பாகம் 10: மயக்கம் தெளிவு விருப்பம்

Story Info
கடைக்குட்டி பழகுகிறாள் பணிவாக; பானுவோ கர்வம் கொண்டாள்
1.1k words
0
10
00

Part 96 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 10: மயக்கம் தெளிவு விருப்பம்

முடிந்தவரை இருவரும் சேர்ந்து பழகினாலும் ஏனோ இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கவில்லை. இருவரும் தொடர்ந்து இடைவெளியைப் பராமரித்தே வந்தோம். மாலையில் வீடு திரும்பும் வழியில் நம் பிரதான நீர்ப் பாசன வாய்க்காலைக் கடக்கச் சட்டெனச் சற்றே புன்னகைத்த வண்ணம் அவள் கருத்தை அறிய விரும்பி, "இந்த வாய்க்கால் கடக்க வசதியா இருக்கா?"

"ஏன்.. ஓஹ் அது ரொம்ப நாளா உடைந்து இருந்ததே அதைச் சொல்லுறீங்களா?"

"ஆமா அந்தச் சமயத்தில் நீங்க எப்படி இதைக் கடந்தீங்க?"

"நான் அதிகமா/அடிக்கடி இந்தப் பண்ணைக்கு வரமாட்டேன் எங்க மாமா வந்தால் எப்பாவாவது வருவேன் பொதுவாகத் தண்ணியில இறங்கித்தான் கடக்கனும்; ஏன் நீங்க என்ன செய்வீங்க?"

"நீங்க சொல்றது நல்ல பாதுகாப்பான முறை ஆனால்.... உங்கள் கூட நான் இல்லை என்னைப்போல ஒரு அதிகப் பழக்கமில்லாத ஒரு வாலிபனென்று வெச்சிக்குவோம் அப்போ,"...

"புரிகிறது ம்ம்ம்ம் வந்து அது கொஞ்சம் இக்காட்டான நிலைதான்... (சற்றே தயங்கி பின் மெல்லச் சிரித்த வண்ணம்) ஓஹோ 'பதினாறு வயதினிலே' ஸ்ரீதேவி மாதிரி பாவாடையைத் தூக்குவேனா மாட்டேனான்னு தெரியனும் அவ்ளோதானே?"

"மன்னிக்கனும் நான் அந்த அர்த்தத்தில் கேட்கலை; சரி விடுங்கள் நாம அதைப்பத்தி பேசுகிறது அவ்ளோ சரியில்லை."

"அட உடனே கோச்சிக்காதீங்க."

"இல்லை இல்லை எனக்குக் கோபம் ஏதுமில்லை; நான் சும்மா நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை நினைத்து சிரிப்பு வந்தது அதைச் உங்ககிட்ட சொல்லி சிரிக்கலாம்னு,"

குறுக்கிட்ட "அது புரிந்துதான் நான் கிண்டலா கேட்டேன் ஆனால் அதுக்குள்ள நீங்க கோச்சிகுறீங்க."

"சரி நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்; வந்து இப்படி ஒரு மாற்றான் வாலிபன் கூட இருக்கும் போது அந்தச் சூழ்நிலையை நீங்க எப்படிச் சமாளிப்பீங்கன்னு கேட்க வந்தேன்."

"சரிசரி அது புரிகிறது; நான் சும்மா உங்களோட விளையாட்டா; ம்ம்ம் என்ன செய்யலாம்; நிலைமையச் சொல்லி கண்ணை மூடிக்கச் சொல்லிவிட்டு கொஞ்சம் கவனமா முடிந்தவரைக்கும்."

குறுக்கிட்ட "சரிசரி அதை ரொம்ப விளக்கமா சொல்ல வேண்டியதில்லை; நான் நடந்த விஷயத்துக்கு வருவோம்; முதல் நாள் உங்கள் சித்தி தாண்டி விழப்போய் அப்புறம் அதிர்ஷ்டவசமாக நான் பிடித்து நிறுத்தினேன். அடுத்து சியாமளா அந்தப் பக்கம் இருக்கிற செங்குத்தான மேட்டில் ஏறிப் போக முயற்சி செய்து அவுங்களும் விழப்போய்; நான் என்ன சொல்ல வந்தேன்னா; நான் அவ்ளோ பழக்கமில்லாதவனாக இருந்தாலும் இப்போது நீங்கச் சொன்ன மாதிரி நேரிடையாகப் பேசினால் பிரச்சினையைத் தீர்க்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிக்கலாம்."

அவளும் சிரித்த வண்ணம் மேலும் நடந்த முழு விவரத்தையும் கேட்டு நான் செய்ததை; குறிப்பாகச் சியாமளாவை முதுகோடு முதுகாகத் தூக்கிய விதத்தைப் பாராட்டினாள்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால்... பானு

அதற்குள் இருவரும் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டை அடைந்ததும் மீண்டும் பானுவும் சியாமளாவும் வழக்கத்திற்கு மாறாக அதிக அக்கரையுடன் கவனித்துக் கொண்டு என்னை விட்டு விலகாமல் ஒட்டிக்கொள்ள; ஷீலா அத்தையும் என் சித்தியும் சற்றே கேலி செய்யச் சியாமளா புரிந்து கொண்டு சற்றே அசடு வழிந்தாள்.

ஆனால் பானுவோ, "ஆமாம் ரகு எனக்கு ரொம்ப முக்கியம், என் உயிர்; அதனால நான் அப்படித்தான் கவனிச்சுக்குவேன், என் கண்ணுக்குள்ள வெச்சி பாத்துக்குவேன்; யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்; அதுக்கும் மேல என்னைக் கட்டுப்படுத்தினால் நான் வீட்டைவிட்டு ரகுவோட போய்டுவேன்." முற்றிலும் எதிர் பாராத விதமாக ஆவேசமாக இருவரையும் எதிர்த்து வாக்குவாதம் செய்தாள்.

அது ஓரளவு ஷீலா அத்தையின் மனதைப் பாதிக்கும் அளவுக்குச் செல்ல வேறு வழியின்றி நான் மறைமுகமாகத் தலையிட்டுக் கட்டுப்படுத்தினேன். ஷீலா அத்தை சற்றே மனம் வருந்தினார் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விளையாட்டு/தமாஷாக எடுத்துக்கொண்டதாக நடித்து மழுப்பினார்.

நான் பானுவைக் கண்டிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து உடனே அனிதாவைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை முழுமையாக ஆங்கிலத்தில் விளக்கி நான் பானுவுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரைகளை அனிதா மற்றும் ஜெயா அத்தை மூலமாகத் தொலைபேசி வழியாகப் பானுவைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினேன்.

பானு தொலைப்பேசியில் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் அவள் முகத்தில் சற்றே பயம் கலந்த வருத்தம் வெளிப்பட்டது. நான் அவளைச் சற்றும் கவனிக்காதவாறு மற்றவர்களுடன் பேசி அரட்டை அடித்த வண்ணம் இருந்தேன்.

ஆனால் அவள் தொலைப்பேசியில் பேச ஆரம்பித்தது முதல் சியாமளா மற்றும் அத்தை இருவரும் என்ன விஷயம் என அறிய ஆவல் கொண்டிருந்தனர். சியாமளா என்னை மறைமுகமாக ஜாடை மாடையாக வினவ; நான் அவளைக் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கட்டுப்படுத்தினேன். சிறிது நேரத்தில் பானு தன் உரையாடலை முடித்து எங்களுடன் வந்து இணைந்து உடனே என்னிடம் மன்னிப்பு கேட்க

நான் சற்றே புன்னகைத்து, "நீ செய்த பெரிய தப்பு அத்தையை மரியாதை இல்லாமல் உதாசீனப்படுத்தியது. அதுக்கு நீ அவுங்க கிட்டத்தான் மன்னிப்பு கேட்கவேண்டும் ஆனால் நீ என்னிடம் மன்னிப்பு கேட்டால் நீ உன் தப்பை உணரலேன்னுதான் அர்த்தம்."

பானு, "ஐயோ இல்லை நான் புரிஞ்சிக்கிட்டேன்; ஆனால் நீ என்னை... சரி விடு (சொல்லிக் கண்கலங்கினாள் உடனே திரும்பி அத்தையை அணுகி) என்னை மன்னிச்சிடு சித்தி நான் கொஞ்சம்."

அத்தை உடனே குறுக்கிட்டுத் தடுத்து, "அதெல்லாம் ஒண்ணுமில்லை நீ ஒண்ணும் கவலைப்படாத. எனக்குத் தெரியாதா கழுத உன்னைப்பத்தி; சரிசரி நீ ஒண்ணும் கலங்காத. மூஞ்சியப்பாரு எப்படி உம்முன்னு, சிரிச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்குறத விட்டுவிட்டு; வா கழுத இப்படி (சொல்லி அவளை அனைத்து மெல்லக் காதோடு ரகசியமாக) கொஞ்ச நாள் பொறுமையா தம்பி பேச்சை மட்டும் கேட்டு நட அது போதும் சரியா! (சொல்லி விலக்கி முத்தமிட்டு) சரிசரி எல்லாம் சாப்பிடலாம் வாங்க."

அனைவரும் இரவு உணவை முடித்தோம் நான் வழக்கம் போலச் சிறிது நேரத்தில் நடைப் பயிற்சியைத் தொடர உடனே சியாமளா பானு இருவரும் இணைந்து கொள்ள முந்தினர்; உடனே பானு சியாமளாவிடம் ரகசியமாகப் பேசி தடுக்கச் சியாமளாவும் வருத்தத்துடன் சம்மதித்து விலகினாள். நாங்கள் புறப்படும் போது சாந்தினி இணைந்து கொள்ள உடனே கோபம் கொண்ட பானு அவளைக் கோபமாக முறைத்து பின்னர் என்னை நோக்கி சில வினாடிகள் பார்த்து விட்டு, "அதுதான் அவள் வந்துட்டாளே நீ அவள் கூடப் போய்வா." சொல்லி கோபத்துடன் வீட்டுக்குள் சென்று விட்டாள்.

நான் புறப்பட்டு இரண்டடி நகர்ந்து பின்னர்ச் சாந்தினியை அணுகி, "ஒரு இரண்டு நிமிடம் இங்கேயே இருங்கள் நான் போய்ப் பானுவைக் கொஞ்சம் சமாதானப்படுத்திட்டு வறேன் ப்லீஸ்!; ஆனால் நீங்க இங்கேயே இருங்கள் உள்ளே வராதீங்க ப்லீஸ்!" சொல்லி விரைந்து பானுவைத்தேடிச் செல்ல அவளோ அத்தையை அணுகி ரகசியமாக, "சித்தி இன்றைக்கு நான் ரகுகூடப் படுத்துக்கனும்; கொஞ்ச நேரம் அன்றைக்கு மாதிரி தயவு செய்து ப்லீஸ்! ப்லீஸ்! சித்தி."

அதேசமயம் நான் அருகில் வந்ததைக் கண்ட அத்தை சற்றே புன்னகைத்து தன் தலையில் தட்டிக்கொண்டு என்னை நோக்கி, "பாருடா நான் என்னத்த சொல்லுவேன்." சொல்லி பானுவிடம் ரகசியமாக, "இப்போ போயி தூங்கு நான் தம்பிகிட்ட சொல்றேன்; ஐயோ தலைவலியாப் போச்சி இந்தக் கழுதையோட."

நான் உடனே புன்னகைத்த வண்ணம் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்று சாந்தினியுடன் சேர்ந்து நடைப்பயிற்சிக்குச் சென்றேன். "அட அதுக்குள்ள பேசி சமாதானப்படித்திட்டீங்களா?" புன்னகையைப் பதிலாக்கித் தொடர்ந்தேன்.

"ஆமாம் நீங்க உங்கள் வருங்காலக் கணவரோடு இப்படி உல்லாச நடை போவதுண்டா?"

"நல்லா சொன்னீங்க போங்க அது இதெல்லாம் செய்யாது அதுக்கு பிடிக்காது; சரி நான் உங்களை ஒண்ணு கேட்கலாமா?"

"ஏதோ வில்லங்கமான விஷயமா? நீங்க தயங்குறதப் பார்த்தால்."

மெல்லச் சிரித்தவாறே, "ஆமாம் அப்படியும் இருக்கலாம்; தெரியலை நான் சும்மா உங்களைக் கொஞ்சம் அந்தரங்க விவகாரத்தில் தலையிடுறேன்னு தயக்கம்; உங்களுக்குச் சங்கடமாயிருந்தால் சொல்லவேண்டாம்." சொல்லி என்னை ஆவலோடு பார்க்க

"சரி கேளுங்கள் முடிந்தால் சொல்லுகிறேன் இல்லேன்னா வற்புறுத்த மாட்டீர்களே?"

சரியெனத் தலையாட்டியவள், "இல்லை வந்து... அதை எப்படிக்கேக் குறதுன்னு கொஞ்சம் சங்கடமா இருக்கு அது வந்து... நீங்க... ஆம்பளையா கம்பீரமா இல்லாமல் இந்தப் பொம்பளைங்களைக்கு ஏன் இப்படி ரொம்பப் பயப்படுறீங்க? என்னையும் சேர்த்துத்தான்."

சற்றே புன்னகைத்து, "முதல்ல கொஞ்சம் தெளிவு தேவை, அதாவது நான் பொம்பளைங்களுக்கு மட்டும்தானே பயப்படுகிறேன், ஆம்பளைங்களுக்கு இல்லையே? (ஆமென தலையசைக்க); சரி அதாவது உங்கள் கண்ணோட்டத்தில் ஆம்பளைங்க இப்படி இருந்ததில்லை.

நீங்கப் பார்த்த ஆம்பளைங்க மாதிரி இல்லாமல் வித்தியாசமா இருக்கேன். பொம்பளைங்களுக்கும் ஆம்பளைங்களுக்கும் சமமான மதிப்பு மரியாதையுடன் நடத்தும் விதம். அது உங்கள் கண்ணோட்டத்தில் பெண்களுக்கு நான் பயப்படுகிறதா தெரியுது. ம்ம்ம்ம் சரியாத்தான் சொன்னீங்க என்னைப் பொருத்தவரை ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள்; அதில் எனக்கு எந்த விதத்தலையும் சந்தேகம் இல்லை."

"மன்னிச்சிடுங்க நான்... கொஞ்சம் சரியான வார்த்தைகளைச் சொல்லாமல் தப்பா."

நான் குறுக்கிட்டு, "நான் சொன்னது சரிதானே அதாவது நீங்கச் சொல்லவந்த கருத்தைச் சரியாகத்தானே புரிஞ்சிகிட்டேன்." அதற்குள் நாங்கள் இருட்டான பகுதிக்குள் சென்றுவிட

"ஆமாம் ஆமாம் ரொம்பப் சரியாத்தான் சொன்னீங்க; சரி இப்படி இருட்டுலையா நடக்கப்போகிறீர்கள்." சற்றே பயம் கலந்த தயக்கத்துடன் வெளிப்படுத்தினாள்.

"உங்களுக்கு இருட்டுன்னா ப. (யம்).. புடிக்கலைன்னா எதிர்ப்பக்கம் தெரு விளக்கு இருக்கிற பக்கம் போகலாம்." சொல்லித் திரும்பினோம்.

"ஆமாம் எனக்கு இருட்டென்றால் பயம் சாரி; சரி அது ஏன் எனக்குப் பயம்னு சொல்ல வந்துட்டு நிறுத்தி மாற்றி புடிக்கலைன்னு சொன்னீங்க."

"பயம்னு திட்டவட்டமா என்னால சொல்ல முடியாது அப்புறம் அது எதிர்மறையான சொல் ஆனால் புடிக்கலைன்னு சொல்றது கொஞ்சம் நாகரீகமான சொல் அதனால்தான் அப்படிச் சொன்னேன்."

"அடேயெப்பா உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா கவனமாகத்தான் பேசனம்னு தெரியுது."

"சரி இப்படி உல்லாச நடை உங்களுக்குப் பிடிக்குமா?"

"ஹாம் இல்லை வந்து நாங்க யாரும் செய்ததில்லை வந்து சும்மா நீங்க எவ்ளோ தூரம் நடப்பீங்கன்னு பார்க்கலாம்னு,"

"அதுக்குத்தான் கேட்டேன் நான் ரொம்பத் தூரம் நடப்பேன் ஆனால் நீங்க எதுவும் கேட்கல உடனே புறப்பட்டு வந்துட்டீங்க."

"இல்லை வந்து... சும்மா உங்கள் கிட்ட பேசலாம்னு தோனிச்சி; உண்மையா ரொம்பத் தூரம்,"...

உடனே நான் குறுக்கிட்டு, "அட மத்தியானத்திலிருந்து நாம ஒண்ணாத்தானே இருந்தோம் இன்னும் என் கூடப் பேசனுமா? அப்படி என்ன பேசனும்; பரவாயில்லை பேசுங்கள்."

"இல்லை குறிப்பிடும்படியா ஒண்ணுமில்லை சும்மாத்தான்."

அதாவது அவளுக்கு என்னுடன் வருவதோ பேசுவதோ காரணமல்ல; சியாமளா அல்லது பானு ஆகிய இருவரில் யாரேனும் என்னுடன் இணைந்து கொள்வது அவளுக்குப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தன்னையும் மீறி ஆவல் கொண்டு எங்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறாள்.

விருப்பம் எனச் சொல்வதை விடப் பதற்றம் என்றே சொல்லலாம். முன்பின் பழக்கமில்லாத வாலிபனுடன் மற்ற இரு பெண்கள் கலந்து இணைந்து செல்வதை அவளால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

"உங்கள் மாமா ஒரு நல்ல ஆணழகனா லட்சணமா இருக்கிறார் உங்கள் அழகுக்கு ஏற்றவர் அவர்தான்; நீங்க இரண்டு பேரும் சரியான ஜோடிப்பொருத்தம்தான்."

சற்றே அசடு வழிந்தவளாக "ஹான் ஆமாம்."

"அவர் பட்டப்படிப்பு முடித்தவர், நீங்க ஏன் படிக்கலை? பிடிக்கலையா?"

"நான் படித்து என்ன செய்யப்போறேன்; எங்களுக்கு இருக்குற சொத்துக்கு நாங்க வேலைக்குப் போக வேண்டிய அவசியமில்லை."

"படிக்கிறது அடிப்படை காரணம் நம் அறிவை வளர்த்துக்கொள்ள அதுக்கு மேலத்தான் சம்பாதிக்கிறது போன்ற மற்ற நன்மைகள்; அதை விடுங்கள் சரி ஏதாவது சூழ்நிலையில் அவர் மற்றவங்களோடு ஆங்கிலத்தில உரையாடினால் அது புரியாமல் நீங்க எப்படி?"

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous