உங்களில் ஒருத்தி 11

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

கார் வீட்டுக்குள் நுழையும்போது அங்கே மோகன், பத்மா, தீபா, நிஷா என்று அனைவரும் சந்தோஷமாக இவர்களை எதிர்நோக்கி நின்றுகொண்டிருக்க, மலரின் மனம் நெகிழ்ந்தது. ஒரு சின்ன விஷயத்துக்காக இவர்களை உதறிவிட்டு.. எவ்வளவு சீப்பாக நடந்துகொண்டேன்!

நெகிழ்ச்சியோடு காரிலிருந்து இறங்கிய மலர், திடீரென்று, வாவ்...!!! என்று கண்கள் விரிய சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டே அத்தனை பேர் முன்னாடியும் ராஜ்ஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டு ஐ லவ் யூ ராஜ்... ஐ லவ் யூ என்க..... அவன் அப்போதுதான் கவனித்தான்.

அங்கே மாலை போடப்பட்டு... புத்தம் புது என்பீல்டு பைக் ஒன்று பள பள என்று நின்றுகொண்டிருந்தது.

ராஜ் சட்டென்று நிஷாவை நிமிர்ந்து பார்க்க.... அவள், அண்ணியோட ரொமான்ஸ் சூப்பர்... என்று சைகையால் அவனிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டே பைக் சாவியை அவனிடம் தூக்கிப் போட்டாள்.

ராஜ்க்கு மனம் குளிர்ந்தது. எப்போதோ நிஷாவிடம் சொல்லியிருந்தான். மலர் இப்படி ஒரு பைக்கில் தன்னோடு ஊர் சுற்ற ஆசைப்படுகிறாள் என்று. அவளை... மறுபடியும் நன்றியோடு பார்த்தான்.

கொஞ்ச நேரம் கழித்து, சோபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நிஷாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். தன் தலையால் அவள் தலையில் இடித்துச் சொன்னான்.

தேங்க்ஸ் நிஷா... தேங்க் யூ சோ மச்

ம்... அதெல்லாம் இருக்கட்டும். என்னையும் நீ பைக்ல வச்சிக் கூட்டிட்டுப் போகணும்

அது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான். நீங்கள்லாம் அதுல தப்பித்தவறி கூட உட்கார்ந்துடாதீங்க. தொலைச்சுப்புடுவேன்

நாங்க.. உட்காரக்கூடாதா..... உன்ன.... என்று நிஷா அவன் தோளில் பட் பட்டென்று அடிக்க..... அவன் திருப்பி அவளை அடித்தான். அவள் தலையில் தட்டினான். ஏய்.. ஏய்... என்று இவள் சிணுங்கினாள்.

ஏண்டீ அவன்கிட்ட வம்பு இழுக்குற? என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பத்மா.

இவரோட பைக்ல நம்மளையெல்லாம் கூட்டிட்டுப் போகமாட்டாராம். மலரை மட்டும்தான் கூட்டிட்டுப் போவாராம். ஸாருக்கு திடீர்னு பொண்டாட்டி மேல பாசம்

அவள் ஒழுங்கு காட்டினாள்.

பத்மாவுக்கு நிம்மதியாயிருந்தது. இப்போதுதான் குடும்பத்தில் எல்லார் முகத்திலும் சிரிப்பு வந்திருக்கிறது. கடவுளே நிஷாவுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்.

பைக் வாங்கிக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா... என்றான் ராஜ்.

நான்தான் வாங்கினேன்னு அண்ணிகிட்ட சொல்லிட்டு இருக்காத. அவங்களைப் பொறுத்தவரைக்கும் இது நீ வாங்கி present பண்ணினது. சரியா?

ம்...

அவன் சந்தோஷமாகத் தலையாட்டினான். எவ்வளவு பணம் தன்னிடம் இருந்தாலும், இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களை இவளால்தான் கொடுக்கமுடிகிறது என்று அவளை பாசத்தோடு பார்த்தான்.

சில நாட்களில்... மலர், தான் ராஜ்ஜோடு சந்தோஷமாக இருக்க நிஷா காட்டும் அக்கறையைப் பார்த்து மனதுக்குள் நெகிழ்ந்தாள். அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். நிஷா... என்ன மன்னிச்சுடு நிஷா. நான் இனிமே உன்ன எந்த விஷயத்திலும் காயப்படுத்த மாட்டேன். உன்னை மட்டுமில்ல. நம்ம வீட்டுல யாரையுமே கஷ்டப்படுத்த மாட்டேன்.

நிஷாவுக்கு மனம் குளிர்ந்தது. சந்தோஷமாகச் சிரித்தாள்.

மலர் - இரவு நேரங்களில் தூங்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். ராஜ் அவளை சந்தோஷமாக வைத்திருந்தான். இருந்தாலும் தூங்கினபிறகு... திரும்பிப் படுத்துக்கொண்டு மலர் ரகசியமாக அழுதாள்.

அவளுக்கு, வேலு தன் முலைகளை பிடித்து கசக்கியதை நினைக்கும்போது தானாகவே கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. அந்த நாய் அதோடு மட்டுமா விட்டான்? பெரிய குடும்பத்துப் பெண்ணான தன் புண்டையை அவன் இப்படி பிடித்து கசக்கிவிட்டானே என்று நினைத்து நினைத்து மருகினாள். கடைசியில் நிர்வாணமாக நிற்கவைத்து அவன் தன் குண்டியில் அடித்து விளையாண்டதை நினைக்கும்போது... ச்சே.. இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்திருக்கக்கூடாது என்று நினைத்தாள். அவன் இவ்வளவு பண்ணுவதற்கும் தான் இடம் கொடுத்துவிட்டோமே என்று தன்னைப் பற்றி நினைத்து நினைத்து நொந்தாள்.

வேலு, கணவனிடம் அடிவாங்கி இப்போது ஊரைவிட்டே குடும்பத்தோடு ஓடிவிட்டான் என்று தெரிந்துகொண்டபிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக... அவனால் தன் புண்டை கசக்கப்பட்டதை மறக்க ஆரம்பித்தாள்.

வீணா, ராஜ்ஜிடம் நன்றாக திட்டு வாங்கியிருந்தாள். அவனோ அந்த விஷயம் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவளைத் திட்டினான். அன்று ஒருநாள், ஆனந்த், வீணா, ராஜ் மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த விஷயம் எப்படியோ உள்ளே வந்துவிட்டது.

கொஞ்சம் கூட பொறுப்பில்லாம மலரை இப்படி விட்டுட்டு போயிருக்கியே நினைச்சாலே உன் மேல கோபம் கோபமா வருதுடி... என்றான் ராஜ்.

ஆனந்த், எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசும் தன் மனைவி, இப்போது பம்மிக்கொண்டு இருப்பதை பார்த்தான். இத கவனித்த வீணா, மெல்ல வாய் திறந்தாள்.

நான்தான் பல தடவை ஸாரி கேட்ட்டுட்டேன்ல...

பண்றதையெலாம் பண்ணிட்டு, ஸாரி கேட்டாளாம் ஸாரி. - அவனுக்கு கோபம் ஏறிக்கொண்டே போனது. கத்தினான்.

வீணா, அந்த திடீர் நல்லவனை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்னடீ பார்க்குற? - அவன் உறுமினான்.

நீங்க எப்போ பார்த்தாலும் என்ன திட்டிக்கிட்டே இருக்கீங்க. - அவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

சரி சரி... உம்முன்னு இருக்காத. ஸாரிடி அத நெனச்சாலே கோபம் வந்துடுது.

அவன் அவளை சமாதானப்படுத்த, பக்கத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஆனந்துக்கு தலை சுற்றியது.

அவன் என்னடான்னா கட்டுன பொண்டாட்டியை திட்டுற மாதிரி திட்டுறான். இவ என்னடான்னா பல தடவை படுத்து எந்திரிச்ச பொண்டாட்டி மாதிரி குழையுறா?

டேய்.. இவ என் பொண்டாட்டிடா.... அடியேய்.. நான்தாண்டி உன் புருஷன்!

ராஜ், மலருக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டதால், வீணாவை இன்னும் போடாமல் விட்டிருந்தான். கஷ்டப்பட்டு ஆசைகளை அடக்கிக்கொண்டான். ஆசை வரும்போதெல்லாம் போய் மலரை கதறக் கதறப் போட்டு ஓத்து அவள் புண்டையை குளிரவைத்தான். என்னங்க... போதும் போதும் என்று சொல்லும்வரை மலரை குத்தி எடுத்தான். சீக்கிரம் வாந்தி எடுத்தாத்தான் இவன் விடுவான்போல... என்று மலர் சலித்துக்கொண்டாள்.

வீணாவோ, மலர் முன்னாடியே அவ்வப்போது அவனுக்கு தொப்புள் காட்டுவதும், டபுள் மீனிங்கில் பேசுவதுமாக அவனை டீஸ் பண்ணிக்கொண்டிருந்தாள்.

காயத்ரி, நிஷாவை வந்து பார்த்தாள். நிஷா அவளிடம் வெடித்து அழுதுகொண்டே எல்லாவற்றையும் சொல்ல, அவளுக்கு சீனு மேல் கோபம் கோபமாக வந்தது.

நான் கூப்பிட்டா மட்டும் நிஷா கோபப்படுவா கோபப்படுவான்னு சொல்லி பிகு பண்ணிட்டு, புதுசா ஒரு புண்டை கிடைச்சதும் இளிச்சிக்கிட்டுப் போயிருக்கிறான்! செமையா அடி வாங்கியிருக்கிறான். அப்படியிருந்தும் காலை இழுத்துக்கிட்டே போயிருக்கான் பாரேன். ஓல்மாறி புண்ட

சீனுவுக்கு போன் போட்டு பேசினாள். நிஷா நல்லவடா உன்னால எட்டிப் பிடிக்க முடியாத நிலா மாதிரிடா அவ கிடைச்சது உனக்கு போதாதாடா.... அவ என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அவ காலடியிலேயே கிடக்கவேண்டியதுதானே என்று திட்டினாள். அப்புறம் பேச்சுவாக்கில், நீ என்வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதுதானே அவர்கிட்ட ஏதாவது சொல்லி உன்ன மேல் போர்ஷன்ல தங்கவச்சிருப்பேனே என்றாள்.

சீனு அகல்யாவோடு நவீனைத் தேடித் திரிந்துகொண்டிருந்தான். ( இதை தனியாக பார்க்கப் போகிறோம் )

நிஷா, என்னதான் ராஜ், மலர் மற்றும் தீபாவோடு வெளியே பேசி சிரித்தாலும், உள்ளுக்குள் தனது நிலையை நினைத்து அழுது கொண்டிருந்தாள். அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாக தன் நிலை ஆகிவிட்டதே.. எனக்கென்று, என்னை மட்டுமே உயிராய் நினைக்கும் ஒருவன் எனக்கு கிடைக்காமல் போய்விட்டானே... அப்படி கிடைத்த கணவனையும் காவ்யாவிடம் விட்டுவிட்டேனே என்று இரவுகளில் தூங்காமல் கிடந்து அழுதாள்.

பத்மா இதை ஒருநாள் கவனித்துவிட்டு, கண்கலங்க, விருந்துக்கு கிளம்பிக்கொண்டிருந்த ராஜ்ஜும் மலரும் நிஷாவை தங்களோடு வரச்சொல்லி வற்புறுத்த அவள் மறுத்தாள்.

உங்க சந்தோஷத்தைக் கெடுப்பதுபோல் நான் எதற்கு? என்றாள்.

இனிமே இப்படி என்கிட்ட விரக்தியா பேசினா செமையா அடிவாங்குவ.... என்று ராஜ் கையை ஓங்க, நடுங்கினாள்.

மலர் ஓடிவந்தாள். கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க. சும்மா எதுக்கெடுத்தாலும் கைய கைய ஓங்கிக்கிட்டு... என்று அவனைத் திட்டினாள்.

அவனை நீதாம்மா அடக்கணும்... - சமயம் பார்த்து பத்மா சொல்ல, ராஜ் தன் அம்மாவை முறைத்தான்.

நிஷா, ராஜ்க்காக, அவர்களோடு கதிரின் கிராமத்துக்கு வர ஒத்துக்கொண்டாள்.

கதிரின் அம்மா லட்சுமிக்கு, சந்தோஷம் தாங்க முடியவில்லை. பரபரப்பாக அவர்களுக்கு சாப்பாடு தயார் பண்ணிக்கொண்டிருந்தாள். அண்ணன் மகனும், மகளும், மருமகளும் வந்திருக்காங்க என்று எல்லாருக்கும் தம்பட்டம் அடித்தாள். மகிழ்ச்சியாக இருந்தாள்.

நிஷா வருகிறாள் என்று பூரித்துப்போயிருந்த கதிர், அவளோ, இறுகிய முகத்துடன் களையிழந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். அவ்வப்போது அவள் கடமைக்கு சிரித்து வைப்பதை கவனித்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அவனிடம் முன்புபோல் சகஜமாக... சிரித்துப் பேசாமல் இருப்பது அவனை வேதனைப்படுத்தியது.

என்னாச்சு? என்று ராஜ்ஜிடம் கேட்டான். ஒண்ணுமில்ல... அவளுக்கு வேற ஒரு ஊருக்கு போஸ்டிங்க் வந்திருக்கு அதான்... என்று அவன் மழுப்பினான்.

தீபாவுக்கு போன் போட்டுக் கேட்டான். அவளும், ஒண்ணுமில்லையே.. என்று சாதித்துவிட்டாள். அண்ணனும் அண்ணியும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்காங்க... என்று அவள் வெட்கத்தோடு சொல்ல, அவனுக்கு விஷயம் புரிந்தது.

கதிருக்கு நெர்வஸாக இருந்தது. அம்மா இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...... சிட்டில இல்லாத நவ நாகரீக மாப்பிள்ளைகளா? விஜயகாந்த் படத்துல எல்லாம் மாமனுங்க கிராமத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கமாட்டேனு அடம்பிடிப்பானுங்க, மோகன் மாமா என்னை விடமாட்டேங்குறாரே அப்படி என்ன பண்ணிட்டேன்?

மலர், கதிரை தனியாகக் கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்காரவைத்துப் பேசினாள்.

சொல்லுங்கக்கா... என்றான்.

உங்களுக்கு மாப்பிள்ளை களை வந்திருச்சு... என்றாள்.

ஓட்டாதீங்கக்கா

பார்றா... வெட்கம்லாம் படுறீங்க?

என்ன வா, போன்னே சொல்லுங்கக்கா, எங்க வீடு, ஊரு பிடிச்சிருக்கா?

பிடிச்சிருக்கு கதிர். உங்களுக்கு.. ஸாரி உனக்கு தீபாவை பிடிச்சிருக்கா?

அவன் அமைதியாக இருந்தான்.

மோகன் மாமா, அவருக்கப்புறம் ராஜ்ஜோட சேர்ந்து நீங்களும் கம்பெனியை பார்த்துக்கணும்னு நினைக்குறாரு. கம்பெனி ரொம்ப பெருசா வளர்ந்துட்டிருக்கு. மும்பைலகூட ஓப்பன் ஆகப்போகுது. நிறைய எதிர்ப்புகள். எல்லாத்தையும் சமாளிக்க... தைரியமான, அதே நேரத்துல நல்ல பையனா நீதான் இருக்க. ஏதாவது ஒரு branch ஐ பின்னாடி தீபாதான் நிர்வாகம் பண்ணப்போறா. அதை நீயும் தீபாவும் சேர்ந்து பண்ணனும்னு நாங்க ஆசைப்படுறோம்

உங்களை மாதிரி உறவுகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் அக்கா. ஆனா...

ஆனா?

படிக்கும்போதே... நான் இங்கேயே என் வாழ்க்கையை அமைச்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். கெமிக்கல் கலக்காத உணவுப்பொருட்களை தயாரிக்கணும் மக்களுக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இங்க உள்ள மக்களை முன்னேத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்... என்ன சொல்றதுன்னே தெரியல.

மலருக்கு அவனது லட்சியமும் உறுதியும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

டேக் யுவர் own time கதிர். யோசிச்சு சொல்லு. But... இப்போ ஒன்னு சொல்லு. தீபாவை உனக்கு பிடிச்சிருக்கா?

ம்.. பிடிச்சிருக்கு. அவளை யாருக்குத்தான் பிடிக்காது?

மலர் அவன் தலையில் கொட்டினாள். எப்பவாவது வெட்கப்பட்டாத்தாண்டா நீ அழகா இருக்குற. இப்படி அடிக்கடி வெட்கப்பட்டா நல்லாவே இல்ல

அவன் அவளை முறைத்தான்.

மோகனுக்கு செய்தி பறந்தது. இதுதான் எனக்கு முதல்லயே தெரியுமே. அவன் இங்க வருவானா? ங்கிறதுதான் விஷயம்! என்க, சப்பென்றானது.

தீபா மட்டும், அவன் வாயாலேயே சொன்னானா அண்ணி? சொன்னானா அண்ணி? என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஆமாண்டீ... அவன் வாயாலேயே சொன்னான்.

தீபா வானத்தில் மிதந்தாள். கட்டிக்கிட்டா கதிரை மாதிரி லட்சியத்தோடு இருக்கிற ஒருத்தனைத்தான் கட்டிக்கிடனும். அவனை மாதிரி ஆம்பளையைத்தான் கட்டிக்கிடனும்.

தீபா ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை அவனுக்குப் போன் பண்ணினாள். கதிர் மலைத்துப்போனான். ஒருமுறை மீண்டும் மீண்டும் தன் மனதில் உருத்திக்கொண்டிருப்பதைக் கேட்டான்.

நிஷா ஏன் எப்பவும் சோகமா இருக்கிறாங்க?

தீபா எல்லாவற்றையும் சொன்னாள். நிஷா கண்ணனுக்குச் செய்த துரோகம், சீனு நிஷாவுக்கு செய்த துரோகம்... என்று எல்லாவற்றையும் சொல்ல, கதிர் நொந்துபோனான்.

நிஷா இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டிருப்பாள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள்மேல் அளவில்லாத மதிப்பு வைத்திருந்த அவனுக்கு, அவளுடைய தற்போதைய நிலை பார்த்து, நம்ம நிஷாவா இது? இப்படி அசிங்கப்பட்டுவிட்டு வந்து நிற்பது? இப்படி முட்டாள்தனமாக, புருஷனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் படுத்துக் கிடந்தது? நிஷா இவ்வளவு மேசமானவளா? இவ்வளவு வீக்கானவளா? ச்சே...

அவனுக்கு சோறு இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. நிஷாவைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. சீனுவை.. தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொல்லவேண்டும்போல் இருந்தது. இப்படி அறிவில்லாம நடந்திருக்கியே நிஷா.... என்று அவளை பரிதாபமாகப் பார்த்தான்.

ராஜ், நிஷாவைக் கூட்டிக்கொண்டு வயல்வெளிகளுக்குச் சென்றான். தோட்டங்களைக் காட்டினான். அவள் தன் கண்கள் விரிய இயற்க்கை அழகுகளை பார்த்து ரசிப்பதைக் கவனித்தான். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். இன்னும் சில நாட்கள் அங்கே மலரோடு தங்கினான்.

எனக்கு இந்த ஊரு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா. ஐ லவ் திஸ் பிளேஸ். ஐ லவ் திஸ் பிளேஸ். - நிஷா கைகளை விரித்துக்கொண்டு சுற்றினாள்.

ராஜ் போனை எடுத்தான். அப்பா... நிஷாவுக்கு நம்ம ஊர் பள்ளிக்கூடத்துக்கே போஸ்ட்டிங்க் வாங்கிடுங்க. என்றான்.

நிஷாவின் முகத்தில் தெரிந்த மாற்றம் கதிருக்கு ஆறுதலாயிருந்தது. பாவம் நொந்து போயிருக்கிறாள். இவள் கிடைக்காமல் போய்விட்டாளே என்று எத்தனை நாட்கள் வருந்தியிருக்கிறேன். இப்படித்தானே என்னைப்போல் பலரும் உன்னை உயர்வாக நினைத்திருப்பார்கள் நிஷா. ஏன் இப்படி செய்தாய்? என்று வருந்தினான். மோகன் ஆல்ரெடி தன் தங்கை லட்சுமியிடம் நிஷா பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். தீபா - கதிர் கல்யாணத்தோடு சேர்த்து நிஷாவுக்கும் திருமணம் நடத்திடனும் என்றார்.

கதிர்தான் சென்னைக்கு வரவே ஒத்துக்கமாட்றானே?

மலர் அவனை ஒத்துக்க வச்சிடுவா.. என்றார்.

ராஜ்ஜும் மலரும் நிஷாவும் கிளம்பினார்கள். லட்சுமிக்கு சந்தோஷம். நிஷா நம்ம ஊருக்கு டீச்சரா வந்தா அதைவிட எனக்கு வேற சந்தோசம் என்ன இருக்கு? சின்ன வயசுல.. என் மடியிலேதான் கிடப்பா. எப்படியிருந்த பொண்ணு... ஹ்ம்...

நிஷாவுக்கும் அவளைப் பிடிக்கும். அத்தைக்காரியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு காரில் ஏறினாள். கதிரைப் பார்க்கவே அவளுக்குக் கூசியது. இவனுக்கு இந்நேரம் எல்லா விஷயமும் தெரிந்திருக்கும்!

சில நாட்களில், நிஷா - தன் திங்க்ஸோடு... அந்த ஊருக்கு.... தன் சொந்த ஊருக்கு... டீச்சராக வந்து இறங்கினாள்.

சீனுவுக்கு, அகல்யாவையும் நவீனையும் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்று எப்படி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டதோ... அதுபோலவே, நிஷாவுக்கு, சிட்டி வாழ்க்கையை உயர்வாகச் சொல்லி, கதிரின் மனதை மாற்றி, தீபாவைக் கட்டிக்கொண்டு கம்பெனியை பார்த்துக்கொள்ள சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ரெண்டும் என்ன பண்ணியதுகள் என்பதை கண்காணிக்கும் டாஸ்க் நமக்கு.

சீனு - அகல்யா இருவருமே, வெயில், தூசி என்று பாராமல் அலைந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.

நவீனின் மாமா வீட்டு அட்ரஸ் தெரியாமல், வேறு எந்த விவரமும் இல்லாமல் தேடிக்கொண்டிருந்தார்கள். ஷாப்பிங்க் மால், பீச் என்று எங்கேயாவது அவனோ அவனோடு நெருங்கியவர்களோ கண்ணில் பட்டுவிட மாட்டார்களா என்று நின்று நின்று பார்த்தார்கள்.

அவனது வாட்ஸப், பேஸ்புக் என்று எதிலும் அப்டேட் இல்லை. அகல்யா பயந்து போனாள்.

அகல்யா மிகவும் களைப்பாக இருந்தாள். சீனுவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சென்னையில் பார்க்கும்போது லட்டு மாதிரி இருந்தவள், இப்போது முகம் வாடி, கருத்திருந்தாள். கூந்தல் கண்டபடி அலைந்து கிடந்தது. கண்களில் சோகம்.

என்னதான், இப்போது விட்டால், காதலனுக்கு கட்டாய கல்யாணம் நடந்துவிடும் என்ற இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும், ஒரு பெண்ணாக, அவள் இப்படி அவனைத் தேடி வரத் துணிந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேநேரம் வீட்டில் இவளை நினைத்து கஷ்டப்படுவார்களே என்கிற எண்ணம் இல்லாமல் அவள் இங்கே வந்து இப்படித் திரிவதை நினைத்து வருத்தமாக இருந்தது.

இதுவரை நவீன் பேசியிருந்ததை வைத்து, அகல்யா, குத்துமதிப்பாக ஒரு பகுதியைச் சொல்ல, அந்த ஏரியாவில் அதிகமாய் சுற்றினார்கள்.

அகல்யா நிற்க முடியாமல், ஒரு கடை முன் சென்று உட்கார, சீனு, பரத்திடம் பேசினான். பின் அகல்யாவிடம் போய் சொன்னான். நீங்க கிளம்புங்க அகல்யா. பரத்துக்கு இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல அட்ரஸ் கிடைச்சிடுமாம். நான் பார்த்து கன்வின்ஸ் பண்ணி அவனைக் கூட்டிட்டு வர்றேன்.

இல்ல சீனு. நாளைக்கு வரைக்கும்தானே... நான் இங்கயே இருந்து அவனைப் பார்க்கிறேன். நீங்க வேணும்னா சென்னைக்கு கிளம்புங்க சீனு. பாவம் என்னால நீங்க கஷ்டப்படுறீங்க

சீனு அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அவளுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அவள் கூப்பிட்ட திசையில் எல்லாம் அலைந்தான். கடைசியில், தங்குவதற்கு, ஹோட்டலில் ரூம் எடுத்தார்கள். தனித்தனி ரூம். அப்பாடா என்று பெட்டில் விழுந்தான்.

தூங்கும் முன், நிஷாவின் கண்ணீர் வடிந்த முகம் ஞாபகத்துக்கு வந்தது. போனை எடுத்தான். டயல் பண்ண மனது வரவில்லை. அழுவாள். கத்துவாள். நான் திருந்திவிட்டேன் என்று சொன்னால் நம்பமாட்டாள்.

ஒருமுறை கால் பண்ணினான். பதில் இல்லை. சில நாட்கள் போகட்டும். கோபம் தனியட்டும். காயத்ரி மற்றும் வீணாவை வைத்து அவளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம். இனிமேல் மனதை அலைபாயவிடக்கூடாது. கண்ட்ரோலாக இருக்கவேண்டும்.

அகல்யாவுக்கு, சீனுவை நினைத்து கஷ்டமாக இருந்தது. அவன் தன்மேல் காட்டும் அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது.

துணிகள் கூட எடுக்காமல் அவள் வந்திருந்தாள். அலசி, காற்றில் காயப்போட்டுவிட்டு கவலையோடு படுத்தாள். நவீன்... நீ எங்கடா இருக்க.... என்ன இப்படித் தவிக்கவிட்டுட்டு நீ என்னடா செய்ற?

ச்சே... அவன் அப்பா அம்மா தவிர, அவன் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு நாள் லவ் பண்ணியிருக்கிறேன்

அலைந்து திரிந்ததில் கால்கள் வலித்தன. அடித்துப் போட்டதுபோல் தூங்கினாள்.

மறுநாள் -

இருவரும் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார்கள். சீனு அவளை பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டான். அவள், இவன் கைபிடித்துக்கொண்டு ரோடு க்ராஸ் பண்ணினாள். இவன், அவள் கைபிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு நடந்தான்

இன்று, அகல்யாவை ஆங்காங்கு நிழலில் உட்காரவைத்துவிட்டு, அவன் மட்டும் வெயிலில் அலைந்தான். மீறி அவள் அலைந்தால், தடுத்தான். ப்ளீஸ் அகல்யா ரொம்ப வ்ருத்திக்காதீங்க. உங்களை இப்படிப் பார்க்கவே கஷ்டமா இருக்கு

அன்றும் அவர்களுக்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லை.

அவள் வார்த்தைக்கு வார்த்த நவீன் நவீன் என்றாள். இப்படி லவ் பண்ற பொண்ணை தவிக்க விட்டுட்டு.... எந்தப் பிரச்சனையா இருந்தா என்ன... வந்து நிற்க வேண்டாமா? என்ன ஆம்பளை இவன்? என்று இவன் மனதுக்குள் அவனைத் திட்டினான்.

ஈவினிங்க் - ஹோட்டல் போகும்முன், அவளை ஷாப்பிங்க் மாலுக்குள் கூட்டிக்கொண்டு போனான். உங்களுக்கு ட்ரெஸ் எடுத்துக்கோங்க அகல்யா என்றான்.

இல்ல... வேணாம் சீனு

நேத்துலேர்ந்து ஒரே ட்ரெஸ் போட்டுருக்கீங்க. எடுத்துக்கோங்க. - அவள் கைபிடித்து அவளைக் கூட்டிக்கொண்டு போனான்.

என்கிட்டே பணம் இருக்கு. நீங்க உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க... என்றான். அவள் ட்ரெஸ் பார்க்கும்போது அவளது ஹேண்ட் பேக் அவளுக்கு இடைஞ்சலாக இருக்க, அதை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டான்.

நான் வச்சிக்கறேன். நீங்க ப்ரீயா பாருங்க.. என்றான்.

நல்ல ரெஸ்டாரண்ட் ஆக போய் சாப்பிட்டார்கள். அகல்யாவுக்கு என்னலாம் பிடிக்கும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். அதையே ஆர்டர் பண்ணினான்.

கை கழுவிட்டு, அவள் துப்பட்டாவில் துடைக்கப்போக, வேகமாக டிஸ்யூ எடுத்துக்கொடுத்தான். வெயிலில்.. வியர்க்கும்போது கர்ச்சீப் கொடுத்தான். அவளுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு செய்தான்.

ஒருமுறை, குப்பையைக் கிளப்பிக்கொண்டு ஒரு லாரி இவர்களைக் கடந்துசெல்ல, அகல்யாவின் கண்ணுக்குள் தூசி விழுந்துவிட்டது. மிகுந்த சிரமப்பட்டாள். உடனே ரோட்டுக்கடையில் sunglass வாங்கிக்கொடுத்தான்.

எதுக்கு சீனு இதெல்லாம்....

இது சாதாரண க்ளாஸ்தான். 500 ரூபாதான். இந்த 500 ரூபாயைவிட கண்ணு ரொம்ப முக்கியம். என்றான்.

எல்லா ஆண்களும் செய்வதைத்தான் அவனும் செய்தான். அகல்யா - தான் ஒரு comfort zone - க்குள் இருப்பதாக உணர்ந்தாள்.

அந்த இரவு - Agalya was feeling better. வழக்கம்போல, நவீனை நாளைக்கு பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் தூங்கினாள்.

மறுநாள் -

இருவரும் ஒருவரின் ரூமுக்கு ஒருவர் வர ஆரம்பித்திருந்தனர். காலையில் அவன் அகல்யாவின் ரூமுக்குள் நுழைந்தபோது, அவளது ப்ராவும் பேன்ட்டியும் சேர் மேல் காய்ந்துகொண்டிருந்தது. அவள் வேகம் வேகமாக அவற்றை எடுத்து கைக்குள் வைத்துக்கொண்டு wardrobe க்குள் போட்டாள்.

கலையாமல் இருந்த அவள் பெட் ஷீட்டைப் பார்த்து, நைட்டு தூங்கவே இல்லையா என்று கேட்டான். எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதல் சொன்னான். ஆனால் அவள் நன்றாகத் தூங்கியிருந்தாள். அங்கும் இங்கும் புரளாமல் தூங்குவது அவள் பழக்கம்.

அடுத்து இவள் அவன் ரூமுக்கு போகும்போது கவனித்தாள். ரூமே அலங்கோலமாகக் கிடந்தது. அவன் ஏன் தன்னிடம் அப்படிக் கேட்டான் என்பது புரிந்தது.

இன்று - அவசரம் காட்டாமல் கொஞ்சம் மெதுவாக நவீனைத் தேடினார்கள். அகல்யாவின் கை, அதிக நேரம் சீனுவின் கைக்குள் இருந்தது. அகல்யாவுக்கு தெம்பாக இருந்தது.

ஈவினிங்க் ஆனதும் - பீச்சில் தேடலாம்.. என்றாள். இவன் உடனே ஓகே என்றான்.

ஆட்டோ பீச்சை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது, ஹோட்டல் போய்... குளிச்சி பிரஷ் அப் ஆகிட்டு.. அதுக்கப்புறம் போலாமா... என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள். அவன் மறுப்பு சொல்லாமல் ஆட்டோவை திருப்பச் சொன்னான். நீங்க எதுனாலும் என்கிட்டே தயங்காம பேசுங்க அகல்யா என்றான்.

ஹோட்டல் போனார்கள். அகல்யா குளித்தாள். முதல் இரண்டு நாட்கள் ஏனோ தானோ என்று இருந்த அகல்யா, சீனுவின் முன் அழகாக இருக்க ஆசைப்பட்டாள். பார்த்துப் பார்த்து உடுத்திக்கொண்டாள்.

போலாமா அகல்யா... என்று கேட்டுக்கொண்டே அவள் ரூமுக்குள் நுழைந்த சீனு, அவளது ஸ்டன்னிங் ஆன அழகு பார்த்து, வியந்தான். ரசித்தான். சாதாரண, ஆனால் அழகான சுடிதார். கைகள் ட்ரான்ஸ்பேரண்ட் என்பதால், பார்ப்பதற்க்கு ஸ்லீவ்லெஸ் போலிருந்தது. லெக்கின்ஸ் போட்டிருந்தாள்.

அவன் வியந்து பார்க்கிறான் என்பது அகல்யாவுக்கு தெரிந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. அவன் முன், க்யூட்டான பெண்ணாக தெரிய கேர் எடுத்துக்கொண்டாள். அடக்கமாக நடந்துவந்தாள்.

அகல்யாவுக்கு, அழகான பின்னழகுகள். அவளுக்குப் பின்னால் நடந்துவந்த சீனு, தடுமாறினான். அய்யோ என்ன இது... இன்னைக்கு அகல்யா அநியாயத்துக்கு அழகா இருக்கா. பின்னழகு வடிவமும் அசைவும் அப்படியே தெரியுதே... இது டாப்ஸ் டைட்டா பிட்டா இருக்கறதுனாலயா... லெக்கின்ஸ்ன்றதுனாலயா... இல்லை இயல்பாவே அகல்யாவுக்கு...

என்ன இருந்தாலும் இந்த ட்ரெஸ் அகல்யாவுக்கு suit ஆகவில்லை. அழகை அப்படியே காட்டுகிறது. அவன் அவளை வேறு டிரஸ் போடச்சொல்ல நினைத்தான். வரம்புக்கு மீறிய செயல் என்று அமைதியாக இருந்தான்.

நிஷாவாவோ, காயத்ரியாவோ, வீணாவாவோ இருந்தால், வேற ட்ரெஸ் போட்டுட்டு வாடி இது ரொம்ப செக்சியா இருக்கு என்று குண்டியில் தட்டி சொல்லியிருப்பான். ஆனால் அகல்யாவிடம் எப்படிச் சொல்வது? அவன் அமைதியாக வந்தான்.

பீச்சில் -

ஒரு நம்பிக்கையில் - நவீனோ அவனைத் தெரிந்தவர்களோ கண்ணில் படுகிறார்களா என்று தேடிக்கொண்டிருந்தார்கள். பீச்சு மணலில் அவர்கள் நடக்க.... அவர்களைக் கடந்து சென்ற அனைத்து ஆண்களையும் திரும்பிப் பார்க்க வைத்தாள் அகல்யா.