பாகம் 07: மானை பழக்கி ஓநாய் வேட்டை

Story Info
யுத்தம் தவிர்த்து வெற்றி வாகை சூடுதல்
1.4k words
0
18
00

Part 66 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 07: மானைப் பழக்கி ஓநாய் வேட்டை

"ஆமாம் ஸ்ரீஷா; எனக்குத் தெரிஞ்சவங்க ஏதோ பிரச்சினையில் மாட்டிக்கிட்டிருக்காங்க; அதைத் தீர்க்க சாந்தமான முறையைக் கையாளாம அடிதடி கொலை வழியத்தான் நம்புறங்க; அது பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும்னு புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க."

ஸ்ரீஷா, "சார் இப்ப நீங்க ஏதோ பூவனூர் கிராம அதிகாரின்னு."

"ஆமாம் அந்த ஆள உங்களுக்குத் தெரியுமா?"

ஸ்ரீஷா, "ஆமாம் சார் என் பெண்மையைக் கசக்கி பிழிஞ்சி காம வெறிக் கூத்தாடுற அயோக்கியன் சார் அந்த ஆளு; இன்னைக்கு ராத்திரிக்கும் நான் அந்த ஆள் கூடத்தான் படுக்கனும்னு ஏற்பாடு."

நான் சற்றே திடுக்கிட்டவனாய் அவள் கைகளைப் பிடித்து, "என்ன சொல்லுறீங்க ஸ்ரீஷா? உண்மையாவா? அடக் கடவுளே! நல்ல வேளை... பரவாயில்லை எப்படியும் நான் நடக்கவிருந்த கொலையை நிறுத்திட்டேன். அதாவது நான் இப்போது பேசினது அதைப்பத்தித்தான்; இன்னைக்கு ராத்திரி அந்த ஆள் ஏதோ இங்க பக்கத்தில் இருக்குற ஒரு ஊர்ல யாரோ பொன்னு கூடத் தனியா இருக்குற வீட்டில் அந்த ஆளைக் கொலை செய்து அந்த வீட்டை கொலுத்திட திட்டம் போட்டிருக்காங்க; சரி நீங்க அங்க போகாதீங்க; அடுத்து என்ன செய்யனும்னு நான் சொல்லுறேன்."

ஸ்ரீஷா, "சரி சார், என் நல்ல நேரம் என் உயிர் தப்பிச்சிது; சார் தயவு செய்து அந்தக் கொலை காரங்கள தடுக்காதீங்க சார்; அந்த ஆள் செத்தாதான் சார் எனக்கு நிம்மதி."

நீண்ட உரையாடலில் மேலும் பல விவரங்கள் தெரிய நான் என் திட்டத்தை மாற்றினேன்.

அன்றிரவு ஸ்ரீஷா அந்தப் பூவனூர் அதிகாரியைக் குடிபோதை ஏற்றி நிர்வாண நிலையில் அவன் மனைவி மற்றும் மாமனாரை இழிவாகப் பேச வைத்து அதனை அவன் மனைவியும் அவன் மாமனாரும் தெளிவாக நேரடியாகப் பார்த்து/கேட்டு அறிந்து கொள்ள ஏற்பாடு செய்ய; கையும் களவுமாகப் பிடிபட்டான்; அதனுடன் அந்தப் பூவனூர் அதிகாரி முழுச் சக்தி செல்வாக்கையும் இழந்து ஆள் இல்லாமல் போனார்.

அதற்கு மேலும் அவன் முன்னர்ப் பலர் முன்னிலையில் கோபத்தில் விட்ட சவாலான என் சித்தப்பா வீட்டை எரிப்பதை நன்கு திட்டமிட்டு மிகக்குறைந்த சேதாரத்துடன் அரங்கேற்றினார் ஜமீன் மாமா. அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக அரங்கேற நிம்மதியாக முழுத் திருப்தியுடன் ஊர் திரும்ப முடிவு செய்தேன்.

அடுத்த கட்டமாக அந்த ஸ்ரீஷாவை தொடர்பு கொண்டு தேவையான உண்மைகளை வெளிப்படுத்த எண்ணி அவளை அந்த விடுதிக்கு வரவழைத்துச் சந்தித்தேன். என்னைக் கண்டதும் சற்றே விசும்பலுடன் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்.

"நான் அந்தப் பூவனூர் கிராம அதிகாரியை பிரச்சினைய தீர்க்க பெரிய நாடகம் நடத்தினேன் அதுல உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்னை மன்னைச்சிடு ஸ்ரீஷா."

அவள் என்னைக் கையெடுத்து வணங்கியவள் சட்டென எனக் காலைப்பிடித்து, "நீங்க எங்க எல்லாருக்கும் ரொம்ப உதவி செய்திருக்கீங்க. அந்த ஆள் (பூவனூர் கிராம அதிகாரி) எங்களைப் போலப் பலரோட வாழ்க்கையில தொந்தரவு செய்து படாதபாடு படுத்துறவன். அவனை ஒழித்துக் கட்டினதே நீங்க எங்களுக்குச் செய்த பெரும் உதவி. அதை நாங்க யாரும் மறக்கமாட்டோம்; அதுல நான் உதவி செய்தது எனக்கு நிறையப் பெருமையா இருக்கு. உண்மையச் சொல்லனும்னா நீங்க அந்த ஆளை இப்படிச் செய்யலேன்னா ஒரு நாள் நானோ இல்லை என்னைப் போல யாராவது ஒரு ஆள் அந்த ஆளைத் தீர்த்துக் கட்டி சட்டத்தில் மாட்டி அவதிப்பட்டிருப்போம். இதெல்லாம் நீங்க எங்களுக்குச் செய்த மறைமுக உதவி; இன்னும் எவ்ளவோ சொல்லலாம்; ஆனால் நீங்க மன்னிப்புக் கேக்குறது எங்க மனசை கஷ்டப்படுத்துது சார், தயவு செய்து நீங்க ரொம்பத் திருப்தியா இருக்க நாங்க எல்லாம் மனசார வாழ்த்துவோம் சார்."

"இதைக் கேட்க எனக்கு உண்மையில் ரொம்பச் சந்தோஷமா இருக்கு; ஆனால் நான் உன்னிடம் நிறையப் பொய் சொல்லி நாடகம் ஆடினேன். அந்தச் சமயத்தில்தான் உன் நல்ல மனம் எனக்குப் புரிந்தது. நான் உன்னிடம் பல பொய்களைச் சொல்லி இருந்தாலும் உன் படிப்பு விஷயத்துல நான் சொன்னதெல்லாம் உண்மை. இந்தா இந்தப் பணத்தை வெச்சிக்கோ ஸ்ரீஷா." என மீதமிருந்த முப்பதாயிரத்தைக் கொடுக்க,

அவள் மறுத்து, "சார் அதெல்லாம் எதுவும் வேண்டாம். நீங்க எனக்குச் செய்த உதவியிலேயே ரொம்ப முக்கியமானது என் அறிவுக்கண்களைத் திறந்தது சார். நான்... இன்மேல் ஸ்ரீஷா இல்லை கமலா; ஆமாம் அது தான் என் பேரு. இந்த கேவலமான பொழப்புக்காகத்தான் என் அம்மா என் பேர மாத்திச்சி. இனி அந்தப் பொம்பளை பேச்சை கேட்க மாட்டேன். சார் எனக்கு இப்படிப் பணம் கொடுத்துப் பிரித்து விட்டுடாதீங்க சார் எனக்கு உதவி செய்ய ஆசை இருந்தால் எப்பவும் என் கூடப் பேசிப் பழகிக்கிட்டு இருந்தால் போதும்; நீங்க போன்ல பேசினீங்களே வேற ஒரு பொன்னு உங்கள் உதவியால இப்ப படிக்குதுன்னு சொன்னீங்களே; அந்தப் பொன்னு மாதிரி என்னையும் ஞாபகம் வெச்சிகிட்டு இருந்தால் அதுவே போதும் சார்; நான் உங்கள அடிக்கடி பாக்கனும் சார்." விசும்பினாள்.

நான் நடிப்புக்காக உருவாக்கிப் பேசிய கதாபாத்திரத்தை உண்மையென நம்பி பேசியதை நினைத்து நான் மிகவும் வருந்தி, "ஸ்ரீஷா ஓஹ் இல்ல கமலா; நாம இனி நல்ல நண்பர்களா இருப்போம் அதுல எந்தவித சந்தேகமும் வேண்டாம்; நீ மிக அவசியமா கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு முக்கியமா நேற்று நான் உங்களை ரொம்பச் சுலபமாக ஏமாற்ற முடிந்தது எனக்கு ரொம்ப ஆச்சரியம்; நான் நேற்று பேசினது நிறைய நடிப்பு; இப்போ சொன்ன அந்த கதா பாத்திரமும் கற்பனை அப்படி யாரும் இல்லை... (சற்றே யோசித்து) ஆனால் நீ விரும்பினால் அதை உண்மையாக்கலாம். ஆமாம் இந்த நிகழ்வுகளை ஒரு நல்ல பாடமாக எடுத்துக்கிட்டு இனி கவனமாக இருக்கப் பழகிக்கனும். அடுத்து உன் முக்கியமான வேலை மேல் படிப்பைத் தொடர்வது. அதனால இந்தப் பணத்தை எடுத்துக்கிட்டு; நான் சொல்லும் படி நடந்து கிட்டா நீ நிச்சயம் படித்து நல்ல நிலைக்கு வருவது உறுதி." சொல்லி அவள் மனதைத் தேற்ற,

அவளோ மீண்டும், "எனக்கு இந்தப்பணம் வேண்டாம் சார்; அதுக்குப் பதிலா எனக்கு உங்க வீட்டில் வேலை செய்ய அனுமதி கொடுக்க முடியுமா சார் அது போதும் சார் உங்களுக்கு வேலை செய்து உங்களைப் பார்த்துகிட்டே இருக்க முடிந்தால் போதும் சார்."

"சரி நீ சொல்றது நல்ல யோசனையா இருக்கு; நான் கூடிய சீக்கிரம் உனக்கு அப்படி ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யுறேன்; ஆனால் அது தற்காலிகம் தான். உன் முக்கிய இலக்கு படித்து முன்னேறுவது தான் அந்த வாக்குறுதி நீ எனக்கு கொடுத்தால் நீ சொல்ற படி நான் உன்னுடன் தொடர்பில் இருப்பேன்; நாம அடிக்கடி சந்திக்கலாம்."

நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவளுக்குப் புரியவைத்து; அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்து, அவளுடன் நட்புடன் இருக்க உறுதியளித்து விடை பெற்றேன். அடுத்து ஜமீன் மாமாவைச் சந்திக்க அலுவலகம் சென்றேன்.

சற்று தொலைவிலேயே அங்கு ஒரு வாகனம் (கார்) நிற்க யாரோ ஒரு விருந்தினர் விஜயம் எனப் புரிந்தது; என்னைக் கண்ட குமார் எனக்குக் கையசைத்து விட்டு அலுவலகத்தினுள் சென்றான் என் வருகையை மாமாவுக்குத் தெரிவிக்க; நான் நெருங்கவும் அவன் வெளிவந்து, "வாங்க சார் ரொம்ப நேரமா ஐயா உங்களை எதிர்பார்த்துகிட்டு இருக்காரு."

நான், "அட என்ன விஷயம் இன்னும் ஏதாவது பிரச்... (சினையா? -- பாதியில் நிறுத்தி உடனடியாக வெளியேறியபடி); நான் அப்புறம் வந்து,"...

மாமா, "அட வாங்க மாப்ள; உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு,"

அந்த அறையிலிருந்த வேறொரு பெரிய மனிதர் புறப்பட ஆயத்தமாகி, "சரி தனு (மாமாவின் பெயர் தனஞ்செயன், சுருக்கமாகத் தனு என அழைக்க) நான் சொல்றது ஞாபகம் வெச்சிக்கோ; நீதான் இந்த வட்டார கிராம அதிகாரி; பொறுப்பா ஜனங்களுக்குச் சேவை செய்."

தனு குறுக்கிட்டு, "ஐயா நீங்கச் சொன்ன பிறகு என்னால மறுக்க முடியாது; ஒரு நிமிஷம் உக்காருங்க; இது (என்னைச் சுட்ட -- நான் கை கூப்ப அவரும் ஏற்றுத் தலையசைக்க) தாமுவோட அண்ணன் பையன் பேரு ரகு."

பெரியவர், "அப்படியா நீ ஏதோ மாப்பிள்ளைன்னு சொல்லவே உன் மருமகன்னு நினைத்தேன்; சரி இருக்கட்டும் நான் புறப்படுறேன்; திரும்பவும் உனக்கு நன்றி."

தனு, "அந்த நன்றிய இந்தத் தம்பிக்குத்தான் நீங்க சொல்லனும்."

சட்டென அதிர்ந்த பெரியவர், "என்னப்பா சொல்ற? நான் ஏன்."

தனு, "கொஞ்சம் உக்காருங்க ஒரு அஞ்சி நிமிஷம் நான் முழு விவரத்தை சொல்லிடறேன்; உங்க மருமகன் (பூவனூர் கிராம அதிகாரி) செய்த வேலையால பாதிக்கப்பட்டதும் நான் ரொம்பக் கோபப்பட்டு."

நான் குறுக்கிட்டு மீண்டும் அந்தப் பெரியவரை வணங்கி, "ஏன்? மாமா அதையெல்லாம் சொல்லி அவர் நேரத்தை வீணடிக்குறீங்க; சரிசரி நான் உங்களைப் பொறுமையா சிந்திக்க வைத்ததுக்கு எனக்கு விருது வழங்கலாம். ஆனால் அதுக்காக மதிப்புக்குரிய பெரிய ஐயா கிட்ட இந்தச் சின்னப் பையன் செய்த சின்ன வேலையப் போயி பெரிசு படுத்தாதீங்க."

அதற்குள் மாமா என்னைச் செல்லமாக அடிக்கக் கை ஓங்கி, "நீ செய்தது அவ்ளோ சின்ன விஷயமா இருந்தால்; இவ்ளோ பெரிய மனுஷன் இங்க வருவாரா? (அந்தப் பெரியவரை நோக்கி) உண்மையச் சொல்லனும்னா எனக்கு இந்த அளவுக்குப் பொறுமையுமில்லை; அதை விட அவ்ளோ புத்தியெல்லாம் இல்லை; ஆனால் என் அதிர்ஷ்டம் சரியான நேரத்தில் இந்தத் தம்பி வந்து இப்படி ஒரு யோசனை சொல்ல நான் அதைச் செய்தேன்; அதனால இந்த யோசனையின் முழுப் பாராட்டும்/வாழ்த்தும் தம்பிக்குத்தான் போகனும்."

பெரியவர், "அட அப்படியா உங்களைப் பார்த்தால் நல்ல படித்த புள்ள மாதிரி தெரியறீங்க; இந்தச் சின்ன வயசில் உங்கள் யோசிக்கும் திறன் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. இந்த மனப்பாங்கான அணுகுமுறை உங்களுக்கு மிகத்தெளிவான எதிர்காலம் உண்டாக்கும். நீங்கச் செய்தது சாதாரணக் காரியமா இருந்தாலும் அதில பாதிக்கப்படவிருந்தது மிகப் பெரிய விஷயம். என் வாழ்நாள் கௌரவம் எல்லாம் பாழாய்ப் போயிருக்கும் அதைக் காப்பாற்றினதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி. (என் தோளைத் தட்டிக் கொடுத்து) RI சாரு கொடுத்து வெச்சவருதான்."

நான், "உங்களைப் போல நல்லவங்க அன்பும் ஆசீர்வாதமும் கிடைத்தால் அது என் பாக்கியம்." சொல்லி அவரை குனிந்து வணங்க அவர் தடுத்து, "இந்த நல்ல உள்ளமும் பண்பும் இருக்கும் வரை எல்லா நன்மைகளும் தானாக உன்னை வந்தடையும் (மீண்டும் மாமாவை நோக்கி) சரி என்ன இருந்தாலும் இந்தக் காரியத்துக்கே உங்களைப் பாராட்டனும்; இப்படி பெரிய புகழும் ஆதரவும் உங்களுக்குக் கிடைத்த பிறகும் இதற்கு மூல காரணம் இந்தத் தம்பிதான்னு உண்மைய ஒத்துக்கறதுக்கு மிகப் பெரிய திறந்த மனம் வேனும். அதுக்கே உங்கள எவ்ளோவோ பாராட்டலாம்." சொல்லி அவர் புறப்பட்டார்.

அவரைப் பின் தொடர்ந்த ஒரு 28~30 வயது பெண்மணி மாமாவுக்கும் எனக்கும் நன்றி தெரிவித்துச் சற்றே துரிதமாக அந்தப் பெரியவரிடம் ஏதோ மிகுந்த மரியாதையுடன் ரகசியமாகக் காதை கடிக்க அவரும் சரியெனத் தலையசைக்க மீண்டும் துரிதமாக எங்களை நோக்கி வந்தவர் மாமாவிடம், "அண்ணா நீங்க இந்த (என்னை சுட்டி) தம்பிய கூட்டிக்கிட்டு குடும்பத்தோட ஒரு நாள் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்தால் எங்க மனசு ரொம்பத் திருப்தியா இருக்கும்." மிகவும் மனம் உருக அழைத்தார்.

மாமா, "அட என்னம்மா நீ இன்னமும் சின்னப் பொன்னு மாதிரி; ஐயா வந்து உடனடியா வட்டார பொறுப்பை ஏத்துக்கச் சொல்லிட்டாரு. அது என்ன அவ்ளோ சுலபமான காரியமா? இன்னும் மூனு நாலு வாரத்துக்குத் தலைக்கு மேல வேலை. எல்லாம் அவன் செய்த... சரிசரி நாம எங்க போய்விட போறோம்; அதெல்லாம் சாவகாசமா பின்னாடி ஒரு மாசம் கழிச்சி வெச்சிக்கலாம், நீ போம்மா அப்பாவைக் காத்திருக்க வைக்காத."

அந்தப் பெண், "சரிண்ணா (என்னை நோக்கி) தம்பி நீங்க எந்த ஊர் இங்க எவ்ளோ நாள் இருப்பீங்க?"

நான், "நான் சென்னைல படிக்கிறேன்; இப்போது கல்லூரி ஒரு மாதம் விடுமுறை; நீங்க புறப்படுங்கள் ஐயா காத்திருக்கிறார்."

அவர்கள் புறப்பட்டதும் என்னை அழைத்துக் கொண்டு அலுவலகத்தினுள் சென்ற மாமா என்னைத் தன் வலது கரத்தால் இறுக்கி நசுக்கிய வண்ணம், "மாப்ள நீ செய்த காரியத்தில் எனக்குப் பெரிய பதவியும் அந்தஸ்தும் வரப் போவுது; இல்லை வந்துடிச்சி."

"இப்ப அந்தப் பெரியவர் சொன்ன வட்டார தலைமையா மாமா (ஆமெனத் தலையசைக்க); ஆனால் நீங்க அதுல அவ்ளோ விருப்பம் இல்லாதவர் போலத் தெரிந்தது."

"அதெல்லாம் அப்படித்தான் மாப்ள; வெளிய காட்டிக்கக் கூடாது; அந்தப் பதவிக்கு எத்தனையோ பேரு போட்டி போட்டுக்கிட்டிருக்காங்க, என் அதிர்ஷ்டம் நீ செய்த வேலைல இப்படி தடக்குன்னு எனக்குக் கிடைச்சிருக்கு. இன்னும் என்னால நம்பவே முடியல. அதுக்கு இன்னும் மூனு பெரிய ஆளுங்க வரிசைல இருக்காங்க அவுங்களை விட்டுட்டு எனக்குக் கொடுக்கிறார். அவங்க எல்லார் வாயையும் எப்படி மூடப்போறானு தெரியல. ஹும் அதெல்லாம் அவர் செல்வாக்கு; அவர் சொல்லுக்கு மறு பேச்சு பேச யாரும் இந்த வட்டாரத்தில் இல்லை. உன் யோசனையைக் கேட்டதுமே நிச்சயம் இந்த ஆளுகிட்ட நல்ல அபிப்பிராயம் கிடைக்கும்னு தெரியும் ஆனால் இந்த அளவுக்குப் போகும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. நீ சாதாரணமான ஆளில்லை மாப்ள."

"ரொம்பச் சந்தோஷம் மாமா; நான் பழகின மூனு நாளில் அத்தை, பானு, சியாமளா மூனு பேரும் எவ்ளோ கல்லங்கபடமில்லாம... கவலையே இல்லாம... எல்லாம் நீங்க இருக்குற தைரியத்தில் இருக்காங்க ஆனால் நீங்க இப்படி ஒரு காரியத்தைச் செய்து மாட்டியிருந்தா!... அவுங்க எப்படி இதையெல்லாம் தாங்குவாங்க!! நினைக்கும் போதே மனம் கலங்குகிறது; சரி விடுங்க; நான் புறப்படனும் அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்."

"அட என்ன அவசரம் இருப்பா நாம இந்த சந்தோஷத்தை கொண்டாடிட்டு அப்புறம் மெல்லப் பொறுமையா போகலாமே."

"அட நான் வரலைன்னு அத்தையும் எங்க சித்தியும் ரொம்பக் கவலை பட்டுக்கிட்டிருப்பாங்க முதல்ல அவுங்களைப் போய்ச் சமாதானப்படுத்தனும்."

"அட அதுக்கெல்லாம் அவ்ளோ யோசிக்காதீங்க; ஆம்பளைங்களுக்கு வெளிய ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் அதெல்லாம் பொட்டச்சிங்களுக்குப் புரியாது மாப்ள. ஒரு போன் பண்ணி சொன்னால் வாய மூடிக்கிட்டு இருக்கப் போறங்க நீ ஒண்ணும் கவலைப் படாத."

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous