Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 21: மங்கையர் இருவர் பகிர்ந்து கொள்ளத் தயார்
நான், "அட இருப்பா இத்தனை பொன்னுங்க விதவிதமா அலங்காரத்தோட இருக்குற அழகை ரசிக்க விடமாட்டேங்குறீங்க." இதைக் கேட்டதும் சியாமளா என் காதைப் பிடித்துத் திருகி செல்லமாக அடிக்க கையோங்கி என்னை இழுத்த வண்ணம் புறப்பட்டாள்.
அனிதாவோ சிரித்துக் கொண்டே, "Oh Ho let him enjoy; சும்மா பாக்குது தானே! (என்னை நோக்கி) எப்படி இருக்கா இந்தா பொன்னுங்கா? எத்தினா பொன்னு உன்க்கு புடிக்கு?"
அதற்குள் நாணத்தின் உச்சத்தில் தன் தலையைத் தட்டிக் கொண்டு, "ஐய்யோ ரெண்டு பேரும் திருந்தவே மாட்டீங்க; எல்லாரும் நம்பலையே பாக்குறாங்க." சொல்லி அவள் தனியாகப் புறப்பட்டாள் வண்டியை நோக்கி.
நாங்களும் புறப்படச் சட்டெனத் திரும்பிய சியாமளா, "ஒரு நிமிஷம் இருங்க நான் சாமிய கும்பிட்டுட்டு வரேன்; கேட்டதும் குடுத்த சாமிக்கு நன்றி சொல்லிவிட்டு வரேன்; ஒரே நிமிஷந்தான்." சொல்லி விடுவிடுவென நடக்க,
அனிதா, "Oh Ya that's right; wait, me too என்க்கும் பாதி குட்த்தார்." சொல்லி விரைந்து சென்று அவளுடன் சேர்ந்து கொண்டாள் அனிதா.
இருவரும் இணைந்து பழகிய நெருக்கம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நாங்கள் மூவரும் வீடு திரும்பினோம். சியாமளாவை அவள் வீட்டில் சேர்த்து விட்டுப் பின் நானும் அனிதாவுடன் அவள் வீட்டுக்கு விருந்துக்குப் புறப்படும் விவரத்தைத் தெரியப்படுத்தினேன்.
ஷீலா அத்தையும் குறும்பு சிரிப்புடன் அனிதாவை நெருங்கி, "விடாத அவனைக் கெட்டியா புடிச்சிக்கோ." எனக் கேலியாக நமுட்டுச்சிரிப்புடன் சொல்ல; சியாமளாவும் பானுவும் அவமானத்துடன் வெட்கப்பட்டு ஷீலா அத்தையைச் செல்லமாய்க் கண்டித்தனர்.
அனிதாவும் ஷீலா அத்தையை நெருங்கி, "என்க்கு ஷை (shy) இல்லே ஆனா நீங்கோ அந்த ரொண்டு பொன்னுங்காள்க்கு சொல்லுங்கா." என மெலிதாய் அவளும் நமுட்டுச் சிரிப்புடன் சொல்லி இருவரும் சிரித்தனர்.
நான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பானுவை அணுக அவள் நான் மீண்டும் தொட்டுச் சேட்டை செய்ய வருவதாக எண்ணி என்னைக் கை ஜாடை செய்து நிறுத்தி நான்கைந்து அடிகள் தூரத்திலேயே நிறுத்தி விவரம் கேட்டாள்.
லஷ்மி, "டேய் வாலு சும்மா இருக்க மாட்டியா? சும்மா திரும்பத்திரும்ப அவளையே தொந்தரவு செய்து கிட்டு; பாவம் அவளே தனியா உக்காந்து கஷ்டப்படுறா; இதுல இவன்வேற சும்மா நொய்யிநொய்யின்னு." சற்றே கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.
நான், "ஐய்யோ நான் ஒண்ணும் தொட்டுக் கலாட்டா செய்ய வரலை; சும்மா அதையே சொல்லாதீங்க காலைலேர்ந்து தனியா உக்காந்துகிட்டே இருக்காங்களே கொஞ்சம் மரியாதைக்காவது கிட்ட வந்து பேசலாம்னு வந்தேன்."
பானு, "ஐயையோ மன்னிச்சிக்கோப்பா ப்லீஸ்! ப்லீஸ்! ரொம்பச் சாரி ரொம்பக் ரொம்பச் சாரி; (சொல்லி என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கோரிவிட்டு என் சித்தியை நோக்கி) நீ வேற ஏன் அக்கா அவ்ளோ கடுப்படிக்குற தம்பி எங்கிட்டத்தானே விளையாடுது. நாங்க அடிச்சிக்குவோம் புடிச்சுக்குவோம்; எங்களுக்கு இது மாதிரி கலாட்டா செஞ்சி விளையாட யாரு இருக்கா. நாங்க மூனு பொன்னுங்க தான் சண்டை கலாட்டா எல்லாம் இப்பத்தான் ஒரு ஆம்பள புள்ள சேட்டையெல்லாம் தெரியுது அதனால நானே புரியாம சந்தேகப் பட்டுட்டேன்."
லஷ்மி, "பாத்தீங்களா இந்தக் கூத்தை! நான் ஏதோ இந்த வாலு புள்ள தப்பு செய்தேன்னு கண்டிச்சா; திருப்பி என் மேலேயே பாயுதே."
பானு, "ஐய்யோ அப்படி இல்லக்கா; இந்தத் தம்பியோட சேட்டை/குறும்பு எல்லாம் எங்களுக்குப் புதுசு. நான் சொன்னதும் நீ ரொம்பக் கோபப்பட்டது எனக்கே அதிர்ச்சியா இருந்தது; மன்னிச்சிக்கோ அக்கா தயவுசெய்து."
சியாமளா, "ஐய்யோ பாவம் பானு உன் நிலைமையப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு; நான் கூட அவர் உன்னை ஏதோ கலாட்டா செய்யத்தான் வரார்ன்னு நெனைச்சேன்; தொட்டுக் கலாட்டா செய்யவரார்னு நெனைக்கல."
நான், "சரி விடுங்க; நான் இவங்களுக்குச் சௌகரிம் எப்படி இருக்குன்னு கேட்க வந்தேன்; அதுக்குள்ள ஏதேதோ பேசி எப்படி எப்படியோ சுத்தி நான் கேட்க வந்ததையே மறந்து போச்சி; (மீண்டும் பானுவை நோக்கி) சரி எப்படி பொழுது போச்சி? வேற ஏதாச்சும் வேணுமா? ஆமா இங்க காத்தே (காற்றே) வரலையே இந்தச் சாயங்கால நேரத்துலையே கொஞ்ச நேரத்ல வெந்து வேக்காடா போகுதே எப்படி மத்தியானம் வெயில் நேரத்ல இங்க இருந்தீங்க?"
பானு, "ஆமாப்பா ரொம்பக் கஷ்டம்தான்; என்ன செய்றது கொஞ்ச நேரம் அடிக்கடி தோட்டத்துப் பக்கம் போய்ச் சமாளிச்சுக்குவேன்."
நான், "சரி ராத்திரிக்கு?... சின்னதா ஒரு மேஜை மின் விசிறி (எடுத்துச் செல்லத்தக்க -- Portable) எதுவும் இல்லையா?"
பானு, "இருக்கு ஆனால் இங்க போட முடியாது."
அவள் குறிப்பிட்ட இடத்திலிருந்த மின் செருகு பகுதி (Electric plug point) வேளை செய்யாமல் இருக்க அதை யாரும் சரி செய்யாமல் நீண்ட காலமாக இருப்பதாகச் சொல்ல; நான் உடனே அதைச் செய்யும் வேளையில் இறங்கினேன்.
லஷ்மி, "டேய் வேணம்டா இருட்டத் தொடங்கிடுச்சி; நீ இப்ப ஏதாவது செய்து ஏடாகூடமா நம்ம எல்லருக்கும் மின்சாரம் போயிடப்போவுது."
நான், "என்னைப் போன்ற ஒரு திறமையான பொறியாளனிடம் இப்படிச் சொல்வது என் திறமைக்கு விட்ட சவால் அதுவும் என்னைக் கேவலப்படுத்தும், கொஞ்சம் கூடச் சரியில்லை." எனக் கேலியும் கிண்டலுமாய் வீராப்பாகப் பேசினேன்.
லஷ்மி, "நீ இயந்திர பொறியாளன் தானடா மின்னியல் இல்லையே?"
