Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 12: வாலிப சேட்டை கொண்டாட்டம்
மறுநாள் காலை துவங்கியது நான் தயாராகிக் காப்பி அருந்திய நிலையில் நேற்றைய நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருக்க என்னை அணுகிய சியாமளா அக்கம் பக்கம் பார்த்துவிட்டு யாரும் அருகில் இல்லையென உறுதி செய்து கொண்டு, "ரகு இன்றைக்கு நாங்க மத்தியானம் சாப்பிட்ட பிறகு படிக்கப் போகலாமா ப்லீஸ்."
நான், "அட இதென்ன இதை எல்லாம் இந்த தேவதை என்னைக் கேக்கனுமா தாராளமா செய் சியாமு; ஆனால்... என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கலாமா?"
அதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளியவள் மீண்டும் ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அதி விரைவாக என்னை முத்தமிட்டு, "அது போதும் என் செல்லமே." சொல்லி ஓடிவிட்டாள்.
அப்போது அங்கே வந்த பானு சியாமளா அப்படி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஓடுவதைக் கவனித்துவிட்டு என்னருகே வந்து, "என்னடா செய்த அவளுக்குக் குஷி அப்படிப் பிச்சிக்கிற அளவுக்கு."
நான், "அதுதான் எனக்கும் புரியலை; என்னமோ திடீர்னு வந்து இன்றைக்குப் படிக்கக் காலையில் போறதுக்குப் பதிலா மத்தியானம் போகலாமான்னு கேட்டாள் நானும் பரவாயில்லைன்னு சொன்னேன்; அவ்ளோ தான் என்ன ஆச்சின்னே தெரியலை அவ்ளோ குஷி பிச்சிட்டு ஓடுது சியாமு; என்ன விஷயம்னு கேட்டா பதில் சொல்லவே இல்லை."
அதே சமயம் சாந்தினியும் என் சித்தியும் வந்து சேர்ந்து கொண்டு என்ன என விசாரிக்க அதேசமயம் ஷீலா, "ஹூஹும் முடியவே முடியாது இன்றைக்கு எந்தப் பொட்டக்கழுதையும் கிட்டவே வரக்கூடாது. தினமும் நானு நீ-ன்னு போட்டிப் போட்டு கேட்டுட்டு அப்புறம் புறப்பட்டதும் அவள் கூட்டிவிட்டு போறா இவள் கூட்டிவிட்டு போறாள்னு ஒதுங்கிக்குறது."
லஷ்மி, "என்ன விஷயம்? காலங்காத்தால என்ன தகராறு?"
ஷீலா, "ஹூம் வேறென்ன, தம்பிகூடப் பண்ணைக்குப் போறதுக்கு நானு நீ-ன்னு போட்டி."
பானுவும் சியாமளாவும் ரகசிய உரையாடலில் விவரம் பரிமாறிக் கொள்ள உடனே பளிச்சிட்டது பானுவின் முகம் பின்னர்ப் பானுவும் சியாமளாவுமாக இருவரும் தொடர்ந்து ஷீலா அத்தையிடம் கெஞ்சி வற்புறுத்தி சம்மதம் வாங்கி வெற்றிக் களிப்பில் மிதந்த வண்ணம் தயாராக; மெல்ல விவரம் புரிந்தது.
இன்று சனிக்கிழமை, நான் வழக்கமாக எண்ணெய் குளியல் செய்யும் நாள்; முந்தைய வாரத்தில் நடந்த எண்ணெய் தேய்த்தல் நிகழ்வில் நடந்த சேட்டை/கொண்டாட்டம் நினைவில் கொண்டு சியாமளா இந்த வாரமும் அதைத் தொடர எண்ணம்.
ஒரே வாரத்தில் நிலைமை முற்றிலும் வேறு. கடந்த வாரம் சியாமளா மட்டும் அதுவும் அந்த அளவுக்கு நெருக்கமற்ற உறவு நிலை. ஆனால் இப்போது சியாமளா அவளோடு பானுவும் இணைந்து கொள்வாள், அநேகமாகச் சாந்தினியும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. சாந்தினி இணைந்து கொண்டாள் அநேகமாக அதிகக் காம ஈடுபாடற்ற நிலையாக இருக்கும் ஆக எப்படியும் நல்ல கொண்டாட்டத்திற்கு வாய்ப்பு.
சரி இதை எப்படி மேம்படுத்தலாமென யோசித்தேன். உடனே நினைவுக்கு வந்தது அனிதா; ஆம் அவளுடன் இதைப்பற்றிப் பேசிய போது அவளுக்கும் ஆவல் இருந்தது தெரிந்தது மேலும் நான் அவளுக்கு எண்ணெய் தேய்த்து குளியல் செய்வதாக வாக்களித்தது நினைவில் வர அவளை அழைக்கத் திட்டமிட்டேன்.
என் லீலையின் முதற்கட்டமாக, "சரி நான் இன்றைக்கு என் மாமியார் வீட்டுக்கு போகனும்." சொல்லி முடித்ததும் அனைவரும் அதிர்ச்சி/குழப்பம்/சிரிப்பு எனப் பலவித உணர்ச்சிக்குள்ளாயினர்.
சிரித்துக்கொண்டே ஷீலா, "அட எதுப்பா உன் மாமியார் வீடு; இத்தனை நாள் இல்லாத மாமியார் வீடு திடீர்னு எங்கிருந்து வந்தது?"
நான், "ஜெயா அத்தை வீடுதான் என் மாமியார் வீடு; இன்னிக்கி சனிக்கிழமை நான் என் மாமியார் வீட்டுக்குப்போயி எண்ணெய் தேச்சி குளிக்கனும்; சரிசரி நேரமாவுது நான் கிளம்புறேன்."
இதைக் கேட்டதும் மனமுடைந்த நிலையில் சியாமளா முகம் வாடி அழும் நிலைக்கு வந்து என்னைப் பரிதாபமாக மிகுந்த ஏக்கத்துடன் நோக்கினாள். அதே சமயம் ஏதோ யோசனையில் சட்டெனப் பளிச்சிடப் பானு சியாமளாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
பின்னர் தொலைப்பேசியில் அனிதாவைத் தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கி அவளை அழைத்து இந்த விளையாட்டில் இணைத்துக்கொள்ள வைத்து அனிதாவும் பண்ணைக்குப் போய் எண்ணெய் தேய்த்துக் குளிக்க விரும்புவதாகத் தெரிவித்தாள்.
நான் அவளை வம்பிழுக்க எண்ணி; அதெல்லாம் சரிவராது நான் மாமியார் வீட்டுக்குச் சென்று குளிப்பதே சிறந்தது என வாதாட; நான் வேண்டுமென்றே அவர்களை அலைக்கழிப்பதை உணர்ந்த பானு என்னிடம் வந்து என்னைக் குறும்புப் பார்வையோடு, "டேய் போதும் உன் விளையாட்டு அவள் முகத்தைப் பார் எப்படி வாடிப்போச்சி; அவளை அழ வைத்தே அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்."
குலுங்கிக்குலுங்கி சிரித்த அத்தை, "தம்பி உன்னை நினச்சால் எனக்குப் பாவமா இருக்குடா; இந்த மூனு பொன்னுங்களை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கு ஒரே சிரிப்பாவும் இருக்கு." என் சித்தியும் சேர்ந்து கொண்டு சிரித்தார்.
மீண்டும் பானு சட்டென முடிவுக்கு வந்தவளாக, "சரி வாடா நாம் மூனு பேரும் அனிதா வீட்டுக்குப் போகலாம்."
நான், "நான் போயி எண்ணெய் தேச்சிக்குளிக்கப் போறேன் நீங்க எதுக்கு அங்கே?"
பானு, "ம்ம்ம் எங்களுக்கும் (ஏதோ சொல்ல வாயெடுத்தவள் சட்டென மாற்றி) எங்க சகோதரிக்கு எப்படி எண்ணெய் தேய்க்குறதுன்னு கற்றுக்கொடுக்க வேண்டாமா?"
ஷீலா, "அப்படிப் போடுடி அறிவாளை; சபாஷ் சரியான போட்டிதான்." சொல்லி மீண்டும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தாள்.
நான், "ஓஹ் தாராளமா வாங்க... வந்து சொல்லிக் குடுங்க." சொல்லி நாங்கள் புறப்பட; சியாமளா வெட்கப்பட்டுச் சற்றே தயங்கி விலக முற்படப் பானு அவளைக் கட்டாயப்படுத்தி இழுத்து வந்தாள். கொண்டாட்டம் கலை கட்டப் போவது உறுதி என மகிழ்ச்சியாகப் புறப்பட்டோம்.
சாந்தினி முகத்தில் ஆர்வம் மிகுந்த ஏக்கம் வழிவதை உணர்ந்த நான், "என்ன சாந்தினி உங்கள் மாமா ஞாபகம் வந்துடிச்சா வாங்க நீங்களும் வந்து உங்கள் சகோதரிகள் என்ன கலாட்டா செய்யுறாங்கன்னு பார்க்க ஆசையா இல்லையா?"
சாந்தினி, "ஆமா ரொம்ப ஆசையாகத்தான் இருக்கு ஆனால் அந்த இடம் அதுதான் உங்கள் மாமியார் வீடு/ஆளுங்கள் எனக்கு அவ்ளோ பழக்கமில்லாத... கொஞ்சம் கூச்சமா இருக்கு."
நீண்ட நகைச்சுவையான தர்க்கம்/வாக்குவாதமான கலாய்ப்பு என் தொடர்ந்த பின் ஒரு மனதாகச் சாந்தினியையும் இணைத்துக் கொண்டு மூவரும் அனிதா வீட்டை அடைந்தோம்.
எங்களை வரவேற்ற அனிதா குழப்பத்துடன் பண்ணைக்குப் போகாமல் இங்கு ஏன் வந்தோமென வினவப் பானுவும் தன் கோபம் கலந்த வாதத்தைத் தொடர உடனே நான் வேண்டுமென்றே ஏதோ குறும்பு சேட்டை செய்யத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்த அனிதா என்ன விஷயமென என்னைக் கேட்டாள்.
நான், "உனக்கு எண்ணெய் தேய்த்து குளியல் பழக்கமில்லாத ஒண்ணு; அப்படிப் புதுசா பழக்கமில்லாதவர்களுக்கு செய்வதில் ஏதாவது பிரச்சினை வருமோன்னு கொஞ்சம் ஜெயா அத்தையைக் கேட்டு செய்யலாம்னு."
அனிதா, "அது எனக்குத் தெரியாதா அதைக்கூட என் அம்மாவைத்தான் கேட்கனுமா?" அவள் கேள்வியில் கேலியும் கிண்டலும் மிதமிஞ்சியிருக்க அவள் என்னை முழுமனதோடு கலாட்டா செய்வது வெளிப்பட்டது.
நான், "நீ மருத்துவர்னு பட்டம்தான் வாங்கி இருக்க, அப்புறம் நீ சின்னப் பொன்னு; இல்லை இல்லை சின்ன வயசுப் பொன்னு அதனால என்னைப் பொல வாலிபன் வந்து கேட்குறானேன்னு உடல் அக்கரையில்லாமல் சரின்னு ஒத்துக்க வாய்ப்பு இருக்கு. பிள்ளையப் பெற்ற அம்மாவுக்கு இருக்குற பொறுப்பு அதிகம் அதனால அவுங்களைத்தான் கேட்கனும்."
அவளுக்குப் பதில் பேசச் சரியான கருத்துக் கிடைக்காமல் என்னருகே வந்து விளையாட்டாகக் கோபம் கொண்டவளாய் என் காதைப்பிடித்துத் திருகிய வண்ணம், "நமக்குப் பழக்கம் ஆகி இரண்டாவது நாளே என் பாவாடைய இப்படித் தூக்கினதுக்கு (சொல்லி சற்றே தன் பாவாடையைத் தூக்கி) என் அம்மாகிட்ட அனுமதி கேட்டியா? (அனைவரும் அதிர்ந்தபடி வியக்க)... இல்லை அதுக்கப்புறம் இந்த (தன் கூதியைச் சுட்ட -- இதற்கு மேல் தாங்காதென நான் பாய்ந்து அவள் வாயை மூடினேன்.)
கட்டுப்பாடின்றி அடக்கமுடியாமல் குலுங்கிக்குலுங்கிச் சிரித்த வண்ணம் பானு, "இதுக்குத்தாண்டா நான் உன்னை இங்கே கூட்டிவந்தேன் (சியாமளாவை நோக்கி) நான் சொல்லலை இவனுக்குச் சரியான ஆள் இவள் தான்." சொல்லி மீண்டும் சத்தமாகச் சிரிப்பைத் தொடர்ந்தாள்.
நான் ஜெயா அத்தையை நோக்கி, "சாரி அத்தை மன்னிச்சிடுங்க இந்த லூசு பொன்னு இப்படிச் செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை."
அனிதா, "இப்போது உனக்கு எவ்ளோ சங்கடமா இருக்கு? அப்படித்தானே இருந்திருக்கும் சியாமளாவுக்கும்; அவள்தான் நிறையக் கூச்ச சுபாவமென்று தெரியுமில்லை."
இதைக்கேட்டதும் சியாமளா முகத்தில் புத்துணர்ச்சி பொங்க ஓடி வந்து அனிதாவைக் கட்டிக்கொண்டு, "ஆமாம் ஆமாம் நீதான் என்னைப் புரிஞ்சிகிட்டவள் (பானுவை நோக்கி) ஆமாண்டி நீ சொன்னது சரிதான் இவருக்கு முழுக்க முழுக்கப் பொருத்தமானவள் அனிதாதான்; (மீண்டும் அனிதாவை நோக்கி) உனக்கு ரொம்ப நன்றி அனிதா."
அனைவரும் சிரிக்க ஜெயா அத்தையும் சிரித்த வண்ணம் என்னை நெருங்கி அன்புடன் அனைத்து நெற்றியில் முத்தமிட்டு, "நீ கவலைப்படாதே தம்பி; உன்னை இவங்க யாராலும் நாகரீகமா பேசி வெல்ல முடியாது."
அந்த 'நாகரீகம்' என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாததால் அனிதா, "அப்படீன்னா என்ன?"
சிரித்துக்கொண்டே கமலா, "your mom means that no one can win Raghu by decent arguments."
ஜெயா, "தம்பி உன்னைப்பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாவும் இருக்கு சிரிப்பும் வருது; (அனிதாவை நோக்கி) அடியே நான் இங்கே இருந்ததால் தம்பி மரியாதைக்காகச் சும்மா இருந்தார் அங்கே போயி தம்பி கிட்ட இப்படிப் பேசி வாங்கிக் கட்டிக்காதே."
உடனே மீண்டும் சிரித்துக் கொண்டே கமலா, "ரகு உங்களை... நினச்சா.... கொஞ்சம் இருங்கள் இதோ வரேன் (சொல்லி விரைந்து சென்று ஒரு புல்லாங்குழலோடு திரும்பியவள் என்னிடம் நீட்டி) இதைப் பிடிங்க; ம்ம்ம் இப்பதான் சரியா இருக்கு 'கோபியர் சூழ்ந்த கண்ணன் கைல புல்லாங்குழல்'
அனிதா, "Hey அது என்னாது?"
கமலா, "One of our god use to be very romantic and naughty who plays this flute."
குறுக்கிட்ட அனிதா." அது எனக்குத் தெரியுமே; அது கிருஷ்ணா இல்லே ஆனால் நீ இப்போது சொன்னது எதோ அண்ணன்/கண்ணன்."
மீண்டும் கமலா ஆங்கிலம் கலந்த தமிழில் விளக்க அதைக்கண்டு வியந்தாள் சாந்தினி குறிப்பாகத் தன் வயதை ஒத்தவள் ஆங்கிலம் பேசுவது அவளுக்கு வியப்பு. அனிதா கமலாவையும் அழைத்து இனைத்துக்கொண்டாள்.
நாங்கள் பண்ணைக்குச் சென்று எண்ணெய் தேய்த்துக்கொள்ள ஆயத்தமாக முதலில் எந்த வித ஆடை என முடிவு; வழக்கம் போலச் சியாமளா கோமணத்தைப் பரிந்துரைக்க மற்றவர்களும் ஆமோதிக்க; நான் மீண்டும் சரியாக யோசித்து முடிவெடுக்க அவகாசம் செய்தும் அனைவரும் குதூகலித்து உடனே நச்சரிக்க நானும் ஒப்புக்கொண்டு பின்னர் என் சேட்டையைத் தொடங்க ஆரம்பித்தேன்.
நான், "எனக்கு எண்ணெய் தேய்க்க முதல் நிபந்தனை - எல்லாவிதத்திலும் எனக்குச் சரிசமமாக இருக்க வேண்டும்; அதாவது எனக்குத் தேய்த்து விடுபவர்களுக்கு நானும் தேய்த்து விடுவேன்; அடுத்து அவர்களும் அதே ஆடையில் இருக்க வேண்டும். எண்ணெய் உடலில் எல்லாஆஆ (மிக ஆழமாக அழுத்திச் சொன்னேன்) இடத்திலும் தேய்க்கவேண்டும்; எண்ணெய் தேய்த்த பின் அரை மணி நேரம் எண்ணெய் உடம்பில் ஊறவைத்த பிறகே குளிக்கனும்.
இந்த எல்லா நிபந்தனைக்கும் உடன்பாடு இல்லாதவர்கள் இந்த எண்ணெய் குளியலுக்கு விருப்பமில்லாதவர்கள் அவர்கள் தடை செய்யப்பட்டவர்கள் அதாவது அவர்கள் சும்மா இருந்து வேடிக்கை பார்க்க முடியாது; அவர்களை எல்லாம் இந்த வீட்டுக்குள் பூட்டி வைக்கப்படுவார்கள் எண்ணெய் குளியல் முடியும்வரை."
அதைக் கேட்டதும் அனிதாவைத்தவிர மற்ற எல்லாப் பெண்களும் ஒரே சமயத்தில் 'ஹாங்' சத்தமாகவே வாயைப்பிளந்தனர்.
அனிதா, "எனக்கு இது நியாமாத்தான் படுது; இது அமெரிக்காலச் சாதாரணம்தான் ஆனால் எனக்குத் தெரியும் நீங்கச் சிலர் குறிப்பா சியாமளா ஒத்துக்க மாட்டாள்; (என்னை நோக்கி) சரி அப்போ சியாமளா கலந்துக்குறதை தவிர்க்கிறதுதான் உன் திட்டமா?"
நான், "அப்படின்னா நான் நேரடியாகவே சொல்லிவிடுவேனே; இந்த விதி முறைகளைப் பின்பற்றியே சியாமளா சந்தோஷமா செய்ய வாய்ப்பு இருக்கு."
அனிதா, "Really Are you sure?" நான் ஆமென உறுதியளிக்க அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
தொடரும்