Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
பாகம் 09: வெற்றி வாகை சூடி திரும்பு
நான், "அது சின்ன விஷயம் அதப் போய் என்ன கேட்க போறார் கலக்டர்; அந்தப் பொன்னுக்கு ஏதாவது உதவி செய்யனும்னு சொன்னார் அது நான் உதவி செய்துட்டேன் ஆனால் அந்தப் பொன்னு சட்டுன்னு மனந்திருந்தி இனி அந்தத் தொழிலை விட்டுவிட்டு உருப்படியா ஒழுக்கமான வாழ்க்கைக்கு மாறிட்டா நான் செய்த உதவியையே வேண்டாம்னு சொல்லிட்டான்னு சொன்னேன்; அவரும் அதையே விரும்புறதாவும்; இனி யாராவது அந்தப் பொன்னுக்குத் தொந்தரவு கொடுத்தா அவருக்குத் தகவல் சொல்லச் சொன்னார். நானும் நான் இருக்குற வரைக்கும் அந்தப் பொன்னுக்கு ஒண்ணும் ஆகாது; எந்தத் தொந்தரவையும் அணுக விடமாட்டேன்னு உறுதி கொடுத்துட்டேன்." இதைக்கேட்டதும் அந்தத் தாஸில்தார் சற்று புரிந்தவராய் விடை பெற்றுச் சென்றார்.
என் சித்தப்பா, "டேய் நம்ப வீட்டுக்கு இந்த வாரம் போக முடியாது; அது வீடு கொஞ்சம் சரி செய்யனும்."
மாமா, "அட விடுப்பா தம்பிக்கு எல்லாம் தெரியும்; என்ன செய்யனும்; எப்படிச் சொல்லி சமாளிக்கனும்னு நல்லா தெரியும் அதெல்லாம் மாப்ள பார்த்துக்குவார் விடுப்பா."
நான் குறுக்கிட்டு, "இல்ல மாமா எல்லாரும் ஒரே விதமா சொல்லனும்னு சொல்ல வரார்; அதாவது நாம் மாமா வீட்லயே இன்னும் ஒரு மாதத்துக்குத் தங்க வேண்டி இருக்கும்னு சொல்லத் தயங்குறார். அதை நான் பக்குவமா சொல்லனும்னு சொல்றார். நான் இப்படிச் சொன்னால் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். அதாவது அந்த வீட்டுச் சொந்தக்காரர் ஏதோ கூறைய மாத்துற வேலையை ஆரம்பித்து அந்தச் சமயம் பார்த்து அவருக்குப் பண நெருக்கடி வந்து கொஞ்சம் இழுபறியா. ஒரு மூனு நாலு வாரம் ஆகலாம்னு சொல்லிடறேன்." அவர்கள் இருவரும் ஒத்துக்கொள்ள நிம்மதிப்பெரு மூச்சு விட்டேன். அத்தை/மாமா வீட்டில் இன்னும் சில நாட்கள் தங்குவதை நீட்டித்தலே முக்கிய நோக்கமாக அத்தையிடம் சொல்லிவிட்டு வந்ததேன். அது நான் நினைத்தைவிட மிக நல்லபடியாக முடிந்தது.
ஒரு வழியாக அவர்களிடமிருந்து விடைபெற்று ஜெயா அத்தை மற்றும் அனிதாவுடன் ஊர் திரும்பினோம். பிரயாணத்தின் இடையே அவர்கள் இருவருக்கும் முழு விவரத்தயும் விளக்கினேன்.
நான், "அத்தை உங்களுக்கு வீட்டு வேலை செய்ய ஆள் தேவைன்னு நினைக்கிறேன்!"
சற்றே சிரித்த ஜெயா அத்தை, "அந்தக் கமலாவைத்தானே வேலைக்கு வெச்சிக்கனும்; நீ சொன்னால் நான் மறுக்க முடியுமா? தாராளமா வேலைக்கு வரச் சொல்லுப்பா; இதைக்கேட்க ஏன் இவ்ளோ தயக்கம்?"
