பாகம் 20: வெண்ணிலவின் மனதில் தஞ்சம்

Story Info
அவனுள் குடிகொண்ட வெள்ளி நிலா மற்ற நல்ல உள்ளங்களுடன் பகிர்வு
1.2k words
5
8
00

Part 56 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே

பாகம் 20: வெள்ளி வெண்ணிலவின் மனதில் தஞ்சம்

"எனக்குக் நீ கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம். அதுக்கும் மேல என்னை மற்ற பெண்களோடு பகிர்ந்து கொள்ளச் சம்மதித்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். இத்தனைக்கும் மேல எனக்கு உதவி செய்யத் தயாரா இருக்கிறது என்னால நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அதிர்ஷம். என் அதிர்ஷ்ட தேவதையே; இனி நான் உன் அடிமை.

நிச்சயமா உன் உதவியோடு தான் நான் எல்லாத்தையும் சாதிக்க முடியும். முதல்ல மற்ற இரண்டு பெண்களை உனக்கு அறிமுகப்படுத்தனும். என் மனதைக் கொள்ளை கொண்ட முதல் பெண்மணியைப் பற்றி நான் பிறகு சொல்வது நல்லது. அநேகமாக உனக்கு நான் குறிப்பிட்ட அந்த இரண்டாவது பெண் சியாமளாதான்னு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்."

"ஓஹ் உண்மையாகவா வாவ் நான் எதிர்பார்க்கலை ஆனால் ரொம்பா நல்ல பொன்னு. அவள் கொஞ்சம் ரொம்பா குழந்தை மனசு; ரொம்பா வெகுளி. நிச்சிமா நல்ல அழகு, அன்பானவள், நல்ல நாகரீகமான பண்பு. அவளா அவளுக்கு நிச்சயம் பண்ண மாமனையே கல்யாணத்துக்கு முன் காமப்பிரச்சினைக்கு விரும்பாமல் விட்டு விலகிட்டாள். நல்ல ஒழுக்கமான பொன்னு உன்க்கு தயாரா இருக்குறா. ம்ம்ம் அப்பா அவள் மனசை புரிஞ்சிக்கிறது சுலபமில்லப்பா."

சட்டெனக் கருத்தம்மாவின் குரல் கேட்டுக் கடிகாரத்தை நோக்க மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. இருவரும் உடை அணிந்து கருத்தம்மாவிடம் பண்ணையை ஒப்படைத்து விடைபெற்று வீட்டுக்குப் புறப்பட்டோம்.

வழியில் நான் கருத்தம்மாவைப் பற்றி அனிதாவுக்குத் தேவையான அளவுக்குச் சொல்லி பின் கருத்தம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றியதையும் விளக்க; அவள் மனம் மகிழ்ந்து பாராட்டினாள். நான் அவள் புரிந்துணர்வுக்கு நன்றி சொன்னேன்.

அவள் வியப்பாய் ஏன் எனக் கேள்வி எழுப்ப; பின் நான் அவள் நிலை தாழ்ந்தவள் என்பதனாள் அவளுடன் உறவு வைத்துக் கொண்டதை அனிதா ஏற்றுக் கொண்டது எங்கள் இருவரின் ஒத்த மனப்பக்குவத்தை எண்ணி மனத்திருப்தியை வெளிப்படுத்த; அவளும் அந்தக் கருத்தில் இணக்கம் கொண்டதைப் பகிர்ந்து பெருமை கொண்டாள்.

"அனிதா நீயும் எங்களுடன் கோவிலுக்கு வரலாமே! விருப்பமா?" என வினவ

"ஆஹா நிச்சயமாக எனக்கு ரொம்மப் புடிக்கும் ஆனால் இது சரியான தருணமில்லை நீ சியாமளாவோட தனியாகப் போவதுதான் ரொம்ப நல்லது; நீங்க ரெண்டு பேரும் உல்லாசமா போய் அனுபவிக்க வேண்டியது அதனால இந்தமுறை வேண்டாம்."

தற்போதைய நிலைமையில் நான் அங்கு இருக்கப்போகும் வெகு சில நாட்களில் அனிதா மற்றும் சியாமளா ஆகிய இருவரின் புரிந்துணர்வே மிக அவசியமாகத் தோன்றியது. எனவே அவர்கள் சந்தித்துப் பழகுவதற்குச் சந்தர்ப்பங்களை உண்டாக்குவதின் அவசியத்தை உணர்ந்த நான் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்த முடிவு செய்தேன்.

வீட்டை அடைந்ததும் நான் பானுவிடம் சென்று அவளை நலம் விசாரித்துப் பின் மெல்ல அவள் கோவிலுக்குத் தவறாமல் போவதைப் பற்றிப் பேச ஆரம்பித்து அவள் சார்பாக இன்று அனிதா கோவிலுக்கு வந்து செய்யலாமே எனப் பரிந்துரையாக கூறினேன்.

உடனே சியாமளாவும் பானுவும் அது நல்ல யோசனை என ஆமோதிக்க; அனைவரின் பார்வை அனிதாவின் மீது திரும்பின. உடனே அனிதா தனக்கு எதுவும் செய்யத் தெரியாதே எனக் கேள்வி எழுப்பினாள்.

உடனே சியாமளா, "அது ஒண்ணும் பெரிய சிரமமான காரியமில்லை; நீங்க அப்படியே நான் செய்வதைப் பின்பற்றிச் செய்யலாம்."

அனிதா சம்மதித்துப் பின் அவளும் பாவாடை தாவணி உடைக்கு மாறினாள். அனைவரும் அனிதா அந்தப் பாரம்பரிய இந்திய உடையில் மிக அழகாக வெளிப்படுவதை உணர்த்த அவளும் தன் உடை அலங்காரத்தைக் கண்டு மிகத்திருப்தி அடைந்தாள். ஒரு வழியாகக் கோவிலுக்கு மூவரும் பயணித்தோம்.

கோவிலுக்குச் செல்லும் முன் அனிதா வீட்டுக்குச் சென்று அவள் அம்மா ஜெயாவிடம் தகவலைச் சொல்லிவிட்டுச் செல்ல விரும்பினோம். இந்திய உடை அலங்காரத்தில் ஜோலித்த அனிதாவைக் கண்டதும் அளவு கடந்த ஆனந்தத்தில் பூரித்துப் போன மருத்துவர் கண்களில் நீர் ததும்ப என்னை அன்புடன் அனைத்து எனக்கு நன்றி தெரிவித்தார்.

உடனே அனிதா அவள் அம்மாவிடம், "அம்மா ரகுவுக்கு ஒரு சின்னா விருந்தூ இந்தா ராத்திரிக்கு செய்லாமா?" சொல்லி என்னை நோக்கினாள் அனிதா.

உடனே அதை ஆமோதித்த ஜெயா என் சம்மதத்தை எதிர் நோக்க; நானும் முழு மனதுடன் சம்மதித்தேன். ஜெயா அத்தை ஆனந்தத்தில் என்னை அன்புடன் அனைத்து நன்றி தெரிவித்தார். உடனே அனிதா அவள் அம்மாவைத் தனியே அழைத்துக் காதில் ஏதோ மெலிதாய் கிசுகிசுக்க ஜெயா அத்தையும் "நீயே கேள்." என அவளைத் தூண்டினார்.

"உன்க்குக் கொஞ்சம் லேட் டின்னர் புடிக்குமா? Maybe after nine."

"தாராளமா செய்யலாமே; எங்க வீட்டு வழக்கமே பொதுவா இரவு 9 மணி அளவில்தான் இரவு உணவு நேரம்; நாம தாராளமா அதே நேரத்துல சாப்பிடலாம்."

"Would you prefer a fine dine with wine?"

"Of course with pleasure."

ஜெயா "அட அனிதா இன்னிக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கிறாளே!"

"Yes I am so much happy today and have a surprise news for you, later tonight." சொல்லி கண் சிமிட்டினாள்.

சியாமளா, "இவரு கூட இருந்தால் எல்லாரையும் அப்படித்தான் சந்தோஷமாக்கிடுவாரு; முதல் நாள் எங்க சித்தி; நேத்து நான்; இன்னிக்கு அனிதா." அசடு வழிந்தாள் அப்பாவி சியாமளா.

"Oh my கட்வுளே; you are so innocently sweet." சொல்லி செல்லமாக அவள் கன்னத்தைக் கிள்ளினாள்.

பின் விடை பெற்று கோவிலுக்குப் பயணித்தோம். அந்தக் கோவில் ஊர் எல்லையில் வெகு தொலைவில் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. உண்மையில் அவ்வளவு தூரம் நடந்து செல்வது நிச்சயமாகச் சோர்வை உண்டாக்கும்.

ஆனால் அவ்வளவு தூரத்தையும் பொருட்படுத்தாமல் பல இளம் பெண்களின் வருகை ஆச்சரியம் அளித்தது. அந்த வண்டியின் சத்தம் அங்கு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பெரும்பாலோர் அங்கு ஜமீந்தாரர் வந்திருப்பதாகப் பயந்து விலகி பின் வேறு இளம் வாலிபன் வருவதைக் கண்டு நெகிழ்ந்து மோகப் பார்வை வீசினர்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததில் சியாமளா பெருமை கலந்த ஆனந்த உச்சத்தில். அங்கு வந்திருந்தவர்கள் முழுக்க முழுக்கப் பெண்களே அதில் பலர் சியாமளாவை அறிந்தவர்கள் தானாக வழிந்து வந்து அவளை நலம் விசாரிக்கும் சாக்கில் அருகில் வந்து என்னை ஸைட் அடித்து ஜொல்லு விட்டனர்.

அங்கு முழுக்க முழுக்கப் பருவப் பெண்களின் பெரும்பான்மையை உணர்ந்த அனிதா அதன் விவரம் கேட்க, "இது பருவப் பெண்கள் தன் மனதுக்கு விருப்பமான மணமகனை அடைய வேண்டிக் கொண்டு தொடர்ந்து விலக்குப் பூஜை செய்தாள் நினைத்த படி நடக்கும் என்பது நம்பிக்கை." என விளக்கினாள் சியாமளா.

பூஜை முடித்ததும் உடனே வீடு திரும்ப நினைத்த அனிதாவைத் தடுத்து நிறுத்திய சியாமளா அப்படிச் செய்யக்கூடாது குறைந்தது ஒரு பத்து நிமிஷமாவது சற்று அமர்ந்து பொழுது போக்கி விட்ட பின்னரே செல்ல வேண்டும் என வற்புறுத்த, மூவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

இது நாள் வரையில் தான் இந்த விலக்கு பூஜை செய்ததில்லை எனவும் ஆனால் இனிமேல் தவறாமல் தொடரப் போவதாகச் சியாமளா சொன்னாள். அனிதா அதன் காரணம் கேட்க இது நாள் வரையில் தனக்கு ஏற்ற மணமகன் கிடைக்கவில்லை.

தற்போதுதான் திடீரெனக் கடவுள் அடையாளம் காட்டி இருப்பதாகவும் அதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லி இந்தப் பூஜை/பிரார்த்தனையைத் தொடரப் போவதாகக் கூறினள்.

அப்படித் தொடர்ந்து செய்து வந்தாள் தன் மனதைக் கவர்ந்த அந்த மணமகனை நிச்சயம் கடவுள் சேர்த்து வைப்பார் என ஆணித்தரமாக நம்பிக்கையை வெளிப்படுத்த வியந்தாள் அனிதா.

நான் அவர்கள் இருவரையுமே அதிகம் பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். சியாமளா அவள் காதலனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அனிச்சையாக என்னை நோட்டமிடுவதைக் கவனித்தவளாக அனிதா சற்று சந்தேகப்படுவதைப் போல மெல்ல அதை உறுதிசெய்வதாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்.

"உன் fiancé இந்த ஊரிலே native-வா? I mean."

நான் மொழிபெயர்த்து "இந்த ஊர்க்காரரான்னு கேக்குராங்க."

சியாமளா "இல்ல அவர் இந்த ஊருக்கு புதுசா... (சொல்லி என்னை நெருங்கி சற்று கிசுகிசுத்தவளாய் 'நீங்கதான்னு சொல்லுங்களேன்' கொஞ்சலாய் கெஞ்சினாள்)."

அவள் நடவடிக்கையைச் சற்றே கவனித்தவளாய் அனிதா "ரகு(வுக்கு) தெரியுமா?"

சியாமளா, "அவுங்கதான் கேக்குறங்களே சொல்லுங்களேன்." மீண்டும் என்னிடம் முணுமுணுக்க

நான், "அட உங்களைக் கேட்டா நீங்கதானே பதில் சொல்லனும். நான் எப்படிச் சொல்றது?"

அனிதா, "Oh It's OK Siamu. I mean don't need to tell if you are not comfortable."

நான், "உங்களுக்குப் பிரச்சினையா இருந்தால் சொல்ல வேண்டாம்னு சொல்றங்க."

சற்றுப் பதட்டத்தில் சியாமளா, "ஐய்யோ இல்ல இவருதான்."

அனிதா, "OK OK Cool cool. நாம வேற பேசலாம், நான் சாமிகிட்ட என்னா,"

அதற்குள் மீண்டும் பதட்டப்பட்ட சியாமளா, "இவருதான்." சொல்லி வெட்கத்தில் தலை குனிந்தாள் அதே சமயம் என்னைக் கண்டு புன்னகைத்தாள் அனிதா. அதே சமயம் அவள் நடவடிக்கையை ஓரக்கண்னால் சியாமளா நோட்டமிட்டாள்.

உடனே தன் புன்னகையை மாற்றி வருத்தம் கலந்த அதிர்ச்சியை வெளிக்காட்டி சற்று மௌனமாய் ஏதோ ஏக்கமாய் என்னைப் பார்த்த வண்ணம்; பின் மெல்ல பெருமூச்சிட்டாள்.

அதற்குள் சியாமளா நிலைமை சரியில்லை என உணர்ந்து "என்ன ஆச்சி ஏன் இப்படி ஏதாவது பிரச்சினையா?" குழப்பத்துடன் எங்கள் இருவரையும் நோக்க நான் அமைதியாய் தலை குனிய

அனிதா, "நீ இந்தச் சாமிகிட்ட ரகுவா கேட்டுது ஹூம் நானும் ரகுவா கேட்டான்;... இப்பா புரிது (என்னை நோக்கி) நீ ஏன் என்க்குப் பதில் சொல்லலா."

அதற்குள் ஓரளவு உண்மையை யூகித்த சியாமளா "நீங்களும் இவரத்தான் காதலிக்கிறீங்களா?" அனிதா அப்பாவியாய் சோக முகத்துடன் ஆமென தலையசைக்க; தலையில் இடி விழுந்தவளாய் அதிர்ந்து மெல்ல என் தோளைப்பற்றி என் மீது ஆதரவாய் சாய்ந்தாள்.

சிறிது மௌனத்திற்குப் பின் மீண்டும் அனிதாவை நோக்கி "நீங்க சாமிகிட்ட இவரைத்தான் கேட்டீங்களா? (ஆமென அவள் மீண்டும் சோகமாய்த் தலையசைக்க)... அப்ப அவர் உங்களுக்குத்தான். எங்க சாமி ஏமாத்தாது; ரகுவை நீங்களே கட்டிக்கோங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சவங்க."

அதற்குள் அவள் வாயைப் பொத்தி அவள் பேச்சைத் தடுத்து அன்புடன் ஆதரவாய் கட்டி அணைத்தாள் அனிதா. பின் மெல்ல விலக்கி "Wow you're so sweet; என்க்கு ரகு ரொம்பப் புடிக்கும். என்னைக் கல்லாணம் சேய் சொல்லி நான் கேட்டேன்.

ஆனால் ரகு சொல்றான் அவன் மன்சு யாரோ ஒரு ஆண்டி திருடி போச்சி. அதுனாலெ அவன் யாரும் கல்லாணம் சேய் மாட்டான்னு சொல்றான். ஆனால் கவலே படாதே, நான் பேசி சம்மதிக்கா செய்துட்டேன். என்க்கும் ரகு வேணும், உன்க்கும் ரகு வேணும். நாமா ரெண்டு பேரும் ரகுவா ஷேர் (பங்கு) பண்ணிக்லாமா?"

இதைக் கேட்டதும் சியாமளாவின் கண்கள் திடீரென ஜொலித்து ஒரு கணம் அதிர்ச்சியில் திகைத்தவள் அனிச்சையாய் அனிதாவின் இரு கைகளையும் பற்றி, "உண்மையாவா சொல்றீங்க?" அனிதா ஆமென தலையசைக்க ஆனந்தத்தில் துள்ளி அனிதாவை அனைத்து மெலிதாய் விசும்பினாள்.

பின் மீண்டும், "நெஜமாவா சொல்றீங்க என்னால நம்பவே முடியல." சொல்லி என்னை நோக்கி நான் அமைதியாய் புன்னகைக்க என்னை அணுகி "நீங்க ஏன் எதுவும் பேசமா இப்படி அமைதியா நிக்குறீங்க?"

நான், "இப்படி அன்பைப் பொழிய ரெண்டு தேவதைகள்; ஒரு தேவதைக்கே தகுதி இல்லாத எனக்கு ரெண்டு கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம் இது கனவா இல்லை நிஜமான்னு மலைத்து நிற்கிறேன்." இதைக் கேட்டதும் என்னை அனைத்துக் கொள்ள அனிச்சையாய் கைகள் துடித்துச் சுற்றுச் சூழலை உணர்ந்து நிறுத்தினாள்.

அதைக் கண்ட அனிதா, "அட ஏன் தயங்குது ஆசை வந்தா கட்டிக்கனும் இதுமாதிரி." எனத் தெரியாத சிறுபிள்ளைக்குச் செய்து காட்டுவதைப் போல என்னைக் கட்டி அணைக்க உடனே அங்கிருந்த சில பெண்களின் சிரிப்பொலி கேட்டு, சியாமளாவோ வெட்கி நாணி மிகுந்த கூச்சத்துடன் அனிதாவை விலக்கினாள்.

அதே சமயம் அனிதாவோ அப்படிச் சிரித்த பெண்களை நோக்கி "Hai Girls." எனக் கையசைத்து இரண்டு கைகளையும் தன் உதட்டில் பொத்தி அவர்களை நோக்கி முத்தத்தைப் பறக்க விட்டாள். அதே சமயம் நான் அந்தப் பெண்களை நோக்கிப் புன்னகைத்து அவர்களைப் பார்வையில் அளக்க; சியாமளாவோ "ஐய்யோ மானம் போவுது வாங்க நாம போவலாம்." சொல்லி என் கை பிடித்து இழுத்தாள்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous