்தில் அவளை யாரும் தொடக்கூடாது; அப்படி தொட்டுட்டா தொட்டவங்க எல்லாத் துணியையும் அவள் முன்னாடி அவுத்துப் போட்டுட்டு நேரா போயி குளிச்சிட்டுத் தான் வேற உடை போட்டுக்கனும். இது ஒரு பழங்காலத்து ஆச்சாரம்; பானு ரொம்பக் கண்டிப்பா கடைபிடிக்குறா; ஆக நீ நல்ல புள்ளையா,"
அத்தை குறுக்கிட்டு, "அவுத்துப் போடு." சொல்லி மீண்டும் சிரித்தார்.
பானு, "நிறுத்துச் சித்தி, எனக்கு வர கோவத்துக்கு அப்புறம் நான் கண்டபடி ஏதாச்சும் சொல்லிடுவேன்." மீண்டும் சீறினாள்.
என் சித்தி சற்றே புன்னகைத்தவாறு, "அட நீ வேற கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியா ஷீலா; பானுவே ரொம்பக் கூச்சப்படுது பாவம் நீ வேற ஏன் அவளை வெறுப்பேத்தற."
"சரி இப்ப நான் சட்டையும் லுங்கியும் கழட்டிப் போட்டுட்டு போவனும் அவ்ளோ தானே?"
ஷீலா, "ஒரு துணியும் பாக்கி இல்லாம (சிரித்துக்கொண்டே) எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மனமா."
நான், "சரி பானு அக்கா முன்னாடி தானே; நீங்க யாரும் பார்க்கக் கூடாதில்ல!"
சியாமளா, "ஆமா நாங்க யாரும் பார்க்க மாட்டோம்."
நான், "சரி நீங்க எல்லாரும் மாடிக்குப் போங்க; பானு அக்கா நீங்க உங்க கண்ணைக் கட்டுங்க." நான் உடனுக்குடன் திட்டமிட்டு செயல் படுத்த
அதற்குள் ஷீலா, "கண்ணெல்லாம் கட்டக்கூடாது; நாங்க ஏன் மாடிக்கு போகனும்? நாங்க எங்கேயும் போக மாட்டோம்ப்பா." விளையாட்டாக அத்தை வம்பிழுத்தாள்.
நான், "அத்தை ப்லீஸ் நீங்க வழிக்கு வரலைன்னா நான் உங்களை வலுக்கட்டாயமா தொட்டு விடுவேன்." என சொல்லி அவளை நெருங்க; அத்தை என்னை விட்டு விலகி ஓடினாள். "இது ரொம்ப நல்லா இருக்கே." சொல்லி அத்தையை நெருங்கினேன்.
அவர் ஓட்டம் பிடிக்க மற்றவர்கள் சிரிக்க; நான் ஒவ்வொருவராக நெருங்கி விளையாட அனைவரும் ஓட்டம் பிடித்தனர். பானு குலுங்கிக்குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். ஒரு வழியாக அனைவரையும் மாடிக்கு விரட்டி மாடிக் கதவை தாழிட்டுவிட்டேன்.
பின்னர் நான் பானுவை நெருங்க; அவள் தன் கண்களைக் கட்டிக்கொள்ள முயல, நான் வேண்டாமெனத் தடுத்து அவளைக் கட்டிப்பிடிக்க, "என்னை நீ தொடக்கூடாது." சொல்லி விலகினாள்.
நான் அவளையும் விளையாட்டாகத் துரத்திப் பிடித்து, "நான் தான் ஏற்கனவே தொட்டுட்டேனே; அடுத்து குளிக்கிற வரைக்கும் நான் உங்கள எத்தனை முறை வேணும்னாலும் தொடலாம்." சொல்லிக் கட்டி அனைத்து அவள் உதட்டில் முத்தமிட்டேன்.
அவள் மெல்ல நிலையுணர்ந்து, "ஏய் வாலு நீ படு புத்திசாலி; உன் மூளை நல்லா வேலை செய்யுது." நான் அவளைக் கட்டி அணைக்க முயல அவள் சற்றே தயங்க நான் மெல்ல விளக்கிச் சொல்லி அவளுக்குப் புரிய வைத்துப் பின் அவள் முழு மனதுடன் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.
நான் அப்படியே அவள் இடையை மென்மையாய் அழுத்தி பின் அவள் புட்டங்களைப் பிசைந்தேன். அவளோ சற்றே நெளிந்த வண்ணம் என் கையை விலக்கி செல்லமாய்க் கடிந்தவாறே, "ச்சீ அங்கெல்லாம் கையை வைக்காதே." சொல்லி நான் விலக்காமல் தொடர செல்லமாய் அந்தக் கை மீது தன் கையால் செல்லமாக அறைந்த வாறே, "சொல் பேச்சே கேட்க மாட்டியா?"
"சரியான காரணமாக இருந்தால் நிச்சயம்."
"ஐய்யோ எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு ரகு."
நான் என் கையை விலக்கி, "கூச்சமா இருந்தா பரவாயில்லை ஆனால் நீங்க அதை அசிங்கமா நினைக்குறீங்க அதுதான் தப்பு, சரி இப்ப நேரம் சரி இல்லை அதை அப்புறமா வெச்சிக்குறேன்."
"அதை மட்டும் இல்லை முழுசா என்னையே வெச்சிக்கோ இப்ப என்னை விடுப்பா." அவள் 'வெச்சிக்கோ' எனக் குறிப்பிட்டது சின்ன வீடு அதாவது முறையற்ற உறவுமுறை. அதை அவள் குறிப்பிட என் மனம் சங்கடப்பட அவளை விலக்கி என் இரு கைகளை அவள் தோளில் நிறுத்தி பின் அவள் கன்னங்களைப் பற்றி, "அழகு ராணி தேவதை; அப்டியெல்லாம்... சொல்லாதீங்க." சற்றே வருத்தம் கலந்த கடுமையுடன் சொல்லித் திரும்பினேன்.
பானு அதிவேகமாய் என்னை இழுத்தணைத்து முத்தமிட்டு, "ஏய் நீ சம்மதிச்சா!... உன்னை எங்கயாச்சும் ரொம்பத் தூரம் கண் காணாத இடத்துக்கு இழுத்துகிட்டு ஓடிப்போயிடுவேன்."
அதே சமயம் மாடியிலிருந்தவர்களின் கூக்குரல் ஒலிக்க; நான் அவளை விலக்கி, "சரி நீங்க போயி அந்த மாடிக்கதவைத் திறந்து அவுங்கள விடுதலை செய்ங்க." சொல்லி இறுதியாக அவளிடம் விடை பெரும் பாணியில் அவள் கன்னங்களை என் இடது கையால் பிடித்த வண்ணம் அவள் இதழில் முத்தமிட்டேன்.
அதேசமயம் என் வலது கையால் அவள் கூதியைக் கவ்வி வருட அனிச்சையாய் அதிர்ந்து தன் இடுப்பை வேகமாய்ப் பின் நோக்கி வளைத்து அதே சமயம் என்னையும் அவளை விட்டு விலக்கித் தள்ளி, "ச்சீ வாலு திருந்தவே திருந்தாது." எனச் செல்லமாக கடிந்துகொண்டாள். நான் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தேன்.
அனவரும் சிற்றுண்டி முடித்துத் தயாராகிய நிலையில்; சியாமளா மட்டும் தயாராகாமல் இருக்க அதை கவனித்த அத்தை அவளை வினவ; சியாமளா, "நான் வரல சித்தி எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. இன்னிக்கி துர்கை அம்மனுக்கு விளக்குப் பூஜைக்குத் தயார் பண்ணனும்."
அத்தை மிகுந்த ஆச்சரியத்துடன், "அடி ஆத்தி இதென்ன அதிசயம்; அது இன்னாடி இத்தனை வருஷத்ல அவள் ஒருத்தி மட்டும் தனியா போய் வருவாள்."
லஷ்மி, "யாரு."
ஷீலா, "பானு தான்; அவள் தவறாம; இப்படி மாதவீடாய் வந்தா மட்டும் மத்தவங்களச் செய்யச் சொல்லி."
சியாமளா, "ஆமா சித்தி எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது இன்னையில இருந்து நான் ஆரம்பிக்கப் போறேன்; போதுமா!." சற்று அங்கலாய்த்தவளாய்.
ஷீலா, "அவள் இப்பத்தான் மூலைல உக்காந்துட்டா; லஷ்மி வெளியப் போவுது இதுல நீயும் வரலைன்னா நான் மட்டும் போனா அந்த டாக்டர் என்னன்னு நினைப்பாங்க; நம்ப வருவது புடிக்காம யாரும் வரலைன்னுத்தான மனசு வருத்த படமாட்டங்க; செய்டீ செய் எவ்ளோ செய்றீங்களோ செய்ங்க." சற்றே வருத்தம் கலந்த கோபத்துடன் கூறினார்.
அனைவரும் கவனிக்கத் தவறியதாகத் தோன்ற; ஒரு கணம் அமைதி
உடனே லஷ்மி, "நீ சொல்றது புரியது ஷீலா நான் வந்து ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு டாக்டர் கிட்ட விவரத்தை சொல்லிட்டு கிளம்புறதுதான் சரி."
ஷீலா, "நீ வேண்டாம் லஷ்மி அதெல்லாம் டாக்டர் புறிஞ்சிப்பாங்க."
நான், "அத்தை கொஞ்சம் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா."
சற்றே புன்னகைத்த ஷீலா, "உன்னப் போய்த் தப்பா நினைக்க முடியுமா; நீ தான் சுட்டிப் பையன் இந்த நிலைமைக்கு ஒரு நல்ல வழி சொல்லு."
"நாம ஒவ்வொண்ணா கவனிக்கலாம்; முதல்ல கடைசி நிமிஷத்ல வரேன்னு சொன்ன டாக்டர் இதெல்லாம் நிச்சயம் புரிஞ்சிக்குவாங்க; அதாவது ரொம்பத் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. ஆனால் நாம முடிஞ்ச வரைக்கும் எல்லாரும் போக முயற்சி செய்யனும் நான் ஒத்துக்குறேன். அடுத்தது சியாமளா கோவிலுக்குப் போக முடிவு செய்தது நல்லதுதான்; ஆனால் அதுதான் முக்கியக் காரணமா இல்ல வேற ஏதாவது,"
சியாமளா பயந்தவாறு குறுக்கிட்டு, "ஐய்யய்யோ! எனக்கு வேற எந்த வேலையும் இல்லை."
நான், "நான் உங்கள சந்தேகப் படலைங்க; ஒரு வேலை வேற ஏதாவது காரணம் இருந்தா நாம் அதையும் எப்படி சமாளிக்கலாம்ன்னு பார்க்கனும் அதுக்குத்தான் கேட்டேன்; சரி உங்களுக்குக் கோவிலுக்குப் போக என்ன/எவ்ளோ வேலை?"
சியாமளா, "கடைக்குப் போயி பூஜை சாமான்களை வாங்கிட்டு வரனும்; அதைத் தயார் செய்யனும் அப்புறம் கோயிலுக்குப் போய் வரனும்; ரொம்பத் தூரம் அந்தக் கோவில்."
கோபமாக குறிக்கிட்ட அத்தை, "இதையெல்லாம் மத்தியானம் ரெண்டு மணிக்குக் கிளம்பி வந்து செய்ய முடியாதா?"
"கோபப்படாம கொஞ்சம் சாந்தமா கேட்கலாமே அத்தை. சரி நீங்க சொல்லுங்க சியாமளா, உங்களுக்கு அது சரியா?"
சியாமளா, "சரி நான் மட்டும் மத்தியானம் திரும்பி வந்துடுவேன்." அவள் பதிலில் உற்சாகமில்லை.
ஷீலா, "நாம எல்லாருந்தான் தம்பிய தவிர; டாக்டர் அப்பவே சொல்லிட்டாங்க ஒரு ரெண்டு மூனு மணிநேரம்னு."
சியாமளா, "நீங்க வந்தாலும் வரலைன்னாலும் நான் திறும்பிடுவேன்; அப்புறம் என்னைத் திட்டக்கூடாது சொல்லிட்டேன்."
நான் சியாமளாவை நோக்கி, "வேற ஏதோ பிரச்சின இருக்கு ஆனால் சொல்ல முடியாம தவிக்குறீங்கன்னு எனக்குத் தோனுது."
சியாமளா, "அதெல்லாம் ஒண்ணுமில்லை; அந்தக் கோவில் ரொம்பத் தூரத்ல ஊருக்கு வெளிய தள்ளி இருக்கு; அங்க போய்ட்டு வந்தா ரொம்பச் சோர்ந்து போயிடும், அதுக்குத்தான் நான் வீட்லயே இருந்தா மத்தியானம் நல்லா தூங்கி ஓய்வெடுத்து நல்லா புத்துணர்ச்சியா சாயங்காலம் கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு நினைச்சேன், அவ்ளோதான்."
நான், "அப்படியா சங்கதி (சற்றே யோசித்து) அத்தை நான் ஒரு யோசனை சொல்லவா?"
ஷீலா, "அட என் செல்லம் நீ என்ன இப்படி கேக்கறது சும்மா அதிகாரமா ஆர்டர் போடனும்."
நான், "சாயங்காலம் சியாமளாவை கோவிலுக்கு நான் கூட்டிட்டு போகட்டுமா... மாமா வண்டியில."
சியாமளா, "ஹான்."
ஷீலா, "அட அது நல்ல யோசனையா இருக்கே! அதுதான் சரி. ஆமாம் அந்தக் கோவில் ரொம்பத் தூரம். பானு வாரம் தவராம போய்ட்டு வந்து கால் வலி இடுப்பு வலின்னு வேதனை படுவாள்; ஆனால் தவராம போயிட்டு வருவா(ள்)."
சியாமளா, "ஹையா ஜாலி ஜாலி; ரொம்ப நன்றி சித்தி, ரகு."
நான், "சரி ஒரு பிரச்சினை முடிஞ்சிது; அடுத்து பானு தனியா இங்கயேவா இருப்பாங்க?"
ஷீலா, "ஏன் நீ பக்கத்துல ஒரு மனைய போட்டுக்னு உக்காரப்போறயா? (கேட்டுச் சிறித்தவாறு) அவளைப் பத்தி உனக்குத் தெரியாது. நான் ஏதாவது சொன்னாள் அவள் கோவிச்சுக்குவா. அவள் இப்டிதான் இந்த மூனு நாளைக்கும் அந்த ஆரடிக்குள்ள தான் முடங்கிக் கிடப்பா. அது ஒரு பழங்காலத்துப் பாட்டி."
நான், "சரி அவுங்களுக்குச் சாப்பாடு."
ஷீலா, "அதெல்லாம் வேலைக்காரங்க செய்துடுவாங்க."
நான் மெல்லப் பானுவை அணுக; அவள் கிட்டத்தட்ட ஒரு ஒதுக்குப் புறமாக இருந்த மூலையில் ஒரு மனையில் அமர்ந்த வண்ணம் தன் முன்னே ஒரு நான்கடி தூரத்தில் உலக்கையை ஒரு எல்லைக் கோடாக வைத்திருந்தாள். பார்த்ததும் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டு வெளிக்காட்டாமல் அவள் அருகே செல்ல
பானு, "அங்கயே நில்லு ரகு கிட்ட வராதே."
லஷ்மி, "நீ ஏன்டா சும்மா அவளையே சீண்டிகிட்டே இருக்குற."
அத்தையும் சியாமளாவும் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனக் கூறினர்
நான், "பெரும்பான்மை ஆதரவில் தப்பிச்சீங்க; நான் அப்புறமா வந்து வெச்சிக்குறேன்." சொல்லி திரும்பினேன்.
ரகசியமாய் பானு, "வெச்சுக்குறியா ஓடிப்போலாமா; நான் இப்பவே ரேடி (தயார்)." அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளை கட்டிக்கொள்ள அனிச்சையாய் கைகள் வர அதை மறைத்து, "தொட்டுடுவேன்." என இரு கைகளால் சைகை செய்ய அனைவரும் அலறினர்.
பிறகு நான் என் சித்தியையும் குழந்தையையும் அழைத்துச் செல்ல முயல அதே சமயம் அத்தையின் குழந்தை அடம் பிடித்து என் சித்தியுடன் சேர்ந்து கொள்ள; என் சித்தியையும் இரு குழந்தைகளையும் வண்டியில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு அப்படியே திரும்பி வருகையில் இரு மருத்துவர்களையும் அழைத்து வந்து வீடு சேர்ந்தேன்.
தொடரும்