நான், "ஹஹா நான் சகலகலா வல்லவன் (All-rounder) 'திருவிளையாடல் பட வசன பாணியில் -- எல்லாம் எமக்குத் தெரியும் பொறுத்துப் பாரும்."
அதைத்தொடர்ந்து அனிதாவும் அதே சந்தேகம் கொண்டவளாகக் கேட்க அடுத்து பானு, சியாமளா என அனைவரும் வேண்டாத விபரீத விளையாட்டு எனத் தவிர்க்குமாறு வலியுறுத்தினர்.
ஆனால் ஷீலா அத்தை மட்டும் என் மீது முழு நம்பிக்கை கொண்டு, "அட என் தம்பிய என்னன்னு நினைச்சீங்க தெரிஞ்சா செய்யும்; தெரியலன்னா சும்மா ஏமாத்தாது; ஆழம் தெரியாமல் கால வைக்காது; ரெண்டு மூனு நாள்ள நீங்க என்னத்த கவனிச்சீங்க அந்தத் தம்பியப்பத்தி."
அவர்கள் பேசிக்கொண்டிருக்க நான் முடித்து விட்டு மின் விசிறியை ஓடவிட; குளுகுளுவெனக் காற்று வீச மகிழ்ச்சியில் துள்ளிய பானு ஒரு கணம் தன்னை மீறி எழுந்து என்னை நோக்கி வந்தவள் சட்டெனத் தன் நிலை உணர்ந்து கைகளைக் கூப்பி வணங்கி சத்தமாகவே அழுதாள்; யாரும் சென்று கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் நாங்கள் அனைவரும் தவித்தோம்
அனிதா தெரியாமல் செல்ல எத்தனிக்க; அனைவரும் ஒருங்கே கோஷமிட்டு வேண்டாமெனத் தடுத்து நிலைமையை விளக்கினோம். அதற்குள் ஷீலா அத்தை என்னை இறுக்கி அணைத்து தன் மார்பில் தாலாட்டினாள்.
அதே சமயம் எங்களிருவரையும் சேர்த்து அணைத்தவாறு எனக்கு அன்பாய் முத்தமிட்ட அனிதா, "Very good handsome; I can live with peace of mind with this excellency; (பானுவை நோக்கி) Come on Banu; வந்து கட்டி ஆசை முத்தாம் கொடாங்கோ. ஆசையே அடுக்காதீங்கோ (அடக்காதீங்க)." சொல்லப் பானு சற்றே தயங்கி மேலும் அழத்தொடங்க, "சரிசரி நான் செய்றான் உங்காள்க்கும் சேத்து." சொல்லி என்னை மீண்டும் அணைத்து முத்தமிட்டு, "இது உங்காள்க்கு சரியா அலுவாதீங்கா."
ஷீலா, "அடியே போச்சி போச்சி உன் சாக்குல அவள் இன்னோன்னு (முத்தம்) கொடுத்துட்டா; அவள் கெட்டிக்காரி தம்பிய தள்ளிகிட்டு போயிடுவா." சொல்லி சிரிக்க;
அனிதா, "ஆமாம் ஸிஸ் (Sis) நான் அவ்னே தள்ளிப்போவான்; நிச்சிமா தள்ளிப்போவான்." சொல்லி பலமாகச் சிரிக்கச் சற்றும் எதிர் பார்க்காத ஷீலா அத்தை தன் உதட்டைக் கடித்த வண்ணம், "ஐய்யோ இவ்ளோ நல்லா தமிழப்புரிஞ்சிக்குறாளே; மன்னிச்சிக்கோம்மா உனக்கு இவ்ளோ புரியும்னு தெரியாது; சும்மா கலாட்டா செய்தேன்; நீ தப்பா எடுத்துக்காதே."
அனிதா, "நீங்கா தப்பு ஏதாம் சொல்லால்லா; நீங்கா சரியா சொல்லுது; நான் அவ்னே தூக்கிப் போவான்; யாரும் தடுக்கா முடியாது." சொல்லி மீண்டும் சிரிக்க நான் சற்றே கண் ஜாடை காட்டிய வண்ணம் பானுவிடம் அவள் வலியின் நிலை எப்படி இருக்கிறதென விசாரித்துப் பேச்சை மாற்ற முயன்றேன்.
