பாகம் 16: குலமகள் மாறி குறும்பு. .

Story Info
மயக்கினான் மயங்கினாள்! மங்கையர் பட்டியல் நீண்டது
1.2k words
1
9
00

Part 75 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 16: குலமகள் மாறி குறும்புக்காரியாக மலர்ந்தாள்

"என்ன பானு ஒண்ணும் சொல்லாமல் அமைதியா! புடிக்கலையா?"

உடனடியாகப் பதற்றப்பட்டு, "ச்சீச்சீ புடிக்காமலா இந்தக் கூத்தடிச்சேன்."

"இல்லை ஏதோ மறைக்குற."

"இல்லடா ஒண்ணுமில்லை ரொம்ப அதிர்ச்சியா இருக்கு; நானா இப்படி எல்லாம் செய்தேன்னு எனக்கே அதிர்ச்சியா இருக்கு. ரொம்பச் சிலிர்ப்பா இருக்கு... ஆனால் (சற்றே தயங்கி பின் மெல்ல) கொஞ்சம் பயமா இருக்குடா. யாரும் பாக்கலை; ஆனால் யாராவது பார்த்திருந்தால் (உடனே அவள் உடல் சிலிர்த்தது) எப்பா நினைக்கவே கூசுது; அவ்ளோதான் அதுக்கு மேல உயிர் வாழ முடியாது."

நான் அவளை மென்மையாக அணைத்து மெல்லத் தட்டிக் கொடுத்து, "பானு கொஞ்சம் இப்படி நினைச்சிப்பார்க்கலாம்."

ஒரு வேலை நாம பாதி வழியில இந்த வண்டி கெட்டுப் போயி நாம இப்படியே வேறு உதவி வரும் வரை காத்திருக்க வேண்டி இருந்தால்; அந்தக் கொடுமையை நினைச்சிப்பாரு. என்னடா இவன் சம்மந்தமே இல்லாம ஏதோ பேசுறானேன்னு தோனுதா? (ஆமெனத் தலையசைத்தாள்) இல்லை நான் சொன்னது இந்தப் பாதை பயணத்தின் ஒரு குறைபாடு.

அதாவது இந்த வழியில அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதனால் ஏற்படக்கூடிய நஷ்டம். அதாவது எதிலும் நன்மை/தீமை என இரண்டும் கலந்திருக்கு. இந்த ஆள் நடமாட்டமில்லாமைல இருக்குற தீமை நமக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உதவி கிடைக்காமல் தாமதமாவது.

அதே சமயம் இந்த ஆள் நடமாட்டமின்றித் தனிமையில இருக்கும் நன்மை நாம இப்படிக் குறும்பு சேட்டையெல்லாம் செய்ய வாய்ப்பு. உண்மையில நாம காமத்தை முழுமையா அனுபவிக்க முடியாது.

ஆனால் ஒரு செயற்கரிய செயலை செய்து முடித்த சிலிர்ப்பு/திருப்தி மட்டும்தான். நான் ஏற்கனவே சொன்னது போல நம்ப ரெண்டு பேர் மட்டும் சாதித்த சாதனை. நாம் ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்த குறும்பு/சேட்டை. நாம ரெண்டு பேர் மட்டும் நினைத்து ரசிக்கக்கூடியது. சரிசரி விடுங்கள் நான் உங்களை ரொம்ப கெடுத்துட்டேன்."

உடனே அதிரடியாக என்னை இறுக்கி அணைத்தவள், "ஆமாண்டா ரொம்ப ஆச்சாரமா இருக்குற என்னையே இப்படிக் குறும்பு செய்ய வெச்சிட்டே. அதுதான் என்னாலேயே நம்ப முடியலை. ஆனால் நீ சொல்றது முழுக்க முழுக்க உண்மைடா.

இந்த வாலுப்பையன் எதைச் சொன்னாலும் நான் செய்வேன்; ஆமாம் இந்த நினைப்பு விட்டு விலகாமல் சுத்திச்சுத்தி வரும் நீ இல்லாதபோது அது நிச்சயமா வாட்டி எடுக்கும். ஹூம் ஒரு வாரம்தான் பழகினோம் அதுக்குள்ள உன்னைப் பிரிந்து வாழவே முடியாதுன்னு ஆயிடுச்சி."

"என்னை விட்டுப் பிரிந்து இருக்கவே முடியாதா! அப்படீன்னா இன்னும் ஒரு மாசத்துக்குப் பிறகு என்னைப் போக விடமாட்டீங்களா?" கேட்டுப் புன்னகைக்க;

மிகுந்த சோகத்துடன், "ஹூம் அதை நினைத்தாலே ரொம்ப அழுகையா வருதுடா." சொல்லிக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"இதென்ன சின்னக் குழந்தையாட்டம் இப்படி அழறீங்க; தயவு செய்து அழுவதை நிறுத்து."

நீண்ட சமாதானத்துக்குப் பின் சற்றே நிதானித்தவள் மெல்ல, "ஏய் ரகு நான் ஒண்ணு கேட்டாள் தப்பா எடுத்துக்காமல் பதில் சொல்லுவியா; வந்து எனக்கு அதை எப்படிக் கேக்குறதுன்னே தெரியலை; ஒரு வேலை உன் மனசை கஷ்டப்படுத்துமான்னு பயமா இருக்குடா!"

"இந்த அன்பு தேவதை அப்படி என் மனசு புண்படும்படியாக எதுவும் கேட்காது; கூச்சப்படாமல் கேளுங்க."

"இல்லை நீ எங்களை விட்டுவிட்டு உங்க ஊருக்குப் போன பிறகு... எங்க நினைப்பு!"... அத்துடன் தொடராமல் சற்றே என் கண்களை ஏக்கமாக நோக்கிய வண்ணம் நிறுத்தினாள்.

சற்று பொறுத்த பின்னர் "ரொம்ப வாட்டி எடுக்கும்." சொல்லி முடித்ததும் அவள் கண்கள் பளிச்சிட்டுப் பிரகாசித்து முகம் மலர்ந்தது

சில நொடிகளில் மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு, "அது போதும் எனக்கு; அது போதும்; அந்த நினைப்போடவே வாழ்ந்து என் கண்ணை மூடிடுவேன்."

"ஆனால் எனக்கு அது போதாதே."

"உனக்கு என்ன செய்யனும்னு சொல்லுடா; நீ என்ன சொன்னாலும் தயங்காமல் செய்வேண்டா நான்; நீ எப்போது கூப்பிட்டாலும் நான் உன் பின்னாடி வந்துடுவேன். உன் வீட்டு வேலைக்காரியா இருக்க அனுமதி கொடுத்தால் போதும் என் வாழ் நாள் முழுசும் அப்படியே கழிச்சிடுவேன்."

"அடக்கடவுளே இதென்ன கூத்து இந்தத் தேவதைக்கு நான் வாழ்நாள் முழுவதும் பணி செய்யக்காத்திருக்க ஆனால் இந்த ராணி எனக்கு வேலைக்காரியா இருக்க அனுமதி கேக்குறது மிகப் பெரிய விகடம்."

"டேய்; நீ என்ன ஒண்ணும் தெரியாத சின்னப் பையனா? நான் உன்னை விட மூனு வயசு பெரியவள்; நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்க முடியாது; அதனால எனக்குத் தெரிந்து ஒரே வழி நான் உன் வீட்டு வேலைக்காரியா உன் வீட்டிலேயே தங்க வழிசெய்றது தான் நல்ல சுலபமான வழி... உனக்கு ஏதாவது வேறு நல்ல வழி/யோசனை இருந்தால் சொல்லு அதைச் செய்ய என் முழு சம்மதம் உனக்கு நிச்சயமா எப்பவும் இருக்கும்."

"உன்னைவிட இளையவனான என்னைக் கல்யாணம் செய்துக்கு உனக்கு விருப்பம் இல்லையா?"

"ஐயோ இதென்ன கேள்வி; நான்தான் ஏங்கிக்கிட்டிருக்கேனே!"

