Pandi Naattu PainkiLi 02

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அவனது குவிந்த இடது கைக்குள் இருந்த அந்த பஞ்சு நெஞ்சம் அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இன்னும் விம்மியது. அதன் காம்பு அவனது வாய்க்குள் இன்னும் கடினமாகியது. அந்த பூங்காவின் புல் தரையை பாய் ஆக்கியவர்கள், அவள் தாய் ஆனாள் அவன் சேய் ஆனான். அந்தக் காயின் இனிய சுவையை ரசிந்து வாயில் வைத்து கனிய வைத்தவாறே அவளது காதல் நோய்க்கு மருந்து கொடுக்க முயன்ற பல்லவனது வலது கரம் அவளது கொடியிடையின் வளைவுகளின் மீண்டும் சுதந்திரமாக சஞ்சரிக்கத் தொடங்கியது. நந்தினி இப்போது அவனது தித்திக்கும் சுவைப்பில் அவளது காம தாகம் அதிகமானதால் அவள் நாணம் ஏறக்குறைய முற்றிலும் விடுபட்டு தனது மயங்கி செருகியிருந்த கண்களைத் திறந்து அந்த காதல் நாடகத்தில் தனது பாகத்தை சற்று அதிகமாக்க விழைந்தாள்.

குனிந்து பார்த்த அவள் தனது வலது மாங்கனியை தன் மனம் கவர்ந்த கள்வன் அவனது இடது கையால் கசக்கியவாறே, வாயில் வைத்து சப்பி சப்பிக் குடிப்பதை கனிவுடனும் தாய்மை உணர்வுடனும் சிறிது நேரம் உன்னிப்புடன் கவனித்தாள். அவனது சப்பலின் ஒவ்வொரு இழுப்பிலும் புதுப்புது இன்ப அலைகள் அவள் உடல் முழுவதும் சிலிர்ப்பினை ஏற்படுத்தியதை நன்றாக ரசித்தாலும், அவன் "ஏன் ஒரு பருவக் கலசத்தை மட்டும் இவ்வளவு நேரம் சுவைக்கிறான்? இந்த பாரபட்சம் ஏன்?" என்ற கேள்விக்குறி அவளது மனதில் எழ, நந்தினி தேவிக்கு பெரும் சினம் உண்டானது. இதற்குப் பரிகாரம் தேட ஒரே வழிதான் என்று அவள் பலமாக அவனது தலையைத் தனது பூங்கரங்களால் கெட்டியாகப் பிடித்து தன் இடது முலையை நோக்கி வழிகாட்ட, £கரும்பு தின்னக் கூலியா வேண்டும்?£ என்ற பாணியில் காமக்கலையில் வல்லவனான பல்லவன் தனது பல்லை வைத்து அவளது இடது மார்பின் எழுச்சியில் பதித்து அந்த முலைக் காம்பை மிருதுவாகக் கடித்தான்.

இன்பத்தின் உச்சத்திற்குச் செல்லும் அடுத்த படியில் காலெடுத்து வைத்த நந்தினி அவனதி தலை முடியையும் பிடரியையும் தனது பட்டு விரல்களால் கோதியவாறே "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ...... மெல்ல!!........மெல்ல?? .... வலிக்கிறது!!....." என்று குழைந்தாலும் அவளது கரங்கள் இன்னும் அவனது தலையைத் தனது முலையில் அழுத்திப் பிடித்து "இன்னும் நன்றாகக் கடியுங்கள்" என்று மறைமுகமாகக் கூற விழைந்தன. இப்போது அவனது வலிமை மிக்க உடல் அவள் மேனி மீது நன்றாக சாய்ந்திருந்தது. பல்லவனது கால் ஒன்று அவளது பாதங்களை ஒவ்வொன்றாகத் தீண்ட முயலும் போது, நந்தினி ஏதோ ஒன்று கடினமாக தனது பட்டு உடையால் மறைக்கப் பட்டிருந்த தொடையின் மீதும் இடையின் மீதும் உரசுவதை உணர்ந்தாள். துணுக்குற்ற அவள் அது என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை காண முனைந்து கடைக் கண் வீச்சை செலுத்தியும் விடை காணாததால், ஜாடை மாடையாகத் தன் கால்களைச் சொறியும் சாக்கில் விடையை அறியும் நோக்கில் தன் பூங்கரம் ஒன்றை மெதுவாகக் கீழே அனுப்பினாள்.

