Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 11: கடைக்குட்டிக்கும் சிராக்கோ
உடனே குறுக்கிட்டவள், "அட நீங்க வேற அது (தன் மாமாவை) ஆங்கிலமெல்லாம் பேசாது நான் புரிஞ்சிக்குற அளவுக்குக்கூட அதுக்குப் புரியாது. அது இன்னும் படிப்பை முடிக்கலை. முடிக்கவே முடிக்காது அது என்னை விட மோசம் படிப்பு சுத்தமா ஏறாது. இதுவரை எந்தப் பாடத்தையும் பாஸ் பண்ணலை. எல்லாம் பணம் கொடுத்துச் சமாளிச்சிக்கிட்டு இருக்கு. அதைவிடுங்க வேற ஏதாவது பேசுங்கள். நாங்க வெளிய சொல்லிக்காம இருக்குறோம். உங்களுக்கும் தெரிந்தமாதிரி காட்டிக்காதீங்க ப்லீஸ்!"
இன்னும் சில விவரங்கள் அவள் வருங்காலக் கணவனைப் பற்றிக் கேட்க அவளுடைய ஈடுபாடற்ற பதில்கள் அவள் அதிகத் திருப்தியின்மையை வெளிப்படுத்த நான் தொடர்ந்து கேட்க ஒரு கட்டத்தில்
"அட எங்க மாமவைப்பத்தி பேசாமல்... அதைவிட நாம வேற ஏதாவது பேசலாமே." எனச் சற்றே மனந்திறந்து தன் மனவருத்தத்தை வெளிப்படுத்தினாள்.
"எல்லாரும் நீங்க ரொம்பச் சந்தோஷமா இருக்குறதா நினச்சிக்கிட்டிருக்காங்க... சரி விடுங்கள் நாம வேற ஏதாவது பேசுவோம்." நாங்கள் திரும்பிக் கிட்டத்தட்ட வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தோம்.
"நான் ஒண்ணு கேட்பேன் மாட்டென்னு சொல்லக்கூடாது; வந்து... பானுவுக்குக் கற்றுக்கொடுத்த மாதிரி எனக்கும் அந்த வண்டியை ஓட்ட கத்துக் குடுப்பிங்களா!! ப்லீஸ்! ப்லீஸ்!; எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு ப்லீஸ்!"
"அட அது ஒண்ணும் அவ்ளோ சிரமமில்லை ரொம்பச் சுலபமா,"... உடனே நான் பானுவுடன் நடத்திய காமக்களியாட்டங்கள் நினைவுக்கு வரச் சட்டெனச் சாந்தினியின் அழகிய பூசணிக்குண்டிகள் நினைவில் கொள்ள என்னையும் மீறி என் கண்கள் அவள் பின்னழகை அளவெடுக்க
"அட ஏன் நிறுத்திட்டீங்க நாளைக்கே ஆரம்பிக்கலாமா?"
"ஹூஹும் இல்லை வந்து அது முடியாது."
"சரி பரவாயில்லை அதுக்கடுத்த நாள்."
நான் உடனடியாகக் குறுக்கிட்டு, "இல்லை இல்லை உங்களுக்கு நான் கத்துக்குடுக்க முடியாது"
"அட என்ன ஆச்சி முதல்ல அவ்ளோ நேர்மறையா சொல்லிவிட்டு இப்படித் திடீர்னு முடியாதுன்னு எதிர்மறையா! என்ன ஆச்சி நான் ஏதாவது தப்பா,... என்னைப் பிடிக்கவில்லையா?"
சற்றே பதட்டத்துடன், "ஆமாம் வந்து இல்லை இல்லை; அதுதான் பிரச்சினை. நீங்க ரொம்ப அழகா இருக்குறீங்க (சொல்லி மீண்டும் என்னையும் மீறி அவள் குண்டியழகை என் கண் மேய்ந்த வண்ணம்) ஹுஹூம் முடியவே முடியாது." என் கண் மேய்ந்து ஜொல்லு விட்டதைக் கவனித்து வெட்கப் புன்னகையுடன் நோக்க, "இந்த... அழகான (மீண்டும் அவள் குண்டிகளைக் கவனித்தவாறே) வயசுப் பொன்னை முன்னாடி உட்கார வெச்சிகிட்டு... எப்படிங்க? (அதே சமயம் வீட்டை அடைந்தோம்) நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் போய் நிம்மதியா தூங்குங்கள்"
அவளோ வீட்டுக்குத்திரும்பாமல் என் கையைப் பிடித்து மீண்டும் நடக்க அழைத்து அந்த இருட்டு திசையை நோக்கி, "வாங்க உங்களுக்குப் புடிச்ச இருட்டில் கொஞ்ச தூரம் நடக்கலாம்; பானுவுக்குக் கத்துக்குடுத்த நீங்க எனக்கு முடியாதுன்னு சொல்லுகிறது நியாமில்லைங்க."
"அது வந்து நீங்களும் பானுவும் ஒண்ணா?; நான் சுற்றிவளைத்துப் பேச வேண்டியதில்லை உங்களுக்காக ஒரு உண்மையைச் சொல்லுகிறேன் நீங்க யாருக்கும் தெரியாமல் பார்த்துக்குறதா சத்தியம் செய்யனும் (சொல்லி அவளை நோக்க அவள் சம்மதிக்க) வந்து பானு என்னை ரொம்பத் தீவிரமா காதலிக்குறா; அவதான் நான் முன்னர்ச் சொன்ன அந்தத் தியாகி; தன் திருமண வாழ்க்கையைத் தியாகம் செய்தாவது அதாவது என் வீட்டு வேலைக்காரியாக என்னோடு வாழ முடிவெடுத்தவள்; தயவுசெய்து இதை யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க; அது நீங்க எங்க இரண்டு பேரையும் சாவடிக்குறதுக்குச் சமம் ப்லீஸ்!"
"ஐய்யோ ஏன் நீங்க பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லுறீங்க; நிச்சயமா நான் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்குறேன் இது என் சத்தியம்"
மயங்குகிறாள் சாந்தினி
சிறிது நேரம் மௌனமாக நடந்த பின் மீண்டும் சாந்தினி, "நான் என்ன அவ்ளோ... ரொம்ப அழகா உங்களுக்கு?"
நான் சற்றும் தாமதிக்காமல் ஆனால் சிறிதும் உணர்ச்சியற்று ஏதோ யோசனையில், "ஆமாங்க."
என் கையைப் பிடித்து நிறுத்தியவள், "ஹல்லோ இங்க என்னைப்பாருங்க (என் எதிரில் நின்று என் இரு கைகளைப் பற்றி) நான் என்ன கேக்குறேன் நீங்க என்ன சொல்லுறீங்க."
"என்ன... என்ன கேட்டீங்க?"
"ஐயோ கடவுளே இதென்ன கொடுமை ஹூம் சுத்தம்."
"சாரி என்ன?"
என் கைகளைத் தன் இடுப்பில் சேர்த்தவள், "நான் சாந்தினி இது என் இடுப்பு (சொல்லி சற்றே என் கைகளைக் கீழிறக்க நான் மறுத்து விலக்க அவள் விடாமல் என் கைகளை அவள் புட்டத்தில் இறக்கிய வண்ணம் அழுத்திப்பிடித்துக் கொண்டு) நான்... நான் கேட்டது வந்து... நான் என்ன அவ்ளோ... ரொம்ப அழகா உங்களுக்கு?"
"அடக்கடவுளே இதென்ன கேள்வி; இது... இப்படி உங்களை நம்பி வந்த ஒரு வாலிபனைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவது கிட்டத்தட்டக் கற்பழிப்புக்குச் சமம்." சற்றும் தாமதிக்காமல் என்னை இறுக்கி அனைத்து உதட்டில் முத்தமிட்டாள்.
நானோ சம்பிரதாயத்துக்கு அவளை அனைத்து என் இணக்கத்தை வெளிப்படுத்த; அவள் முத்தமிட்டுப் பின் மெல்ல, "என்னை உங்களுக்கு ஏன் பிடிக்கலை?"
"இதென்ன கொடுமை இந்த அழகை புடிக்கலைன்னு யாராவது சொல்லுவாங்களா? நீங்க இன்னொருத்தருக்குச் சொந்தமானவர்; மாற்றான் தோட்டத்து மல்லிகை. நாம இப்படிச் செய்யுறது சரியில்லை பெரிய தவறு. நீங்கக் கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் இந்த அழகிக்குச் சொந்தமான ஆணழகனை ஒரு கணம் நினைத்து பெருமையோடு போய்த் தூங்குங்க அவர் கனவில் வருவார் அந்த நினைப்போடு சந்தோஷமா இருங்கள். வாங்க இப்போது நாம வீட்டுக்குப் போகலாம் ரொம்ப நேரமாயிடுச்சி அத்தை கவலைப் படுவார்கள்." சொல்லி அவளை இடையோடு அணைத்த வண்ணம் அன்போடு இழுத்தேன்.
"ஆமாம் கனவில்... என் கழுத்தை... அதுக்குப் பதிலா நீங்க கனவுலயாச்சும் வந்து சந்தோஷப்படுத்துங்கள்; ஹும் என்னை மன்னிச்சிடுங்க உங்கள் மனசை சங்கடப்படுத்திட்டேன்." சொல்லி மெல்ல விலகி நடக்க ஆரம்பித்தாள்.
மௌனமாக நடந்தோம் சில நிமிட நடையில் வீட்டை நெருங்கிக்கொண்டிருக்கச் சட்டென என்னை நிறுத்தி மீண்டும் என் கைகளைப் பிடித்துத் தன் இடையில் சேர்த்துவிட்டுப் பின் மெல்ல என் உதட்டில் முத்தமிட நெருங்கி, "கடைசியா ஒரு முத்தம்." சொல்லி முத்தமிட்டு விலக நான் அவள் கன்னத்தைப் பற்றி முத்தமிட எத்தனிக்க அவள் கன்னத்தில் ஈரம் உணர்ந்தவன் அவளை ஆறுதலாக இறுக்கி அனைத்து ஆழ்ந்த முத்தமிட்டு மெல்ல விலகி, "இதென்ன இந்தச் சின்ன விஷயத்துக்குப் போயி இந்த அழகுச்சிலை அழலாமா? உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா நடக்கும். தயவு செய்து மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் என் வார்த்தைகளை நம்பி இன்பமான கனவுகளோடு தூங்குங்கள்."
"ரகு... நீங்களும் என்... என்னைப்பத்தி என் மாமாவைப்பத்தி பேசினதை வெளியே தெரியாமல் உங்கள் மனதோடு வெச்சிக்கோங்க." சொல்லி என்னைவிட்டு விலகி நடக்கத்தொடங்கினாள்.
நான் ஒரு கணம் தயங்கி உடனே குறுக்கிட்டு, "புரியவில்லை; உண்மையில் நானே ஆச்சரிய அதிர்ச்சியில் இருக்கிறேன்; I mean எல்லாரும் நீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறதா!"
மீண்டும் திரும்பி என்னருகே வந்தவள், "சரி வாங்க இன்னும் கொஞ்சம் நேரம் பேசலாம்." சொல்லி மீண்டும் இருட்டுத் திசையில் நடக்க
"வேண்டாம் சாந்தினி அத்தை தேடுவாங்க (வீட்டு வாசலை நோக்கிய வண்ணம்) இப்படியே ஒரு நிமிஷம்... சரி நாளைக்குப் பேசலாம்." சொல்லி இருவரும் வீட்டுக்குள் நுழைய அதே சமயம் பானுவும் அத்தையும் வாசல் திண்ணையில் காத்திருந்தனர்.
என்னைக் கண்டதும் பானு நிம்மதிப்பெரு மூச்சுடன் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, "அப்பாடா அதென்ன இங்கே ஒருத்தி காத்துக்கிட்டிருக்கேன் அப்போதான் நீ நீட்டி முழக்கி நடைப்பயிற்சி செய்வியா; உன்னை அப்படியே." சொல்லி செல்லமாகத் தலையில் குட்டியவள், "வாடா வா." என என்னை அழைத்துச் செல்ல
"ஆமாம் ரொம்ப நேரம் நடந்துட்டோம் காலே வலிக்க ஆரம்பிச்சிடுச்சி."
"சரிசரி எல்லாரும் இனிய கனவுகளோடு தூங்குங்கள்; பானு நான் ஒரு இரண்டு நிமிஷத்தில் ஒரு காக்கா குளியல் போட்டு வந்துடுறேன் நீ போய்ப் படு."
'ஹாங்' ஒரே சமயத்தில் மூன்று பெண் குரல்களும் ஆச்சரியத்துடன் எழப் பின்னர்.
ஷீலா, "அட இந்த நேரத்திலயா குளிக்கப்போற?"
"அதுதானே தூங்கப் போறதுக்கு முன்ன யாராவது குளிப்பாங்களா!"
பானு, "டேய் நீ வேணும்னே என்னை அலைய விடுகிறதுக்காக."
நான் சட்டென அவள் கையைப்பிடித்து, "என் செல்லமில்ல ப்லீஸ்! குளியல் இல்லே சும்மா தண்ணிய ஊற்றி வேர்வையைக் கழுவிட்டுத் துடைச்சிகிட்டு வந்துடுவேன் என் செல்ல தேவதையே ப்லீஸ்! ப்லீஸ்!"
மற்ற இருவர் முன்னிலையில் தேவதைப் பட்டம் சூட்ட மிதமிஞ்சிய வெட்கத்துடன் அத்தையையும் சாந்தினியையும் ஓரக்கண்ணால் நோக்கிய வண்ணம், "ச்சீக்கழுத அதுக்குப்போயி என்னைத் தேவதைன்னு ஐஸ் வைக்காதாடா போ போயி சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு வா." சொல்லி அவ்விருவரையும் நோக்கி அசடு வழியச் சிரித்து மழுப்பினாள்.
நான் அதிவிரைவாகக் காக்கா குளியலை முடிக்க அதேசமயம் சாந்தினியும் பானுவும் பேசிக்கொண்டது கேட்டது; நான் துடைத்துக்கொள்ளத் தேவையான துண்டு கொண்டுவந்து வைத்திருக்கிறாள் பானு.
அதைக் கவனித்த சாந்தினி, "என்னடி டவலை போட்டுவிட்டு போற; ஹூம் அவர் மட்டும் என்னைத் தேவதைன்னு சொல்லியிருந்தால் நானே வந்து குளிப்பாட்டி துடைத்து விடுவேன்." சொல்லிச் சிரித்தாள்.
பானு, "அடிப்பாவி நீ செய்தாலும் செய்வடி."
இருவரும் சிரித்த வண்ணம் சென்றனர். நான் குளித்து முடித்து உறங்கத்தயாராகிப் பானுவை அணுக என்னைக் கண்டதும் விரைந்து அணைத்துக்கொண்டவள், "என்னை மன்னிச்சிடு ரகு நான்... எனக்குத் தெரியும் நான் செய்தது எவ்ளோ பெரிய தப்புன்னு."
நான் அவளை முத்தமிட்டு வாயடைத்து, "நீ செய்த தப்பு அத்தை மனதை எவ்ளோ ஆழமா பாதித்திருக்கும்னு உனக்குத் தெரியலை; நீ மன்னிப்பு கேட்க வேண்டியது உன் சித்தியிடம் தான் திரும்பத்திரும்ப நீ என்னிடம் மன்னிப்புக் கெட்குறதில் அர்த்தமே இல்லை. அத்தை மனம் எந்த அளவுக்குப் புண்பட்டிருக்கும்னு நினைக்கும் போதே என் மனம் கொதிக்கிறது... உன்னைத் தேவதைன்னு சொன்ன வாயால் 'நீயெல்லாம் ஒரு பொன்னான்னு',"... உணர்ச்சி வசப்பட்டு என் வார்த்தைகளை நிறுத்த; இருவரும் மௌனமானோம்.
சில நிமிடங்கள் கடந்தன. பின்னர் சில நிமிடங்களில் என்னை விட்டு விலகியவள் மெல்ல என் காலைப்பிடித்து விசும்பியபடி, "என்னுடைய அம்மா அப்பா யாருன்னு எனக்கு அடையாளம் காட்டினதே நீதான்; நீ எனக்குத் தெய்வம்டா நீ என்ன சொன்னாலும் கேட்பேன் என்ன செய்யச் சொன்னாலும் செய்வேன் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குவேன்." சொல்லி சற்று சத்தமாகவே அழ ஆரம்பித்தாள்.
நான் அவளைக் கட்டுப்படுத்தி, "உன் அம்மா அப்பா கிடைத்த அளவில்லா சந்தோஷத்தில் நீ கொஞ்சம் தலைகால் புரியாமல் நடந்துக்கிட்டேன்னு தோனுது. நீ சந்தோஷப்படனும்னு தான் நான் உனக்கு அதைச் சொன்னேன் ஆனால் நீ இப்படிச் சின்னக்குழந்தை போலத் தலைகால் புரியாமல் ஆடுவேன்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. பரவாயில்லை விடு நான் நாளைக்கு அத்தைக்குச் சொல்லிப் புரிய வைக்கிறேன். நீ மனதைப் போட்டு அலட்டிக்காமல் தூங்கு."
பின்னர் நான் என் இடத்தில் படுத்து உறங்கி பின்னர் வழக்கம் போல மோகினி அத்தை சந்திப்பில் நான் பானுவின் தவற்றை விவரமாகச் சொல்லி அவர் மனதைத் தேற்ற அத்தை என்னைக் கட்டிக்கொண்டு உருக்கமாக அழ ஆரம்பித்தார்.
ஷீலா, "நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் இப்படி ஒரு பொன்னை வளர்த்ததுக்கு. மத்தவங்க உணர்ச்சிகளை மதிப்பதில் உனக்கு நிகர் நீயே. அதில் உன்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு. எனக்கு அவள் சொல்லும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.
ஆனால் அதைவிட அவள் அம்மா அப்பா விஷயத்தினால அவள் மேல பரிதாபம் அதிகம் இருந்து அதனால அவள் மேல எனக்குக் கோபம் வரலை. நீ சொன்னது சரிதான் அவளோட பெத்தவங்க உண்மை தெரிந்ததினால அவள் சந்தோஷத்தில அப்படிக் குழந்தைத்தனமா நடந்துகிட்டிருக்கா. இத்தனை வருஷத்தில அவ(ள்) அப்படி எல்லாம் நடந்துகிட்டதே இல்லை. நான் அவளை நாளைக்குச் சமாதாணப்படுத்திக்குறேன். நீயும் அவளைக் கொஞ்சம் சமாதானப்படுத்து. அவளை நினச்சா எனக்கு இன்னமும் பரிதாபம் தான் வருது அவள் மேல கோபம் இல்லை. என்னை இவ்ளோ அக்கரையா பார்த்துக்கொள்ள இப்படி ஒரு மருமகன் இருக்கும் போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை." மீண்டும் உருக்கமாக நன்றி தெரிவித்துக் கொண்டாள்.
தொடரும்