பாகம் 20: குடும்ப கொண்டாட்டம் விகடம

Story Info
குடும்ப கொண்டாட்டம் விகடம் தொடர்ச்சி; குற்றவாளி கைது
1.7k words
1
3
00

Part 106 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 20: தொடர்ந்த குடும்ப கொண்டாட்டம் விகடம்

நகைச்சுவைக் கதை:

ஒரு அப்பா, அம்மா மற்றும் அவர்களின் பருவ வயதுப் பெண் ஆக மூவரும் சுற்றுலாவுக்கு ஜப்பான் சென்றவர்கள் அங்கு ஒரு கடிகார கடையில் பல விதம்விதமாகக் கடிகாரங்கள் அவர்களைக் கவர்ந்திழுக்க மிக ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பருவப் பெண் ஒரு மிகச் சிறிய கிட்டத்தட்டக் கட்டை விரல் நகம் அளவே இருந்த கைக்கடிகாரத்தை மிகவும் பிடித்துப் போக அதை வாங்கிக் கொடுக்கும்படி வற்புறுத்த அதன் விலையைக் கேட்டதும் அதிர்ந்து மறுத்து விட்டார் அப்பா.

மகளோ மீண்டும் கெஞ்சிக் கூத்தாடி கேட்க அப்பா உண்மையை விளக்கினார். தன்னிடம் இருப்பது பணம் அதை வாங்கும் அளவுக்கே இருப்பதாகவும் ஆனால் அதை இந்தியாவுக்குள் கொண்டு செல்லும் போது அதன் விலையில் மூன்று மடங்கு தனிக்கை வரி கட்ட வேண்டும் அந்த அளவுக்குத் தன்னிடம் பணம் இல்லை என உண்மையை விளக்கினார்.

மேலும் தனக்கும் ஒரு மேஜைக் கடிகாரம் மிகவும் பிடித்திருக்கிறது என ஒரு நடுத்தர அளவு ஆப்பிள் பழம் அல்லது உரித்த தேங்காய் அளவுள்ள கடிகாரத்தைச் சுட்டினார். ஆனால் அதுவும் கிட்டத்தட்ட அதே பிரச்சினை அதாவது அதிக வரி செலுத்த வேண்டிய வகை. அதனால் அதைத் தவிர்ப்பதாக விளக்கினார்.

அதைக்கேட்டதும் மனம் வருந்திய பெண் தீவிரமாக யோசித்துப் பின்னர் அதை வாங்கிக் கொடுக்கும்படி வற்புறுத்தியவள் அதை இந்தியாவில் தனிக்கை சோதனையாளர்கள் கண்ணில் படாமல் தன்னால் மறைத்து எடுத்துச் செல்ல முடியும் என நம்பிக்கையூட்டினாள்.

அப்பாவோ அது சாத்தியமில்லை அப்படி அது சாத்தியமாகும் பட்சத்தில் அதை வாங்கிக் கொடுக்க உறுதி கூறினார். அவளோ அதை விளக்கமாகச் சொல்ல முடியாது ஆனால் நிச்சயம் தன்னால் மறைத்துக் கொண்டு செல்ல முடியும் எனத் திடமாக நம்பிக்கை ஏற்படுத்த அப்பாவும் நம்பி வாங்கிக் கொடுக்கிறார். அவளும் அதை வெற்றிகரமாக இந்தியாவுக்குள் கொண்டுவந்து விடுகிறாள்.

வீட்டுக்குச் சென்ற பிறகு தான் வெற்றிகரமாக மறைத்துக் கொண்டு வந்த தன் கைக்கடிகாரத்தைக் காட்டி பெருமை அடித்துக் கொள்ள அவர் அப்பாவுக்கு மகளின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்து போற்றி அந்த ரகசியத்தைக் கேட்கிறார்.

மகளோ அது சொல்ல முடியாதென மறுக்க அப்பாவோ மிகுந்த ஆவலோடு விடாமல் வற்புறுத்த மகளும் அப்பாவுக்கு ரகசியமாகச் சொல்வதாகச் சொல்லி அது மிகச்சிறியது அதனால அதை நான் அங்கே வைத்து மறைச்சி எடுத்து வந்துட்டேன்னு சொல்கிறாள்.

அங்கேன்னா எங்கே கொஞ்சம் தெளிவா சொல்லென்று கேட்க அவளுக்கு வெட்கமா இருக்குன்னு சொல்லி தன் அறைக்குக் கூட்டிப் போயி தன் அந்தரங்கத்தினுள் (யோனிக்குள்) மறைத்து வைத்ததைச் செய்து காட்ட ஒரு கணம் வியந்து பாராட்டியவர் திடீரெனக் கடும் கோபம் கொண்டு திட்டி அடிக்கிறார்.

என்ன காரணமாக இருக்கும் என உங்களில் யாராவது யூகிக்க முடிகிறதா? சில நிமிட சலசலப்புக்குப்பின் அனைவரும் தெரியவில்லை எனக் கூறினர்.

தன் சாமர்த்தியத்தைப் புகழாமல் இப்படித் திட்டி அடிக்கிறாரே என மகள் கேட்க அட அசட்டுப்பெண்ணே இந்த யோசனையை அங்கேயே சொல்லி இருந்தால் நானும் எனக்குப் பிடித்த அந்த மேஜைக் கடிகாரத்தையும் வாங்கி வந்திருப்பேனே அதைக் கெடுத்துவிட்டதனால் தனக்குக் கோபம் என்கிறார்.

உடனே மகள் சொன்னால் ஐயோ! அப்பா அவ்ளோ பெரிசு உள்ளே போகாது என்னால முடியாதென்று கூற அப்பாவும் அது எனக்குத் தெரியும் என்கிறார்.

மீண்டும் உங்களில் யாருக்காவது அவர் கோபத்தின் அர்த்தம் அல்லது நிலைமையை யூகிக்க முடிகிறதா?

மீண்டும் அனைவரும் இல்லை எனக் கூறினர்.

உடனே அவர் அப்பா நான் உன்னைச் சொல்லவில்லை இந்த யோசனை மட்டும் எனக்குச் சொல்லி இருந்தால் நான் அந்த மேஜைக் கடிகாரத்தை வாங்கி இதே போல உன் அம்மாவைச் செய்யச்சொல்லி வெற்றிகரமாகக் கொண்டு வந்திருப்பேனென்று சொன்னாராம்.

அனைவரின் பலத்த சிரிப்பில் வீடு முழுவதும் அதிர்ந்தன; காரணம் கிட்டத்தட்ட அனைவரும் ஓரளவு மது போதையில் சுற்றுச்சூழலை மறந்து அனுபவித்தனர். அதிலும் முக்கியமாக ஷீலா மற்றும் கயல் இருவரும் மிகச் சத்தமாகச் சிரித்தனர்.

அவ்விருவருக்கும் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட நேரமானது. அதைத்தொடர்ந்து ஷீலா அன்று பண்ணையில் பகிர்ந்த பெண்-மார்பக-பலூன் விகடம் இதைவிட மிகச் சிறந்ததென அதை மீண்டும் சொல்ல வற்புறுத்த அனைவரும் இணங்க நான் அதைவிட இன்னொரு விகடத்தை முதலில் சொல்லிவிட்டு அதன் பிறகு அதைச் சொல்ல வாக்களித்துத் தொடர்ந்தேன்.

அடுத்த விகடம்:

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெரிய பணக்கார ஜமீன்தார் தன் இரண்டு ஆண்பிள்ளைகளை மிக ஒழுக்கமாக வளர்ந்து வந்தார். தற்போதைய மாறிவரும் சமூகத்தைக் குறிப்பாக நகர/மாநகர வாழ்க்கை முறையை முற்றிலும் விரும்பாத மனப்பாங்கு கொண்டவர் அந்த ஜமீன்தார்.

எனவே தன் பிள்ளைகளைக் கிட்டத்தட்ட 25 வயது; அதுவரை அவர்களை அந்த ஊரைவிட்டு வெளியூருக்கோ/மற்ற இடங்களுக்கோ அனுப்பாமல் மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வளர்த்து வந்தார். இதனால் அந்தப் பிள்ளைகள் இருவரும் நகர வாழ்க்கைச் சூழலில் அதிக ஏக்கம் கொண்டிருந்தனர்.

உலக நடப்பு அறிவு குன்றிய முட்டாள்களாகவே வளர்ந்தனர். வேளை எதுவும் செய்யாமல் நன்கு உணவு உண்டு சோம்பேறிகளாகவே வளர்ந்தனர். எதிர்பாராத விதமாக அந்த அப்பா இறந்துவிட அந்தச் சொத்து முழுவதும் அந்த பிள்ளைகள் கைவசம் வந்தது.

இப்படி திடீரென பல கோடி மதிப்பு சொத்துக் கிடைத்த சந்தோஷத்தில் அந்தச் சகோதரர்கள் இருவரும் தலை கால் புரியாமல் முக்கியமாக தங்களைக் கட்டுப்படுத்த யாரும் இன்றித் தங்கள் விருப்பப்படி செலுவு செய்து மகிழ விரும்பினர்.

இருவரும் அருகிலிருந்த மாநகரத்திற்குச் சென்று சுற்றிப்பார்த்துச் செலவு செய்து அனுபவிக்க எண்ணி ஒரு விலை உயர்ந்த விடுதியில் தங்கி அந்த ஊரைச் சுற்றிப்பார்க்கத் திட்டமிட்டனர்.

முதல் நாள் காலை இருவரும் விடுதியை விட்டுப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் செல்லாமல் தனித்தனியே வெவ்வேறு திசைகளில் சென்று அனுபவித்து மறு நாள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தனர்.

முதலில் மூத்தவன் சென்ற வழியில் ஒரு விளம்பரத்தைக் கண்டான். 'ரூபாய் 10,000, ஒரே ஒரு மணி நேரப் பொழுது போக்கு நடவடிக்கையில் ஒரு கிலோ எடைக் குறைப்பு உத்தரவாதம்' என வரிகள் அதனுடன் மிகக் கவர்ச்சிக் கன்னிகளின் படங்கள் அவனைச் சுண்டி இழுத்தது.

உடனடியாகப் பணம் செலுத்தி அதில் பங்குகொள்ள முடிவெடுத்தான். அந்தப் பொழுதுபோக்கு விளையாட்டு சட்டதிட்டங்கள்.

1. அந்த பொழுதுபோக்கு விளையாட்டு ஒரு மணி நேரம் மட்டும் தான் மேலும் ஒருவர் ஒரு நாளில் ஒரு முறைதான் விளையாட அனுமதி.

2. பணம் செலுத்திய பின்னர் அந்த விளையாட்டில் கலந்து கொள்பவர் ஒரு பெரிய மைதானத்தில் விடப்படுவார்.

3. அந்த திறந்தவெளி மைதானம் மற்றவர்கள் யாரும் பார்க்க / அணுக முடியாத இடம்.

4. அந்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் கலந்துகொள்பவர் அவருடன் விளையாடி மகிழ்விக்க மற்றும் ஒருவர் என இருவரைத்தவிர வேறு எந்தவித உயிரினமும் இருக்காது; அதனால் எந்த வித கவலை/பயமுமின்றி அந்தத் திறந்தவெளி மைதானத்தில் வளம் வரலாம்.

5. விளையாடுபவர் அந்த மைதானத்திற்குள் சென்றதும் ஒரு ஐந்து நிமிட இளைப்பாறலுக்குப்பின் ஒரு அதிசயம் நடக்கும். அதுதான் அந்தப் பொழுது போக்கு விளையாட்டு கிளர்ச்சியின் தொடக்கம்.

6. தொடர்ந்து ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்படும் பின்னர் விளையாட்டு முடியும்.

விதிமுறைகளைப் புரிந்து பணம் செலுத்தி உட்புகுந்தான் நம் நாயகன். அவனை இரண்டு பாதுகாப்பு வீரர்கள் அழைத்துச் சென்று அந்த மைதானத்தின் வாயிலைத் திறந்து வழி அனுப்பி உடனே அந்த வாயிலை மூடினர்.

உள்ளே சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்தவன் சற்றுத் தொலைவில் ஒரு மரத்தின் மறைவிலிருந்து வெளிப்பட்ட ஒரு 18 வயது இளம் அழகி தான் அணிந்திருந்த இரு துண்டு உடையையும் கழற்றி வீசி முழு நிர்வாணமானாள்.

நாயகனை நோக்கி, "வாலிபரே இதோ பார் நான் முழு நிர்வாணம்; உன்னால் முடிந்தால் என்னைப் பிடி அப்படி என்னைப் பிடித்து விட்டால் நீ உன் இஷ்டம் போலத் திருப்தியாக அனுபவிக்கலாம்; முடிந்தால் வந்து முயற்சி செய்!" சொல்லி ஓடினாள்.

சவாலை ஏற்று மோக தாகத்துடன் ஓட ஆரம்பித்த நாயகன் ஓடினான் ஓடினான்; ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் தொப்பையும் தொந்தியும் கொண்ட அவனால் அந்த இளம் சிட்டை பிடிக்க முடியவில்லை.

அந்தப்பெண்ணும் பல தருணங்களில் சில அடி தூரத்தில் பிடிக்கத் தவறும் படி விளையாட்டு காட்டினாள். அதனால் அவன் கோபம் கொண்டு அவளை எப்படியும் பிடித்து ஓத்துவிட மனம் கிளர்ந்தெழ விடாமல் துரத்தினான்.

ஓடினான் ஓடினான், படு வேகமாக ஓடினான் ஆனால் அவனைவிட அந்தப்பெண் வேகமாக ஓடினாள். ஆனால் அவர்கள் இருவரையும் விட நேரம் தான் அதி வேகமாக ஓடியது. அவனால் அவளைப் பிடிக்க முடியாமல் நேரம் கடந்து விட்டது.

ஆனால் சற்றும் மனம் தளராத நம் நாயகன் மீண்டும் பணம் செலுத்தி இரண்டாம் சுற்றுக்கு ஆயத்தமாக; ஆனால் விதிமுறைப்படி ஒருவர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பங்கெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டு விருப்பப்பட்டால் மறு நாள் முயற்சி செய்யலாமெனத் தெரிவிக்க வேறு வழியின்றி விடுதிக்குத் திரும்பினான்.

பின்னர் விடுதியில் தன் சகோதரனிடம் விவரத்தைக் கூறி நாளை எப்படியும் அந்தப் பெண்ணைப் பிடித்துத் திருப்தியாக அனுபவித்தால்தான் தன் மனம் சாந்தமாகும் எனக் கர்ஜித்தான். இந்த விவரங்களைக் கேட்ட இளையவன் தன் அனுபவத்தைப் பகிர்ந்தான்.

அவனும் அதைப்போல ஒரு விளம்பரத்தைக் கண்டதாகவும் அதில் 'ரூபாய் 10,000, ஒரே ஒரு மணி நேரப் பொழுது போக்கு நடவடிக்கையில் இரண்டு கிலோ எடைக் குறைப்பு உத்தரவாதம்' எனவும் எடை குறையவில்லை என்றால் பணம் திருப்பித்தரப்படும் என உத்தரவாதம் எனப் போட்டிருந்ததாகவும்' ஆனால் தனக்குச் சந்தேகமாக இருந்ததால் அதை முயற்சி செய்யவில்லை எனக் கூறினான்.

உடனே மூத்தவன் அட முட்டாளே நீ சொல்வதைப்பார்த்தால் அந்த இடம் நான் போன இடத்தைவிட மேம்பட்டதாக இருக்கும் போலத்தெரிகிறது எனவே நாளை முதல் வேளையாக அதை முயல வேண்டும் என முடிவெடுத்தான்.

மறுநாள் விரைந்து சென்று முதல் ஆளாகக் கலந்து கொண்டு உற்சாகமாக மைதானத்தில் நுழைந்ததும் பெரிய ஆச்சரியம் மைதானத்தின் மத்தியில் பூமிக்குள் இருந்து ஒரு பெரிய கூண்டு வெளிவந்தது.

அந்தக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு 18 வயது மதிக்கத்தக்க ஆப்ரிக்கா நீக்ரோ பெண். அவளும் தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டி வீசி தன்னை நிர்வாணமாக்கிக் கொண்டாள்.

அவள் உடல் ஒரு சாதாரண இளம் பெண்ணின் உடலைப் போல் இல்லாமல் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து Six Pack / Eight Pack என முறுக்கேறிய உடல் கட்டுடன் தட்டையான மார்புடன் சிறிதளவும் பெண்மை வெளிப்படாத ஒரு சீறிய வேங்கையாகக் காட்சி அளித்தாள்.

அதை முற்றிலும் எதிர்பாராத ஏமாற்றத்துடன் முகம் வாடினான். ஆனால் அடுத்து அந்த ஏற்பாட்டாளர்கள் அறிவித்த செய்தி அவன் நெஞ்சை உலுக்கி நிலைகுலையச் செய்தன.

வாலிபரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இந்த இரும்புக்குண்டு திறக்கப்பட்டதும் இந்தக் காமவெறிப் பிடித்த வேங்கை சீறிப்பாயும் உன்மேல். நீ அந்த வேங்கைப் பெண் கையில் சிக்கினால் அவள் காம வெறியில் உன்னைச் சின்னாபின்னமாக்கி விடுவாள்.

முடிந்தால் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவள் கையில் சிக்காமல் தப்பித்து ஓடி உன் காம உறுப்புகளைக் காப்பாற்றிக்கொள்! என முடிக்க அதிர்ந்தான். அதே சமயம் அந்தப்பெண் காம வெறியில், "இன்று எனக்குச் சரியான வேட்டைதான் எனக் கர்ஜித்தாள்."

அதைக்கேட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தவன் ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருந்தான் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவள் கையில் சிக்காமல்.

ஒரு மணி நேர முடிவில் அந்தப்பெண்ணைப் பிடித்துக் கூண்டில் அடைத்து பின்னர் மைதானக் கதவுகள் திறந்ததும் ஓட்டம் பிடித்த நம் நாயகன் இந்த நகர வாழ்க்கையே வேண்டுமென நேராக ஊருக்கே ஓடிவிட்டான்.

புரிந்தவர்கள் கட்டுக்கடங்காமல் சிரிக்கப் புரியாத சிலர் சற்றே விழிக்க மற்றவர்களுக்கு சற்று விளக்கியபின் புரிந்து சிரித்தனர். அதற்குள் சில மதுக் கோப்பைகளை முடித்த நிலையில் அனைவரின் கொண்டாட்டமும் உச்ச நிலையிலிருந்தது.

இம்முறை மீண்டும் கயல் சந்தோஷத்தின் உச்ச நிலையில் மிகச் சத்தமாகக் கட்டுப்பாடின்றிச் சிரித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் ஒரு தொலைப்பேசி அழைப்பு அதுவும் சற்றும் எதிர்பாராமல் மறுமுனையில் பெரியவர் (கயல்விழியின் அப்பா)

அதிர வைத்த கொலைச் சதி

மறு முனையில் பேசத் தொடங்கியவர் சட்டென நிறுத்தி என்னையும் பேசாமல் இருக்கும் படி தடுத்து நீண்ட பல வினாடிகளுக்குப் பின் அங்கே பலத்த சிரிப்பொலிகளில் தன் மகள் கயல்விழியின் சிரிப்பொலியை அடையாளம் கண்டு அதை என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் நீண்ட பல நொடிகள் மிகப் பொறுமையாகக் கேட்டு ரசித்தார்.

பின்னர் உணர்ச்சிப்பூர்வமாக எனக்கு நன்றி தெரிவித்தார். அதாவது அவர் தன் மகள் இந்த அளவுக்குச் சந்தோஷமாக இருந்ததே இல்லை எனவும் அதிலும் இப்படிக் கட்டுப்பாடின்றிச் சிறு குழந்தை போல வாய் விட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேட்கும் அளவுக்கு அதிகச் சத்தமாகச் சிரித்து மகிழ்வது நடக்காத அதிசயம் என வியந்தார்.

பள்ளிச் சிறுமி பருவத்தில் ஓரளவு சத்தமாகச் சிரித்து மகிழ்ந்ததுண்டு ஆனால் பருவ வயதுக்குப் பின் பலர் முன்னிலையில் வாய் விட்டுச் சிரித்ததே இல்லை எனவும் அதனால் அவர் வியந்து மன மகிழ்ந்து பாராட்டி நன்றி தெரிவித்தார்.

பின்னர் அந்த வாகன கொலை விபத்தில் தேடிக்கொண்டிருந்த ஓட்டுநரைக் கண்டுபிடித்து விட்டதாகவும் தற்போது தன் காவலில் வைத்திருப்பதாகவும் அவனை நாளை சந்தித்து விசாரித்து அடுத்த கட்ட முடிவெடுக்கவே என்னைத் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.

முடிவில் தன் மகளுக்குத் தான் தொடர்பு கொண்ட விஷயத்தை இன்று தெரியப்படுத்த வேண்டுமெனவும் முடிந்தவரை அவர் சந்தோஷமாக இருக்கும் காலத்தை நீடித்து இருக்க வேண்டி நாளை சொல்வதே நல்லதெனப் பரிந்துரைத்தார்.

நானும் அது நல்ல முடிவென ஆமோதித்தேன். கிடைத்த செய்தி மேலும் மகிழ்ச்சியூட்ட மேலும் மேலும் குடித்து மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

மறு நாள் கயல்விழியும் நானும் புறப்பட்டுச் செல்லும் வழியில் தனிமையில் நான் பல விவரங்களை விளக்கினேன். சிறிதே கலங்கிய கண்களுடன் என்னை அணுகி ஆதவராய் என் மார்பில் சாய்ந்த கயல், "ஆமாம் ரகு நாம கொஞ்சம் அளவுக்கு அதிகமா ரகளைச் செய்து கொண்டாடினோம்.

எனக்கு என்ன ஆச்சின்னு தெரியலை என் வாழ் நாளில் இப்படிக் கட்டுப்பாடில்லாமல் சின்னப் பொன்னாட்டம் கூத்தடிச்சி கும்மாளம் போட்டதில்லை அப்படி நடக்குமென்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

எல்லாம் ஏதோ கனவு போல இருக்கு. உண்மையைச் சொல்லனும்னா... நான் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன் நான் வந்தது முக்கியமா உன்னைப் பார்க்கத்தான்.

அதுக்கு எனக்குக் கிடைத்த நல்ல ஒரு சாக்கு (காரணம்) தான் டாக்டர் ஜெயாவையும் அவுங்க பொன்னையும் சந்திக்கிறது. (நீண்ட தயக்கத்திற்குப் பின்) வந்து நான் சொல்கிறது... கொஞ்சம் அசிங்கமா."

நான் குறுக்கிட்டு, "நாம் அந்தரங்க தோழ தோழியர் நமக்குள்ள அப்படி!"...

குறுக்கிட்ட கயல், "ஆமாம் உங்கிட்டயே சொல்லக் கூசுகிறது... உன்னைக் கட்டிக்கிட்டே இருக்கனும்... நீ... நீ எனக்கு வேணும்ப்பா!... ஆனால் அது அசிங்கம்."

முத்தமிட்டு வாயடைத்த நான், "ஆட அவ்ளோதானே இதற்கு போயி அசிங்கம்னு; எனக்கும் உங்கள் மடியிலேயே இருக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு."

கயல், "நேற்று... எனக்கு ரொம்பக் குற்ற உணர்ச்சியோடு இருந்தது ஆனால் அவுங்களை எல்லாம் சந்தித்துப் பழகினதும் ரொம்ப வித்தியாசம் உணர ஆரம்பித்தேன். என் மனம் பல விதமாகப் பக்குவம் அடைந்தது.

முக்கியமா நான் வெளியே மத்தவங்களோடு பழகாமலிருந்தது தப்புன்னு புரிஞ்சிகிட்டேன். இப்படி நல்ல ஜனங்கள் சுத்தி இருந்தால் ரொம்பச் சந்தோஷமா இருக்கும். அடுத்து என் அப்பாவைப் பற்றி... அது நீ இப்போது சொன்ன பிறகுதான் புரிகிறது.

ஆமாம் நான்... அவரை என் அப்பாவா பார்க்க மறந்துட்டேன், அவரும் தான். நாங்க இரண்டு பேருமே அந்தத் தப்பை... ஆனால் அவருக்கு இருக்கிற வேலை பொறுப்பில் அவருக்குத் தன் பொன்னை அந்த அளவுக்குக் கவனிக்க முடியாது.

நான் தான் என் அப்பாவை பாசத்தோடு கவனிச்சிக்கனும். சரி அதைவிடு எப்படியோ அதை இரண்டு பேரும் உணர வைத்து விட்டார் கடவுள். அதுக்கும் மேல உன்னைப் பார்க்க மட்டுமாவது முடியும்னு வந்தேன்.

ஆனால் கடவுள் உன்னை எனக்குத் திரும்பிச் சேர்த்து வெச்சிட்டாரு; இந்த முறை குறைந்தது ஒரு வாரம்... ம்ஹூம் அது பாவம்... வேண்டாம் இரண்டு நாளாவது என் கூடத் தங்கனும்."

நான், "கயல் நான் இப்போது வந்திருக்கிற வேலை எப்படியும் இரண்டு நாட்களுக்கு இழுத்திடும் அதனால நிச்சயம் இரண்டு நாள் இருப்பது உறுதி; அதுசரி அதென்ன 'ஒரு வாரமென்று இழுத்துவிட்டு அது பாவமென்று' குறச்சிட்டீங்க ஒரே குழப்பமா இருக்கு இதில யாரு பாவம் நானா?"

சிரித்துக்கொண்டே கயல், "இருக்கலாம் ஆனால் நான் முக்கியமாகச் சொன்னது அங்கே இருக்கிறவர்கள் எல்லாரையும் தான் இங்கே நான் ஒருத்தி மட்டும்தான் ஆனால் அங்கே அத்தனை பேர் இருக்கிறார்களே. ஷீலா வெளிப்படையாகவே சொல்லிட்டாங்க.

நீ பானுவைக் கூட்டிக்கிட்டு இரண்டு நாள் இங்கே வந்ததும் அதுக்கு முன்னே எங்கள் வீட்டுக்காரர்களுடைய சண்டைப் பிரச்சினையில இரண்டு நாளென்று உன்னைப் பல பிரச்சினைகள் அவுங்க கூட இருக்க விடாமல் பிரிச்சிக்கிட்டே இருக்குன்னு ஷீலா சொல்லி குறைபட்டாங்க.

நல்லா பழுகுற குணம்ப்பா ஷீலாவுக்கு. எங்க இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போக நாங்க இரண்டு பேரும் நெருங்கிப் பழகி சீக்கிரமா நல்லா ஒட்டிக்கிட்டோம். அந்தக் கூட்டத்திலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது ஷீலாதான்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous