Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 19: கூட்டுக்குடும்ப விருந்து விகடம்
கயல்விழி, "அட ஏன் அக்கா பயப்படுறீங்க; உண்மையைச் சொல்ல ஏன் பயப்படனும்; நாம உண்மையைப் பேசியே தர்க்கம் செய்து வெற்றி பெறலாம் தைரியமா சொல்லுங்கள்."
ஷீலா, "அட அதுதானே நாம ஏன் பொய் சொல்லி ஏமாத்தனும்; நீங்க ஒரு டாக்டர் உங்களுக்குத் தெரியாதா; அதைவிடக் கூத்து என்னன்னா (ஜெயாவை நோக்கி) உங்கள் வீட்டுலையே உங்கள் பொன்னு உங்களுக்கு ஒரு சொட்டுக்கூடக் குடிக்கக் கொடுக்க மாட்டேன் மிரட்டுவது ரொம்பச் சிரிப்பா இருக்கு; அதென்ன சாமர்த்தியம்; நாம பார்த்திடலாம் ஒரு கை; நீங்கப் பயப்படாமல் தைரியமா உண்மையச் சொல்லு ஜெயா."
நான், "ம்ம்ம் இப்பத்தான் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது."
புன்னகைத்த ஜெயா, "அட அசட்டுச் செல்லங்களா தம்பி விரித்த வலையில் நல்லா விழுந்துட்டோமேன்னு நானே எப்படித் தப்பிக்குறதுன்னு குழம்பி முழிச்சிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா அது தெரியாமல். ஹூம் அவ்ளோதான் இதற்கு மேல தப்பிக்கவே முடியாது. சரி ஆமாம்ப்பா நான் குடிப்பேன்; பிடிக்கும் - போதுமா." அதைக் கேட்டதும் வெற்றியின் அறி குறியாகக் கை குலுக்கினாள் அனிதா.
நான், "இப்படிச் சாதாரணமாகப் பிடிக்கும் குடிப்பேன்னு சொன்னால் எப்படி; நிறையப் பிடிக்கும் நல்லா ரசிச்சிக் குடிப்பேன்னு (செல்லமாக ஜெயா என் காதைத்திருக)... எம்மா எப்பா சரிசரி."
ஜெயா, "ஆமாம் நிறையப் பிடிக்கும் நல்லா ரசித்துத்தான் குடிப்பேன்; போதுமா?"
அனிதா, "ம்ம்ம் அப்படி வா வழிக்கு; சபாஷ்." மீண்டும் கை குலுக்கினாள்.
நான், "சரி இதை நீங்க எப்போது எந்த வயசில் முதல்முதல்ல குடித்தீர்கள்."
உடனே அதிர்ந்தவராக ஜெயா, "ஹான் அதெல்லாம் இப்போது எதற்கு; ம்ம்ஹூம் நான் சொல்ல மாட்டேன் ம்ஹூம் ஹூம்." பதற்றத்தில் தனக்குத் தானே முடியாது சொல்லமாட்டேனென்று தலையசைத்துக் கொண்டிருந்தார்.
உடனே அனிதா அவர் இடது தோளைப் பற்றிய செல்லமாக, "அம்மா அம்மா ப்லீஸ்! அம்மா ப்லீஸ்! உங்க அனுபவத்தை பகிர்ந்து கோங்க ப்லீஸ்!"
மிகுந்த வெட்கத்துடன் ஜெயா, "ஒஹ் ஓஹ் இனியவளே அது ஒண்ணும் அப்படி நல்ல விஷயமில்லை தயவுசெய்து வற்புறுத்தாதே."
அனிதா, "ஓஹ் அம்மா அது ஒண்ணும் தப்பு இல்லே; நாம எல்லாரும் நண்பர்கள்தானே."
ஜெயா, "ம்ம்ம்ம் சரிசரி... முதமுதல்லன்னா... நான் எட்டோ... ஒன்பதோ!"
'ஹாங்' அனைவரும் சத்தமாக அதிர்ச்சியில் கட்டுப்பாடின்றி அதிர்ந்து 'என்ன எட்டு வயசிலேயா?'
ஜெயா, "இல்லை எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்குறப்போன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீங்க எல்லாம்."
கயல்விழி, "அதுவும் கிட்டத்தட்ட பதிமூன்று வயசுதான் 'ஐய்ய்யோ' பதிமூன்று வயசிலிருந்தா?"
உடனே சட்டென அவர் காதைத்திருகி ஜெயா, "அடி அசடே நான் முதல்முதல்ல சுவை பார்த்ததுதான் அப்போன்னு சொல்ல வந்தேன். அதிலிருந்து குடிக்க ஆரம்பிச்சேன்னு நான் சொன்னேனா? அடேயெப்பா என்னைச் சொல்ல விடாமல் நீங்களே கற்பனை செய்துகிட்டு."
அதே சமயம் அதிர்ந்தவளாய் அனிதா, "Oh My God thirteen years; that is under age?"
நான், "எல்லாரும் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் ப்லீஸ்! நீங்க சொல்லுங்கள் அத்தை; அதாவது அநேகமாக உங்கள் அப்பா."
ஜெயா, "ஆமாம் எங்க அப்பா குடிக்கிறதுதான் அது அப்போ அவருக்குத் தெரியாமல் கொஞ்சம் சுவைத்துப் பார்த்தேன். அது வெறும் ஆர்வக் கோளாறு தான்; யாருக்கும் தெரியாமல் ஒரு நாலைந்து முறை திருட்டுத்தனமா சும்மா கொஞ்சுண்டு தான்."
நான், "ஆனால் இது எங்களுக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி; ஏதோ நீங்க அமெரிக்கா போன பிறகுதான் ஆரம்பித்திருக்கும்னு நான்/நாங்கள் நினைத்தோம்."
அனிதா, "Yes absolutely; நானும் அப்படித்தான் நினைச்சேன்; என் இனிய அம்மாவே தயவுசெய்து தொடருங்கள்." சொல்லி முத்தமிட்டுக் கொஞ்சினாள்.
நான், "சரிசரி (அவர் முக பாவனைகளை நோக்கிக் கொண்டே) பதிமூன்று... இல்லை பதினைந்து; சரி ஒரு பதினெட்டு வயசுன்னே வைத்துக்கொள்ளலாமே (சரியெனத் தலையாட்ட) முதல்ல விவரம் தெரியாமல் குடித்ததா வெச்சிக்கலாம்.
அப்புறம் மருத்துவம் படித்து அதன் தாக்கம் என்னன்னு தெரிந்த பின்னரும் அதை விரும்பி குடிச்சிருக்கீங்க இன்னமும் குடிக்கிறீங்க. அதனால அது ஒன்றும் உடலுக்குக் கெடுதல் இல்லையென்று ஊர்ஜிதமா நம்பலாம்."
ஜெயா, "நான் அப்படிச் சொல்லலையே."
நான், "சொல்லலை ஆனால் அதுக்கும் மேல நடைமுறையில் செய்து நிரூபிச்சிருக்கீங்க."
தன் தலையில் கை வைத்து ஜெயா, "ஐயோ கடவுளே; எப்படி என் வாயாலேயே எல்லாத்தையும் வாங்கி (சட்டெனச் செல்ல கோபத்துடன் ஷீலா மற்றும் கயல் இருவரின் காதையும் பிடித்துத் திருகி) இப்போது சந்தோஷமா உங்களுக்கு.
நான்தான் சொன்னேனே அந்தத் தம்பி கிட்ட நம்ப வாய் கொடுத்து ஜெயிக்க முடியாதுன்னு. அடக் கடவுளே நான் அப்பவே விட்டுக் கொடுத்திருந்தால் என் ரகசியமாவது வெளியே தெரிந்திருக்காது."
நான் உடனே அவர் முகத்தை உற்று நோக்கி, "எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது (என்ன என அவர் கேலியாக ஜாடையாகக் கேட்க) உங்கள் முகப்பொலிவு உங்கள் சருமம் மிகப் பொலிவாக; பாருங்கள் வயசுப் பொன்னுங்களுக்கு இருக்கிற அளவுக்கு எவ்ளோ பொலிவாக இருக்கு."
ஜெயா, "அதுக்கு?... என்ன சொல்லப் போகிற?"
நான், "இதன் ரகசியம் என்னன்னு கேட்கனும்னு இருந்தேன்; இன்னைக்குதான் அதன் ரகசியம் இந்த இலகு வகைத் திராட்சை பழச்சாறுதான்னு தெரிந்து."
உடனே என் வாயைப்பொத்தி ஜெயா, "போதும்-போதும் இப்படி வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் சொல்லக்கூடாது; அதுதான் உனக்கு வேண்டியது நடந்துடுச்சி-நடத்திட்ட; இன்னும் எதற்கு இப்படி ஊரை ஏமாத்தனும்."
நான், "சரிசரி விஷயத்துக்கு வருவோம்; ஆக மகா ஜனங்களே இப்படி ஒரு நல்ல பாணத்தை உங்களுக்குக் குடுக்குறதுக்கு அத்தை ஏன் மறுத்தாங்க? இது ஒரு நல்ல கேள்வி நாம கொஞ்சம் அலசி ஆராயவேண்டும். அதுக்கு அப்புறம் அதைக் குடிக்கலாமா வேண்டாமான்னு பார்க்கலாம்.
அது ஒரு குடி பாணம் தானே அதைக் குடிக்க ஏன் இவ்ளோ தடையென்று பார்த்தால் அதில் கொஞ்சம் ஆல்கஹால் (Alcohol) கலந்திருப்பது தான். சரியா அத்தை? (ஆமெனத் தலையசைக்க) சரி அதை அவுங்க குடிக்கிறார்கள் அவுங்க பொன்னையும் குடிக்க அனுமதிக்கிறார்கள் ஆனால் மத்தவங்களை வேண்டாமென்று ஏன் தடை செய்கிறார்கள்? இதுதான் இங்கே முக்கியமா யோசிக்க வேண்டிய விஷயம்.
இந்தக் கொண்டாட்டம் நடப்பது அவுங்க வீட்டில்; இந்தப் பாணத்தின் இயல்பு தெரியாமல் பின்னர்த் தெரிந்ததும் அது இவ்ளோ மோசமானதுன்னு தெரியாமல் டாக்டர் கொடுத் தாங்கன்னு குடிச்சிட்டேன்னு நினைத்தால்.
அதாவது அதைப் பற்றி முழுவதும் அறியாமல் குடித்து விட்டு 'ஒரு டாக்டர் இப்படிச் செய்வாங்கன்னு எதிர்பார்க்கலைன்னு' அந்தர் பல்டி அடித்தால். (அனைவரும் 'சேச்சே' என மறுக்க) இல்லை ஒரு வேளை அப்படி நடந்தால் எதற்கு வீணாக அந்த ஆபத்தான செயல்.
இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு என்னன்னா அதைப் பற்றி முழுவதும் புரிந்து அதன் நேர்/பக்க விளைவுகளுக்குத் தானே முழுப்பொறுப்பு ஏற்கும் மனநிலையில் இருக்கிறீர்களா? என்பதுதான் அத்தைக்குச் சந்தேகம் குழப்பத்துக்குக் காரணம்."
சற்றும் தயங்காமல் என்னை வந்து கட்டிக்கொண்டு ஜெயா, "அப்பா போதும் தம்பி; இதற்கு மேல சொல்ல ஒன்றுமில்லை; நீ அவுங்களுக்குத் தெளிவாக்கிட்டே." பாராட்டினார்.
நான், "இதுல ஒரு சிரிப்பான விஷயம் என்னன்னா; நீங்க எல்லாரும் இதற்கு முன்னே குடிச்சிருப்பீங்க ஆனால் இதுதான் முதல் முறைன்னு நினைச்சிக்குறதுதான் அறியாமை!"
மதுவுக்கு புதிய இலக்கணம்
ஷீலா, "அட நான் குடித்ததில்லை; குடித்திருந்தால் நான் சொல்லத்தயங்க மாட்டேன் உனக்குத் தெரியாதா?" மற்றவர்களும் இதுவரை குடித்ததில்லையெனக் கூறினர்.
நான், "தெரியாமல் குடிச்சிருப்பீங்க; நான் நிரூபிக்கட்டுமா?"
சிரித்துக்கொண்டே ஜெயா, "எல்லாரும் மாட்டினார்களா? நல்லவேளை இந்த முறை நான் தப்பித்தேன்."
நான், "எங்க தப்பித்தீர்கள் அவுங்களுக்குக் குடிக்கக் கொடுத்ததே அநேகமாக நீங்களாகத்தான் இருக்கும்."
ஜெயா, "ஹான் நானா? வாய்ப்பே இல்லை."
நான் ஷீலா அத்தையை நோக்கி, "சரி உங்களுக்குச் சளி, காய்ச்சல் இருமல் வந்தால் என்ன செய்வீர்கள்?"
ஷீலா, "இதென்ன கேள்வி உடனே டாக்டர் ஜெயா கிட்டதான் வருவோம்; நீ வருவதற்கு ஒரு வாரம் முன்ன கூட எனக்குச் சளி கொஞ்சம் காய்ச்சல் அப்புறம் இருமல் வந்து டாக்டர் கிட்ட வந்து ஊசி மாத்திரை மருந்து எல்லாம்."
நான் குறுக்கிட்டு, "முக்கியமா இருமல் மருந்து அதாவது (Cough Syrup)."
ஷீலா, "ஆமாம்-ஆமாம் அதில்லாமலா அதுதான் முக்கியம் இருமலைக் குறைத்து நல்லா தூங்க வைக்கிறது அதுதானே; நான் எப்பாவுமே இருமல் மருந்தைக் கேட்டு வாங்கிக்குவேன்."
பானு, "ஆமாம்-ஆமாம் எனக்கும் அது நிறையப் பிடிக்கும் நானும் கேட்டு வாங்கிக்குவேன், இவர்களும்தான்." சொல்லி சியாமளா மற்றும் சாந்தினியைச் சுட்டினாள்.
நான், "அட குடும்பமே குடிகார குடும்பமா?"
கயல்விழி, "அட நானும் அப்படித்தான் அது குடித்தால் இருமல் கட்டுப்படும் அதைவிட நல்லா தூக்கம் வரும்."
லஷ்மி, "அது எல்லாருக்கும் தான்; எனக்கும்தான்."
நான், "(ஜெயா அத்தையை நோக்க அவர் புரிந்தவராய் புன்னகைக்க), "அட என்ன அத்தை இப்படி ஒரு குடும்பத்தையே குடிகார இல்லை-இல்லை ஒரு ஊரையே குடிக்க வெச்சி கெடுத்துட்டிங்களே."
உடனே புரிந்தவளாய் என்னைக் கட்டிக் கொண்ட அனிதா, "Wov Brilliant நாம் குடிக்கிற இருமல் மருந்தில் நிறைய ஆல்கஹால் இருக்கு அதைத்தான் ரகு சொல்லுறான்."
மேலும் சிறிது விளக்கத்திற்குப் பின்னர் ஒரு வழியாக அனைவரும் மனமுவந்து குடித்து அனுபவிக்க ஆரம்பித்தனர். கொண்டாட்டம் குதூகலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. முதல் முறை குடிப்பவர்கள் அனைவரும் இரண்டாம் கோப்பைக்கு மிக ஆவலாக முன்னேறினர்.
அதிலும் மிக அதிக ஆவலுடன் முன்னேறியவர்களில் கயல்விழியும் ஷீலாவும் குறிப்பிடத்தக்கவர்கள்; இருவரும் எந்தவித கவலை கட்டுப்பாடின்றி மிகச் சந்தோஷமாக அதே சமயம் சிறிதளவும் சங்கடமின்றி மிகவும் பகிரங்கமாகவும் நடந்து கொண்டனர்.
அதே சமயம் நான் முன்பு காம நகைச்சுவை பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வர ஷீலா அத்தை மீண்டும் அதே போல் தொடர வேண்டுமென நச்சரிக்க அதைத்தொடர்ந்து கயல்விழியும் வற்புறுத்தத் தொடங்கினேன்
நகைச்சுவைக் கதை:
ஒரு அப்பா, அம்மா மற்றும் அவர்களின் பருவ வயதுப் பெண் ஆக மூவரும் சுற்றுலாவுக்கு ஜப்பான் சென்றவர்கள் அங்கு ஒரு கடிகார கடையில் பல விதம்விதமாகக் கடிகாரங்கள் அவர்களைக் கவர்ந்திழுக்க மிக ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பருவப் பெண் ஒரு மிகச் சிறிய கிட்டத்தட்டக் கட்டை விரல் நகம் அளவே இருந்த கைக்கடிகாரத்தை மிகவும் பிடித்துப் போக அதை வாங்கிக் கொடுக்கும்படி வற்புறுத்த அதன் விலையைக் கேட்டதும் அதிர்ந்து மறுத்து விட்டார் அப்பா.
தொடரும்