நான், "நான் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தது; முக்கியமா அந்தப் பொன்னு இந்த ஊரிலேயே இருந்தால் மாமா/என் சித்தப்பா மூலமா அவளுக்குத் தொந்தரவு வர வாய்ப்பு இருக்கும். அடுத்து அவள் அம்மா இந்த ஊருக்கு வரச் சம்மதிப்பாளா எனச் சந்தேகம். ஆனால் அதையெல்லாம் சமாளிக்க வேண்டியது கமலாவின் பொறுப்பு அதை அவள் நல்லா செய்வாள்னு நம்பிக்கை இருக்கு."
ஜெயா, "நாம உதவி செய்தா நிச்சயம் சமாளிச்சிடுவா."
நான், "சரியா சொன்னீங்க, நாம உதவி செய்தால் அவளால் நிச்சயம் சமாளிக்க முடியும் அத்தை. அதனால உங்களுக்கும் உதவிக்கு ஒரு நல்ல வேலை ஆள் கிடைக்கும். அதே சமயம் அவளும் மாற நல்ல வாய்ப்பு."
ஜெயா, "நல்லா புரியுது ரகு; நாம அவளுக்கும் உதவி செய்து அவளும் நமக்கு உதவியாக வேலை செய்து வாழ முடியும்."
நான், "ஆமாம் அத்தை அவள் மேல் படிப்பை தொடர அவளுக்கு ஒரு நல்ல சுற்றுச் சூழலை உருவாக்கிக் கொடுத்தாள் அவள் நிச்சயம் அதை சரியாக பயன்படுத்தி முன்னுக்கு வருவாள்; யாருக்கு தெரியும் ஒரு நாள் அவள் பெரிய நிலைக்கு போகலாம்."
மூவரும் ஊர் திரும்பினோம் சரியாக மாலை ஐந்து மணி அளவில் மாமா/அத்தை வீட்டை அடைய; என்னைக் கண்டதும் அத்தை, சியாமளா, பானு, என் சித்தி என அனைவரின் முகத்திலும் அப்படி ஒரு புத்துணர்ச்சி ஏற்பட ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய விதம் வேவ்வேறு;
முதலில் பார்த்தவர் ஷீலா அத்தையே, "வாங்க வாங்க ரெண்டு டாக்டரும்; வாப்பா தம்பு வா, இப்பவாச்சும் எங்க நினைப்பு வந்ததே (சொல்லி என்னை அனைத்து தன் மார்பில் தாலாட்டி) அட ஏன் கழுத ஒரு போன் கூடச் செய்யல; சரிசரி இப்படி உக்காரு." சொல்லி என்னை விடும் முன்னரே ஓடி வந்த பானு என்னை வேகமாக அத்தையிடமிருந்து பிடுங்கிக் கொள்ள அதிர்ந்தார் அத்தை அவரைத் தொடர்ந்து மற்றவர்களும், "ஏய் பாத்து." என அனைவரும் அதிர என்னை இறுக்கி அணைத்து ஓவென மிகச் சத்தமாக அழுதாள், சில வினாடிகள்.
நான், "அட இதென்ன என்ன ஆச்சி ரெண்டு நாள் நான் (அதற்குள் பொறுக்காத சியாமளாவும் என்னைப் பானுவோடு கட்டிக்கொண்டு சிறிதே விசும்பினாள்) மாமாவுக்கு உதவி செய்யப்போனேன் அதுக்கு ஏம்பா இவ்ளோ கஷ்டப்படனும்."
ஷீலா, "போனதை யாரும் குத்தம் சொல்லலை ஆனால் ஒரு போன் கூடச் செய்யலை."
அதைக்கேட்டதும் வெடுக்கென மிக அழுந்த என் கையில் கிள்ளிவிட்ட பானு அழுது கொண்டே, "நாங்க இருக்குறதே மறந்து போச்சாடா?" நானோ வலியில் ஆவென அலற
உடனே என் கையைத் தொட்டு ஆராய்ந்த சியாமளா, "அச்சச்சோ ஏண்டி உனக்கு இவ்ளோ கோவம்; அப்பா எப்படிச் செவந்து போச்சி பாரு." சொல்லி மெல்ல வாயால் ஊதி மென்மையாக முத்தம் கொடுத்தாள்.
ஷீலா, "அட கழுதைங்களா வீட்டுக்கு வந்தவங்கள ஒரு மரியாதைக்கு வாங்க உக்காருங்கன்னு சொல்லலை; தண்ணீர் காப்பித் தரனும்னு தோனலை; இப்படித்தான் அந்தப்புள்ளைய கட்டிக்கினு அழுதுகிட்டே இருக்குறதா?"
லஷ்மி, "சரி விடு சின்னப்பசங்களை எதிர் பார்த்து நாம சும்மா இருக்க முடியுமா; இந்தாங்க காப்பி எடுத்துக்கோங்க." என இரு மருத்துவருக்கும் கொடுத்து பின்னர் எனக்குத் தர வந்தவர் சற்றே புன்னகைத்த படி ஷீலாவை நோக்க,
ஷீலா, "அட இப்பவாச்சும் விடுங்க அந்தப் புள்ள காப்பிய கூடக் குடிக்க விடாம." சற்றே கடுகடுத்தவாறு சொல்ல பின் சியாமளா விட்டு விலக; பானுவோ முழுவதும் விடாமல் என்னை இழுத்த வண்ணம் அந்த உணவு மேஜையில் அமர்த்தினாள்.
பின்னர் என் சித்தியிடமிருந்து காப்பியை வாங்கி எனக்குக் கொடுத்து இடது பக்கத்தில் அமர்ந்து என் இடது கையை எடுத்து தன் மடியில் கிடத்தி அதன் விரல்களைத் தன் விரல்களுடன் பின்னியபடி; என் இடது தோளில் தன் தலையை ஆதரவாய் சாய்த்து யாரையும் கவனிக்காமல் தன் கண்களைத் துடைக்க ஆரம்பித்தாள். அதே சமயம் சியாமளாவும் வந்து என் வலது பக்கம் ஒட்டியபடி அமர்ந்து நான் காப்பிக் குடிப்பதை நோட்டமிட்டபடி தொடர
இவற்றை கவனித்த அனிதா, "See Amma how sweet." என என்னை விட்டு விலகாமல் பானுவும் சியாமளாவும் ஒட்டிக் கொண்டிருப்பதைச் சுட்ட
லஷ்மி சற்றே குழம்பி, "என்னமா சர்க்கரை அதிகமா போட்டுட்டேனா; கொடு நான் வேற."
ஜெயா, "இல்லை லஷ்மி அது இல்லை; அவள் அவுங்க ரெண்டு பேரும் ரகுமேல இவ்ளோ அன்பா இருக்குறதப் பாக்க இனிமையா இருக்குன்னு சொல்லுறா."
அதைக் கேட்டதும் சற்று விலகிய சியாமளா மற்றவர்களைக் கண்டு சிறிது வெட்கப்பட்டுப் புன்னகைத்து, "இவர் இல்லாம ஒரு வேலையும் ஓடல; என்ன ஆச்சின்னு ஒரே குழப்பம்." அசடு வழிய சொன்னாள்.
ஆனால் பானுவிடம் எந்தத் தாக்கமுமின்றி அவள் அப்படியே தொடர்ந்தாள்.
காப்பியைக் குடித்து முடித்த நான் என் சித்தியை நோக்கி, "சித்தி உங்களுக்கு ஒரு நல்ல செய்தி... ஒரு கெட்ட செய்தி. சித்தப்பா இப்போது 'நிர்வாக உதவி தாஸில்தார்' ஆகப் பதவி உயர்வு (அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்க) அடுத்தது கெட்ட செய்தி... இல்லை ஒருவிதத்துல அதுவும் நல்ல செய்திதான். நாம இன்னும் ஒரு மாதத்துக்கு வீட்டுக்குப் போக முடியாது; இங்கேயே தான் டேரா போடனும்."
பானு, அத்தை, சியாமளா உன்மையாவா என உற்சாகத்துடன் கூவச்
சற்றே சந்தேகப்பட்ட என் சித்தி, "ஏண்டா வீடு என்ன ஆச்சி?"
நான், "அது வந்து,... வீடு புதுப்பித்தல் வேலை."
லஷ்மி, "அதெப்டிடா ஒரு வாரம்னு வந்துட்டு ஒரு மாசம் தங்கறது?"
நான், "அம்மா இது எதிர் பராம நடந்தது; அநேகமா சித்தப்பா போன் பண்ணி உங்களுக்கு விவரமா சொல்லுவார்."
அதைக் கேட்டதும் ஷீலா, "ஹே." என ஆசையாய் என்னைக் கட்டி அணைக்க வரச் சட்டெனத் துள்ளி எழுந்த பானு என் முன் நின்றபடி (ஷீலா அத்தையின் அணைப்பதை தடுத்து மறைத்தவிதமாக) என் முகத்தைப் பிடித்து என் கண்களை உற்று நோக்கியவள், "உண்மையாவா சொல்ற." ஆமென உறுதியளிக்க
அடுத்தக் கணம் பானு என் கன்னத்தில் முத்தமிட்டுச் சிறு பிள்ளையாய் துள்ளிக் குதித்து, "இந்தச் சந்தோஷத்தைக் கொண்டாட எல்லாருக்கும் பாயசம் செய்யப்போகிறேன்." சொல்லித் துள்ளிக் கொண்டு சமையலறை நோக்கி ஓட; பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறு குழந்தைகளை அன்புடன் செல்லமாக முத்தமிட்டுக் கொஞ்சி விட்டுத் தொடர்ந்தாள்.
அனிதா, "Poison? For happy?"
நான், "Not Poison 'Paayasam' it's a milky sweet; kind of pudding; என்ன அத்தை அனிதாவுக்கு."
ஜெயா, "சாப்பிட்டிருக்கா; அவளுக்கு ஞாபமில்லை (அனிதாவை நோக்கி) Don't you remember the milky vermicelli."
நான், "சரி விடுங்க பானு செய்து சாப்பிட்டதும் புரிந்திடும்."
அனிதா, "Let me help her and learn ஹேய் பானு நானூம் வறான்."
அடுத்து ஷீலா அத்தையை நோக்கி, "அத்தை உங்களுக்கும் ஒரு நல்ல செய்தி."
ஷீலா, "அட ஆளுக்கொரு செய்தி வெச்சிருக்கியா; சொல்லு எனக்கு என்ன செய்தி."
அதற்குள் தொலைப்பேசி அலற அதைப் பதிலளித்த சியாமளா, "ஹாம் அப்பா (... ) ம்ம்ம் வந்துட்டாங்க (... ) ஹாம் இதோ குடுக்குறேன் (சொல்லி என்னை அழைத்து) எங்க அப்பா."
நான், "சொல்லுங்க மாமா இப்பத்தான் வந்து சேர்ந்தோம் (... ) அதெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?"
அவர் என்னைப் பானுவை அவர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள ஒரு கிராமத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா எனக் கேட்டார். நான் சந்தோஷத்துடன் சம்மதிக்கப் உடனே பானுவிடம் பேச விரும்பினார். நான் முதல்ல அத்தையிடம் அவர் பதவி உயர்வின் இன்பச் செய்தியைச் சொல்லி சந்தோஷப்படுத்திட்டு பிறகு பானுவிடம் பேசச் சொல்ல அவரும் அப்படியே செய்தார் இருவரிடமும் சற்றே நீண்ட நேரம் பேசினார்; அவருடன் பேசும் போது இருவரிடமும் மிகுந்த புத்துணர்ச்சி வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது; முக்கியமாகப் பானு மிக மிகச் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.
தொடரும்