பாகம் 09: மனம் கவர் மங்கையர் மேம்பட

Story Info
கடைக்குட்டியும் கலத்தில் இறங்குவாளா?
1.2k words
0
12
00

Part 95 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 09: மனம் கவர்ந்த மங்கையர் மேம்படட்டும்

நான் மேலும் சிறிது நேரம் கமலாவிடமும் ஜெயா அத்தையுடனும் உரையாடி ஏற்பாடு செய்தேன். பின்னர்ச் சற்று நேரத்தில் இந்த ஏற்பாடுகளை அறியாத பானு முதல் முறையாக என்னுடன் பண்ணைத் தோட்டத்திற்குச் செல்ல விரும்பி அத்தையை வற்புறுத்த; அத்தை வியந்தவாறு என்னை நோக்க நான் சரியெனச் சொல்லுமாறு சைகை செய்ய; அத்தையும் சம்மதிக்க; பானு உற்சாகமாகப் புறப்பட ஆயத்தமாக அதற்குள் சியாமளா மிக ரகசியமாகப் பானுவை அணுகி, "ஏய் நீதான் இரண்டு நாள் முழுக்க அவரைத் தள்ளிக்கிட்டு போயிட்டே அது பத்தாதுன்னு இன்றைக்கும் நீயேவா கொஞ்சம் மத்தவங்களுக்கும் விட்டுக்குடுடி."

பானு, "ஆமா பேருக்குத்தான் இரண்டு நாளு ஆனால் ஒண்ணும்... அதை ஏன் கேக்குற எல்லாம் என் தலைவிதி... சரி விடு நீயும் பாவம்தான்... ஒண்ணு செய்லாமா நீயும் வா நாம மூனு பேரும்."

உடனடியாக சலித்துக் கொண்டபடி குறுக்கிட்ட சியாமளா, "சரிசரி வேண்டாம் நீயே கூட்டிட்டுப் போ."

பானு, "ஓஹோ அப்படியா விஷயம்... தனியா முழுசும் (தன் கையால் முழம் நீளத்தைச் சுட்டும் விதமாக அதாவது தம்பியின் நீளத்தை மறைமுகமாக சுட்டி) வேணுமாக்கும்? ம்ம்?" பானு சாடைமாடையாக தன் கையால் தம்பியைக் குறிப்பால் உணர்த்த

அதிரடியாக அவள் வாயைப் பொத்திய சியாமளா, "ஏய் லூசே வெட்கங்கெட்டவளே; கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் அசிங்கமா; நான் ஒண்ணும் அப்படிபட்டவளில்ல அவரும் அப்படிப்பட்டவரில்ல; கல்யாணத்துக்கு முன்ன ச்சீச்சீ."

நான் சற்றே தலையிட்டு என் கருத்தைச் சொல்ல நினைக்க அவர்களை நெருங்க அப்போதுதான் கவனித்தேன் அங்குச் சாந்தினி மறைந்திருந்து சியாமளாவும் பானுவும் ரகசியமாகப் பேசுவதை ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் சற்று முன்னரே குளித்துவிட்டு வெறும் பாவாடையை மார்பில் கட்டியபடி ஆடை மாற்றச் சென்று கொண்டிருந்தவள் இவர்கள் உரையாடலால் ஈர்க்கப்பட்டுத் தூண் மறைவில் நின்றபடி ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். நான் அணுகுவதைக் கவனித்தவள் உடனே விரைந்து மறைந்தாள்.

பின்னர் அவர்களை அணுகிய நான், "என் அழகு தேவதைகளே! உங்கள் இரண்டு பேருக்கும் நான் வேற திட்டம் வைத்திருக்கிறேன் அதாவது உங்கள் இரண்டு பேரையும் படிக்க வைக்கப்போகிறேன்; என் திட்டத்தை விளக்கினேன்.

உங்களைப் படிக்க வைத்து இரண்டு பேரையும் முதல் கட்டமா SSLC அடுத்து +2 படிக்க வைக்கவேண்டும். இருவரும் பேரதிர்ச்சி அடைந்து திருதிருவென முழிக்க நான் மிகப் பொறுமையாக விளக்கிய பின் ஒப்புக்கொண்டனர்.

முக்கியமாக என் அம்மாவுக்குப் படிக்காதவர்களைப் பிடிக்கவே பிடிக்காது அதனால் எங்கள் திருமணம் தடைப்படலாம் எனவே குறைந்த பட்சமாக +2 முடித்த நிலையில் என் அம்மாவைச் சமாதானப் படுத்த முடியும் எனச் சொன்னதும் இருவரும் முழுமனதாகச் சம்மதித்தனர்.

பின்னர் ஷீலா அத்தை மற்றும் என் சித்தி ஆகிய இருவருக்கும் விவரம் தெரிவித்து உடனடியாகச் செயல் படுத்த தொடங்கினேன். அதன்படி சியாமளா மற்றும் பானு இருவரையும் ஜெயா அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று கமலாவை அறிமுகப்படுத்திப் படிப்புத் திட்டத்தைச் செயல் படுத்தினோம்.

பின்னர் மதியம் உணவு முடித்துப் பண்ணைக்குச் செல்ல விரும்பி நான் புறப்படப் பானு, சியாமளா மற்றும் அத்தை என யாரும் என்னுடன் சேர்ந்து பண்ணைக்குச் செல்ல அதிக விருப்பம் காட்டவில்லை. அதற்குக் காரணம் அங்குச் சாந்தினி இருப்பது எனத் தெளிவானது.

நோட்டமிட்டாள் கடைக்குட்டி

நான் பண்ணைக்குச் சென்று சாந்தினிக்கு மதிய உணவைக் கொடுத்துவிட்டு நான் வழக்கம் போல் கிணற்றில் நீந்தி விளையாடினேன். நான் நீச்சல் விளையாட்டைத் தொடர சாந்தினி சிறிது நேரம் கிணற்றின் மேல் புறத்தில் நின்றவாறே நோட்டமிட்டவள் என் நீச்சல் சற்றே நேர்த்தியாக இருப்பதாக ஏதோ சம்பிரதாய/கௌரவ முறையில் பாராட்டிவிட்டுச் சென்றாள்.

ஏனோ எனக்கும் அவளுடன் மற்ற பெண்களிடம் ஏற்பட்ட ஈர்ப்பு ஏற்படவில்லை; உண்மையில் சாந்தினி பானு சியாமளா ஆகிய இருவரையும் ஒப்பிட மிக அழகானவள்/கவர்ச்சியானவள்.

சற்றே பருமனான உடல்வாகு அதிலும் அவள் பின்னழகு மிகவும் பருத்த பெரிய உருண்டை வடிவில் மிகக் கவர்ச்சியாக எந்த ஆணையும் ஈர்க்கக்கூடியது.

என்ன இருந்தாலும் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டவள் என்பதாலோ என்னவோ எனக்கு அவள் மீது அதிக ஈடுபாடு கொள்ள முடியவில்லை; அநேகமாக அவளுக்கும் அதே நிலைப்பாடு என்பது என் ஊகம்.

நீண்ட நேரம் கழித்து மீண்டும் என்னை அணுகியவள் நான் இப்படித் தொடர்ந்து நீந்துவது சளிப்பு ஏற்படவில்லையா எனக் கேட்டு வியந்து விட்டுப் பின்னர்த் தான் சென்று தூங்கப் போவதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றாள்.

அதைத்தொடர்ந்து நீண்ட நேர நீச்சலுக்குப் பின் நான் சற்றே ஓய்வெடுத்து பின்னர் ஊஞ்சலில் பொழுதைக்கழிக்க மெல்ல சாந்தினியும் வந்து இணைந்து கொண்டாள். என்னைப்பற்றி என் குடும்பம், என் படிப்பு என் சில விவரங்களைக் கேட்டறிந்தாள்.

எங்கள் சொத்து விவரங்களைக் கேட்க எங்களுக்குச் சொந்த வீட்டைத்தவிர வேறு எதுவுமில்லையெனத் தெரிந்ததும் அப்படியானால் வாழ்க்கை நடத்த மாத வருமானம் மட்டுமே ஒரே வருவாய் ஆதாரம் என்பது மிக வரவேற்கத்தக்கதல்ல எனப் பொருள்படப் பேசினாள்.

பிறகு மெல்ல என் திருமண வாழ்கையைப் பற்றிப் பேச, நான் ஓரளவு என் குடும்ப வளர்ப்பு முறையைத் தேவையான அளவு விளக்கி அதனால் எனக்கு அதிகமாகப் பெண்களுடன் பழக வாய்ப்பு கிட்டியதில்லை என்பதையும் அதேசமயம் நான் இங்குப் பழகின பெண்கள் பெரும்பாலும் மிக நட்புள்ளம், கனிவு, அன்பு, கண்ணியம், பணிவு போன்ற நற்குணங்களுடன் இருப்பது என் மனதை மிகவும் ஈர்க்கிறதென விவரித்தேன்.

அவளும் சற்றே புரிந்தவளாய், "அப்படீன்னா உங்கள் மனதைக் கவர்ந்த பெண் இந்த ஊர்லதான் இருக்காங்களா?" எனச் சற்றே நாகரீகமாகக் கேட்டாள்.

"அதுதான் சொன்னேனே ஒருத்தரா இரண்டு பேரா பார்க்குற/பழகுற எல்லாருமே அப்படித்தான் இருக்காங்க எனக்கு என்னையே நம்ப முடியலை."

"நான் சொல்ல வந்தது; நீங்கக் கல்யாணம் செய்துக்க விரும்பும் அளவுக்கு உங்கள் மனதில் இடம் புடிச்சவங்க."

"நானும் அதைத்தான் சொல்றேன் எனக்கு எல்லாரையுமே ரொம்பப் புடிக்குது."

"அது சரி அப்போ எல்லாரையும் கல்யாணம் செய்துக்கோங்க." எனக் கேலியாகச் சொல்லிச் சிரிக்க

"அதுதான் நடக்கும் போலிருக்கு அதனால எனக்குக் கொஞ்சம் கவலையா இருக்கு."

"அதுக்கெதுக்குக் கவலைப்படனும் எல்லாரையும் கல்யாணம் செய்து சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே."

"அதெப்படி முடியும் என் வருமானத்தில் ஒரு குடும்பத்தைக் கட்டிக்காக்கிறதே சிரமமா இருக்கும் இதுல இப்படிப் பல பொன்னுங்களைக் கல்யாணம் செய்து அவர்களையெல்லாம் மனம் குறைவில்லாமல் சந்தோஷமா வெச்சிக்குறது அவ்ளோ சுலபமான காரியமில்லையே; அதுதான் கவலையா இருக்கு."

"அட பரவாயில்லையே கல்யாணத்துக்கு முன்னையே வருங்கால மனைவியைச் சந்தோஷப்படுத்த நினைக்குறீங்களே அதுவே பெரிய விஷயம்; ஏன்னா நிறைய ஆம்பளைங்க கல்யாணப் பொன்னு என்ன சொத்துக் கொண்டு வருவா அதை வெச்சி எப்படி எந்த வேலையும் செய்யாமலே சோம்பேறியா காலம் கழிக்கலாம்னு இருக்குறாங்க; சரி அந்த அளவுக்கு உங்கள் மனதைக் கவர்ந்த பொன்னு... இல்லை பொன்னுங்க யார் யாருன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? உங்களுக்குச் சொல்ல விருப்பம்னா சொல்லுங்கள்."

"முதல்ல உங்கள் கண்ணியமான அணுகு முறைக்கு என் நன்றி; நான் ஒரு பெண்ணைப் பற்றி மட்டும் சொல்லுறேன்; அநேகமாக அது இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கும் அதுதான் அனிதா; மருத்துவர் ஜெயா அத்தையின் மகள்."

"ஓஹ் ஆமா நேத்துலேர்ந்து நீங்க அதிக நேரம் தொலைப்பேசியில் பேசிக்கிட்டிருந்தீங்க; ஆனால் நான் அவுங்களைப் பார்த்ததே இல்லை."

"ஆமாம் அனிதா நீண்ட நாளுக்குப்பிறகு அவுங்க அம்மாவைப் பார்க்க வந்திருக்கா; அவளும் மருத்துவம் படிச்சிருக்கா."

"என்ன அவுங்க டாக்டரா? அப்போ... உங்களை விட வயசில் பெரிய பொன்னா?" மிகுந்த ஆச்சரிய அதிர்ச்சியுடன் வினவினாள்

"ஆமாம் என்னை விட மூனு வயசு பெரியவள்." இதைக்கேட்டதும் உடனே சிரித்து

"இதென்ன கூத்து உங்களைவிட வயசில் பெரிய பொன்னையா கல்யாணம் செய்யப்போறீங்க; அது நடக்காதே அதெப்படி முடியும்?"

"ஏன் என்ன தவறு? ஏன் முடியாது அப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாதே! எங்க இரண்டு பேருக்கும் புடிச்சிருக்கு அதுதானே முக்கியம்?"

"அது சரிதான் ஆனால் அதெப்படி குடித்தனம் செய்யமுடியும்? ஆம்பளை தானே வயசில் மூத்தவராக இருக்கனும் அப்போதானே குடும்பத்தலைவனாக இருக்க முடியும்?"

"அப்படி ஒரு நிர்ப்பந்தமேதுமில்லை; ஒரு வித்தியாசமா எங்கள் குடும்பத்தில் குடும்பத்தலைவி இருந்துட்டு போகட்டுமே?"

"இதென்ன ரகு நீங்க சொல்றது ரொம்ப வேடிக்கையாக வினோதமாக இருக்கு அதெப்படி ஒரு குடும்பத்தில் பொன்னு வயசில் மூத்தவளாகக் குடும்பத்தலைவியாக; கேட்கவே சகிக்... மன்னிக்கனும் வாய் தவறி... கேட்கவே ஒரு மாதிரியா!!"

"பரவாயில்லை சாந்தினி; அதுல ஒண்ணும் தப்பில்லை."

"எது?"

"இரண்டும்; பெண் குடும்பத்தலைவியாக இருப்பது; அதைக்கேட்டு நீங்க உணர்ச்சிவசப்பட்டுச் சகித்துக் கொள்ள முடியாமல்."

"இல்லை இல்லை என் வாய் தவறி அப்படிச் சொல்லிவிட்டேன்; நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை."

"நீங்கப் பதற்றமாக இருக்குறீங்க; கொஞ்சம் நிதானமா பொறுமையா தளர்ச்சியா பேசுங்கள்; என்னால முழுசும் புரிஞ்சிக்க முடியுது; சரி நான் இதை உங்களுக்கு நல்லா புரிஞ்சிக்குற மாதிரி ஒரு சின்ன விளக்கம் சொல்லுறேன் கேளுங்கள்.

இப்போது குறிப்பிட்ட என் மனதைக்கவர்ந்த நான் என் மனதை பறிகொடுத்த பெண்களில் இன்னொரு பெண் என்னைவிட வயதில் மூத்தவர்; என் மேல ஆசைப்பட்டு ஆனால் அவுங்களும் உங்களைப் போலவே இந்தச் சமுதாயம் இப்படிக் கல்யாணம் செய்ய அணுமதிக்காதுன்னு தவறாகப் புரிந்து அதுக்காக அவுங்க செய்த முடிவு என்ன தெரியுமா? (என்ன எனக் கேள்வியாய் நோக்க) சொன்னால் நம்பவே மாட்டீங்க; அதுக்காக அவுங்க கல்யாணமே செய்துகொள்ளாமல் என் வீட்டு வேலைக்காரியாக இருக்க முடிவு செய்துட்டாங்க."

"ஹாங் என்ன? அப்படியொரு பைத்தியக்கார காதலா?"

"ஆமாம் இதில் நான் குறிப்பிட வந்தது... சரிசரி அது வேண்டாம்; ஒரு தர்க்கம் செய்யலாம் அதாவது ஒரு கணவன் மனைவி உறவில் ஆண் பெண் வயது எப்படி இருக்கவேண்டுமென்று ஏதாவது சட்டம்/வரைமுறை இருக்கிறதா?

"இல்லை."

"நம்மில் பலர் பின்பற்றும் முறை பெரும்பாலும் ஆண் வயதில் மூத்தவராகவும் பெண் வயதில் இளையவராகவும் இருக்கும் விதம்; இது உலகத்தில் பெரும்பாலோர் பின் பற்றும் முறை ஆனால் இதுதான் சரியான முறைன்னு எந்த வேத சாஸ்திரமும் சொல்லவில்லை.

இப்படி உலகளாவிய நிலையில் பெரும்பான்மையோர் பின் பற்றுவதற்குக் காரணம்/அனுகூலம் நிச்சயம் இருக்கும். அதையெல்லாம் நாம் தெரிந்து கருத்தில் கொண்டு முடிவெடுத்தால் பிரச்சினை இல்லை. பொதுவாகப் பெண்கள் ஆண்களைவிட மூன்றிலிருந்து ஐந்து வயது முன்னரே உடல் ரீதியாக முதிர்ச்சி அடைவது ஒரு காரணம்.

அடுத்து வாழ்க்கை முறை, பண்டைய கால வாழ்க்கை முறையில் ஆண் உழைத்து வருமானம் ஈட்டுவதையும் பெண் வீடு மற்றும் குழந்தை பராமரிப்புச் செயல்களைக் கவனித்துக் கொள்வதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது இது கணவன்/மனைவி வயதை முடிவு செய்வதில் நேரிடையாக எந்தத் தாக்கமும் ஏற்படுத்த வில்லையானாலும் மறைமுகமாக ஏற்படுத்தும்.

அதாவது ஒரு குடும்பத்தில் முடிவெடுக்க வேண்டியது ஒரு ஆள் என்ற நிலை தேவை என்பதைக் கருத்தில் கொள்ளும் போது கணவன்/மனைவி இருவரில் ஒருவர் தலைமை ஏற்க வேண்டியிருக்க அந்தப் பொறுப்புக்கு இந்த வயது வித்தியாசத்தை ஒரு சரியான காரணமாக உதவுமென உருவாக்கி இருக்கலாம். அதாவது வருமானம் ஈட்டுதல், மற்றும் உடல் பலம் ரீதியாகவும் ஆண் இந்தத் தலைமையை ஏற்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இதற்கு வயது வித்தியாசம் ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பது நிச்சயம். இதைத்தவிர வேறு எந்தத் தர்க்க ரீதியும் தென்படவில்லை. ஆக இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டால் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இந்த வயது வித்தியாசம் ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கவில்லை அதாவது மற்ற அனுகூலங்கள் மேம்படும் பட்சத்தில் அதை மாற்றி அமைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை பாதிப்புகளை விட அனுகூலங்களே அதிகம் எனும் பட்சத்தில் அதை மாற்றிக் கொள்வது நல்லதே.

அடுத்து இப்படி வயதில் மூத்த பெண்ணை மணந்து வாழ்ந்த ஒரு சில முன்னோடிகளும் இருக்கிறார்கள் இது ஒன்றும் யாரும் செய்யாத அனுமதிக்கப்படாத விஷயமில்லை.

உதாரணத்துக்கு நமது மகாத்மா காந்தி அவர் மனைவி கஸ்தூரி பாவை விட ஒரு வயது இளையவர்; அடுத்து இன்றைய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் மட்டைப்பந்து வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர் மனைவி அவரைவிட ஆறு வயது மூத்தவர்.." இப்படி பல தர்க்க விவாதங்கள் உரையாடல் தொடர்ந்தன.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous