பாகம் 21: சிறுவனுக்கு வலை விரிப்பு

Story Info
விளையாட்டு சிறுவனுக்கு வலை விரித்த ஆட்சியர்
1.3k words
3
11
00

Part 107 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 21: விளையாட்டு சிறுவனுக்கு வலை விரித்த ஆட்சியர்

சிரித்துக்கொண்டே கயல், "இருக்கலாம் ஆனால் நான் முக்கியமாகச் சொன்னது அங்கே இருக்கிறவர்கள் எல்லாரையும் தான் இங்கே நான் ஒருத்தி மட்டும்தான் ஆனால் அங்கே அத்தனை பேர் இருக்காங்களே.

ஷீலா வெளிப்படையாகவே சொல்லிட்டாங்க. நீ பானுவைக் கூட்டிக்கிட்டு இரண்டு நாள் இங்கே வந்ததும் அதுக்கு முன்னே எங்கள் வீட்டுக்காரர்களுடைய சண்டைப் பிரச்சினையில இரண்டு நாளென்று உன்னைப் பல பிரச்சினைகள் அவுங்க கூட இருக்க விடாமல் பிரிச்சிக்கிட்டே இருக்குன்னு ஷீலா சொல்லி குறைபட்டுக்கிட்டாங்க.

நல்லா பழுகுற குணம்ப்பா ஷீலாவுக்கு; எங்க இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போக நாங்க இரண்டு பேரும் நெருங்கிப் பழகி சீக்கிரமா நல்லா ஒட்டிக்கொண்டோம். அந்தக் கூட்டத்திலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது ஷீலாதான்."

நான், "எனக்கும்தான் அவுங்க ரொம்பச் சிறப்பானவங்க; சந்தித்த முதல் நாளே அதுவும் ஒரு மணி நேரத்துக்குள்ள நாங்க இரண்டு பேரும் அவ்ளோ நெருங்கிட்டோம்."

தொடர்ந்து உரையாடி மகிழ்ந்தோம். பின்னர் அவர் வீட்டை அடைந்து பெரியவரை (கயலின் தந்தை) சந்திக்க மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றவர், "அட என் பொன்னு முகம் நல்லா பிரகாசமாக இருக்கே; உங்களுக்கு அதுக்கே ரொம்பச் நன்றி சொல்லனும் தம்பி."

நான், "அதுக்கு நீங்க எனக்கு நன்றி சொல்வதை விட உங்கள் பொன்னுக்குத் தான் நாம எல்லாரும் சேர்ந்து நன்றி சொல்லனும். நேற்று நீங்க உங்கள் காதாலேயே கேட்டுச் சந்தோஷப் பட்டீங்களே அத்தனை பேர் சிரிப்பொலி. அத்தனை பேரும் உங்கள் பொன்னுக்குத்தான் நன்றி சொல்லுவார்கள். கவலையே படாதீர்கள் அவுங்க எல்லாரும் இனி அடிக்கடி சந்திக்குறதுன்னு முடிவு செய்துட்டாங்க."

கயல், "அப்பா நாங்க எல்லாரும் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சிரித்து விளையாடிக் கொண்டாடி மகிழ்ந்தது உண்மைதான். அதைவிட அங்கே தம்பி வந்தது முதல் தினமும் இப்படித்தான் உண்மையைச் சொல்லிட்டாங்க தனு அண்ணன் மனைவி ஷீலா. ஆக இவருக்குத்தான் நன்றி சொல்லனும்."

பெரியவர், "எல்லாம் நல்லதுக்கே; (என்னை நோக்கி) சரி நாம இப்போது புறப்படலாம் அதுக்கு முன்னர் நான் உன்னை ஒண்ணு கேட்கனும். அதாவது நான் செய்த இந்த உதவிக்கு ஈடுகட்ட எனக்கு ஒரு உதவி செய்யனும்." அவர் முகத்தில் புன்னகை மறைந்து தீவிரம் பரவியது.

அவர் முக உணர்ச்சி வெளிப்பாடுகளைக் கவனிக்க ஏதோ மிகத்தீவிரமான செயல் என உணர்ந்த நான் சற்றே தயங்கினேன். அவரும் சிறிது நேர இடைவெளிக்குப்பின் என்னை நோக்கினார். அதே சமயம் எங்கள் இருவரையும் சாதாரணமாகக் கவனித்து வந்த கயல் எங்கள் இருவரின் நீண்ட தயக்கத்தைக் கண்டு குழம்ப ஆரம்பித்தாள்.

நீண்ட மௌனத்திற்குப்பிறகு நான், "ஐயா இந்தச் சின்னப் பையனிடம் அப்படி என்ன எதிர் பார்க்குறீங்க?"

பெரியவர், "தம்பி எனக்கு வயசாகிறது எனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டும். பொறுப்பான ஆளைத்தேடித்தேடியே என் வாழ்நாள் முடிந்திடுமோன்னு கவலையா இருந்தேன். கடவுள் உன் மூலமாகக் கொஞ்சம் நம்பிக்கை குடுத்திருக்குறார். எனக்குக் கொஞ்சம் சீக்கிரம் ஓய்வெடுக்க... விருப்பம்."

நான், "ஐயா உங்களுக்கு நிச்சயமாக ஓய்வு கிடைக்கும்; அதற்கு நான் என் முழுக் கவனத்தையும் செலுத்தி உழைப்பேன். நான் ஏற்கனவே அதற்குத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நீங்களே கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கு. இந்தச் சமுதாயத்துக்கு உழைத்து உதவுவதில் தாங்கள் மிக உற்சாகமாக, ஈடுபட்டுச் செயல்படுவது ஊர் அறிந்த உண்மை; ஆனால் நீங்கள் இத்தனை விரைவில் ஓய்வு... எனக்கு மிகுந்த ஆச்சரியமா இருக்கு."

பெரியவர், "நீ புத்திசாலி உன்னை ஏமாற்ற அவசியமில்லை, அதனால வெளிப்படையாகவே பேசுவோம். உன்னை உன் முழுச் சம்மதத்தோடு இந்தச் சமுதாயப் பணிப் பொறுப்பை ஏற்கச் செய்வதே எங்கள் தீவிர விருப்பம்/எண்ணம்."

நான், "எனக்கு இது கொஞ்சம் எதிர்பாராத ஒன்று. நான் இப்படி இந்த வெளி உலகத்தை அறிதல், புரிதல் எல்லாமே கடந்த இரண்டு வார அதிரடி நடவடிக்கைகள். ஒரு சாதாரண விளையாட்டுப் பிள்ளையான எனக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்பம்.

முதலில் மாவட்ட ஆட்சியர் கேட்டார்... அடுத்துத் தற்போது நீங்கள் மீண்டும். ஆனால் ஆட்சியர் கேட்ட போது சற்றும் எதிர்பாராமல் நான் மறுத்து விலகினேன். அவரும் புரிந்து என்னைக் கட்டாயப்படுத்தாமல் நன்கு யோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தினார். நிதானமாக யோசிக்கையில் நல்ல தீர்வு கிடைத்தது; ஆம் அதை நான்... செய்யமுடியும்;... செய்வேன்."

மெல்லமெல்ல ஆனால் திடமாக வந்த பதிலைக் கேட்டதும் மிகுந்த உற்சாகத்துடன் என் கைகளைப் பற்றி, "ரொம்ப நன்றி; இது ஒரு இன்ப அதிர்ச்சி எனக்கு. ஆமாம் நான் உன் மனதை மாற்றக் கொஞ்சம் காலம் பிடிக்குமென்று எதிர்பார்த்தேன்.

ஆனால் நீ பொறுப்புள்ள புத்திசாலியென்று நிரூபிச்சிட்டே; எங்களுக்கு நிறையச் சந்தோஷம். சரி இப்போது நாம முதல்ல அந்தக் கொலைகாரனை விசாரித்து விட்டு முடித்த கையோடு ஆட்சியரைப் பார்த்து இந்தச் சந்தோஷமான விஷயத்தைச் சொல்லனும்."

நான், "ஐயா இன்று ஞாயிறு; அவரைக் (மாவட்ட ஆட்சியரை) கொஞ்சம் நிம்மதியாகக் குடும்பத்துக்கு நேரம் செலவு செய்ய விடுங்கள். அதைவிட எனக்கும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்னால உடனடியாக எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது. என் திட்டமும் வேறு அதை முழுமையாகக் கேட்ட பிறகு அது உங்களுக்குத் திருப்தியானதாக இருந்தால்."

குறுக்கிட்ட பெரியவர், "அதெல்லாம் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்குச் சில இன்ப அதிர்ச்சித் தகவல்கள் சொல்லுகிறேன் கேளுங்கள். நீங்க உங்கள் மாமா தனுவை சந்தித்து அவர் திட்டத்தை மாற்றிய அரை மணிநேரத்தில் ஆட்சியருக்கு விஷயம் தெரியும்.

அடுத்து அவர் என்னைக் கலந்தாலோசித்து உங்கள் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டே நடக்க விட்டோம். நீ அந்தப் பொன்னை மனம் திருந்த வைத்ததுமே ஆட்சியரும் நானும் அசந்துவிட்டோம்.

உடனே உன் முழுச் சரித்திரத்தையும் அவர் தேடிப்பிடித்து அலசி ஆராஞ்சிட்டார் அப்பவே முடிவு செய்துட்டார். உன் பரிபூரணமாகச் சம்மதத்தோடு உன்னை எப்படியும் எங்கள் கூட்டத்தில் சேர்க்க எல்லா வேலையும் முழு மூச்சில் செய்கிறார். அதனால இதைக்கேட்டதும் முதலில் சந்தோஷப்படுவது அவர்தான்."

மிகவும் திடுக்கிட்ட நான், "ஐயா இது எனக்கு ரொம்ப அதிர்ச்சியானது தான் ஆனால் என் திட்டத்தை முழுவதும் கேட்டு அது உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அதன் பிறகு அவருக்குச் சொல்லுங்கள்; தயவு செய்து அவசரப்படாதீர்கள்."

பெரியவர், "தம்பி நீங்க இந்த வேலையைச் செய்ய உன் மனப்பூர்வமான சம்மதம் தான் முக்கியம். அதன் செயல் திட்டம் உன் தனி உரிமை அதில் நாங்கள் யாரும் தலையிட மாட்டோம். உன் சங்கடம்/சந்தேகம் தீர்ந்திருக்குமே; சரி இன்னமும் உனக்குச் சந்தேகமென்றால் இந்த விசாரணைக்குப் பின் உன் விருப்பப்படி நாம உரையாடலாமா?"

கொலை வாக்குமூலம்

இன்னமும் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளாத நான் சம்மதிக்கத் தொடர்ந்தோம். இருவரும் அந்த ஓட்டுநரை (பெயர் சோமன்) சந்தித்துப் பேசியதில் பல உண்மைகள் வெளியாயின.

இதற்கெல்லாம் மூல காரணம் சகுந்தலா தன் கணவன் ரங்கசாமியுடன் இணைந்து திட்டமிட்டு நடத்திய சதி. ரங்கசாமியின் நண்பன் மூலம் அறிமுகமாகிய சோமன் உதவியோடு செய்தனர். அவர்கள் திட்டத்தில் இடறியது அவர்கள் குறி வைத்த தனு தம்பதியினர் தப்பியது.

அதற்குக் காரணம் எதிர் பாராத விதமாக மணமக்களும் பெற்றோரும் வாகனத்தை மாற்றிக்கொண்டது. ஒரு குறிப்பிட்ட வாகனத்தை மலையிலிருந்து உருட்டி பயணிகளைக் கொலை செய்வது எனத் திட்டம்.

ஆனால் யாரைக் கொலை செய்ய வேண்டுமெனச் சரியாக/திட்டவட்டமாகச் சொல்லவில்லை. சோமனுக்கு இடப்பட்ட கட்டளையின் படி சோமன் திறம்படச் செய்து முடித்தான். ஆனால் சகுந்தலா திட்டம் தவறியது அவர்களின் தவறான தகவல் பரிமாற்றம்.

இதனால் சதித்திட்ட கூட்டத்திற்குள் பிரச்சினை ஏற்பட அதன் தொடர்ச்சியாகச் சகுந்தலா தன் கணவன் ரங்கசாமியையும் கொலை செய்ததே. ஆம் எங்களுக்கே அதிர்ச்சி இதுவரை நாங்கள் அறிந்தது மூன்று கொலை ஆனால் ரங்கசாமி கொல்லப்பட்டது என்பது புதிய செய்தி.

அதாவது திட்டப்படி சோமனுக்கு இரண்டு லட்சம் மொத்த பணம் அதில் பாதி முன் பணம் கொடுக்கப்பட்டு வேலை முடிந்தபின் தர வேண்டிய மீதிப் பணத்தைச் சகுந்தலா தர மறுக்கப் பிரச்சினை எழுந்தது.

கொலை செய்ய வேண்டிய ஆளைக் கொள்ளாமல் வேறு ஆளைக்கொலை செய்ததால் மீதிப் பணத்தைத் தர மறுத்து; அதற்கு ஈடுசெய்ய அந்தத் தம்பதியரைக் கொலை செய்தால் தான் மீதி பணத்தைத் தரமுடியுமெனப் பிடிவாதம் பிடித்தார் சகுந்தலா; ஆனால் சரியான சந்தர்ப்பம் ஏதும் கிடைக்காததால் நாட்கள் ஓடின.

இரண்டு வருடங்களுக்கு மேல் இழுபறியாக இழுக்க; அந்தப் பொம்பளை (சரோஜினி) இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்டதாகவும்; திடீரென அந்தப்பெண் ஏதோ சாதாரண உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கே அவளை முடித்துவிட்டால் மீதிப் பணத்தைக் கொடுத்து விடுவதாக உடன்பாடு செய்து கொண்டு ஆனால் உடனடியாகச் செய்து முடித்த பின்னரும் பணத்தைக் கொடுக்காமல் வெறும் பத்தாயிரம் மட்டுமே கொடுத்து ஏமாற்றிவிட வெகுண்ட சோமன் ரங்கசாமியின் பெற்றோரைக் கொன்றுவிடத் துடித்தான்.

ரங்கசாமி/சகுந்தலா பேரம் பேசி ஒரு மாத கால அவகாசம் கேட்கத் தான் முடியாதென ஒரு வாரம் மட்டும் பொறுத்து மீண்டும் அணுக அதற்குள் ரங்கசாமி மாரடைப்பில் காலமானதாகச் செய்தி.

ரங்கசாமிக்கும் சகுந்தலாவுக்கும் பிரச்சினை எழ முடிவில் சகுந்தலா தன் கணவனையே உணவில் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகத் தெரிந்தது அதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் விட்டு விட்டதாகச் சொல்லி முடித்தான் சோமன்.

அத்துடன் சோமன் விசாரணை முடித்து வீடு திரும்பி என் சமுதாயத்தில் பொறுப்பேற்கும் திட்டத்தை விவரித்தேன். என் திட்டப்படி நான் என் இறுதி ஆண்டு இயந்திரவியல் படிப்பை முடித்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தவாறே நிர்வாகப் பொறுப்பு வேலையில் சேர ஒப்புக்கொண்டேன்.

அதே சமயம் கமலாவையும் கயல்விழியையும் அதே துறையில் பயிற்றுவித்து முன்னேற்ற வைப்பது என் திட்டம்; அதன் படி என்னைப்போலத் திறமையாக இரு பெண்களையும் பயிற்றுவித்து ஆளாக்குவது என் திட்டம்.

என் திட்டத்தைக் கேட்ட பெரியவர் மீண்டும் எல்லாம் என் இஷ்டப்படி விட்டு விடுவதாகவும். அதே சமயம் அந்த இரு பெண்களை ஈடுபடுத்துவது அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்றெனவும் ஆனால் அதைப்பற்றித் தான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பாமல் ஒதுங்கினார்.

நான் வற்புறுத்தி அவர் அபிப்பிராயத்தை அறிய விரும்ப; பொதுவாகப் பெண்கள் இலகிய மனப்பாங்கினால் இந்த நிர்வாகப் பொறுப்பு வேலைக்கு உகந்தவர்கள் அல்ல என அவர் எண்ணுவதாகவும். அதே சமயம் என் மீதும் என் திறமை மீதும் அபார நம்பிக்கை கொண்டவராகவும் தெரிவித்தார்.

மறு நாள் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முயன்று ஆனால் மாவட்ட ஆட்சியருக்கு நேரமின்மையால் ஒரு நாள் தாமதித்து அதாவது செவ்வாய்க் கிழமை காலை சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தனு மல்லிகா தம்பதியரைச் சேர்த்து வைக்க வேண்டியது. அதில் எதிர்நோக்கும் சிக்கல் மாமாவுக்குத் தன் அக்காதான் சதிகாரி என்று தெரியும் பட்சத்தில் அவர் மீது கோபம் கொண்டு தாக்காமல் தடுப்பது அல்லது குறைந்த பட்ச சேதங்களுடன் சுமுகமாக்குவது.

அதில் மாமாவைக் கட்டுப்படுத்த பெரியவரின் உதவி மிகுந்த ஆதரவாக இருக்குமெனத் தெரிவித்து அவர் உதவியை நாட அவர் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என ஒப்புக்கொண்டார்.

பின்னர் இருவரும் வீடு திரும்பத் தன் மகள் கயல்விழியை அணுகிய பெரியவர், "உன் வாழ்கையில் செய்த மிகப்பெரிய நல்ல காரியம் இந்தத் தம்பியை உன் கைக்குள் வளைத்துப் போட்டது; உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியவில்லை கயல்."

ஒரு கணம் பிரகாசித்த முகம் உடனே சற்றே குழம்பி வெகுண்ட கயல், "அப்பா நீங்களே உங்கள் பொன்னை இப்படித் தரக்குறைவா நினைக்கிறது என் மனதை எந்த அளவுக்குப் புண்படுத்தும்னு."

உடனே குறுக்கிட்ட பெரியவர், "பொறும்மா நீயும் தம்பியும் நெருங்கிப் பழகுகிறது எனக்குத் தெரியும், நான் சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லை. நீ அப்படியே செய்திருந்தால் என்னைப் பொறுத்தவரை அது அசிங்கப்படவோ, வெட்கப்படவோ வேண்டிய விஷயமில்லை.

மாறாகச் சந்தோசப்பட வேண்டிய விஷயம். நான் சொல்ல வந்தது உன் திறமை மேல் தம்பிக்கு அளவு கடந்த நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பது." சொல்லி என்னை நோக்கினார்.

நான், "இல்லை ஐயா நான் இதுவரை இதைப்பற்றி அவுங்க கிட்டப் பேசினதில்லை. அவுங்களுக்கு இது கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்."

அதைக் கேட்டதும் பெரியவர், "ஓஹ் அப்படியா சரி நீயே உன் மாணவிக்கு விளக்கிச் சொல்லுப்பா நான் புறப்படுகிறேன்."

சிறிதளவு மனம் வருந்திய கொஞ்சலான கண்டிப்புடன் கயல், "அப்பா இருந்து சாப்பிட்டுட்டுப் போகலாம் இருங்கள்."

பெரியவர், "பரவாயில்லையே என் பொன்னு கொஞ்சம் மாறித்தான் இருக்கு. (என்னை நோக்கி) உன் முதல் வெற்றி தம்பி; (மீண்டும் கயலை நோக்கி) இன்றைக்கு முடியாதும்மா அப்புறம் இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்."

கயல், "ஆமாம்ப்பா இனிமேல் முடிந்தவரைக்கும் எனக்கு உங்களைக் கவனிச்சிக்குற அனுமதி கொடுங்கள் தயவுசெய்து."

வாசலை அடைந்தவர் சற்று நிதானித்துப் பின் திரும்பி வந்து கயல் முகத்தைத் தன் கைகளில் பற்றி, "இதென்ன மகளே இப்படிக் கேட்கிறாய்! என் ஒரே செல்வம் நீ உணக்கில்லாத உரிமையா? நீ நேற்று சந்தோஷமா இருந்தது போலத் தினமும் இருக்கனும்.

என்னைப் பற்றி நிறையப் பயப்படாமல்; நடந்த பிரச்சினைகளைப் பற்றியும் மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் சந்தோஷமா வாழ்கையை அனுபவி; சரியா?" சொல்லி அவள் உச்சி முகர்ந்து விடைபெற்றவர் என்னை நோக்கி விரைவில் அந்த வாகன ஓட்டுநரைக் காவலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

அப்படியானால் தனு மாமாவை மல்லிகாவுடன் சேர்த்து வைக்கும் விவகாரத்தை உடனடியாக முடிக்க வேண்டும். அவர் சென்றதும் தனிமையில் விடப்பட்ட கயல் மகிழ்ச்சியில் என்னைக் கட்டிக்கொள்வாரென எதிர்பார்த்த எனக்குச் சற்றே ஏமாற்றம்.

அப்பாவை வழி அனுப்பி விட்டுத் திரும்பியவர் என்னுடன் கை கோர்த்து அழைத்து வந்தவர் 'வா சாப்பிடலாமென' மிகச் சாதாரணமாக நடந்து கொள்ள எனக்குச் சற்று விந்தையாக இருந்தது.

நான், "என்ன விஷயம் கயல் ஏதோ வருத்தமாக... என் மேல ஏதாவது கோபமா உனக்கு?"

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous