Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 07: தண்டனையா!! மன்னிப்பா!!
இரவு உணவை முதல் பாதியை இங்கு முடித்து அடுத்த பாகத்திற்கு அனிதா வீட்டுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து நடந்த முழுக்கதையையும் இருவருக்கும் விவரிக்க இருவரும் கேட்டு வியந்து அதிர்ந்தனர். ஜெயா அத்தையும் சில விவரங்களைத் தெரிவித்து உறுதி செய்தனர் முக்கியமாக
1. அவர் அறிந்தவரை மாமா அவர் சின்ன அக்காவுடன் (சகுந்தலா தற்போதைய மாமியார்) மிக நெருக்கம்/அவர் பேச்சைத் தட்டமாட்டார்.
2. சரோஜினியின் மரணத்தில் சந்தேகம்; அப்போது அவர் இந்தியாவில் இல்லை ஆனால் மாரடைப்பு எனக் கேள்விப்பட ஏதோ முரண்பாடு எனச் சந்தேகப் பட்டார்.
3. மல்லிகா/சரோஜினியின் பெற்றோர் மரணம் நிச்சயமாகக் கொலை ஏற்பாடு என அவரும் தீவிரமாக நம்பினார். எனவே நான் அதை ஆராய முடிவு செய்ததை வரவேற்றார்.
4. இந்த முடிவுகள் வெளிவரும் வரை பானு/மல்லிகாவின் நாடகம் தொடர வேண்டியது அவசியம் எனவும் என் திட்டம் முழுவதும் சரி எனப் புகழ்ந்து பாராட்டினார்.
நான், "இது யாரோ செய்த கொலைச் சதின்னு நிரூபணமானால்... அந்தக் கொலை செய்தவர் யார் அவருக்கு என்ன தண்டனை?"
அனிதா, "அதெல்லாம் சட்டப்படி அதிக பட்சமா எவ்ளோ முடியுமோ அவ்ளோ வாங்கிக் கொடுக்கனும்."
நான், "இல்லை அது யாருன்னு தெரிந்த பிறகே தண்டனையா/மன்னிப்பான்னு."
உடனே கொதித்தெழுந்த ஜெயா, "மன்னிப்புக்கு இடமே இல்லை."
நான், "அது யாராயிருந்தாலும் அதே நிலையா? அதாவது... சரி நான் சுத்தி வளைக்காமல் நேரடியாகச் சொல்லுகிறேன். இப்போது இருக்குற நிலையில் அது குடும்பத்து ஆள் யாரோ செய்த சதி. அப்படியென்றால் சந்தேகப்படக்கூடிய நபர்கள் ஒண்ணு மாமா, அடுத்தது அவர் அக்கா (அதாவது ஷீலா அத்தையின் தாயார்) அல்லது இரண்டு பேரும் சேர்ந்து; இல்லை வேற யாராவது செய்திருக்க வாய்ப்பு இருக்கா? தெரியவில்லை.
ஒரு வேளை அது மாமாவாக இருந்தால்... நினைக்கவே மோசமா இருக்கு. அதாவது எந்த முடிவும் எடுக்க முடியலை; தலை சுத்துது; ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம் மன்னிப்புதான் (இருவரும் அதிர்ச்சியுடன் நோக்க); சரி அவருக்குத் தண்டனை கொடுக்கப் பாதிப்பு மல்லிகா, ஷீலா, பானு, சியாமளா மற்றும் சாந்தினி நடுத்தெருவில் அல்லது ஆக எல்லாரும் தனியாக வாழ்வது. அதில் எத்தனை பேர் அதை விரும்புவார்கள் அல்லது மாற்று யோசனை; அப்பப்பா தலை சுத்துது.
ஒரு வேளை அதைச் செய்தவர் ஷீலா அத்தையின் தாயார் என இருந்தால் ஷீலா அத்தை மனம் வேதனை அடுத்து அவர் அதை எப்படித் தாங்குவார்? மாமாவின் செயல் எப்படி இருக்கும் அவருக்கு மிகவும் பிடித்த அக்கா இப்படிச் சதி செய்ய அதை அவர் எப்படி எதிர் கொள்வார்/கையாளுவார்? சாந்தினியின் திருமணம் தடை.
இருவரும் வாயடைத்து நின்றனர்
ஜெயா, "ஐயோ எனக்குத் தலை சுத்துது... பேசாம எதுவும் செய்யாமல்.... அதாவது இதைப்பற்றி உண்மையைக் கிளறாமல்."
நான், "அதுதான் அத்தை நானும் நினைத்தேன் ஆனால் அந்த நிலையைக் கடந்து விட்டோம் ஹும் காலங்கடந்த எண்ணம்; அதனால்தான் சொன்னேன் தண்டனையா மன்னிப்பான்னு முடிவு செய்யவேண்டியது அதைச் செய்தவரைப் பொருத்து மாறுபடும்; சரி நாம இதைச் செய்தவர் யாருன்னு கண்டுபிடித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை."
ஏதோ யோசனையில் ஆழ்ந்த ஜெயா அத்தை மெல்ல, "ஆமாம் ரகு நான் கொஞ்சமும் யோசிக்கல; நல்ல வேலை நீ காலம் கடந்த சிந்தனைன்னாலும் இப்போதாவது அதைப்பற்றி யோசித்தோமே... எதற்கும் கொஞ்சம் நல்லா யோசித்து மெல்ல நிதாதனமா முடிவு செய்யலாம்." சொல்லி மிகுந்த மனக்குழப்பத்துடன் என்னை அணைத்தவர் ஆழ்ந்த சிந்தனையில் அப்படியே நீண்ட நேரம் தொடர்ந்தார்.
மெல்ல அவரை விலக்கி, "நிறைய யோசிக்காதீர்கள் அத்தை விடுங்கள் நான் பார்த்துக்குறேன். எதற்கும் அத்தை மாமா இரண்டு பேர் கிட்டேயும் தனித்தனியா பேசி ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பார்க்கிறேன். அநேகமாகக் காலம் தாழ்த்தாமல் நாளைக்கே மாமாவைச் சந்தித்துப் பேசுவது நல்லதுன்னு தோனுது."
உடனே மாமாவிடம் தொடர்பு கொண்டு பேச நாளை முடியாது என நாளை மறுநாள் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டோம்.
பின்னர் கயல்விழி ஜெயா அத்தையைப் பற்றி விசாரித்ததைத் தெரியப்படுத்த அவரும் சந்தோஷப்பட்டு அவருடன் பேச விரும்பினார். உடனே நான் கயல்விழியைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் இருவரையும் உரையாட வைத்தேன்.
களமிறங்கினாள் கடைக்குட்டி
தனிமையில் அனிதாவுடன் பேசியபோது சாந்தினியின் நடவடிக்கைகளைப் பற்றிப் பேச
அனிதா, "நீ சொல்வதைப் பார்த்தால் அடுத்து அவளும் உன்னைப் பங்கு போட தயாராயிகிட்டிருக்காள்னு தோனுது."
நான், "அதற்கு வாய்ப்பே இல்லை அவள் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுத் தன் வருங்காலக் கணவனையே சுத்திச்சுத்தி வந்துகொண்டிருக்கிறதாகத் தகவல். அதனால்தான் இத்தனை நாளும் அங்கேயே சுத்திக்கிட்டு இருந்தவள் இப்பத்தான் வந்திருக்கிறாள். எனக்குத் தெரிந்தவரை அவளுக்கு என் மீது நல்ல அபிப்பிராயம் ஏதுமில்லை அதனால் அவள் என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்னுதான் தோனுது."
அனிதா, "அப்படீன்னா அவளுக்கு உன்னுடன் காமம் அனுபவிக்க ஆசைன்னு நினைக்கிறேன்."
நான், "அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை காரணம் அவள் காதலன் என்னைவிட நல்ல ஆணழகன்."
அனிதா, "ஏதோ குழப்புது; சரி விடு அப்படிச் சந்தர்ப்பம் கிடைத்தால் நீ நல்லா அனுபவி."
நான், "நீ ரொம்ப வித்தியாசமானவள்; நானோ ஏற்கனவே இப்படிப் பல பொன்னுங்க மனதைக் கவர்ந்து மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்; ஆனால் இந்தப் பொன்னு சாந்தினிதான் மற்ற எல்லாரையும் விட வித்தியாசமா என்னோடு கனிவா நடந்துகொள்ளாமல் சாதாரணமாக நடந்துக்குறான்னு அதனால் காமமில்லாத ஒரு தோழியாக இருப்பான்னு எனக்குத் தோனுது. அது கிடக்கட்டும் அவளே என்னைச் சுத்திச்சுத்தி வந்தாலும் நீ அவளை விட்டு என்னை விலகி இருக்கச் சொல்லாமல் அனுபவின்னு என்னை ஊக்குவிக்கிறது ஏன்? இது தெரிந்தால் சியாமளாவும் பானுவும் நிச்சயமா உன்னை வெறுக்க ஆரம்பிச்சிடுவாங்க."
அனிதா, "பானுவும் சரி சியாமளாவும் சரி கொஞ்சம் கொஞ்சமா முழுசா என்னைப் போல மாறிடுவாங்க; அதனால நீ கவலைப்படாமல் அனுபவி."
நான், "இந்த விஷயத்துல எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா என் மேலையே கோபம் வெறுப்பு வருது ஆனால் நீயே என்னைக் கெடுத்துடுவ போலிருக்கே."
அனிதா, "நான் உன்னை உக்குவிக்கலை ஆனால் நீ அதைத் தப்புன்னு குற்ற உணர்ச்சியோடு செய்யாதேன்னு சொல்லுறேன்; என் மனதுக்கு அப்படித் தோனலை; உன் மனதுக்கு அப்படித் தோனுதுன்னா அதைச் செய்யாதே."
அவளை இறுக அணைத்து, "எனக்கு நீ கிடைத்தது நான் செய்த பூர்வஜென்ம புண்ணியம்." சொல்லி மண்டியிட்டு அவள் வயிற்றில் முத்தமிட்டு என்னையும் மீறிக் கண்கலங்கினேன்.
அனிதா, "எனக்கும் அதேதான்; நீ அந்தக் கயல்விழியைத் திருப்திப் படுத்தினதைக் கேட்டதும் எனக்கு எவ்ளோ நிம்மதியா இருந்தது தெரியுமா? பாவம் இந்தப் பின் தங்கிய சமுதாயத்தில எத்தனை பெண்கள் இப்படித் தவிக்குறாங்களோ தெரியலை! நீ அவுங்களை அனுபவிக்கும் போதும் இப்படிச் சங்கடத்தோடுதான் செய்தியா?"
நான், "இல்லை இல்லை அது ஏனோ தெரியலை எனக்கு அப்படி ஒரு எண்ணம் கொஞ்சமும் வரலை இப்பவும் இல்லை."
அனிதா, "அப்பாடா அந்தக் கடவுளுக்கு நன்றி; நீ சொன்ன மாதிரி அடிக்கடி போயி அவுங்களைச் சந்தோஷப்படுத்து... எல்லா விதத்துலையும்." சொல்லி கண் சிமிட்டினாள்.
நான், "அதுக்கு இந்த இளவரசி எனக்குக் கருணை காட்டனும்." சொல்லி மெல்ல என் கைகளால் அவள் புட்டத்தைப் பிசையப் புரிந்தவளாய்
அனிதா, "அட லூசுப்பையா நீ எப்படா செய்வேன்னு ஏங்கிக்கிட்டிருக்கேன் நான் நீ என்னடான்னா என்னை அனுமதி கேக்குறே; நீ இனிமேல் என்னை அனுமதியெல்லாம் கேக்கக்கூடாது. நான் உன் சொத்து முழு உரிமையோடு நீ எடுத்துக்கோ இப்போ முத... ஹாவ்ச் ம்ம்ம்ம் அப்படித்தான்." அவள் மேலாடையை விலக்க வழக்கம் போல் உள்ளாடை ஏதுமின்றி இருந்த அந்த வெண்ணிற கூதியைக் கவ்வ வழிந்த தேனை முழுவதும் பருக சற்றே பொறுத்தவள், "ஏய் எனக்கு அது போதும் சீக்கிரமா தம்பியை விடு."
ஆம் பொறுமையாக அனுபவிக்க அவகாசமில்லை விரைவாக ஒரு கலவி இன்பம் செவ்வனே செய்து முடித்தோம், பின்னர் என் இரவு உணவின் இரண்டாம் பகுதியைத் தொடர
மனம் கவர்ந்த மங்கையரை மேம்படுத்தல்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கமலாவைச் சந்திக்க, "வாங்கக் கமலா எப்படி?"
அவள் கண்களில் நீர் ததும்ப அவள் என்னைக் கட்டிக் கொண்டவள் பின் உடனடியாகச் சற்றே சங்கடத்துடன் விலகி, "நல்லா இருக்கேன் சார் நீங்க உட்காந்து சாப்பிடுங்க."
நான், "உனக்கு ஒரு சின்ன வேலை வெச்சிருக்கேன் சரி சாப்பிட்டிக்கிட்டே பேசுவோம்." சிறிதளவு உண்டு பின்னர்ப் பச்சை கீரை இலைகளுடன் பழங்கள் கலந்த கலவை (Salad) எடுத்துக் கொண்டு ஒரு கோப்பை ஒயினுடன் தொடர்ந்தேன். கமலாவை நோக்கி, "உனக்கு இரண்டு மாணவர்களை அறிமுகம் செய்து வைக்கப்போறேன்; அவுங்க இரண்டு பேரும் படிப்பறிவில் இளையவர்கள் ஆனால் வயதில் நம் வயதுதான்; அவுங்க இரண்டு பேருமே எட்டாவது வரை படிச்சவங்க அவுங்களை அடுத்த நிலைக்கு உயர்த்துவதுதான் உனக்கு நான் கொடுக்கும் சின்ன வேலை; அது ஒரு விதத்தில் வேலை ஒரு விதத்தில் உன் பயிற்சிக்கு ஒரு சவால்/புதுப்பிப்பு-ன்னும் சொல்லலாம். அனிதா/அத்தை இருவரையும் நோக்கி, "பானு, சியாமளா ரெண்டு பேருக்கும் கொஞ்சம் படிப்பு சொல்லிக் கொடுக்கலாம்னு நான் நினைக்குறேன்; உங்கள் அபிப்பிராயம்."
உடனே என்னை எழுந்து கட்டிக்கொண்டு உற்சாகப்படுத்திப் பாராட்டினாள் அனிதா; அத்தையும் அது மிகச் சிறந்த நல்ல யோசனை எனப் புகழாரம் சூட்டினார்.
கமலா எதுவும் சொல்லாமல் சற்றே தயங்க, "என்ன ஆசிரியை உங்கள் முடிவுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்; மாட்டேன் சொல்லிடாதீங்க ஆசிரியை."
கமலா, "ஐயோ என்ன சார் இப்படிச் சொல்றீங்க; நீங்க என்ன சொன்னாலும் செய்வேன் சார்; ஆனால் அவுங்க இரண்டு பேரும் எனக்கு எஜமானியம்மாங்க; நம்ம வயசு வேற; அவுங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது சரிப்பட்டு வருமான்னு பயமா இருக்கு சார்."
நான், "கமலா நான் உனக்கு விடும் சவால் அதாவது உனக்கும் பயிற்சி அவர்களுக்கும் பயிற்சி; சரி அதன் முதல் படியாக நீ என்னை இப்படி ரொம்ப மரியாதையாக 'ஐயா/சார்'-னு கூப்பிடாமல் என்னைப் பெயரிட்டுக் கூப்பிடு."
உடனே தன்னையும் மீறி அனிச்சையாய், "ஹாங் ஐயோ உங்களைப்போய் ஹூஹும் என்னால முடியவே முடியாது." என அதிர்ந்து அலறியவள் தன் வாயில் கை வைத்து மூடிய வண்ணம் பயந்து ஓடியவள் ஜெயா அத்தையை அணுகி அவர் முன் மண்டியிட்டு தன் இரு கைகளையும் கூப்பிக் கண் கலங்கிய நிலையில், "அம்மா அம்மா தயவுசெய்து நீங்க ஐயாவுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கம்மா; என் மனசில் தெய்வமா வைத்திருக்கிறவரைப் போய்ப் பேர் சொல்லிக் கூப்பிடச் சொல்லுறாரு."
தொடரும்