இளையபல்லவன் தனது முகத்தை எழுப்பி அவளது பருவ அழகுகளை இன்னும் சற்று ரசித்தவாறு இருந்தபோது அவளது மலர்க்கரம் கீழே ஊர்ந்து சென்று திடீரென்று தனது ஆண்மையின் விறைப்பைத் தீண்டுவதை உணர்ந்தபோது, ஆசைத் தீயில் ஏற்கனவே வெந்து கொண்டிருந்த அவன் முகத்தில் சொல்ல முடியாத அளவுக்கு இன்ப உணர்ச்சிப் பிழம்புகள் தோன்றின. நந்தினிதேவியோ திகைப்பின் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்தாள். ஏதோ கடினமான ஒன்று தனது இடையின் கீழே உரசுவதை அறிந்த அவள் அது என்ன என்பதற்காக அங்கு தன் கரத்தைச் செலுத்த அது அவன் மடியின் நடுவில் துடிப்புடன் தடிபோல் நின்று கொண்டிருந்த அவனது ஆண்மையின் சின்னம்தான் அவனது உடைக்குள் இருந்து கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தது; அதன் மீது அவள் பட்டுக் கரம் பட்டு விறைப்பு அதிகமாக பல்லவன் தனது கட்டுப் பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான்.

ஏற்கனவே ஒன்றிரண்டுமுறை தனது கடைக் கண்களால் அந்த எழுச்சியின் கூடாரத்தைக் கண்டு துணுக்குற்றிருந்த அந்த சிட்டுக் குருவி, தனது கையில் பட்டு அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட அசைவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவள் கண்கள் படபடக்க அவசர அவசரமாகத் தன் கையை விலக்க முற்பட்டாள். ஆனாலும் அவளது கூரிய விழிகள் தான் தொட்டபோது இளவரசன் முகத்திலும் செயலிலும் உண்டாக்கிய தாக்கத்தைக் கவனிக்கத் தவறவில்லை. அதற்குள் பல்லவன் சுதாரித்துக் கொண்டு நீக்க முயன்ற கொடியியையாளின் கரத்தைத் தனது கையில் ஏந்தி மீண்டும் தன் மடிக்குள் துடித்துக்கொண்டிருந்த தடி மீது வைத்து அவள் செவியில் மெல்லக் கடித்தவாறு கிசு கிசுத்தான் "அச்சப் படாதே தேவி!.... இது பாண்டிய நாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் நடுவே ஏற்படப்போகும் நெருக்கமான உறவின் பாலம்".

முதலில் தற்செயலாகத் தொட்டபோதே ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நந்தினிதேவி, இப்போது இன்னும் படபடத்தாள். அவளை மெதுவாக இருக்கும் நிலைக்குக் கொண்டு வந்த பல்லவன் தன் அவளது மடியில் சாய்ந்தான். அந்த நிலையில் இருந்து மேலே பார்த்தபோது அவளது பருவச் செழிப்புகளின் அழகு அவனை நிலை குலைய வைத்தது. உடைக்குள் அவனது குறி வெறி பிடித்தவாறு துடித்தது, நந்தினியின் நடுங்கும் விரல்கள் அந்தத் துடிப்பை உணரவே செய்தன. இப்போது உட்கார்ந்த நிலையில் தனது மடியில் குழந்தைபோல் சாய்ந்து படுத்திருந்த அந்தக் கள்வனின் முகத்தை தனது இடது கையால் வருடியவாறு அவன் கையில் சிறைப்பட்டு அவனது எழுச்சியை அழுத்திக் கொண்டிருந்த வலது கரத்தின் உள்ளங்கையில் ஏற்படுத்திக் கொண்டிருந்த துடிப்பைக் காண மெல்ல ஓரக் கண்களைச் செலுத்தினாள். பல்லவன் அவளது கையை அவன் மடி மீது வைத்து மேலும் கீழும் சிறிது வருட வைக்க அந்தத் துடிப்பும் விறைப்பும் இன்னும் அதிகமாயின.

அங்கு அவள் கண்ட காட்சி அவளுக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. அந்த விஷமக்காரன், அவளது பூங்கரத்தை அங்கு தவழ விட்டு விட்டு, தனது இடையில் இருந்த உடையைச் சற்றே தளர்த்தி விலக்கி, தொடைகளின் இருந்து முற்றிலும் விலக்கினான். கச்சைபோன்ற உள் துணியில் கட்டி வைத்திருந்த முடிச்சையும் அவிழ்த்து விட, அவனது ஆண்மை கம்பீரமாக எழுந்த நிலையில் அரண்மனைக் காவலன்போல் விறைப்புடன் நின்றது. அவள் தனது பார்வையை விலக்க முயன்றாலும் பாழாய்போன அவளது கயல்விழிகள் அங்கேயே குத்திட்டு நின்றதைத் தவிர்க்க இயலவில்லை. அவளது பூங்கரத்தின் விரல்கள் பல்லவ லிங்கத்தைச் சுற்றி வளைத்து பிடிக்க வைத்து, அவளது உள்ளங்கையின் அந்த இளம் சூட்டின் சுகத்தின் இளவரசன் மயங்கினான்.

திடீர் என்று காம நாடகத்தின் ஆட்சியில் செங்கோல் தனது பட்டுக் கையில் திணிக்கப் பட்டவுடன் இளவரசி தனக்கு அளிக்கப்பட்ட இந்த புதிய கடமையைச் செவ்வனே செய்து நன்றாக ஆட்சி புரிந்து ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று கடமை உணர்வு அவள் மனதில் ஆட்கொண்டு விட, இப்போது நந்தினி அச்சத்தில் இருந்து ஓரளவு விடுபட்டிருந்ததால், அவளது மைவிழிகள் அவனது ஆண்மையை மொய்த்துப் பார்த்து தனது மையல் மிகுந்த நோட்டத்தைப் பரவ விட்டாள். மதுரை நகரின் மீன்கொடி பறக்கும் கொடிக்கம்பு போன்று நீண்டு உயர்ந்து நின்ற அவனது எழுச்சி அவளது கைப்பிடிக்குள் ஒழுங்காக இருக்காமல் துடித்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தைக் கண்ட அவள் திகைப்பு இன்னும் அதிகமானது.

பல்லவனது ஆசைத் தாகத்தில் அவனது ஆண்மை தனது தண்டைப் பிடித்திருந்த, அவளது இள்ம் சூடான உள்ளங்கரங்களுக்கு வண்டு ரீங்காரம் இடுவதுபோல் வெளியில் கேட்காத ஓசை எழுப்பி அவளது உடலுக்கும் உள்ளத்துக்கும் காதல் செய்திகளை அனுப்பியது. அவனது கரம் ஒன்று அவளது மணிக்கட்டை மெல்லப் பற்றி மேலும் கீழும் மென்மையான அசைய வைத்ததும், நந்தினி வியப்புடன் அதன் முன்னந் தோல் அழகாக உரிந்து கீழே செல்வதைக் கண்டாள். செங்கோலின் மகுடம் செக்கச் செவேல் என்று பள பளப்புடன் வெளிப்பட்டது. அவளது அல்லிக் கரத்தின் அன்பு அரவணைப்பில் இளவரசன் மயங்கியதையும் இன்பத்தோடு புலம்பியதையும் உணர்ந்த நந்தினி அவளது செய்கை நன்றாகத்தான் இருக்கிறது போலும் என்று நினைத்துக் கொண்டே தனது ஆட்சியைத் தொடர்ந்தாள்.

பல்லவனோ, உன்மத்தம் பிடித்தவன் போன்று நெளிந்தவாறே, "தேவி, இது நாம் மூழ்கப் போகும் இன்பக் கடலில் செலுத்தப் படப் போகும் நங்கூரம், காவிரி ஆற்றில் ஓடுவது போன்று நமது வாழ்வின் இன்ப ஊற்றில் ஓடப் போகும் படகு . . . .; நூலிழை போன்ற இடை கொண்ட உன்னைப்புத்தம் புதிய நூல் ஆக்கி காமக் கவிதை எழுதப்போகும் எழுதுகோல்.... பூவைப் போன்ற பூவையாகிய உனது மதனப் பூவைத் துளைத்துச் செல்லப் போகும் வாள்" என்று தன் செவிகளில் முணு முணுத்தவாறே புலம்பியதைக் கேட்ட இளவரசி இப்போது அச்சத்தை முற்றிலும் துறந்தவளாய் மெல்லிய சலங்கை ஒலி எழுப்பி நகைத்தாள். அவளது கரத்தினுள்ளில் இதமான அசைவில் அந்த சூடான செங்கோல், இன்னும் திண்மை அடைவதையும் இளவரசனின் உடல் முழுவதும் இறுகுவதையும் உணர்ந்தாள். பல்லவன் தனது ஆண்மை வெடித்து விடும் தருவாயில், அவளது கரத்தைப் பிடித்து நிறுத்த, அது விம்மி விம்மி தணிந்தது.

சற்று கழிந்து அவன் அவளை மீண்டும் ஆட்டச் சைகை செய்ய, செங்கோல் ஆட்சி இன்னும் தொடர்ந்தது. இன்பத்தில் விளிம்பில் கொண்டு சென்று அங்கேயே வாசம் செய்ய வைக்கும் கலையை அவளுக்கு துல்லியமாகக் கற்றுத் தர, பள்ளியறை மாணவியான நந்தினி, வெகு சீக்கிரமே, அந்த அசைவுகளின் நளினத்தையும் நிதானமாக ஆட்டி எப்போது நிறுத்த வேண்டும், எப்போது வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று துல்லியமாகப் புரிந்து கொண்டு, தனது ஆட்சியில் பல்லவன் தித்திக்கும் இன்ப மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதத்தில் மிதந்தாள்.

ஏற்கனவே அவனைச் சேய் க்கி தனது முலையை அவனது வாயில் சுவைக்கக் கொடுத்திருந்த அவளைப் பெண்ணுக்கே உரிய தாய்மை உணர்வு மேற்கொண்டது. தன் கையில் இருந்து துடித்துக் கொண்டிருந்த அவனது ஆண்மையைத் தாலாட்டுவது போல் மென்மையாக ஆட்ட, அந்தச் செங்கோலின் மகுடத்தில் இருந்த நெற்றிக் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் மெதுவாக ஊறி வந்தது. "இந்தக் குழந்தை ஏன் அழுகிறது??" என்று குயில் நாதம் கேள்வி எழுப்பியதைக் கேட்ட பல்லவன் புன்னகையுடன், "அது உனது மடிக்குள் போட்டு தாலாட்டினால் அவனது துடிப்பு அடங்கும்" என்று கூறியவாறே நகைத்தான். ஆனால் இருவரும் அந்த நிலை பௌர்ணமி இரவு அன்று தான் நடக்கும் என்று அறிந்திருந்ததால், அதுவரை முன்னுரையிலேயே இன்பத்தில் திளைக்க விழைந்தனர்.

பாண்டி நாட்டு இளவரசியின் மெத்தென்ற மடியினின் தலை வைத்து படுத்திருந்த இளையபல்லவன் தனது லிங்கத்தைத் தாலாட்டிக் கொண்டிருந்த பட்டுக் கரத்தின் அசைவின் தித்திக்கும் இனிமையில் திளைத்தவாறே, அவளது பருவக்கலசங்களை மெல்ல வருடி அந்த மெல்லிடையையும் செல்லமாகச் சீண்டினான். அவளது இடையில் இருந்த உடையின் விளிம்பில் அவன் விரல்கள் நகர்ந்தவாறே தனது முகத்திற்கு வெகு அருகாமையில் இருந்த அவளது இடையைச் சற்றே ராய்ந்து பார்த்தான். தனது கையில் இருந்த செங்கோல் ஆட்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும், தனது மடியில் இருந்த தனது காதலனின் தலை மெல்லத் திரும்புவதையும் அவனது விரல்களின் நடமாட்டம், தனது இடையில் இருந்த உடையின் முடிச்சைத் தேடி அலை பாய்ந்ததும் அவளுக்குப் புரியவே செய்தது. ஏற்கனவே, இடைக்கு மேல் தன்னைப் பிறந்த மேனி ஆக்கி அந்தப் பளிங்கு மேனியின் அழகை ரசித்ததைக் கண்டிருந்த நந்தினிக்கு, அவன் தன்னை முற்றிலும் துகில் உரிந்து பூரண நிர்வாணக் கோலத்தில் காண விழைகிறான் என்பது அந்தத் தங்கச் சிலையாளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியவே செய்தது.

ஆனாலும் சந்தர்ப்ப சூழ் நிலை, அதற்குச் சாதகமாயில்லை என்பதால், "...ஷ் ..... ஷ்....; பேசாமல் சும்மா இருங்கள்; இதற்கு மேல் இங்கு இப்போது வேண்டாம்......" என்று செல்லமாக அதட்டலுடன் ஆணையிட்டாள். இளைய பல்லவனுக்கும் அதன் காரணம் புரிந்தது; மேலும் அவளது கீழ் ஆடையை அவிழ்ப்பதிலும் மீண்டும் அணிவதிலும் உள்ள சிரமங்கள் அவனது சில நிமிட ஆராய்ச்சியில் தென்படவே, அந்த முயற்சியைக் கை விட்டு "அப்போது இன்று இரவு பூரண தேவி தரிசனம் தருவாய் அல்லவா?" என்று விஷமத்துடன் கிசு கிசுக்க, அல்லிக் கொடியாள் வெட்கத்தில் சிலிர்த்தவாறே கண் மயங்கினாள். அவள் நாணத்தை ரசித்தவாறே மெல்லத் தன் தலையை இன்னும் உயர்த்தி அவள் முகத்தோடு முகம் சேர்த்து அவளது அதரத்தில் மீண்டும் மது அருந்தினான். அவளது பட்டுக் கரத்தின் உள்ளில் துடித்துக் கொண்டிருந்த அவனது தடி அவளது பிடியில் இருந்து சற்றே விலக, பல்லவன் நன்றாக எழுந்து இருந்த நிலையை அடைந்து அவளது மோவாயைப் பிடித்து உயர்த்தி, மீண்டும் அவளது வண்டு விழிகளுடன் தனது கூரிய கண்களைக் கலக்க விட்டான்.

பட படக்கும் விழிகள் பட்டாம் பூச்சி போல இமைகளை ரசித்தவாறே பல்லவன் தனது விரல்களை அவளது பனி இதழ்களின் மீது மிருதுவாக வருடியதும் அவை ரோஜா மலர் போல் விரிந்து மெலிதாக நடுங்கியன. விரிந்த அதரங்களை இன்னும் சற்று வருடி வருடி ஒரு விரலை அவலது திங்கள் முகத்தில் பொலிவுடன் திளங்கிய செவ்வாய் இதழ்களுக்குள் செலுத்த அவளது தேன் நாவு அவனது விரலின் நுனியைச் சுவைத்தது. இதற்குள் பல்லவனும் அவளது ஒரு கரத்தைத் தனது கையில் ஏந்தி அவளது விரல்களைத் தனது வாய்க்குள் வைத்து சுவைத்துச் சப்ப, நந்தினி ஏதோ ஒரு சமிக்ஞை செய்ய முயல்கிறான் என்பதை உணர்ந்தாள். ஒரு கேள்விக் குறியுடன் அவனை நோக்க, இளைய பல்லவன் "தேவி, புல்லாங்குழல் வாசிக்கிறாயா?" என்று நேரடியாகவே புன்னகையுடன் வினா ஒன்றை உதிர்த்தான்.

நெஞ்சம் பதைத்தது நந்தினி தேவிக்கு! சில மணி நேரத்தில் வாழ்வு எவ்வளவு மாறி விட்டது. அன்று காலையில் தான் உப்பரிகையில் இருந்து பார்த்த கணத்திலேயே அவள் மனத்தைப் பறி கொடுத்த அந்த இளம் காளை அந்த நாளின் மாலை நேர்த்துக்குள் தன்னிடம் எவ்வளவு நெருக்கம் அடைந்து விட்டான். தானும் தனது நாணத்தை முற்றிலும் மறந்து, இந்த் நிலையில் இருக்கிறோமே, இதற்கு மேல் வேறென்னவோ வேறு கேட்கிறானே என்ற திகைப்பில் பூவிழிகள் விரிய அவனைப் பார்த்தாள். இளைய பல்லவன், அவளது மௌனத்தைச் சம்மதமாகவே எடுத்துக் கொண்டு அவள் தோள்களைப் பற்றி தனது மடியை நோக்கி அவள் முகத்தை வழிகாட்டினான். இதயம் சம்மட்டி போல் அடிக்க அவள் இவ்வளவு நேரம் தாலாட்டிக் கொண்டிருந்த செங்கோலில் அருகில் அவள் முகம் செல்ல பரவசத்துடன் அதை அண்மையில் கண்ட அந்தப் பைங்கிளிக்கு இப்போது அவன் அதைத்தான் புல்லாங்குழல் என்று மெல்ல மெல்லப் புரிந்தது.

இப்போது நன்றாக அவன் முன்பு மண்டியிட்டு அவள் இதழ்கள் அவனது லிங்கத்தை இலக்காக்கி அதற்கு பூஜை செய்ய வேண்டும் என்ற உணர்வில், அருகாமையில் செல்ல, பல்லவனது ஆண்மை அந்த அதரங்களின் இளம் சூட்டின் எதிர்பார்ப்பில் இன்னும் துள்ளியது. விறைத்து விம்மிக் கொண்டிருந்த வெள்ளரி போன்ற தண்டை ஒரு கையில் ஏந்தியவாறே இளவரசி தனது நாவினால் தனது உதடுகளைச் சற்று நனைத்துக் கொண்டு, தனது செவ்விதழ்களால் அவனது செங்கோலின் மகுடத்தில் ஒரு மிருதுவான முத்தம் கொடுக்க, அதன் திண்மை அவள் உள்ளங்கைக்குள் இன்னும் அதிகமாக அவளது இதழ்களும் அந்தக் கள்வனின் கடினத்தை உணர்ந்தன. அவனது முனகலில் இருந்த தனது செயல் அவனுக்கு அதீதமான இன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றுணர்ந்த கயல் விழியாள், தனது திங்கள் முகம் திளங்க இதழ்களை விரித்து அவனது ஆண்மையைத் தனது செவ்வாயின் உள்ளே செல்ல அனுமதி கொடுத்தாள்.

இளையபல்லவன் உன்மத்தம் பிடித்தவன் போல் அவளது தலைமுடியை மென்மையாகக் கோதி அவளது செயலை வரவேற்றான். அவனது விரல்கள் அவளது கன்னத்தை வருடி இன்னும் ஊக்கம் கொடுத்தன. பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் இருந்த அவன் கரும்பு தனது வாய்க்குள் செல்ல, அதன் சற்றே உப்புக் கரித்த சுவை வித்தியாசமாக இருந்தாலும், நந்தினி தனது நிலவு முகத்தை மேலும் கீழும் அசைக்க விழைந்தாள். ஏற்கனவே இன்பத்தின் உச்சியின் விளிம்பின் நுனியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பல்லவன், இன்னும் அதிகம் தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்தான். அவளை மெல்ல விலக்கி தான் எழுந்து நின்று கொண்டான். தன் முன்பு மண்டியிட்டு இருந்த நிலையில் மீண்டும் இளவரசி தனது புல்லாங்குழல் வாசிப்பைத் தொடர, புதுப்புது ராகங்கள் இசைந்தன.

நந்தினியின் நாவு அவனது ஆண்மையின் மகுடத்தை பாவத்துடன் சுவைத்து சுழல அவன் அவளது தலையைப் பற்றி தனது ஆயுதத்தை அவளது வாய்க்குள்ளும் வெளியில் செல்லும் பாணியில் ஆட்டினான். சற்று நேரம் முன்பு வரைத் தனது கைக்குள் இருந்து கும்மாளம் போட்ட அவனது ஆண்மை, இப்போது அவளது சப்பலின் தித்திப்பில் இன்னும் துடித்தது. அவளது நாவின் அசைவிலும் அவள் வாயின் இளம் சுட்டின் சுகத்திலும் திளைத்து அசைந்து டித் தனது தொண்டை வரை சென்று இடித்த அந்த மகுடத்தின் பிசு பிசுப்பு இன்னும் அதிகமாக, திடீர் என்று அவனது மூச்சு இன்னும் வேகமாக அவன் உடல் முழுவதும் விறைப்பதை உணர்ந்த அந்தச் செங்கனி, தனது விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

சில கணங்கள் தனது வாய்க்குள் இருந்த அவனது வாழைப் பழம் திண்மையின் உச்சியை அடைந்ததும் அவனது அசைவு கொஞ்சம் நின்றது. திடீர் என்று அந்தத் திண்மை இன்னும் விம்மி விம்மித் துடிக்க அவளது வாய்க்குள் சூடாக கஞ்சி போன்ற திரவம் பீரிட்டுக் கொண்டுப் பீய்ச்சப் பட்டது. நந்தினி தனது செவ்வாய் நிறைந்து பவிள இதழ்களின் வெளியே வழிந்த அவனது விந்து வீச்சின் வேகத்தை எதிர் பார்க்கவில்லை. னாலும் பெரும் பகுதி தொண்டையின் உள்ளே சூடாகச் சென்றது புதிய இதமான அனுபவமாகவே இருந்தது. மேலும் சில நேரம் அந்தத் துடிப்பு மெல்ல மெல்லக் குறைவதையும் அதன் திண்மை முற்றிலும் அகன்று சுருங்க அவன் தனது கரங்களில் ஏந்தியிருந்த அவளது முகத்தை விடுவித்தான். அவனும் அவளது முன்பில் மண்டியிட்டு தனது பாலைச் சுவைத்து வழிந்திருந்த அவளது இதழ்களைச் சுவைக்க அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல மீளுவதற்கு அவளுக்கு ஏதுவாயிருந்தது.

இருவரும் இறுகத் தழுவிய நிலையில் இருந்த போது, ஒரு வித்தியமாசமான குயிலின் குரல் கேட்டது. அணைப்பில் இருந்து விடுபட்டு பல்லவன் அவளை கேள்விக் குறியுடன் நோக்க, அவள் "அது என் தோழி பூங்கொடியின் குரல்தான். நாம் நமது கூடிக் குலவலில், நம்மையே மறந்து விடுவோம், நேரத்தையும் மறந்து விடுவோம் என்பதை அறிந்திருந்த அவள் இரவு உணவருந்தும் வேளை வந்தது குரல் கொடுப்பதாகக் கூறியிருந்தாள். நாம் அங்கு செல்லத் தாமதமானால் தந்தைக்கு சந்தேகம் வந்து விடுமல்லவா?" என்று புகன்றாள். இளைய பல்லவன் கலகலவென்று நகைத்தான். "நமக்கு இருவருக்கும் நல்ல நண்பர்கள் தான் கிடைத்திருக்கிறார்கள். கபிலன் என்னை உனது பள்ளியறைக்கு இன்று இரவு சுரங்கப் பாதை வழியாகக் கூட்டிச் செல்வதாக வாக்களித்திருக்கிறான். ஆனாலும் நமது முதல் இரவுக்கு பௌர்ணமி வர இன்னும் இரண்டு இரவுகள் பாக்கி யிருக்கிறதே. அதுவரை இன்னும் என்னன்னவோ பாடங்கள் படிக்க வேண்டியிருக்கிறது." என்று கூற நாண்த்தில் முகம் சிவந்த இளவரசி தனது உள் கச்சையையும் மார்க்கச்சையையும் எடுத்து நிலைக் கண்ணாடியின் உதவி இல்லாததால் ஒருவிதமாக கட்ட முயல, பல்லவன் உதவியோடு அலங்கோலமாகக் கட்டிக் கொண்டாள். புல் தரையில் கிடந்த சால்வையை எடுத்துத் தனது தோள் மீது போத்திக் கொண்ட அவளுக்கு இப்போது தான் தனது தோழியின் சமயோகித புத்தி புரிந்தது.

அவசர அவசரமாக அவள் நந்தவனத்தை விட்டு வெளியேறி தனது பள்ளி அறையை நோக்கி விரைய, பின்னால் இருந்து இளைய பல்லவன் "இரவு நடு நிசி ஆகும் போது நான் வருவேன். மறந்து விடாதே! தேவி தரிசனம் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறாய்!!" என்று ஞாபகபடுத்தினான். அவள் நாணச் சிலிர்ப்புடன் வசீகரப் புன்னகையுடன் விடை பெற்று ஒயிலுடன் செல்லும் அழகையும் அவள் பின்னழகுகள் மேலும் கீழும் அசைந்த எழிலையும் ரசித்துப் பார்த்தவாறே நின்ற பல்லவன், மெல்ல மெல்லத் தனது அறையை நோக்கிச் சென்றான்.

நந்தவனத்தை விட்டு வெளியே வந்த நந்தினியை வரவேற்ற அவளது தோழி பூங்கொடி, கேலியுடன் "வாருங்கள் தேவி, எங்கு இன்று இரவு முழுவதும் வரமாட்டீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்" என்று சிரித்தாள். பள்ளியறையை அடைந்ததும் தனது தோள்களில் இருந்த சால்வையை நீக்கித் தனது மார்க்கச்சையைச் சரி செய்ய முயல, "இப்போது புரிந்ததா தேவி, நான் உங்களைப் போர்த்திக் கொண்டு செல்லச் சொன்னதன் காரணம். இந்த ஆண்களே இப்படித்தான்" என்று கூறியவாறே அவளுக்கு உடைகளைச் சீராக அணிய உதவி செய்து கொண்டே அவள் முகத்தையும் இதழ்களையும் தனது கூரிய விழிகளால் கவனித்த பூங்கோதை, தன் கண்கள் அகல விரிய "இன்றே *சங்கு ஊதி விட்டீர்களா தேவி? நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். சந்தித்த அன்றே இவ்வளவு நெருக்கம் அடைய . . ." என்று கேலி பெருமூச்சுடன் கூற, நந்தினி முகம் சிவந்தாள். இவளிடம் இருந்து ஒன்றையும் மறைக்க முடியது போல் இருக்கிறதே என்று நினைத்தவாறே முகத்தைக் கழுவி அலங்காரம் செய்து கொண்டாள். அரண்மனையின் உணவருந்தும் அறைக்கு இருவரும் விரைந்தனர்.

(* - Foot note: “பெண்டிர்தம் மனம் கவர்ந்த ஆடவரின் சங்கு ஊதி மகிழ்வித்த காலம் ...” என்று அந்த காலக் கல்வெட்டுக் கூறுகின்றது. இந்த சங்கு ஊதும் வழக்கம் அதிகமாக புழக்கதில் வந்ததால் பிற்காலத்தில் இது சங்கு காலம் என்று கூறப்பட்டு, காலப்போக்கில் மருகி சங்க காலம் என்று ஆனது. இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட இலக்கியம் சங்க கால இலக்கியம் என்றும் இப்போது பரவலாகக் கூறப்படுகிறது.)

12
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

READ MORE OF THIS SERIES

Similar Stories

எனது இரண்டாவது லெஸ்பியன் உறவு எனது இரண்டாவது லெஸ்பியன் அனுபவம் in Lesbian Sex
முதல் லெஸ்பியன் கதை முதல் ஓரினச்சேர்க்கை (லெஸ்பியன் உறவு - தீ பற்றிக்கொண்ட) கதைin Lesbian Sex
செல்லமே.01 ஒரு கண்ணியமான தாய் காமக்கதை படிக்கிறாள்.in Incest/Taboo
மோகினி - காமினி - Tamil Lesbians பூக்கள் = புணர்ந்த நாட்கள் . Lesbianed by Nun .in Lesbian Sex
கிரிஜாவின் விடுதலை(Tamil) அன்று தான் அவள் அவனை சந்தித்தாள்in Romance
More Stories