ஆனால் பானு, "ஆமாம் அவள் சொல்றது முழுக்க முழுக்க உண்மை நாங்க எல்லாம் பயந்து பயந்து சாவுரோம்; அவளை மாதிரி பயப்படாம இந்தத் தங்கத்தைத் தள்ளிகிட்டு போகல." என முணுமுணுக்க; அத்தையும் சித்தியும் தள்ளி இருக்க எங்கள் மூவருக்கும் நன்கு கேட்க;
சியாமளா அதிர்ந்து, "ஏய் என்ன பேசர; அக்கா காதுல விழப்போவுது." பானு காதில் மட்டும் விழுமாறு முணுமுணுத்தாள்.
அனிதா, "Oh Come On Siyamu; don't be so afraid; let her speak out; it's her right to speak out."
நான், "அது இங்க இந்தக் கலாச்சாரத்துல அவ்ளோ சுலபமில்லை. சரி விடுங்க; (மெலிதாய் எடுத்துச்சொல்லி -- பின் பானுவை நோக்கி) நீங்க இன்னைக்கு நல்லா தூங்குங்க." நான் சொல்லச் சொல்ல அவள் கண்களில் அன்பும் ஏக்கமும் அதிகரித்து மீண்டும் கண்கலங்கினாள்.
அனிதா, "Oh No Come On Banu; take it easy; I am sorry; நான் சொல்றது."
பானு, "பரவாயில்லை முழுசும் புரியலேன்னாலும் ஓரளவு புரியுது; நான் சொல்றத கேளுங்க இவனை விடாதீங்க இவனுக்கு ஏத்த பொன்னு நீங்கதான்."
ஷீலா, "அட என்ன ஒரே ரகசியப் பேச்சா இருக்கே! எங்களுக்குத் தெரியாம என்ன திட்டம் போடுறீங்க?"
அதே சமயம் பானுவிடம் அனிதா, "You are right; Oh No (சொல்லி தலையில் தட்டிக்கொண்டு) நீ சொல்றதா செரி; நான் அவ்னே புடிச்சிட்டான் உன்க்கும் கொஞ்சம் தறான்; இவள்க்கும் (சொல்லி சியாமளாவைச் சுட்டி) கொஞ்சம் தறான்; நாம எல்லார்க்கும் கொஞ்சாம் கொஞ்சாம் ஷேர் பண்ணிக்கலாம்; நீ கவ்லே பாடுவேணாம்."
சியாமளா அடக்க முடியாமல் க்ளுக்கெனச் சிரித்துவிட; பானுவோ வியப்பின் உச்சத்தில் சந்தோஷத்தில் முகம் மலர்ந்து சிரிப்பை அடக்க முடியாமல் தவித்து என்னை நோக்கி, "என்னப்பா சொல்றாங்க இந்தப்பொன்னு? (அனிதாவை நோக்கி) யோசித்து அர்த்தம் புரிஞ்சித்தான் பேசுறீங்களா?"
நான், "எனக்கென்ன தெரியும் நீங்களே அவுங்க கிட்ட நல்லா விவரமா கேளுங்க; (முணுமுணுத்து முடித்து) ஆனால் அப்புறமா இப்ப அவ என்னைத் தள்ளிகினு போறா." எனச் சத்தமாய் முடித்து விடை பெற்றுச் சென்றோம்.
இருவரும் விடைபெற்றுச் சென்றோம். விருந்து மேற்கத்திய உணவு வகையாயிருந்தது.
ஜெயா, "ரகு உனக்கு இந்த மேற்கத்திய உணவு புடிக்குமான்னு தெரியாது அதனால நம்ம இந்திய உணவும் தயார் செய்திருக்கிறேன்; உனக்கு எது புடிக்குதோ அதை நல்லா சாப்பிடு."
நான், "நான் மேற்கத்திய உணவு சாப்பிட்டதில்லை அதை ருசிக்கச் சந்தர்ப்பம் கொடுத்ததுக்கு நன்றி."
அனிதா, "Yes my dear; just have whatever you are comfortable; the reason for offering western food is just for you to explore; you may or may not like but please feel free to explore your taste." சொல்லி எனக்கு அந்த உணவின் அம்சங்களைச் சிறப்பாக விளக்கி உதவினாள்.
தொடரும்