"ஆனால் நீங்க என்னைக் கேட்கலையே."

"அது வந்து இந்தப் படிக்காத மக்கு; எப்படி உன்னைப்போல நல்ல புத்திசாலியை! எனக்கும் உனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. உனக்கு அந்த அனிதாதான் ஏத்த பொன்னு; என் செல்லம் நீ அவளையே கட்டிக்கிட்டு நல்லா சுகமா வாழனும்."

"அப்படீன்னா நீங்க என்னை மறந்து வாழ முடியுமா?"

"ரொம்ப ரொம்பச் சிரமம் தான்; ஆனால் முடியனும்; என் தங்கம் நீ சீரும் சிறப்புமா இருக்கனும் அதுதான் எனக்கு முக்கியம்." சொல்லும் போதே அவள் கண்கள் கலங்க அதை வெளிக்காட்டாமல் மறைத்தாள்.

நான் சற்றே யோசித்து பின் மெல்ல இறுக்கி அணைத்து, "உங்களுக்கு அது சாத்தியமா இருக்கலாம் ஆனால்... எனக்கு அது சாத்தியமில்லை; என்னால் இந்தத் தேவதையை விட்டு இருக்க முடியாது." என் உதடுகள் அந்த வார்த்தையை உதித்ததும்; என்னை வெறித்தனமாகக் கட்டி அணைத்தவள் சத்தமாக அழுது பின் உடனடியாக நிறுத்தி என் கண்களை உற்று நோக்கினாள்.

மீண்டும் அழுதபடியே, "என் தங்கம், செல்லம் என் தெய்வமே; என் வாழ் நாள் பூராவும் உன் காலடியில இருக்க நான் கொடுத்து வைக்கலைடா; உன் தகுதிக்கு அனிதாதான் ஏத்தவ; அவளும் நல்ல பொன்னு."

"ஹூஹும் எனக்கு இது வேணும்." சொல்லி அவள் கண், உதடு, மூக்கு, காது, அவள் மார்பகம் எனத் தொடர்ந்து முத்த மழை பொழிந்த வண்ணம் அவள் சூத்தையும் பிடித்துப் பிசைந்தேன்.

"என் தங்கமே இது எல்லாம் எப்பவும் உனக்குத்தான்; என்னைக் கேட்கவே வேண்டாம்; எடுத்துக்கோடா."

"இப்ப மட்டுமில்லை எனக்கு எப்பவும் வேணும்; வாழ்நாள் பூராவும் வேணும்; நிரந்தரமா வேணும்."

"ஹூம் ஆசையப் பாரு; எனக்கும்தான் அவ்ளோ ஆசையா இருக்கு. அதுக்கு ஒரே வழி என்னை உன் வீட்டு வேலைக்காரியா வெச்சிக்கோ; அது மட்டும் பத்தாது அதுக்கு முன்ன நான் அனிதாகிட்ட பேசி சம்மதம் வாங்கனும். அவள் ரொம்ப நல்ல பொன்னு.

அன்னைக்கு அவள் சொன்னதை நீ கவனித்திருப்பேன்னு நினைக்கிறேன்; அவள் உன்னை நாங்க மூனு பேரும்; அதுதான் அவள், சியாமளா நான் எல்லாம் பங்கு போட்டுக்கலாம்னு சொல்லலை.

அவள் உன்னை மாதிரியே ரொம்ப நல்ல மனசு. இல்லைன்னா எந்தப் பொன்னும் விட்டுக்கொடுக்காத புருஷனையே பங்கு போட்டுக்கலாம்னு; ஏதோ தின்பண்டத்தைப் பங்கு போட்டுக்கற மாதிரி சர்வ சாதாரணமா சொல்லுறா.

அவள் தங்க மனசுக்கு உன்னை மாதிரி வைரம் தான் சரியான பொருத்தம்; அவளை நீ கல்யாணம் செய்து அமெரிக்கா போகும்போது என்னையும் உங்கள் வீட்டு வேலைக்காரியா கூட்டிப் போங்க."

"பானு நீ அனிதாவைப் பற்றிச் சொல்லுறதெல்லாம் உண்மைதான் ஆனால் இந்தத் தங்கமும் (அவளைக் குறிப்பிட்டு) எந்த விதத்துலையும் குறைந்ததில்லை. இந்தத் தேவதைக்கும் அதே வயசு, அதே மனசு." உடனே என்னை இறுக்கி அணைத்து முத்த மழை பொழிந்தாள்.

பின் என் கன்னங்களைப் பற்றி வருடிய வண்ணம், "அப்படியா ரொம்பச் சந்தோஷம்; ஆனால் நீயும் அந்தக் கிறுக்குப் பொன்னு சொல்றாமாதிரி பங்கு போட்டுக்கச் சொல்லுறியா? அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. நீ புத்திசாலியா நடக்கிற விஷயத்தை மட்டும் பேசு. நான் சொல்லுறது கொஞ்சம் சாத்தியமானதுதான்; அதனால அதைப் பற்றி யோசி."

"ஹூஹூம் அதெல்லாம் முடியாது; எனக்கு இந்தத் தேவதை ராணியாட்டம் வரனும் வேலைக்காரியா இல்லை. சரி விடுங்க அதுக்கு இன்னும் எவ்வளவோ நாள் இருக்கு. நாம ஏன் அதைப்பற்றி இப்போது பேசி நேரத்தை வீணாக்கனும்."

அடுத்த பத்து நிமிட பயணத்தில் அந்தப் பிரதான சாலையிலிருந்து மாட்டு வண்டி செல்லக்கூடிய அளவில் பிரிந்த ஒரு கிளைப்பாதையில் திரும்பி பயணம் தொடர அடுத்த இரண்டு கிலோமீட்டர் பயண முடிவில் வீடு சேர்ந்தோம்.

அது ஒரு பத்து அல்லது பதினைந்து வீடுகளே கொண்ட மிக மிகச் சிறிய கிராமம்; அங்கு இருந்த வீடுகள் அனைத்துமே குடிசை வீடுகள் அதற்கு மாறாகப் பானுவின் வீடு ஒரு நடுத்தர அளவிலான மாளிகையாய் இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்தது கிட்டத்தட்ட மூன்று மணி இருக்கும்; பானு அவள் அம்மாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அவள் அம்மா பார்க்க ஐம்பது முதல் ஐம்பத்தைந்து வயதில் சற்றே மிகச் சாந்தமாக அமைதியானவராய்த் தோன்றினார். அவருக்கும் பானுவுக்கும் முகத்தில் எந்தவித ஒற்றுமையும் இல்லை. பானுவின் அம்மா எனக்கு அளவுக்கு அதிகமான மரியாதை செலுத்தினார்.

பானுவையும் தான் பெற்ற மகள் என்ற உரிமையை வெளிப்படுத்தாமல் அவளை ஏதோ பெரிய இடத்துப் பெண் போல நடத்தினார். பானுவின் அம்மா அந்த வீட்டில் வசித்து வரும் ஒரே எஜமானி அம்மாள்.

அந்த வீட்டைப் பராமரிக்க மேலும் மூன்று பணிப்பெண்கள் இருப்பதாக அறிந்தேன்; எங்களுக்குத் தேநீர் பரிமாறியது ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளம் பணிப்பெண் பெயர் தாமரை.

மிக அழகிய தோற்றம் குறிப்பாக மிகச் சிறிய இடையும் மிதமாகப் பருத்த மார்பகங்களும், நன்றாகப் பருத்த சூத்தழகும் அவள் உடற்கட்டு அளவுக்கு அதிகமான காமத்தூண்டளாய் இருந்தது.

இத்தனைக்கும் மேல் அவள் மார்பக ஆடை (கச்சை, ரவிக்கை) ஏதுமின்றிப் பழங்கால முறையில் தன் சேலையின் மாராப்பை மட்டும் போர்த்திய மேலாடையுடன் வலம் வந்தாள்.

அதிலும் அவள் நெருங்கி வந்து தேநீர் பரிமாறி பக்கவாட்டில் திரும்ப அவள் மார்பகம் ஓரளவு மிகத்திடமாகக் குத்திட்டு நிற்பது மிகக்கவர்ச்சியாக இருந்தது; அவள் பரிமாறிய விதம் சற்றே சிறப்பான சேவையாக இருந்தது.

அந்தக் கூடத்தின் இடது புறத்திலிருந்து ஒரு நல்ல பரிமாறும் தாம்பாளத் தட்டில் தேநீரைக் கொண்டு வந்தாள். அதிலிருந்தது மூன்று கோப்பைகள் மற்றும் சிறிய சர்க்கரை குப்பி அதனுடன் மற்றுமொரு சிறிய கோப்பையில் முழுவதுமாய்ப் பால்.

தான் கொண்டு வந்தத் தட்டை தேநீர் மேசையில் வைத்துவிட்டு ஒரு கோப்பையைத் தன் இரு கைகளால் எடுத்து மிக மரியாதையுடன் எனக்கு நீட்டி தன் முகத்தில் அழகிய சிரிப்பை உதிர்த்து மிக நாகரீகமாக என் கண்களை நோக்கிய வண்ணமே பரிமாறினாள்.

அதை வாங்கிய பின் நான் உடனே குடிக்காமல் மற்றவர்களுக்குப் பரிமாறும் வரை பொறுக்க; அதுவரை என் முகத்தையே மிக மரியாதையாக நோட்டமிட்டவள் நான் உடனடியாக அருந்தாமல் சற்று பொறுக்கவே அடுத்த கோப்பையை எடுத்தவாறே பானுவின் அம்மாவை நோக்க அவரும் பானுவுக்குப் பரிமாறும்படி ஜாடை செய்யப் பானுவிற்குப் பரிமாறி அதன் பின் பானுவின் அம்மாவிற்குப் பரிமாறினாள்.

மற்ற இருவருக்கும் பரிமாறியவள் மீண்டும் விரைந்து என்னருகே நெருங்கி என் முகத்தை மிகுந்த ஆவலுடன் நோக்க; எனக்குப் புரிந்தது அவள் தான் தயாரித்த தேநீர் கலவை எனக்குத் திருப்தி அளிக்கிறதா என என் முகத்தை மிக ஆவலாய் எதிர் பார்ப்பது புரிந்தது; நான் உடனே என் முதல் உறிஞ்சுதலை முடிக்க என் முகத்தில் தெரிந்த திருப்தியின் பிரதிபலிப்பைக் கண்டு மகிழ்ந்தாள்.

நான் அவளை நோக்கி, "நல்லா இருக்குங்க நன்றி."

அவள் மீண்டும் தலை வணங்கி நாகரீகமாகப் புன்னகைத்துக் கை கூப்பினாள் பின்னர்ச் சற்றே பின் நகர்ந்து பானுவின் அம்மா அருகில் நின்றாள். நாங்கள் சிறிது உரையாடிய வண்ணமே தேநீர் பருகி முடித்து நான் கோப்பையை மேஜையில் வைக்க எழுந்திருக்க எத்தனிக்க; அதற்குள் அதிரடியாக விரைந்து வந்து அந்தக் காலி கோப்பையை வாங்கிக்கொண்டாள்.

"ரொம்ப நல்லா சுவையா இருந்தது தேநீர்; உங்களுக்கு ரொம்ப நன்றி."

தலை வணங்கிய தாமரை, "ஐயா இதுக்குப் போய் நன்றி எல்லாம் சொல்றீங்க; உங்களுக்குத் திருப்தியா இருந்தது என் பாக்கியம் ஐயா." சொல்லி மீண்டும் நாகரீகமாகப் புன்னகைத்தவள் அடுத்து பானுவிடமிருந்து காலிக் கோப்பையை வாங்கக் குனிய இம்முறை அவள் குத்திட மார்புக் கலசங்கள் முழுவதும் மிகத்தெளிவாகத் தோன்றின; அதன் அழகிய பரிமாணம் என்ன கவர்ந்திழுத்தது.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous