பாகம் 14: குலமகளை குறும்புக்காரியாக

Story Info
குறும்பு செய் அதை விரும்பி செய்! குலமகள் குறும்பாய்
1.1k words
0
12
00

Part 73 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 14: குலமகளை குறும்புக்காரியாக்கினேன்

மறு நாள் காலை சிற்றுண்டி முடித்து ஜெயா அத்தை வீட்டுக்குச் செல்ல நினைக்கையில் அதற்குள் என் சித்தி இரவு கமலாவின் தொலைப்பேசி அழைப்பு யாரது என்ன விவரம் எனக் கேள்வி எழுப்ப; அனைவரும் ஆவலுடன் சூழ்ந்து கொண்டனர்.

"அது அந்த அலுவலகத்தில் வேலை செய்து வந்த பொன்னு; இந்தப் பிரச்சைனைல பாதிக்கப்பட்ட பொன்னு; அது எங்க வயசுதான்; நான் செய்த தீர்வினால் பாதிக்கப்பட்ட பொன்னு; அவளுக்கு எங்கேயாவது வேலை தேடனும்; நல்லா படிக்கிற பொன்னு அதனால டாக்டர் அத்தை வீட்டில் வேலைக்கு வெச்சிக்கிட்டு அப்புடியே மேல் படிப்பைத் தொடர யோசனை/திட்டம்; இந்நேரம் அந்தப்பொன்னு டாக்டர் வீட்டுக்கு வந்திருக்கலாம் நான் போய் எல்லாம் சரி பார்த்துட்டு வந்துடறேன்." சொல்லி அனிதா வீட்டுக்குச் சென்றேன்.

சற்று நேரத்தில் வந்து சேர்ந்த கமலாவை வரவேற்றுப் பின் ஜெயா அத்தையுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்தோம். அதன்படி கமலா ஜெயா அத்தை வீட்டில் தங்கி, வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே அவள் மேல் படிப்பைத் தொடர்வது.

அவளுக்கு மாத ஊதியம் வழங்க முடிவு செய்ய அவள் அது தேவையில்லை நான் முன்னரே கொடுத்த பணத்திற்குத் தான் ஆயுள் முழுவதும் வேலை செய்தாலும் தீராது எனக் கமலா மறுத்தாலும்; நாங்கள் மீண்டும் அவளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து அவளை சம்மதிக்க வைத்தோம்.

அடுத்த கட்டமாக அவள் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய உடனடியாக மருத்துவச் சோதனைக்கு ஏற்பாடு செய்தோம். எல்லாம் முடிவு செய்த பின்னர் இறுதியாகக் கமலாவிடம் நான் குறிப்பிட்டுச் சொன்னது

"இந்தக் கட்டுப்பாடான வாழ்க்கை முறை எளிதானதல்ல; இந்த வாழ்க்கை முறை பிடிக்காமல் பழைய அல்லது வேறு எந்த வாழ்கை முறைக்கு மாற விரும்பினால் நீ தாராளமாகச் செய்யலாம். அதாவது இந்த முடிவுக்குக் கட்டுப்பட்டு நடப்பது உன் சொந்த விருப்பம். அப்படி நீ நடந்து கொள்ளும் வரை எங்கள் ஆதரவு/உதவி உனக்குத் தொடரும்.

முக்கியமாகச் சில உதவிக் குறிப்புகள்; 'ஸ்ரீஷா' என்ற பெயரால் யாராவது கூப்பிட்டால் சட்டை செய்யாதே அந்தப் பெயர்/வாழ்கை எல்லாத்தையும் ஒரு கனவாக நினைத்து மறந்துடு." சொல்லி அவர்களிடம் விடை பெற்று வீடு திரும்பி மதிய உணவை முடித்துப் பின்னர் நானும் பானுவும் புறப்பட்டோம்.

நம் தமிழகப் பாரம்பரிய பாவாடை தாவணி உடையில் தயாராகி நின்ற பானுவைக் கண்டு, "வடநாட்டு உடை வகையான சல்வார் கமீஸ் வகை ஏதுமில்லையா?"

"ஐயோ எங்க கிட்ட அது போல ஏதுமில்லையே; ஏண்டா உனக்கு அதுதான் புடிக்குமா? கடவுளே என் செல்லத்துக்குப் புடிச்ச உடை என் கிட்ட இல்லையே; சாரி ரகு."

லஷ்மி, "டேய் சும்மா வம்பிழுக்காம இருக்கமாட்டியா நீ? உன் வேலை என்னமோ அதை மட்டும் செய்."

"எனக்கு எந்த உடையும் புடிக்கும் ஆனால் அந்த மாதிரி உடைதான் இந்த மோடார்சைக்கிளுக்குப் புடிக்கும் (அனைவரும் வினோதமாக சிரித்துக் கொண்டே நோக்க); இந்த உடையில் நீங்க பக்கவாட்டில் உட்கார்வது குறைந்த நேரப் பயணத்துக்குப் பரவாயில்லை ஆனால் நீண்ட நேரப் பயணத்துக்கு ரெண்டு பக்கமும் காலை வெச்சிக்கிட்டுப் பயணம் செய்தால் உங்களுக்குச் சௌகரியமா இருக்கும்.

அதைவிட முக்கியமாக இந்த மாதிரி உடையில் கொஞ்சம் சிக்கல் இருக்கு. கவனமில்லாமல் துணியின் முனையை விட்டால் அப்புறம் இந்த வண்டி துச்சாதனனாக மாறி உங்களைத் துகிலுரிக்கும். எனவே இது மாதிரி மோட்டர் சைக்கிள்ல பாதுகாப்பாக நல்ல வசதியான நீண்ட பயணத்துக்கு அந்த உடை உகந்ததுன்னு நான் நினைக்கிறேன்."

வழக்கம் போல ஷீலா அத்தை என்னைக் கட்டி அணைத்து தன் மார்பில் தாலாட்டி, "என் தங்கம் எதைச் சொன்னாலும் அதில் சரியான காரணம் இருக்கும். (என் சித்தியை நோக்கி) என் தம்பியை வம்பிழுக்குறதே உன் வேலையாப் போச்சி. (பானுவை நோக்கி) இந்த மரமண்டை மாசத்துக்கு ஒரு முறை போவுது; ஆனால் இதெல்லாம் இந்தப் புத்திக்கு எட்டாது."

"அட சொன்னாலும் அப்படியே கேட்டுடுவீங்க நீங்க ரெண்டு பேரும்."

அத்தை குறுக்கிட்டு, "எங்களை விடுடி இப்பத்தான் உன்னை அப்படியே கையில் வெச்சித்தாங்குற தம்பி கேட்டதும் உன் புத்திக்கு என்ன வந்தது? தம்பிக்கு புடிக்கும்னுதான் நினைத்தாலே தவிரத் தனக்குச் சௌகரியம் பாதுகாப்பு இதெல்லாம் தெரியலை. அந்த மாதிரி உடைய நாங்க வாங்கிக்குடுக்காதது உண்மைதான் ஆனால் உங்களுக்குப் போன வருடம் பரிசாக வந்த ஒரு ஆடைத் தொகுப்பை போட்டுக்க வேணாம்னு நாங்க யாராவது சொன்னோமா?"

உடனே பளிச்சிட்ட பானு சியாமளா கண்கள் இருவரும் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம்.

"அதுதான் மரமண்டுன்னு சரியா சொல்லிட்டியே சித்தி; (என்னருகே வந்து என் கன்னத்தில் முத்தமிட்டு) என் செல்லம் இதோ ஒரு நிமிஷத்தில மாத்திகிட்டு வந்துடுறேன்."

அந்த உடை சற்றே இறுக்கமாக இருக்கப் பானுவின் உடல் வளைவு நெளிவுகளைச் சற்றே மேம்படுத்திக் காட்டியது; நாங்கள் புறப்பட மோட்டர் சைக்கிளை அணுக அதன் இயந்திர எண்ணெய் சிறு துளி கசிந்திருப்பதைச் சற்றே குனிந்து கவனித்த நான் எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.

அதைக் கவனித்த ஷீலா அத்தையும் சியாமளாவும் ஒருவரை ஒருவர் நோக்கிய பின் ஷீலா, "அதென்னப்பா அந்த வண்டிய குனிந்து பார்த்துட்டு தனக்குத்தானே சிரிச்சிக்குற?"

"அதெல்லாம் வயசுப்பசங்களோட குறும்பு புத்தி அதையெல்லாம் வெளிய சொன்னால் திட்டி அடிப்பீங்க." என என் சித்தியை நோக்கியவாறு சொன்னேன்.

ஷீலா, "அடப் பரவாயில்லை சொல்லு நகைச்சுவையா இருந்தால் நாங்களும் சிரிப்போமில்ல!"

"அதுதான் சொல்லிட்டேனே அப்புறம் கேட்டுட்டு த்தூக் கழுதைன்னு சொல்லித் திட்டுவீங்க."

லஷ்மி, "சொல்லிட்டு போடா இல்லேன்னா உன் அத்தைக்கும் எங்களுக்கும் மண்டை வெடிச்சிடும்."

"சரி கடவுள் விட்ட வழி; அது வந்து நான் அந்த வண்டியைப் பானு மாதிரி கற்பனை செய்து பார்த்தேன்."

ஷீலா, "ஐயோ பானுவா அதென்ன தம்பு? வித்தியாசமா இருக்கே!"

"இல்ல வந்து அந்த வண்டியில இருந்து எண்ணெய் ஒழுகி இருக்கு அதைப்பார்த்ததும் குறும்புத்தனமான கற்பனை அதாவது அந்த வண்டிக்கு அந்த மாத விலக்கு மூன்று நாள் அதுதான் ஒழுவுதுன்னு கற்பனை."

ஷீலா, "அடக் கழுதை உண்மையிலேயே இப்படிக் கிறுக்குத்தனமான குறும்பான கற்பனை யாருக்கும் வராது; அது சரி அது ஏன் பானுவைச் சேர்த்து சொல்லுற எல்லாப் பொம்பளைங்களையும் தானே சொல்லனும்!"

"ஐயோ அதை நான் சொல்லமாட்டேன் அப்புறம் நான் வழியெல்லாம் பானு கிட்ட அடி வாங்கனுமா வேண்டாம்ப்பா!"

உடனே பானு, "பரவாயில்லை சொல்லு நான் போயி என் தங்கத்தை அடிப்பேனா?"

"நிஜம்மா (பானு ஆமெனத் தலையசைக்க); இல்லை வந்து அதுவும் உன்னை மாதிரி 'எனக்கு அந்த மூனு நாளில் என்னைத் தொட்டுட்டால் எல்லாத்தையும் அவுத்துப் போட்டுவிட்டுத்தான் போகனும்னு அடம் புடிச்சிதுன்னா?" சொல்லி முடிக்க அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கினர்.

அதே சமயம் கோபம் கலந்த புன்னகையுடன் பானு என் காதைப் பிடித்துத் திருகிய வண்ணம், "எவ்ளோ நல்ல புத்தி இருக்கோ அதைவிடக் குறும்பு புத்தி ரெண்டு மடங்கு இருக்கு உன்னை அப்டியே கடிச்சி." சொல்லி அணைத்துக் கொஞ்சி கடித்த வண்ணம் முத்தமிட்டவாறே புறப்பட்டுச் சென்றோம்.

கிராம எல்லையைக் கடந்ததும் ஆள் நடமாட்டம் ஏதுமின்றி முழுமையான தனிமை கிடைக்கச் சிறிதும் கூச்சப்படாமல் என்னை இறுக்கி அணைத்து வஞ்சனையின்றித் தன் கலசங்களைக் கசக்கி இழைத்து இன்புற்ற "ரகு ரொம்ப நன்றிப்பா எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?... என் தங்கம்."

மெய்மறந்த நிலையில் என் சட்டையின் சில பொத்தான்களை விடுவித்து என் மார்பில் தன் கைகளை வருடவிட்டு என் தோள்/கழுத்தில் முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்ந்தபடி தொடர்ந்தாள். அந்தச் சாலையின் இரு பக்கமும் மரங்கள் சூழ மிக இனிமையாக இருந்தது.

அந்தப்பாதை எந்த ஆள் நடமாட்ட மற்ற ஆனால் பாதுகாப்பான வழியென மாமா குறிப்பிட்டிருந்தார். "இந்தச் சாலை யாருமில்லாமல் நம்ப ரெண்டே பேரு தனியா போறது உனக்குப் பயமா இல்லையா?" எனக் கேட்டேன்.

"எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலா சித்தப்பாவும் நானும் வழக்கமா அடிக்கடி போறதுனால எனக்குப் பயம் எதுவுமில்லை ஏன் உனக்குப் பயமா இருக்கா ரகு?"

நான் சற்றே யோசித்து, "பயம்ம்ம்! ஆமா இப்படி யாருமே இல்லாம நாம மட்டும் போறது அவ்ளோ பாதுகாப்பானதில்லை தான் ஆனால் மாமா சொன்னார் இந்த வட்டாரத்தில அந்தப் பயம் எதுவுமில்லைன்னு அதனால எனக்குப் பயமில்லை ஆனால் இப்படி மோட்டர் சைக்கிள்ல ஒரு தேவதையைக் கூட்டிக்கிட்டுப் போறது... பரிந்துரைக்கக் கூடியதல்ல; சரி விடு உனக்குப் பயமில்லைன்னா சரி."

"எனக்குப் பயமில்லை என் தங்கத்தைக் கட்டிப்புடிச்சிகிட்டு போற இந்தப் பயணம் என் வாழ்கையில் மறக்க முடியாத அளவில்லா சந்தோஷமான ஒண்ணு." சொல்லி இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

"எப்பவுமே இந்த வழி, இப்படித்தான் ஆள் நடமாட்டமே இல்லாம இருக்குமா?"

"ஆமா எனக்குத் தெரிந்து இப்படித்தான் இருக்கும் எப்போதாவது எதிரே ஏதாவது பேருந்து இல்ல கூடுந்து வண்டி வரும் அவ்ளோதான்." அவள் சொல்லி முடிக்கச் சற்றுத் தொலைவில் ஒரு சுமையுந்து நிறுத்தப்பட்டிருக்க அதைக் கண்ட "ஹாம் எப்பாவாவது இது போல இருக்கும்; அந்த சுமையுந்து இளநீர் எடுத்துப் போறது." ஒரு மாட்டு வண்டியிலிருந்து இளநீர் அந்த சுமையுந்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அதற்குள் நாங்கள் நெருங்க எங்கள் வண்டியின் சத்தம் கேட்டதும் அந்த ஆட்கள் வேலையை நிறுத்தி வணங்கி என்னைக் கண்டு சற்றே குழம்பிய வண்ணம் வணக்கம் தெரிவித்தனர்.

ஆனால் பானுவுக்கு மிகவும் பரிச்சயமான ஆட்கள் எனத்தெரிந்ததும் நான் வண்டியை நிறுத்தி வணக்கம் தெரிவிக்க; அதற்குள் பானு விவரத்தைச் சொல்லப் புரிந்தவர்கள் மீண்டும் குழப்பமின்றி வணக்கம் தெரிவித்து இளநீர் பரிமாற இருவரும் பருகி பின் விடை பெற்றுச் சென்றோம்.

"இப்போது நாம ரெண்டு பேரும் தனியா என்ன வேனும்னாலும் செய்யலாம்; ஏனென்று கேக்க யாருமில்லை."

"ச்சீப் போடா ஏண்டா என் ஆசையக்கிளப்பி விடுற... ஏய் என்ன உனக்கு என்ன வேணும்; நாம எங்க(ள்) வீட்டுக்கு போயி இன்றைக்கு ராத்திரி உன் இஷ்டத்துக்கு ஆடலாம்னு நான் ஏங்கிக்கிட்டு இருக்கேன். உனக்கு அதுக்குள்ள இப்படி வழியிலேயே ஆரம்பிக்கனுமா?" அவள் கேள்வியில் மோகமும் தாகமும் கலந்திருந்தது ஆனால் சிறிதும் பயமில்லை.

"இந்தத் தேவதைக்குப் பிடிக்காததைச் செய்யச் சொல்லுவேனா?"

"புடிக்காம இல்லடா... பயமா பதற்றமா! ஆனால் புடிக்கும்டா." சொல்லிக் கொண்டே என் தொடைகளை வருடிய வண்ணம் மெல்ல என் தம்பியையும் வருடினாள்

"பானு, நான் முன்னரே சொன்னதுதான் இதைப் புடிச்சவங்க அனுபவிப்பாங்க பயமா இருந்தால் அதைப்பற்றிப் பேசவோ நினைக்கவோ வேண்டியதில்லை. இதையெல்லாம் ஒப்பிடக்கூடாது. இப்போது நீ என்னைக் கட்டிப்புடிச்சி என் மார்பைத் தடவிய அனுபவித்ததே நான் எதிர் பார்க்காதது.

உனக்கு அவ்ளோ தைரியம் வந்ததே பெரிய விஷயம். உனக்கு எந்த அளவுக்கு ஆசையோ/தைரியமோ நீ அனுபவிக்கலாம். பொதுவா பொன்னுங்க ஆசை இருந்தாலும் கொஞ்சம் கூச்சமும் வெட்கமும் அவுங்களைத் தடுக்கும். அது ஆம்பளைங்க எங்களுக்கு இருக்காது.

அதனால அது தெரியாம சிலர் அளவுக்கு அதிகமா தூண்டி தீண்டுவது வழக்கம்தான். ஆனால் நான் அப்படி எல்லாம் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன். நீ கவலைப்படாம உனக்கு எந்த அளவுக்குச் சௌகரியமோ அந்த அளவுக்கு அனுபவி."

"தெரியும் ரகு எனக்கும் ஆசை வருது ஆனால் நீ சொன்ன மாதிரி கொஞ்சம் வெட்கமும் கூச்சமும் என்னைப் பாடாப்படுத்துது."

"அட நான் தான் சொல்லிட்டேனே உனக்கு எவ்ளோ புடிக்குதோ அந்த அளவுக்குச் செய்துக்கோ மிச்சத்த உங்கள் வீட்டில் போய் அனுபவிக்கலாம்."

பானு குறுக்கிட்டு, "எனக்குப் புரியுது ஆனால் எனக்கு உன் குறும்பு வேனும் நான் அன்னிக்கி செய்தது பெரிய தப்பு அதனால நீ சுத்தமா நிறுத்திட்ட; நான் செய்தத மறந்து நீ பழையபடி உன் இஷ்டத்துக்கு என்னை வம்பு செய்யனும் நான் நிறுத்த சொன்னாலும் நிறுத்தக்கூடாது."

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous