Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
பாகம் 13: அத்தையுடன் அந்தரங்க ஆலோசனை தொடந்தது
நான் அதிரடியாக அத்தையை அள்ளி முத்தமிட்டு, "ஐய்யோ அத்தை; முதல்ல இப்படி கூச்சப்படாம உங்க கருத்தை சொன்னதுக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் உங்களைச் செய்யச் சொல்லலை; அப்படி எதிர் பார்க்கவுமில்லை.
உங்களைக் கற்பனை செய்து பார்க்கத்தான் சொன்னேன். ஏன்னா நீங்க அதைப் பற்றி என்ன நினைக்குறீங்க, அது உங்க மனசில் எந்தவிதத் தாக்கம் ஏற்படுத்தும்னு தெரிஞ்சிக்கத்தான் ஆசைப்பட்டேன்; அவ்ளோதான்."
"ச்சீப் போக்கழுதை; நான் தான் உனக்கு நன்றி சொல்லனும்; எனக்கு இப்படிப் பேச யார் இருக்கா உன்னை விட்டால்; அது சரி ஏன் உனக்குத் திடீர்னு இப்படி ஒரு எண்ணம்; நாம் பேசிக்கிட்டிருந்தது வேற விஷயம் அதுக்கு நடுவுல இப்படி ஒரு எண்ணம்."
"சரி நான் உண்மைய சொல்லிடுறேன்; அதுக்கு முன் ஒரு வேண்டுகோள் இந்த விஷயத்தை நீங்க வேற யாருகிட்டேயும் சொல்லக்கூடாது. சொல்ல மாட்டீங்கன்னு தெரியும்; இருந்தாலும் நான் கேட்டுக்குறது நல்லது; சொல்லுங்க எனக்காக இந்த ரகசியத்தை உங்களோட பூட்டி வெச்சிப்பீங்களா? முடியுமா?"
"இதென்னடா கேள்வி! நிச்சயமா செய்வேன்; நீ தைரியமா சொல்லு."
"ரொம்ப நன்றி அத்தை (சொல்லி நீண்ட இடைவெளிக்குப் பின்) சரி முதல்ல உங்ககிட்ட ஒரு கேள்வி; அதாவது போன ஞாயிற்றுக்கிழமை நானும் அனிதாவும் நீந்தி விளையாடிகிட்டே பேசி அரட்டை அடிச்சிக்கிட்டிருந்தோம்; ஆனால் நீங்க மூனு பேரும் அப்படி என்னதான் பேசினீங்களோ அவ்ளோ மும்முரமா; சரி இருக்கட்டும்; நாங்க ரெண்டு பேரும் தனியா பேசி அரட்டை அடிச்சிகிட்டிருந்தோம்; அது உங்களுக்குத் தெரியும் ஏன்னா அது தண்ணிக்கு வெளிய/மேல; ஆனால் தண்ணிக்குள்ள என்ன செய்துகிட்டிருந்தோம்னு தெரியுமா?"
"என்னா நீச்(சல்).... (சட்டென அவர் முகம் புத்துணர்ச்சி பெற்றுப் பிரகாசித்துச் சட்டென மீண்டும் அதிரடியாக எழுந்து அமர்ந்து; சற்றே என் கண்களை உற்று நோக்கி) அடப்பாவி! என்னடா செய்தீங்க ரெண்டு பேரும்."
"உங்களையெல்லாம் சாட்சியாக்கி எங்க சாந்திமுகூர்த்தத்தை முடிச்சிக்கிட்டோம்." என் வார்த்தையைக் கேட்டதும் தன்னையும் மீறி அனிச்சையாய் அதிர்ந்து தன் கையால் தன் வாயை அடைத்துக்கொண்டாள்.
நீண்ட இடைவெளிக்குப் பின், "எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல; ஒரு பக்கம் எப்படிடா கூச்சமே இல்லாம; ஐய்யோ கேக்கவே உடம்பு சிலிர்க்குது; ஆம்பள பையன் உனக்கு வேணும்னா அது சரின்னு தோனலாம் ஆனால் ஒரு பொன்னு அவ எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டா?"
நான் மெல்ல முழு விவரத்தையும் விவரிக்க, "அப்பா ரொம்பச் சுவாரசியமா இருக்குடா; ம்ம்ம் மேல சொல்லு."
"அப்புறம் என்ன ரொம்ப நேரம் கிட்டத்தட்ட ஒரு அரை மணிநேரம் விடாம கட்டிக்கிட்டு படுத்து அமைதியா இருந்தா; அப்புறம் நாங்க ரெண்டு பேரும் டேட்டிங் (Dating) செய்யலாமான்னு கேட்டா."
"அப்படீன்னா?"
"தமிழ்ல அதுக்குச் சரியான வார்த்தை எனக்குத் தெரியலை; அது என்னன்னா ஒரு ஆணும் பெண்ணும் அவுங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் பத்தி உரையாடி எண்ணங்களைப் பரிமாறிக்குறது. அதாவது நம்ம கலாச்சாரத்தில் பெத்தவங்க இல்ல பெரியவங்க பார்த்து முடிவு செய்து கல்யாணம் செய்து வைக்குறத மேற்கத்தியர்கள் செய்வதில்லை. அந்த ஜோடிகளே பேசி முடிவு செய்யவிடுவது தான் மேற்கத்தியக் கலாச்சாரம். ஆக அனிதா என்னை முதல் கேள்வியா நான் அந்தக் கலந்துரையாடலுக்குத் தயாரான்னு கேட்டாள்.
அதன் அர்த்தம் என்னன்னா நான் கல்யாணம் ஆகாத அல்லது யாருகிட்டேயும் மனதை பறிகொடுக்காத தனி ஆளாக இருக்கேனான்னு கேக்குறது. நான் சொன்னேன் எனக்குக் கல்யாணம் ஆகளை நான் தனி ஆள்தான் ஆனால் என் மனதை ஒரு தேவதையிடம் பரி கொடுத்துட்டேன்.
ஆனால் அந்தத் தேவதை இன்னொருத்தரோட மனைவி ஒரு குழந்தைக்குத் தாய் அதனால நான் அவங்களைத் திருமணம் செய்ய முடியாதுன்னு சொன்னதும் அவ சொன்னாள் இது நிறையப் பேருக்கு நடக்கிற குழப்பம் சகஜம் தான். அதையே நினைச்சிக்கிட்டு மனதை குழப்பிக்கிட்டு இருக்கிறது சரி இல்லை.
அதுக்காக அவங்களை மறக்க வேண்டியதில்லை; அவுங்க கிட்ட ஏற்பட்ட உறவை மத்தவங்க யாரையும் பாதிக்காத வகையில் தொடர்வது உங்க ரெண்டு பேரோட திறமை/சாமர்த்தியம். அப்படி முடியாத நிலையில் மறந்து அந்தப் பிரிவை ஏத்துக்கனும்னு விளக்கமா சொல்லிப் புரிய வெச்சா."
அடப்பாவி நீ சொன்னது என்னைப் பத்திதானே; அதாவது நீ சொன்ன அந்தக் கல்யாணமான தேவதை நான் தானே (ஆமெனத் தலையசைக்க); அப்பாடி ஒரு வழியா உனக்குப் புரியவெச்சி உன்னைச் சம்மதிக்க வெச்சிட்டாளா?"
இல்லை அத்தை அது அவ்வளவு சுலபமான காரியமில்லைன்னு அவளுக்குச் சொன்னேன்; அதாவது என் மனசுல உங்களுக்குத் தான் முதலிடம் ஆனால் அதுக்கு அடுத்து அனிதாவைப் போலவே என் மனதைக் கவர்ந்த இன்னொரு பெண் என்னை விரும்பி அவளைப் போலவே அவள் ஆசையைச் சொன்னா நான் அவளுக்கும் இதே பதிலைத்தான் சொன்னேன்."
அத்தை குறுக்கிட்டு, "அது யாருடா இன்னொரு பொன்னு."
அது வந்து.... சியாமளா தான்."
மீண்டும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து ஆச்சரியத்தின் உச்சத்தில், "நிஜமாவாடா சொல்ற; சியாமளாவா." கேட்டு ஒரு கணம் திகைத்து பிறகு என்னை இறுக்கி அணைத்து மெல்ல விசும்ப ஆரம்பித்துப் பின் மெல்ல விலக்கி, "சியாமளா ஒரு அசட்டு அப்பாவி பொன்னுடா (அந்த 'டா' சற்று குழற; மாற்றிப் பொன்னுப்பா என முடித்தாள்.
பின் என் கைகளைப் பற்றிச் சற்றே தயங்கி) என்னை நினைச்சிகிட்டா என் சியாமளாவை வேண்டாம்னு சொல்லிட்ட... ஐய்யோ தம்பு எனக்கு நீ."... அவள் நா தழுதழுக்க மீண்டும் என்னை அணைத்து விசும்ப ஆரம்பித்தாள்.
நான் அத்தையின் தலை முடியைக் கோதியவாறு, "அத்தை உங்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் நான் செய்யமாட்டேன். நீங்க எதுவாக இருந்தாலும்... கவலைப் படாமல் சொல்லுங்க. எப்பவும் நான் உங்களுக்குப் புடிச்ச தம்புவாவே இருப்பேன், மாற மாட்டேன்; ஆனால் உங்களை மறக்கனும்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்லீஸ்!"
"எனக்கு என்ன பேசுறதுன்னே புரியலை; என் சியாமளாவா இவ்ளோ அறிவாளியா தைரியசாலியா ஆயிட்டான்னு ஒரே ஆச்சரியம். எந்த ஆம்பளப் பசங்களையும் ஏரெடுத்துப் பார்க்காத சியாமளா உன் மேல ஆசைப்பட்டது எதிர் பாராத சந்தோஷம்.
ஆனால் அவள் என்னைப் போலவே படிக்காத மக்கு அதனால உனக்குப் புடிக்குமான்னு ஒரு சந்தேகம் ஆனால் அவ அவ்ளோ தைரியமா உன்னைக் கேட்டாளாங்குறது இன்னமும் நம்பமுடியாத சந்தோஷம்; ஆனால்... ஆனால், உனக்கு எல்லாவிதத்துலேயும் பொருத்தமானவ அனிதாதாம்ப்பா நீ... (நீண்ட இடைவெளிக்குப் பின்) என்ன முடிவு சொன்ன அனிதாவுக்கு."
அனிதாவுக்கு முதல்ல அந்தப் பொன்னு சியாமளான்னு சொல்லலை அதனால தெரியாது; நான் அனிதாவுக்குச் சொல்லும் போது அந்தப் பொன்னு (சியாமளா) என்னைத்தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்யமாட்டேன்னு எனக்காகக் காத்துக்கிட்டிருக்கா அதனால நான் யாரையும் கல்யாணம் செய்யாமல் நண்பர்களாகவே இருக்க முடிவு செய்துட்டேன்னு சொன்னேன்.
ஆனால் அனிதா அது சரியான முடிவில்லன்னு; அவளையும் (அனிதாவையும்) அந்தப் பொன்னையும் (சியாமளாவையும்) கல்யாணம் செய்துக்கோன்னு சொல்லிட்டா."
"என்ன! அந்தப் பொன்னு யாருன்னு தெரியாமலேயே சேர்ந்து வாழ ஒத்துக்கிட்டாளா? இதென்னடா கூத்து; காதல் பைத்தியம்னு கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இந்த அளவுக்கு இருக்கும்னு நினைத்துப் பார்க்கக்கூட முடியல; என்னப்பா உங்க கதை ரொம்பச் சுவாரசியமா போகுதே; சொல்லு சொல்லு மேல சொல்லு."
"ஆமாம் அவள் ரொம்பத் தீர்க்கமா இருக்கா; அதாவது என்னை அவளுக்குப் புடிச்சிருக்கு; அதைவிட அவளுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு அதாவது என் மனதுக்குப் பிடித்த பொன்னு நிச்சயமா அவளுக்கும் புடிக்கும்னு கண்மூடித்தனமான நம்பிக்கை."
சந்தேகமே இல்ல அவ உன்னை ரொம்ப ஆழமா காதிலிக்குறா."
"ஆமாம் அத்தை ஆனால் அவள் மட்டும் இல்லை சியாமளாவும் தான் அந்த அளவுக்கு; அதாவது நான் நீங்க என் மனசுல ரொம்ப ஆழமா இடம் புடிச்சிருக்கீங்கன்னு சொன்னதும் அவளுக்கு உங்க மேலச் ரொம்ப மதிப்பு. உங்களைப் பார்க்கனும்னு என்னை ரொம்பக் கெஞ்சிக் கேட்டாள்; நான் உங்களை அடையாளம் காட்ட முடியாதுன்னு ரொம்பச் சிரமப்பட்டுச் சமாளித்து மறைத்திருக்கிறேன்."
அனிதாவுக்கு அந்தப்பொன்னு சியாமளாதான்னு தெரியுமா தெரியாதா?"
இருங்க நான் முழு விவரத்தையும் சொல்லுறேன்; நான் சியாமளாகிட்ட சொன்னது வந்து என்னால உங்களை மறக்க முடியாது; மனதாலும் சரி உடலாலும்; அதாவது நான் உங்களுடன் உடலுறவைத் தொடர்வதை நிறுத்த முடியாது அதனால் நான் யாரையும் கல்யாணம் செய்ய முடியாதுன்னு சொல்ல அவளோ அது தப்பில்லைன்னு என்னை அனுமதிக்கச் சம்மதித்தது மட்டுமில்லாமல் என்னைத் தொடரும் படி ஊக்குவித்தாள்."
"ஹாம்!!"
ஆமாம் அதை நான் அனிதாவிடம் சொல்லுறப்போ அவளும் அதையேத்தான் சொல்லுறா; அதாவது என்னைப் போல நல்ல பையனை மத்த நல்லவர்களும் பரிமாறிக்குறதுல அவளுக்குச் சந்தோஷமாம்.
சியாமளா என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன்னு சொல்றது அவ என்னை ரொம்ப ஆழமா காதலிப்பதை வெளிப்படுத்தினாலும் அனிதாவுக்கு அப்படிச் செய்து என்னைக் கட்டாயப்படுத்த விருப்பம் இல்லைன்னு சொன்னாள்.
ஆனால் நான் என் மன நிலையை ரொம்பத் தெளிவாக எடுத்துச் சொல்லிட்டேன்; அதாவது முதல்ல என் மனம் என் ஆசை அத்தையைக் கல்யாணம் செய்யவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் தவிப்பதைப் போலவே அடுத்து சியாமளா அடுத்தது அனிதான்னு இந்த ஆசை கட்டுப்படுத்த முடியாமல் போகுது அதனால நான் இப்படியே நண்பர்களாகத் தொடரும் நிலைதான் சரியான வழின்னு தெளிவாகச் சொல்லிட்டேன்."
"ஐய்யோ தம்பு அது சரி பட்டு வராது; எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை ஆனால் நிச்சயமா இந்த முடிவு சரியான முடிவு இல்லை. ரொம்பப் புத்திசாலியான நீ இப்படி முடிவு செய்யுறது சரியில்லைன்னு மட்டும் திட்டவட்டமா சொல்லுவேன்; சரி அதற்கு அனிதா என்ன சொன்னாள்?"
"ம்ம்ம் இதுக்கும் அனிதா முன்னைய போலவே இது நிறையப் பேர் செய்யுற தவறுதான்; அதாவது வாழ்கையைக் குறுகிய பார்வையோடு பார்க்காமல் தொலை நோக்குப் பார்வையோடு பார்க்கனும்.
அதாவது இன்றைய சூழலான அன்பு ஆசை காமம் போன்ற உணர்ச்சிகளை மட்டுமே கருத்தில் கொண்டு பார்த்தால் இதுதான் சரின்னு தோனும் ஆனால் வாழ்க்கை நம் இளமைக் காலத்தைத் தாண்டி முதுமை, சந்ததி மற்ற உறவுகள் எனப் பல விவரங்களை உள்ளடக்கியது.
உதாரணத்துக்குப் பிள்ளை பெற்றுக்கொள்ளப் போவதில்லையா அல்லது கல்யாணம் செய்யாமல் பிள்ளைப் பெற்று வளர்க்கப் போகிறாயான்னு கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை ரொம்பச் சிந்திக்க வெச்சிட்டாள்.
நாங்க நிறைய நேரம் தீவிரமா ஆழமா சிந்தித்துப் பல விவரங்களை அலசி ஆராய்ந்ததில் அவள் சொல்றது முழுக்க முழுக்கச் சரின்னு தெளிவானாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தேன்.
என் மனக் குழப்பத்தைப் புரிந்தவள் அதற்குச் சரியான தீர்வுன்னு அவள் சொன்ன யோசனை என்னன்னா என் முதல் காதலியை, அதாவது உங்களை மறப்பதோ அல்லது உறவை மறைமுகமாகத் தொடர்வதோ நம்ம விருப்பம். அதில் அவுங்களுக்கு எந்த ஆட்சேபனையும்/பிரச்சினையும் இல்லை.
அடுத்தது அனிதாவையும் சியாமளாவையும் கல்யாணம் செய்துக்குறதுன்னு சொல்லிட்டு; என் மனதைக் கவர்ந்த பெண்களின் பட்டியல் முடிந்து விட்டதா இல்லையான்னு என்னைக் கிண்டலா கேட்டாள்."
தன்னையும் மீறி அடக்கமுடியாமல் குலுங்கிக்குலுங்கிச் சிரித்த அத்தை, "ஆமாண்டா நானும் அதையே தான் நினச்சேன்; அவ சரியான புத்திசாலிடா; ம்ம்ம் சொல்லு உன் பட்டியல் விவரம் என்ன இன்னும் நீளுதோ?" சிரித்த வண்ணமே கேட்டாள்.
"அது வந்து அத்தை நான் அனிதாவுக்குச் சொன்ன பதிலேதான் உங்களுக்கும்; அதாவது நான் எந்தப் பொன்னையும் ஆசையக் கிளப்பி விடலை; நான் நியாமாக நல்ல பிள்ளையா நடந்துக்குறது தப்பா? என் நடத்தை, மனப்பாங்கு இதையெல்லாம் பிடித்து விரும்பி என்னை அடைய ஆசைப் படுறவங்களை நான் எப்படித் தடுக்க முடியும்?"
மீண்டும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்த அத்தை, "அதுவும் சரிதான் யார் என்ன செய்யமுடியும்; சபாஷ் சரியான பதில்தான் சரி அதுக்கு அவ என்ன சொன்னா?"
"அவளும் சிரிச்சிக்கிட்டேதான் கேட்டா(ள்) 'என் மனதைக் கவர்ந்தவர்களின் பட்டியல்ல இன்னும் வேற யாராவது இருக்குறாங்களா என்பதுதான் கேள்வின்னு சொல்ல... நான்,"...
அத்தை குறுக்கிட்டு, "என்னடா இழுக்குறதைப்பார்த்தா இன்னும் தொடருதா?"
இதுவரை என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முறையாகக் கேட்டது அனிதாவும் சியாமளாவும் தான் ஆனால் இன்னொரு பெண் கேட்கத் தயங்குறாங்க; மறைமுகமா பல விதமாகத் தெரிந்தது/புரிந்தது ஆனால் இதுவரைக்கும் முறையாக என்னைக் கேட்கல; ஆனால் நிச்சயம் மிக விரைவில் கேட்பாங்க அது மட்டும் உறுதி.
அதாவது அந்தத் தயக்கத்துக்குக் காரணம் வயசு வித்தியாசம்; அதாவது என்னைவிட வயசில மூத்தவங்க அதனால இந்தச் சமுதாயம் கல்யாணத்தை அனுமதிக்காதுன்னு மனசுக்குள்ளேயே புழங்கி வருத்தப்படுறாங்க; தன் மாதவிலக்குப் பிரச்சினையை மறைத்து யாருக்கும் சொல்லாம மனசுக்குள்ளேயே புழங்கி வருத்தப்பட்ட மாதிரி."
புன்னகைத்த அத்தை, "பானுவா (ஆமெனத் தலையசைக்க) நெனைச்சேன்." சொல்லி ஆச்சரியத்தில் தன் வாயை அடைத்து சற்று நேரம் யோசித்த வண்ணம் மனம் குழம்பிய நிலையில் சில வினாடிகள் தொடர்ந்தவர், "கேக்குற எனக்கே தலை சுத்துது ஹும் அப்புறம் அனிதா கேள்விக்கு நீ என்ன பதில் சொன்ன?"
சாதாரண உடல் நிலை பிரச்சினைக்குச் செய்த சின்ன உதவிக்காகத் தன் மனதை பறிகொடுத்து என்னை அடைய ஏங்குறா இன்னொரு பொன்னுன்னு சோன்னதும் உடனே உங்களைப் போலவே அது பானுதான்னு கண்டுபுடிச்சிட்டா.
அப்புறம் அவ சொன்னது; நாம இரண்டாவது நாள் அவளைச் சந்தித்த போது நடந்த விஷயங்கள். அதாவது அந்த மாதவிலக்குப் பிரச்சினை பொதுவாகப் பெண்கள் சம்மந்தப்பட்டது ஆனால் அதைப் பொதுவாகப் பொம்பளைங்களே அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுடுவாங்க.
ஆனால் ஒரு ஆம்பளை அதுவும் ரெண்டு நாள் பழகின பொன்னுக்கே அந்த அளவுக்கு அக்கரை எடுத்துக்கிட்டது அவளை ரொம்பக் கவர்ந்ததாகவும்; அந்த மாதிரி நான் செய்யுற உதவி; காட்டுற அக்கரை அன்பு இதெல்லாம் தான் பொன்னுங்களை ஈர்க்குதாம்; அது இயற்கையாம்.
அப்புறம் அனிதா சொல்லுறா நான் பானுவுக்குச் செய்த உதவி எல்லாம் பார்த்து அவளுக்கே பொறாமையா இருந்ததாம்; அதனால பானு என் மேல ஆசைப் பட்டு என்னை அடைய ஏங்குறது இயற்கை/நியாயமானது. அதற்கும் மேல பானுவை அனிதாவுக்கு ரொம்பப் புடிச்சிருக்காம்; அதனால அவளையும் சேர்த்து மூனு பேரையும் கல்யாணம் செய்துக்கச் சொல்றா!
குலுங்கிக்குலுங்கி சிரித்த சரி உன் பதில்/முடிவு என்ன?"
நீண்ட யோசனைக்குப் பின், "நான் ஒரு சின்னப் பையனா இருந்தாலும் இப்படி மூனு நல்ல பொன்னுங்க மனசில் இடம் புடிச்சதை நினைத்தால் ரொம்பப் பெருமையாவும், கர்வமாவும் இருக்கு.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் பயமா இருக்கு; பயத்துக்கு முக்கியக் காரணம் வேகம். அதாவது நாம எல்லாரும் சந்தித்தது பழகினது ஒரு வாரம் தான்; அதுக்குள்ள நாம எல்லாரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்குறது அவ்வளவு சுலபமானதில்லை.
அதுக்கும் மேல நான் என் படிப்பை முடித்து வேலையில சேர்ந்து அதுக்கப்புறம் தான் கல்யாணம் செய்ய முடியும். இதெல்லாம் நடக்கக் குறைந்தது அஞ்சி வருஷங்களாவது ஆகும் அதனால என் முதல் முடிவுப்படி முதல்ல நாம நண்பர்களாகவே பழகி தொடர்வோம். அதற்கு மேல அன்றைய நிலையில் யோசித்து முடிவெடுப்பது நல்லதுன்னு தோனுது; நீங்க என்ன நினக்குறீங்க?"
"ம்ம் நீ சொல்றதும் சரியாத்தான் தோனுது ஆனால் அது சாத்தியமான்னு தெரியலை. நீ இந்த முடிவை மத்தவங்க அதுதான் உன் காதலிங்க கிட்ட பேசி முடிவெடுங்க. சரி எதுவும் அவசரமா முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நல்லா யோசித்து அப்புறமா ஆலோசனை செய்யலாம் அதனால நீ இப்போதைக்கு மனசைப்போட்டு அலட்டிக்காம நல்லா நிம்மதியா தூங்கு."
தொடரும்