Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 06: குந்திதேவியா!!
"அதாவது என் அப்பாவின் விந்துவை என் கருமுட்டையில் சேர்த்து நான் குழந்தை பெத்துக்கனும்."
"பெத்துக்கலாம் என்பது என் வாக்குவாதம்; அப்படிச் செய்தால் அந்தக் குழந்தைக்கு அப்பா உன் அப்பா அம்மா நீ; இது உறவு முறையில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அது உங்கள் இருவர் (நீங்க உன் அப்பா) மனதுக்கும் சரியென்று சமாதானம் அடைய முடிந்தால்; அப்படி ஒரு வழி இருக்குன்னு எடுத்துக்கொள்ளலாம்.
அதுக்கு மாற்று வழியா மற்றொரு பெண்ணின் உயிரணுவைக் கொண்டு ஆய்வுக்கூடம் (Laboratory) குழந்தை உருவானதும் அந்தக்கருவை உன் கருப்பையில் சுமந்து பெற்றெடுக்கலாம்; அதாவது உங்கள் சகோதர/சகோதரியை நீங்களே பெற்றெடுக்கலாம் அப்படியும் ஒரு வழி இருக்குன்னு சொல்ல வந்தேன்."
சற்றே யோசித்தவள் என்னை இறுகக் கட்டிக்கொண்டு தொடர்ந்து முத்தமிட்டுப் பின் மெல்ல விலக்கி, "எங்கள் வாழ்க்கையில் குழந்தை இல்லாமல் போனது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. நீ என்னடான்னா கையில வெண்ணெய்யை வெச்சிக்கிட்டு நெய்க்கு ஏன் அலையுறீங்கன்னு நல்லா எடுத்துச் சொல்லிவிட்டே. உன் பொருள் விளக்கத்துக்கு மிக்க நன்றி; எனக்கு இந்த (என்னைச் சுட்டி) வெண்ணெயே ரொம்ப பிடித்த விருப்பேற்பு (Preference)."
"சரி உங்களுக்கு என் மேல கோபமோ வருத்தமோ இல்லாமல் நான் சொல்ல வந்த விஷயத்தை ஒரு யோசனை/பரிந்துரையாக எடுத்துக் கொண்டதுக்கு நன்றி." இப்படியே ஏதேதோ பேசி கொஞ்சி விளையாடி பின்னர் எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை.
மறுநாள் காலை தாயும் மகளுமாக மல்லிகாவும் பானுவும் வந்து சேர்ந்தனர் இருவரும் என்னை அன்புடன் தழுவி நன்றி தெரிவித்துக் கொண்டனர். நான் மீண்டும் இருவரையும் எச்சரித்து இன்னும் சில நாட்கள் இந்த நாடகத்தைத் தொடர கோரிக்கை செய்து விளக்கினேன்.
என்னைக் கட்டி அழுத பானு, "இவுங்கதான் என் அம்மான்னு உனக்கு தெரிஞ்சதும் ஏன் எனக்கு உடனே சொல்லலை?" செல்லமாகக் கோபித்து என்னைக் கிள்ளினாள்.
"அதைச் உன் அம்மா சொல்லுவதே மிகவும் சரியா இருக்கும்; அதைத் தொடர்ந்து நீ கேட்கும் முக்கியக் கேள்வி 'அப்பா யார்?' அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடியவர் உன் அம்மா மட்டும்தான் அதனாலத்தான் உன் அம்மாவே உனக்கு எல்லா உண்மைகளையும் சொல்ல ஏற்பாடு செய்தேன்."
கயல், "பானு உனக்குத்தெரிந்தோ தெரியாமலோ இந்தத்தம்பி மனசில் இடம் புடிச்சி அதுக்காக கல்யாணம் செய்துக்க முடியலைன்னாலும் எப்படியாவது அவன் கூட சேர்ந்து வாழனும்னு முடிவு எடுத்த நீ நல்ல புத்திசாலி; உனக்கு எல்லா மங்களமும் உண்டாகும்."
மல்லிகா, "ஆமாண்டீ தம்பிய எந்த காரணத்துக்காகவும் விட்டுடாதே?"
மல்லிகா சொன்னதும் மீண்டும் கட்டி அனைத்துக் கொண்ட பானு, "ம்ஹூம் நான் இவனை விடவே மாட்டேன் ஹாயெம்மா ஏம்மா இப்படி சுளீர்னு என்னை அடிச்சீங்க?"
மல்லிகா, "நான் சொன்னது அவர் மனசுல இடம் புடிச்சதை காப்பாத்திக்கோன்னு சொன்னா இப்படி அம்மாவுக்கு எதிரேயே."
கயல்விழி குறுக்கிட்டு, "அட விடுக்கா எல்லாம் பானு கெட்டிக்காரி."
பின்னர் மதிய உணவுக்குப்பின் நான் பானுவுடன் வீடு திரும்பத் திட்டமிட்டிருந்தோம்.
குற்றப்புலனாய்வு
அப்போது சற்று எதிர் பாரத விதமாகக் கயல்விழியின் அப்பா வந்து சேர்ந்தார். அவருடன் கலந்து உரையாடி நடந்த பல விவரங்களை எடுத்துச் சொல்லப் புரிந்தவர் என்னை வெகுவாகப் பாராட்டினார்.
பின்னர் நான் அவருடன் தனிமையில் கலந்துரையாடி மல்லிகாவின் பெற்றோர் மற்றும் சகோதரி சரோஜினியின் மரணத்தில் சந்தேகப்படும் படியாக இருப்பதை எடுத்துரைத்து அதை ஆராய வேண்டி அதற்கு மாவட்ட ஆட்சியரின் உதவியை நாட எத்தனித்திருப்பதை வெளிப்படுத்தினேன்.
உடனே அவர் அதற்கு அவசியமில்லை என அவரே கவனித்துக் கொள்வதாக உறுதி கூறினார். அதன் படி முதலில் அந்த வாகன ஓட்டுநரைக் கண்டுபிடித்து விசாரிக்க ஏற்பாடு செய்தார்.
பின்னர் நாங்கள் புறப்படுவதைக் கயல்விழி தடுத்து மேலும் இரண்டு நாட்கள் தங்கும் படி வற்புறுத்த நான் செய்ய வேண்டிய வேலைகளை நினைவுகூர்ந்து நீண்ட நேர உரையாடலுக்குப் பின் நான் இனி அடிக்கடி அங்கு வருவேனென அவரைச் சமாதானப்படுத்திப் புறப்பட்டோம்.
நாங்கள் வீட்டை அடையச் சரியாக அதே சமயத்தில் பண்ணையிலிருந்து வீடு திரும்பிய ஷீலா அத்தை முகம் மலர்ந்து வரவேற்றவர் பானு வண்டி ஓட்டுவதைக் கண்டு வியந்தாள். வீட்டில் உள்ள மற்றவர்களையும் அழைத்துப் பறைசாற்றினாள். சியாமளா அவளைத் தொடர்ந்து என் சித்தி அவருடன் சாந்தினியும் வந்து பார்த்து விவரம் அறிந்து வழக்கமான புகழ்ந்து துதி பாடி வீட்டுக்குள் நுழைந்த பின்னரும் தொடர்ந்தனர். இடையே சாந்தினியுடன் அறிமுகம் செய்து கொண்டோம்.
வீட்டில் அனைவரும் வெகு பரபரப்பாகச் சுற்றி வந்தனர். பானு வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டதை மிகப் பெருமிதத்துடன் விவரித்துக் கொண்டிருக்க அனைவரும் அந்தக் கதையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
நான் மெல்ல விலகிச் சென்று தொலைப்பேசியை எடுத்து அனிதாவைத் தொடர்பு கொள்ள முயல அதேசமயம் என்னைப் பின் தொடர்ந்த சியாமளா என்னருகே வந்து என் கைகளைப் பிடித்து அன்போடு என்னை நலம் விசாரிக்க அதைக் கவனித்த சாந்தினி மெல்ல எங்களை அணுகி சற்றே ஜாடைமாடையாகக் கண்டித்த வண்ணம், "அட இதென்ன புதுப்பழக்கம் கையைத்தொட்டுக் குசலம் விசாரிக்கிறது! பார்த்துப் பார்த்து."
சியாமளா, "உனக்கென்னடி நோவுது நான் என்ன உன்னை மாதிரியா கேவலமா... அப்புறம் என் வாயில அசிங்கசிங்கமா வந்துடும் மரியாதையா போயிடு."
சாந்தினி, "அட ரொம்ப ஆடாத." சொல்லி விலகினாள்.
"அட இதென்ன பொறுமையின் சிகரம் சியாமளாவா இப்படிக் கோபப்படுறது; அப்பப்பா இதுதான் நான் முதல் முறையாக இந்தக் கனிவான முகத்தில இவ்ளோ கோபத்தைப் பாக்குறேன். சாந்தினி சொன்னதே நீ வழக்கத்துக்கு மாறாக நடந்துக்குறதுன்னுதானே; நீ கொஞ்சம் பொறுமையா கோபப்படாமல் 'ஆமாம் அப்படித்தான் உனக்கென்னன்னு' சாதாரணமாகச் சொல்லிவிட்டு விடலாமே; இவ்ளோ கோபம் வேண்டாம் செல்லம்."
அதேசமயம் எங்களை நோக்கி வந்த பானு, "என்ன பிரிந்த ஜோடி ஒரே கொஞ்சலா?" எனக் கேலி செய்த வண்ணம் சியாமளாவின் இடுப்பில் நன்றாக இடித்த படி கொஞ்சலாகக் கேலி செய்ய
சியாமளா, "ஹாயெம்மா! என்னாடி இப்படி இடிக்குறே; ஹுக்கும் அதுதான் நீ தள்ளிக்கிட்டு போயிட்டே ரெண்டு நாளாச்சி இப்போதான் கொஞ்சம் பேசலாம்னா அதுக்குள்ள அந்தத் தடிமாடு வந்து கையைத் தொட்டு பேசக்கூடாதுன்னு கடுப்படிச்சிட்டு போவுது அடுத்து நீ,"
பானு உடனே குறுக்கிட்டு, "ஹான் என்ன வந்திச்சாம் அவளுக்கு! இவளை மாதிரியா கொஞ்சம் கூட வெக்கமில்லாமல் எல்லார் முன்னாடியும்."
நான் குறுக்கிட்டு பானுவின் வாயைப் பொத்தி, "கொஞ்சம் சும்மா இரு பானு எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊத்துற மாதிரி."
அதற்குள் அத்தையும் என் சித்தியும் சேர்ந்து கொண்டு விசாரிக்க நடந்ததை அறிந்து அத்தையும் சியாமளா/பானுவுடன் சேர்ந்து அதே தோரணையில், "எங்க அந்தக் கழுத? ஏய் குண்டு மாடு வா இங்க."
நான் அதிரடியாக இடை மறித்து, "அத்தை நீங்க இப்படிப் பேசக்கூடாது. கொஞ்சம் பொறுமையா இருங்க; அவுங்க ஒண்ணும் தப்பா சொல்லை; புதுசா இருக்குன்னு கேலி செய்தாங்க; அது ஒண்ணும் தப்பில்லையே." அதற்குள் சாந்தினியும் வந்து சேர்ந்தாள்.
சியாமளா, "ஒழுக்கத்தைப் பற்றி அவள் சொல்லக்கூடாது."
பானு, "டேய் உனக்கு அவளைப்பத்தி தெரியாமல்."
"பானு தயவுசெய்து சின்ன விஷயத்தை இப்படிப் பெரிசு பன்னாதீங்க; சரி ஒண்ணு கேக்குறேன்; இதற்கு முன்ன சியாமளா இப்படிப் பழக்கமில்லாத புது ஆம்பளைங்களோட கையைப் புடிசிருக்காங்களா? (அனைவரும் இல்லையென) ஆக இது அதிசயம் அதைப் பார்த்த தங்கச்சி கேலி செய்கிறது சகஜம்தானே?"
ஷீலா, "கேலி செய்ற மூஞ்சியப்பாரு; அதுக்கெல்லாம் ஒரு தகுதி இருக்கனும்; ஏதோ சொல்லுவாங்க அம்மனமா இருக்குறவன் கோமனம் கட்டினவனைப் பார்த்துச் சிரித்தானாம்' அது மாதிரி கதையா; மாமன் மேல ஏறிகினு கும்மாளம் அடிக்கிற கழுத... நீ."
நான் விரைந்து சென்று ஷீலா அத்தையின் வாயைப்பொத்தி, "சும்மா இருங்க அத்தை பெரியவங்க நீங்களும் சேர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊத்துற மாதிரி."
பானு, "நீ தப்பு செய்துட்டே சியாமு; உன் நிலைமையில் நான் இருந்திருந்தால்,"
ஷீலா அத்தை குறுக்கிட்டு, "பளார்னு ஒண்ணு வெச்சிருப்பியா?" சொல்லிச் சிரிக்க
பானு, "ஹூம் அது எதுக்கு அதைவிட இப்படி என் செல்லத்தைக் கட்டிக்கிட்டு (சொல்லி உடனே செய்து காட்டும் விதமாக என்னை இறுகக்கட்டி அணைத்து) என் இஷ்டம் நான் கட்டிக்குவேன் உனக்கென்னடின்னு செய்து காட்டனும்; அப்போதான் அவள் கொழுப்படங்கும்."
நான் உடனே அதை நகைச்சுவையாக்கி, "ஐய்யொ என்னை இந்தப்பொன்னு கற்பழிக்குறா; யாராவது வந்து காப்பாற்றுங்கள்." என நடித்து கேலி செய்ய அனைவரும் சிரித்து அந்தப் பிரச்சினையை மறந்தனர்.
நான் தொடர்ந்து தொலைப்பேசியில் அனிதாவைத் தொடர்பு கொள்ள
உடனே என் சித்தி வந்து, "வந்தும் வராததுமா அதுக்குள்ள யாருக்குடா போன் செய்ற?"
ஷீலா, "வேற யாரு அனிதாதான்."
"Hey Annie..." முழுமையாக ஆங்கிலத்தில் வெகு சுவாரசியமாகத் தொடர்ந்தேன்
ஷீலா, "நான் சொல்லலை; அட விடு லஷ்மி."
பானு, "ஆமாக்கா தம்பிய கொஞ்சம் சுதந்திரமா பேச விடுக்கா."
அனிதா இரவு உணவுக்கு அவளுடன் சேர்ந்து கொள்ள அழைக்க நான் அது முறையாகாது இங்குச் சியாமு, பானு, அத்தை ஷீலா என இத்தனை பேரையும் விட்டுவிட்டு அவளுடன் இணைவது சரியான இங்கிதம் இல்லை எனவே நான் இங்கே பாதி உண்டு மீதியை அங்கு வந்து தொடர இணங்கினேன்.
சாந்தினி நான் பேசுவதை முழுவதும் கவனித்துக் கொண்டிருப்பதை இடையிடையே கவனித்த நான் மறைமுகமாக அவள் கவனிப்பதை அனிதாவிற்குத் தெரியப்படுத்த அவளோ 'அடக்கடவுளே அடுத்தது தயாராகுதா?' எனக் கேலியாகக் கேள்வி எழுப்பினாள்.
நான் அதற்குச் சாத்தியமில்லை எனவும் அதற்குக் காரணம் அவள் திருமணம் நிச்சயிக்கப் பட்டவள் என வாதிட; அனிதாவோ நான் குறிப்பிடும் சாந்தினியின் செய்கைகள்/அறிகுறிகள் நிச்சயமாக அவளும் என்னால் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் திடமாக வாதிட்டு கேலி செய்தாள்.
நீண்ட நேரம் பேசி முடித்ததும் என்னை அணுகிய பானு, "அடேங்கப்பா இவ்ளோ நேரம் தேவையா அதுக்கு பதிலா ஒரு எட்டு எட்டிப்போயி நேர்ல பார்த்து அன்பா அணைத்து ஒரு நாலு வார்த்தை பேசிட்டு வரலாமில்ல?"
"அனிதா என்னை அவங்க கூடச் சாப்பிடக் கூப்புடுறா."
பானு, "ஹுக்கும் போச்சிடா அப்போ எங்க கூடச் சாப்பிடப் போவதில்லையா?"
அதைக்கெட்ட அத்தை வந்து, "என்ன தம்பி இங்க சாப்பிடலையா?"
"ச்சேச்சே நான் அப்படிப் பட்டவனா?"
பானு, "அப்போ அனிதா கதை அம்பேலா?"
மீண்டும் "ச்சேச்சே நான் அப்படிப் பட்டவனா?"
பானுவும் அத்தையும் வியந்து நோக்கி 'அப்படீன்னா?'
சியாமளா, "நீங்க எல்லாம் அவரைப் புரிஞ்சிகிட்டது அவ்ளோதான்; எனக்குத் தெரியும் அவர் இங்கேயும் சாப்பிடுவார் அங்கேயும் சாப்பிடுவார்; அப்படித்தானே."
"கிட்டத்தட்ட நீ சொல்லுற மாதிரிதான்."
ஷீலா, "உன்னைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு கொஞ்சம் பரிதாபமாவும் இருக்கு தம்பி; அவனவன் ஒரு பொன்னை சமாளிக்குறதுக்கே படாத பாடு படுறாங்க... ஆனால் நீ... இல்லை நீ பெரிய ஆளுப்பா உனக்கு இதெல்லாம் தூசிதான்."
தொடரும்